அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. அதற்கான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றன.

அய்.டி.ஆர்.எப். நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு மாநில அரசுகளிடம், தங்களுக்கு, வரிச் சலுகைக்கான சான்றிதழ் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. அதற்கு ‘படிவம் 1023’ என்று பெயர். அதில், இந்தியாவில் கீழ்க்கண்ட 9 முக்கிய நிறு வனங்கள், இந்தியாவில் தங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகார் பாரதி (பீகார்)

சுவாமி விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம் (தமிழ்நாடு)

சேவா பாரதி (டெல்லி)

ஜனசேவா வித்யா கேந்திரா (கருநாடகம்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (ம.பி.)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (குஜராத்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (நாகர் ஹவேலி)

கிரிவாரி வனவாசி சேவா டிரஸ்ட் (உ.பி.)

ஜி. தேஷ்பாண்டே வனவாசி வஸ்திகிரா (மகாராஷ்டிரா)

  • மேற்குறிப்பிட்ட 9 நிறுவனங்களுமே சங் பரிவார் அமைப்புகள்தான். இதை ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இணையத்தளங்களிலே காண முடியும். உதாரணமாக விகாஸ் பாரதி, சங் நீரூற்றிலிருந்து கிளம்பிய நீரோட்டம் என்றும், விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் விசுவ இந்து பரிஷத்தின் தோழமை அமைப்பு என்றும், ஆர்.எஸ்.எஸ். இணைய தளங்களில் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்த அமைப்புகளின் கீழ் – 67 துணை அமைப்புகள் இந்தியாவில் செயல்படுவதாகவும், அய்.டி.ஆர்.எப்., அறிவித்திருக்கிறது. ஆக மொத்த முள்ள 75 நிறுவனங்களில், 60 நிறுவனங்கள் சங் பரிவார்களோடு தொடர்புள்ள நிறுவனங்களாகும்.

அந்த நிறுவனங்களில் பதிவாகியுள்ள அய்.டி.ஆர்.எப். நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நிகராக இந்து சேவக் சங் (எச்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்கா வில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்காவில் அய்.டி.ஆர்.எப். நிறுவனர்கள். இவர்கள் அமெரிக்காவின் ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களாகவும் செயல்படு கிறார்கள். அய்.டி.ஆர்.எப்.பின் பொதுச் செயலாளராக இருக்கம் ஷியாம் கோகல் காந்தி என்பவர் சான்பிரான்சிஸ்கோவில் – எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர். அய்.டி.ஆர்.எப்.பின் ஆலோசகராக இந்தியாவில் செயல்படுபவர் ஷியாம் பாரன்டே எனும் பார்ப்பனர். இவர்தான், வெளிநாடுகளில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கான அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ்.சின் ‘அப்சர்வர்’ பத்திரிகையில் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வாழ் பார்ப்பனர்கள் 1980களிலிருந்து – ‘இந்துத்துவா’வைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். இந்தியாவிலிருந்து 1990களில் – அமெரிக்காவுக்கு குடியேறிய ஏராளமான பார்ப்பனர்கள், இதில் தீவிரம் காட்டினர். குறிப்பாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, வடக்கு-கிழக்கு பகுதிகளிலும், தெற்குப் பகுதி மாநிலங்களான புளோரிடா, டெக்சாஸ் மாநிலங்களிலும், இந்துத்துவா அமைப்புகள் வலிமையாக கால் பதித்தன. இந்த இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவில் சங் பரிவார்களுக்குத் துணை நிற்பதோடு அய்.டி.ஆர்.எப். வழியாக, பெருமளவு நன்கொடைகளைத் திரட்டித் தந்து வருகின்றன.

மத வேறுபாடு இல்லாமல் இந்தியர்களின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய இந்திய வளர்ச்சி (எய்டு) அமைப்பு, குழந்தைகள் மறுவாழ்வு (கிரஸ்), இந்திய வளர்ச்சிக் கழகம் (அய்.டி.எல்.) போன்ற பல பொதுவான தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டாலும், அய்.டி.ஆர்.எப்., இவைகளை அங்கீகரிப்பது இல்லை. சங் பரிவார் களுடன் தொடர்புடைய அமைப்புகளை மட்டுமே சேவை நிறுவனங்களாக அது அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிகவும் , இந்திய முஸ்லிம்கள், சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி களுடன் தொடர்பு கொண்டிப்பதாகவும், குறும் படங்களைத் தயாரித்து, திரையிட்டு நிதி திரட்டும் வேலைகளை அமெரிக்க ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ்.சும், அய்.டி.ஆர்.எப்.பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

நிதி ஒதுக்கீடு : எதற்கு?

‘வளர்ச்சி’, ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் இந்தியாவுக்கு அய்.டி.ஆர்.எப். அனுப்பிய தொகையில் பெரும் பகுதி, சங் பரிவார்களின் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் – மதப் பகைமையை வளர்ப்பதற்குமே பயன்பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

1994 முதல் 2000 வரை அய்.டி.ஆர்.எப். இந்தியாவுக்கு அனுப்பிய தொகையில் 75 சதவீதம் (3.2 மில்லியன் டாலர்), ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு களுக்கே அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு மைனாரிட்டி அமைப்புகளுக்கும் உதவிடவில்லை. அனுப்பிய தொகையில் 70 சதவீதம் – ஆதிவாசிகளை, இந்து மதத்துக்கு மாற்றவும், அதற்குத் தயார் செய்வதற்கான கல்வி, விடுதிகளை நடத்தவுமே செலவிடப்பட்டு இருக்கிறது. 8 சதவீதம் மருத்து வத்துக்கும், 15 சதவீதம் புனர்வாழ்வு திட்டங் களுக்கும், 4 சதவீதம் கிராம வளர்ச்சிக்கும் செல விடப்பட்டு இருக்கிறது. (ஆதாரம்: அய்.டி.ஆர்.எப். – ஆண்டறிக்கை – இணையதளத்திலிருந்து) ‘புனர் வாழ்வுப்பணி’ என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகைக்கூட – மத அடிப்படையிலேயே செலவிடப் பட்டிருக்கிறது. குஜராத் பூகம்பத்தின்போது – புனர் வாழ்வு நிதியிலிருந்து செலவிட்ட தொகையை, பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கினார்கள். இதேபோல் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்க தேச இந்துக்கள், ராணுவம் மற்றும் போராளிகள் தாக்குதலுக் குள்ளான காஷ்மீர் இந்துக்கள் என்று இந்துக்களுக்கு மட்டுமே, இந்நிறுவனம் உதவிகளைச் செய்துள்ளது. இவைகளில் பாதிக்கப்பட்டவர்கள் கிறித்தவர், முஸ்லிம்கள் இருந்தாலும்கூட ‘நிவாரண உதவிகள்’ மதத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன.

குஜராத் பூகம்பத்தின்போது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பகுதியைப் புறக்கணித்தன என்று குல்தீப் நய்யார் எழுதினார். (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், பிப்.21, 2001) இந்து அல்லாத தொண்டு நிறுவனங்கள், நிவாரணப் பணியில் ஈடுபட வந்தபோது, சங் பரிவார் அமைப்புகள் அவைகளைத் தடுத்து நிறுத்திவிட்டன. (கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், ஜன.31, 2001)

ஆதிவாசிகள் – மதமாற்றம்

இந்தியாவின் பழங்குடி மக்களை ஆதிவாசிகள் என்ற பெயரில் தான் அழைப்பது வழக்கம்; ஆனால், இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்று வரலாற்றைப் புரட்ட விரும்பும் ‘சங் பரிவாரங்கள்’ இவர்களை ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிகள் என்று அழைப்பதில்லை. மாறாக ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறார்கள். பழங்குடியினரான ஆதிவாசிகள், இயற்கையை வழிபடக் கூடியவர்கள். அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்து சாதி அமைப்பால் கடந்த நூற்றாண்டில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மீது மதங்கள் திணிக்கப்பட்டன. பலர் கிறிஸ்தவர்களானார்கள். அண்மைக்காலமாக, இந்த மக்களை ‘இந்துக்களாக’ மாற்றும் முயற்சிகளில் சங் பரிவார் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக பழங்குடியினருக்கான கல்வித் திட்டங்களையும், நல் வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதற்கான பெரும் நிதி அய்.டி.ஆர்.எப். போன்ற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது.

பழங்குடியினரை இந்து மதமாற்றம் செய்வதற்கே – அமெரிக்காவின் பணம் அய்.டி.ஆர்.எப். வழியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ என்ற அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதாக அய்.டி.ஆர்.எப். ஒப்புக் கொண்டுள்ளதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம்.“கிறிஸ்தவர்களாக்கப்பட்ட – வனவாசிகளை இந்த மதத்துக்கு மாற்றுவதற்காகவே வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் 1950களில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த வழியில் பழங்குடியினரின் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதில், எங்கள் அமைப்பு வெற்றிகளைக் குவித்து வருகிறது” – என்று ஆர்.எஸ்.எஸ். வெளியீடே எழுதியிருக்கிறது. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றி, தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து, சமூக விரோத, தேச விரோதிகளிடமிருந்து, அவர்களைக் காப்பாற்றி யுள்ளதாக, ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்துக்கு’ – அய்.டி.ஆர்.எப். நிறுவனமே, தனது ஆவணங்களில் புகழாரம் சூட்டி மகிழ்கிறது.

மத பழங்குடியினரை மதம் மாற்றுவதோடு மட்டுமல்ல; அவர்களை ‘இந்துராஷ்டிரம்’ அமை வதற்கான போராளிகளாகப் பயிற்சி தரும் நட வடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள்; அதற்கும் அமெரிக்காவின் பணம் வருகிறது; அமெரிக்காவின் ‘அய்.டி.ஆர்.எப்.’பிடமிருந்து நிதி உதவி பெறும் ‘சேவா பாரதி’ – தனது அறிக்கை ஒன்றில் – இதை உறுதிப்படுத்துகிறது. பழங்குடி யினரில் சில ஆண்களையும், பெண்களையும் தேர்வுசெய்து அயோத்தியில் உள்ள ‘ஸ்ரீராமகதா பிராவச்சான்’ என்ற ராமாயணப் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பி சாமியார்களைக் கொண்டு 8 மாத பயிற்சி தந்து, பிறகு அவர்களைக் கிராமங்களுக்கு அனுப்பி பிரச்சாரகர் களாகப் பயன்படுத்துவதாக சேவா பாரதி கூறுகிறது.

இது மட்டுமல்ல, ஆதிவாசிகளை, இந்துக்களாக மதம் மாற்றும் நிகழ்ச்சி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்கும் பயன்படுகிறது என்று, சங் பரிவார் தலைவர்களே கூறுகிறார்கள். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் – “ஏகல் வித்யாலயா” என்ற பள்ளிகள், அமெரிக்க நிதி உதவியோடு நடத்தப்படுகின்றன. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றுவதில் – இந்தப் பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன. இத்தகைய பள்ளிகளைத் தொடங்கியதன் மூலமே, பீகாருக்குள் தாங்கள் வலிமை பெற முடிந்தது என்றும், பீகாரில் தாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கியது என்றும், குஜராத்திலும் அதே சோதனைகளைத் துவங்கி – காங்கிரஸ் கோட்டைகளைத் தகர்ப்போம் என்றும் ஜார்கண்ட் பகுதியைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் கவுஷிக் பட்டேல் கூறியிருக்கிறார். (ஆதாரம்: ‘தி டெலிகிராப்’ நாளேடு, ஜூலை 4, 2000)

  • ஆக, அமெரிக்கப் பணம், மதமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்து வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மதக் கலவரங்களை உருவாக்கவும்….

அமெரிக்காவிலிருந்து சங் பரிவார்களுக்கு வரும் பணம், இந்தியாவில் மதக் கலவரங்களை நடத்துவதற்கும் பயன்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சுருக்கம் கருதி, அமெரிக்க நிதி உதவியோடு செயல்படும் அமைப்புகள் தந்துள்ள ஒரு சில ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம். மேற்கு குஜராத்தில் வாகை எனுமிடத்தில் அமெரிக்க உதவியோடு ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ நடத்தும் பள்ளியில் சிவாஜியின் படத்துக்குக் கீழே, “சிவாஜி மட்டும் இல்லாவிட்டால் நாம் அனைவரும் ‘சுன்னத்’ செய்யப்பட்டிருப்போம். சிவாஜி தான், நம்மைக் கட்டாய மதமாற்றத்திலிருந்து காப்பாற்றினார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் முதல் தலைமுறையினரான அந்த மாணவர்கள் இப்போது ‘இந்து’க்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஒரு இளம் ஆர்.எஸ்.எஸ்.காரர் அந்தப் பள்ளியை நடத்துகிறார். கலவரத்துக்கான வெறியை இதன் மூலம் தூண்டிவிடுகிறார்கள் என்று, பள்ளியை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய வரலாற்று ஆய்வாளர் அஜய்சிங் எழுதியிருக்கிறார். (ஆசியா வீக், மார்ச் 26, 1999)

அமெரிக்க உதவி பெறும் வனவாசி கல்யாண் பரிஷத்தை நடத்தும் சுவாமி அசீமானந்த் என்பவர் – ஒரு ஆதிவாசிக்கூட கிறிஸ்தவராக இருக்கக் கூடாது என்று கூறி, அனைவரையும் இந்துக்களாக்கும் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் – செய்தியாளர் அருண் வர்கீஸ் அம்பலப்படுத்தினார். (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பிப்.11, 1999)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் நிறுவனத்தினரால், கிறிஸ்தவ ஆதிவாசிகள் தாக்கப்படுவதையும், மன உளைச்ச லுக்கு உள்ளாக்கப்பட்டதையும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியதையும் ஒரு டாக்குமென்டரி படமே அம்பலப்படுத்தியது. (Fishers of Men, Docementary by Ranjankanth and Padmavathy Rao, 1997)

அமெரிக்க வாழ் இந்தியரின் உதவியோடு, இந்தியாவில் கலவரங்களும் வெறுப்புகளும் தூண்டிவிடப்பட்டதற்கு இவை சில உதாரணங்கள். அவர்களின் உதவியோடு நடத்தப்படும் நிறுவனமான வித்யாபாரதி நடத்தும் பள்ளிகளின் பாடத் திட்டங்களில் வரலாறுகள் திருத்தப்பட்டு, இந்து மதவாத உணர்வுகள் தூண்டி விடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

நிதி பெறும் நிறுவனங்கள்

அய்.டி.ஆர்.எப். எனும் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் நடத்தும் நிறுவனத்திடமிருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 184, மாநில வாரியாக நிதி பெறும் நிறுவனங்களின் பெயர்களையும் – நிதியையும், அதன் இணையத் தளங்களில் காண முடிகிறது. இதில் தமிழ்நாட்டில் நிதி உதவி பெறும் நிறுவனங்களையும் பெற்றுள்ள தொகையையும் மட்டும் கீழே தருகிறோம்:

பாரத் கல்சுரல் டிரஸ்ட் – திருச்சி (45,980 டாலர் – மதத்துக்காக)

கிராமகோயில் பூசாரிகள் பேரவை – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

நவஜோதி சாரிட்டி டிரஸ்ட் – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

சிவாலயா – சென்னை (6,650 டாலர் – மதம்-கல்வி)

ஸ்ரீராம தனுஷ்கோடி அபய ஆஞ்சநேயர் சேவா டிரஸ்ட் (9,500 டாலர் – மதத்துக்காக)

சாமி விவேகானந்தா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி (82,290 டாலர் – மதம்-கல்விக்காக)

ஆயுர்வேதிக் டிரஸ்ட் (கோவை) – (2,410 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

யுனிக் பவுண்டேன் டிரஸ்ட் (திருவண்ணாமலை) – (9,035 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

வெர்சல் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை) – (17,500 டாலர்)

விவேகானந்தா கேந்திரா ராக் மெமோரியல் (கன்னியாகுமரி) – (74,885 டாலர் – மதம் – சமூக கல்விக்காக)

ஆரோவில் – ஆரோவில் லேண்ட் பன்ட் – 301,420 டாலர்

அர்பிந்தோ ஆக்ஷன் – 4,750 டாலர்

ஆர்டார்தோ ஆஸ்ரம் – 2,500 டாலர்

அமெரிக்காவின் அய்.டி.ஆர்.எப். வழங்கியுள்ள மொத்த நிதியில்

82.4 சதவீதம் (2,684,915 டாலர்) சங் பரிவார் அமைப்புகளுக்கும்,

8.1.சதவீதம் (2,64,660 டாலர்) மத நடவடிக்கை களுக்கும்,

2.2 சதவீதம் (70,620 டாலர்) மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும்,

7.4 (2,49,785 டாலர்) சதவீதம் ‘தெரியாத நடவடிக்கைகளுக்காகவும்’ ஒதுக்கப்பட்டுள்ளது.

மதநடவடிக்கைகள், கல்விப் பணிகள், நிவாரணப் பணிகள் என்றபெயரில் வாங்கப்பட்ட நிதியும், சங் பரிவாரங்களின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Sabarang Communication/SACW/ தளத்திலிருந்து)

இந்தியப் பொருளாதாரமும் பசுநேசர்களும்

அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.

அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 ‘தாய் பாட்’ கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 ‘தாய் பாட்’ தான் கிடைக்கும்.

அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10,000 ரூபாய்க்கு 1,31,00 பங்களாதேஷ் ‘டக்கா’ கிடைத்திருக்கும். இப்போது போனால் 1,13,00 டக்கா தான் கிடைக்கும்.

காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?

காமன்மேனாக – எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும்.

2014 ஆம் ஆண்டு (பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) சமையல் கேஸ் விலை, பெட்ரோல் – டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சினிமா டிக்கெட் விலை, ஹோட்டல்களில் உணவுகளின் விலை, பால் விலை, மின்சாரக் கட்டணம் & இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை என்னவாக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடும் போது, கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது? ஒரு காமன்மேனின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளன தானே? (இதுல மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒரு சிலது மட்டுமே உண்டு).

2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 113 டாலர். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அது குறைந்து 36 டாலர் வரைக்கும் வந்ததாக ஞாபகம். இப்போது 45 டாலர். சில மாதங்களுக்கு முன்பு 10 டாலர், 0 என மைனஸில் கூட வர்த்தகம் ஆனது.

ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது என்ன லாஜிக்? எங்கே போகிறது அந்தப் பணம்? காமன்மேன்களுக்கு ஏன் ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை?

கொரோனா லாக் டவுன் காலத்திலும், அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் போதும் டோல் கேட்டில் சுங்க வரியை உயர்த்தினார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் ?

இதுபற்றியெல்லாம் யாரையும் சிந்திக்க விடாமல், கேள்வி கேட்க விடாமல் தேசபக்தி, மாட்டுக்கறி, எல்லையில் ராணுவ வீரர்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதி, முஸ்லீம்கள் நாய்க்கறி சாப்பிட்டு பாகிஸ்தான் போகணும், இது இந்துக்களின் பூமி, கந்தர் சஷ்டி, ராமர் கோயில், விநாயகர் சதுர்த்தி, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க. அதுக்கு முரட்டு முட்டுக்கொடுக்க முட்டாள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவங்களை நினைச்சா தான் இன்னும் கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. அவங்க கட்சியால் ஒரே ஒரு நல்லது கூட நடக்காமல், காமன்மேன்களில் ஒருவராக அவர்களுக்குமே பாதிப்பு தான் அதிகம். ஆனால், எனக்கு வலிக்கலயேன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. வெறுப்பை பரப்பிட்டும் இருக்கானுங்க.

அப்பவும் அவனுங்க முட்டுத்தறாய்ங்க. இதான் ஹைலைட்டே !

அமெரிக்காவோ, தாய்லாந்தோ, வங்கதேசமோ… அப்போ பத்தாயிரம் எடுத்துட்டு போனதுடன் ஒப்பீடு செய்தால் இப்போ வீழ்ச்சி. இது ஒருபுறம் இருக்கட்டும். 10,000 எடுத்துட்டு போறதுல எவ்ளோ சிக்கல் இருக்கு பாருங்க… இவ்வளவு விலைவாசி ஏற்றங்களையும் தாக்குப் பிடித்து, வருவாய் ஈட்டி, அதற்கு தனியா ஜி.எஸ்.டி கட்டி, கஷ்டப்பட்டு 10,000 எடுத்துட்டுப் போனா, அதோட மதிப்பும் வீழ்ந்திருக்கும்! வெந்தப் புண்ணில் வேல் !

பாஜக ஆளும் வரை ஒவ்வொரு ஆண்டும் இது பொருந்தும்.

2014 இல் பாஜக ஆட்சி அமைக்கும் போதும் சரி, 2016 இல் டீமானிடைசேஷன் சமயத்திலும் சரி… மோடியின் பக்தர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். டாலர் மதிப்பு 40 வரும்… பெட்ரோல் டீசல் விலை 50 க்கு கீழ் வரும்… தீவிரவாதிகள் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும்… ப்லா ப்லா ப்லா… ஆனால் என்ன தான் நடந்தது?

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட போதும், பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு வரலாறு காணாத விலையேற்றம், பதான்கோட், புல்வாமா எனத் தீவிரவாத தாக்குதல்கள். (350 கிலோ வெடி பொருட்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே இன்றளவும் மர்மமாக இருக்கிறது), சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்… 20 இந்திய வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணித்தார்கள். என்ன தான் செய்கிறது இந்தியாவை ஆளும் பாஜக அரசு? யோசிக்கவே மாட்டார்களா? சீனா செய்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருந்தால் எவ்வளவு பொங்கியிருப்பார்கள்? இங்கே நாம் அண்டை வீட்டில் வாழும் இஸ்லாமியர்களைக் கூட விரோதிகளாக கட்டமைத்திருப்பார்களே. ஆனால் சீனா விஷயத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியது ஏன்?

சிந்திப்போம். அறியாமையால் இருப்போருக்கு புரிய வைப்போம். மதமோ, கடவுளோ நம்மைக் காப்பாற்றாது. நம்மை ஆளும் அரசு தான் நம் அனைவரையும் சமமாகப் பாவித்து, நமக்கான நல்லாட்சியைத் தர வேண்டும் !

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

  1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
  2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது?
  3. பாஜக மீது கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?
  4. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட…
  5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
  6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன் அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?
  7. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியதேன்?
  8. பல லட்சம் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லை?
  9. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?
  10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன?
  11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
  12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
  13. மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
  14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
  15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து ஏன்?
  16. பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால் இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?
  17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
  18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
  19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
  20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?
  21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

இன்னும் பல ஆயிரம் புதிரான கேள்விகளுக்கு விடை தெரியா சாமானியனின் பகிர்வு.

காலியாகிறது இந்தியாவின் கஜானா

தங்கத்தையும் சுமார் ( 28 டன் ) விற்கும் ரிசர்வ் வங்கி! கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை.

இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும்.

தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது
ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை (28377.981Kg) விற்பனை செய்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.

இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.

Source: NEW INDIAN EXPRESS

இப்போது பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளே காரணமாம். ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணல் என்ற முதுமொழி ஞாபகம் வருது.

இனம் காக்க இருமுனைப் போராட்டம்!

தி.பி. 2051 ஆடி 29 – வியாழன். 13.08.2020 – காலை 10 மணிக்கு

இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகித் தமிழ் இனம் தவிக்கிறது. ஒருகோடிப் பேர்க்கு மேல் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் புகுந்து, தமிழர்களின் தொழில், வணிகம், வேலை முதலியவற்றைக் கைப்பற்றிக் கொண்டது ஒன்று. இன்னொன்று, தமிழ், தமிழர் மரபு, தமிழர் அரசியல் அதிகாரம், தமிழர் ஆன்மிகம் முதலிய அனைத்தையும் சிதைக்கும் நோக்குடன் இந்திய அரசு திணிக்கும் புதிய கல்வித் திட்டம்! இவ்விரு தாக்குதல்களை முறியடிக்கவே இருமுனைப் போராட்டம்!

அயலாரை அழைக்கிறது அதிமுக ஆட்சி

இந்திய அரசு, திட்டமிட்டுத் தமிழ்நாட்டில் வெளியார் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கிறது. நடுவண் அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 100க்கு 95 பேர் என்ற அளவிற்கு வெளிமாநிலத்தவர்களை, அதிலும் அதிகமாக இந்திக்காரர்களை வேலையில் அமர்த்துகிறது. இதற்காக நடத்தப்படும் அனைத்திந்தியத் தேர்வுகள் மோசடியானவை.

இதெல்லாம் போதாதென்று அ.இ.அ.தி.மு.க. அரசு கொரோனாவில் வெளியேறிய வெளிமாநிலத்தவர்களை மீண்டும் தமிழ்நாட்டில் அழைத்து வருகிறது. ஆனால் மராட்டியத்தில் வெளியேறிய புலம் பெயர்ந்தோர் திரும்பி வரவேண்டாம் என்று மாநிலக் கட்சிகள் அங்கு கூறுகின்றன. தமிழ்நாட்டில் தமிழர்களின் மக்கள் தொகையுடன் வடவர்கள் போட்டி போட்டு வளர்கிறார்கள். இந்தியை கடைத்தெரு மொழியாக மாற்றி வருகிறார்கள்.

“தமிழ்நாடு அமைப்பு சாராத் தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” அமைத்து, தமிழ்நாட்டில் திறன் பெற்ற (Skilled), திறன்பெறாத (Unskilled) மண்ணின் மக்கள் அனைவரையும் பதிவு செய்து, நிறுவனங்களின் தேவைக் கேற்ப வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று கடந்த சூன் மாதமே (2020) தமிழ்நாடு அரசுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை வைத்தது. அரசு செவி சாய்க்கவில்லை! இப்போது வட இந்தியரை அழைத்துவரத் தனி ஏற்பாடு செய்கிறது தமிழ்நாடு அரசு! இந்த இனத்துரோகத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!

நமது கோரிக்கைகள்

  1. தமிழ்நாட்டில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளை வெளியேற்ற வேண்டும். தங்கள் தாயகம் திரும்பிய புலம்பெயர்ந்தோரை மீண்டும் அழைத்து வரக்கூடாது.
  2. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும்!
  3. தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காடும் தனியார் துறையில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே வேலை தரவேண்டும்!
  4. இதற்கான சட்டங்களைத் தமிழ்நாடு அரசு இயற்றிச் செயல்படுத்த வேண்டும்.
  5. புலம் பெயர்ந்து தமிழ்நாடு வந்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது. இவற்றைச் செய்யவில்லை என்றால் தமிழ்நாடு தமிழர் தாயகமாக நீடிக்காது!

புதிய கல்வித் திட்டம் – புதிய வருணாசிரமத் திட்டம்

பள்ளிக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை கல்வியைக் கொள்ளை இலாபத் தனியார் கோலோச்சவும், அறநிறுவனங்கள் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் இத்திட்டம் வழி வகுக்கிறது. (பத்தி 3.6) முறைப்படியான ஆசிரியர்களுக்கு அப்பால் கல்விச் செயல்பாட்டாளர்கள், தன்னார் வலர்களைக் கொண்டு கல்வி நிலையங்களில் பாடம் நடத்தவும் பயிற்சிதரவும் இத்திட்டம் வழிவகுக்கிறது. (பத்தி 5.6, 5.7) கல்லூரிகளில் முனைவர் பட்டம் பெறாமல், “சிறந்த கல்வியாளர்களாக” உள்ளவர்கள் பாடம் நடத்த பத்தி 15.8 அனுமதிக்கிறது. இதில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களே வருவார்கள்.

மூன்றாம் வகுப்பிலிருந்து தாய்மொழி, ஆங்கிலம், இன்னொரு இந்திய மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்கிறது (பத்தி 4.11). இதுதான் மும்மொழிக் கொள்கை. இன்னொரு இந்திய மொழி என்பதில் இந்திக்கு மட்டுமே வாய்ப் புள்ளது. இன்னொரு மொழி என்பது இந்தியின் முகமூடி! இன்னொரு இந்திய மொழியை ஏன் கற்க வேண்டும்?

எட்டாம் வகுப்பிலிருந்து சமற்கிருதம் கற்பதை ஊக்குவிக்க மாநில அரசுகள் சிறப்பு நிதி அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. (பத்தி 4.16) தாய்மொழியைப் பயிற்று மொழியாக (மீடியம் ஆக)க் கொண்ட வகுப்புகள் 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. தாய்மொழி (தமிழ்) பயிற்று மொழியாக இருப்பது விரும்பத்தக்கது என்று மட்டுமே கூறப்படுகிறது. கட்டாயம் அல்ல.

மூன்றாம் வகுப்புத் தொடங்கி 5, 8, 10, 11, 12 வகுப்புகளுக்கு அனைத்திந்தியத் தேர்வு! இந்திய அரசு நடத்தும் இத்தேர்வுகளில் வடநாட்டு மாணவர்கள் காப்பி அடித்தும், தில்லு முல்லு செய்தும் அதிக மதிப்பெண் வாங்க வாய்ப்பளிப்பார்கள். வேலைக்கான அனைத்திந்தியத் தேர்வுகளில் அதுதான் நடக்கிறது. எட்டாம் வகுப்பிலிருந்து தேர்வில் தோல்வியுற்றால், குறைந்த மதிப்பெண் வாங்கினால் தொழிற் கல்வி படிக்கப் போய்விட வேண்டும், குடும்பத் தொழில் கற்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. இது குலக் கல்வித் திட்டம்!

பல்கலைக் கழகங்களுக்கு இணைப்புக் கல்லூரிகள் கிடையாது. பல்கலைக்கான துணைவேந்தரை இந்திய அரசே அமர்த்தும். கல்லூரிகளின் மீதான அதிகாரம் இந்திய அரசிடமே!

மாணவர் சேர்க்கை, ஆசிரியர், பேராசிரியர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்திலும் இட ஒதுக்கீடு குறிப்பிடப்படவில்லை.

இளங்கலைப் பட்டங்கள் 4 ஆண்டு படிப்பாகும். இடையில் தோல்வியுற்றால் அந்த ஆண்டோடு படிப்பை நிறுத்திக் கொள்ளலாம். அதற்கொரு டிப்ளமா தரப்படும்.

இளங்கலை – இளம் அறிவியல் பட்டப் படிபில் சேர அனைத்திந்திய நுழைவுத் தேர்வு நீட் போல் உண்டு! தமிழ்நாட்டு மாணவர்களின் கதி என்னவாகும் என்று இப்போதே புரிந்து கொள்ளலாம். அனைத்துத் தேர்வுகளையும் தனியார் நிறுவனங்களே நடத்தும்! மாநில அரசு – கல்வி நிலையக் கட்டடங்களைப் பராமரிக்கும், சம்பளம் கொடுக்கும் அத்தோடு சரி! பிற அனைத்தையும் இந்திய ஆரியத்துவா அரசே நிர்வகிக்கும்!

புதிய கல்வித் திட்டம் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் பாடச்சுமைகளை அதிகப்படுத்துகிறது. இது குழந்தை உளவியல், கல்வி உளவியல், இரண்டிற்கும் எதிரானது. ஒட்டுமொத்தமாக புதியக் கல்வித்திட்டம் தனியார் கொள்ளைக்கு வாய்ப்பளிக்கும்; ஆரியமயம், வர்ணாசிரமம் இரண்டையும் வளர்க்கும்.

தமிழ்நாட்டில் சிலரும், சில கட்சிகளும் கூறுவது போல் மும்மொழித் திட்டத்தை மட்டும் எதிர்த்தால் போதாது; முற்றிலுமாகப் புதிய கல்வித்திட்டத்தைக் கைவிடப் போராட வேண்டும்!

மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகத்து 13 – வியாழன் – காலை 10 மணிக்கு, தமிழ்நாடெங்கும் பொது இடங்களிலும் – நம் வீடுகளுக்கு முன்பும் பதாகை ஏந்தி – “தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை வழங்கு! ஆரியத்துவக் கல்விக் கொள்கையைக் கைவிடு!” என்ற முழக்கத்தோடு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

திராவிடம் கற்றுக்கொடுத்திருக்கும் ஈ அடிச்சான் பிரதி

08.08.2020 அன்று நடந்ந நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு முற்றுகை போராட்த்தின் வெளிப்பாட்டால் திணறிபோன திமுக அவசரகதியில் உருவான போராட்டம் 10.8.2020 அன்று திட்டமிடபட்டுள்ள திருவெறும்பூர் தொகுதி MLA திரு மகேஷ் பொய்யாமொழியின் சுவரொட்டியில் நாம் தமிழரின் முக்கிய முழக்கமான தமிழை வாழவைப்போம், தமிழனை ஆளவைப்போம் என்ற வார்த்தைகளை கூட மாற்றாமல் அச்சடிக்கபட்டுள்ள சுவரோட்டி.


திருட்டு திராவிடம் நிருபணம்.

இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020”ஆரியத்துவ – தனியார்மயக்கல்வியை ஊக்குவிக்கிறது! மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது!

எந்தவொரு மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதில்லை என்ற முடிவோடுதான் நரேந்திர மோடி அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இது வெளிப்பட்டிருக்கிறது.

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, நேற்று (29.07.2020) இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.

தலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ச.க. அரசு எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவது, இவற்றிற்கேற்ப இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.

சமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ச.க. ஆட்சி முனைகிறது.

“கல்வித் தொண்டர்கள்” என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள் – அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் தீய திட்டமும் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

எனவே, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணான இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ தமிழ்த்தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது! பிற்போக்கான இந்தக் கல்விக் கொள்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது!

கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப – கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

OBC என்றால் யார்?

முதலியார்
செட்டியார்
நாடார்
தேவர்
உடையார்
கவுண்டர்
மூப்பனார்
கள்ளர்
வன்னியர்
கோனார்
முத்தரையர்

கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் இவர்கள்தான் தமிழ்நாட்டின் மக்கள். இவர்களை தான் வஞ்சிக்கிறது பாஜக அரசு. இவர்களின் குழந்தைகளுக்கு கொடுக்க பட்டு வந்த மருத்துவ படிப்பு (MBBS) இடங்களை தான் கொடுக்க மறுக்கிறது பிராமணியம் பாஜக அரசு.

ஆனாலும் இவர்களில் சிலர் அந்த கட்சியை கொள்கையை அவர்கள் சார்ந்து இருக்கும் கூட்டணியை ஏதோ ஒரு விதத்தில் ஆதரிக்கிறார்கள் என்பது தான் கொடுமையிலும் கொடுமை. உன்னை கடவுளின் பெயரை சொல்லி கலவரம் செய்ய வீதிக்கு அழைக்கும் பாஜக உன் குழந்தை படிப்பதை விரும்ப வில்லை.

யார் உனக்கான அரசியல் செய்கிறது என்பதை இனியாவது புரிந்து கொள்.

BJPbetraysOBC

OBCReservation

SaveOBCReservationFromBrahmanism

SaveMuruganFromBrahmanism