வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்

துயர் துடைப்பு நிதி, ஆறு மாத வரி விலக்கு உள்ளிட்ட வாடகை வாகன ஓட்டுநர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக அனைத்து தொழில்களும் பெருமளவில் முடங்கிபோயுள்ளது. இதன்காரணமாக வாடகைக்கு வாகனங்களை இயக்கும் தொழில் புரிவோரும், அதில் பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என அனைத்து தரப்பினரும் தொழில் முடக்கத்தால் வருமானமின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தினக்கூலிக்கு வாகனங்கள் இயக்கிவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள், தங்களது வாகனக் கடனுக்கான மாதத்தவணையைக் கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஓட்டுநர்களுக்கு மட்டுமே நிவாரணத் தொகையான 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்ததால் பெரும்பாலான வாகன ஓட்டுநர்களுக்கு அந்த உதவித்தொகை கூட கிடைக்கவில்லை.

கடுமையான ஊரடங்கு காரணமாக நெடுநாட்கள் இயக்கப்படாது, சிறிதும் வருமானமின்றி தவித்துவந்த வாடகை வாகன ஓட்டுநர்கள் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுக்கு பிறகுதான் வாகனங்களை இயக்க தொடங்கினர். இருந்தபோதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஓரிரு பயண வாய்ப்பே கிடைக்கின்றது. அதிலும் சமூகப்பரவலைத் தவிர்ப்பதற்கான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியமையால், வழமையை விட குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிப்பதால் குறைந்தளவு வருமானம் தான் கிடைக்கிறது. அந்த வருமானமும் கடந்த இருமாதங்களாக அதிகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நட்டத்திலேயே முடிவடைகின்றன.

இவைமட்டுமின்றி சாலைவரி, சுங்கவரி, மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரி காரணமாக எளிய மக்களால் வாடகை வாகனத் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கைவிடும் சூழலே நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வாடகை வாகன ஓட்டுநர்களின் குடும்பங்கள் பசியில் வாடி, வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

இத்தகைய சூழலிலும் தமிழக அரசு வாடகை வாகனங்களுக்கான வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

பொதுமுடக்கம் முடிந்தாலும் இயல்பு நிலைத்திரும்ப குறைந்தபட்சம் 6 மாத காலமாவது ஆகும். இவற்றைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு,

1. வாடகை வாகனக் கடனுக்கான மாதத்தவணைகளை இந்த ஆண்டு இறுதிவரை வசூலிக்கக் கூடாது எனவும். அந்தக் காலங்களில் வங்கிக் கணக்குகளில் தவணைகளுக்கான காசோலைகளைச் செலுத்தி பணம் இல்லாமைக்கான அபராதம் உள்ளிட்டவற்றை எந்த வங்கிகளும் வசூலிக்கக்கூடாது எனவும், இது வங்கிகளுக்கு மட்டுமன்றி சிறு-குறு மற்றும் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் தமிழக அரசு விரிவான உத்தரவினைப் பிறப்பிக்க வேண்டும்.

2. வாடகை வாகனங்களின் தகுதிச் சான்று, வணிக ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனக் காப்பீடு ஆகியவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இந்த ஆண்டு இறுதிவரை விலக்கு அளிக்க வேண்டும்.

3. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடையும் இந்த நேரத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்‌.

4. தமிழகத்தில் வணிக ஓட்டுநர் உரிமம் அல்லது ஓட்டுநர் உரிமம் (Badge or Licence)வைத்துள்ள அனைத்து வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் தமிழக அரசு துயர் துடைப்பு நிதியாக ரூ.10,000 வழங்க வேண்டும்.

5. அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் பொருளாதாரப் பின்னடைவில் இருப்பதால் தமிழகத்திலுள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதிவரை சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.

6. சாலை வரி, வாடகை வாகன வரி போன்ற வரிகளை இந்த ஆண்டு முழுமைக்கும் நீக்க வேண்டும்.

இப்பேரிடர் காலத்தில் அன்றாடப் பிழைப்புக்கே வழியின்றி அல்லலுறும் வாடகை வாகன ஓட்டுநர்களின் மிக நியாயமான இக்கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்குமாறு நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

மூலப்பதிப்பு: http://bit.ly/32wQzA7

காடுகளை அழிப்பதால் ஏற்படும் ஆபத்து

காடுகள் அழிக்கப்படுவதில் இங்கே அதிகம் பேசப்படாத ஒரு ஆபத்து உள்ளது, அது பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும், நிலத்தை வறட்சியை நோக்கி தள்ளும் என்பதையெல்லாம் தாண்டியது, அதுதான் Zoonotic_Disease. மனிதர்கள் காடுகளை ஆக்கிரமிப்பதாலும் காடழிப்பால் வாழ்விடத்தை இழந்த விலங்குகள் உணவின்மையால் மனிதர்கள் வாழும் பகுதிக்கு படையெடுப்பதாலும் விலங்குகளுக்கு மட்டுமே பரவக்கூடிய நோய்க்கிருமிகள் விலங்குகளிடத்திலிருந்து மனிதருக்கும் பரவத் தொடங்குகிறது, இதற்கு பெயர் சூனோடிக் டிஸிஸ் (zoonotic disease) என்பார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் பரவிய எபோலா (ebolo), ஜிகா (ziga), சார்ஸ் (sars) அனைத்தும் காடு அழிப்பினால் விலங்கிடமிருந்து மனிதனுக்கு பரவியதுதான். இப்பொழுது பரவுகிற கொரோனா நோய் தொற்று கூட இதுமாதிரியானது தான்.

காட்டை அழித்து காட்டை ஆக்கிரமித்த முதல் நபருக்கு காட்டுக்குள் இருக்கும் ஏதோ ஒரு விலங்கிற்கு இருக்கிற நோய்க்கிருமி தொற்றிவிடுகிறது, பிறகு அந்த நபர் ஹோஸ்டாக (Host) செயல்படுகிறார். ஒரு நோய்க்கிருமி ஒருவருக்குள் வந்து விட்டது என்றால் அது வளர்ந்து பெருகி பிறரை தாக்க அல்லது அவரிடத்தில் இருந்து பிறருக்கு பரவ தயாராகிற வரை அவர் உடம்பில் உள்ள ஊட்டச்சத்தை உண்டு அவர் உடலை வாழ்விடமாக பயன்படுத்திக்கொள்ளும். இதற்க்கு பெயர் தான் ஹோஸ்ட் (host). இந்த நபர் சமூகத்தில் கலக்கும்போது சமூக பரவலை ஏற்படுத்தி பிறருக்கும் இந்த நோய்த்தொற்றை கடத்துவார்.

எச்ஐவி (hiv) வைரஸ் ஏற்படுத்திய எய்ட்ஸ் (aids) கூட காட்டுக்குள் இருக்கும் ஒரு வகை குரங்குகளுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் தொற்று தான். அந்த குரங்கிடம் தொடர்பு வைத்திருந்த ஒரு மனிதருக்கு முதன்முதலில் அது பரவியது. பின்னாட்களில் அது மாற்றமடைந்து மனிதர்களுக்கு இடையில் மட்டும் பரவும் நோய் தொற்றாக உருவாகிவிட்டது. வெறி நாய்களிலிருந்து மனிதனுக்கு பரவும் ராபீஸ் (rabies) என்ற வெறிநாய்க்கடி நோய், நேரடியான சூனோடிக் டிசிஸ் (zoonotic disease) க்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

வைரசால் மட்டும்தான் இந்த சூனோடிக் ஏற்படுமா என்றால், இல்லை, அது பேக்டீரியாவாகவோ (bacteria), பேரசைடாகவோ (parasite), பூஞ்சையாகவோ என எந்த ஒரு நுண்ணுயிரியாகவும் இருக்கலாம். விலங்கிலிருந்து மனிதனுக்கு நோய் பரவுவதோடு மட்டுமல்லாமல் வன அழிப்பினால் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த மனிதனால் வனவிலங்குகளுக்கும் நோய் தொற்று ஏற்படும். இதற்கு ரிவர்ஸ் சூனோசிஸ் (reverse zoonosis) அல்லது சூஆன்த்ரோபோனோசிஸ் (anthroponosis) என்று பெயர். காடழிப்பினால் புவியின் தட்பவெப்பம் மாற்றமடைந்து ஏற்கனவே புவியில் இருக்கிற நுண்கிருமிகள் திடீர் மாற்றம் (Mutation) அடைவதால் நோய்க்கிருமிகளின் மரபணு மாற்றியமைந்துவிடுவதும் இந்த திடீர் மாற்றத்தினால் நோய்க்கிருமிகள் மனிதர்களை வெகுவாக தாக்கி அழிக்கிறது என்கின்ற நிகழ்கால சிக்கல் ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கிறது. காடு அழிப்புகளால் இப்படிப் பல்வேறு வழிகளில் நுண்கிருமிகள் தாக்குதல் அதிகரிக்கக்கூடும்.

பெரும்பாலான மனித இனமும் காட்டு வாழ்வியலில் இருந்து வெளியேறி சமவெளிப் பகுதிக்கு வந்து அடைந்துவிட்டனர். காட்டிற்குள் மீதமிருப்பது பழங்குடி மக்கள் மட்டும் தான், அவர்களுக்கு மட்டும்தான் காட்டை கையாளவும் பேணி பாதுகாக்கும் மரபு அறிவு இருக்கிறது. உலக இயற்கை வள நிறுவனத்தின் சர்வதேச காடுகள் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் மற்ற பகுதியில் நடக்கின்ற காடழிப்புகளை விட பழங்குடிகள் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளில் ஆச்சர்யபடும்மளவு மிக மிக குறைவான அளவே காடழிப்பு நடந்துள்ளதாக நிரூபணமாகியுள்ளது. மோடி அரசின், காடுகளை தனியாருக்கு தாரை வார்க்கும் செயல் பழங்குடி மக்களையும் காட்டைவிட்டு வெளியேற்றிவிடும்.

அடர்காடுகளை அழித்து, மனிதர்களுக்கும், காட்டுயிருக்கும் இடையில் இருந்த அரணை உடைத்து தொடர்பு ஏற்படுத்தியது நோய் தொற்றுகள் பரவ வழிவகுத்தது, காலப்போக்கில் அவை சமூக தொற்றாக மாறி விடுவது என காடு அழிப்பினால் பல ஆபத்து நடக்கும் என உலகம் முழுவதும் வாழும் பழங்குடியினர் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். உலகம் முழுவதும் மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் 17% இதுபோல் விலங்குகளிடமிருந்து பரவுகின்றது என்று உலக சுகாதார நிறுவனம் கூட கூறியுள்ளது . இதுவரை 17% நோய்கள் பரவி இருக்கிறது என்றால் இனிமேல் காடுகளை அழித்தால் இந்த சதவீதம் உயருமா உயராதா? உலகளவில் பயன்படுத்தப்படுகின்ற மருந்துகளில் 25% காடுகளில் இருந்தே நமக்கு கிடைத்துள்ளன, காட்டை அழிப்பதனால் எதிர்காலத்தில் நோய்க்கு மருந்து இல்லாமல் போவதோடு மட்டுமில்லாமல் ஒருவேளை மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கான தேவை அதிகமாக இருக்கும், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். காடுகள் அழிப்பதை தடுத்து விட்டால் இப்படிப்பட்ட நோய்க்கும் இங்கு வேலை இல்லை, அதற்கான மருந்துக்கும் இங்கு தேவை இல்லை என்பது தனிக்கதை (மருந்து மாஃபியாக்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்) மூலமாக பல காடுகள் அழிக்கப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களில் 1,20,000 எக்டேர் காடுகள் இந்தியாவில் அழிக்கப்பட்டுள்ளது.1,09,75,844 மரங்களை வெட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இது போதாதென்று மோடி அரசு கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக வளர்ச்சி என்கின்ற போர்வையில் இந்திய நிலப்பரப்பில் 30 காடுகளை தனியார் நிறுவனங்களுக்கு இப்போது தாரைவார்த்து இருக்கிறது. இது பல வழிகளில் பூமியில் வாழ்கிற அனைத்து உயிரினத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் மேலும் ஒரு lockdown 2.0 நாடடங்கு உத்தரவுக்கு நம்மை தள்ளும். மீண்டும் ஒரு ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் இழந்து வாழப்பழகுவதை விட காடுகளை அழித்து போடுகிற எட்டுவழிச்சாலை இல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணம் செய்து நாங்கள் வாழப்பழகிக்கொள்கிறோம். காடுகளை அழித்து விட்டு இவர்கள் செய்வது, நமது தலையை வெட்டிவிட்டு தொப்பி வாங்கித் தருவதற்கு சமம், காட்டை அழித்து விட்டு, நோயோடு வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று இவர்கள் எளிதாக சொல்லிவிடுவார்கள். பாதிக்கப்படப்போவது நீங்களும் நானும் தான் நோயுடன் வாழ பழக போகிறோமா அல்லது காட்டை அழிக்கும் இவர்களை எதிர்த்து போராட போகிறோமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

-வருண் சுப்ரமணியம்

https://bit.ly/2yLDoPm

தனியார் மயமாகும் இந்தியக் காடுகள்

உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளை எல்லாம் தனியாருக்குத் தாரை வார்க்கிறது இந்திய அரசு.

மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே காடுகளில் பல்வேறு பேரழிவுத் திட்டங்களை நடைமுறைப் படுத்த, அவசர அவசரமாகத் தனியார் நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கி இருக்கிறது.

மார்ச் 22-ஆம் தேதி பாரதிய ஜனதா ஒரு நாள் ஊரடங்கை அறிவித்திருந்த இந்திய அரசு, 23ஆம் தேதி காடுகளைத் தனியார் நிறுவனங்களுக்கு அளித்துவிட்டு, 24 -ஆம் தேதி முதல் தொடர் ஊரடங்கை அறிவித்தது. எந்தத் திட்டத்தையும் எதிர்த்துப் போராட முடியாத நிலையில் மக்கள் முடக்கப்பட்டுள்ளனர்.
நாசகாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்திய அரசுக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது.

இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்து இருக்கின்ற 30 திட்டங்களுமே தனியார் முதலாளிகளால் நடத்தப்பட இருக்கின்றன.

இயற்கைப் பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு போன்றவை குறித்த விதிமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.

உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகளையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்ப்பதில் பா.ஜ.க. அரசு குறியாக இருக்கிறது.

இந்திய அரசின் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியே காடுகளைப் பல்வேறு திட்டங்களுக்கு அவசர அவசரமாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து இருக்கிறது இந்திய அரசு.

நடத்தப்பட அனுமதி அளித்திருக்கின்ற 30 திட்டங்களுமே தனியாரால் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

அருணாச்சலப் பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கில் எட்டலின் நீர் மின்திட்டம் அமைக்க 1,200 ஹெக்டேர் நிலப்பரப்பை கார்ப்பரேட் நிறுவனத்திடம் இந்திய அரசு அளிக்கிறது.

இப்பகுதியில் இரண்டு அணைகள் கட்டப்பட இருக்கின்றன; இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்காக எட்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 1,178 ஹெக்டேர் நிலப்பரப்பு தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்படுகிறது. 2 லட்சத்து 80 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்ட இருக்கின்றன. இப்பகுதி இடு மிஷ்மி பழங்குடியினர் வாழக்கூடிய பகுதி. அதிக எண்ணிக்கையில் புலிகள் வாழும் புலிகளுக்கான பாதுகாப்புப் பகுதியாகவும், பல்லுயிர்ச்சூழல் நிலவும் பகுதியாகவும் இக்காடு இருக்கின்றது.

திட்டங்களுக்கு அனுமதி வழங்கியதில், 2017 வன ஆலோசனைக் குழுவின் வனக்கொள்கை எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. இத்திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து கொண்ட வனஆலோசனைக் குழு மின் துறை அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வனவிலங்குப் பிரிவு– ஆகியவற்றின் கருத்துக்களை அளிக்கும்படி கேட்டுள்ளது.

291அறிவியலாளர்களும், பாதுகாப்பு வல்லுனர்களும் பொது முடக்கத்தின்போது, தனியார் திட்டங்களுக்கு அவசரகதியில், சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் வழங்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் டிஜிட்டல் ஆவணங்களை மட்டும் பார்த்துவிட்டு அனுமதி அளிக்க வேண்டிய தேவை என்ன?- என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்றைய இந்திய அரசின் நோக்கம் பொதுத்துறை நிறுவனம் என்று எதுவும் இருக்க கூடாது என்பதும், இந்தியா ஒட்டுமொத்தமாகக் கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் தனி உடைமையாக இருக்க வேண்டும் என்பதும் ஆகும். இந்த நோக்கத்தில்தான் இயற்கையை சூறையாடி கார்ப்பரேட்டுகள் தங்களை வளப்படுத்திக்கொள்ள அனைத்து வசதிகளையும் செய்து தர, இந்திய அரசு துடியாய் துடிக்கிறது.

அசாம் டெகிங் பட்காய் யானை ரிசர்வ் பகுதி நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு அளிக்கப்படுகிறது.

கோவாவில் பகவான் மகாவீர் சரணாலயத்தின் வழியாக நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

கிர் தேசிய பூங்காவின் வழியாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஷராவதி சரணாலயத்தில் புவியியல் தொழில்நுட்ப மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டுள்ள திட்டங்களில் 15 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள், புலிகளுக்கான ரிசர்வ் பகுதி, சரணாலயங்கள், அடர் காட்டுப்பகுதி, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் உள்ள பகுதி ஆகும்.

வழக்கமான நடைமுறைகள், விதிமுறைகள் பின்பற்றப்படாமல், திட்டங்களுக்குக் காடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை; எவ்விதமான கள ஆய்வும் நடத்தப்படவில்லை; இத்திட்டங்களைப் பற்றி அருணாச்சல பிரதேசத்தில், அங்கு வாழும் மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதுவுமே தெரியாது. கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கும் நிலையில், இந்திய அரசு ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் கனிம வளத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அவசரஅவசரமாக ஒப்படைக்கிறது.

பல்லுயிர் பாதுகாப்பு, பழங்குடி மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை முற்றிலுமாக சீர்குலைக்கக் கூடிய திட்டங்களை, நாடு முழுவதும் வாழும் அறிவியலாளர்களும், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் உடனடியாகக் களமிறங்கித் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

காடுஒவ்வொரு காடும் ஒரு சூழல் அமைப்பு ஆகும். இதில் கை வைப்பது நிகழ்காலத்தில் பழங்குடி மக்களின் வாழ்க்கையைச் சீரழிப்பது மட்டுமின்றி, பல்லுயிர்களின் இருப்பையும், எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுக்கான வளங்களையும் அழித்தொழிப்பது ஆகும். இந்தத் தலைமுறை மட்டுமின்றி இனி வரும் தலைமுறைகளுக்கும், பல்வேறு உயிரினங்களுக்கும் சொந்தமான இயற்கையைச் சூறையாட அனுமதிக்க முடியாது. காடுகளைச் சுரங்கங்கள் அமைக்க தனியாரிடம் ஒப்படைக்க கூடிய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தங்களைப் போராட்டங்களுக்கு அணியப் படுத்திக்கொள்ள வேண்டும்.

ஊரடங்கை அறிவித்து நாட்டை விற்றுக்கொள்!

ஜூன் முதல் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்கும் என்று செய்திகள் பரவுது.

மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்ப்பதில் இன்னும் பல மிச்சமிருக்கிறது. அதை செயல் படுத்த மாநில அடிமைகளுக்கு அவகாசம் தேவையல்லவா? நாட்டை முழுமையாக விற்று முடிக்கும் வரை ஊரடங்கை தொடரலாம். சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் அகதிகளாக திரியும் போது, உயிரைக் காத்துக்கொள்வதே பெரும்பாடாக இருக்கும் நேரத்தில் நாட்டை விற்பதைப் பற்றி யாருக்குக் கவலை இருக்கப்போகிறது?

பழமொழி: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

புதுமொழி: ஊரடங்கை அறிவித்து நாட்டை விற்றுக்கொள்.

பாலைவன வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிப்பது எப்படி?

ஊரடங்கு மற்றும் கொரானாவால் பாதித்துள்ள நமக்கு புதிய தலைவலியாக பாலைவன வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் படையெடுத்து வந்து பயிர்களை அளித்துக் கொண்டிருக்கிறது.

கென்யா, தான்சானியா, ஏமன்,மத்திய பிரதேஷ் ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் படையெடுத்து உள்ளது.

இதிலிருந்து தப்பிக்க 2 சிறந்த எளிமையான வழிகள் உள்ளது.

  1. தோட்டங்களில், வரப்புகளில் 20,30 மிளகாய் செடியின் கத்தைகளை (காய்ந்த மிளகாய் மார்) பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் மார்களில் காந்தல் தன்மை அதிகம் கொண்டது. [காடுகளின் தன்மைக்கேற்ப கத்தைகளை தயாராக வைத்திருக்கவும்]

தங்கள் காட்டுக்குள் வரும் பொழுது இதனை தீ வைத்து எரிக்க, புகைமூட்டம் சூழ வேகமாக வெட்டுக்கிளி திசை மாறும், வெளியேறிவிடும்.

மிளகாய் மார் மிக நன்றாக வேலை செய்யும்

  1. மிளகாய் மார் கிடைக்காத நிலையில் , மிளகாய் பொடியை சிறிதளவு எண்ணெய் சேர்த்து புல்லுடன் எரிக்க புகைமூட்டம் வரும். இந்த புகைக்கு வெட்டுக்கிளி ஓடிவிடும்.

சில இரசாயன மருந்தின் ஊக்கத்தினால் இலுமினாட்டிகள் இந்த வெட்டுக்கிளியை ஏவி உலக மக்களுக்கு துன்பத்தை கொடுக்கிறார்கள்.

இந்த வெட்டிக்கிளியை “துள்ளுகடான்” என்று கிராமத்தில் அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Locust என்று அழைப்பார்கள்.

அக்காலத்தில் தொலை தொடர்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் ஊதல் (சீட்டி அடித்தல், விசில்) மூலம் ஒவ்வொரு தோட்டத்திற்கும் தெரிவித்தார்கள்.

உடனடியாக கத்தைகளை (மிளகாய் மார்) தீ மூட்டி விரட்டுவார்கள்.

அன்று சீட்டி அடித்தல்!! இன்று தொலைபேசி!!

எவ்வித மருந்திற்கும் கட்டுபடாது!!!

“இது ஒன்றே தீர்வு”

இது பழங்கால, பாரம்பரிய முறையாகும்.

விவசாய பெருமக்கள் முன் ஏற்பாடாக இருந்து கொள்வது நல்லது

Locust attack :

Kindly collect and burn dried chilly plant, it produces a toxic smell which makes locust to ran away. If dried chilly plant Is not available kindly burn chilly powder with grass and pour some oil , it also makes locust to run away .

இந்த விஷயத்தை எனக்கு புரிய வைத்தவர் 62 வயது திருப்பூர் வர்ம சிகிச்சையாளர் ஈஸ்வரன் ஐயா அவர்கள். இவர் சிறுவயதில் இருக்கும் பொழுது இதுபோன்ற வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் வந்து தாக்கிய பொழுது இவரது அப்பா இப்படித்தான் தோட்டத்தை காப்பாற்றியதாக் என்னிடம் தொலைபேசியில் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு வர்மானி ஈஸ்வரன் ஐயாவை தொலைபேசி ( +917904444276 ) மூலமாக தொடர்பு கொள்ளுங்கள். வர்ம சிகிச்சை தேவைப்பட்டால் இவரிடம் பெற்றுக் கொள்ளலாம்.

ஈஸ்வரன் அய்யாவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த திருப்பூர் வர்ம சிகிச்சையாளர் ஹீலர் விசுதா அவர்களுக்கு நன்றி. இவரிடமும் வர்ம சிகிச்சை தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம் ( +917904440266 ).

உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.

இந்த கட்டுரையை உடனடியாக உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்க வேண்டுகிறேன்.

முடிந்தால் வீடியோவாக ஆடியோவாக பல மொழிகளில் உருவாக்கி சமூக வலைதளங்களில் உடனே அதை உலக மக்களுக்கு கொண்டு சேருங்கள்.

மிளகாய் செடியை அதிகமாக உடனடியாக விவசாயிகளை பயிரிட சொல்லுங்கள்.

விவசாயிகளை உடனடியாக மிளகாய் செடிகளை வாங்கி காய வைத்து ரெடியாக வைத்து எடுக்கச் சொல்லுங்கள்.

இது கண்டிப்பாக இயற்கையின் தாக்குதல் கிடையாது, செயற்கையாக யாரோ உருவாக்குகிறார்கள் என்பது தான் உண்மை.

கப்பல்களில் வேலை செய்யும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். கப்பல்களில் எங்கேயாவது வெட்டுக்கிளிகளை கன்டெய்னரில் பதுக்கி வைத்திருக்கலாம் அல்லது அங்கிருந்து பரப்பலாம். சந்தேகத்திற்கு இடமாக கப்பலிலோ அல்லது ஏதாவது இடங்களிலோ இருந்தால் உடனடியாக தகவல் தெரிவியுங்கள் அதை நாம் செயலிழக்கச் செய்யலாம்.

தயவு செய்து எனது 9 கட்டுரைகளை உடனே அனைவரும் ஒருமுறையாவது படியுங்கள். ஒன்பது கட்டுரைகள் வேண்டுமா? onestoneninemango@gmail.com க்கு உடனே ஒரு மெயில் அனுப்புங்கள்.

உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல healerbaskar@gmail.com ல் நேரடியாக காத்திருக்கிறேன்.

இப்படிக்கு.
ஹீலர் பாஸ்கர்.

எகத்தாளமாக பேசும் கடமையை மறந்த நிதியமைச்சர்

புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வது ரொம்ப வேதனையாக இருந்தால் எதிர்க்கட்சியினர் அவர்களின் சூட்கேசை சுமந்து செல்லலாமே.-நிம்மி மாமி.


இதுதான் ஆரியப் பார்ப்பன திமிர்


2,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆடு,மாடு மேய்ப்பதற்க்காக நாடோடிகளாக கைபர்,போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்க்கு வந்த ஆரியப் பார்ப்பன வந்தேறிக்கூட்டம் இன்று இந்த நாட்டின் மண்ணின் மக்களைப் பார்த்து ஏளனம் செய்கிறது.

நாடோடியாக இந்தியாவிற்க்குள் நுழைந்த பார்ப்பன கும்பல்கள், அன்று முதல் இன்று வரை தங்களின் சூழ்ச்சியால் அனைத்து உழைக்கும் மக்களையும் அடிமையாக்கி உழைக்காமல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிர்மலா சீதாராமன் இதுவரை ஒரு தேர்தலில் கூட நேரடியாக போட்டியிட்டு, மக்களிடம் வாக்கு வாங்கி ஒரு வார்டு உறுப்பினராக கூட ஆனதில்லை. ஆனால் பாஜகவின் கடந்த ஆட்சியில் இராணுவ அமைச்சர், இந்த ஆட்சியில் நிதி அமைச்சர்.

இதுதான் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம். இதுதான் (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சியின் கொள்கை. இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தத்தான் அப்பாவி இந்துக்களை பாகிசுதான்,பசுமாடு, காசுமீர்,சீனா என்று கலர்,கலராக கதைவிட்டு மூளைச்சலவை செய்து வைத்துள்ளது.

ஆரியப் பார்ப்பனர்களின் இந்த சூழ்ச்சி அரசியலை உழைக்கும் மக்கள் அனைவரும் என்று ஒன்றுசேர்ந்து முறியடிக்கிறார்களோ அன்றுதான் உழைக்காமல் பிறர் உழைப்பைச் சுரண்டி வாழும் ஆரியப் பார்ப்பன கும்பல்களின் கொட்டம் அடங்கும்.

தமிழர்களே! சிந்திப்பீர்!!

இந்துக்களுக்காக குரல்கொடுக்கவும், போராடவும் உள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று சங்கிகள் தொடர்ந்து மார்தட்டிவருகின்றனர்.

இப்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல், குழந்தை குட்டிகள்,மூட்டை முடிச்சிகளோடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனரே அந்த அப்பாவி மக்கள் அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களே.

அதுவும் பாரதிய ஜனதா கட்சிக்கே பெரும்பாலும் வாக்களிக்கும் இந்துக்கள். இந்த அப்பாவி மக்களிடம் இந்துமதவெறியை விதைத்துதான் இரண்டு முறையாக மோடி பிரதமர் பதவியை அறுவடை செய்துள்ளார்.

ஆனால் இன்று அந்த மக்கள் உண்ண உணவின்றி பசியோடு பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர். சாலை,இரயில் விபத்துகளில் சிக்கி தினந்தோறும் பலர் உயிரிழக்கின்றனர். வாழவழியின்றி பலர் தற்கொலை செய்கின்றனர்.

இந்த அவலங்களை எல்லாம் காணும் போது கல்நெஞ்சம் கூட கரைந்து கண்ணீர் வடிக்கும். ஆனால் இந்த மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சிப்பொறுப்பிற்க்கு வந்த பாஜகவினருக்கோ எந்த வலியும் ஏற்படவில்லை. மாறாக அந்த மக்களின் அவலநிலையை ஏளனம் செய்வதுபோல பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனும் ஆரியப் பார்ப்பாத்தி.

காரணம் அவர்களை பொறுத்தவரை இந்த மக்கள் எல்லாம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தங்களுக்காக ஓட்டுப்போடவும், மதக்கலவரங்கள் செய்யவும் மட்டுமே பயன்படும் ஆட்டுமந்தைக் கூட்டங்கள்.

பாஜக ஆட்சிப்பொறுப்பிற்க்கு வரும்வரை மட்டுமே இந்த அப்பாவி இந்துக்களின் தயவுக்காக ஏங்கும்.ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த அப்பாவி இந்துக்களை கிள்ளுக்கீரையாக தூக்கி எறிந்துவிட்டு, ஆரியப் பார்ப்பனர்க ளுக்காகவும், மார்வாடிகளுக்காகவும் மட்டுமே ஆட்சி செய்யும்.

எனவேதான் சொல்கிறோம் பாஜக இந்து மதவாத கட்சி அல்ல அது ஆரியப் பார்ப்பன இனவாதக்கட்சி என்று. (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி . இந்த உண்மையை உணராத அப்பாவி இந்துக்கள், பாஜகவின் மதவெறி சூழ்ச்சி வலையில் சிக்கி தொடர்ந்து பலியாகிவருகின்றனர்.

தமிழர்களே! சிந்திப்பீர்!!

இவ்வாறு தங்களின் சுயலாபத்திற்க்காக, வடநாட்டில் மதத்தின் பெயரால் அரசியல் செய்து அப்பாவி இந்து மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் மதத்தின் பெயரால் தனது சூழ்ச்சி வலைகளை விரித்து வருகிறது. இந்த சூழ்ச்சி வலைகளை “தமிழர்” என்ற ஒற்றை அடையாளத்தோடு தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழித்தெறிய வேண்டும்.

இல்லையேல் இன்று வடநாட்டவர் சாலைகளில் அனாதைகளாக திரிவதைப்போல, பேருந்துகளில் அடிபட்டு செத்துக்கிட ப்பதைப்போல நமது வருங்காலச் சந்ததியினரும் ஆவதை யாராலும் தடுக்க முடியாது!  எச்சரிக்கை!

ஊரடங்கை பயன்படுத்தி ஆட்டையப்போடும் ஒன்றிய அரசு

அரசாங்கத்தின் எல்லாத் தோல்விகளுக்கும் கொரோனா மீது பழி போட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்தேன்.

ஆனால், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயங்களை எல்லாம் திருட்டுத்தனமாக நிறைவேற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

20 லட்சம் கோடி பேக்கேஜ் என்பதெல்லாம் வெறும் புரட்டு.

எல்லா வளங்களையும் தனியாருக்கு விற்றுவிட சதித்திட்டம் போட்டாயிற்று.

— அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்பு.

— விண்வெளித்துறை ஆய்வில் தனியாருக்கு அனுமதி.

— ISRO வளங்களை தனியார் பயன்படுத்தலாம்.

— செயற்கைக் கோள்கள் தனியாருக்குத் திறப்பு.

— 8 மத்திய நேரடி ஆட்சிப் பகுதிகளிலும் – யுடி – மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயம்.

— மேலும் 6 விமான நிலையங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும்.

— ராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய முதலீட்டுக்கு வரம்பு 49% இருந்தது இனி 74%.

— ஆயுதத் தயாரிப்பு ஆலைகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படலாம்.

— கனிம வளங்கள் தனியாருக்கு மேலும் தரப்படும்.

— நிலக்கரிச் சுரங்கத் தொழில்களில் தனியார் மேலும் இறக்கப்படுவார்கள்.

கடைசியா ஒண்ணு சொன்னாங்க பாருங்க…

  • No cronyism has developed through banks.

இத்தனை நாட்களும் கொரோனா, ஊரடங்கு, உழைப்பாளி மக்கள் பிரச்சினைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மீட்டெடுத்தல், இது குறித்தெல்லாம் இவர்கள் யோசிக்கவே இல்லை.

இத்தனை நாட்களும் இவர்கள் செய்தது எல்லாம் உட்கார்ந்து பேசி, எல்லா வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிட்டது மட்டுமே.

இனி வரும் காலம் இன்னும் கடுமையான சோதனையாக இருக்கப்போகிறது.

எல்லாருக்கும்.

ஊர் அடங்கிய நேரத்தில் சத்தமில்லாமல் நடந்த இன்னொரு முக்கியமான விடயம்

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் காவல்துறை நண்பர்கள் குழுவில் (FRIENDS OF POLICE) உறுப்பினர்கள் சேர்க்கை எடுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்க ஊழியர்களாக பார்த்து பார்த்து துணைக்கு அழைத்துக் கொண்டது தமிழக காவல்துறை. அதேபோல தன்னார்வலர் களுக்கான பணியை செய்வதற்கும் ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான சேவா பாரதியை மட்டுமே தங்களுக்கு துணைக்கு அழைத்துக் கொண்டது.

இதுவெல்லாம் ஒருவகையான முன்னோட்டம் ஆர்எஸ்எஸ் கும்பலை வைத்து பொதுமக்களை எப்படி ஒடுக்குவது என்று ஆர்எஸ்எஸ் காவல்துறைக்கு பயிற்சி அளிக்கும் அல்லது காவல்துறை ஆர்எஸ்எஸ் க்கு பயிற்சி அளிக்கும். இருவரும் சேர்ந்து மக்களை நசுக்குவார்கள். ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு எதிராக கலவரங்கள் செய்யும் போது எப்படி கரம் கோர்த்து களம் இறங்க வேண்டும் என்பதற்கு இரண்டு தரப்பும் இப்போதே ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டதோ என்ற அச்சம் சமூக மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது…

நெல்லை மாநகர காவல் துறையின் உயர் அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் நேர்மையான மனிதநேயமுள்ள நல்ல அதிகாரிகளாக இருந்தபோதிலும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் அழுத்தம், மேலிடத்து உத்தரவின் காரணமாக அவர்களும் சேவாபாரதியை துணைக்கு அழைத்துக் கொண்டார்கள். (பார்க்க: நெல்லை மாநகரில் ஒட்டப்பட்ட வால்போஸ்டர்)

மனிதகுல விரோத பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸின் சேவாபாரதியை துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய பலவீனமான நிலையிலா நெல்லை காவல்துறை உள்ளது.? காவல் துறையில் ஆட்கள் பற்றாக்குறையா.? அல்லது காவல்துறை பேச்சை மக்கள் கேட்க மாட்டார்களா.? சேவாபாரதி சொன்னால்தான் மக்கள் கேட்பார்களா..?

ஆண்டுதோறும் 24×7 என மக்களுக்காக சேவையாற்றி வரக்கூடியவர்கள் முஸ்லிம்கள்,முஸ்லிம் அமைப்புகள்.! ஆம்புலன்சு உதவி, ரத்த தானம், ஏழை எளிய மக்களுக்கான பசி போக்கும் காரியங்கள், மருத்துவ உதவிகள், உயிர்காக்கும் உதவிகள் ,புயல், வெள்ளம் நிவாரண பணிகள், பேரிடர் காலத்தில் உயிரை துச்சமென மதித்து களத்தில் இறங்கி மக்களை மீட்டெடுக்கும் உயிர்காக்கும் உதவிகள் என மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஓடோடிச்சென்று உதவும் கரங்களாக சேவையாற்றி வருபவர்கள் முஸ்லிம் அமைப்பினர். இந்த முஸ்லிம்களின் அமைப்பைச் சார்ந்த எவரையும் துணைக்கு அழைக்காமல் புறக்கணித்ததன் நோக்கம் என்ன.? நிச்சயமாக உங்களுக்கு ஒரு உள்நோக்கம் இருக்கத்தானே செய்கிறது..

தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்தி அவர்களை படுகொலை செய்த பயங்கரவாத அமைப்பை, நாட்டில் இருமுறை தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை காவல்துறையே துணைக்கு அழைத்துக் கொள்வது வேடிக்கை- வினோதம்- வெட்கக்கேடானது..!

கோட்சே செத்துப் போனாலும் அவனது துப்பாக்கியின் தோட்டாக்கள் மிச்சமிருக்கிறது, இன்னும் எத்தனை அப்பாவி உயிர்களை அது காவு வாங்கப் போகிறதோ..?

  • புளியங்குடி சே செய்யது அலி

கொரோனாவை விட கொடூரனமானவர்கள்!

கொரோனா தடுப்பிற்க்காக ஊரடங்கு எந்தவிதமான முன்னறிவிப்பின்றி அவசரகதியில் மார்ச்மாத இறுதியில் போடப்பட்டதும், பல்வேறு மாநிலங்களிலும் கூலி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்தனர். அரசுகளும் இவர்களை கண்டுக்கொள்ளவில்லை.

பின்னர் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல தொடங்கினர். வழியிலேயே சிலர் பசியால் உயிரிழந்தனர்.பலர் விபத்துக்களில் உயிரிழந்தனர்.

1வது ஊரடங்கில் தொடங்கி தற்போது 4 வது ஊரடங்கு தொடங்க உள்ளநிலையிலும் இன்னும் பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வீடுபோய் சேரவில்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.

உலகில் அனைத்து நாடுகளிலும் கொரோனா நோய்த்தொற்று உள்ளது. அனைத்து நாடுகளிலும் மக்கள் கொரோனா நோயால் அவதியுறுகின்றனர், உயிரிழக்கின்றனர்.

ஆனால் எந்த நாட்டிலும் மக்கள் இந்தியாவைப்போல கொடூர அரசுகளால் இவ்வாறு இடம்பெயர்ந்து, வழிநெடுகிலும் இரத்தம் சிந்தி சாவதில்லை.ஏனென்றால் இங்குள்ள அரசுகள் கொரோனாவை விட கொடூரமானவைகள்.