வேளாண்மை சட்டம் 2020

பாஜக அரசால் விவசாயிகளின் நலனிற்கு எதிராக இயற்றப்பட்டுள்ள வேளாண்மை திருத்த சட்டத்தின் தமிழாக்கத்திற்கு கீழே சொடுக்கவும்.

https://bit.ly/36dlAuF

காலியாகிறது இந்தியாவின் கஜானா

தங்கத்தையும் சுமார் ( 28 டன் ) விற்கும் ரிசர்வ் வங்கி! கடந்த 30 ஆண்டுகளில் முதன் முதலாக இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடம் இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு ஏற்கனவே 1.76 கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கி வழங்கியும் நிதிப் பற்றாக்குறை சீரடையவில்லை.

இதனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தை விற்பனை செய்து அதன் மூலம் வரும் லாபத்தை மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதன் படி ஏற்கனவே 1.15 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கம் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அடிப்படையிலேயே உலக வங்கியிடம் கடன் வாங்க முடியும்.

தற்போது தங்கம் விற்கப்படுவதால் மேற்கொண்டு கடன் பெறுவது மற்றும் கடனை அடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது
ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து கொண்டிருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பும் கரைந்து வருவதால் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டு இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை பட்டவர்த்தனமாக தெரியவந்தது. எனவே, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் மூடி மறைக்க முடியாத நரேந்நிர மோடி தலைமையிலான அரசு நிதிச்சுமையை சரிசெய்ய பிமல் ஜலான் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

தற்போது இந்த ஜலான் குழு தான் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை விற்கும் ஒரு ஆலோசனையை வழங்கி நாட்டை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஜலான் குழு ஆலோசனைப்படி ரிசர்வ் வங்கி 1.987 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை (28377.981Kg) விற்பனை செய்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கட்சி வேறுபாடுகளின்றி நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு செயல்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி இருந்தார். மேலும், நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்து வருவதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பல முறை சுட்டிக் காட்டினார்.

ஆனால் எதற்குமே செவி சாய்க்காத மோடி அரசு, பொருளாதார மந்த நிலைக்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் தான் காரணம் என்று சப்பை கட்டு கட்டி தங்களுடைய பொருளாதாரக் கொள்கையின் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்தது.

இதன் விளைவாக தற்போது நாட்டின் அடிப்படை ஆதாயமான ரிசர்வ் வங்கியின் தங்கத்திலேயே கை வைத்து நாட்டை திவலாக்கும் நிலைக்கு மோடி அரசு இட்டுச்சென்றுள்ளது.

Source: NEW INDIAN EXPRESS

இப்போது பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளே காரணமாம். ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணல் என்ற முதுமொழி ஞாபகம் வருது.

தமிழக அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடு

கீச்சகம் என்ற ட்விட்டர் சமூக வலைதளத்தில் அன்றாடம் சில தலைப்புகள் பிரபலமாக பகிரப்படும். அந்த வகையில் இன்று தமிழக அரசியல் கட்சியினரால் பிரபலமாக பகிரப்பட்ட சில குறிச்சொற்கள்.

மக்களின் வாழ்வாதாரங்களில் கைவைப்பதற்கு வசதியாக புதுப்புது சட்ட வரைவுகளை மக்கள் விரோத மோடியின் தலைமையிலான பாஜக கொண்டுவந்திருக்கும் சூழ்நிலையில் ஆரியத்தை எதிர்ப்பதாக கம்பு சுற்றும் திராவிடக்கட்சிகளும் பிற கட்சிகளும் எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கின்றனர்?

இதுபோலத்தான் மீத்தேன், எரிவாயு குழாய், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, அணுவுலை போன்ற அனைத்து திட்டங்களும் முழு வடிவம் பெறும் வரை மக்களின் கவனத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டனர். மக்களின் கவனத்திற்கு வரும்போது முழுவீச்சில் வேலை நடந்துகொண்டிருக்கும். அந்த சமயத்திலும் போராடும் மக்களோடு இணைந்து கொண்டு போராட்டத்தை திசைதிருப்பி விடுவதே வழக்கம்.

சுற்றுச்சூழல் தாக்க வரைவு 2020 என்பது எந்தவொரு நாசகார திட்டத்தையும் எங்கும் தொடங்கலாம், யாரிடமும் அனுமதி பெறத்தேவையில்லை என்ற சட்ட வரைவை முன்வைக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாம் இதுவரை சட்டப்போராட்டம் நடத்தி நிறுத்தி வைத்திருக்கும் அனைத்து திட்டங்களும் உடனே செயல்படுத்தப்படும்.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தனியாக பெரும் படையுடன் போராடிக்கொண்டிக்கிறது நாம் தமிழர் கட்சி. கார்ப்பரேட்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து மண்ணிற்காக போராடுவதால் சீமானை அந்நிறுவனங்கள் புறக்கணிக்க முயற்சிக்கிறது.

அதுசரி, வளங்களை கொள்ளையடிக்க துடிக்கும் நிறுவனங்கள் தங்களது கைக்கூலிகளைத் தானே ஆதரிப்பர்!

ரெண்டு அதிசயம்

கந்தசஷ்டி கவசம் விஷயமாக ரஜினி இன்று தான் வாய் திறந்திருக்கிறார் .

இவர் எப்போதும் இப்படித்தான். எழவுக்கு வா என்றால் எட்டாம் நாள் வந்து நிற்பவர்.

அதிலும் மாநில உரிமை பிரச்சினை சம்பந்தமாக எதுவுமே பேசமாட்டார். தமிழ்நாட்டுக்கு அதிகமாக நிதியை கொடுங்க, வேலைவாய்ப்பு தொடங்க வழி செய்யுங்கள் என்று பிரதமரிடம் கேட்கமாட்டார். எப்பவுமே அவர் வழி தனி வழி தான். இருக்கட்டும்!

இரண்டாவது அதிசயம் என்னவென்றால்,பாஜகவின் முக்கிய நிர்வாகியும்,கட்சியின் முன்னாள் தலைவருமான கோவை ராதாகிருஷ்ணன் அதிமுகவை கண்டித்துப் பேசியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி ஏதும் கேட்கவில்லை.

ஹிந்து, இந்துக்கோயில், இந்துக்களுக்கான பிரச்சனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது பற்றி தான் கேட்டிருக்கின்றார்.

நாடாள ஆசைப்படும் ரஜினியின் கவலையும்,நாடாண்டு கொண்டிருக்கும் பாஜகவின் கவலையும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!

ராஜபக்ஷே ஹிந்து பல ஹிந்து கோவிலை உடைத்து, பல லச்சம் ஹிந்து மக்களை கொன்ற போது பிஜேபி எதுவும் பேசவில்லை…

சரி தனி ஈழம் தான் தீர்வு என்று மோடி யை அறிவிக்க சொல்லுங்க…

அப்போ பிஜேபி சொல்றது போல் தமிழர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற கொள்கை படி ஒரு ஹிந்து நாடு உருவாகும்..

பாரத் மாதா கி ஜே….

வெளிநாடுகளில் படிப்பது தான் “மேக் இன் இந்தியா?”

ராஜ் நாத்சிங்கின் மகன் இங்கிலாந்தின் “லீட்ஸ்” பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.

நிர்மலா சீதாராமன் மகள் “வாங்மயிபரகலா” அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கரின் மகன் “துருவ்” ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் “மேதா” டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறாள்.

அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள் “ராசிகா” மகன் “துருவ் “ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள் “அபூர்வா” பாஸ்ட்டன் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள் “ஆதித்யா ” அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள் “சுபாஷினி” ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின் மகள் “அருனேதய் ” ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன் “நகுல் ” கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.

அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் “திபோத்தமா ” வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் “மேக் இன் இந்தியாவா?”

இவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்க நம்முடைய சூத்திர மாணவர்களிடம் கத்தியையும், துப்பாக்கியையும் கொடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக போராட வைப்பது தான் பார்ப்பன நீதியா?

பாசிச மோடியின் “இந்து ” என்ற மாய வலையில் இருந்து மாணவச் செல்வங்களே, இளைஞர்களே! வெளியேறுங்கள்!

நமது நாடு தமிழ் நாடு!
நமது மொழி தமிழ்!
வாழ்க தமிழ்!

ஆண்ட சாதிகளுக்கு மருத்துவப்படிப்பு தேவையில்லை?

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கு BC, MBC இட ஒதுக்கீடு முக்கிய காரணம்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக இருப்பவர்கள் பெரும்பான்மையானோர் பிற்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பை சார்ந்தவர்கள்.

FC யில் வரும் பொதுப்பிரிவு மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவராக இணைந்து பணியாற்றுவது #அரிதான ஒன்று. அவர்களின் கனவு கார்பரேட் மருத்துவமனையாகவே இருக்கும்.

கிரமாபுற மாணவர்கள் மருத்துவ கல்வியில் நுழைவதை நீட்டை வைத்து தடுத்துவிட்டார்கள். அப்படி மீறி வருபவர்களை BC, MBC இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்து தடுக்கிறார்கள். இது #ஆரிய வன்மம் என்பதை தவிர வேறொன்றுமில்லை.

எதிர்காலத்தில் அரசு மருத்துமனைகளில் பணி செய்வதற்கு மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவமனையை மூடும் அபாயம் இருக்கிறது. இதுவே அரசு பள்ளிகளை போதிய மாணவர்கள் இல்லை என்ற காரணத்தை காட்டி மூடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

BC, MBC இட ஒதுக்கீடு இரத்து என்பது மருத்துவ கல்வி சம்பந்தப்பட்ட ஒன்று மட்டுமல்ல.. தமிழ் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு வசதியை அழித்தொழிக்கும் திட்டமும் கூட.

நடுத்தர வர்கம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த
தொற்று நோய் காலங்களில் கூட நம்மை காப்பாற்றி வருவது நாம் விரும்பி போகும் தனியார் மருத்துவமனையும் அதன் சூப்பர் டீலக்ஸ் வார்டுகளும் அல்ல. அரசு மருத்துவ மனையின் சாதாரண வார்டுகள் தான்.

இந்த சிறப்பான மருத்துவக்கட்டமைப்பை நமது அடுத்த தலைமுறையினருக்கும் விட்டுச்செல்ல “நீட் தேர்வை ஒழிப்போம்!, இட ஒதுக்கீட்டை பாதுகாப்போம்!!

#SaveOBCReservationFromParppans
#OBCகளின்_ எதிரிபாஜக
#(பா)ர்ப்பன(ஜ)னதா_(க)ட்சி

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின்கட்டுப்பாட்டில் எடுத்துச் செல்வது – மாநில உரிமையை பறிப்பதேயாகும்

நாடு முழுவதும் உள்ள சுமார் 1500 நகர கூட்டுறவு வங்கிகளை இந்திய சேம வங்கியின் (ரிசர்வ் வங்கியின்) நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்லும் அவசரச் சட்டம் பிறப்பிக்க இந்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் இவற்றில் உள்ள 5 இலட்சம் கோடி சேமிப்புத் தொகை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும். தமிழ்நாட்டில் 120 கூட்டுறவு வங்கிகள் இவ்வாறு சேம வங்கியின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுவரை இந்திய சேம வங்கி பிறப்பிக்கும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டுதான் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டன. என்றாலும், அவற்றின் அன்றாட நிர்வாக செயல்பாடுகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தன. இனி தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாடு எதுவும் இந்த கூட்டுறவு வங்களின் மீது இருக்காது. கூட்டுறவு வங்கிகளின் மேலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அமர்த்துவது உட்பட அனைத்து நிர்வாக அதிகாரங்களும் சேம வங்கியின் வழியாக இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது.

இனி இந்திய அரசு விரும்புகிற போதுதான், விரும்புகிற வடிவில்தான் பெயரளவுக்கான வங்கியின் இயக்குநர் தேர்தல் கூட நடக்கும். கொஞ்ச காலத்திற்குத் தேர்தெடுக்கப்பட்ட நிர்வாக இயக்குநர் குழு இருக்கக் கூடும். அப்போதும் கூட அந்த நிர்வாக குழுவிற்கு எந்த அன்றாட நிர்வாக அதிகாரமும் இருக்காது.

கொரோனா நெருக்கடிக் காலத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறித்துவருகிற மோடி அரசு, இப்போது நகர கூட்டுறவு வங்கிகளையும் மாநில அதிகாரத்தில் இருந்து பறித்து தன்னுடைய அதிகாரத்திற்கு எடுத்து செல்கிறது.

நேற்று(24.06.2020) – இது குறித்து அமைச்சரவை எடுத்த முடிவை விளக்கிப் பேசிய மூத்த அமைச்சர் பிரகாசு ஜவடேக்கர், பஞ்சாப் மற்றும் மகாராட்டிர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பல கோடி ஊழலை இந்த நடவடிக்கைக்குக் காரணமாக முன்வைத்தார். ஏதோ ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு கூட்டுறவு வங்கிகள் சென்றுவிட்டால் அவ்வங்கிகளில் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கப்பார்க்கிறார். உண்மை நிலை என்ன?

ரிசர்ங் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும் போதுதான் கடந்த ஆண்டு வரை 9 லட்சத்து 77 ஆயிரம் கோடிரூபாய் அளவுக்கு ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி உள்ளிட்ட அரசு வங்கிகளில் மோசடிகள் நடந்துள்ளன என்று இந்திய நிதி அமைச்சரே நாடளுமன்றத்தில் அறிக்கை முன்வைத்தார். இவை சட்டத்தை மீறிய மோசடிகள்!

சட்டத்தை வளைத்து ஏறத்தாழ 8 லட்சம் கோடி ரூபாய் அதானிக்கும் அம்பானிக்கும் அகர்வாலுக்கும் டாடாவுக்கும் வாராக் கடன் என்று தள்ளுபடி செய்து கொடுத்தது சட்டத்தை பயன்படுத்தி நடத்திய மோசடி ஆகும்.

அண்மையில் வெளிவந்த எஸ் வங்கி மோசடி ரிசர்வ் வங்கி கண்காணிப்பு குழுவின் கீழ் அந்த வங்கியின் நிர்வாகம் வந்த பின் நடந்ததுதான். ரிசர்வ் வங்கியின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் செல்லும் வங்கிகளில் அரசியில் தலையீடோ ஊழலோ நடக்காது என்பது போலவும், கூட்டுறவு வங்களில் தான் அரசியல் தலையீடு இருக்கிறது என்பது போலவும், முற்றிலும் பொய்க் காரணத்தை கற்பிக்கிறது இந்திய அரசு. இது ஏற்புடையது அல்ல. உண்மை நிலவரமும் அல்ல!

இது அப்பட்டமான மாநில உரிமை பறிப்பு என்பதோடு வங்கி வாடிக்கையாளர் நலனையும் பறிக்கும் ஆபத்து இதிலிருக்கிறது. அரசு வங்கிகளைவிட கூட்டுறவு வங்களில் கிட்டதட்ட 1 விழுக்காடு வரை சேமிப்புக்குக்கூடுதல் வட்டி கிடைக்கிறது. இனி அந்த வாய்ப்பு பறிக்கப்படும் சூழல் உள்ளது.

வேளாண்மைக்கான நகைக்கடன் வாங்கும்போது கூட்டுறவு வங்கிகளில் 4 விழுக்காடு வட்டிக்குக் கடன் கிடைக்கும். ஆனால் அரசு வங்கிகளில் சென்ற ஆண்டுவரை 6.3 விழுக்காடு வட்டியில் வேளாண்மைக்கான நகைக் கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது அந்த வட்டியும் நடைமுறையில் இல்லை. வேளாண்மைக்கான கடன் என்ற வகையினத்தில் நகைக் கடனே கிடையாது என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது.

இதனால் நகைக்கடனுக்கான வட்டி அரசு வங்கிகளில் 10 விழுக்காடாக உயர்ந்துவிட்டது, கூட்டுறவு வங்கிகளின் நகைக்கடன் வட்டியை விட இது ஏறத்தாழ 2.5 மடங்கு அதிகம் ஆகும். இனி கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குச் சென்ற பிறகு நகைக் கடன் வட்டி உயர வாய்ப்பிருக்கிறது. சேமிப்பு கணக்கிற்கு வட்டியும் குறைந்து, வாங்கும் கடனுக்கு வட்டி அதிகரித்து, எளிய மக்கள் அவதிப்படும் நிலைதான் ஏற்படும்.

இப்போது அரசு வங்கிகளில் ஏழை, நடுத்தர மக்களுக்கும், சிறு தொழில்களும் வாங்கும் கடன் அளவு குறைந்து, பெரும் முதலாளிகளுக்கு கோடி கோடியாக கடன் வாரி வழங்கப்படுவதைப் பார்க்கிறோம். இதே நிலை இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் ஏற்படக் கூடும். இதற்கேற்ப ஒரு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகள் இணைக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு.

எனவே எந்த வகையில் பார்த்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் எடுத்து செல்லப்படுவது நல்லதல்ல.

மாநில உரிமையையும் மக்கள் நலனையும் பறிக்கும் இந்த அவசர சட்ட முடிவை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், இதனை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப்பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam