பாஜக முஸ்லிம்களும் லவ் ஜிகாத்தும்!

சங்கி யோகிக்கு சரியான செருப்படி! -பதில் சொல்ல முடியாமல்
வாயடைத்துப் போன யோகி!


அதாவது முஸ்லீம் ஆண்கள்
இந்து பெண்ணை கல்யாணம் செய்தால் அது LOVE JIHATH (லவ் ஜிஹாத்). அது தவறு. இதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். இது RSS பி ஜே பி யின் கொள்கை OK.


நிருபர் கேட்கிறார்:
உங்கள் கட்சில் உள்ள பிரபலமான முஸ்லிம் நபர்கள்
1 ஷா நவாஸ் ஹுஷைன்
2 முக்தர் அப்பாஸ் நக்வி
3 MG அக்பர்
இவர்கள் அனைவரும் இந்து பெண்களை கல்யாணம் செய்துள்ளனர். அதாவது லவ் ஜிஹாத் love jihath செய்துள்ளனர்.
இவர்களுக்கு என்ன தண்டனை?
இந்த சங்கியால் பதில் சொல்ல முடியவில்லை. லவ் ஜிஹாத் என்பதே சங்கிகளின் பொய்ப்பிரச்சாரம் என்பது இதன் மூலம் அம்பலம்.

தமிழக முஸ்லிம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்து கொள்ள வேண்டிய வரலாறு

அன்று செயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் காயிதேமில்லத், எதிர்க்கட்சி முஸ்லீம் லீக்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக இருந்த முஸ்லீக் லீக் கை இன்று 1 சீட்டுக்கு யாசகம் கேட்க வைத்து இஸ்லாமியர்களை அரசியல் பகடையக்கி மண்டியிட வைத்த சூழ்ச்சியின் வரலாறு.

29 மாகாணசபை உறுப்பினர்களுடன்
இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழே எங்கள் மொழி என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க முழங்கிய போர்க்குரலான கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் ஒரு காலத்தில் ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்த வரலாறு ஒன்று உண்டு. பின் எப்படி அந்த வரலாறு வீழ்ந்தது என்று உங்களில் யாருக்கேனும் தெரியுமா?

இதோ இன்றைக்கு கூட்டணி என்ற பெயரில் சி.பா.ஆதித்தனாரிலிருந்து திருமாவளவன் வரை எப்படி திமுக ஆக்டோபசின் இராட்சச கரங்களால் விழுங்கப் பட்டார்களோ அப்படித்தான் எதிர்க்கட்சி அளவுக்கு செல்வாக்குடன் இருந்த முஸ்லீம் லீக் என்றைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்ததோ அன்றையோடு கூண்டோடு வீழத் தொடங்கியது.

1967ல் அமைந்த அந்த திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. காங்கிரசின் துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார்.

1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது.

1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். விடுதலைப் பெற்றதிலிருந்து 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார்.

மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். தமிழர்களைப் பற்றி கவலைப்படாத கருணாநிதியோ “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடினார்.

இறுதியில் முஸ்லீம்லீக்கின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத திமுக நயவஞ்சகமாக ஒரு துரோகத்தை புரிந்தது. இன்றைய இத்தனை இஸ்லாமிய இயக்கங்களாக கட்சிகளாக ஒருமித்த அரசியல் சக்தியாக உருப்பெறாமால் சிதறிப்போனதற்கான தொடக்க புள்ளி அந்த நிகழ்வு.

அதை தொடங்கி வைத்தவர் கருணாநிதி. முஸ்லீம் லீக்கிடம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தது தமிழக அரசு. பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத். ஆனால், கருணாநிதி முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர்.

சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற்காகவும் தனித்தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது.

ஆரம்ப காலம் திமுகவிற்கு ஆதரவாக இருந்த இஸ்லாமிய சமூகத்தை
அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட
அமைப்பாக ஒன்றுதிரண்டு, அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள சக்தியாக உருவாகி விடாமல் மக்கள் ஆதரவை இழக்கச் செய்தவர் கருணாநிதி. முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற துறைமுகம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல தொகுதிகளை, கலைஞரும், திமுக முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதியாக மாற்றினார்.

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து எப்படி விடுதலை சிறுத்தைகளை தனது தலித் பிரிவாகவும், தவாகவை திமுக வன்னிய பிரிவாகவும் அடிமைகளாக இன்றைக்கு வைத்துள்ளதோ அப்படியே அன்றைக்கு முஸ்லீம் லீக்கை திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான். தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக்கை 1989 தேர்தலில் அப்துஸ் ஸமது மற்றும் அப்துல் லத்தீப் என்று இரண்டாக உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.

அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்!

தமிழ் மண்ணிற்கு பாஜக என்ற வடக்கத்திய மதவாத கட்சியை 1998ல் அறிமுகப்படுத்தியவர் திராவிட கட்சி தலைவி ஜெயலலிதா.
பின்பு அவர் செய்து வைத்த அறிமுகத்தை அவரே 1999ல் அழிக்க நினைத்தபோது அதை தடுத்து தாங்கிபிடித்து பாஜக தமிழ் மண்ணில் தடம் பதிக்க செய்தவர் திராவிட கட்சி தலைவர் கருணாநிதி.

1999ல் கருணாநிதி மட்டும் தோள் கொடுக்காதிருந்தால் பாஜக என்றொரு கட்சி மத்தியில் முதன்முறையாக ஐந்தாண்டுகள் நிலையானதொரு ஆட்சியை தந்திருக்க முடியாது.

காங்கிரசு அல்லாத “ஒரு கட்சி ஆட்சியை” பாஜகவை வைத்து இந்திய ஒன்றியத்தில் தரமுடியும் என்ற நிலை உருவாக்கி, பாஜக எனும் விச விதையை இந்தியா முழுமைக்கும் விதைத்தவர்கள் தமிழகத்தின் இருபெரும் திராவிட தலைவர்கள் அதில் திமுகவிற்கு முக்கிய பங்கு உண்டு.

இன்றைய பாஜகவின் இந்த அசுரவளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அயோக்கிதனத்தை செய்தது திமுக, அதிமுக என்ற திராவிட கட்சிகள் என்றால் அதனை மேலும் வளர்த்து விட்டதில் மதிமுக, தேமுதிக போன்ற திராவிட கட்சிகளுக்கு தமிழகத்தை பொறுத்தவரை சம்பங்கு உண்டு.

இனி ஒருபோதும் வடக்கத்திய மதவாத கட்சியுடன் கூட்டு இல்லை என்று அறிவிக்க வக்கற்ற இந்த கட்சிகள் தங்களது அரசியல் லாபத்திற்காக அவ்வப்போது பாஜக பெயரை சொல்லி பயமுறுத்தி,

பாஜக ஏதோ தங்களால் தீண்டப்படாத கட்சி என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி தங்களை இந்த மண்ணின் இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் பாதுகாவலர் என்று அடையாளப்படுத்தி கொள்ளும்.

மதவாத வெறிபிடித்து இன்று விச விருட்சமாக வளர்ந்து நிற்கும் எச்.ராஜாவிற்கு விதை போட்டது இதே திமுகதான். இன்றைக்கு சாரணர் தேர்தலில் கூட வெல்ல முடியாத எச்.ராஜாவினை, 2001 லேயே காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் வைத்ததுதான் தமிழகத்தில் எச்.ராஜாவிற்கு முதல் அரசியல் அடையாளம் தந்தது திமுக.

கோவை மண்ணில் 1999 தேர்தலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆதரவோடு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மண்ணின் மாசற்ற தூய அரசியல்வாதி மனித புனிதர் தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தேர்தலில் நின்ற
ஐயா நல்லக்கண்ணுவை
தோற்கடித்தார். ஐயா நல்லக்கண்ணுவை தோற்கடிக்கவும், சி.பி ராதாகிருஷ்ணன் வெல்லவும் துணைபோன துரோகத்தை புரிந்தது இதே திமுக!

எப்பொழுது சிறுபான்மையினர் என்று இஸ்லாமியர்களை சொல்லி தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்று கூறுகின்றனரோ..
அப்பொழுதே உங்களை எப்பொழுதும் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்க விரும்புகின்றனர் என்று அர்த்தம்.
அப்படி வைத்திருந்தால்
மட்டுமே அதைச்சொல்லி சொல்லி வாக்கு வாங்கி உங்களை வாக்கு வங்கிகளாக கடைசி வரை பயன்படுத்தி கொள்ள முடியும்.

2002 ல் குஜராத் கலவரத்தின் பாஜக அரசின் கீழ் இஸ்லாமியர்களும் அவர்தம் சொத்துக்களும் எப்படி வேட்டையாடப் பட்டதோ அதற்கெல்லாம் முன்னோடி
1998 ல் கோவை கலவரத்தில்
திமுக அரசின் கீழ் இஸ்லாமியர்கள் மீதும் அவர்தம் உடைமைகளும் வேட்டையாடப்பட்ட நிகழ்வு.

கோத்ரா ரயில் எரிப்பை தம்முடைய சன் தொலைக்காட்சி வாயிலாக மிகப்பெரிய அளவில் மீண்டும் மீண்டும் போட்டு காட்டி அதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டது திமுக.

குஜராத்தில் 2000 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டபோது பாஜக அமைச்சரவையில் இருந்த திமுக காட்டிய எதிர்வினை என்ன?குஜராத்திற்கு இராணுவத்தை அனுப்பி கலவரத்தை தடுக்காவிட்டால் ஆட்சியை கவிழ்ப்பேன் என வாஜ்பாயிடம் கருணாநிதி கோரவில்லை? மக்கள் துன்பத்தை விட பதவி சுகம் பெரிதாய் போனதோ?

எப்படி ஈழ இனப்படுகொலையின் போது காங்கிரசை கவிழாமல் தாங்கி பிடித்ததோ அப்படியே குஜராத் மதப்படுகொலையின் போது பாஜக அரசு வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடித்தது திமுக!

1996 ஜூனில் இஸ்லாமியர்களை மதத்தீவரவாதிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் முதன் முதலாக பதிவு செய்த முதல்வர் என்ற பெருமையை உடையவர் கருணாநிதி. அவரே ஆர்எஸ்எஸ் திராவிடர் கழகம் போன்று ஒரு சமூக நல இயக்கம் என்று கட்டுரையும் தீட்டினார்.

அண்மையில் கூட 90 சதவீதம் இந்துக்களால் நிறைந்த கட்சி திமுக என்று பெருமை கொண்ட ஸ்டாலினிடம் தங்களைடைய நெருக்கடியான காலக்கட்டங்களில் உதவி புரிந்தது திமுகதான் என்று நற்சான்றிதழ் வழங்கினர் ஆர்எஸ்எஸ்காரர்கள் நேரில் சந்தித்து. திமுக எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அந்த அங்கீகாரத்தை ஏற்றுக்கொண்டது.

சிறுபான்மை காவலராக சொல்லிக்கொண்டு இப்தார் நோன்பில் தலையில் தொப்பியுடன் விருந்தில் பங்கேற்பதில் காட்டும் ஆர்வத்தை திமுக இதுவரை அவர்களுக்கு தங்கள் கட்சியில் , ஆட்சி அதிகாரத்தில் அளித்துள்ள பிரதிநிதித்துவம் என்ன?

16 பேர்கொண்ட திமுக உயர்மட்ட குழுவில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு வழங்கியதே இல்லை என்பதே வரலாறு.

70 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுவரை எத்தனை மாவட்டச் செயலாளர்கள் இஸ்லாமியர்களாக இருந்துள்ளனர்.?

மத்திய பலம் வாய்ந்த அமைச்சகங்களை பேரம் பேசி வாங்கும் திமுக இதுவரை எத்தனை இஸ்லாமியரை தமிழகத்திலிருந்து வலுவான துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்துள்ளது?

சாதி, மதம் கடந்த திராவிடம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த திராவிட கட்சிகள் எத்தனை இஸ்லாமியர்களை, ஆதித்தமிழ் குடிகளை பொதுத் தொகுதியில் நிற்க வைத்துள்ளது?
இன்றளவும் பெரம்பலூர் மண்ணின் மைந்தனான ஆ.ராசாவை தன்னுடைய சொந்த தொகுதி பொதுத் தொகுதியானதால் பெரம்லூரில் வாய்ப்பு வழங்காமல் ஓரமாக உள்ள தனித்தொகுதியான நீலகிரிக்கு நகர்த்திய அவலத்தை செய்வது இதே திமுக? ஏன் ஆ.ராசா பொதுத் தொகுதியில் போட்டியிட கூடாதா?

இஸ்லாமியருக்கு பேருக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி தருவது இந்த திராவிட கட்சிகள் வழக்கம்.. அதுவும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பை வழங்கவில்லை இரு திராவிட கட்சிகளும்.

பாஜக வெளிப்படையாக அறிவித்து இஸ்லாமியருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. திமுக வெளிப்படையாக அறிவிக்காமல் வாய்ப்பு வழங்க வில்லை.

திமுக இஸ்லாமியர்களை சிறுபான்மை என்கிறது. திமுக ஒரு இடம் கூட இஸ்லாமியர்களுக்கு தர வில்லை. திமுக இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி மத ரீதியாக பிரித்தாளவே முயல்கிறது.

திமுக முஸ்லீம்லீக் முதல் அனைத்து இஸ்லாமிய அரசியல் சக்திகளையும் பல துண்டுகளாக உடைத்து பங்கிட்டு கொண்டது. பாஜகவுடன் கூட்டணி என்றுமே கிடையாது என்று இதுவரை திமுக கூறவில்லை. திமுக தங்களை சிறுபான்மை பாதுகாவலர் என்று சொல்லி அச்சப்படுத்தி ஆதரவை பெறும்.

திமுகவிற்கு வாக்களிக்கவிட்டால் பாஜக வந்துவிடும் என்பதல்ல. திமுகவிற்கு வாக்களிப்பது என்பதே பாஜக வந்துவிடுவதை போன்றதுதான்!

பி பி சி க்குத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 1993 பெப்ருவரியில் அளித்த பேட்டி

கேள்வி:
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:
முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடுடைய ஓர் இனக்குழு என்றவகையில் அவர்களது பிரச்சினை அணுகப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் தனித்துவம், நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை அவர்கள் தமிழ்மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைச் சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும் விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடா ஆகக்கூடாது.

கேள்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே?
பதில்:
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம். ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்.

வடபகுதி முஸ்லிம்கள்

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் செய்திகள் வடபகுதியில் பரவப்பரவ அங்கு பதட்டநிலை உருவாகத் தொடங்கியது.

வடபகுதியில் உள்ள தமிழர்களின் உடன்பிறந்தவர்களும், உறவினர்களும் கிழக்கில் பாதிப்பிற்குள்ளாகும்போது அதற்கு எதிர் நடவடிக்கைகள் தோன்றுவது இயற்கையே. வடபகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்கள் கிழர்ந்தெழக்கூடிய அபாயம் உருவானது. ஆனால் விடுதலைப்புலிகள் தலையிட்டு கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 5000 க்கு மேற்பட்ட தமிழர்கள் வயது வேறுபாடின்றி முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தபோதும்கூட வடபகுதியில் ஒரு முஸ்லிமிற்குக்கூட எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் விடுதலைப் புலிகளே.

வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இவர்களுள் யாரும் இதுவரை தமிழர்களால் கொல்லப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த முஸ்லிம்கூட குற்றம்சாட்டியதில்லை.

நிலைமையை புலிகள் இயக்கம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் தமிழர்களிடையே பதட்டம் தணியவில்லை.அதேவேளையில் முஸ்லிம்களிடையே துரோகிகள் முளைத்தனர். வடபகுதியில் புலிகளின் முகாம்கள், நடமாட்டங்கள் குறித்து சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் தொடர்பு சாதனங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது பல பயங்கரமான உண்மைகள் வெளிவந்தன. கிழக்கு மாகாணத்தைப்போல வடக்கிலும் தமிழர்-முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்காக இரண்டு பாரவூர்திகளில் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மறைக்கப்பட்டு வைத்திருப்பது தெரியவந்தது இவையனைத்தும் தமிழர்கள் கூடும் பகுதிகளில் மறைமுகமாக வெடிக்கவைப்பதற்கும் கண்மூடித்தனமாக சூட்டுத்தாக்குதலை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனாலும் இதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தொடர்பான விடயமாகக் கையாள விரும்பாத இயக்கம் அவர்களை குற்றம் சுமத்த விரும்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள வடபகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் அதற்கான பழி புலிகள் மீது தான் சுமத்தப்படும்.

மேலும் முஸ்லிம்களிடையே துரோகிகள் ஊடுருவியிருப்பதை அவர்களாலேயே தடுக்கவும் முடியவில்லை. எனவே முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியும், துரோகிகளின் ஊடுருவலைத் தடுக்கவும் வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரையும் வெளியேற்றித் தீரவேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் ஆளானார்கள். இதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.

விழிப்புணர்வு அடையும் வட இந்தியர்கள்!

இந்தக் காணொளியை காணும்போது மிக்க மகிழ்ச்சியும், புதிய நம்பிக்கையும் பிறக்கிறது. வட இந்தியர்கள் இன்று மிகவும் பின்தங்கி சோமாலியா மக்களைப் போல நாடோடிகளாகத் திரிவதற்க்கு அவர்களை அடிமையாக்கி வைத்துள்ள ஆரியப் பார்ப்பனர்களே மூலக்காரணம்.

ஆனால் இந்த உண்மையை மூடிமறைக்கத்தான் ஆரியப் பார்ப்பனர்கள் இசுலாமியர்களை எதிரிகளாச் சித்தரித்து சூழ்ச்சி செய்தனர். அந்த சூழ்ச்சியில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இந்த உண்மையை அறியாத அப்பாவி இந்துக்கள் இசுலாமியர்களோடு மல்லுக்கட்டி நின்று தங்கள் வாழ்க்கையே இன்று இழந்து நடுத்தெருவில் நிற்க்கின்றனர்.

இந்தச் சூழலில் இப்படி ஒரு காணொளி வெளிவந்துள்ளது ஆறுதலாக உள்ளது. இந்தக் காணொளியில் பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்புகளை மதத்தின் பெயரைச் சொல்லி ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வாறு திட்டமிட்டு பறிக்கிறார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறார்.

தமிழ்நாடு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இதேபோல விழிப்புணர்வு அடைந்து நமது எதிரி யாரென்று துல்லியமாக அறிந்து, எதிரியின் சூழ்ச்சிகளை முறியடித்ததினால் தான் இன்று தமிழ்நாடு கல்வி,சமூக,பொருளாதாரத்தில் வட இந்தியாவைவிட பலமடங்கு முன்னேறியுள்ளது. வட இத்தியா இதுவரை விழிப்புணர்வு அடையாமல் தங்களின் எதிரி யாரென்று தெரியாமல் வீணாணதினால் தான் இன்று வட இந்தியர்கள் இவ்வளவு பின்தங்கி உள்ளனர்.

சரி இவ்வளவு பின்னடைவுக்கு பின்பாவது தங்களின் எதிரியாரென்று துல்லியமாக கணித்துள்ளீர்களே இதுவே உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிதான். இனியாவது வட இந்தியர்களின் இன்றைய அவலநிலை விரைவில் நீங்கும் என்று நம்புவோம்!.வாழ்த்துக்கள்! !

காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்க்கொண்டார்களா – 29 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள்

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி கிழக்கு மாகாணம் அம்பாறை அருகே காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் 103 பேர் கொல்லப்பட்ட தினம். தமிழ் மக்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவம் இது. இப்படுகொலையினை செய்தவர்கள் திட்டமிட்ட வகையில், புலிகள் என சந்தேகம் கொள்ளத்தக்க வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

இந்த துயரச்சம்பவம் நடைபெற்ற மறுநாளான ஆகஸ்ட் 5 ஆம் திகதி இலங்கை அரசியல் கட்சிகளின் அனைத்து கட்சிகள் சார்பாக ஊடகங்களுக்கு ஒரு கண்டன அறிக்கை தெரிவிக்கப்பட்டது.

அதில் இலங்கை முஸ்லிம் காங்கிரசு தலைவரான ரவூப் ஹக்கீம் உட்பட எவரும் இச்சம்பவத்தினை தமிழீழ விடுதலைப்புலிகள் தான் செய்தார்கள் என்று குற்றம் சுமத்த வில்லை.
ஆயினும் பின்னாளில், விடுதலைப்புலிகள் தான் இக்கொலையினை மேற்கொண்டார்கள் என முஸ்லிம் ஊர்காவல்படையை சேர்ந்தவர்களால் நேர்த்தியாக திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டன. அதற்கேட்ப, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அவர்களே சில சாட்சிகளையும் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கி இருந்தார்கள்.


முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அந்நேரத்தில் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக, பின்னாளில் தமிழீழ விடுதலைப்போரை அழிப்பதற்கு இலங்கை இனவாத அரசுக்கும் மற்றும் சர்வதேசத்திற்கு துணை போன கருணா தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2006- 2009 வரை நடைபெற்ற தமிழர் மீதான இன அழிப்பு போரில் சிங்களவர்களுக்கு சார்பான நிலையில் தமிழீழ போராட்டத்திற்கான மிக முக்கிய துரோகத்தனத்தில் கருணா தனது சுயநலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு ஈடுபட்டார் என்பதை சிங்கள அமைச்சர்களே ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அத்துரோகம் மாவிலாறு தொடக்கி கிழக்கில் முழுமையாகவும் பின்னர் வடக்கின் ஆனந்தபுரம் , முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது.

நிற்க !

80 களில் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப்போரில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் தமது தாயக விடுதலைக்காக களமாடி மாவீரர்களானார்கள். தமிழீழ விடுதலைப்போரில் களமாடி மரணிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய கவுரவமான “ “மாவீரர்” கவுரவமும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இறுதிவரை நினைவுகூரப்பட்டும் வந்தனர்.

வடகிழக்கை உள்ளடக்கிய தமிழீழ நாட்டின் விடுதலை கோரிக்கையை கீழறுப்பு வேலைகளால் மட்டுமே பின்னடைய செய்ய முடியும் என்று கணக்கு போட்ட இலங்கை அரசு இஸ்ரேல் நாட்டின் உதவியினை அமெரிக்கா ஊடாக நாடியது. (தமிழீழப் போராளிகளுக்கு முதன்முதலாக போர் பயிற்சி அளித்தது பாலஸ்தீன போராளிக்குழுக்கள்(plo) தான்). லெபனானில் இருந்த பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற தமிழீழப் போராளிகள் இலங்கை ராணுவத்துக்கு எதிராக களத்தில் நின்றனர். plo மீதான வஞ்சத்தை தீர்க்க ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்ட இஸ்ரேல் தனது உளவு அமைப்பான மொசாட் மற்றும் இராணுவ வல்லுனர்கள் மூலம் இலங்கை படைகளுக்கு பயிற்சியளிக்க முன்வந்தது.

முதல்கட்டமாக இராணுவ பயிற்சிக்காக இஸ்ரேலிய இராணுவ உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி கொடுத்தது. இரண்டாம் கட்டமாக இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் வருகைதான் முக்கியமானது. அது புலிகளை எதிர்த்து நேருக்கு நேர் போர் செய்து வெல்லமுடியாது என்பதனை புலிகளின் போரியல் உத்திகளை கொண்டு கண்டறிந்தது.

எப்படி புலிகளை பின்னடைவுக்கு ஆளாக்கலாம் என்று போட்ட மொசாட்டின் திட்டம்தான் புலிகளிடம் இருந்து முஸ்லிம்களை பிரிப்பதும் மத அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் வேறுபாட்டையும் பகைமையையும் ஏற்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இருந்து வடகிழக்கு மாகாண முஸ்லிம்களை விலகி இருக்க செய்வது என்ற சூழ்ச்சித்திட்டம்.

இதன் அடிப்படையில் மொசாட்டின் திட்டத்தின் படி சிங்கள அரசாங்கம் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு குழுவை உருவாக்கியது. அது தான் முஸ்லிம் ஊர்காவல் படைகள். முஸ்லிம்களுக்கு என்று ஒரு சுதந்திர தேசம் உருவாக்கப்படும் அங்கு முஸ்லிம்கள் கிலாபத்தை நிலைநாட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி புலிகளுக்கு எதிராக ‘ஜிகாத்தை’ அறிவித்து செயல்பட தூண்டியது. குறிப்பாக கிழக்கு மாகாணம் தங்களுக்காக தேசமாக அமையும் என ஜிகாத் களுக்கு நம்பிக்கையூட்டப்பட்டது. அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டம் தங்களின் தனித்தேசம் என முஸ்லிம்கள் அனைவரையும் நம்ப வைத்ததில் மொசாட் வெற்றி கண்டது என்றே சொல்லலாம். (தமிழகத்தில் ஜம்மியா என்று அறியப்பட்டதுதான் ஜிகாத். 97 களில் நானும் இந்த ஜம்மியாவுக்காக ஒலிநாடா . அல்ஹஸனாத் மாத இதழ் மீள்பார்வை பத்திரிகைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் நானும் ஒருவன் )

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ‘ஜிகாத்’ ஊர்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.

திராய்க்கேணி படுகொலைகள் . 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் திகதி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை சிறப்பு அதிரடிப் படையினரின் ( STF) உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

திராய்க்கேணி கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. STF உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம ஊர்க்காவல் படை அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் ஊர்க்காவல் படையால் தீக்கிரையாக்கப்பட்டன.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலைச்சம்பவம் மதியம் வரை நீடித்திருந்தது. இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில், 8வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள்.

இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 25 வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது. காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு மக்கள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.

இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேச அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.

  • 20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்க்காவல் படைகளால் 69 தமிழர்கள் படுகொலை

  • 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை .

  • 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .

  • 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

  • 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

  • 29.07.1990 ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

  • 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

  • 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் ஊர்க்காவல் படை குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் கோவில் தர்மகர்த்தா தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

  • 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே சிங்கள இராணு உதவியுடன் இப்படுகொலையினை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி, ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.

பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.

இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவர்களாகவும் காணப்படுகின்றனர் . முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 தமிழ் இளைஞர்களையும் படுகொலைசெய்தனர்.

மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவுமில்லை. இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.

சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் சிதைக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.

முஸ்லிம் ஊர்காவல்படையினர், தமிழர்களை இவ்வாறு கொடூரமாக படுகொலை செய்த போதும் புலிகள் அப்பாவி முஸ்லிம்கள்மீது எந்தவித தாக்குதல்களையும் இதுவரை மேற்கொண்டதில்லை. முஸ்லிம்களை தமிழர்கள் என்றே பார்த்தார்கள் புலிகள். அதனால் சகோதரர்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லலாம்.

இந்த படுகொலைகள் அனைத்தும் கிழக்கின் எல்லைக்கிராமங்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றி விட்டு முஸ்லிம்களின் இருப்பினை உறுதி செய்யும் முகமாகவே சிங்களவர்களின் கட்டமைக்கப்பட்ட செயத்திட்டதில் முஸ்லிம் ஊர்காவல்படைகளால் மேற்கொள்ளப்பட்டது. அதனால், தமிழர் மீதான படுகொலைகளை முஸ்லிம் தலைமைகள் கூட கண்டிக்கவுமில்லை: கண்டுகொண்டதுமில்லை.

நடந்த இந்த சம்பவங்கள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்ட நிலையில்.

நேற்று முதல் முகநூலில் தமிழகத்தை சார்ந்த முஸ்லிம்கள் நடந்த சம்பவங்களுக்கு எதிர்வினையாக தமிழர்களால் நடத்தப்பட்ட தாக்குதலை மட்டும் போட்டு அதன் முழுப்பழியையும் புலிகள் மீது மட்டும் போட்டு பதிவிடுகின்றனர். அப்பதிவுகளிலும் கமெண்ட்களில் என் பெயரை மென்சன் செய்து பதிலிடுகின்றனர்.

நாங்கள் தமிழர்கள் எப்போதும் இஸ்ரேலை ஆதரித்தது இல்லை. நீங்கள் முஸ்லிம்கள் மொசாட்டின் சிங்களத்தின் வலைக்குள் சிக்கி ஒரு இனப்போராட்டத்தை மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தி தோல்வியுறச் செய்துவிட்டீர்கள்.
குற்றம் சுமத்தும் முன் கொஞ்சம் வரலாற்றையும் படியுங்கள். எழுதி கையெல்லாம் வலிக்கிறது பின்பு ஒரு முறை இது சம்பந்தமாக உங்களை சந்திக்கிறேன்.

நன்றி

-தமிழரசன் அப்துல்காதர்.

உதவி செய்வதிலும் மதவெறி?

இந்த கடுமையான கோரோண மூலம் கஷ்டப்படும் நேரத்தில் கூட ஏழை முஸ்லிம் பெண்ணுக்கு உதவி செய்யாத சங்கிகள். வரிசையில் வந்த முஸ்லிம்களை திருப்பி அனுப்பிய சங்கி கும்பல்

மத வேறுபாடில்லாத தமிழ் எனும் பண்பாடு

இந்த உலகில் பல நம்பிக்கைகள் உள்ளன. அதற்கென தனி அடையாளங்களும், பழக்கவழக்கங்களும் உண்டு. ஆனால் அப்பழக்கவழக்கங்களில் ஊடுருவி உள்ள பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் அந்தந்த மக்களின் மொழி மற்றும் சார்ந்தவைகளோடு உறவு கொண்டிருக்கும்.

அவ்வாறு தமிழர்கள் தன் மரபுவழி பழக்கமான அவைதீக மரபாக இருக்கட்டும் அல்லது பிற அந்நிய நம்பிக்கையாக இருக்கட்டும் தங்களின் பண்பாட்டு விழுமியங்களூடே அதனை அனுகினார்கள்.

சான்றாக, 7 கள்வர்களிடமிருந்து பிராமணப் பெண்ணொருத்தியை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த பக்கிரி சாய்புவின் தர்கா தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மேற்குப் பகுதியில் உள்ளது. தன்னை காப்பாற்ற முயன்று உயிர் இழந்த பக்கிரிசாய்புவை கண்டு மனம் வருந்தி தன் நாக்கைப்பிடுங்கி கொண்டு உயிர்துறக்கிறாள் அந்த பிராமணப்பெண். அவரும் அத்தர்காவிலே அடக்கம் செய்யப்படுகிறார். “இஸ்மாயில் ஷா தர்கா” என்றழைக்கப்படும் இத்தர்காவில் இசுலாமியர்களும் இந்துக்களும் இனணந்து வழிபடுகிறார்கள்.

உலகிற்கே வழிகாட்டியாக திருநெல்வேலி மாவட்டத்தின் நான்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாராயணம் என்ற கிராம் திகழ்கிறது. இக்கிராமத்தில் இசுலாமியர்கள் இல்லை. எனினும் வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் “செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை அப்பா தர்காவில் (சமாதி)” ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16-ஆம் தேதி ஒன்றுகூடி கந்தூரி எனும் விழாவை நடத்துகின்றனர். கந்துாரி விழாவில் கலந்து கொள்ளும் இசுலாமியாகள் அக்கிராமத்து வீடுகளிலேயே ஏழைப் பணக்காரன் என்ற எந்த பாகுபாடுமின்றி தங்குகின்றனர். அதோடு இந்த விழாவை அக்கிராமத்து இந்துக்களே முன்னின்று நடந்துகின்றனர்.

தமிழ்நாட்டில் இது போன்று பல தர்காக்கள் பேதமின்றி செயல்படுகின்றன.

காணிக்கை நேர்தல், காணிக்கை வழங்குதல், அவுலியாவின் சமாதியை வலம் வருதல், புனித நீர் வழங்குதல், தலைமுடி எடுத்தல், சந்தனக்கூடு ஊர்வலம் மேலும் ‘கொடிகட்டு’ ஊர்வலம் போன்றவை கோயில் திருவிழாக்களின் போது நடைபெறும் சப்பர ஊர்வலத்தையும், தேரோட்டத்தையும் நினைவூட்டுகிறது.

இதனடிப்படையில் தமிழர்கள் தன் மண் மற்றும் பண்பாடு விழுமியங்கள் சார்ந்தே எந்த ஒரு நம்பிக்கையையும் அணுகுகிறார்கள். அந்நிய நம்பிக்கைகளாக இருந்தாலும் அவைகளை தமிழ் பண்பாடு கலாச்சாரத்திற்கு உகந்தவாறு மாற்றியமைத்து பின்பற்றி வருகின்றனர்.
ஏனெனில், “தமிழ் பண்பாடு” என்பதே அனைவரையும் தமிழர்களாய் ஒன்றிணைக்கிறது!

முஸ்லிம் மக்கள்பற்றிய புலிகளின் நிலைப்பாடு

பி பி சி க்குத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பேட்டி.

1993 பெப்ரவரி

கேள்வி:
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:
முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடுடைய ஓர் இனக்குழு என்றவகையில் அவர்களது பிரச்சினை அணுகப்படவேண்டும்.முஸ்லிம் மக்களின் தனித்துவம், நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை அவர்கள் தமிழ்மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல்,பொருளாதார வாழ்வைச் சிறப்பிக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும் விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிக்கடா ஆகக்கூடாது.

கேள்வி:
யாழ்ப்பாணத்திலிருந்து ஏன் முஸ்லிம் மக்களை வெளியேற்றினீர்கள்?அவர்களும் யாழ்ப்பாண மக்கள்தானே?

பதில்:
1990 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக்கலவரம் வெடித்து பெரும் தொகையில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறும்படி கேட்டுக்கொண்டோம்.ஆயினும் யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்.

வடபகுதி முஸ்லிம்கள்

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் செய்திகள் வடபகுதியில் பரவப்பரவ அங்கு பதட்டநிலை உருவாகத்தொடங்கியது.
வடபகுதியில் உள்ள தமிழர்களின் உடன்பிறந்தவர்களும், உறவினர்களும் கிழக்கில் பாதிப்பிற்குள்ளாகும்போது அதற்கு எதிர்நடவடிக்கைகள் தோன்றுவது இயற்கையே. வடபகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்கள் கிழர்ந்தெழக்கூடிய அபாயம் உருவானது.
ஆனால் விடுதலைப்புலிகள் தலையிட்டு கலவரங்கள் ஏற்படுவதை தடுத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 5000 க்கு மேற்பட்ட தமிழர்கள் வயது வேறுபாடின்றி முஸ்லிம் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தபோதும்கூட வடபகுதியில் ஒரு முஸ்லிமிற்குக்கூட எத்தகைய அபாயமும் ஏற்படவில்லை. இதற்கு காரணம் விடுதலைப் புலிகளே.

வடபகுதியில் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் இவர்களுள் யாரும் இதுவரை தமிழர்களால் கொல்லப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த முஸ்லிம்கூட குற்றம்சாட்டியதில்லை.

நிலைமையை புலிகள் இயக்கம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் தமிழர்களிடையே பதட்டம் தணியவில்லை. அதேவேளையில் முஸ்லிம்களிடையே துரோகிகள் முளைத்தனர். வடபகுதியில் புலிகளின் முகாம்கள்,நடமாட்டங்கள் குறித்து சிங்கள இராணுவத்திற்கு தகவல் கொடுத்துக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம்கள் தொடர்புசாதனங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டனர்.
அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியபோது பல பயங்கரமான உண்மைகள் வெளிவந்தன.கிழக்கு மாகாணத்தைப்போல வடக்கிலும் தமிழர்-முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்த சதித்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதற்காக இரண்டு பாரவூர்திகளில் வெடிபொருட்களும் ஆயுதங்களும் மறைக்கப்பட்டு வைத்திருப்பது தெரியவந்தது இவையனைத்தும் தமிழர்கள் கூடும் பகுதிகளில் மறைமுகமாக வெடிக்கவைப்பதற்கும் கண்மூடித்தனமாக சூட்டுத்தாக்குதலை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனாலும் இதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் தொடர்பான விடயமாகக் கையாள விரும்பாத இயக்கம் அவர்களை குற்றம் சுமத்த விரும்பவில்லை.

புலிகளின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ள வடபகுதியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டால் அதற்கான பழி புலிகள்மீதுதான் சுமத்தப்படும்.

மேலும் முஸ்லிம்களிடையே துரோகிகள் ஊடுருவியிருப்பதை அவர்களாலேயே தடுக்கவும் முடியவில்லை. எனவே முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதியும், துரோகிகளின் ஊடுருவலைத் தடுக்கவும் வடமாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் அனைவரையும் வெளியேற்றித் தீரவேண்டிய கட்டாயத்திற்கு புலிகள் ஆளானார்கள். இதைத்தவிர வேறு வழி இருக்கவில்லை.

குறிப்பு : சமூக வலைதளத்தில் நண்பரின் பதிவில் இருந்து எடுத்தது…

மக்தும் நிஜாம்

2002ம் ஆண்டு குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்ட மதக்கலவரமே பாஜக பிரதமராக்கியதற்கு காரணம்

குஜராத் படுகொலைகள் பற்றிய
ஹர்ஸ் மந்தேர், IAS அதிகாரியின் சாட்சியம்!

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது.

மீண்டும் இது போன்றதொரு கலவரத்திற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா முகத்திரையை தெளிவுபடுத்த , மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன்.

வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை.

வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.

புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன்.

ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள்.

அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.

3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை.

”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள்.

அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.

குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள்.

கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;

சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது.

திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும்.

வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன.

கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.

இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன.

இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.

பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது.

இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.

கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.

அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.

சுயேச்சையாகவும், நடுநிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது.

அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்!

கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான் கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை” என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது.

அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சாஇந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 16ஆண்டுகள் முடிந்துவிட்டன.

#கோத்ரா_ரயில்_எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்திக் கொண்டிருப்பது நமது கடமை.

தமிழகத்தில் இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் இந்துத்வா காவி பயங்கரவாதிகள் “குஜராத்தை போல்” “குஜராத்தை போல்” என அச்சுறுத்தி வந்திருப்பதுடன் அதையே தொடர்கிறார்கள்.

இந்திய முகமதியர்களின் சாதியப்பட்டியல்

இது இந்தியாவில் முஸ்லிம்களிடையே உள்ள சாதிகளின் பட்டியல் மொத்தம் 308:

1. வடிகால்
2. ஆர்கோன்
3. அன்சாரி
4. பாக்பான்
5. பால்டி
6. பெஹானா
7. பாத்திரி
8. பீதி
9. பிஸதி
10. பர்கி
11. சௌஷ்
12. Dard
13. டோபி
14. கூசி
15. குஜார்
16. ஹைதராபாத்
17. தமீமி ஈராக்
18. கான்ஸாதா
19. காஷ்மீரி
20. குஞ்ஞா
21. மல்கானா
22. மானீர்
23. மாப்பிளா
24. மீஓ
25. முகலாயர்
26. பாத்தான்கள்
27. கஸ்ஸாப்
28. முஸ்லீம் ராஜ்புட்
29. ரங்கர்
30. ரங்கெஸ்
31. சைஃபி
32. ஷேக்
33. சையத்
34. சல்மானி
35. சித்தி
36. டெலி
37. அசாமிஸ்
38. பெங்காலி
39. பில்லி
40. டோக்ரா
41. கோண்டி
42. குஜராத்தி
43. கொங்கனி
44. நவீதாத்
45. மராத்தி
46. மீட்டி
47. ஒரியா
48. தமிழ்
49. தெலுங்கு
50. லாபே
51. கோன் முஸ்லிம்கள்
52. அப்துல்
53. அன்சாரி
54. பாக்கோ
55. பிஸதி
56. சாமெய்ல்
57. சூரிஹர்
58. சிக்
59. கேடி
60. இட்ரிஸ்ஸி
61. கான்ஸாதா
62. குலையா
63. லால் பெக்கி
64. பீகார் மாலிக்
65. மீராசி
66. மிர்சிகார்
67. முகலாயர்
68. முகர்
69. பாசி
70. நாட்
71. பம்ரேரியா
72. பீகார் பதான்
73. ராய்ன்
74. சாய்
75. சப்பேரா
76. சையத்
77. சையத் (மல்லிக்)
78. பீகாரில் ஷேக்
79. ஷெர்ஷாஹபாடியா
80. தாகூரை
81. டெலி
82. அப்துல்
83. அலவி போஹிரா
84. அன்சாரி
85. அரேபியர்கள்
86. அட்டார்வாலா
87. பாபான்
88. பலோச்
89. பஞ்ஜாரா
90. பெஹிம்
91. பதாலா
92. பார்பூஞ்சா
93. பீஷ்ட்டி
94. சிபியா
95. சுனாரா
96. சுண்டிகர்
97. தாவூதி போஹிரா
98. டோபி
99. துல்ஹோயா
100. தூத்வாலா
101. Faqir
102. கலியாரா
103. கஞ்சி
104. கஞ்சி-பிஜாரா
105. ஹால்போட்ரா
106. ஹிங்கோரோஜா
107. ஹிங்கோரா
108. ஜாக்கின் ஜாட்கள்
109. ஜுன்ஜா
110. கடியா
111. கஜி
112. கெர்
113. கலீஃபா
114. காஸ்கெலி
115. Khoja
116. மச்சியார்
117. மக்ரானி
118. குஜராத்தின் மாலிக்
119. மண்டலி
120. மக்வானா
121. மேங்கா
122. மன்ஸோரி
123. மெமோன்
124. மெட்டா குரேஷி
125. மியானா
126. மோல்ஸலாம்
127. அம்மா
128. முகலாயர்
129. முல்தானி
130. முல்தானி லோஹார்
131. மத்வா
132. நாகோரி
133. நாயக்
134. கணு
135. பனார்
136. பார்மர்
137. பதானி பொஹ்ரா
138. பட்னி ஜமாத்
139. குஜராத்தின் பத்தான்கள்
140. சலாம்
141. சம்மா
142. சாந்தாய் முஸ்லிம்கள்
143. சங்கர்
144. குஜராத்தின் ஷாகிகளும்
145. ஷாக்டா 146. குஜராத்தின் சையத்
147. சித்தி
148. சிபாஹி
149. சோமிரா
150. சுலைமான் பொஹ்ரா
151. சுன்னி போஹரா
152. தை
153. துர்க் ஜமாத்
154. வோரா படேல்
155. வியாபரி
156. வாக்ஹர்
157. பாக்பான்
158. பீரி
159. சாவ்ஷ்
160. சபாபர்ட்
161. கொடவா மாப்பிள்
162. மாப்ளே
163. கொங்கனி முஸ்லிம்கள்
164. நிவேதா
165. பின்ஜாரா
166. சித்தி
167. மாப்பிளா
168. கெயி
169. தங்கல்
170. மகரகர்
171. ஓசான்
172. புஷனல்
173. துளுக்கர்
174. அன்சாரி
175. பஞ்ஜாரா
176. தாவூதி போஹிரா
177. முகலாயர்
178. டோபி
179. மத்தியப் பிரதேசத்தின் பத்தான்கள்
180. ஷேக்
181. சையத்
182. அட்டார்
183. பாக்பான்
184. பைஷ்தி
185. சாவ்ஷ்
186. சபாபர்ட்
187. தாவூதி போஹிரா
188. தவாத்
189. ஃபாக்கிர்
190. கரோடி
191. கவாண்டி
192. கச்சார்
193. காக்கி
194. கொங்கனி முஸ்லிம்கள்
195. அம்மான்
196. முஸ்லிம் ராஜ் கோன்ட்
197. கஸ்ஸாப்
198. குட்டி போஹரா
199. சாகல்கார்
200. தத்வி பாள்
201. அன்சாரி
202. பூட்டா
203. சீதா
204. சட்வா
205. தாவூதி போஹிரா
206. தேஷ்வாலி
207. கேடி
208. கோஸி
209. ஹெல மெஹ்தார்
210. ஹிரன்பாஸ்
211. கந்தரா
212. கதாம்
213. கான்சாடா
214. லங்கா
215. மாங்கனி
216. மெரட்
217. மீஓ
218. முகலாயர்
219. ராஜஸ்தான் பாத்தர்கள்
220. பிஞ்சா
221. கும்ஹானி
222. ரங்கெஸ்
223. ரத்
224. ராஜஸ்தானின் ஷாகிஸ்
225. சில்வா
t226. சிந்தி-சிபஹி
227. சிங்கிவாலா
228. சோர்கார்
229. கயலார்
230. லேபே
231. மகரகர்
232. Rowther
233. மாப்பிளா
234. அஹ்பான்ஸ் கான்ஸாதா
235. அன்சாரி
236. அத்திஷ்பாஸ்
237. பச்சோதி கான்ஜாதா
238. பாக்பான்
239. பாலூச்
240. பந்த்தாட்டி
241. பஞ்ஜாரா
242. பாராயி
243. பெஹிம்
244. பன்னு இஸ்ரேல்
245. பெஹானா
246. பாண்ட்
247. பார்பூஞ்சா
248. பாலே சுல்தான் கானாடா
249. பாட்டி கான்ஸாதா
250. பாடிரா
251. பிஷ்தி
252. பூமிஹார் மஸ்மான்மன்
253. பிஸென் கானாடா
254. பிசதி
255. சண்டேல் கானாடா
256. சிக்
257. தஹினி
258. தபலி
259. தாகி
260. தர்ஹி
261. டோபி முகல்மன்
262. டோக்கார்
263. ஃபரேடி
264. ஃபாக்கிர்
265. காடி
266. கர்ஹா (கௌர் பிராமண-முகல் சமுதாயம்)
267. கவுதம் கான்ஸாதா
268. கூசி
269. கோரிய
270. குஜர் மஸ்மான்மன்
271. ஹால்கல்ஹோர்
272. ஹல்வாய்
273. இட்ரிஸ்ஸி
274. தமீமி ஈராக்
275. ஜட் மஸ்மான்மன்
276. ஜோகா
277. காபரியா
278. காகோர்வி ஷேக்
279. கமன்கர்
280. காம்போ
281. கஸ்கர்
282. கயஸ்தா மஸ்மான்மன்
283. கான்ஸாதா
284. கோகார் கான்ஸாதா
285. குமுரா
286. கிங்ஹரியா
287. குஞ்ச்ரா
288. லால் பேகி
289. லால்கானி ராஜ்புட்
290. மடரி
291. மண்டர்கியா
292. மல்கானா
293. மானீர்
294. மீஓ
295 மில்கி
296. மிரிஸ்ஸி
297. முகலாயம்
298. முஜவேர்
299. முகர்
300. நகர் முஸ்லிம்கள்
301. நல்ப்பன்
302. நான்பாய்
303. நாகல்
304. பாஞ்ச்ரியா
305. பாங்கி
306. உத்திரப்பிரதேசத்தின் பத்தான்கள்
307. புட்லிவாலே
308. கலந்தர்.