கிரேட் எஸ்கேப்

1996ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம்தேதியை இலங்கைப்படையின் உயர் அலுவலர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள் அது.

அன்று தலைநகர் கொழும்பில் இருந்து விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறு (வெளிஓயா) நோக்கிப் புறப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் இலங்கையைப் பொறுத்தவரை மிக முக்கியமான புள்ளி ராஜாக்கள்.

ஆம். அந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அனுருத்த ரத் வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெய வர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரேமரத்ன சுமதிபால உள்பட 11 பேர் இருந்தனர்.

சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் இந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஹெலிகாப்டரை சாகர கொட்டேகடேனியா என்பவர் ஓட்டிச் சென்றார். கூட துணை வலவராக பெரேரா என்பவர்.

இதன் பின்னர் சற்றுநேரம் கழித்து கொழும்பில் இருந்து பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறுக்குப் புறப்பட்டது. அதில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திஸரா, விமானப்படை ஏர்வைஸ் மார்ஷல் ஆன்சலம் பெய்ரிஸ் போன்றவர்கள் இருந்தார்கள்.

இரண்டாவதாகப் புறப்பட்ட பெல் 412, காலை 10 மணியளவில் மணலாறு போய்ச் சேர்ந்தது. ஆனால் முதலில் புறப்பட்ட பெல் 212 அங்கு இன்னும் வந்து சேரவில்லை.

மணி 10.55! அமெரிக்க பெல் 212 ஹெலிகாப்டர்களில் உள்ள எரிபொருள் மூலம் இரண்டரை மணிநேரம் மட்டுமே பறக்க முடியும். பெல் 212 புறப்பட்டுச் சென்று 2 மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் பதற்றம் உருவாகத் தொடங்கியது.

உடனே அநுராதபுரம், வவுனியா விமானப்படைத் தளங்களுக்குத் தகவல் பறந்தது. வவுனியா விமானதளம், ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் குறைந்த எரிபொருளுடன் பறந்தபடி தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறியது.

வவுனியா பகுதியில் இருந்து மணலாறு பகுதிக்கு 10 நிமிடத்தில் பறந்து வந்து விடலாம். ஆனால் 212 ஏன் வரவில்லை?

இப்போது பெல் 212ல் என்ன நடந்தது என்று பார்க்கலாம். அதன் விமானியான ஸ்குவாட்ரான் லீடர்(!) சாகர கொட்டேகடேனியா வவுனியாவைக் கடந்ததும் வடகிழக்கு நோக்கி பறப்பதற்குப் பதிலாக வடமேற்கு(!) நோக்கிப் பறந்திருக்கிறார். இதனால் நடு வழியில் பாதை தவறி ஹெலிகாப்டர் தடுமாறத் தொடங்கியது.

180 டிகிரியில் ஹெலிகாப்டரைத் திருப்பி பறக்கவிட்டபோது பூநகரி(!) தென்பட்டது. கூப்பிடு தொலைவில் மன்னார் கடல் வேறு கண்ணில் படத் தொடங்கியது.

இதற்குள் 2 மணி 20 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் 10 நிமிடம்தான் ஹெலிகாப்டர் பறக்க முடியும். இல்லாவிட்டால் எரிபொருள் தீர்ந்து விழவேண்டிய நிலை. இதனால் விமானி பதற்றத்துடன் ஹெலிகாப்டரை தமிழர் ஒருவரின் காய்கறி தோட்டம் மீது இறக்கினார். (‘சாகிற நேரத்தில கூட அடுத்தவனுக்குத் தொல்லை குடுக்காம சாக மாட்டானுங்க’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் வசனம் பேசுவாரே, அதைப்போல, ஆபத்து, விபத்து நேரப்போகும் நேரத்தில் கூட, தமிழர்களின் உடைமையை நாசம் செய்ய சிங்களம் தவறாது)

அந்த காய்கறி தோட்டம் அருகே தமிழர்களின் 3 வீடுகள் இருந்தன. அதில் 2 வீடுகள் காலி. ஒரு வீட்டில் கே. திருச்செல்வம் என்பவர் இருந்தார். தமிழ்தெரிந்த ராஜகுரு, திருச்செல்வத்திடம் விசாரித்தபோது, அது வவுனியா-மன்னார் சாலையில் பம்பைமடு பகுதிக்கு வடகிழக்கே உள்ள கிடச்சுரி என்ற பகுதி என்பது தெரிய வந்தது. அங்கிருந்து 6 கி.மீ. கிழக்கே தவசியான்குளம். தாண்டிகுளம் தாண்டி வவுனியா நகரம் 9 மைல் தூரம். தாங்கள் முழுக்க முழுக்க புலிகளின் பகுதிக்குள் இறங்கி வந்து நிற்கிறோம் என்பது ஹெலிகாப்டரில் வந்தவர்களுக்குப் புரிந்து போனது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்துக்கு ஏறத்தாழ 10 கி.மீ. தொலைவில் பம்பைமடு பகுதியில் ராணுவத்தின் முன்னரங்க பாதுகாப்பரண் இருந்தது. திருச்செல்வத்திடம் ஒரு போத்தல் மண்ணெண்ணெய் வாங்கி அதன்மூலம் பெல் 212ஐ கிளப்ப முயற்சி நடைபெற்றது. ஹெலிகாப்டர் சிலஅடி உயரம் மட்டுமே மேலெழும்பியது. அதற்கு மேல் அதனால் பறக்க முடியவில்லை.

இதற்குள் ஹெலிகாப்டர் ஒன்று தங்கள் பகுதியில் தாழ்வாகத் தடுமாறிப் பறந்ததை புலிகள் பார்த்துவிட்டனர். அவர்கள் வாகனங்களில் ஏறி ஹெலிகாப்டர் இருந்த பகுதிக்கு விரைந்து வந்து கொண்டிருந்தனர்.

ஹெலிகாப்டரின் காக்பிட்டில் உள்ள தொலைதொடர்புக்கருவி முற்றிலும் செயலிழந்து போனதால் அதில் இருந்தவர்களால் வவுனியா நகரத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாக்கி டாக்கிகளும் செயல்படவில்லை.

இதனால், ஹெலிகாப்டரை கைவிட்டுவிட்டுவிட்ட அவர்கள் பம்பைமடு நோக்கி நடந்து செல்ல முடிவு செய்தனர். ஹெலிகாப்டரை இனி யாரும் இயக்க முடியாத வண்ணம் அதன் ஒயர்கள், கேபிள்களை அறுத்துப்போட்டனர். பின்னர் கைக்கடிகாரத் தில் உள்ள திசைகாட்டிக் கருவியைப் பயன்படுத்திக் கொண்டு, திருச்செல்வத்தின் இரு ஆண்குழந்தைகளை பிணைக்கைதிகள் போல தங்களுடன் கூட்டிக் கொண்டு அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

ரத்வத்தை சாலைவிபத்து ஒன்றில் அண்மையில் காலில் அடிபட்டிருந்தார். ஆகவே தடி ஒன்றை ஊன்றியபடி அவர் நடந்து வந்தார். வழியில் ஏரி ஒன்றைப் பார்த்த அவர், ‘இதில் கொஞ்சநேரம் நீந்திவிட்டுப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார். (இருட்டு வழியில் பயத்தை மறைத்துக் கொள்ள சிலர் சீழ்க்கை அடிப்பதில்லையா அதைப் போல).

காட்டுக்குள் இந்த கும்பல் ஒருமணிநேரம் நடந்த போது, அவர்களுக்குப் பின்னால் மூன்று முறை அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் கேட்டன. வானத்தில் புகை வளையங் கள் எழுந்தன. புலிகள் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்து அதை வெடிவைத்து தகர்த்து விட்டார்கள் என்பது தெரிந்து விட்டது. இதனால் நடைவேகத்தை அவர்கள் விறுவிறுவென மேலும் கூட்டினார்கள்.

இப்போது ஐ.ஜி. ராஜகுரு வைத்திருந்த சிறிய காவல்துறை ரேடியோ உயிர்ப்பெற்றது. வவுனியா நகரத்தை தொடர்புகொண்ட அவர், தாங்கள் நடுக்காட்டில் வழிதெரியாமல் தவிப்பதாக செய்தி அனுப்பினார். பம்பைமடு முன்னரங்க நிலையில் இருந்து ராணு வத்தினரை உடனே உதவிக்கு அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்க விமானப்படை தளபதி ஒலிவர் ரண சிங்கே, ராணுவ மேஜர் ஜெனரல் லால் வீரசூரிய ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க, காட்டில் சிக்கியவர்களை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் விரைந்தன.

5 கி.மீ. தொலைவு வரை 2 மணிநேரம் வரை நடந்த அவர்கள், ஒருவழியாக ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஹெலிகாப்டர் ஒன்று அவர்களை வழியில் கண்டு ஏற்றி வவுனியாவுக்குக் கூட்டிச் சென்றது. மாமா அனுருத்த ரத்வத்தை காணாமல் போனதால் பதறிப்போன அதிபர் சந்திரிகா தொலைபேசி மூலம் பேசி, மாமாவின் நலத்தை விசாரித்தார். (என்ன மாமா நல்லா இருக்கீங்களா?)

இதனிடையே இலங்கை ராணுவம் அதன் வழக்கமான சவடாலை விடவில்லை. ‘காட்டுக்குள் கைவிடப்பட்ட பெல் 212 ஹெலிகாப்டரை புலிகள் தகர்க்கவில்லை, புலிகள் கையில் அது சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ராணுவம்தான் தகர்த்தது‘ என்று ராணுவம் அறிவித்தது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அந்தப் பகுதியில் புலிகள் யாருமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டரை புலிகள் தகர்த்தால் என்ன? ராணுவம் தகர்த்தால் என்ன? மூன்றாம் ஈழப் போரில் இலங்கை விமானப்படை 8ஆவது வான் ஊர்தியை இழந்தது என்பது மட்டும் உண்மை.

பொதுவாக பெல் 212 ஹெலிகாப்டர்களில் ஜி.பி.எஸ். கருவி இருக்கும். ஆனால், குறிப்பிட்ட அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி என்ன ஆனது என்று தெரியவில்லை. வன்னிப்பகுதியில் வழி தெரியாமல் போயிருந்தால் கூட யானை யிறவு-வவுனியா இடையே ஒடும் ஏ9 நெடுஞ்சாலையைப் பிடித்து தெற்கே பறந்துகூட வவுனியாவுக்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால் ஹெலிகாப்டரின் வலவர் இதை ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. மொத்தத்தில் மர்மங்கள் நிறைந்த ஒரு திரைக்கதை போல இருந்தது இந்த நிகழ்வு.

அனுருத்த ரத்வத்தை தப்பிப்பிழைத்த பரபரப்பான அந்த ஹெலிகாப்டர் நிகழ்வின் போது புலிகளின் தங்களுக்குள் நடத்திய தொலைத்தொடர்பு உரையாடல் முக்கிய மானது. ‘என்ன ஆயிற்று?’ என்று புலி ஒருவர் கேட்க, மற்றொருவர், ‘கைக்கு எட்டி யது வாய்க்கு எட்டவில்லை’ என்று பதில் அளித்தார்.

உண்மைதான். அனுருத்த ரத்வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெயவர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட எம்.பி.யான பிரேமரத்ன சுமதிபால போன்றோர் புலிகளின் கையில் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்தால் 13 ஆண்டு ஈழப்போர் வரலாற்றில் ஒருவேளை முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கலாம்.

மோகன ரூபன்

வடகிழக்கு இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திய இந்திய அமைதிப்படை – பழனிபாபா

இலங்கையில் காத்தான்குடி, கல்முனை, போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலை IPKF செய்துவிட்டு பலியை போராட்டக்_குழுக்கள் மேல் போட்டுவிட்டார்கள் என்பதாக பழனிபாபா ஆதாரத்துடன் பேசியிருக்கிறார் கேளுங்க.

https://bit.ly/2YxlyK5

சீன ஊடுருவலால் இந்தியாவிற்கு ஆபத்து என அன்றே கூறிய மேதகுவே பிரபாகரன்

எங்கள் தலைவர் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை வெளிநாடுகளும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன. முக்கியமாக சீனா தொடர்பான அவரின் நிலைப்பாடு வெளிநாடுகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

சீனா சிறிலங்காவுக்குள் வர்த்தகத்தை முன்நிறுத்தி பிரவேசிப்பதை தலைவர் விரும்பவில்லை. நாளடைவில் சீனாவின் நடவடிக்கையினால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அதேவேளையில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் வாழும் மக்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் கருதினார். அதனை வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும், சீனாவின் ஊடுருவல் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வந்ததை சீனா வெளியிட்டிருந்தது. 2004ஆம் ஆண்டிற்கும், 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி அம்பாந்தோட்டைக் கடலில் இரண்டு தாக்குதல்களை நடத்தி இருந்தது.

அதன்போது, சீன அதிகாரிகளின் சொகுசுப் படகுகளே தாக்கியழிக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவது தொடர்பாகவும், சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவே சீன அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். இதற்கு தமிழர்களின் எதிர்ப்பபைத் தெரிவிக்குமுகமாக தலைவர் மேற்படி தாக்குதல்களை நடத்தினார் என்பதை சில வெளிநாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தளம் அழிக்கப்பட்டதின் பின்பே சீனா சிறிலங்காவுக்குள் பிரவேசித்தது என்பதை உலகமே அறியும்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான டொலர்களை சிறிலங்காவுக்கு கடனாகக் கொடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா ஆரம்பித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் சந்ததி சந்ததியாக சீனாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால்,மிகவும் தூரநோக்கோடு தேசியத் தலைவரால் முன்னெடுக்கப்பட்ட சீன எதிர்ப்பு நடவடிக்கையை அன்று அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அன்று தமிழீழமே ஒரே தீர்வு என்பது தேசியத் தலைவரின் ஒரே முடிவு.

இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். ஆனால், அதற்காக தமிழீழத் தனிநாடு தீர்வாகாது என இந்தியாவும் மேற்கத்தேய நாடுகளும் கூக்குரலிட்டன. பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டார்கள்

ஆனால் இன்று இந்தியா அதனை அனுபவித்து கொண்டு இருக்கிறது.

தமிழினத்திற்காக நிற்பது யார்?

னப்படுகொலை குறித்து பேசியதால் சிங்கள அரசின் எதிர்ப்பைச் சந்தித்த ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஹக் மெக்டெர்மோட் அவர்கள் தனக்கு தக்க சமயத்தில் துணையாக நின்றதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்!

மேலும் சிங்கள அரசின் தரப்பில் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இனப் படுகொலைக்கான நீதியைப் பெறுவதில் தமிழர்களோடு இறுதி வரை நிற்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்!

மேலும் இக்கையெழுத்து இயக்கத்திற்கு வலு சேர்க்க கையெழுத்திடுங்கள்.
http://chng.it/KgqZ8zhF

இதுதான் உலக அரசியலா?

உலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்.

உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது.

ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது..

– நந்தினி ஆனந்தன்.

தமிழர்களை அழிப்பதற்காக இந்திய சீனப் போர் திட்டமிடப்படுகிறது?

சீனாவுக்கு இந்தியாவுடன் போர் ஏற்ப்பட்டால் இலங்கை சிங்கள ராணுவம் சீனாவுக்கு உதவும். சிங்கள ராணுவ தளபதி சாவேந்திர சில்வா. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்பது
எதுர்பார்த்தது தான்!

சீனாவின் பேரில் இலங்கை ராணுவம்
முதலில் தாக்கப்போவது தமிழகத்தை தான் என்பதை நாம் உணர வேண்டும்!

இந்த வேலை நடக்கத்தான் சீனாவும் இந்தியாவும் சண்டை போடுறது போல எல்லையில் நடிக்கிறார்கள்!

( நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்..
நீ அழுகிற மாதிரி அழுவு)

ஆனால் இந்த போர் நாடகம் நடந்தால்
தமிழகம் அழியும் வரை மட்டும் நடக்கும்!

அப்புறம் முடிந்துவிடும். இந்தியா சீனா இலங்கை நட்பு நாடுகளாக மாறும்!

இந்த நிகழ்வு 2021 தேர்தலுக்கு
முன் நடத்துவதற்கு இந்த மூன்று நாடுகளின் திட்டம். அதற்குள் நடந்தால்
இன அழிப்பு நடக்கும்!

இல்லையெனில் ஆட்சி மாற்றம் தமிழர் கையில் வரும் நேரத்தில் தமிழர்கள் காப்பாற்றப்படலாம்!

புரிந்தால் தமிழினம் வாழும்!
இல்லை வீழும்!

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்

பிரபாகரனாக இருந்திருந்தால் கூட போராடிப் பார்த்திருப்பேன். ஆனால் வந்து நின்றது பிரிகேடியர் பால்ராஜ்!
அவன் ஒரு இடத்தில் முற்றுகையிட்டால், உலகில் எவனாலும் அவனை வெல்ல முடியாது”.

பிரிகேடியர் பால்ராஜ்

வெறும் 1500 புலிகளை கொண்டு… 40,000 சிங்கள ராணுவத்தை, உலகில் வெல்ல முடியாத ராணுவத்தளம் என்றிருந்த ஆணையிறவை பால்ராஜ் தலைமையிலான படையணி வென்ற பின்னர் சிங்கள ராணுவத் தளபதியே தன் தோல்வியை இப்படி ஒத்துக் கொண்டான்.

உலகத்தையே மிரள வைத்த தமிழீழ ராணுவத்தின் ஆனையிரவு தாக்குதல்.

இஸ்ரேலின் ட்வோரா படகை வீழ்த்திய புலிகள்

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்க, வங்கக் கடல் வழியாக அடிக்கடி சரக்குக் கப்பல்கள் வருவதுண்டு. புலிகளுக்குச் சொந்தமாக கடல்புறா, சோழன், இலியானா, யகதா, கோல்டன் பேர்ட், யெலிசியா, ஸ்வீனி, பெதியா, பிரின்சஸ் கிறிஸ்டினா (கிரிசந்தா) போன்ற பல சரக்குக் கப்பல்கள் இருந்தன.

புலிகள் அவர்களுக்காக ஆயுதம் எடுத்துவரும் கப்பல்களை முல்லைத்தீவுக்கு அப்பால் நடுக்கடலில் நிற்கச் சொல்லிவிட்டு, அதிவிரைவு படகுகளில் போய் அவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதங்களை ஏற்றி வருவது வழக்கம்.

சிங்களக் கடற்படை, விமானப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஆயுதங்களை படகில் அள்ளி வருவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. சிலவேளைகளில் சிங்களக் கடற்படை, விமானப்படையின் கண்களில் பட்டு அவர்களின் தாக்குதல்களை எதிர் கொள்ள வேண்டி வரும். கடும் கடற்போருக்கு நடுவில் சில ஆயுதங்களை கடலுக்குப் பறிகொடுக்க வேண்டி வரும். சிந்தாமல் சிதறாமல் ஆயுதங்களைப் படகுகளில் ஏற்றி கரைக்குக் கொண்டுவருவது மிகவும் சிக்கலான பணி.

இந்தநிலையில், ஒருமுறை புலிகளுக்கு மிகமுக்கியமான ஆயுதங்களை ஏற்றி வந்த ஒரு சரக்குக் கப்பலை, இந்தமுறை ரைட் ராயலாக, நேரடியாக முல்லைத்தீவு கரைக்கு வரவழைத்து, ஆயுதம் இறக்கவேண்டும் என்று புலிகளின் தலைமை உத்தரவிட்டுவிட்டது.

ஆயுதக்கப்பலை நேரடியாக கரைக்கு வரவழைப்பதா? எப்படி? புலிகளின் உளவுப்பிரிவுத்தலைவர் பொட்டு அம்மான், கடல்புலிகளின் தளபதி சூசை போன்றோர் இதுபற்றி கலந்து ஆலோசித்தனர்.

அப்போது, திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணத்தின் காரைத்தீவு பகுதிக்கு, ஐரிஷ் மோனா என்ற கப்பல் 128 பயணிகள், 21 ஊழியர்களுடன் வந்து கொண்டிருக்கும் தகவலை உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் தெரிவித்தார். அவ்வளவுதான். விறுவிறுவென ஒரு திட்டம் உருவானது.

ஆகஸ்ட் 30ஆம்தேதி செவ்வாய்க் கிழமை. ஐரிஷ் மோனா கப்பல், முல்லைத் தீவு கடலோரத்தில் இருந்து 55 மைல் தொலைவில் வந்துகொண்டிருந்தபோது, எங்கிருந்து வந்தார்கள் என்பதே தெரியாமல் பெண்கடற்புலிகள் சிறுபடகுகளில் வந்து ஐரிஷ் மோனா கப்பலை சூழ்ந்து கொண்டார்கள்.

கப்பலில் ஏறிய அவர்கள் கப்பல் அலுவலர்களை மிரட்டி, கப்பலை அதன் போக்குக்கு கடலில் வழிந்து செல்லும்படி செய்தனர். ஆட்டம் ஆரம்பம்.


ஐரிஷ் மோனா கப்பலை புலிகள் கடத்திவிட்ட தகவல் தெரிந்ததும், திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து இலங்கைக் கடற்படையின் இஸ்ரேல் தயாரிப்பு அதிநவீன டோரா பீரங்கிப் படகு ஒன்று முல்லைத்தீவு நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது.

இந்த இடத்தில் இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான டோரா (Dvora) பீரங்கிப்படகை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 88 அடி நீள படகு அது. வேகம் 48 நாட், எடை 40 டன். டோரா பீரங்கிப் படகை ஜெட் மற்றும் புரொபெல்லர் என இரு முறைகளில் இயக்கலாம். ஆழம் குறைந்த கடல்பகுதிகளில் கூட டோரா படகு ஊடுருவித் தாக்கக் கூடியது.

டோரா பீரங்கிப் படகின் சிறப்பம்சமே அதில் உள்ள 20 மி.மீ. ஆர்லிகான் (Oerlikon) பீரங்கிதான். கடல், தரை இலக்குகளை மட்டுமின்றி வானத்தில் பறந்து வரும் விமானம், ஹெலிகாப்டர்களையும் இந்த பீரங்கி மூலம் சுட முடியும்.

ஐரிஷ் மோனா கப்பலை கண்காணித்தபடி டோரா படகு கண்மூடித்தனமாகப் பாய்ந்து வந்த போது, கடலில் சற்று மூழ்கிய நிலையில் புலிகள் மிதக்க விட்டிருந்த கடல்கண்ணி வெடிகளை டோரா கவனிக்கத் தவறிவிட்டது. பாவம். டோரா படகு கடல்கண்ணி வெடியில் சிக்கி சிதற, அதிலிருந்து கடற்படையினர் நீரில் விழுந்தனர். பிற்பகல் 1.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.

அப்போது, இதற்காகவே காத்திருந்தது போல எங்கிருந்தோ படகுகளில் விரைந்து வந்த கடற்புலிகள், உடைந்து நீரில் மூழ்கிக் கொண்டிருந்த டோரா படகில் இருந்து ஆர்லிகான் (Oerlikon) பீரங்கியை வேகவேகமாகக் கழற்றத் தொடங்கினர். பீரங்கிப் படகு மூழ்கும் முன் பீரங்கி கழற்றப்பட்டு அதற்கென தயாரித்து வைத்திருந்த ஒரு தெப்பத்தில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு கரையில் பத்திரமாகச் சேர்க்கப்பட்டது.

நேரம் மாலை ஐந்தரை மணி. முதல் டோரா கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது தெரிந்து, அதன் நிலைமையை ஆராய இரண்டாவது டோரா படகு ஒன்று இப்போது முல்லைத்தீவு நோக்கி வேகமாக பாய்ந்து வந்தது. புலிகள் ரொம்ப யோசிக்கவில்லை. கரைசேர்க்கப்பட்டு கரையில் நிலைநிறுத்தி வைத்திருந்த டோரா படகின் ஆர்லிகான் பீரங்கி மூலம் சுட்டு அந்த இரண்டாவது டோராவை புலிகள் மூழ்கடித்தனர். அதாவது எதிரியின் விரலை வளைத்து அந்த விரலை வைத்தே அவன் கண்ணில் ஒரு குத்து!

அவ்வளவுதான்! ஒரே நாளில் 2 டோரா பீரங்கிப் படகுகள் காலி. இந்த இரு டோரா படகுகளின் விலை 500 மில்லியன் டாலர்கள்! இலங்கை அரசு வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாங்கிய இந்த இரு டோராக்களும் ஒரே நாளிலா பலியாக வேண்டும்?

இதனிடையே புலிகள் வசம் செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட டி-55 ரக டாங்கி ஒன்று இருந்தது. (ராணுவத்திடம் இருந்து பறித்த டாங்கி). அந்த டி-55 டாங்கியை சாளை பகுதி கடற்கரையில் மண்ணுக்குள் புலிகள் புதைத்து வைத்து, அதன் குழாயை மட்டும் வெளியே நீட்டியிருக்கச் செய்து, அதன்மூலம்தான் இரண்டாவது டோராவை அவர்கள் சுட்டுமூழ்கடித்தார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

புலிகள் ஆர்லிகான் பீரங்கியால் சுட்டார்களா? டாங்கியால் சுட்டார்களா என்பது முக்கியமில்லை. இலங்கைக் கடற்படையின் இரண்டாவது டோரா பீரங்கிப் படகு புலிகளால் சுட்டு மூழ்கடிக்கப்பட்டது என்பதுதான் முக்கியம். எது எப்படியோ? இலங்கை கடற்படை ஒரே நாளில் இரண்டு டோராக்களையும், 38 கடற்படையினரையும் இழந்தது. பலியானவர்களில் கடற்படை அலுவலர் நளின் விஜயசிங்கேவும் ஒருவர்.

இரண்டு டோராக்கள் பறிபோய்விட்ட நிலையில், இதற்கு மேலும் ஐரிஷ் மோனா கப்பலை மீட்கப்போகும் துணிவு இலங்கை கடற்படைக்கு வரவில்லை. இந்நிலையில் ஆழ்கடலில் தயாராக நின்று கொண்டிருந்த ஆயுதக் கப்பலை புலிகள் இப்போது முல்லைத்தீவு கரைக்கு வரவழைத்தனர். ஐரிஷ் மோனா கப்பல் புலிகளின் கையில் பிணையாக இருந்ததால், புலிகளின் ஆயுதக் கப்பலை தடுத்துத் தாக்கும் எண்ணம் கடற்படைக்கு வரவில்லை.
என்ன செய்வது என்றே தெரியாமல், இலங்கை கடற்படையின் ஜலசாகரா என்ற கப்பல் மட்டும் கொஞ்சம் பாதுகாப்பான தொலைவில் இருந்தபடி இந்த நகர்வுகளை சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. மற்றபடி அது எதுவும் செய்யவில்லை. (சமர்த்து!)

இப்போது ஆயுதக்கப்பலில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தரையிறக்கிக் கொண்ட புலிகள், அதன்பிறகு ஆயுதக் கப்பலை போகச்செய்தனர். அது வங்கக் கடலில் பாதுகாப்பான தொலைவுக்குச் சென்ற பிறகு ஐரிஷ் மோனா கப்பலை புலிகள் விடுவித்து அனுப்பி வைத்தனர்.

கடல்மீது நடந்த இந்த அதிரடி நடவடிக்கை முழுவதும் கடற்புலிகளின் தலைவர் சூசையின் கண்காணிப்பின்கீழ் அற்புதமாக நடந்து முடிந்தது. புலிகளின் தலைமை அறிவுறுத்தியபடி ஆயுதக் கப்பலை கரைக்கே வரவழைத்து ஆயுதம் இறக்கியாற்று. கடற்படையின் 2 டோராக்களின் கதையை முடித்தாகி விட்டது. ஆபரேசன் கிரேட் சக்சஸ்.

கடற்புலிகளின் தலைவர் சூசையை சில வெளிநாட்டு ஏடுகள் ‘அட்மிரல்’ என்றுகூறி சிலவேளைகளில் கிண்டல் செய்வதுண்டு. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எந்த நாட்டு கடற்படை தலைமைத் தளபதிகளையும் விட சூசை மிகச்சிறந்த ‘அட்மிரல்‘தான். அதற்கு ஐரிஷ் மோனா நிகழ்வு போல பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

இஸ்ரேலின் டோரா பீரங்கிப்படகுகள், கிபிர் போர்விமானங்கள், அமெரிக்காவின் நவீன போர்ப்பயிற்சி, சீன, ரஷிய ஆயுதங்கள் என்று எந்த பாச்சாவும் புலிகளிடம் பலிக்கவில்லை. இந்தியாவுடன் சேர்ந்து இத்தனை நாடுகளும் இனஅழிப்புப் போரில் இறங்கி புலிகளையும், பல லட்சம் ஈழமக்களையும் கொத்தாக அழிக்க இந்த ஆத்திரமும் ஒரு காரணம்.

மோகன ரூபன் அவர்கள் பதிவு…

வாஜ்பாய் அரசு ஈழ ஆதரவு அரசா?

வைகோ பொய்யும் நடந்தவையும்

உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை நலம் விசாரித்துவிட்டு வந்ததை பற்றி வைகோ அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையில் வாஜ்பாயி அரசாங்கம் ஈழப்போராட்டத்திற்கு உதவியதாக மீண்டும் கூறியிருக்கிறார். வைகோ கூறுவது போல் “முந்தைய பாஜக அரசு உண்மையில் ஈழப்போராட்டத்திற்கு துணை நின்றதா?” என்ற அறிய நான் முன்னர் எழுதிய கட்டுரையை மீள் பதிவு செய்கிறேன். (இக்கட்டுரை வைகோ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்து பிறகு வெளியே வந்து வாஜ்பாயி அரசாங்கம் போல் மோடி அரசாங்கம் இல்லை என்று பேட்டிகள் கொடுத்த பொழுது எழுதியது). ஆதாரத்துடன் கடந்த கால நிகழ்வுகளைத் தொகுத்திருக்கிறேன், வைகோ ஏன் அந்தப் பொய்யை திரும்ப திரும்பக் கூறுகிறார் என்று முழுவதையும் படித்தால் அறிந்துகொள்வீர்கள். ஈழப் போராட்டத்தில் வைகோ அவர்களின் திருகு வேலையில் ஒரு சதவீதம் தான் இது.

முந்தைய பாஜக அரசு உண்மையில் ஈழப்போராட்டத்திற்கு துணை நின்றதா?”

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி என்ற சந்தர்ப்பவாத இழிமுடிவிற்கு சப்பைக்கட்ட, பாஜகவிற்கு ஈழ ஆதரவு வேடமிட்டு பவனி வந்த அய்யா வைகோ முதல் ஆளாக சென்று கூட்டணியும் வைத்துவிட்டு அந்த வேடம் கலைந்ததும் தேர்தலில் வெற்றிகிட்டாத, பாஜக அரசில் எந்த பதவியும் கிட்டாத நிலையில், இருக்கிற அரசியலில் “தலை தப்பவேண்டுமே” என்று பதறி முதல் ஆளாக அக்கூட்டணியை விட்டு வெளியேறியும் வந்துவிட்டார். “1996- 2004 வரை நடந்த வாஜ்பாய் அரசாங்கம் கடைபிடித்த வெளியுறவு கொள்கைகளை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் என்று நம்பினேன் அனால் தற்போதைய மோடி அரசு அதை பின்பற்றாததால் தான் வெளியேற நேரிட்டது” என்கிறார். கடந்த கால இந்திய அரசியல் சூழல்களில், அய்யா வைகோவின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை சந்தேகித்ததில்லை.

அவர் தொடர்ச்சியாக ஈழ தமிழர் நலன் சார்த்த நிலைபாட்டில் இருந்திருக்கிறார் என்று தான் எண்ணியிருந்தோம், ஆனால் தன் தேர்தல் கூட்டணி பாதுகாப்பிற்காகவும், பாராளுமன்ற பதவி இருத்தலுக்காகவும் அவர் எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது நாம் பின்னோக்கி பார்ப்பது அவசியமாகிறது.

தேர்தலுக்கு முன் பாஜகவிற்கு ஈழ ஆதரவு வேடமிட்டது மட்டுமல்லாமல் இன்றைக்கு வரை முந்தைய வாஜ்பாய் அரசு ஈழ ஆதரவு அரசாக செயல்பட்டதை போல் பிம்பம் கட்டி பேசிவருவது அபத்தத்தின் உச்சம்.
இந்த நூற்றாண்டின் பேரவலமான தமிழீழ இனப்படுகொலையின் கூட்டு பங்காளர்களான பாஜகவின் முந்தைய நடவடிக்கையை மறைக்க நினைக்கும் அய்யா வைகோவின் சந்தர்ப்பவாதத்தை எதிர்க்கவேண்டியது நம் அனைவரது கடமை என்ற அடிப்படையில் “காங்கிரஸ் அரசிற்கும் முந்தைய பாஜக அரசிற்கும் ஈழம் சார்ந்த கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை” என்பதை நிரூபிக்கவே இந்த கட்டுரை. தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்பின் அடிப்படையில், எந்த கற்பனை கட்டு கதைகளையும் கலக்காமல் உண்மை செய்தியின் அடிப்படையில் ஆராயவேண்டும் என்பதை உணர்ந்தே எழுதப்பட்டது.

2008யில் நான்காம் கட்ட ஈழப்போர் உக்கிரமாக தொடங்கிய பிறகு இலங்கை – இந்திய அரசு கூட்டு சதி செய்து தமிழர் உரிமை போராட்டத்திற்கு எதிராக எவைகளை எல்லாம் நிகழ்த்தியது என்பதை யாம் அறிவோம், அதிலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி செய்த துரோகங்களை யாம் மறக்கயியலாது. தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் பலர் அதை பேசி, எழுதி அறிந்து கொள்ள செய்தார்கள். இணைய உபயோகத்தின் வீச்சும் அதற்கு உதவியது. ஆனால் அதற்கு (2008) முன்னர் நடந்த இந்திய இலங்கை உடன்படிக்கைகள், இந்திய இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு நிகழ்ந்த துரோகங்கள் பற்றி தேடி படித்து தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதால் அதை சாதகமாக்கி வைகோ போன்றவர்கள் மேடையில் பொய்யை மீண்டும் மீண்டும் பேசி உண்மையாக்க பார்க்கிறார்கள். தங்கள் அரசியல் லாபத்திற்காக கற்பனை செய்திகளை கட்டமைத்து தொடர்ந்து பரப்புவதனால் அவை சில காலத்திற்கு பின் உண்மையாகி பலன் அளிக்கும் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் மேடையில் முழங்குபவர்களுக்காகவே சில வரலாற்று நிகழ்வுகளை பின்னோக்கி பார்த்து ஆராய வேண்டிய தேவையும் உருவானது.

2௦௦௦ ஆண்டு ஆரம்பவாக்கில், விடுதலை புலிகள் இயக்கம் ஆனையிறவு போருக்கான வியூகம் வகுத்த கால கட்டத்தில், அவர்களுக்காக ஆயுதங்கள் ஏற்றிவந்த கப்பலை இந்திய உளவு நிறுவனமும், கடற்படையும் மடக்கி தடுத்ததாகவும், அந்த தகவலை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இரவோடு இரவாக அய்யா வைகோவிடம் தெரிவித்தாகவும், அதனடிப்படையில் அன்றைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டாஸிடமும், அன்றைய பிரதம அமைச்சர் வாஜ்பாயிடமும் முறையிட்டதாகவும், அந்த கோரிக்கையின் அடிப்படையில் அதன்பிறகு அனைத்து ஆயுதக்கப்பல்களும் தடுக்கபாடாமல் கடற்கரை ரோந்து படைகள் பின்வாங்கபட்டு இந்துமா சமுத்திரம் திறந்து விடப்பட்டதாக அய்யா வைகோ தொடர்ந்து உரைத்து வருகிறார்

காணொளி

அப்படி ஒரு சந்திப்பு நடந்ததா என்ற கேள்விக்குள் போகவேண்டாம் அப்படியே நடந்திருந்தாலும், அதன் பிறகு அன்றைய அதன் பிறகு அன்றைய இந்திய பாஜக அரசு ‘விடுதலை புலிகளின் கப்பலை தடுக்கவில்லை, பாஜக ஆட்சி தமிழீழத்திற்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தந்தது’ என்ற சொற்பதத்தின் உண்மை அறியவே விரும்பிகிறோம். இது எவ்வகையில் நியாயத்தன்மை உடையது என்பதை உறுதி செய்ய சில செய்திகளை பின்னோக்கி தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனையிறவு போரில் விடுதலைப் புலிகளின் பாரிய வெற்றி, அன்றைய ‘பாஜக அரசாங்கத்தின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் சாத்தியமானது’ என்பது போன்ற பரப்புரையின் உண்மை தன்மை அறிய, அன்றைய காலகட்டத்தின் சில நிகழ்வுகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒரு வீரம் செறிந்த விடுதலைப் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படை நடவடிக்கையில் உயிர் துறந்த போராளி செல்வங்களின் நெஞ்சுரத்தை, எவரும் தம் கூட்டணி நலனுக்காக திரித்துவிட கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
1999ஆம் இறுதியில் 2௦௦௦ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய இலங்கை அரசுகளுக்குடனான ‘கட்டற்ற வணிக ஒப்பந்தம்’ (Free Trade Agreement) கையெழுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதன் முதலாக வாஜ்பாய் அரசாங்கம் தான் இலங்கையோடு ‘கட்டற்ற வணிக ஒப்பந்தம்’ செய்த இந்திய அரசாங்கம்(http://www.hcicolombo.org/uploads/page_files/hb-india-sl.pdf).

அதற்கான வரைவு தயாரான நிலையில் இந்திய சந்தைக்கான பொருளீட்டி பகடைக்காயாக இலங்கை மாற்றப்பட வேண்டும் என்ற முதலாளிகளின் எண்ணத்தை நிறைவேற்றும் அவசரகதியில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இரு நாடுகளுக்குடனான வணிக பரிவர்த்தனை ஒப்பந்தங்கள் கைமாற்றிக்கொள்ளபட்டன (http://commerce.nic.in/trade/international_ta_indsl_1.asp).

இந்த ஒப்பந்த உடன்படிக்கையின் விளைவாக இலங்கை ஏற்றுமதி விகிதாசாரம் அவ்வாண்டுமட்டும் 342% சதம் உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாய் அனைத்து உள் மற்றும் வெளிவிகார நடவடிக்கைகளிலும் அன்றைய இந்திய பாஜகவின் துணையோடு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் இரு இலங்கை அரசு உறுதியேற்க்கிறது. அதை நல்லெண்ண அடிப்படையில் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் கையாள்வோம் என்று வாஜ்பாயின் தலைமையிலான இந்திய பாஜக அரசு இன்முகதுடன் ஏற்றுக்கொள்கிறது.
அந்த நிலையில் ஓயாத அலைகள் என்ற பெயரில் நவம்பர் 1999யில் அரசப்படைகள் கைப்பற்றியிருக்கும் இடங்களை மீட்க சமர் நடவடிக்கையை தொடங்குகிறார்கள் புலிகள். ஓயாத அலைகள் நடவடிக்கை வன்னிப் பெருநிலப்பரப்பில் பெரும் இராணுவ வெற்றிகளை ஈட்டியவேளை புலிகளின் அடுத்த இலக்கு ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தின் மீதான தாக்குதல்கள்தான் என்பது உணரப்பட்டதாகவே இருந்தது. ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் விடுதலை புலிகளின் பாரிய ஆனையிறவுப் படைத்தள தாக்குதல் நடகிறது, அதில் புலிகள் பெரு வெற்றி பெறுகிறார்கள். ராணுவ ரீதியாக மிக பலமான அமைப்பாக விடுதலை புலிகள் உருப்பெறுகிறார்கள். ஆனையிறவை மீட்ட யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்தனர் புலிகள். ஆனையிறவின் தோல்வியும், உளவியல் ரீதியான பெரும் அடியிலும் இருந்த இலங்கை செய்வதறியாது திகைத்து நின்றது. 40000 மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் புலிகளால் சுற்றி வைக்கப்பட்டனர். எந்த நிமிடமும் யாழ்ப்பாணம் புலிகள் வசம் வரலாம் என்ற நிலை இருந்தது. வட இந்திய ஊடகங்கள் பெருங்குரலெடுத்து அழ தொடங்கின. புலிகளை இதற்கு மேல் ஒரு அங்குலம் வர விட்டாலும் இந்தியாவிற்கு ஆபத்து என்று வெளிப்படையாக எழுத தொடங்கின.(http://indiatoday.intoday.in/story/elephant-pass-capture-by-ltte-a-major-reverse-for-sri-lanka-could-signal-jaffnas-fall/1/244067.html).

இலங்கை இந்தியாவிடம் ராணுவ உதவியை எதிர்ப்பார்ப்பதாகவும், இந்தியா ராணுவரீதியாக உதவி செய்யவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் குரலாக கெஞ்சின.
இந்நிலையில் மே 3 ஆம் தேதி இலங்கை வெளியிறவு துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் டெல்லி வந்து வாஜ்பாயியையும் ஜஸ்வந்த் சிங்கையும் சந்திக்கிறார்(http://www.rediff.com/news/2000/may/03akd1.htm).

அன்றே கூட்டணியில் இருக்கும் தமிழக கட்சிகள் எதையும் அழைக்காமல் பாஜக அரசு வாஜ்பாய் தலைமையில் கேபினட் கூட்டத்தை கூட்டி இலங்கை விரும்பினால் மனிதநேயத்தின் அடிப்படையில் உதவிகள் செய்வோம் என்று அறிவிக்கிறது மத்திய அரசு. பிறகு தான் இலங்கை நிலவரம் தமிழக நிலவரம் பற்றி ஆலோசிக்க தமிழக முதல்வர் கருணாநிதியை வாஜ்பாயி அழைக்கிறார். மே 5 ஆம் தேதி டெல்லி விரைந்த கருணாநிதி வாஜ்பாயியை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து இந்திய அரசின் கைகளை நாங்கள் கட்டவில்லை அதே நேரம் பழைய சம்பவங்களை நாம் மறக்ககூடாது என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்புகிறார் (http://www.outlookindia.com/article/Metamorphosis-Of-Belief/209464).

கருணாநிதி சந்திப்பை அடுத்து தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்த மற்ற தமிழக கட்சிகளான மதிமுகவும் பாமகவும் பாஜக அரசு ராணுவ ரீதியான எந்த உதவியும் செய்யகூடாது, IPKF சென்றதை போல கசப்பான முடிவுகளை பாஜக எடுக்க கூடாது என்று வலியுறுத்தின. மே 8 ஆம் தேதி இலங்கை நிலவரம் குறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது பாஜக.
ஒரு பக்கம் ராணுவ உதவி செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டு மறுபக்கம் ஒரு நாள் முன்னதாகவே மே 7 அன்றே விமானப்படை தளபதி டிப்னிசை இலங்கைக்கு ஆறு நாட்கள் நல்லெண்ணப்பயணம் என்ற பெயரில் அனுப்பியது இந்திய பாஜக அரசு.(http://www.hindu.com/2000/05/08/stories/01080003.htm).

இச்செய்தி அறிந்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்படுகிறது. டெல்லி சென்று திரும்பிய கருணாநிதி, தலையை ஒருபக்கமும் வாலை ஒருபக்கமும் நீட்டி இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பக்கூடாது என்று சட்டசபையில் பேசிவிட்டு தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையையும் எடுக்க ஆரம்பிக்கிறார். மே 7 ஆம் தேதி “இன்று ஆனையிறவு நாளை யாழ்ப்பாணம்” என்று சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு அச்சடித்த அச்சக உரிமையாளர் உட்பட ஒட்டிய பெரியார் திராவிடர் கழகத்தினர் 1௦ பேரை கைது செய்கிறார். அதே நாள் சிதம்பரத்தில் ஈழத்தமிழர் அவலங்கள் பற்றிய கருத்தரங்கம் நடத்தவிருந்த அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 250 பேரை கைது செய்து கருத்தரங்கத்திற்கு தடை விதிக்கிறார்.(http://tamil.oneindia.in/news/2000/05/07/nedumaran.html) அதற்கு முன் இதே கருத்தரங்கை திருவாரூர், திருச்சந்தூர், ராணிப்பேட்டையில் நடத்திய பொழுது அனுமதித்த கருணாநிதி டெல்லி சென்று ஆலோசனை நடத்தி திரும்பிய பின் புலிகள் 40 ஆயிரம் ராணுவத்தினரை சுற்றி வளைத்துள்ள இந்நிலையில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் மாநாடுநடத்தக்கூடாது என்று தமிழக போலீசார் 144 தடையுத்தரவு போட்டு தமிழீழ ஆதரவை ஒடுக்க ஆரம்பிக்கிறார்.

லக்ஸ்மன் கதிர்காமர் இந்தியா வந்ததும், கூட்டணியில் இருக்கும் ஈழ ஆதரவு தமிழக கட்சிகளை அழைக்காமல் கேபினெட் கூட்டி மனிதநேய உதவி என்று சொன்னதும், கருணாநிதியை அழைத்து ஆலோசித்து அதன் பின் அவர் தமிழீழ ஆதரவை ஒடுக்க ஆரம்பித்ததும், ராணுவ விமானப்படை தளபதியை அனுப்பிவிட்டு ராணுவ உதவி இல்லை என்று வெளியில் காட்ட அனைத்து கட்சி கூட்டியதும், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசும் இலங்கை அரசும் இணைந்து புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட 40000 இலங்கை ராணுவத்தினரை காப்பாற்றத்தான் என்பதை யாரும் சொல்லி தெரியத்தேவை இல்லை.
அதன் பின் அதே வருடம் ஜூன் மாதம் 3ஆம் தேதி கருணாநிதி தன் பிறந்தநாள் விழாவில் இலங்கையிலும் செகச்லோவோகியா போல் பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஏற்பட பாஜக அரசு உதவ வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார். (http://tamil.oneindia.in/news/2000/06/06/possible.html) உடனே அதனை இலங்கை அரசாங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இலங்கை நாட்டை பிரிக்க எண்ணினால், இந்தியா பிரிந்து போகும்’ என்று எச்சரிக்கிறார் இலங்கை யின் அமைச்சர் மங்கள சமரவீரா. உடனே பாஜக அரசாங்கம் கருணாநிதி சொன்னது இந்திய அரசின் கருத்தில்லை என்று தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜூன் 11ஆம் தேதி அன்றைய வெளி விவகார துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கை செல்கிறார், இலங்கைக்கு 100 மில்லியன் டாலர் இந்திய அரசால் இலங்கையின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் தாரைவார்க்கப்படுகிறது. அது தான் இந்திய அரசாங்கம் முதன் முதலாக இலங்கை அரசுக்கு கொடுத்த இனாம். அவ்வளவு பெரிய அளவிலான தொகையை இந்தியா அதற்குமுன்னர் எந்த நாட்டுக்கும் கொடுக்கவில்லை. அன்றைய தேதிக்கு இலங்கை ரூபாய் மதிப்பிற்கு அது 1000 கோடி ரூபாய். அவ்வளவு பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் ‘இலங்கை தீவை துண்டாட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒற்றை இலங்கைக்குள் தீர்வு என்பதே இந்தியாவின் முடிவு’ என்று ஜஸ்வந்த் சிங் திட்டவட்டமாக அறிவிக்கிறார். (http://news.bbc.co.uk/2/hi/south_asia/791132.stm). அதை எதிர்த்து அன்றைய காலகட்டத்தில் ஈழத்தை ஆதரிக்கும் வைகோ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அறிக்கை முலம் கண்டிக்கிறார்கள். ஆனாலும் கூட்டணியில் தொடருகிறார்கள்(!).
அதே ஜூன் 11, சென்னை ஆவடிக்கு ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகிறார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவரிடம் நிருபர்கள் தமிழக கட்சிகளின் எதிர்ப்பு பற்றி கேட்கிறார்கள், அதற்கு ‘இப்பிரச்சனையில் மத்திய அரசு தெளிவான நிலை எடுத்திருக்கிறது’ என்று சொல்கிறார். அத்தோடு ‘மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறார். (http://tamil.oneindia.in/news/2000/06/15/george.html).

அதை தொடர்ந்தே ஜூலை 1, 2 தேதிகளில் அய்யா வைகோவின் மதிமுக, ‘தமிழர் எழுச்சி மாநாட்டை’ ஈரோட்டில் நடத்துகிறது. அம்மாநாட்டில் அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், முக்கிய தலைவர்களும், சில மாநில முதல்வர்களும், கலந்து கொள்கிறார்கள். அன்று நடந்த பேரணியில் ஈழம்/இலங்கை சார்ந்த முழக்கங்கள் குறைக்கப்பட்டு, தமிழகம் சார்ந்த கோரிக்கைகள் முழங்கப்படுகிறது (http://tamil.oneindia.in/news/2000/07/01/started.html).

அக்கூட்டதில் அத்வானி மிகத்தெளிவாக, நிதானமாக ‘இலங்கையில் தமிழர்களுக்கு அமைதியும் நீதியும் கிடைக்க பாடுபடுவோம், இலங்கையின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காமல் தமிழர்கள் மானத்தோடும் மரியாதையோடும் வாழ அனைத்து வழிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்” என்கிறார். அதன் பிறகு உரையாற்றிய அய்யா வைகோ ‘நான் பேசுவதை அளந்து தெளிந்து பேசுகிறேன், வாஜ்பாய் அரசாங்கத்தை நான் இலங்கையை பிரிக்க நிர்பந்திக்கவில்லை, ஆனால் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையால் அப்படி ஒரு நாடு உருவானால் அதற்கு பாஜக அரசு என்ன செய்ய முடியும்’ என்று நாசுக்காக உரைத்தார். அத்தோடு ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அந்நாட்டுக்கு உதவுவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்ற தீர்மானமும் நிறைவேற்றினார் (http://tamil.oneindia.in/news/2000/07/02/resolutions.html).

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஜூன் 11 அன்று இலங்கைக்கு நூறு மில்லியன் டாலர் கொடுத்த இந்திய பாஜக அரசுக்கு ஜூலை1 அன்று நடைபெற்ற மாநாட்டு தீர்மானத்தில் நன்றி சொல்லப்படுகிறது. வெறும் 15 நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை மறைத்து அய்யா வைகோ மக்களை எப்படி எல்லாம் முட்டளாக்கியிருக்கிறார் என்று யோசிக்கும் பொழுது மனம் கொதிக்கிறது.

ஆனையிறவு வெற்றிக்கு பிறகு விடுதலை புலிகள் மிக பலம்வாய்ந்திருந்த காலகட்டத்தில், இந்திய பாஜக அரசு இலங்கைக்கு இனாமாக கொடுத்த நூறு மில்லியன் டாலரை சந்திரிக்கா அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியிருக்கும் என்பதை நாம் எளிதில் யூகிக்க முடியும். அந்த காலகட்டமே ஒட்டுமொத்தமாக இந்திய அரசின் வெளி விவகாரக் கொள்கை தமிழர் நலனில் அக்கறையின்மை என்ற போக்கில் இருந்து சிறிது முன்னேறி, தமிழின எதிர்ப்பு அல்லது அழிப்பு என்ற நிலையை பற்றி பயணிக்க முடிவெடுத்தது. இனாமாக பெற்ற நூறு மில்லியன் டாலர் இலங்கை அரசால், சர்வதேச நாடுகளுடனான ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும், ஆயுத கொள்முதலுக்கும் கனகச்சிதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்திய ஆளும்வர்க்க நலன் சார்த்த நிலைப்பாடுகளை முடிவெடுத்து நிகழ்த்தி காட்டும் அதிகார மையங்களின் ஆலோசனைப்படி, இலங்கை அரசின் ராஜதந்திர அணுகுமுறையின் அனுகூலங்கள் துளிர்த்து, அவ்வரசு மற்றும் அரசுசாரா பல்வேறு பொறுப்பாளர்கள், பல்வேறுபட்ட நாடுகளில் சுற்று பயணம் மேற்கொள்ளுகின்றனர். இதை எல்லாம் விட பாஜக அரசாங்கம் எப்படி மிக வஞ்சகமாக தமிழர்களை ஏமாற்றியிருக்கிறது என்பதற்கு ஒரு சம்பவத்தை குறுப்பிட வேண்டியிருக்கிறது.

மெருகேற்றப்பட்ட இந்திய இலங்கை ராஜதந்திர மற்றும் தமிழின எதிர்ப்பு ரகசிய உடன்படிக்கை உருவான காலகட்டமது. அதன் தொடக்கமாக ஆண்டு ஆகஸ்ட் மாதமே INS சரயு என்ற 90 கோடி மதிப்புள்ள ரோந்து கப்பலையும் ஆகாயமார்க்கமாக வேவு பார்க்க மூன்று செடக் உலங்கு ஊர்தியையும் இந்தியா வலிய சென்று இலங்கைக்கு வழங்குகிறது. (http://en.wikipedia.org/wiki/Sukanya-class_patrol_vessel) (http://www.bannedthought.net/India/PeoplesMarch/PM1999-2006/archives/2002/june2k2/srilanka.htm).

இந்தியா ராணுவ தளவாடங்கள் முதல் முறையாக இலங்கைக்கு விற்கப்படும் வணிக நிகழ்வு இது. அன்றைய இந்திய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கம் தான் முதலில் இலங்கைக்கு ராணுவரீதியான உதவியையும் இரு நாடுகளுக்குடனான ராணுவத் தளவாட வணிகத்தையும் தொடங்கி வைத்தது. அடுத்ததாக டிசம்பர் மாதம் தாம் கொடுத்த ரோந்து கப்பல்களை பணிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தகுந்த இயக்கிகளை உருவாக்க இலங்கையை சேர்ந்த 200 சிங்கள கடற்ப்படையினருக்கு பயிற்சியும், பயன்பாட்டு பயிலரங்க உத்தரவும் வழங்குகிறது. (http://www.hindu.com/2000/12/10/stories/03100008.htm).

மேற்கண்ட தளவாடங்களே பிற்காலங்களில் இந்துமா சமுத்திரத்தின் இலங்கை கடற்ப படையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. மேலும் விடுதலைப்புலிகளின் ஆயுத கப்பல்கள் பெருமளவு தடுத்து நிறுத்தி நாசப்படுத்த பயன்பட்டது.
வாஜ்பாய் அரசங்காத்தின் ஈழ நிலைப்பாடு இவ்வளவு மோசமாக இருக்க அய்யா வைகோ தொடர்ச்சியாக ‘அன்றைய பாஜக அரசாங்கம் சரியாக இருந்தது இன்றைக்கு இருக்கும் மோடி தலைமையிலான அரசு தான் சரியில்லை’ என்று பேசுவது அப்பட்டமான மோசடி. அதை எல்லாம் விட அய்யா வைகோவின் சகிக்க முடியாத துரோகம் என்னவெனில் 2000 ஆண்டு இந்திய ராணுவ அமைச்சகம் முதன் முதலாக இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் பொழுது அய்யா வைகோ இந்திய அரசின் பாதுகாப்பு குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தது தான்(http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=498&lastls=13).

தமிழர்களுக்கு எதிரான போரில் பயன்படுத்தக்கூடிய ராணுவ தளவாடங்களை இந்திய அரசு வழங்கும் பொழுது உள்ளிருந்து கொண்டு அதை எதிர்க்காமல் இருந்ததுவிட்டு இப்பொழுது வந்து மற்றவர்களை பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று பேட்டி கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் வீழ்ந்துவிடும் என்று எல்லா ஊடகங்களும் எழுதி தீர்த்த பொழுது, கருத்துகணிப்புகள் வெட்டவெளிச்சமாக காட்டிய பொழுது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைபடுத்தப்பட்டு நடிகர் கார்த்திக்கின் கட்சியோடு தான் கூட்டணி சேர முடியும் என்ற கீழ் நிலையில் இருக்கும் பொழுது காங்கிரசை வீழ்த்த வேறு வழி தெரியாமல் பாஜகவோடு கூட்டணி வைத்தேன் என்பதெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பதென்று தெரியவில்லை. ஒருவேளை இந்திய அளவில் வீழ்த்துவதை பற்றி சொல்கிறார் என்று எண்ணினாலும் இவருக்கு கொடுக்கப்பட்டதோ வெறும் 7 சீட்டுக்கள் இவர் வேறு மாநிலத்திற்கும் சென்று ஆதரவு பிரச்சாரம் செய்யவில்லை என்பதால் அதுவுமில்லை. அத்தோடு வாஜ்பாய் அரசின் நிலைப்பாடும் காங்கிரசின் அரசின் நிலைபாடும் ஒன்று தான் எனும்பொழுது அய்யா வைகோ பாஜகவோடு கூட்டணி வைத்தது அவரது சுயலாபத்திற்காகத்தான் இன்று வெளியே வந்ததும் கூடா கூட்டணியினால் தன் கட்சியின் ஈழ ஆதரவு பிம்பம் உடைந்துவிடக்கூடாது என்ற சுயலாபத்திற்காக தான் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

https://m.facebook.com/notes/packiarajan-sethuramalingam/வாஜ்பாய்-அரசு-ஈழ-ஆதரவு-அரசா-வைகோ-பொய்யும்-நடந்தவையும்/604414593266566/

பறிபோனது இதயபூமி மணலாறு

வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாக்கு வாக்களிக்க வடக்கு கிழக்குக்கு இடையே ஒரு பகுதி புதிய ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சேக்கு வாக்களித்தது .

அந்த இடம் வெலி ஓயா என அழைக்கப்படும் மணலாற்றின் சிங்கள குடியேற்றம் இது வடக்கு கிழக்கு தமிழர் வாழ்விடங்களை நிரந்தரமாக பிரித்து விடும் நோக்கில் உருவாக்க பட்ட சிங்கள குடியேற்றம் ஆகும் . இன்று 18 கிராமங்களைக் கொண்டிருக்கின்றது வெலிஓயா.

தற்போது 11,189 பேர்களை உள்ளடக்கிய 3336 சிங்கள குடும்பங்கள் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றார்கள்.

1988ம் ஆண்டு சித்திரைத் திங்கள் 16 ஆம் நாள் ஒரு சிறப்பு அரசதாள் (Gazette) மூலம் முல்லைத்தீவு மாவடத்தின் மணலாற்றுப் பிரதேசம் வெலிஓயாவாக பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

அது மட்டும் அல்லாது இலங்கையின் 26 ஆவது மாவட்டமாகவும் அது பிரகடனப் படுத்தப்பட்டு அனுராதபுர மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. 1984 இல் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராமங்களில் காலம் காலமாக வாழ்ந்து வந்த 13,288 தமிழ்க் குடும்பங்கள் 48 மணித்தியாலக் காலக்கெடுவுக்குள் அவர்களது வீடுவாசல்களில் இருந்து வெளியேறுமாறும் வெளியேறத் தவறினால் பலவந்தமாக அவர்கள் வெளியேற்றப் படுவார்கள் எனவும் அச்சுறுத்தி விரட்டப்பட்டனர் .

2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்கி மாய புர என்ற பெயரில் சிங்கள குடியேற்றம் ஒன்றை செய்தார்கள். இதன் மூலம் 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமாகி இருக்கிறது.2009 ஆம் ஆண்டு மயில் குளம் என்று அழைக்கப்பட்ட இடம் தற்போது மொனரவெவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர் .ஆமையன் குளம் என்ற பெயரில் இருந்த நிலங்களை இரி இப்பன்வெவ என பெயர் மாற்றி, அங்கும் சிங்களக் குடியேற்றம் செய்தார்கள் . முந்திரிகை குளம் பகுதி நெலும் வெவ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, காணிகள் அங்கும் காணிகள் அபகரிக்கப்பட்டு இருக்கின்றன

இதன் நீட்சியாக வவுனியா கொக்காச்சான்குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் கிராமம் ஒன்றை, 2012 ஆம் ஆண்டு கலாபோவஸ்கம என சிங்களப் பெயரை மாற்றி சுமார் 3500 சிங்களக் குடும்பங்களை குடியேற்றினார்கள் . அந்த பகுதியில் 2018 ஆம் ஆண்டு அந்த 3500 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களையும் சட்ட ரீதியாக வழங்கி இருக்கிறார்கள்

இந்த பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தான் கோத்தபாயா ராஜபக்சேக்கு வாக்களித்தார்கள்.

இது ஒரு ஆரம்பமே. அடுத்த 2009 நேற்றுடன் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.