இந்தியப் பொருளாதாரமும் பசுநேசர்களும்

அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.

அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 ‘தாய் பாட்’ கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 ‘தாய் பாட்’ தான் கிடைக்கும்.

அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10,000 ரூபாய்க்கு 1,31,00 பங்களாதேஷ் ‘டக்கா’ கிடைத்திருக்கும். இப்போது போனால் 1,13,00 டக்கா தான் கிடைக்கும்.

காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?

காமன்மேனாக – எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும்.

2014 ஆம் ஆண்டு (பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) சமையல் கேஸ் விலை, பெட்ரோல் – டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சினிமா டிக்கெட் விலை, ஹோட்டல்களில் உணவுகளின் விலை, பால் விலை, மின்சாரக் கட்டணம் & இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை என்னவாக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடும் போது, கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது? ஒரு காமன்மேனின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளன தானே? (இதுல மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒரு சிலது மட்டுமே உண்டு).

2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 113 டாலர். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அது குறைந்து 36 டாலர் வரைக்கும் வந்ததாக ஞாபகம். இப்போது 45 டாலர். சில மாதங்களுக்கு முன்பு 10 டாலர், 0 என மைனஸில் கூட வர்த்தகம் ஆனது.

ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது என்ன லாஜிக்? எங்கே போகிறது அந்தப் பணம்? காமன்மேன்களுக்கு ஏன் ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை?

கொரோனா லாக் டவுன் காலத்திலும், அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் போதும் டோல் கேட்டில் சுங்க வரியை உயர்த்தினார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் ?

இதுபற்றியெல்லாம் யாரையும் சிந்திக்க விடாமல், கேள்வி கேட்க விடாமல் தேசபக்தி, மாட்டுக்கறி, எல்லையில் ராணுவ வீரர்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதி, முஸ்லீம்கள் நாய்க்கறி சாப்பிட்டு பாகிஸ்தான் போகணும், இது இந்துக்களின் பூமி, கந்தர் சஷ்டி, ராமர் கோயில், விநாயகர் சதுர்த்தி, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க. அதுக்கு முரட்டு முட்டுக்கொடுக்க முட்டாள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவங்களை நினைச்சா தான் இன்னும் கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. அவங்க கட்சியால் ஒரே ஒரு நல்லது கூட நடக்காமல், காமன்மேன்களில் ஒருவராக அவர்களுக்குமே பாதிப்பு தான் அதிகம். ஆனால், எனக்கு வலிக்கலயேன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. வெறுப்பை பரப்பிட்டும் இருக்கானுங்க.

அப்பவும் அவனுங்க முட்டுத்தறாய்ங்க. இதான் ஹைலைட்டே !

அமெரிக்காவோ, தாய்லாந்தோ, வங்கதேசமோ… அப்போ பத்தாயிரம் எடுத்துட்டு போனதுடன் ஒப்பீடு செய்தால் இப்போ வீழ்ச்சி. இது ஒருபுறம் இருக்கட்டும். 10,000 எடுத்துட்டு போறதுல எவ்ளோ சிக்கல் இருக்கு பாருங்க… இவ்வளவு விலைவாசி ஏற்றங்களையும் தாக்குப் பிடித்து, வருவாய் ஈட்டி, அதற்கு தனியா ஜி.எஸ்.டி கட்டி, கஷ்டப்பட்டு 10,000 எடுத்துட்டுப் போனா, அதோட மதிப்பும் வீழ்ந்திருக்கும்! வெந்தப் புண்ணில் வேல் !

பாஜக ஆளும் வரை ஒவ்வொரு ஆண்டும் இது பொருந்தும்.

2014 இல் பாஜக ஆட்சி அமைக்கும் போதும் சரி, 2016 இல் டீமானிடைசேஷன் சமயத்திலும் சரி… மோடியின் பக்தர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். டாலர் மதிப்பு 40 வரும்… பெட்ரோல் டீசல் விலை 50 க்கு கீழ் வரும்… தீவிரவாதிகள் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும்… ப்லா ப்லா ப்லா… ஆனால் என்ன தான் நடந்தது?

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட போதும், பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு வரலாறு காணாத விலையேற்றம், பதான்கோட், புல்வாமா எனத் தீவிரவாத தாக்குதல்கள். (350 கிலோ வெடி பொருட்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே இன்றளவும் மர்மமாக இருக்கிறது), சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்… 20 இந்திய வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணித்தார்கள். என்ன தான் செய்கிறது இந்தியாவை ஆளும் பாஜக அரசு? யோசிக்கவே மாட்டார்களா? சீனா செய்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருந்தால் எவ்வளவு பொங்கியிருப்பார்கள்? இங்கே நாம் அண்டை வீட்டில் வாழும் இஸ்லாமியர்களைக் கூட விரோதிகளாக கட்டமைத்திருப்பார்களே. ஆனால் சீனா விஷயத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியது ஏன்?

சிந்திப்போம். அறியாமையால் இருப்போருக்கு புரிய வைப்போம். மதமோ, கடவுளோ நம்மைக் காப்பாற்றாது. நம்மை ஆளும் அரசு தான் நம் அனைவரையும் சமமாகப் பாவித்து, நமக்கான நல்லாட்சியைத் தர வேண்டும் !

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

  1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
  2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது?
  3. பாஜக மீது கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?
  4. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட…
  5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
  6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன் அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?
  7. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியதேன்?
  8. பல லட்சம் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லை?
  9. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?
  10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன?
  11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
  12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
  13. மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
  14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
  15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து ஏன்?
  16. பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால் இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?
  17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
  18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
  19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
  20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?
  21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

இன்னும் பல ஆயிரம் புதிரான கேள்விகளுக்கு விடை தெரியா சாமானியனின் பகிர்வு.

கேரள அரசின் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தெற்கெல்லைப் போர் ஈகியருக்கு வீர வணக்கம்!

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் தமது தாயகப் பகுதிகளை தாய்த்தமிழகத்தோடு இணைக்கக் கோரி 1946ஆம் ஆண்டு முதல் மார்சல் நேசமணி தலைமையில் போராடி வந்தனர்.

1954இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் தாணுப்பிள்ளை என்பவர் முதல்வராக இருந்தார்.
தீவிர மலையாள இனவெறி கொண்ட பட்டம் அவர்கள் தேவிகுளம், பீர்மேடு வட்டங்களில் வாழும் தமிழர்கள் மீது கடும் ஒடுக்குமுறையை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி, மலையாள குடியேற்றத்தை அதிகரித்து தமிழர் தாயகத்தை இல்லாதொழிக்கவும் முற்பட்டார்.

1954ஆம் ஆண்டு தேர்தலில் நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சி தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் வெற்றது. இந்த வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத பட்டம் தாணுப்பிள்ளை அரசு 650க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தமிழ்த் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

அவரின் ஏவல்துறையான காவல் துறை செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தொழிற்சங்க செயலாளர் ஆர்.குப்புச்சாமி என்ற இளைஞரை செவிப்பறை கிழியும் வரை காதில் அடித்து துவைத்து எடுத்தது. அதன் பிறகு அவரோடு சேர்த்து, சுப்பையா நாடார் என்பவருக்கும் கைவிலங்கு மாட்டி மூணாறு நகர கடைவீதிகளில் கொட்டும் மழையில் இழுத்துக் கொண்டு சென்றது. இதைக் கண்ணூற்ற பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி மதுரை மாவட்ட சிற்றூர்களுக்கு ஓடினார்கள்.

மார்சல் நேசமணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு குரல் கொடுக்க மூணாறு வந்தார். பீர்மேடு, வண்டிப்பெரியாறு, வண்டல் மேடு பகுதிகளுக்குச் சென்று காவல்துறையின் அடக்குமுறையை கடுமையாக கண்டித்துப் பேசினார். அவருடன் சேர்ந்து அப்துல் ரசாக் என்பவரும் பேசுகையில், “போலீஸ் ஜவான்கள் சண்டியர்களைப் போல நடந்து கொள்வதால், அப்படிப்பட்டவர் கையில் துவக்குகளை விட்டு வைப்பது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார்.

இதனை வன்முறைப் பேச்சாக மலையாள ஏடுகள் சித்தரித்தன. ‘மலையாளி’ என்றொரு இதழ் அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு ‘வெல்லுவிளி’ என்று வர்ணித்தது. ‘கேரளகோமதி’ இதழ், “நேசமணி எந்தா இங்ஙனம் ஆயிப்போயி?” என்று ஏளனம் செய்தது.

மலையாள இனவெறி கூச்சல் ஓங்கி ஒலித்ததன் காரணமாக மார்சல் நேசமணி, அப்துல்ரசாக் சிதம்பர நாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச்செய்தி உடனடியாக காட்டுத் தீயாகப் பரவியது. அப்போது நாகர்கோயில் பகுதியில் தென் தமிழர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

பட்டம் தாணுப்பிள்ளையின் அடக்குமுறைக்கு எதிராக நேசமணிக்கு அடுத்த கட்டத் தலைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்ட் 11ஆம் நாளை தமிழர் விடுதலை நாளாக (Deliverance Day) கொண்டாடுமாறு குஞ்சன் நாடார் வேண்டு கோள் விடுத்தார்.

அன்று முழுகடையடைப்பு பேரணி, பொதுக்கூட்டம், மறியல் என்று அனைத்து தமிழர்களும் போர்கோலம் பூண்டனர். அப்போது பட்டம் அரசின் காவல் துறை தமிழர்களை நர வேட்டையாடியது. நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரின் தடியடியால் காயம் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அப்பாவி பொது மக்கள் மீது வெளியே வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

‘தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். குலசேகரம் அந்திச் சந்தையில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் காவல்துறையின் அடிக்கு பயந்து ஓடியதால் கீழே விழுந்தாள். அவள் மீது பலரும் மிதித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிர் துறந்தாள்.

சங்கரன் நாடார், மடிச்சல் சங்கு நாடார் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனர். மொத்தம் 36 பேர் பலியானார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஒன்பது பேர் மட்டுமே பலியானதாக பட்டம் தாணுப்பிள்ளை அரசு அறிவித்தது. அந்த ஒன்பது தமிழர்கள் பெயர் மின் வருமாறு:

1.எம்.முத்துசாமி நாயகம்
2.என்.குமரன் நாடார் 3.ஏ.பீர்முகம்மது 4.ஏ.அருளப்பன் நாடார் 5.ஏ.பொன்னையன் நாடார்
6.என்.செல்லப்பா பிள்ளை 7.எஸ்.இராமையன் நாடார்
8.ஸ்ரீ பப்பு பணிக்கர்
9.எம்.பாலையன் நாடார்

இவர்களுக்கு முன்னர் 8.2.1948 அன்று தமிழரசு கழகத்தைச் சேர்ந்த தேவசகாயம் நாடார், செல்லையா நாடார் ஆகிய இருவரும் தாயக மண் மீட்பு போராட்டத்தில் முதல் களப்பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் கடும் போராட்டத்தின் காரணமாக சிறையை விட்டு விடுவிக்கப்பட்ட மார்சல் நேசமணி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து மிக உருக்கமாக பேசினார். அதுவருமாறு:

“தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும் அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் தேயிலைத் தோட்டம் வளர்த்த பெருமை முழுவதும் தமிழனுக்கே சொந்தம்” என்றார்.

1956 நவம்பர் 1ஆம் நாளில் மொழிவழி மாகாணம் அமைந்த போது உயிர்நீத்தவர்களின் ஈகம் வீண் போகவில்லை. கன்னியாகுமரி உள்ளிட்ட தென்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் தேவிகுளம், பீர்மேடு வட்டங்கள் மட்டும் தமிழகத்தோடு இணைக்கப்பட வில்லை. அதன் காரணமாக தமிழர்கள் சொல்லொண்ணக் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

பட்டம் தாணுப்பிள்ளை வழியில் தான் இன்றைக்கு மாறி மாறி ஆட்சி நடத்தும் காங்கிரசு கட்சியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி்யும் தமிழர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்னை காரணமாகவும் அங்கு வாழும் தமிழர்கள் அச்சத்தோடு தான் வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவு காரணமாக 49 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகியுள்ளனர். எஞ்சிய தமிழர் உடல்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கைகளை கேரள அரசு மேற்கொள்ளவில்லை.

27 தமிழர் உடல்களை மீட்டெடுத்த நிலையில் கொரோனோ நோயாளிகளைப் போல கருதி உறவினர்கள் கேட்டுக் கொண்டும் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டது.

கோழிக்கோட்டில் நடந்த வானூர்தி விபத்தில் இறந்த போனவர்களுக்கு 10 இலட்சமும், நிலச்சரிவில் இறந்த தமிழர்களுக்கு 5 இலட்சமும் வழங்கியதன் மூலம் தனது இனப்பாகுபாட்டை கேரள அரசு வெளிக்காட்டியுள்ளது.

எப்போதும் அரபுநாட்டில் வேலை பார்க்கும் மலையாளிகள் சிக்கினாலோ, செத்துப்போனாலோ பரபரப்போடு இயங்கி மீட்டெடுக்கும் கேரள அரசு உள்ளூரில் செத்துப் போன தமிழர்களை மீட்க அக்கறை செலுத்தாதற்கு காரணம் வரலாற்று ரீதியான தமிழினத்தின் மீதான பகை உணர்ச்சி தான்!

இழந்த போன தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுத்து தமிழகத்தோடு இணைப்பது ஒன்றுதான் அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கும்!

மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்திய நிகழ்வு

இழந்த பகுதிகளை மீட்டெடுக்க குருதி சிந்திய ஈகியர் நாளிலே உறுதியேற்போம்!

பத்தாம் வகுப்புத் தனித் தேர்வர்களின்கதி என்ன?

பள்ளிகளில் பயின்று, காலாண்டு, அரையாண்டுத் தேர்வெழுதிய மாணவர்களுக்குக் கொரோனா காரணமாக இறுதித்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் அரசு தேர்ச்சி வழங்கியுள்ளது. இத்தேர்ச்சி முடிவுகள் 10.08.2020 அன்று வெளியிடப்பட்டது. அம்முடிவு வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் சற்றொப்ப ஒரு இலட்சம் மாணவர்கள், தனித்தேர்வர்களாக, நேரடியாகத் தேர்வெழுதப் பதிவு செய்து, தங்களுக்குரிய தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) வழங்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாகத் தேர்வுகளை அரசு நடத்தவில்லை.

இந்தத் தனித்தேர்வர்களுக்குத் தமிழ்நாடு அரசு, தேர்வு வைக்கப் போகிறதா அல்லது வேறு வகையில் தேர்ச்சி வழங்கப் போகிறதா என்ற விவரத்தை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. கல்வித்துறை அதிகாரிகளுக்கும் இதுபற்றி எதுவும் தெரியவில்லை.

இன்று (11.08.2020) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை 24.08.2020 அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளார். இந்நலையில், ஒரு இலட்சம் மாணவர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் குழம்பிப் போய் உள்ளார்கள்.

அருள்கூர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி இந்தத் தனித் தேர்வர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர்களின் எதிர்காலம் தங்கள் முடிவில் அடங்கியிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

மூணாறு நிலச்சரிவில் இறந்த தமிழர்களை மீட்பதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?

கேரள மாநிலத்தில் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய 20 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் பெருமழையினால் மலை இடிந்து விழந்ததில் சிக்கி, பலர் உயிரிழ்ந்தது பெரும் துயரச் செய்தியாகும். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் – கயத்தாறு பகுதியிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன் கேரளத்திற்குப் பணிக்குச் சென்று அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்தவர்கள். மூணாறு அருகே உள்ள பெட்டிமுடி ஊராட்சிப் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய இவர்களின் வீடுகள், அந்தத் தேயிலைத் தோட்டத்திலேயே மலைச் சரிவுக்குக் கீழே இருந்தன.

கடந்த 07.08.2020 அன்றிரவு பெய்தப் பெருமழையினால், மலைப் பகுதி இடிந்து இந்த 20 வீடுகளையும் மூடிவிட்டது. இதில் சிக்கிக் கொண்டவர்களில் மூன்று பேர் மட்டும் தப்பித்து வெளியே வந்திருக்கிறார்கள். இவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் மீட்புப் படையினர் 16 பேரை படுகாயங்களுடன் மீட்டு உள்ளார்கள். இன்றுவரை (09.08.2020) 42 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகள் போர்க்கால வேகத்தில் முழுவீச்சில் நடைபெறவில்லை என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகளில் சிக்கிக் கொண்டோரை உயிராக அல்லது உடலாக மீட்பதற்கு 2 நாட்களுக்கு மேல் தேவைப்படுவது வியப்பாக உள்ளது.

மேலும், 08.08.2020 அன்று மீட்கப்பட்ட 27 உடல்களை உறவினர்கள் கேட்டும், அவர்களிடம் ஒப்படைக்க மறுத்து, அத்தேயிலைத் தோட்டத்தில் ஒரே குழிக்குள் அனைத்து உடல்களையும் புதைத்திருக்கிறது கேரள அரசு. இவர்கள் கொரோனா நோயாளிகள் அல்லர்; ஊர் பேர் தெரியாத வழிப் போக்கர்களும் அல்லர்! வீடுகளில் தங்கி வேலை பார்த்து குடும்பம் நடத்திய மக்கள். அப்பகுதியிலுள்ள மற்ற குடியிருப்புகளில் இவர்களின் உறவினர்களின் குடியிருப்புகள் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்ய வசதியாக, தங்களிடம் ஒப்படைக்குமாறு மன்றாடிக் கேட்டுள்ளனர். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் உடல்களை ஒப்படைக்க மறுத்து விட்டனர்.

கேரள அரசு தமிழர்களின் மனித மாண்புகளை துச்சமாகக் கருதி, இழிவு செய்துவிட்டதாகவே கருதுகிறோம்.

இதே கேரளத்தில், 08.08.2020 அன்று கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இது மிகவும் கொடுமையான துயரச் செய்தி! இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், இந்த இரண்டு விபத்துகளையும் கேரள அரசு கையாண்ட முறையிலும் துயர்துடைப்புப் பணிகளிலும் பாகுபாடு இருக்கிறது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கு கேரள அரசு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. ஆனால், அதே கேரள அரசு நிலச்சரிவில் குடும்பத்தோடு மடிந்த தமிழர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனைக்கு சென்று விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், மூணாறில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்த் தொழிலாளிகளை பார்க்க முதலமைச்சர் செல்லவில்லை.

பாட்டாளி வர்க்கத்திற்காகவே கட்சி நடத்தக்கூடிய கேரளத்தின் சி.பி.எம். முதலமைச்சர், இவ்வாறான பாகுபாடுகளுக்கு இடம் கொடுத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இச்செயல் இனப்பாகுபாடு காட்டுவதாக அமைகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தமிழ்நாட்டின் குரலுக்கு செவிமடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், ஒரே புதைகுழியில் போட்டு அனைத்து உடல்களையும் புதைக்கச் செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளிகளில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் தமிழர்கள்! இதுபோன்ற விபத்துகள் இதர குடியிருப்புகளில் நடைபெறாமல் தடுப்பதற்கு, ஆபத்தான குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தற்காலிக மாற்று ஏற்பாடு செய்து பாதுகாக்குமாறு கேரள முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

வீரம் செறிந்த புலிக்கூட்டமும்; மலத்தில் மேயும் பன்றிக்கூட்டமும்!?

இச்செய்தி உண்மையாக இருந்தால்,

மண்புழுவைப் பார்த்து பயப்படுகிற ஆரியக் கூட்டத்தின் வழிவந்த எஸ்வி சேகர்,

புலிக்கூட்டமாம் தமிழர் கூட்டம் “அந்த கூட்டத்தின் வழிவந்த மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களே கூறியிருப்பது,

உச்சபட்ச அதிகாரம் முழுமையும் பிராமணர்களால் நிரம்பியே இருக்கிறதைக் காட்டுகிறது..!

தமிழகத்தின் முதல்வரை
இவன் இப்படி பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..!

இதற்கெல்லாம் யார் காரணம் தமிழர்களாகிய நாம் தான்..!!

ஆரியனா வருவான்,
தமிழருக்கு எதிராக தமிழகத்தில் தமிழிலே படம், நாடகம் எடுப்பான்,

நாமளும் வாயைப் பிளந்துகொண்டு பார்த்தோம்.!

திராவிடன் என்று கூறி தெலுங்கர்கள் வந்தார்கள்,

ஒட்டுமொத்த சினிமா துறையையும் கைப்பற்றி வைத்துக் கொண்டார்கள்.!

அதையும் தமிழர்கள் வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!!

எவ்வளவு தூரம் இந்த ஓட்டம் ஓடும் என்று பார்ப்போம்…!?

எடப்பாடி ஐயா உங்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் வைத்த பெயர் அடிமை என்பது..!

இந்தச் சொல்லை மற்றவர்கள் வாயால் நான் கேட்கும் பொழுது,

என் மனம் ரொம்ப வருந்தும்.!

அதுவும் திராவிட சிந்தனை கொண்டு சில அதிகாரத்திலுள்ள தெலுங்கர்கள் பேசும்பொழுது,

மிகவும் மட்டமாக பேசுவார்கள்.!

ஒரு தமிழர் தானே தமிழ்நாட்டை தற்பொழுது ஆளுகிறார்,
அவரால் இந்திய ஒன்றிய அரசையும் எதிர்த்து மாநில உரிமையை நிலை நாட்ட முடியுமா.??

“அதற்கு கருணாநிதி மேல்..!
‘கன்னட ஜெயலலிதா மேல்..!தெலுங்கர் அண்ணாதுரை மேல்..!”தமிழகத்தை ஆண்டதற்கு என்று கூறுவார்கள்…!

இதற்கு என்ன அர்த்தம் ?தமிழகத்தை பிற மொழியாளர்கள் தான் ஆட்சி செய்வார்கள் ..!
தமிழர்கள் ஆட்சி செய்வதற்கு ஒரு போதும் தகுதி இல்லாதவர்கள் ..!!
என்ற தொனியில் பேசி வருகிறார்கள்..!

ஐயா’ தரணி ஆண்ட இனம் நாம்..!

இமயமலையை ஆண்ட இனம் நாம்..!

உலகம் முழுக்கும் படையெடுத்து உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த இனம் நாம்..!!

உலகில் மூத்த மொழி தமிழ் மொழிதான்..!
உலகின் முதல் மொழி தமிழ் மொழிதான்..!!
அப்பேர்ப்பட்ட இனத்திற்கு சொந்தக்காரர் நாம்..!!

காட்டை திருத்தி, செழுமைப்படுத்தி, நிலத்தைப் பண்படுத்தி, நாகரீக வளர்ச்சியை இந்த உலகத்திற்கு கொடுத்த இனம் நாம்..!

நாகரிகம் என்றால் என்னவென்று தெரியாத கூட்டத்தில் வந்தவன் எல்லாம் என்னென்னமோ வாய்க்கு வந்ததையெல்லாம் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

‘உங்கள் மனம் துடிக்கிறதோ இல்லையோ’ எங்கள் தமிழர் மனம் துடிக்கிறது..!

உங்கள் அதிகாரம் இந்த மக்களுக்காக போராடுகின்ற எங்களை சிறைப்படுத்த மட்டும்தான் காவல்துறையை பயன்படுத்தி கொள்வீர்களா..??

இந்த நாய் சேகர் மீது உங்கள் அதிகாரம் அல்லது உங்க கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறையினர் செயல்பட மாட்டார்களா..??

இவனை பிடியுங்கள் ,சட்ட நடவடிக்கை எடுங்கள் ,பிடித்து உள்ளே போடுங்கள்..!

இல்லையெனில் ஆண்மையுள்ள ஒரு தமிழரிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு நீங்கள் உட்கார்ந்து ஓரமாக வேடிக்கை பாருங்கள்..!

கண்ட கண்ட பன்னிக் கூட்டமெல்லாம் பேசுகிறது புலியிடம்..!?

-தீரன் திருமுருகன்.

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்!

அறிக்கை: கொரோனா கற்பித்த பாடத்தை உணர்ந்து உடனடியாக, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வேண்டுகோள் | நாம் தமிழர் கட்சி

https://bit.ly/33bqDKu

தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்பிற்காகவும், மேல் படிப்பிற்காகவும் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அரபு மற்றும் கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், தனிப்பட்ட சிக்கல்களிலும் பேரிடர் காலங்களிலும் விரைந்து உதவிடவும் ஒரு தனி அமைச்சகம் இதுவரையில் அமைக்கப்படாதது பெருங்குறை. அண்மைக்காலமாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி முடக்கிப்போட்டுள்ள கொரோனா நோய்த்தொற்றுப் பரவலும் அதையொட்டி வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தமிழகம் அழைத்துவருவதில் ஏற்பட்ட சிக்கல்களும் தனி அமைச்சகத்தின் தேவையை நமக்கு நன்கு உணர்த்தியுள்ளது.

இதனை முன்பே உணர்ந்துதான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வெளியிடப்பட்ட ஆட்சி செயற்பாட்டு வரைவில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் ( Ministry of Overseas Tamil Affairs) அமைக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டு அதற்கான செயற்திட்ட வரைவையும் முன்மொழிந்தோம் என்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் வெளிநாடுவாழ் மலையாளிகளுக்கான தனி அமைச்சகம் 1996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயற்பட்டு வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லும் மலையாளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளை அந்த அமைச்சகம் மேற்கொள்வதுடன், நீண்ட நாட்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பும் மலையாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல், வேலையிழந்து திரும்புகிறவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தொழில் தொடங்க கடனுதவி, அரசுப் பணிகளில் சேர பயிற்சி எனப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்கிறது. குறிப்பாக இப்பேரிடர் காலத்தில் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் உள்ள மலையாளிகளைக் கேரளாவிற்குத் திரும்ப அழைத்து வர தேவையான விமானங்களை இந்திய அரசின் உதவியுடனும் தனியார் மூலமாகவும் இயக்கி நாட்டிலேயே அதிகளவிலான மக்களைத் திரும்ப அழைத்து வந்துள்ளது.

அதே வேளையில் புலம்பெயர் நாடுகளில் கடுமையான ஊரடங்கில் சிக்குண்டு வருமானமின்றி வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்த தமிழர்கள், எல்லா உதவிகளுக்கும் இந்தியத் தூதரகத்தினை மட்டுமே எதிர்நோக்கவேண்டியிருந்தது. ஆனால் தூதரக அதிகாரிகள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருந்ததனால் தகவல் தொடர்பில் ஏற்பட்ட தொய்வால் தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை. மாதந்தோறும் மிகப் பெரிய அளவிலான அந்நிய செலவாணியைத் தம் வருவாய் மூலம் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் ஈட்டித் தரும் வெளிநாடு வாழ் தமிழர்களுடன் இக்கட்டான சூழல்களில் துணைநிற்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை.

எனவே கொரோனா நமக்குக் கற்பித்த பாடத்தை உணர்ந்து உடனடியாக, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தினை அமைக்க முன்வர வேண்டும் எனவும், தற்பொழுது வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தமிழகம் திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களைத் அரசு செலவில் மீட்டு வரவேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  • சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி

இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020”ஆரியத்துவ – தனியார்மயக்கல்வியை ஊக்குவிக்கிறது! மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது!

எந்தவொரு மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதில்லை என்ற முடிவோடுதான் நரேந்திர மோடி அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இது வெளிப்பட்டிருக்கிறது.

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, நேற்று (29.07.2020) இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.

தலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ச.க. அரசு எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவது, இவற்றிற்கேற்ப இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.

சமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ச.க. ஆட்சி முனைகிறது.

“கல்வித் தொண்டர்கள்” என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள் – அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் தீய திட்டமும் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

எனவே, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணான இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ தமிழ்த்தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது! பிற்போக்கான இந்தக் கல்விக் கொள்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது!

கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப – கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தென் மாவட்ட சாதியினரை அடியாட்களாக பயன்படுத்த முனையும் பாஜக

மதுரைக்கு தெற்கிலுள்ள தமிழகத்தின் பகுதிகளில் பெரும்பாலும் சாதிய பிரச்சனைகளை கிளப்பிவிட்ட திராவிடத்தெலுங்கர் போன்று ஆரியர்களின் நலனிற்காக கட்சி நடத்தும் பாஜகவும் கலவரம் நடத்த திட்டமிடுகிறது.

முத்துராமலிங்க தேவர் ஐயாவின் பெயரையும் காமராசர் ஐயாவின் பெயரையும் பயன்படுத்தி மறவர்களையும் நாடார்களையும் தங்களுக்கு அடியாட்களாக மாற்ற எவ்வளவு தெளிவாக திட்டமிட்டுருக்கின்றனர்?

இந்த இரு தலைவர்களும் சங்கிகளைக் குறித்து என்ன தெரிவித்திருக்கின்றனர் என்பதையும் இன்றைய தமிழ் பிள்ளைகள் கவனித்தால் நாம் முட்டாள்களாகாமல் தவிர்க்கலாம்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஆரியத்தையும் திராவிடத்தையும் சேர்த்தே எதிர்த்திருக்கிறார். இரண்டும் நம் மண்ணிற்கானதல்ல என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்.

காமராசர் ஐயா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்ததால் ஆரியத்தை எதிர்த்து சமூக நீதிக்கென்று பாடுபட்டதன் காரணம் அவரைக் கொலை செய்ய முயற்சித்தவர்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதாவது ஆரியர்கள்.

அதுபோலவே திராவிட முன்னேற்ற கழகம் காமராசரை கீழ்மைப்படுத்தியே பல செய்திகளை வெளியிட்டது.

முக்குலத்தோர் தெய்வமாக வணங்கும் முத்துராமலிங்கம் ஐயாவும், நாடார்கள் தங்கள் அடையாளமாக கருதும் காமராசர் ஐயாவும் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் எதிர்த்தே நின்றிருக்கின்றனர். எனவே இந்த தமிழ்சாதியினர் தம் குலத்தில் உதித்த தலைவர்களின் கொள்கையின் நிமித்தமேனும் ஆரியத்தையும் திராவிடத்தையும் எதிர்த்து தமிழ்தேசியத்திற்கு வலுசேர்ப்போம்.

காமராசர் மற்றும் முத்துராமலிங்கனார் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு திராவிடத்திற்கும் ஆயிரத்திற்கும் வால் பிடிக்கும் எவருமே தம் செயலில் உண்மையல்லாதோர் என்பதை அறிவோம்.

வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) – http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரகக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam