தமிழ்க்குடிகளுக்கு எதிராக இயக்கப்படுகிறதா பள்ளர் சமுதாயம்?

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய பெரும் சம்பவங்களில் மிக முக்கியமானது சாத்தான்குளம் காவல்நிலைய கொலைகள். இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றுசேர்ந்து கொரோனா காலத்திலும் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடக்கம் முதலே காவல்துறையினருக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் ஒரே தமிழ்க்குடி பள்ளர் சமுதாயம் மட்டுமே.

முதல் ஆய்வறிக்கை என்ற பெயரில் பள்ளர்களால் நடத்தப்படும் தமிழர் நடுவம் (இதை தொடங்கிய அண்ணன் செல்வா பாண்டியரை இன்றளவும் தமிழ்தேசிய உணர்வாளர்கள் நினைவுகூறுகின்றனர்) தமது சாதிய வன்மத்தை வெளிப்படையாகவே கக்கியது.

தற்போது மதுரை சிறையிலுள்ள காவல்துறை குற்றவாளிகளை கொல்வதற்கு ஒரு காவலர் முயற்சித்ததாகவும்; அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும்; முயற்சியில் தோற்றவருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் காணொலி பதிவுசெய்து பரப்பி வருகின்றனர்.

காணொலியை காண https://youtu.be/dupf29mLs-A

சிறிது நாட்களுக்கு முன்பதாக மத்திய அரசு பள்ளர்களது சாதிப்பெயரை தேவேந்திர குல வேளாளர் என்று மாற்றித்தருவதற்கு தயாராக இருப்பதாகவும், மாநில அரசு செவிசாய்க்கவில்லை என்றும் தற்போதைய தமிழக பாரதீய ஜனதாவின் தலைவரான தெலுங்கர் முருகன் கூறியதாக தகவல் பரவியது. தமிழக காங்கிரஸ் தலைவரான தெலுங்கர் அழகிரியும் இதே கருத்தை வலியுறுத்தியதாகவும் தகவல் பரவியது.

இந்த தகவல்களிலிருந்து தமிழ்ச்சமூகங்கள் (பள்ளர் உட்பட) தெரிந்துகொள்ள வேண்டியவை சில.

பள்ளர் சமுதாயத் தலைவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டியோ, பணம் கொடுத்தோ, மிரட்டியோ பாஜக தம் வசப்படுத்தியிருக்கிறது.

பாஜகவின் பேச்சை மீறி எடப்பாடியாரோ தமிழக அரசோ சிறு துரும்பைக் கூட நகர்த்தாது என்பதை தமிழகத்திலுள்ள பச்சிளங்குழந்தையும் அறியும். அப்படியிருக்க தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை கொடுக்க தயாராக இருந்தும் அதை தமிழக அரசு தடுப்பதாக கூறுவதில் எள்ளளவேனும் உண்மை இருக்குமா? இதை புரிந்துகொள்ளும் அளவில் கூட பள்ளர் சமுதாயத் தலைவர்கள் தெளிவில்லாமல் உள்ளனரா? இல்லையெனில் தமக்கான ஆதாயத்திற்காக சமுதாயத்தை வஞ்சிக்கின்றனரா?

தென் தமிழகத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு குழு மோதல்களைத் தம் அரசியல் தேவைக்காக பாமக மூலம் திமுகவும் தற்போது பாஜகவும் வளர்த்துவிடுகின்றது என்பதே தமிழ்தேசிய ஆதரவாளர்களின் கருத்தாக நிலவுகிறது. தமிழ்தேசிய ஆதரவாளர்கள் என்போர் அனைத்து தமிழ்ச்சாதிகளையும் (பள்ளர் உட்பட) உள்ளடக்கிய கூட்டத்தாரே.

தற்போதைய சூழலில் தெலுங்கர்களுக்காகவும் ஆரியர்களுக்காகவும் தத்தம் சமுதாயத்தின் நலன்களை அடகுவைப்போர் விரைவில் அதற்கான பலனைப் பெறுவர்.

சாதிய தலைவர்களின் பேச்சை நம்பி எந்தவொரு தமிழ்சாதியும் மற்ற தமிழ்ச்சாதிக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நன்று. நம் ஒற்றுமையை சிதைத்து ஆரியமும் திராவிடமும் நம்மை ஆள முயற்சித்துக் கொண்டிருப்பதை மறவாதீர்.

இவர்தான் முக்கிய குற்றவாளி?

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ்தான் முக்கிய குற்றவாளி என்றும் அவரை மேலும் ஒரு நாள் விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியதை அடுத்து அவருக்கு நாளை மாலை 5.30 மணி வரை சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

ஏனைய 4 பேருக்கும் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மதுரை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தியது.

இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு முன்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

கோரிக்கைஇந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இதையடுத்து அவர்களை காவலில் எடுக்க மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்தது.

ஜூலை 16அந்த மனு மீது கடந்த 14-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஹேமந்த் குமார் விசாரணை நடத்தினார்.

அப்போது மதுரை நீதிமன்றத்தில் 5 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 5 பேரும் ஜூலை 16-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தொந்தரவுஇந்த நிலையில் அவர்கள் 5 பேரின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் மதுரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது சிபிஐ அதிகாரிகள் யாரேனும் விசாரணை என்ற பெயரில் உணவு வழங்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தி தொந்தரவு செய்தனரா என நீதிபதி கேட்டார்.

மனு தாக்கல்அதற்கு அவர்கள் 5 பேரும் இல்லை என்றார்கள். பின்னர் தந்தை மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக காவலர் முத்துராஜை கருதுகிறோம். அவரிடம் மேலும் ஒரு நாள் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது.

முத்துராஜுக்கு மட்டும்இதையேற்ற நீதிபதி, காவலர் முத்துராஜுக்கு நாளை மாலை 5.30 மணி வரை சிபிஐ காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன் ஆகிய 4 பேரையும் வரும் 30-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். முன்னதாக முத்துராஜை அவர் பணியாற்றிய காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சிபிஐ விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

சிபிசிஐடி விசாரணையில் சிக்குகிறாரா கடம்பூரார்?

சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி குறித்த விசாரணை செய்து வரும் பிரபல பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான ஒருவர் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இக்கொலை சம்பவத்தின் பின்னனியை மூன்றாம் கோணத்தில் ஆராய்ந்து உண்மையை கண்டறிந்துள்ளது.

உண்மையில் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை அவர்களது கடையில் இருந்து வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்து வரப்படவில்லை என்பது நியூஸ் 7 வெளியிட்ட சிசிடிவி பதிவுகளின் மூலம் தெளிவாகிறது.

பெனிக்ஸ் காவல் நிலையம் சென்ற சமயம் காவல் நிலையத்தில் கடம்பூராருக்கு நெருக்கமான ஒரு அதிகாரி மற்றும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் மட்டுமே இருந்துள்ளனர். இவர்கள் தாக்கியதாலேயே பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தைக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருக்கிறது.

பெனிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட காயம் காரணமாக மயக்கமடைந்துள்ளார். அதன் பிறகே கொரோனா பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளருக்கு தகவல் சொல்லப்படுகிறது. ஆய்வாளர் நிலவரத்தை அறிந்து வர துணை ஆய்வாளரை காவல் நிலையம் அனுப்பி வைக்கிறார். காவல் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டிருந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை ஆய்வாளர் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இங்கே தான் திருப்பம்

பெனிக்ஸை ஏன் எதற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்…?? ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த பதிமூவரில் இருவர் பெனிக்ஸின் நண்பர்கள், நண்பர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி பெனிக்ஸ் பல ஆதரங்களை திரட்டியுள்ளார் அதில் முக்கியமான ஆதாரம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலின் பொழுது அதிமுகவுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த உதவிகள் மற்றும் அதிமுக பிரமுகர்களுடனான ஸ்டெர்லைட் அதிகாரிகள் நடத்திய உரையாடல்கள். மேலும் தூத்துக்குடியில் கலவரம் நடத்தியவர்கள் குறித்த தகவல்களும் பெனிக்ஸ் மற்றும் அவரது நண்பர்களிடமும் சிக்கியுள்ளது. இத்தகவல்களை பெனிக்ஸிடம் இருப்பது எப்படியாே உள்ளூர் அமைச்சரின் காதுகளுக்கு சென்றுவிட்டது.

தான் வசமாக மாட்டிக்கொண்டோம் என கலக்கம் அடைந்த அமைச்சர் கடம்பூரார் தன் ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் தன் சாதிக்கார ஆட்களை வைத்து காவல்நிலைய விவகாரங்களை வேவு பார்த்து காவல்நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல் விவகாரங்களை கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மதியம் பெனிக்ஸின் கடைக்கு சென்று ஆதாரங்களை கேட்டு மிரட்டி பேரம் பேசியுள்ளனர். தங்களுக்கு பணிந்து வராத பெனிக்ஸை அன்றிரவே காவல் நிலையத்தில் வைத்து ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் மூலம் அடித்து கொலை செய்துள்ளனர். தன்னை சித்திரவதை செய்த போதும் கலங்காத பெனிக்ஸை கண்டு ஆத்திரமடைந்த ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் பெனிக்ஸின் தந்தையை தாக்கி கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனிடையே காவல் நிலையம் வந்து பார்த்து அதிர்ந்து போன எஸ்ஐ செய்வதறியாது இன்ஸ்பெக்ட்டரிடம் தகவலை கூற, பயந்து போன இன்ஸ்பெக்ட்டர் மேலதிகாரிகளிடம் கூற, மேலதிகாரிகள் அமைச்சரிடம் கூற, அவர் உத்தரவின் பேரில் கொலை சம்பவத்திற்கு சம்பந்தமேயில்லாத காவல்துறை அதிகாரிகளை பலியாடுகளாக்கி விட்டு பெனிக்ஸ் மரணத்தை மறைக்க முயன்றிருக்கின்றனர்.

இந்நிலையில் போலீஸ் செய்த தவறை மறைப்பதாக நினைத்து இன்னும் சிக்கலை பெரிதாக்கி வருகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெனிக்ஸ் ஜெயராஜ் மற்றும் காவல்துறையினர். ஏனைய அனைவரும் கடம்பூரார் கொடுத்த காசுக்காக கொலை செய்த கூட்டு குற்றவாளிகள்.

எனது நோக்கம் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும், பெனிக்ஸ் சேகரித்த ஆதாரங்களை வைத்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் எனும் அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும்.

எப்படியும் எல்லா கோணத்திலும் விசாரணை நடக்கும் எனவே இந்த கோணத்திலும் விசாரணை நடந்தாலும்

கடம்பூராரும் அவருடைய சாதியை சேர்ந்த காவல்துறை அதிகாரியும் சிக்குவது உறுதி.

உண்மை தற்காலிகமாக உறங்கும் ஆனால் கண்டிப்பாக சாகாது.

  • ஸ்டெரிலைட் எதிர்ப்பாளர்கள் குழு

சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்!

அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

https://bit.ly/3izldyk

சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது.

தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது ஊர்க்காவல் படையினரை உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்வது போன்றவற்றையே அரசு வழிகாட்ட வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் ஒரு உட்பிரிவைக் காவல்துறையே உருவாக்கி, அவர்களுக்குக் காவலர்களுக்கு இணையான அதிகாரங்களை வழங்கி, வரம்பு மீறவும், அத்துமீறவும், சிறுவணிகர்களிடம் பணம் பறிக்கவும், காவல்நிலையத்தில் சிறைப்படுத்தப்படுபவர்களைத் தாக்கவும்கூட பயன்படுத்தி வருகிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது. அதிலும் ‘சேவா பாரதி’ எனும் மதவாத அமைப்பினரை ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பிரிவாக வைத்துச் செயல்பட்டிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய சட்டவிரோதமாகும். மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டு இயங்கும் பன்மைத்துவம் மிகுந்த சனநாயக நாட்டின் நிர்வாகப்பிரிவில் ஒரு மதவாத அமைப்பை ஊடுருவ வழிவகை செய்திருப்பது மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேடாகும்.

‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் இவர்களுக்கும், மக்களுக்குமான தொடர்பென்ன? இப்பிரிவினருக்கான அதிகார வரம்பென்ன? அவர்களின் வேலைத்திட்டங்கள் என்னென்ன? அவர்களுக்கான சீருடை என்ன? அவர்களுக்குரிய பணிநேரம் எவ்வளவு? அவர்களுக்கான ஊதியம் என்ன? அது எதனை வைத்து வழங்கப்படுகிறது? அதற்கான நிதியாதாரமென்ன? இப்பிரிவைக் காவல்துறையினரே உருவாக்கி நிர்வகித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டா? எனும் எக்கேள்விக்கும் இதுவரை விடையில்லை. ஆனால், தமிழகம் முழுமைக்கும் இப்பிரிவு காவல்துறையினரின் துணைப்பிரிவு போல அதிகாரப்பூர்வமற்று, அரசின் அனுமதியோடே இயங்கியிருப்பது மக்கள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் கொடுஞ்செயலாகும். சட்டத்திற்குப் புறம்பாக இவ்வாறு ஒரு பிரிவை காவல்துறையினரே உருவாக்கி, அவர்கள் அத்துமீறலில் ஈடுபட வழிவகை செய்திருப்பது மிகப்பெரும் சட்டவிரோதமாகும்.சாத்தான்குளம் வணிகர்களின் படுகொலைக்குப் பிறகு, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் அப்பிரிவுக்கெதிராகக் கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஒரு சில மாவட்டங்களில் தற்காலிகத்தடை விதிக்கப்பட்டிருப்பதும், அதற்கான உத்தரவையும் வாய்மொழியாகவே அறிவித்திருப்பதும் மக்களின் கோபஅலையைத் தணிப்பதற்கான ஒரு யுக்திதானே ஒழிய, அது தீர்வுக்கான வழியல்ல! இவ்வளவு கொதிநிலையிலும் சென்னையில் அப்பிரிவுக்குத் தற்காலிகத்தடை விதிக்கப்பட மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுமைக்கும் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் சட்டவிரோதப் பிரிவை மொத்தமாகக் கலைக்க உத்தரவிட்டு, அதனைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும், காவல்துறையினரின் உதவிகளுக்கு ஊர்க்காவல்படையினரைப் பயன்படுத்தவும், கூடுதலான காவலர்களை பணிக்கு நியமிக்கவுமான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வட இந்தியாவா மாறுகிறதா தமிழ்நாடு??

வட இந்தியாவில் உள்ள காவல்துறையில் RSS தீவிரவாதக்கும்பல்கள் புகுந்து, வட இந்தியா முழுவதும் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்த செய்தி.

இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையிலும் இந்த RSS கும்பல்கள் Friends of police என்றப் பெயரில் ஊடுறுவியுள்ள அதிர்ச்சி செய்திகள் தற்போது வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. இந்த (Friends of police) RSS கும்பல்கள் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையிலும் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். தற்போது அந்த RSS கும்பல்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழக அரசே!!

Friends of Police (RSS)-ஐ தடை செய்!

RSS கொலைகார கூட்டத்துடன் தமிழக காவல்துறைக்கு என்ன தொடர்பு? என்பதை மக்களுக்கு விளக்கமளி.

RSSன் சேவாபாரதி கும்பலை தமிழகத்தை விட்டு உடனே வெளியேற்று. அமைதிப்பூங்காவான தமிழகத்தை, வட இந்தியா போன்று வன்முறைக்களமாக மாற்ற முயற்சிக்காதே!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைக்கு காரணமான Friends of Police (RSS) குண்டர்கள் அனைவரையும் உடனே கைது செய்!

#BanFriendsOfPolice #BanRSS

காவல்துறை அடக்குமுறையை எதிர்க்கும் மறவர் சமுதாயம்

கள நிலவரபடி சாத்தான்குளத்தில் முதன்முதலில் போராட்டதை தொடங்கியவர்கள் தேவர் சமூகம்தான் கொலை செய்யபட்ட பெனியின் நண்பர்கள் அனைவரும் தேவர் சமூகத்து இளைஞர்கள்.

பெனி ஒரு சாதி மதம் கடந்த தமிழ் உணர்வுமிக்க இளைஞராக இருந்திருக்கிறார் தொடர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியும் சமுகவலைதளங்களில் எழுதியும் வந்துள்ளார்

கிருஸ்தவரான பெனி தன் தேவர் சமூக நண்பர்களுடன் திருப்பதி சென்று மொட்டை அடித்துள்ளார் மேலே உள்ள படத்தில் இருப்பது பெனி தன் தேவர் சமூக நண்பனுடன் திருப்பதியில் எடுத்த படம்

கள நிலவரம் இப்படி இருக்க பசும்பொன் சேனை என்ற பெயரில் சில சங்கிகள் தேவரின் பெயரை பயன்படுத்தி காவல்துறைக்கு ஆதரவாக நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர்

வேண்டும் என்றே தேவர் சமூகத்தை பொதுதமிழ் சாதிகளிடம் இருந்து தேவர் சமூகத்தை தனிமை படுத்த சங்கிகளும் எல்லா சாதியிலும் இருக்கும் காட்டி கொடுக்கும் கூட்டத்தின் ஈன செயலுக்கு தேவர் சமூகம் பொருப்பு அல்ல

நாங்கள் நீதிக்காக எவரையும் எதிர்க்கும், தமிழ்தேசிய குரலை தெலுங்கர்களுக்கு எதிராக முதலில் எழுப்பிய தேவர் சித்தரின் வாரிசுகள்

நீதியும், தர்மமும், அறமும், தமிழும், தமிழர் ஒற்றுமையும் ஓங்கிட என்றும் துணை நிற்ப்போம்..!

தமிழ்நாட்டுக் காவல்துறைக்குள் சாதி மதவாதத் தீவிரவாதிகள் ஊடுறுவல்:அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.


1993-ஆம் ஆண்டு பிரதீப் வி. பிலிப் என்கிற ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் FOP அமைப்பைத் தோற்றுவித்திருக்கிறார். காவல்துறையில் வேலைக்குச் சேர விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் 15 முதல் 20 வரையிலான FOP உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 34 FOP மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்..

FOP உறுப்பினர்கள் இரவு ரோந்து, சாலைப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு நடவடிக்கைகள், இரத்ததான முகாம்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அண்மைக் காலங்களில் கிரிமினல் வழக்கு விசாரணைகளிலும், ஊரடங்கை மீறும் வாகனங்களைப் பிடிப்பதிலும் இவர்கள் இணைத்துக்கொள்ளப் படுகின்றனர்.

சாத்தான்குளம் படுகொலையில் நான்கு FOP உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் பரவியதும், அந்த நான்கு பேரும் தங்கள் அமைப்பில் முறைப்படி பதிந்துகொண்டவர்கள் அல்ல என்று FOP நிர்வாகம் யூன் 29 அன்று முகநூல் வழியாக அறிவித்தது.

அப்படியானால் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்சை சித்திரவதை செய்த அந்த நான்கு பேர் (கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா) யார் என்கிற கேள்வி எழுகிறது.

அவர்கள் “சேவா பாரதி” அமைப்பைச் சார்ந்தவர்கள் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களில் பலர் FOP என்கிற போர்வையில் காவல்துறைக்குள் ஊடுருவி சாதிமதவாத அட்டூழியங்கள் செய்து வருகின்றனர் என்று பல சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். FOP அமைப்புக்கும், சேவா பாரதி அமைப்புக்கும் உள்ள உண்மை உறவுநிலை என்ன?

“சேவா பாரதி” ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்பு. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. தமிழகத்தில் “சேவா பாரதி” அமைப்பில் 2,500 தன்னார்வலர்கள் இருப்பதாக அவர்களின் இணையதளம் சொல்கிறது.

இவர்கள் உண்மையிலேயே காவல்துறையில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றால், இவர்களை காவல்துறைக்குள், காவல்நிலையங்களுக்குள் நுழைய விட்டவர்கள் யார்? இந்த முடிவு காவல்துறையில் யார் யாரால், எப்போது, எங்கே எடுக்கப்பட்டது? அல்லது ஆளும் அ.தி.மு.க. அரசு இந்த முடிவை எடுத்ததா? காவல்துறை அமைச்சராக இருக்கிற முதல்வருக்கு இந்தப் பிரச்சினை பற்றி ஏதாவது தெரியுமா, இல்லையா? உள்துறைச் செயலாளருக்கு ஏதாவது தெரியு்மா, இல்லையா?

அண்மையில் உ.பி.யில் “போலிஸ் மித்ரா” என்கிற பெயரில் “ஹிந்து யுவ வாகினி” எனும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் குழு ஊடுருவி, இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் அடித்து நொறுக்கியது போல, இங்கே தமிழகத்தில் “சேவா பாரதி” அமைப்பினர் களமிறங்கியிருக்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

குடியுரிமைச்சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, டில்லியில் சாதாரண உடையணிந்த பல ரவுடிகள் காவல்துறையினரோடு நின்று மக்களைத் தாக்கியதை நாடேப் பார்த்து அதிர்ந்தது. பாசிசக் குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நுழைந்து கொண்டிருப்பது நாட்டிற்கும், நமது சனநாயக அமைப்புக்கும் மாபெரும் ஆபத்தாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த FOP – சேவா பாரதி உறவு பற்றிய ஒரு பொதுவிவாதம் தமிழகத்தில் உடனடியாக நடந்தாக வேண்டும். தேவையற்ற இந்த இரண்டு அமைப்புக்களையும் தமிழக அரசு நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும்.

பச்சைத் தமிழகம் கட்சி
சுப.உதயக்குமார் அவர்களது அறிக்கையிலிருந்து…
யூலை 2, 2020.

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதருக்கும் வடஇந்தியருக்கும் என்ன தொடர்பு?

சாத்தான்குளம் படுகொலை
ஆய்வாளர் ஶ்ரீதர்
இந்த வாகனத்தில்தான்
தப்பிக்க முயன்றுள்ளார்.

வட இந்தியர் ஒருவரின் பெயரில் பதிவுபெற்ற வாகனம் இது.

யார் இந்த யூகித் ஹர்னல்? Yukith Harnal

சிறைக்குள்ளும் அதிகாரம் காட்டும் ஆய்வாளர் ஸ்ரீதர்

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். ஸ்ரீதர் சிறையில் அடைக்கப்படும் முன்பே உதவி ஆய்வாளர் ரகுகண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், ஸ்ரீதர் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டது முதலே தனது அதிகாரத்தைச் சிறை அதிகாரிகளிடம் காட்டி மிரட்டியிருக்கிறார்.
இதுகுறித்து சிறைத்துறையினர் உயரதிகாரிகளிடம் புலம்பியிருக்கிறார்கள். “ஆய்வாளர் என்ற முறையில் சிறையில் அவருக்குத் தனி செல்தான் கொடுத்தோம். ஆனால் இரவில் தனது செல்லை மூடக் கூடாது என்று முதலில் பிரச்னை செய்தார். சிறை விதிப்படி யாராக இருந்தாலும் கதவை மூடிவைக்க வேண்டும் என்று நாங்கள் எடுத்துச்சொல்லியும் அவர் கேட்க மறுத்துவிட்டார்.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மற்றும் மகனை அடித்துக்கொன்ற ஆய்வாளர் ஸ்ரீதர்

அதேபோல் சிறை காவலர்களிடம், ‘நீங்கள் எல்லாம் வார்டன்கள். நான் இன்ஸ்பெக்டர். இந்த வழக்கிலிருந்து வெளியே வந்தால் உங்களைத் தூக்கி உள்ளே வைத்து விடுவேன்’ என்று ஒருமையில் பேசியிருக்கிறார். அதோடு, ‘இந்தச் சிறையில் மூச்சு அடைக்கிறது. எனக்கே இப்படி மூச்சடைத்தால் அந்த இருவருக்கும் எப்படி மூச்சடைத்திருக்கும். நான் உங்களிடம் ஒப்படைத்து இரண்டு நாள்கள் கழித்துத்தான் அவர்கள் இறந்துள்ளார்கள். அவர்கள் இறப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு’ என்று சிறை கண்காணிப்பாளரிடம் இரவு பிரச்னை செய்துள்ளார்.

சாப்பாடு கொடுக்கச் சென்றால், ‘சூப்பிரண்டென்ட்டை எனக்குச் சாப்பாடு எடுத்துவரச் சொல்லுங்கள். அவரைவிட நான் உயரதிகாரி. நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்’ என்று நேற்று இரவு முதல் தொடர்ந்து சிறைக்காவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளார் ஸ்ரீதர். மேலும், “நான் வெளியே வந்தால் உங்கள்மீது தனிநபர் வழக்கு தாக்கல் செய்து உங்கள் வேலையைக் காலி செய்துவிடுவேன்” என்ற மிரட்ட சிறைத்துறையினர் செய்வதறியாது நின்றுள்ளார்கள்.


ஒருகட்டத்தில் இதுகுறித்து சிறைத்துறை மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. “சிறைக்குள் வந்தால் அதிகாரி என்றெல்லாம் கிடையாது. அவரும் ஒரு கைதி என்பதை அவருக்குத் தெளிவுபடுத்துங்கள்” என்று சொல்ல, அதை ஸ்ரீதரிடம் காவலர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே பாதுகாப்பில் இருந்த சிறைக்காவலர்களிடம் ஒருமையில் பேசி, “என்னை மதுரை சிறைக்கு உடனடியாக மாற்றுங்கள். இங்கு எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள்” என்று மிரட்ட, அதிர்ந்து போன அதிகாரிகள் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவலர்களையும் மதுரை சிறைக்கு மாற்ற முடிவு செய்தனர்.

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர்
சனிக்கிழமை மாலை இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் ஐந்து பேரையுமே மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். இவரது நடவடிக்கைகளைப் பார்த்த இவருடன் கைதாகியிருந்த காவலர்கள், “இவரால்தான் இப்போது நாங்கள் உள்ளே இருக்கிறோம். இப்படி எங்களையும் டார்ச்சர் பண்ணித்தான் சிறை வரை கொண்டுவந்து விட்டார்” என்று புலம்பியிருக்கிறார்கள்.

ஸ்ரீதர் வெறும் காவல் ஆய்வாளர் என்கிற போர்வையில் மட்டும் அதிகாரம் செலுத்தவில்லை. பல நேரங்களில், “என் பின்னால் யார் இருக்கிறார்கள் தெரியுமா?” என்று சிறைத்துறையினரிடம் கோபப்பட்டுள்ளார். ஆளும்கட்சியின் சக்தி வாய்ந்த நபர், இவர் பின்னால் இருக்கிறார் என்பதாலே சிறைக்குள்ளும் இவரது அதிகாரம் வேலைசெய்கிறது என்று புலம்புகிறார்கள் சிறைத்துறை காவலர்கள்.