சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய பெரும் சம்பவங்களில் மிக முக்கியமானது சாத்தான்குளம் காவல்நிலைய கொலைகள். இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றுசேர்ந்து கொரோனா காலத்திலும் எதிர்ப்பை பதிவுசெய்திருக்கின்றனர்.
இந்த கொலை சம்பவத்தில் தொடக்கம் முதலே காவல்துறையினருக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கும் ஒரே தமிழ்க்குடி பள்ளர் சமுதாயம் மட்டுமே.
முதல் ஆய்வறிக்கை என்ற பெயரில் பள்ளர்களால் நடத்தப்படும் தமிழர் நடுவம் (இதை தொடங்கிய அண்ணன் செல்வா பாண்டியரை இன்றளவும் தமிழ்தேசிய உணர்வாளர்கள் நினைவுகூறுகின்றனர்) தமது சாதிய வன்மத்தை வெளிப்படையாகவே கக்கியது.
தற்போது மதுரை சிறையிலுள்ள காவல்துறை குற்றவாளிகளை கொல்வதற்கு ஒரு காவலர் முயற்சித்ததாகவும்; அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும்; முயற்சியில் தோற்றவருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்படவில்லை என்றும் காணொலி பதிவுசெய்து பரப்பி வருகின்றனர்.
காணொலியை காண https://youtu.be/dupf29mLs-A
சிறிது நாட்களுக்கு முன்பதாக மத்திய அரசு பள்ளர்களது சாதிப்பெயரை தேவேந்திர குல வேளாளர் என்று மாற்றித்தருவதற்கு தயாராக இருப்பதாகவும், மாநில அரசு செவிசாய்க்கவில்லை என்றும் தற்போதைய தமிழக பாரதீய ஜனதாவின் தலைவரான தெலுங்கர் முருகன் கூறியதாக தகவல் பரவியது. தமிழக காங்கிரஸ் தலைவரான தெலுங்கர் அழகிரியும் இதே கருத்தை வலியுறுத்தியதாகவும் தகவல் பரவியது.
இந்த தகவல்களிலிருந்து தமிழ்ச்சமூகங்கள் (பள்ளர் உட்பட) தெரிந்துகொள்ள வேண்டியவை சில.
பள்ளர் சமுதாயத் தலைவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டியோ, பணம் கொடுத்தோ, மிரட்டியோ பாஜக தம் வசப்படுத்தியிருக்கிறது.
பாஜகவின் பேச்சை மீறி எடப்பாடியாரோ தமிழக அரசோ சிறு துரும்பைக் கூட நகர்த்தாது என்பதை தமிழகத்திலுள்ள பச்சிளங்குழந்தையும் அறியும். அப்படியிருக்க தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை கொடுக்க தயாராக இருந்தும் அதை தமிழக அரசு தடுப்பதாக கூறுவதில் எள்ளளவேனும் உண்மை இருக்குமா? இதை புரிந்துகொள்ளும் அளவில் கூட பள்ளர் சமுதாயத் தலைவர்கள் தெளிவில்லாமல் உள்ளனரா? இல்லையெனில் தமக்கான ஆதாயத்திற்காக சமுதாயத்தை வஞ்சிக்கின்றனரா?
தென் தமிழகத்தில் ஏற்பட்ட சின்னஞ்சிறு குழு மோதல்களைத் தம் அரசியல் தேவைக்காக பாமக மூலம் திமுகவும் தற்போது பாஜகவும் வளர்த்துவிடுகின்றது என்பதே தமிழ்தேசிய ஆதரவாளர்களின் கருத்தாக நிலவுகிறது. தமிழ்தேசிய ஆதரவாளர்கள் என்போர் அனைத்து தமிழ்ச்சாதிகளையும் (பள்ளர் உட்பட) உள்ளடக்கிய கூட்டத்தாரே.
தற்போதைய சூழலில் தெலுங்கர்களுக்காகவும் ஆரியர்களுக்காகவும் தத்தம் சமுதாயத்தின் நலன்களை அடகுவைப்போர் விரைவில் அதற்கான பலனைப் பெறுவர்.
சாதிய தலைவர்களின் பேச்சை நம்பி எந்தவொரு தமிழ்சாதியும் மற்ற தமிழ்ச்சாதிக்கு எதிரான மனநிலையை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது நன்று. நம் ஒற்றுமையை சிதைத்து ஆரியமும் திராவிடமும் நம்மை ஆள முயற்சித்துக் கொண்டிருப்பதை மறவாதீர்.