காவல்துறையை வைத்து திமுக செய்த அக்கிரமம்

கீழே கூறப்பட்டு இருக்கும் செய்திகள் வெறும் 2008 – 09 ஈழப்போர் உச்சத்தில் இருந்த சில மாதங்களில் நடைபெற்றது.
அதற்கு முன்பும் பின்பும் காவல்துறை மக்களை பல நிகழ்வுகளில் கொடுமைப்படுத்தி உள்ளது.

தமிழீழ படுகொலை நடந்தபோது செய்த அடக்குமுறைகளில் இருந்து சிறு புள்ளியை உங்களுக்கு அளிக்கிறேன்.

  1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் ஆதரவை வாபஸ் பெறப்போகிறோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கியதன் காரணம் என்ன?
  2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன?… சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டதேன்?…
  3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்த காரணங்கள் என்ன ?
  4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக எங்களது தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்த காரணம் என்ன…
  5. உங்கள் ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’

என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது. வேண்டுமானால் அச்சக தோழர்களை சந்தித்து உண்மை அறிந்து கொள்ள திமுக நண்பர்கள் முயற்சி எடுக்கலாம். இதை பல இடங்களில் சொல்லியும் திமுக நண்பர்கள் பதில் சொல்லாமல் சென்றதை கவனித்து இருக்கிறேன்.

  1. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது..

மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

  1. கருணா நிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்
  2. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல்
    எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர்
    திருச்சியில் கைது செய்யப்பட்டார்.
  3. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.
  4. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் .அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்
  5. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய்
    வழக்கில் அடைக்கப்பட்டார்
  6. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.
  7. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு.
    பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
  8. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்ட படம் என்னிடம் இருக்கிறது. தேவையெனில் பதிவேற்றம் செய்கிறேன்.
  9. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.
  10. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.
  11. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம்
    கொண்டுவந்து தடுத்தார்.
  12. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு
    வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.
  13. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை.மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும்,தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

  1. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று
    நடத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை.. கீற்று ரமேஸ் பலமுறை சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் 8 மணி நேரம் அலைந்ததை நான் நேரில் கண்டு இருக்கிறேன்.

( நாங்கள் எங்களது போராட்ட அனுமதிக்காக அலைந்து கொண்டிருக்கும் சுழல் இருக்கும். நிகழ்வின் முதல் நாள்

வரை அனுமதி பற்றிய விவரங்கள் கிடைக்காது)

  1. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி,மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.
  2. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர்
    தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும்,அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.
  3. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால்‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

  1. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து
    பொய் வழக்கில் சிறையில் அடைத்தது
  2. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
  3. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.
  4. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது
  5. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்பட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.
  6. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
  7. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிற ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை…
  8. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை. –க. அருணபாரதி, த.தே.பொ.க.34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் – குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.–க. அருணபாரதி,த.தே.பொ.க. இன்றைக்கு, முன்னெச்சரிக்கை கைது செய்யக் கூடாது என மனு போடுகின்ற தி.மு.க. நிர்வாகிகள், தாம் ஆட்சியிலிருந்த போது, அவர்களது தில்லி கூட்டாளிகள் தமிழகம் வரும்போதெல்லாம், அவர்களுக்கு சொறிந்து விடுவதற்காக ஈழஅகதிகளை முகாமிற்கு சென்று எத்தனை முறை முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என்பதை நாமறிவோம்..!-

-க. அருணபாரதி , த.தே.பே

ஆரியமும் திராவிடமும் தமிழர் பகையே!

கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிவிற்கு பிறகு தமிழக அரசியல் பரப்பில் கருத்தியல் தளத்தில் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. நீதி வேண்டி தன்னையே தீக்கிரையாக்கி மறைந்த மாவீரன் “முத்துக்குமார்” பெயரில் கூட எண்ணற்ற இயக்கங்கள் ஊருக்கு ஊர் முளைத்தன. அதுவரை திராவிடம் – தமிழ் தேசியம் என்ற இரண்டு சொற்களுக்கான முரண்கள் குறித்து வெகுமக்கள் தளத்தில் புரிந்து கொள்ளும் போதாமை இருந்து வந்தது.

ஆனால் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து “திராவிடம் என்பது பகை கருத்தியல். தமிழ் தேசியமே மண்ணின் மைந்தர்களான விடுதலைக் கருத்தியல்” என்கிற புரிதலை இந்த மண்ணில் உண்டாக்கினார்கள். மக்களிடையே ஏற்பட்ட புரிதல் சார்ந்தும் எழுச்சி சார்ந்தும் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.

இதில் காலப்போக்கில் பல இயக்கங்கள் மறைந்தன. தோன்றிய ‘முக்கிய இயக்கங்கள்’ சில திமுக கம்பெனியின் கிளை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில் சமரசம் ஆகாமல் திராவிடத்தை எதிர்த்தும், இந்திய தேசியக் கட்சிகளை எதிர்த்தும் தனித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்காக இந்த நொடி வரை உறுதியாக நாம் தமிழர் மட்டுமே களத்தில் நிற்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மதுரையிலே தொடங்கப்பட்டபோது அந்த மேடையிலேயே, “இனி ஒருபோதும் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை” என்கிற தனது அரசியல் நிலைப்பாட்டை சீமான் அறிவித்தார். அந்த நொடி முதல், இந்த நொடி வரை அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து துளியும் பிசகாமல் உறுதியாக இருந்து வருகிறார். அதனால் அவர் அடையும் தோல்விகளைப் பற்றியோ பின்னடைவுகளை பற்றியோ அவர் பொருட்படுத்துவதே இல்லை. சொல்லப்போனால் சமரசம் ஆகாமல் இருப்பதுதான் தனது அடையாளம் என அவர் எண்ணுகிறார். இன்னும் சுருக்கமாக சொன்னால் அதுவே அவரது வெற்றி.

ஆனால் ஒரு இன அழிவின் துயரத்திலிருந்து இயக்கங்களாக பரிணமித்த “சிலர்” எந்த திராவிடம் தமிழர்களின் அழிவிற்கு துணை போனதோ அந்த திராவிடத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு செயல்பட்டு வருவது குறித்து நமக்கு எந்தக் கருத்தும் இல்லை.
அது அவர்களது பிழைப்பு குறித்தான அவர்களது பாடு.

ஆனால் அவர்களது பிழைப்பிற்காக.. தங்கள் கொள்கையில் உறுதியாக நிற்பவர்களை பற்றி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருவதை நாம் கவனித்து வருகிறோம். பல அவதூறுகளுக்கு நாம் பதில் சொல்வதில்லை. அது நம் வேலையும் இல்லை. ஆனால் பதில் சொல்லாமல் நாம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அதையே வரலாறாக பதிவு செய்வதை எதனாலும் அனுமதிக்க முடியாது.

பத்தாண்டுகள் கழிந்து விட்டது. தமிழ் சமூகத்தின் அழிவை கடந்து போகச் சொல்லும் பத்தாம் பசலிகள் சொற்களை
வரலாறாக பதிய முடியாது. கருணாநிதி மகன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டியவர்களோடு தமிழ் சமூகத்திற்கான அரசியல் பேசுவதாக சொல்பவர்கள் இணைந்து செயல்பட முடியாது. அவ்வாறு இணைந்து செயல்படும் பட்சத்தில் அது தமிழர்களுக்கான அரசியல் அல்ல. அது கருணாநிதி குடும்பத்திற்கான சேவை.

அப்படி சேவை செய்ய துணிந்தவர்கள் அதை தாராளமாக பரவசமாக செய்துவிட்டு போகட்டும். அதில் நமக்கு துளியும் கருத்தில்லை.

உண்மையாக நிற்பவர்களை பற்றி அவதூற்றுக் கற்பிதங்கள் உருவாக்குவதற்காக கூலி வாங்கிக்கொண்டு உளறி தொலைப்பதை எல்லாம் அறிவுஜீவித்தனம் என காட்டவும் கூடாது.
அதேபோல் யாரை அறிவுஜீவிகள் என அடையாளம் காட்டுவதிலும் கவனம் தேவை.

கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் தக்க பதில் இருக்கிறது. எங்கே பதிலளித்தால் பொறாமையினாலும், பிழைப்புத்தனத்தினாலும் கேள்விகள் போன்று எழுந்து வருகிற சில்லறைத் தனங்களுக்கு எங்கே முகவரி கிடைத்து விடுமோ என்கிற கவனத்தில் பதில் சொல்லாமல் கடந்து போகிறோம்.

இதில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது.

பதில் சொல்லாமல் இருப்பதாலேயே அவதூறுகள் உண்மையாகி விடாது. அதுவே வரலாறாகவும் மாறிவிடாது.

மணி செந்தில்.

சீமானின் பேட்டியும் அதை திராவிடம் எதிர்கொண்ட விதமும்

சீமான் அவர்கள் விகடனுக்கு அளித்த நேர்காணலை பார்த்து வெளியே வந்த இரண்டு நபர்களிடம் “சீமான் என்ன பேசினார்?” என்று நிரூபர்கள் கேள்வி கேட்கின்றனர்.

முதல் நபரின் பதில்:

முதலில் அவர் திரைத்துறை பற்றி பல விசயங்கள் பேசுகிறா்.

பிறகு, என் மீது தேச துரோக வழக்கு போட்டாலும், போடாவிட்டாலும்,
நான் சிறைக்கே சென்றாலும்
நான் CAA சட்டத்திற்கு எதிராக எப்போதும் பேசி கொண்டு தான் இருப்பேன் என்கிறார்.

பிரதமர் குடியுரிமை சான்றை காட்டட்டும், பிறகு நாங்கள் காட்டுகிறோம் என்கிறார்..
CAA என்பது இசுலாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல. ஒட்டு மொத்த குடிமகன்களுக்கும் எதிரானது.
சாமியார்கள் பலருக்கும் ஒரு சான்றும் இல்லை.. அவர்களை எல்லாம் என்ன செய்ய போகிறீர்கள் என்கிறார்..

பிறகு, “குளத்தில் நாயி, பறவைகள் கூட தண்ணீர் குடிக்குது, ஆனால் என்னை (மனிதர்களை) அந்த குளத்தில் தண்ணீர் குடிக்க கூடாதுனு சொல்ரீங்களே.. எனக்கு எப்படி இந்த தேசம் மீது பற்று வரும்” என்று அம்பேத்கர் கூறிய செய்தியை அழகாக சொல்கிறார்.

மதுவை விற்று தான் அரசை நடத்த வேண்டுமா? என்று கேள்வி கேட்கிறார். இத்தனை நாள் சிரமபட்டு கடைபிடித்த சமூக இடைவெளி இந்த மது கடை திறந்து விட்டதன் மூலமாக கேளியாகி விட்டது.

அத்யாவசிய தேவைக்கு மருந்து கடைக்கு செல்லும் போது எங்களை அடித்த காவல்துறை, தற்போது மதுக்கடையில் குடிக்க வருவோர்களுக்கு பாதுகாப்பு தருகிறது என்று கூறி, அண்ணா, காந்தி ஆகியோர்கள் மது ஒழிப்பிற்கு எதிராக பேசியதை சுட்டி காட்டுகிறார்.

மதுவிற்கு மாற்றாக, மாற்று பொருளாதாரம் பற்றி கூறுகிறார்.

பிறகு, ஆமைக்கறி விசயத்தை பற்றி கேள்வி கேக்கும் போது,
“ஆமைக்கறி நான் சாப்பிட்டேன். ஆகவே சாப்பிட்டேன் என்று கூறுகிறேன். ஆமைக்கறி என்பது அங்கு சுலபமாக கிடைக்கும்” என்று கூறி, இட்லி கறி சாப்பிட்டது, உடும்பு கறி சாப்பிட்டது என்று புலிகளின் விருந்தோம்பல் பற்றி கூறுகிறார்.

பிறகு ஓட்டுக்கு காசு கொடுப்பதை பற்றி அறிஞர் அண்ணா சொன்ன செய்தியை சுட்டிகாட்டி அந்த செயலை கடுமையாக எதிர்த்து பேசுகிறார்.

பிறகு மாநில சுயாட்சி பற்றி மிக தெளிவாக எடுத்துரைக்கிறார்.

மத்திய அரசு மட்டும் அனைத்து அதிகாரத்தை வைத்துக்கொள்ளாமல், மாநில அரசு வைத்திருக்க வேண்டிய அதிகாரங்களை தெளிவாக எடுத்துறைக்கிறார்.

மாநிலவாரியாக நிதியை பகிர்ந்தளித்து அந்தந்த மாநிலமே அதை கையாளட்டும் என்று கூறுகிறார்.

ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டு கல்வி, மருத்துவத்தில் முன்னேறட்டும் என்கிறார்.

இந்தியா என்பது ஒரு நாடே கிடையாது. இது ஓர் ஒன்றியம்.
யுனேடட் ஸ்டேட் ஆப் அமெரிக்கா என்பது போல, இது யுனெட்டேட் ஸ்டேட் ஆப் இந்தியா என்கிறார்.

தமிழ்நாடு ஒரு தேசம்
ஆந்திரா ஒரு தேசம்
கேரளா ஒரு தேசம்
கர்நாடகா ஒரு தேசம்
உபி ஒரு தேசம்
மேற்கு வங்காளம் ஒரு தேசம்
குஜராத் ஒரு தேசம்
என்று இங்கே பல நாடுகள் இங்கு உள்ளன.

அத்தனை தேசிய இனங்களையும் தனி தனியாக சுயாட்சி செய்ய விடுங்கள்.

இராணுவம், பணம் அச்சிடுதல், வெளியுறவு, போக்குவரத்து போன்ற துறைகளை மட்டும் மத்திய அரசு வைத்து கொண்டு, பிற அனைத்தையும் அந்தந்த மாநிலங்களுக்கு கொடுத்து விட்டு அதிகாரத்தை பரவலாக்குங்கள் என்று, இதுவரை எடப்பாடி, ஸ்டாலின் கூட பேசாத மாநில சுயாட்சி முறையை மிக தெளிவாக எடுத்து சொல்கிறார்.

என்று அந்த முதல் நபர் சொல்லி விட்டு நகர்கிறார்.

அடுத்து,

இரண்டாவது நபர்:

அய்யோ சாமி முடியலங்க, அவர் இட்லி கறி சாப்பிட்டாராம். எங்கேயாவது இட்லி கறிய கேள்வி பட்ருகீங்களாங்க.

என் மனைவி ஒரு நாள் கூட இட்லி கறி செஞ்சு கொடுத்ததே இல்லங்க. அப்படி ஒன்னு இல்லவே இல்லங்க. பேட்டி முழுவதும் ஒரே பொய்யா பேசுராருங்க.

அது எப்டீங்க இட்லிகுள்ள கறி இருக்கும்.

ஏதோ ஆமைக்கறி திண்டாராம்.
உடும்பு கறி திண்டாராம்.
அது எப்புடிங்க ஆமை, உடும்ப கறிலாம் திண்ண முடியும்.

நான் தயிர் சதத்தை தவிர எதையிமே திண்டது இல்லைங்க.

என்று பேசிவிட்டு அவர் இடத்தை காலி செய்தார்.

ஆகவே, கீழே சீமான் பேட்டி கொடுத்த இரண்டு காணொளிகளையும் பதிவிடுகிறேன். அதை பார்த்த பிறகு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதில் நீங்கள் முதல் நபரா? இல்லை இரண்டாவது நபரா ? என்று.

Link 1: https://youtu.be/8ScKAEex56w
Link 2: https://youtu.be/5ay4sYDgk40

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

மே 22 ல் தூத்துக்குடியில் நடந்ததை
ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள். குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள், முதியவர்கள்

குடும்பத்துடன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை
நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள்.

அந்த மக்களைத்தான் வேனில்
ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சொந்த மக்களை சுட்டுக்கொன்றிருக்கிறது. அந்தக் கொலைகாரர்கள் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும், நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை

பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்திருக்கிறது.

மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய படுபாதகர்கள் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றம்

உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கொலைகாரர்களும்

சி.பி.ஐ யால் விசாரிக்கப்படவில்லை.

மாறாக, மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள்? எப்படி போராடினீர்கள்? என்று துருவித் துருவி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

இந்த கொடூர சம்பவம் உயர்அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது முகிலன் அவர்கள் வெளியிட்ட சிசிடிவி படக்காட்சிகள்
மூலம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது.

நாசகார ஸ்டெர்லைட்டை, மண்ணின் மைந்தர்கள் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது, வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது, வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது, துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது, போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள்.

போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை. இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம். அரசாங்கத்தை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம்.

அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் எம் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலைக்கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள். அந்தத் தியாகிகளை கவுரவிக்க, ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக வெளியேற்றுவதற்கு

தூத்துக்குடி மக்களுக்கு உலகில் வாழும் அத்தனை தமிழர்களும்
துணை நிற்பார்கள் என்பதை உணர்த்த நாளை மே 22 அன்று உலகம் முழுவதும் தமிழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும்

மண்ணின் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழின விரோதி கருணாநிதி

ஈழப்போரின் போதும், சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்றாத போது மட்டுமே கருணாநிதியும் அவரது குடும்பமும் தமிழினத்திற்கு துரோகம் இழைத்ததாக நம்மில் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மை அதுவல்ல. கருணாநிதி தமிழகத்தில் தலையெடுத்த நாள் தொடங்கி தமிழர்களுக்கு துரோகம் இழைத்தே வந்திருக்கிறார்.

அவரை துரோகி என்று குறிப்பிடுவதை விட விரோதி என்று குறிப்பிடுவதே சரியாகும். அவர் தெலுங்கர் என்பதை நாம் அறிந்திருந்தும் அவரை நம்பியது நம் முட்டாள்த்தனமே. அவர் தமிழினத்திற்கு விரோதமாகவே தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டிருக்கிறார்.

தமிழினப் பகைவர்களுடன் கூட்டணியும் உறவும்

பார்ப்பனர்களுக்கு எதிராக தொடங்கப்பட்டதே திராவிடம் (பார்ப்பனர்களின் பிரிவினரைக் குறிக்கும் பெயர்) என்று தமிழர்களை காலங்காலமாக ஏமாற்றி வந்திருக்கும் திராவிடத்தின் தலைமைக் குடும்பமான கருணாநிதியின் குடும்பம் பார்ப்பனர்களுடனேயே திருமண சம்மந்தம் கொண்டிருக்கின்றனர்.

கருணாநிதியின் மருமகனும் முன்னாள் இந்திய தொழிற்துறை மந்திரியும் திமுகவின் தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறன் இந்து நாளிதழின் உரிமையாளர் ராம் (தெலுங்கு பார்ப்பனர்) அவர்களின் அக்காவை திருமணம் செய்துள்ளார். பார்ப்பனர் என்பதை விட தெலுங்கு பார்ப்பனர் என்பதை உற்று நோக்க வேண்டும். தாம் தெலுங்கர்கள் என்ற உணர்வை கருணாநிதியின் குடும்பத்தினரிடம் பார்த்து தமிழர்களும் கற்றுக்கொள்ளுதல் நலம்.

ஈழப்போரின் போது நடந்தவற்றை தமிழர்களுக்கு எதிராக பதிவு செய்தது இந்து நாளிதழ் தான். இந்து ராமின் மனைவி ஒரு மலையாளி. ஈழப்போரின் போது இந்திய அரசாங்கத்தின் ஆலோசகர்களாக இருந்தது மலையாளிகளே. தெலுங்கர்களும் மலையாளிகளும் சிங்களர்களுடன் கூட்டணி அமைத்து தமிழர்களை இனப்படுகொலை செய்திருக்கின்றனர். இதில் கருணாநிதிக்கு முக்கிய பங்கு உள்ளது.

முரசாலி மாறனைத் தொடர்ந்து அவரது மகன்களும் பார்ப்பனர்களைத் தான் திருமணம் செய்துள்ளனர். பார்ப்பனர்களுக்கு எதிரான இயக்கத்தின் தலைமைக் குடும்பத்தில் அனைவருமே பார்ப்பனர்களையே மணமுடிக்கின்றனர் என்றால் அந்த இயக்கம் அதன் கொள்கையில் நிலைத்திருக்க முடியாதே!

கட்சியின் மூலக் கொள்கைகளான திராவிட நாட்டை அண்ணாதுரையே கைவிட்டுவிட்டார். பார்ப்பனர் எதிர்ப்பு என்ற போலி பிம்பத்தையும் சுக்குநூறாக்கியிருக்கிறார் கருணாநிதி. அப்படியென்றால் பணம் சம்பாதிப்பது மட்டும் தானே கட்சியின் நோக்கமாக இருக்கிறது. சம்பாதிப்பது என்று கூறுவதை விட கொள்ளையடிப்பது என்பதே சரியான பதமாகும்.

திமுகவின் அமைச்ர்களிலும் நிர்வாகிகளிலும் பெரும்பாலானோர் தமிழரல்லாதவர்களே. இது இன்று நேற்று நடந்தவையல்ல கருணாநிதி தன்னை தெலுங்கராக உணர்ந்துகொண்ட நாள்முதலே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழர்களின் தொழில்கள்

கருணாநிதியை பொறுத்தவரை தன்னுடைய குடும்பமும் தனது இனத்தார்களுமே வளரவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டவர். தமிழர்களின் தொழில்களை அவரால் இயன்றமட்டும் பறித்துக்கொண்டிருக்கிறார். பறிக்கமுடியாதவற்றை அழித்தோ சிதைத்தோ விடுவார்.

முரசொலியைத் தவிர்த்த அனைத்து ஊடகங்களும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டவையே. குங்குமம், தினகரன், கரன் நெட்வோர்க் போன்றவை மட்டுமல்ல சன் நெட்வொர்க்கே திமுகவில் அங்கம் வகித்திருந்த தமிழர் ஒருவரால் தொடங்கப்பட்டதே.

தமிழர்களின் சங்கங்கள்

ஈழத்தில் இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த சமயம் முத்துக்குமார் என்ற தமிழ் இளைஞர் இனப்படுகொலைக்கு எதிராக தன்னையே எறிவூட்டிக்கொண்டார். தன்னுடைய உடலை ஆயுதமாக ஏந்தி மக்கள் போராடி ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை நிறுத்தவேண்டும் என்பதே முத்துக்குமாரின் இறுதி நேர வேண்டுகோள்.

அவரது இறுதி வேண்டுகோளை நிறைவேற்ற பல தமிழார்வலர்கள் ஒன்றாக கூடினர். சென்னையின் முக்கிய வழித்தடமான புரசைவாக்கம் வழியாக முத்துக்குமாரின் உடலை இறுதி ஊர்வலமாக கொண்டுசெல்ல வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் சங்க தலைவரான வெள்ளையன் அவர்கள் தலைமையில் முடிவானது.

இந்த இறுதி ஊர்வலத் திட்டத்தை திருமாவளவன் மூலம் நிறுத்தினார் கருணாநிதி. இயக்குநர் ராம் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுறையில் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஊர்வலம் தமிழர்களின் உணர்வை தட்டியெழுப்பி இநப்படுகொலையை தடுத்துவிடும் என்று கருணாநிதியின் தலைவி சோனியாகாந்தி கூறியிருக்கலாம்.

இந்தப் பிரச்சனையை இதோடு விடவில்லை கருணாநிதி. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அதீத பலத்துடன் இருப்பதால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் ஊடுருவி தொழில் செய்ய முடியாத நிலையிலிருந்த வடநாட்டவர்களுக்கு (பணம் பெற்றாரோ இல்லையோ தெரியவில்லை) தோதாக வெள்ளையன் தலைமையின் கீழாக இருந்த சங்கத்தை இரண்டாகப் பிரித்து இரண்டாம் சங்கத்தை (விக்கிரமராஜா தலைமையில் இயங்கும் சங்கம்) இந்திய வியாபாரிகள் சங்கத்துடன் இணைத்து வடவர்களின் வியாபாரத்திற்கு (தமிழர்களுக்கு எதிரான) வழிவகுத்துக் கொடுத்தவர் கருணாநிதி.

அண்மையில் நடந்த சல்லிக்கட்டு போராட்டத்தின்போது இந்த இரண்டு சங்கங்களும் தமிழர்களுக்கு ஆதரவாக நின்று கோக், பெப்ஸி போன்ற அந்நிய பொருட்களுக்கு தடை கோரியதால் அந்த நிறுவனங்களின் முதலாளிகளுக்காக வேலை பார்க்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடியின் ஆணைக்கு இணங்க தமிழக பாஜக இந்த சங்கங்களை மூன்றாகப் பிரித்திருக்கிறது. மூன்றாவதாக தொடங்கப்பட்டுள்ள இந்து வியாபாரிகள் சங்கத்தில் நிர்வாகிகளாக வடவர்களே அதிகமாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி தமிழகத்தில் இயங்கும் தொழிற்சங்கங்கள் தொடங்கி அரசு ஊழியர்கள் சங்கம் வரை அனைத்து தலைமைகளையும் தெலுங்கர்கள் கைப்பற்றியிருப்பதின் பின்னணி நம்ம திராவிடக் கட்சிகள் தான்.

தமிழர்களின் பொருளாதாரம்

தமிழ்தேசியம் என்ற கொள்கை தமிழகம் முழுவதும் பரவத்தொடங்கியதுமே தமிழர்களின் பொருளாதாரத்தில் கைவைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் கீழ் தமிழகத்தின் பெருநிறுவனக்கள் மீது வருமான வரிச்சோதனை போன்றவற்றை ஏவிவிட்டவர் நம் கருணாநிதி. நிறுவனங்கள் மீது தவறான செய்திகளையும் பரப்பியிருக்கின்றனர்.

தற்போது தமிழர்களின் பொருளாதாரத்தை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பாஜக வை தன் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு எதிர்க்கமுடிந்தும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பாஜக வின் ஒற்றனான பிரசாந்த் கிஷோர் என்ற வடநாட்டுப் பார்ப்பானுக்கு 350 கோடி கொடுத்து தமிழர்களின் வாக்கைப்பெற மயற்சித்துக்கொண்டிருக்கிறார் கருணாநிதியின் மகன்.

திராவிடர் என்ற போர்வையில் வாழும் வடுகர்கள் நம் எதிரிகளான ஆரியர்களுடன் கைகோர்த்தே நம்மை அழித்துவந்திருக்கின்றனர். இதை அறியாமல் அப்பாவியாக இருப்பது தமிழனின் முட்டாள்த்தனமே. இனியாவது தமிழ்களாகிய நாம் விழித்துக்கொள்வோமா!

தமிழின அழிப்பு தினம்

நம் அன்னை தமிழ் மொழி காக்க நம் தமிழ் இனம் காக்க நம் தமிழரின் மானம் காக்க போராடிய நம் தொப்புள் கொடி ஈழ உறவுகளை இலங்கை என்ற கொலைக்கார நாடுடன் இணைந்து இந்த மனிதாபிமானம் அற்ற கொடூர உலக நாடுகளும் இணைந்து போர் தொடுத்து நம் இனச் சொந்தங்கள் 1.75,000 அப்பாவி பொது மக்களை இனப்படுகொலை செய்த நாள்.

(18.05.2020) இந்த நாளை எந்த ஒரு மானத்தமிழனும் தன் வாழ்நாளில் மறக்க முடியாது மறக்கவும் மாட்டான் இதை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே 18 நாள் இன எழுச்சி கூட்டம் அண்ணன் சீமான் அவர்கள் தலைமையில் தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு நகரத்தில் நடத்தி வந்தோம் அதில் உலகம் முழுவதும் இருந்து நம் சொந்தங்கள் கலந்து கொண்டு சுடர் ஏந்தி வீர வணக்கம் செய்து உறுதி மொழி எடுத்து கொள்வோம் ஆனால் இந்த ஆண்டு கொரனா என்ற கொள்ளை நோயால் நாடு முழுவதும் பொது முடக்கம்( ஊரடங்கு) அமலில் இருப்பதால் நம்மால் அந்த கூட்டத்தை நடத்த முடியாத நிலை எனவே நம் அண்ணன் சீமான் அவர்கள் இந்த ஆண்டு உலகம் முழுவதும் வாழும் நம் இன சொந்தங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார் அதாவது நாம் வாழும் இடத்திலேயே அவரவர் வீட்டில் இருந்தபடியே சுடர் விளக்கு ஏற்றி வீர வணக்கம் செலுத்த வேண்டுகோள் விடுத்து இருக்கிறார் எனவே மும்பையில் வாழும் உறவுகள் நாம் வாழும் வீட்டில் இன்று (18.05.2020) மாலை சரியாக மாலை 6 மணிக்கு சுடர் ஏற்றி வீர வணக்கம் செலுத்துமாறு உங்களை கேட்டு கொள்கிறேன்

அந்தோணி தமிழன்
மும்பை மாநகர ஒருங்கிணைப்பாளர்

இனத்துரோகத்தை வெளிச்சமிடுவோம் 5

2009 மே மாதம் கிட்டத்தட்ட இதே தேதிகளில் தான் இந்த சந்திப்பு.

சோனியாவும், வெளியுறவுத்துறை செயலாளரான #சிவசங்கர்மேனனும் டெல்லியில் இருந்தபடி #தமிழினஅழிப்பிற்கான கோடுகளை வரைந்துகொண்டிருக்க, #சதீஷ்நம்பியாரும், #விஜய்நம்பியாரும் கொழும்பிலேயே தங்கிக்கொண்டு #சிங்கள_ராணுவத்திற்கு சாலை அமைத்துக் கொண்டிருந்தார்கள். .

அந்த நிலையில்தான் மே மாதம் முதல் வாரத்திலேயே சிங்கள ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்தது. போர் விதிமுறைகளை மீறி!.

இங்கே #தமிழகத்தில் ‘போர் நிறுத்தம் வேண்டும்’ என்ற போராட்டமும் வெடித்தது. திமுக-வின் நிலைய வித்துவான்களும், மடைமாற்றிகளும் அதை நீருற்றி அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி ஒரு பரபரப்பான வேளையில்தான் #வெளியுறவுத்துறை அமைச்சர் #பிரனாப்முகர்ஜி இலங்கை செல்கிறார். போகும் வழியில் சென்னையில் இறங்கியவர் சி.ஐ.டி. நகர் வீட்டில் இருந்த #கலைஞர்கருணாநிதியை சந்திக்கின்றார். அது முக்கிய ஆலோசனை.

அமைச்சர்களின் பதவி ஏற்பின் போது ‘ரகசியம் காப்பு’ உறுதிமொழியை மீறி, அங்கே #கனிமொழியையும் நிறுத்திக் கொண்டார்கள். அது என்ன சதியாலோசனை என்பதை இன்றுவரை வெளியில் சொல்லவில்லை. போகட்டும்.

இந்த வெளியுறவு செயலாளர் #சிவசங்கர்மேனன் இருக்கின்றாரே, அவர் பின்னாடி ஒரு புத்தகத்தை எழுதினார். அதில், “தமிழகத்தில் உள்ள தலைவர்களிடத்தில் பேசிக்விட்டுதான் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.#செல்விஜெயலலிதா அவர்களையும், முதல்வர் #கருணாநிதியையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அதுகுறித்து பேசினேன். அவர்கள் யாரும் புலிகள் இயக்கம் இருப்பதை விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

இது அப்படியே இருக்கட்டும்.

நம் #இந்து_நாளேடு ஆசிரியரான ‘#இந்துராம்’ அவர்கள் #BBC-க்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில்..

“கருணாநிதியும் நானும் குடும்ப உறவினர்கள் என்பதைத் தாண்டி அவரும் நானும் நல்ல நண்பர்களாக இருந்தோம். என்னிடம் மனம் விட்டுப் பேசக் கூடியவராக அவர் இருந்தார். #இலங்கைப் பிரச்சினைக் குறித்து நானும் அவரும் பலமுறை விவாதித்திருக்கிறோம்!

தனித்தமிழீழத்தையும், #விடுதலைப்_புலிகளையும் வெளியே அவர் ஆதரிப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும் அவர் அதனை ஒரு போதும் மனதார விரும்பியதில்லை!

ஒருங்கிணைந்த இலங்கையில் தமிழர்கள் உரிமை பெற்று வாழ்வதையே அவர் விரும்பினார். விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் #பிரதிநிதியாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை!” என்று பேட்டியளித்திருந்தார்.

இப்போது விடயத்திற்கு வருகிறேன். #பிரனாப்முகர்ஜியிடம் அன்று கலைஞர் என்ன பேசினார்.? உடனிருந்தவர்களும், திமுக-வின் #நிலையவித்துவான்களாக இருப்பவர்களும் இதற்கு பதில் சொல்வார்களா?

இப்போது தெரிகிறதா, ஈழத்தின் தமிழின அழிப்பு #சூத்திரதாரிகள் யார் என்று?

மறக்க முடியுமா?

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3317071871638256&id=100000064280192

இனத் துரோகத்தை வெளிச்சமிடுவோம் 4

2009- இனப்படுகொலை வேகம் எடுத்திருந்த நேரம்.

டெல்லியில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி வருவார், கலைஞரை சந்திப்பார். சென்றுவிடுவார்.

வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் ரகசியமாக வருவார். சந்திப்பார். சென்றுவிடுவார்.

இன்னும் டெல்லியின் நாய் பேய் எல்லாம் வந்து சத்தித்துவிட்டுப் போகும். தலைவரும் சளைக்காமல் சந்திக்க நேரம் கொடுப்பார். இலங்கை நிலவரம் பற்றி பேசினார்கள். அம்மக்களை காப்பாற்றுவது குறித்து பேசினோம் என்பார்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 லட்சம்வரை மக்கள் இருக்கிறார்கள், காப்பாற்றுங்கள் என கதறினால், வெறும் 70, ஆயிரம்பேர்தான், அதிலும் பாதிபேர் வெளியே ராணுவத்திடம் வந்துவிட்டார்கள் என்பார் பிரனாப் முகர்சி. கலைஞர் மௌனம் காப்பார்.

களத்தில் உள்ள நிலவரத்தைச் சொல்லி ஏதாவது வழியைத் தேடலாமே என்று இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து, நாயாய் பேயாய் அலைந்துபோய் காத்திருந்தாலும் கலைஞர் கருணாநிதி சந்திக்க நேரம் கொடுத்ததே இல்லை.

இது பற்றி வைகோ அவர்களே அன்று…

“2009 ஜனவரி முதல் நாளில் இருந்தே, இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சரை சந்திக்க எவ்வளவோ முயற்சித்தும் இன்று வரையிலும் அவர்களைச் சந்திக்க கலைஞர் கருணாநிதி வாய்ப்பே தரவில்லை.

பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போலவும், ‘முயலோடும் ஓடுவேன் ஓநாயையும் விரட்டுவேன் என்பது போல முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழர்களை ஏமாற்றுகின்ற மோசடி நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.”- என்று ஆவேசப்பட்டு கூறியிருக்கின்றார்.

மறப்போமா
அந்த இனத்துரோகத்தை..

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3315390911806352&id=100000064280192

இனத் துரோகத்தை வெளிச்சமிடுவோம் 3

2009- ஈழ இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளிக்கவில்லையா? யாரும் போராடவில்லையா?

எல்லோரும் போராடினார்கள்.

வீரியம் மிக்க சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடங்கி மூத்த வழக்கறிஞர்கள் வரை போராடினார்கள். அனைத்துக் கல்லூரி மாணவர்களும் உக்கிரமாக களத்தில் நின்றார்கள். எல்லா அமைப்புகளும் போராடியது. பார்வையற்ற சகோதரர்கள்கூட வந்து நின்று அழுது போராடினார்கள். உடல் ஊனமுற்ற அமைப்பினர், திருநங்கை சகோதரிகள் என்ற போராடாத அமைப்புகள் இல்லை.

ஆனால் கலைஞர் கருணாநிதி அத்தனையையும் ஒடுக்கினார்.

அனைத்தையும் சொல்லிவைத்து திசை மாற்றினார்.

அவ்வளவையும் ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகச் செய்தார். அதற்கான வஞ்சகம் அனைத்தையும் கைகொண்டார்.

ஆதிக்கம்பெற்ற அவர்களின் குடும்ப டிவி, இப்படியான ஒரு துளி போராட்டத்தையும் ஒளிபரப்புச் செய்யவில்லை. மக்கள்முன் கொண்டுச்செல்லவில்லை. தமிழகம் அமைதியாக உள்ளது என டெல்லி சோனியாவுக்கும்-சிங்கள ராஜபக்சேவுக்கும் மறைமுகமாக சொல்ல,..

எல்லாமுமே இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஆனால், போராட்டத்தைக் கலைத்தாடும் களத்தை மட்டும் திரும்ப திரும்ப ஒளிபரப்பச் செய்தார்கள். செய்யவைத்தார் கலைஞர்.

போர் நிறுத்தம் வேண்டும் என பலம்கொண்ட மட்டும் போராடிக்கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர்களிடையே சாதி மோதலை தூண்டி, அது கல்லூரி வளாகத்திற்குள்ளாகவே கத்திக்குத்து கலவரமாக மாற வைத்தார். இப்படியாக ஒரு சம்பவம் நடக்கலாம் என தன் உளவுத்துறை மூலம் கண்டறிய முடியாதவரா என்ன? ஆனால் தடுக்க முனையவில்லை. அதுதானே அவர் திட்டம்.

ஒரு பத்தடி தூரத்திலேயே தன் சக்திவாய்ந்த காவல்துறையை, ‘அனுமதியின்றி நுழைய முடியாது’ என்ற போலி காரணத்தைக்காட்டி வேடிக்கை பார்க்க வைத்துக்கொண்டே..

மறுபுறம் தன் சக்திவாய்ந்த குடும்ப டிவியில் அதை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். சாதி மோதலை வளர்த்து, ஈழபோராட்டத்திற்கான களத்தை உடைத்து கலைப்பதுதானே கலைஞரின் திட்டம். எத்தனை வஞ்சகம்.

அதேபோன்று இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளாக தன் காவல்துறையை ஏவிவிட்டு மிகப்பெரும் கலவரத்தை நடத்தி முடித்தார் கலைஞர் கருணாநிதி.

இந்த தேசம் கண்டிராத மோதல் அது.

நீதிபதிகளும்- வழக்கறிஞர்களும்-மற்ற ஊழியர்களும் ரத்தம் சொட்டச்சொட்ட, இங்கும் அங்குமாக ஓலமிட்டபடி கதறி ஓடினார்கள். வரலாறு மறக்க முடியா அந்த சம்பவத்தையும் தன் குடும்ப டிவி உதவியால் நேரடி ஒளிபரப்புச் செய்தார்கள். போராட்டக்களத்தை அச்சுறுத்தினார். திசை மாற்றினார்.

காரணம், அதுபற்றி மட்டுமே மக்கள் பேசவேண்டும். ஈழ மண்ணின் போர்நிறுத்தம் என்ற போராட்டக் களம் பேசுபொருளாகக்கூடாது. திசைமாறி நீர்த்துப்போக வைக்க வேண்டும். கச்சிதமாக செய்து முடித்தார் கலைஞர் கருணாநிதி.

““தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி, ஈழுத்தில் ஒரு கருணா- இனத்துரோகிகள், அவர்களை வரலாறு மன்னிக்காது”- என்று வைகோ அன்று சொன்னாரே….காரணம் இப்படியான துரோகம்தான்.

மறக்க முடியுமா?

குறிப்பு- வழக்கறிஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம், மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம், முத்துக்குமார் உள்ளிட்டவர்களின் தீக்குளிப்பு போராட்டம்…ஒவ்வொன்றும் எழுதப்பட வேண்டிய ஒன்று.

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3314010775277699&id=100000064280192

இனத்துரோகத்தை வெளிச்சமிடுவோம் 2

போர் உக்கிரமடைந்திருந்த நேரம். சிக்குண்ட ஈழ மக்களுக்கு மருந்து மாத்திரை மட்டுமல்ல ஒரு வேளை உணவும் பஞ்சம் என்றான நிலை மாறியது.

பழ நெடுமாறன் தலைமையில் பலரும் நிதி பொருள் என திரட்டி மருந்தும் உணவுமாக வாங்கினார்கள். இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக தமிழ் மக்களுக்கு கொடுக்க திட்டம். அதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

அதற்காக வேண்டி வைகோ டெல்லிக்கு நேரில் சென்று மன்மோகன்சிங்கிடம் பேசினார். அழுத்தம் கொடுத்தார். பிரதமரும் தன் செயலாளரிடம் கூறி, வெளியுறவுத்துறையிடம் பேசி ஏற்பாடு செய்யுங்கள் என்றார். தாமதப்பட்டுகொண்டிருந்ததே ஒழிய நடந்தபாடில்லை. காரணம் கலைஞர் கருணாநிதி அதை தடுத்தார்.(வைகோ அப்படி கூறியிருக்கிறார்)

ஓரிரு மாதங்கள் கடந்தது. மருந்து- உணவு பொருட்கள் எல்லாமும் வீணாகிக்கொண்டிருக்கிறதே என்ற கவலை. வேறு வழியிருக்கவில்லை. இறுதியாக சாகும்வரை உண்ணாவிரதம் என போராட்டத்தில் உட்கார்ந்தார் பழ.நெடுமாறன்.

கலைஞர் போலீஸிடம் பேச,கோயம்பேட்டில் இருந்த உண்ணாவிரத பந்தல் பிய்த்து எறிந்து, அனுமதியில்லை என்றார்கள். வேறு வழியின்றி அதே பகுதியில் தனியாருக்கான கட்டிடத்தில் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் நான்காவது நாள் நீடித்தது. ஏற்கனவே இதய அறுவைசிகிச்சை செய்திருந்தவர். உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது.

அந்த கொந்தளிப்பை திசை திருப்ப- மக்களை ஏமாற்ற, ‘உண்ணாவிரத்தை நிறுத்துங்கள். பேசித் தீர்த்துக்கொள்ளலாம்’ என கடிதம் கொடுத்தனுப்புகிறார்கள்.

வைகோ, மருத்துவர் ராமதாஸ், பெ. மணியரசன் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் வற்புறுத்த கடைசியாக போராட்டத்தை கைவிட்டார் பழ.நெடுமாறன்.

ஆனால், சொன்னபடி கலைஞர் கருணாநிதி பழ.நெடுமாறனை சந்திக்கவில்லை. கலைஞருக்கு அவர் கடிதம் எழுதி கேட்டும் பதில் இல்லை. ஏமாற்றினார். போராட்டத்தை மட்டுபடுத்த பொய்சொன்னார். போராட்டத்தை திசை திருப்பினார்.

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://m.facebook.com/story.php?story_fbid=3311752935503483&id=100000064280192