தமிழர்களே! சிந்திப்பீர்!!

இந்துக்களுக்காக குரல்கொடுக்கவும், போராடவும் உள்ள ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று சங்கிகள் தொடர்ந்து மார்தட்டிவருகின்றனர்.

இப்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல், குழந்தை குட்டிகள்,மூட்டை முடிச்சிகளோடு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனரே அந்த அப்பாவி மக்கள் அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களே.

அதுவும் பாரதிய ஜனதா கட்சிக்கே பெரும்பாலும் வாக்களிக்கும் இந்துக்கள். இந்த அப்பாவி மக்களிடம் இந்துமதவெறியை விதைத்துதான் இரண்டு முறையாக மோடி பிரதமர் பதவியை அறுவடை செய்துள்ளார்.

ஆனால் இன்று அந்த மக்கள் உண்ண உணவின்றி பசியோடு பல ஆயிரம் கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர். சாலை,இரயில் விபத்துகளில் சிக்கி தினந்தோறும் பலர் உயிரிழக்கின்றனர். வாழவழியின்றி பலர் தற்கொலை செய்கின்றனர்.

இந்த அவலங்களை எல்லாம் காணும் போது கல்நெஞ்சம் கூட கரைந்து கண்ணீர் வடிக்கும். ஆனால் இந்த மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஆட்சிப்பொறுப்பிற்க்கு வந்த பாஜகவினருக்கோ எந்த வலியும் ஏற்படவில்லை. மாறாக அந்த மக்களின் அவலநிலையை ஏளனம் செய்வதுபோல பேசுகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எனும் ஆரியப் பார்ப்பாத்தி.

காரணம் அவர்களை பொறுத்தவரை இந்த மக்கள் எல்லாம் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தங்களுக்காக ஓட்டுப்போடவும், மதக்கலவரங்கள் செய்யவும் மட்டுமே பயன்படும் ஆட்டுமந்தைக் கூட்டங்கள்.

பாஜக ஆட்சிப்பொறுப்பிற்க்கு வரும்வரை மட்டுமே இந்த அப்பாவி இந்துக்களின் தயவுக்காக ஏங்கும்.ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த அப்பாவி இந்துக்களை கிள்ளுக்கீரையாக தூக்கி எறிந்துவிட்டு, ஆரியப் பார்ப்பனர்க ளுக்காகவும், மார்வாடிகளுக்காகவும் மட்டுமே ஆட்சி செய்யும்.

எனவேதான் சொல்கிறோம் பாஜக இந்து மதவாத கட்சி அல்ல அது ஆரியப் பார்ப்பன இனவாதக்கட்சி என்று. (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி . இந்த உண்மையை உணராத அப்பாவி இந்துக்கள், பாஜகவின் மதவெறி சூழ்ச்சி வலையில் சிக்கி தொடர்ந்து பலியாகிவருகின்றனர்.

தமிழர்களே! சிந்திப்பீர்!!

இவ்வாறு தங்களின் சுயலாபத்திற்க்காக, வடநாட்டில் மதத்தின் பெயரால் அரசியல் செய்து அப்பாவி இந்து மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் மதத்தின் பெயரால் தனது சூழ்ச்சி வலைகளை விரித்து வருகிறது. இந்த சூழ்ச்சி வலைகளை “தமிழர்” என்ற ஒற்றை அடையாளத்தோடு தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிழித்தெறிய வேண்டும்.

இல்லையேல் இன்று வடநாட்டவர் சாலைகளில் அனாதைகளாக திரிவதைப்போல, பேருந்துகளில் அடிபட்டு செத்துக்கிட ப்பதைப்போல நமது வருங்காலச் சந்ததியினரும் ஆவதை யாராலும் தடுக்க முடியாது!  எச்சரிக்கை!

நடிகர் விஜய்யிடம் மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்

விஜய்யிடம் அதிமுகவும் பாஜகவும் மல்லுக்கட்டுவது ஏன் என்பது புரியாத புதிர் தான். விஜய் ஒரு கிறித்தவர் என்பதால் எதிர்க்கின்றனர் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் உத்தி தான். 

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக முதற்கொண்டு விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் தமிழர் கட்சியும் விஜய் ஒரு தமிழர் என்பதால் வரவேற்கவே செய்கின்றனர்.

விஜய்யின் பட வெளியீட்டின் போது நெருக்கடி தரும் அரசு

விஜயின் படங்கள் வெளியாகும் போதோ இசை வெளியீட்டின் போதோ அரசோ பாஜகவோ எதிர்ப்பது என்பது விஜய்க்காக அவர்கள் செய்யும் மறைமுக விளம்பரமே. மக்கள் மத்தியில் விஜய் தொடர்ந்து நல்ல பெயரை சம்பாதிப்பதற்காக செய்யப்படும் யுக்தி. விஜயின் ரசிகர்கள் தாக்கப்படுவதுவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டமாகவே இருக்கவேண்டும். இது போன்ற நிகழ்வுகளால் ரசிகர்கள் இன்னும் வெறியோடு விஜய்யை விரும்புவர்.

ஒரு படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டுமென்றால் தமிழக அரசோ ஒன்றிய அரசோ அந்தப் படம் தணிக்கையில் இருக்கும் போதே செய்யலாம். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிடுவர். படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படும் போதும் கண்டும் காணாமல் இருந்துவிடுவர். படம் வெளியிடப்படும் தேதி முடிவானதற்கு பிறகே போராட்டங்கள் நடத்தப்படும்; தடை போடப்படும். இது பொதுமக்களின் மனதை விஜய்க்கு ஆதரவாக திருப்புவதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் திமுக காங்கிரஸிற்கும் பங்குண்டு.

விஜய்யின் வரவு தமிழர் அரசியலின் மீட்சியா?

ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு விஜய்யை பிரபலப்படுத்துவதென்பது தமிழர்களின் நலனுக்காக என்று நம்புவதற்கில்லை. 

இதன் பின்னணியில் நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு (திராவிட மற்றும் இந்திய ஒன்றிய கட்சிகள்) பயனில்லாமல் இருக்காது.

விஜய்யை அரசியலில் இறக்கிவிடுவதென்பது பெருகி வரும் தமிழ் தேசிய எண்ணத்தை முடக்குவதேயாகும். தமிழர் ஆள வேண்டும் என்பதெல்லாம் சில தமிழரல்லாதவர்களுக்கு மட்டுமே பிரச்சனை. ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பது ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளுக்கும் பேரடியாக இருக்கும்.

வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று தரகு பார்க்கும் கட்சிகளுக்கு வளங்களை விற்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஒரு கட்சி வளர்வது எவ்வாறு பிடிக்கும். உலகெங்கிலும் இல்லாத கள்ளிற்கான தடை தமிழகத்தில் மட்டும் இருப்பதை எதிர்ப்பதால் சாராய ஆலைகளை நடத்தும் அரசியல் கட்சிகள் அலரத்தானே செய்யும்.

தமிழன் என்ற உணர்வை எழுப்பி மேற்கண்ட கொள்கைகளை செயல்படுத்தவே நாம் தமிழர் கட்சியும் ஏனைய தமிழ் தேசிய இயக்கங்களும் விளைகின்றன. இதில் ஓரளவு வெற்றியும் ஈட்டப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளுக்கு பெரும் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இதன் காரணமாகவே திராவிடத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் செலுத்திக்கொண்டிருந்த நினைவஞ்சலிகள் சில தமிழினத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுபோன்ற காரியங்களால் மக்களின் மனதை வருங்காலத்தில் பெருமளவில் மடைமாற்ற முடியாது என்ற காரணத்தால் தமிழ்தேசிய சிந்தனை உடையவர்களின் வாக்குகளை பிரிக்கும் நோக்கில் விஜய் களம் இறக்கப்படுவார். இதன் காரணமாக தமிழ்தேசியத்தை தொடக்கத்திலேயே எதிரும் புதிருமாக சண்டையிட வைத்து திராவிடத்திடமும் ஆரியத்திடமும் தோல்வியடையச் செய்யலாம்.

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவரா?

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவர் என்று நாம் நம்ப இயலாது. விஜய்யின் படங்களில் வரும் தமிழ் தேசிய கருத்துக்கள், மக்கள் பிரச்சனைகள் பெரும்பாலும் தமிழ் தேசியம் துளிர் விட்டு வளரத்தொடங்கிய பின்னரே வரத்தொடங்கின. இது நடப்பு செய்திகளை வைத்து பணம் பண்ணும் ஒரு செயல். இதன் காரணமாகவும் சிலர் தமிழ்தேசியத்தை ஏற்றுள்ளனர்.

விஜய்யின் தந்தையின் சிவாஜி ராவிற்கு (அதாங்க ரஜினி) ஆதரவான தமிழ்நாட்டின் தண்ணீரை குடித்துவிட்டாலே தமிழன் என்ற பேச்செல்லாம் சிறிது சந்தேகத்தையே தருகிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைவதற்கு ஏதேனும் உதவினாரா என்பதெல்லாம் தெரியவில்லை. சினிமா சூழலிலேயே பிறந்து வளர்ந்து நடிகர் ஆனவருக்கு தமிழுணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. சென்னையில் இவர்கள் செல்லும் தேவாலயங்கள் தமிழில் மட்டுமே ஆராதனை நடத்துகின்றனவா என்றும் தெரியவில்லை.

ஈழத்து பெண்ணை மணந்ததால் அவருக்கு தமிழுணர்வு இருப்பதாகவும் சிலர் நினைக்கலாம். ஆனால் அவரது மனைவியின் குடும்பம் லண்டனில் பெரும் பணக்காரர்கள் என்பதாலேயே இந்த மண உறவு. இவரது மனைவியின் குடும்பம் கூட தமிழுணர்வு கொண்டதா என்பதும் அறியாத காரியமே.

வருமான வரித்துறை சோதனை

விஜய் போன்ற நடிகர்கள் ஒன்றிற்கு பத்து ஆடிட்டர்களை வேலைக்கு வைத்திருப்பர். எந்தப் பணத்தை எப்படி கணக்கு காட்டவேண்டும். எதை எப்படி மறைக்க வேண்டும், எதை எப்படி செலவு செய்ததாக காட்டவேண்டும் என்று சகலத்தையும் கட்டுக்குள் வைத்துவிடுவர். 

இதை வருமான வரித்துறையும் நன்கு அறியும். இருந்தும் ஏன் சோதனை? விஜய் நேர்மையானவர் என்று மக்களுக்கு தெரியப்படுத்த அல்லது பிடிபட்ட பணத்தை எந்தவொரு தடயமும் இல்லாமல் அள்ளிச்செல்ல. 

எது எப்படியோ இந்த வரிச்சோதனை விஜய்யை நேர்மையானவராக கட்டமைப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சிவாஜி ராவ் மீதிருந்த வழக்கை தள்ளுபடி செய்ய விஜய்க்கு நல்லவர் சான்றிதழை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பதில் உள்குத்து இருப்பது நிச்சயம்.

உதவும் மனப்பான்மை கொண்டவரா விஜய்

நடிகர் விஜயகாந்த், அஜித், சூர்யா போன்றோரின் உதவும் மனப்பான்மை ஓரளவு பரிச்சயமான அளவிற்கு விஜயின் உதவிகள் வெளியே தெரிவதில்லை. கஜா புயலின் போது ரசிகர்களின் வங்கிக்கணக்கில் பணம் அனுப்பி சேவை செய்யச் சொன்னதாக தகவல் வெளியாகியிருந்ததைத் தவிர வேறெதுவும் வெளியாகவில்லை. வெளியே தெரியாமல் உதவுவது தான் சிறந்தது என்பதால் அவர் அவ்வாறே செய்து கொண்டிருக்கலாம். 

விக்ராந்த் என்ற நடிகர் விஜய் தனக்கு அண்ணன் முறை என்றும் திரைப்படத்துறையில் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருந்தார். எங்கே தன்னை விட உயர்ந்த நிலைக்கு சென்றுவிடுவாரோ என்ற எண்ணத்தில் தான் உதவாமல் இருந்திருப்பார் என்று எண்ணலாம். 

இந்துத்துவாக்களின் எதிர்ப்பு

இந்துத்துவா என்பதே வளர்ச்சி பெற தகுதியில்லாத பொறாமையினால் ஒன்று சேர்ந்த கூட்டம் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் அறிவோம். எச் ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றோர் குரூர புத்திக்கொண்ட அறிவிலிகளாக இருந்தாலும் இவர்களை கோமாளிகளாகவே மக்கள் பார்க்கின்றனர்.

இவர்களைப் போன்றோரின் ஆதரவு தான் ஒருவரைச் சிறுமைப்படுத்துமேயொழிய எதிர்ப்பல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நடிகர் விஜய்(அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ) என்பவரை தமிழ்தேசியராக வெளியுலகிற்கு காட்டி தமிழ்தேசியத்திற்கு எதிராக களம் இறக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பது தான் உண்மை. தமிழினம் தெளிவடைந்து ஆரியம் மற்றும் திராவிடத்தின் மாயையிலிருந்து மீளுவோம். 

தமிழர்களின் சொத்துக்களை திருடும் பிராமணர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று #இந்துக்கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிறது ஆரிய இந்தியா.

முருகன் கோயில் பெயர்கள் ஸ்ரீ சுப்பிரமணி கோயில் என்ற பெயர் மாற்றப்படுகிறது. பெருமாள் கோயில்கள் ஸ்ரீவெங்கடாஜலபதிஸ்தலம் என்று பெயர் மாற்றப்படுகிறது.

மெல்ல மெல்ல தமிழர் அல்லாதவர்கள் கோயிலின் உயர் பொறுப்புகளை கைப்பற்றி ஆரியத்திற்கு கங்காணி வேலை செய்து வருகிறார்கள். அரசியல் அதிகாரம் மட்டுமல்ல மெய்யியல் அதிகாரமும் தமிழர்களிடம் இருத்தல் வேண்டும்..

இருநூறு வருடங்களுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து மொரீசியஸ் ரீயூனியன் போன்ற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் மதத்தை தமிழ் என்று தான் பதிந்து உள்ளார்கள்.

வெள்ளைக்காரன் காலத்தில் அனைத்தையும் ஆவணப்படுத்திய இடத்தில் ஆரியர்கள் இருந்ததால் அனைத்தும் இந்து மதம் என்று எழுதி மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்கள். உண்மையில் இருநூறு வருடம் முன்பு கூட தமிழர்களிடம் இந்து என்ற மதம் இல்லை.

தமிழே இனம், தமிழே மொழி ,தமிழே மதம், தமிழே அனைத்திற்குமான ஒற்றை அடையாளம். இதனை நாம் உணர்ந்து நமது மதத்தை தமிழம் என்று அடையாளப்படுத்த விட்டால் இந்தியத்தின் அரசியல் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க இயலாது.

ஈழ சைவ தமிழர்கள் இந்து என்ற மத வரையறைக்குள் இல்லை என்று இந்திய ஒன்றிய அரசே சொல்லிவிட்டது. இந்தியா சொல்வதை தான் உலகம் ஏற்கும் நாமும் அப்படியே ஏற்போம் நாங்கள் இந்து அல்ல புலம்பெயர் தேசத்தில் எங்களால் எழுப்பப்பட்ட எந்தக் கோயிலும் இந்து கோயில் அல்ல.

உலகம் முழுவதும் வாழும் ஈழ தமிழ் உறவுகள் தமிழ் ஆன்மீக கோட்பாடுகளான ஆசீவகம், சைவம், வைணவம், அய்யாவழி, வள்ளலார் வழி , திருவள்ளுவம் வழி என்று அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து தமிழம் என்ற மதத்தை தாங்கள் வாழும் நாடுகள் முழுவதும் பதிவு செய்யும் வேலையை துவங்க வேண்டும்.

சிறுதெய்வ வழிபாடு, முன்னோர் குலதெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, கருப்பு மற்றும் ஐயனார் வழிபாடு என்று எல்லா வழிபாடும் இதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தமிழ் வழியில் மந்திரம் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்.

இதை நீங்கள் செய்துவிட்டால், விரைவில் தமிழ் நாட்டு தமிழர்களும் இதில் வந்து இணைவார்கள்.

இது புது மதம் அல்ல.. தமிழர்களின் நடைமுறை மெய்யியலின் ஒற்றை பெயர் ஹிந்து அல்ல #தமிழம். மதமாக மாறாத தமிழர் மெய்யியல் அனைத்தும் தமிழம் என்று அழைக்கப்பட வேண்டும். நான் இந்து அல்ல என்று முழங்குவதைவிட எம்மதம் #தமிழம் என்று முழங்குவதே மேல் #எம்மதம்தமிழம். விரைவில் வைதீகமில்லா, வர்ணாசிரமில்லா தமிழர் மதம் #தமிழம் என்று உலகெங்கும் பதியப்படும்.

ஐந்திரம் + முருகம் + ஆசீவகம் + அருகம் + நீத்தாரியம் + சிவனியம் + மாலியம் + வள்ளுவம் = தமிழம்

(தென்புலத்தார் வழிபாடு + முன்னோர் வழிபாடு = நீத்தாரியம்)

அண்ணா பல்கலைக்கழகம் திருடப்பட்டது போல தமிழக அறநிலையத்துறையும் மத்திய அரசால் திருடப்பட்டுள்ளது. விரைவில் விழித்துக் கொண்டு. நம்மை நாமே பிரித்து கொள்ளாவிட்டால் ஆண்டவன் முதல் அனைத்தையும் இழப்பது தடுக்க இயலாத ஒன்றாகி விடும்.

மதம் என்பது தூய தமிழ் சொல்

எம் மதம் தமிழம் என்று காலத்தின் தேவையை உணர்ந்து, தொடங்கப்பட்ட முழக்கத்திற்கு, இங்கு பலர், தங்களால் இயன்ற இடையூறுகளை செய்து வருகிறார்கள்.

மதம் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை, இதனை ஏன் பயன்படுத்துகிறீர்கள், #நெறி, #கோட்பாடு, #சமயம், #வழிபாடு போன்ற சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழை அறியாத சிலர் அறிவுரை கூறுகிறார்கள். உங்கள் மதம் என்ன என்றால் சற்றும் யோசிக்காமல் இந்து என்று கூறியவர்கள் இன்று மதம் என்ற சொல்லுக்கு மாற்று சொல்ல தேடி அலைகிறார்கள்.. அனைத்து அரசு ஆவணங்களிலும் அந்த சொல் தான் இருக்கிறது, நாம் அந்த சொல்லை மாற்ற வரவில்லை, அந்த சொல்லுக்கு நீங்கள் கூறும் பதிலை மாற்ற வருகிறோம்..

இது ஒரு வகை என்றால் இன்னொரு வகை. இது என்ன காவி நிறம் என்று, எதனை எதிர்த்து இதனை தொடங்கினோமோ அந்த எதிரியின் சாயத்தை நம் மீது பூச முயல்கிறார்கள். காவி என்ன இந்துத்துவாவின் பேட்டன்ட் நிறமா?. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின குருமார்கள் அந்த நிறத்தில் தான் ஆடை அணிந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் பிராண்டிங் உலகத்தில் சுய அடையாளத்தை இழந்தவர்கள் எந்த அடையாளத்தை தூக்கினாலும் அது எதிரியின் அடையாளம் என்று அம்மணமாக வாழ விரும்புகிறார்கள். நிறத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது ஏனென்றால் ஒரே நேரத்தில் 1000 வகைகள் இருக்கும் அதற்கான Rgb, Hex, Hwb, Cmyk, Ncol மதிப்புகள் மாறும்.. எல்லா பெயிண்ட் கடையிலும் இருக்கும் பெயிண்ட் அட்டையை எடுத்து பாருங்கள்.. பத்து நிறத்தில் எது காவி என்று உங்களால் தீர்க்கமாக சொல்ல இயலாது, பத்தும் காவி என்று சொல்லிவிட்டு எதிரிக்கு தாரை வார்த்துக் கொடுத்தல் சரியும் ஆகாது..

எம் மதம் தமிழம் என்று தொடங்குவதே இன்று சரியாக இருக்கும் நாளை அது முழுவதுமாக பரவிய பிறகு எஞ்சமயம் தமிழம் என மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக்கொள்ளுங்கள் தொடக்கத்தில் முழக்கத்திற்கு மதம் என்பதே மிரட்சியாக இருக்கும்..

தேவநேய பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் இருந்து மதம் என்னும் சொல் தமிழ்ச்சொல் என்ற விளக்கம் கீழ்வருமாறு.

“எழுவகை மதமே” (நன்.11);.

“தத்த மதங்களே யமைவதாக” (திருவாச.4:52);. சிவமதம், மால் மதம் (உ.வ.);.

மதி-> மதம் = மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை, அம்மையிம்மை யும்மை நிலைகளை மதித்தறிந்து கடைபிடிக்குங் கொள்கை. மதி-> மதம் 1. பெரிதாக மதிப்பது, 2. கருத்து, 3. கொள்கை, 4. நெறிமுறை,

மத (mata);. மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தினின்று பிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள் அது தவறு. மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமே யன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது.

ஒரு பொருள் அல்லது நெறிமுறை இன்னவா றிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றது. தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட் டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.

தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லையென்று கொள்வதும், மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும்.

முழங்கு எம்மதம் தமிழம் என்று முழங்கு.

(Thanks: Mr Ingkersol)

எதிர்கால இந்துத்துவ செயல்பாட்டு அபாயத்துக்குக் கட்டியம் கூறும் குடியுரிமை திருத்தச் சட்டம்!

பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சட்டத்தை எதிர்த்து 59 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. டிசம்பர் 18- ஆம் தேதி, குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தடை விதிக்க தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்தே தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது. தடை கோரி அசாம் மனுதாரர்கள் கோரியிருந்தனர். இச்சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுமா என்று ஆராய முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அடுத்தகட்ட விசாரணை சனவரி 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் சமீபகாலப் போக்கு மக்களுக்குக் கூடுதல் திகைப்பை தந்து வருகிறது. இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியதைத் தொடர்ந்து, அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலிடம் “குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நாட்டு மக்களிடையே ஆடியோ, வீடியோ ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்குமாறு” உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதன் பொருள் என்ன? இச்சட்டம் சரியானது, மக்களுக்குத்தான் இச்சட்டம் குறித்து தெளிவு ஏற்படுத்த வேண்டும் -என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது என்ற சந்தேகம் தோன்றுகிறது.

இச்சட்டத்தின் அபாயம் குறித்து பல்வேறு கட்சிகளும், மக்களும் தெளிவான புரிதலுடன் இந்தியா முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் போராட்டத்தை அனுமதிக்க தமிழக அரசு தயாரில்லை. ஆனால் அரசின் ஒடுக்குமுறையை மீறி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய அரசியல் சட்டத்தில் இந்து மத ஆதரவு நிலைக் கூறுகள் உள்ளன என்றாலும், வெளிப்படையாக ஒரு மதத்திற்கு எதிராக அரசு செயல்படுவதற்கு அனுமதி இல்லை. இந்திய அரசியல் சட்டத்தில் எஞ்சியிருக்கும் மதசார்பற்றக் கூறுகளையும் தகர்க்கும் இந்திய அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

இந்திய அரசியல்வாதிகளை விட இளைய தலைமுறை நேர்மையாகவும், தெளிவாகவும் சிந்திக்கிறது.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் கங்குலியின் மகள் சனா கங்குலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 18 வயதேயான இப்பெண் ஒரு பிரச்சனையை எவ்வாறு சிந்திக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த சிந்தனை அரசியல் தலைவர்களிடம் இல்லாமல் இருப்பதையும் நாம் உணர வேண்டும்.

புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த் சிங் 2003 -இல் எழுதிய ‘The End of India’ என்ற நூலிலிருந்து சனா கங்கூலி சில வரிகளை மேற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார்:

” ஒவ்வொரு பாசிச ஆட்சிக்கும் செழித்து வளர சமூகங்கள் மற்றும் குழுக்கள் தேவை. இது ஒரு குழு அல்லது இரண்டிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அது ஒருபோதும் முடிவதில்லை. வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஓர் இயக்கம் தொடர்ந்து பயத்தையும், சண்டையையும் உருவாக்குவதன் மூலம் மட்டுமே தன்னை தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இன்று நாம் முஸ்லிம்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் அல்ல – என்பதால் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம்என்று நினைத்துக் கொள்வோர் ‘முட்டாள்களின் சொர்க்கத்தில்’ வாழ்கிறார்கள். சங் அமைப்பு ஏற்கனவே இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களையும், “மேற்கத்திய மயமாக்கப்பட்ட ” இளைஞர்களையும் குறிவைத்து வருகிறது. நாளை அது ஸ்கர்ட் அணியும் பெண்கள், இறைச்சி சாப்பிடுவோர், மது அருந்துவது, வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பது, கோயில்களுக்கு வருடாந்திர யாத்திரை செல்ல வேண்டாம், பற்பசை, அலோபதி மருத்துவர்கள், முத்தம் அல்லது கைகுலுக்கல் போன்றவற்றின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்னால் போதும் என்பார்கள்.
யாரும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நம்பினால், இதை நாம் உணர வேண்டும்” என்ற வரிகளை மேற்கோள் காட்டி இருக்கிறார். நாடு முழுவதும் ‘தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) கணக்கெடுப்பை நடத்தப் போவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இதன்படி அனைத்து மாநிலங்களிலும் உள்ள முஸ்லிம் அகதிகளும், குடியேறிய முஸ்லிம்களும் மட்டும் வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் பெருவாரியாக முதலாளிகளாகக் குடியேறியிருக்கும் மார்வாரிகள், குஜராத்திகள் மற்றும் தொழிலாளர்களாகக் குடியேறியிருக்கும் பீகாரிகள், பிற வட மாநிலத்தவர்கள், இன்று எண்ணிக்கையில் ஒரு கோடி பேர் ஆகியுள்ளனர். தமிழகத்தில் ஏழு பேருக்கு ஒருவர் வடமாநில வந்தேறி. அவர்கள் தமிழகத்தின் நிரந்தரக் குடிகளாக மாறி, தமிழகத்தின் அரசியல் வாழ்வை தீர்மானிக்கும் சக்தியாக மாற உள்ளனர். அவர்கள் நிரந்தரக் குடிகளாக மாறுவதன் அடையாளமாக மார்வாடிகளின் கோயில்களும், சாய்பாபா கோயில்களும் தமிழகம் முழுவதும் முளைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் அரசியல் சூழல் தலைகீழாகப் புரட்டிப் போடப்படும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கிறது.
அசாமைப் பொறுத்தவரை வங்காளதேசம் உருவானபிறகு ஏராளமான வங்கதேசத்தவர் அசாமில் குடியேறி வாக்காளர்களாக மாறிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும், அச்சமும் எழுந்தபிறகு போராட்டங்கள் வெடித்து, இந்திய அரசுக்கும் அசாமியருக்கும் 1985 -ஆம் ஆண்டு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, வங்காளதேச விடுதலை நாளை எல்லையாக வைத்து, 1971 மார்ச் 24 -க்குப் பிறகு அசாமில் குடியேறியவர்கள் அந்நியர்கள் எனக் கருதப்படுவார்கள் என ஏற்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பின்படி, இறுதியாக 19 இலட்சம் பேர் குடியேறிகள் என்று காணப்பட்டது. இதில் 12 இலட்சம் பேர் இந்துக்கள் என்பனுக் கண்ட பா.ஜ.க. அரசு அவர்களை அசாயின் நிரந்தரக் குடிகளாக்க குடியுரிமைச்சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இது எதிர்கால இந்துத்துவப் பேரரசைப் படைக்க அவசியமானது. தமிழகத்தைப் பொறுத்தவரை, வட மாநில இந்தியக் குடியான்கள் பெருவாரியாகக் குடியேறி பொருளாதாரக் கேந்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர். இ பாலஸ்தீனத்தை யூதர்கள் கைப்பற்றியதை ஒத்தது.
இந்நிலையில் தமிழக பொருளாதாரத்தையும், அரசு அலுவல் பொறுப்புகளையும் வடமாநிலத்தவர் கைப்பற்றி வரும் நிலையில தமிழக அரசு வேலைவாய்ப்புகளையும் வெளியாருக்குத் திறந்துவிட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழக அரசுப்பணிகளில் அமரும் வெளிமாநிலத்தவர், இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்று கொண்டால் போதும் என்று விதிமுறை செய்திருக்கிறது. அபாயத்தை அனைவரும் உணர வேண்டிய தருணம் இது. தமிழக அரசியல் கட்சிகள் 1956இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் வந்தேறிய இந்திய குடிமகன்களிடமிருந்து தமிழகத்தைக் காக்க முயற்சிகளைத் தொடங்க வேண்டும். இன்றையச் சூழலில், வடமாநிலத்தவர் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறி வருகின்றனர் என்பதை தமிழக அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்துத்துவவாதிகளின் எதிர்கால அரசியல் வெற்றிகளை உறுதி செய்யும் நோக்கத்துடன், இந்துமத வரையறைக்குள் வருகின்ற பெருவாரி மக்களைத் திட்டமிட்டு, பல மாநிலங்களில் இந்துத்துவ பாஜ.க.அரசு குடியேற்றி வருகிறது என்பதை உணரவேண்டும். இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த முதலில் கோளாறு மிக்க இக்குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறச் செய்ய வேண்டும்.

-பேராசிரியர் த.செயராமன்
வரலாற்றுத்துறை

சபரிமலை அரசியல்

கிராப் வெட்டி இருக்குற அக்கா பெயர் திருப்தி தேசாய். இவர்தான், தற்போது
சபரிமலைக்கு சென்று
தரிசனம் செய்யப்போவதாக
அறிவித்து உள்ளவர் என்பது
பலருக்கு தெரியும்.

அவருக்குப்பின்னால் சடை வளர்த்து இருக்கும் அண்ணன் பெயர்தான்
ராகுல் ஈஸ்வர். இவர்தான் சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் பாஜக அணிக்கு தலைமை தாங்குபவர்.

ஆக, இவர்கள் இருவருமே RSS சிந்தாந்தத்தின் மூலம் நெருங்கிய நண்பர்கள். மொத்தத்தில்,
ஐயப்பனை வைத்து இவர்கள் ஓட்டும் படத்தில் கதாநாயகனும் பாஜக தான்
வில்லனும் பாஜக தான்.

பித்தலாட்டக்காரன்களின் கடைசிப் புகலிடம் தேசப்பற்று !

இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தேசப்பற்று பற்றி எரிகிறது. ‘பாரத் மாதாகீ ஜே’ என்று எல்லா பக்கமும் கத்துகின்றனர். இந்த நகர்வு முழுவதும் ஆர்எஸ்எஸ் கைங்கரியம் என்பதை அரசியல் விமர்சகர்கள் நன்கு அறிவர். ஆனால் பாமர மக்கள்.. பாவம்.. இல்லாத பாரத மாதாவிற்கு கதறுகின்றனர். புல்வாமா தாக்குதல் குறித்து நான் பேசவிரும்பவில்லை. ஆனால் இதில் ஆர்எஸ்எஸ் என்ன சித்து வேலைகளை எல்லாம் செய்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.

இந்தியா முழுவதும் கடந்த 100 ஆண்டுகளாக என்னவெல்லாம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் ஆர்எஸ்எஸ் எவ்வளவு நுட்பமாக தனது ஆக்டோபஸ் வலைகளைப் பின்னத் தொடங்கியது என்பதை உணரலாம்.

காங்கிரஸ் கட்சி முதன் முதலாக இந்தியா முழுவதும் ஆண்டு கொண்டு இருந்த போது, பிராமண எதிர்ப்பு அரசியல் முதன் முதலாக தமிழ்நாட்டில் மட்டுமே பேரெழுச்சியோடு நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் அதிகார பீடத்தில் இருந்து பார்ப்பனரை வீழ்த்தியதில் திராவிட இயக்கங்களுக்கு தொடர்புண்டு என்பதை மறுக்க இயலாது. அதேசமயத்தில், அதற்கு சற்றும் குறைவில்லாது ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் இன்று 2000 கிராமங்களில் ஊடுருவியதற்கும் அதே இயக்கங்கள் காரணமாகவே மாறிவிட்டன.

இன்று நேற்றல்ல, ஆங்கிலேயர்களின் காலம் தொட்டே, ஆர்எஸ்எஸ்-இந்துத்துவ-பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் தான் காங்கிரசும் இருக்கிறது; பாஜகவும் இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் உயர்சாதியினர்க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை காங்கிரஸ் பாராளுமன்றத்தில் எதிர்க்கவில்லை என்பதே.

இல்லாத இந்திய தேசியத்திற்கு எதிராக எவர் ஒருவர் பேசினாலும், அவரை தேசத்துரோகி, அந்நிய சக்தி, ஆன்டி இந்தியன் என்பது ஒரு திட்டமிட்ட உளவியல் யுத்தம். இந்திய சட்டத்தால் இந்திய இறையாண்மை குறித்து ஒரு தனிமனிதன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு தண்டனை வழங்க முடியாது. ஒருவன் ஒரு நாட்டின் குடிமகனாக இருக்க விரும்புவதும், இல்லாமல் வேறு நாட்டிற்கு வெளியேறி, அந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, அந்த நாட்டின் குடிமகனாக மாறுவதும் ஓர் எளிய நடைமுறைதான். அதுவொன்றும் பெரும் குற்றமல்ல.

ஆனால் இதை எல்லாம் தெரிந்தும் ஒரு பொது உளவியலாக ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் பயிற்சி பெற்ற அத்தனைப் பேரும் ஆங்கிலேயர் காலம் தொட்டு தேசத்துரோகி என்ற பதத்தை உண்மையான மண் மீட்பு போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். இந்தியவிற்கு இது பழைய வார்த்தை என்றாலும் தமிழ்நாட்டில் இன்று பரவலாக இந்த வார்த்தையைக் கொண்டுவந்து திணிக்கத் தொடங்கிவிட்டனர் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள். அவர்களுக்கு இந்த திடீர் திமிரை வழங்கியது திமுக, அதிமுக கட்சிகள்தான்.

திமுக, அதிமுக கட்சிகளின் காலத்தில் தான் விவேகானந்தர் பாறை என்று பொய் பிரச்சாரம் செய்து, கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் மணிமண்டபத்தை நிறுவினர் ஆர்எஸ்எஸ் சித்பவன் பார்ப்பன தீவிரவாதிகள். ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் சதி திட்டம் தீட்டலாம் என்பதை இன்றும் முடிவு செய்கின்ற முதல் இரண்டு இடங்கள், ஒன்று விவேகானந்தர் பாறை மற்றொன்று காஞ்சி சங்கராச்சாரியார் மடம். காஞ்சி மடாதிபதிகளின் கட்டுப்பாட்டில் பல கோயில்களும் நிலங்களும் பறிபோனதும் இதே திராவிட ஆட்சிகளின் காலத்தில் தான்.

அதிலும் மிக மோசமாக ஆர்எஸ்எஸ் வளர அச்சாரமிட்டுக் கொடுத்தவர் கருணாநிதிதான். 2001-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆர்எஸ்எஸ்-காஞ்சி மடாதிபதிகள் நடத்திய கிராம பூசாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பகிரங்கமாக ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் வேரூண்டுவதற்கு முதல் காரணமானார் கருணாநிதி. அதுவரை மண்டைக்காடு கலவரம் போன்ற சின்னச் சின்னக் கலவரங்கள் மூலமாக மட்டுமே தங்களை பாதுகாத்து வந்த ஆர்எஸ்எஸ் திமுக, அதிமுகவுடன் மாறிமாறி தேர்தல் கூட்டணி வைத்தப் பிறகே மிக மூர்க்கமாக அமைப்பு ரீதியாக வளரத் தொடங்கினர். அவர்களின் வளர்ச்சியும் தேசத்துரோகி, அந்நிய சக்தி போன்ற வார்த்தைகளின் பயன்பாடும் ஒருசேர நிகழ்பவைதான்.

இந்த வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள, அதேசமயத்தில் நாட்டில் நடக்கும் அவலங்களை சுட்டிக்காட்டும், ஆரிய-பார்ப்பனிய-இந்துத்துவ-பனியாக்களின் முகத்திரையைக் கிழிப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதன் மூலமாக அவர்களை வெகுசன மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த முயற்சிக்கின்றனர். வட இந்தியாவில் ஒரளவு அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். இன்று அதே பாணியில் தமிழ்நாட்டிலும் கால் பதிக்கத் துடிக்கின்றனர்.

இந்துத்துவ எனும் காட்டேரி பூதம் தமிழ்நாட்டின் மீது மையம் கொள்ளத் தொடங்கிவிட்டது. கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களையே வளைத்து போட்டு, அமைப்பை கிராமங்களில் கொண்டு சென்றவர்கள், எடப்பாடி, ஸ்டாலினை ஊதிவிட முடியும் என்று நம்புகின்றனர். இந்த இடத்தில் தமிழக மக்கள் மிக நிதானமாக கவனித்து, பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, ஆலயம் மீட்பு கமிட்டி, சிவசேனா, பிள்ளையாருக்கு சிலை வைத்தல் போன்ற எந்த பித்தலாட்டம் வழியாக இந்துத்துவ தீவிரவாதிகள் தமிழ்நாட்டில் நுழைவதாக இருந்தாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு தேசிய இனங்களின் கூட்டாட்சி நாடு. அதனை இந்துக்களின் நாடாக கட்டமைக்க நடக்கும் சதிகளில் சிக்காது, அவரவர் இனங்களின் தேசியங்களை பாதுகாக்க அனைவரும் திட்டமிட வேண்டும்…

மற்றப்படி, ஆன்டி இந்தியன், தேசத்துரோகி என்கின்ற வார்த்தை எல்லாம் டேஸ்க்கு சமமானதாக கருதி தூக்கிப்போட்டு போய்கிட்டே இருக்கனும்… ஏனெனில்…

பித்தலாட்டக்காரன்களின் கடைசிப் புகலிடம் தான்… தேசப்பற்று…

-பேராசிரியர் ஆ.அருளினியன்

2002ம் ஆண்டு குஜராத்தில் மோடியால் நடத்தப்பட்ட மதக்கலவரமே பாஜக பிரதமராக்கியதற்கு காரணம்

குஜராத் படுகொலைகள் பற்றிய
ஹர்ஸ் மந்தேர், IAS அதிகாரியின் சாட்சியம்!

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது.

மீண்டும் இது போன்றதொரு கலவரத்திற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா முகத்திரையை தெளிவுபடுத்த , மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன்.

வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்… இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை.

வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும் உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்து என்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள் மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.

புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன்.

ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள்.

அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள்.

இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்து ஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.

3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை.

”எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்” என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள்.

அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.

குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள்.

கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;

சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது.

திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும்.

வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன.

கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்.

இந்து – முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன.

இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.

பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்.

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டு… அதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது.

இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள்.

பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.

கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்.

அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை.

சுயேச்சையாகவும், நடுநிலையாகவும், அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது.

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால் இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது.

அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்.

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்!

கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம்.

இதோ இன்னொரு பெருத்த அவமானம்!

பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம் இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

“முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான் கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லை” என்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை.

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது.

அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சாஇந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 16ஆண்டுகள் முடிந்துவிட்டன.

#கோத்ரா_ரயில்_எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

மறந்து கொண்டிருப்பது மக்களின் இயல்பு. நினைவு படுத்திக் கொண்டிருப்பது நமது கடமை.

தமிழகத்தில் இதுவரை ஆயிரம் தடவைக்கு மேல் இந்துத்வா காவி பயங்கரவாதிகள் “குஜராத்தை போல்” “குஜராத்தை போல்” என அச்சுறுத்தி வந்திருப்பதுடன் அதையே தொடர்கிறார்கள்.

ஒற்றுமைக்கான சிலையா?

வல்லபாய் பட்டேலுக்குச் சிலை அமைக்கப்பட்டது குறித்து பேராசிரியர் த. செயராமன் கருத்து:

வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயர சிலை அமைத்திருக்கிறார்கள். மக்களின் எதிர்ப்பையும், பழங்குடியினத் தலைவர்களின் கண்டனத்தை மீறி அமைத்திருக்கிறார்கள். வல்லபாய் பட்டேல் பற்றி சரியாகத் தெரியாத பலர் “ஆஹா, ஓஹோ” என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத்தில் பிறந்த, “இந்தியாவின் தேசபிதா” என்று போற்றப்படும் காந்தியாருக்கு வைக்காத பிரமாண்ட சிலையை வல்லபாய் பட்டேலுக்கு வைப்பானேன்? பட்டேல் காந்தியாரைவிடப் பெரிய ஆளா?

வைக்கப்பட்ட சிலை “ஒற்றுமைக்கான சிலை” என்கிறார்கள். இது ஒற்றுமையின் அடையாளமல்ல. இந்தியாவின் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்டி, இந்துத்துவ நோக்கில் ஒற்றைத் தன்மையை உருவாக்க நினைத்தவர்களுக்கு உதவியாக நின்ற, இந்து மதவாத சிந்தனை கொண்ட வல்லபாய் பட்டேலுக்கு சிலை வடிவில் இப்போது நன்றிக்கடன் செலுத்துகிறார்கள்.

வல்லாதிக்கவாதிகளின் தேவைக்கு ஏற்ப வரலாறு எப்போதுமே திரிக்கப்பட்டு வருகிறது. அப்படி, வரலாற்றைத் திரித்து வல்லபாய் பட்டேலைப் பற்றி நாட்டு மக்களிடம் ஒரு பிம்பத்தை நீண்டகாலமாக ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், வல்லபாய் பட்டேல் அப்படி இருக்கவில்லை. இந்தியாவை இந்து மதத்திற்கான தேசமாக வடிவமைக்க, இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் சிறுபான்மை மதங்களை ஓடுக்கி, இந்தியாவின் பன்மைத் தன்மையை அழித்தொழிக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கம் காட்டியவர்.

மேற்கத்திய பாணியில் சனநாயக இந்தியாவைப் படைக்க விரும்பிய முதல் பிரதமரான சவகர்லால் நேருவுக்கு பெரிய குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தவர். வல்லபாய் பட்டேல்தான் அன்றைய துணை பிரதமரும், உள்துறை அமைச்சகரும். காந்தியாரைக் கொல்லப் பல முயற்சிகள் நடைபெற்றப் பிறகும், உரிய பாதுகாப்பு அளிக்கப்படாமல் பார்த்துக் கொண்டவர். காந்தியார் கொலை வழக்கில், தலைமை வழக்கறிஞராக வல்லபாய் பட்டேலே நேரில் வழக்கு நடத்தினார். காந்தி கொலையில் குற்றவாளிகள் பற்றிய மிக முக்கியத் தகவல்களை பம்பாய் போலீஸ் உதவிக் கமிஷனர் ஜம்ஷித் நாகர்வாலா என்ற பார்சி அதிகாரி வல்லபாய் பட்டேலிடம் ஒப்படைத்தார். காந்தியார் கொலைச்சதியின் மையப்புள்ளி சாவர்க்கர்தான் என்பதை நிருபிக்கும் சான்றுகள் அவை. இவற்றை பட்டேல் நீதிமன்றத்தில் பேசவில்லை; மறைந்தார். காந்தியார் கொலைச்சதியின் முக்கியத தலைவர்களையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் பாதுகாத்தார். கொலை செய்த கோட்சேக்கும் ஆர்.எஸ்.எஸ் க்கும் சம்பந்தமில்லை என்று வழக்கை முடித்தார்கள்.

பட்டேலைத் தவிர வேறு எவரும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் சாவர்க்கர் தப்பியிருக்க முடியாது. ஆனால், கொலைச் சதியிலிருந்து காந்தி தப்பித்திருப்பார்.

1947-இல், இந்து – முஸ்லிம் கலவரத்தின் போது இருதரப்பிலும் கற்பழிப்புகளும், கொலைகளும் நடந்தேறின. முஸ்லிம் பெண்களை இந்து, சீக்கிய வன்முறையாளர்கள் அள்ளிச் சென்றபோது “இது நடக்க வேண்டியதுதான்” என்றவர் பட்டேல். 1947 ஜுலை மாதம், காந்தியும் நேருவும் பஞ்சாப் எல்லையில் கண்ணீர் விடும் அகதிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, பட்டேல் முஸ்லீம்களை டெல்லியிலிருந்து விரட்டுவதில் குறியாக இருந்தார்.

இந்தியாவில் உள்ள பல மொழி இனங்கள், அவற்றின் தனி அடையாளங்கள், அவர்களின் தனித்தனித் தாயகங்கள் ஆகியவற்றை தகர்த்து எறிந்துவிட்டு ஒற்றை மத அடையாளத்தோடு கூடிய இந்துராஷ்டிரத்தை உருவாக்க விரும்பியவர்களோடு ஒத்த சிந்தனை பட்டேலுக்கு இருந்தது. இந்துராஷ்டிர எண்ணம் இல்லாத தலைவர்களுக்கும் ஒரு வலிய இந்தியாவை படைக்கும் நோக்கம் இருந்தது.

இந்தியாவை பட்டேல்தான் ஒருங்கிணைத்ததாகப் பாடம் படிக்கிறார்கள். பட்டேல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே 565 மன்னர் நாடுகளில் மூன்றைத் தவிர (ஜுனகத், ஹைதராபாத், காஷ்மீர்) மீதியை மவுண்ட் பேட்டன் பிரபுவும், உள்துறைச் செயலர் V.P. மேனனும் ஒருங்கிணைத்து விட்டனர்.

1. ஜுனகத்தில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
2. ஹைதராபாத்தில் ராணுவ நடவடிக்கையைப் பட்டேல் பரிந்துரைத்தாலும் நேரு ஏற்கவில்லை. ஆனால், நிசாம் படையினர் ஒரு கிறித்துவ கான்வெண்ட்டில் 70 வயது அருட்சகோதரியை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்திய செய்தி வந்ததும், ஆத்திரமடைந்த நேரு கத்தினார்; இராணுவ நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தார். கவர்னர் ஜெனரல் இராஜாஜி நடவடிக்கை எடுத்தார்.
3. காஷ்மீர் மீது இராணுவ நடவடிக்கை எடுத்திருந்தால், ஐக்கிய நாடுகளின் முன்னெடுப்பில் காஷ்மீர் எந்த நாட்டுடன் இருப்பது என்பது பற்றி உடனடியாகக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கும். எனவே, நேரு அதைத் தவிர்த்தார். பாகிஸ்தானியப் படைகள் மற்றும் பழங்குடிப் படைகளிடமிருந்து காக்கும் வகையில், காஷ்மீருக்குப் படை அனுப்பியதற்கும் பட்டேலுக்கும் தொடர்பு இல்லை. வரலாறு இப்படிப் போகிறது. இதில் எந்த இடத்தில், வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைத்தார்?

இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்ற முறையில் படுதோல்வி அடைந்தவர். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட பெருங்கலவரத்தைக் கையாளத் தெரியாமல், நாட்டை மீண்டும் மவுண்ட் பேட்டனிடம் ஒப்படைத்து விட்டு, அவர் எதிரில் கைகட்டி நின்றார்கள் நேருவும், வல்லபாய் பட்டேலும். நிலைமையை சமாளித்தவர் மவுண்ட் பேட்டன் பிரபுதான். இதுதான் வரலாறு. தேவையானால், சமகாலத்தியப் முதன்மைச் சான்றுகளை ஊன்றிப் படித்துக் கொள்ளலாம். பட்டேலை “இந்தியாவை ஒருங்கிணைத்தவர், அவர் இந்தியாவின் பிஸ்மார்க்” என்று அழைப்பவர்களை ‘வரலாற்றுத் தற்குறிகள்’ என்று குறிப்பிடுகிறார் அரசியல் சட்ட நிபுணரும், வழக்கறிஞரும், பத்திரிகையாளருமான ஏ.ஐி.நூரானி.

காந்தி கொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். –ஐ பட்டேல் தடை செய்தார் என்று காங்கிரசுக்காரர்கள் பெருமை பேசுவார்கள். வேறு வழியில்லாமல் தடை செய்த வல்லபாய் பட்டேல், உடனேயே 1949 ஜுலை 12 அன்று அத்தடையை நீக்கினார்.

இந்து – முஸ்லீம் ஒற்றுமை பேசிய காந்தியாரிடமிருந்து, பட்டேல் முரண்பட்டார்; மதச்சார்பின்மை பேசிய நேருவுக்கு அமைச்சரவைக்குள்ளேயே இருந்து கொண்டு இந்துத்துவக் குடைச்சலைக் கொடுத்துக்கொணடிருந்தார்.

2002 – இல் இஸ்லாமியர்களைப் படுகொலை செய்த நரேந்திர மோடிக்கு முன்மாதிரி சர்தார் பட்டேல் என்பது சரியானது. இந்து மத வெறியாளர்களின் முன்னோடி சாவர்க்கரும், கோல்வால்க்கரும் மட்டுமல்ல, ஆட்சியதிகாரத்தில் இருந்து கொண்டு இந்துமதவாதியாகச் செயல்படக் கற்றுக் கொடுத்த வல்லபாய் பட்டேலும் தான்.

“அடடே, அவர் காங்கிரசுகாரர் ஆச்சே” என்பார்கள் சிலர். ஜனசங்கத்தை (இன்றைய பாஜக) உருவாக்கிய சியாமா பிரசாத் சாட்டர்ஜி கூட காங்கிரசில் தான் இருந்தார்.

– பேராசிரியர் த. செயராமன்,
வரலாற்றுத் துறை.

விரிவான செய்திகளுக்கு பேராசிரியர் த. செயராமன் எழுதியுள்ள ‘வல்லபாய் பட்டேல் என்னும் மதவாத அரசியல் குறியீடு’ கட்டுரையைப் படித்துக் கொள்ளலாம். (தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2014 சனவரி 16-31 மற்றும் பிப்ரவரி 1-15 இதழ்கள்)