சீன ஊடுருவலால் இந்தியாவிற்கு ஆபத்து என அன்றே கூறிய மேதகுவே பிரபாகரன்

எங்கள் தலைவர் சிந்தித்துச் செயற்பட்ட ஒரு சில நடவடிக்கைகளை வெளிநாடுகளும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளும் தற்போது உணரத் தலைப்பட்டுள்ளன. முக்கியமாக சீனா தொடர்பான அவரின் நிலைப்பாடு வெளிநாடுகளின் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.

சீனா சிறிலங்காவுக்குள் வர்த்தகத்தை முன்நிறுத்தி பிரவேசிப்பதை தலைவர் விரும்பவில்லை. நாளடைவில் சீனாவின் நடவடிக்கையினால் இந்திய மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அதேவேளையில் சிறிலங்காவிலும் தமிழீழத்திலும் வாழும் மக்களுக்கும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என அவர் கருதினார். அதனை வெளிப்படையாக அவர் தெரிவிக்காவிட்டாலும், சீனாவின் ஊடுருவல் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வந்ததை சீனா வெளியிட்டிருந்தது. 2004ஆம் ஆண்டிற்கும், 2005ஆம் ஆண்டிற்கும் இடையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணி அம்பாந்தோட்டைக் கடலில் இரண்டு தாக்குதல்களை நடத்தி இருந்தது.

அதன்போது, சீன அதிகாரிகளின் சொகுசுப் படகுகளே தாக்கியழிக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் துறைமுகம் கட்டுவது தொடர்பாகவும், சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தவே சீன அதிகாரிகள் அங்கு வந்திருந்தனர். இதற்கு தமிழர்களின் எதிர்ப்பபைத் தெரிவிக்குமுகமாக தலைவர் மேற்படி தாக்குதல்களை நடத்தினார் என்பதை சில வெளிநாடுகள் தற்போது உணர்ந்துள்ளன. 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகளின் தளம் அழிக்கப்பட்டதின் பின்பே சீனா சிறிலங்காவுக்குள் பிரவேசித்தது என்பதை உலகமே அறியும்.

பல்லாயிரம் கோடிக்கணக்கான டொலர்களை சிறிலங்காவுக்கு கடனாகக் கொடுத்து பல அபிவிருத்தித் திட்டங்களை சீனா ஆரம்பித்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. சிறிலங்காவிலுள்ள குடிமக்கள் சந்ததி சந்ததியாக சீனாவுக்கு கடனாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால்,மிகவும் தூரநோக்கோடு தேசியத் தலைவரால் முன்னெடுக்கப்பட்ட சீன எதிர்ப்பு நடவடிக்கையை அன்று அந்த நாடுகள் கண்டுகொள்ளவில்லை.

அன்று தமிழீழமே ஒரே தீர்வு என்பது தேசியத் தலைவரின் ஒரே முடிவு.

இனப்பிரச்சினைக்கு தீர்வு அவசியம். ஆனால், அதற்காக தமிழீழத் தனிநாடு தீர்வாகாது என இந்தியாவும் மேற்கத்தேய நாடுகளும் கூக்குரலிட்டன. பேச்சுவார்த்தைமூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டார்கள்

ஆனால் இன்று இந்தியா அதனை அனுபவித்து கொண்டு இருக்கிறது.

வரலாறு இப்படித்தான் திரிக்கப்படுகிறது

சகோதரர் இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. உண்மையில் அதை ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னாரா? என்றால் தவறு அவரிடம் இருந்தே தொடங்குகிறது என்று அர்த்தம்.

திமுக-வின் முக்கிய தலைவர் ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவை ஒட்டி, அவருடன் தான் திரைப்படம் தயாரிப்பு ரீதியில் பழகியதை சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல், பாண்டிபஜார் துப்பாக்கிச் சுட்டில் கைதான தலைவர் பிரபாகரன் அவர்களை ஜெ அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து 21 நாட்கள் தி.நகர் அலுவலகத்தில் வைத்திருந்தார் என ஏகத்திற்கும் ஒரு வரலாற்றை திரித்துவிட்டுள்ளார். அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1982-ம் ஆண்டு மே 19ம் தேதி அன்று பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. அது பற்றி “என் பெயர் கரிகாலன்” என்ற பதிவை இங்கே மூகநூலில் விரிவாக எழுதியிருந்தேன்.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் அப்போது பிரபலமடையாத நேரம். இன்று திமுக-வின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அப்போது பழ நெடுமாறன் அவர்களுடன் காமராஜர் காங்கிரஸ் கட்சியுடன் இருந்தார். நெடுமாறன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஓரிருவரைத் தவிர மற்றவர்களுடன் தலைவருக்கு பழக்கமோ- அறிமுகமோ இல்லாத நேரம்.

துப்பாக்கிச்சூடு நடந்து, தலைவர் கைதான உடன் காவல் நிலையத்தில் இருந்து கே.எஸ்.ஆர். அவர்களுக்கு ஒரு தொலைபேசி. ஆங்கில நாளேட்டு நிருபர், “கைதான நபர் காவல் நிலையத்தில் உங்கள் பெயரைச் சொல்லியிருக்கின்றாராம்” என்கிறார்.

விழுந்தடித்துக்கொண்டு ஒரு ஆட்டோவைப் பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார் கே.எஸ்.ஆர். காரணம் தலைவர் அப்போது ராதாகிருஷ்ணன் அவருடைய வீட்டில்தான் தங்கியிருந்தார். அந்த வீடு மைலாப்பூர் சாலைத் தெருவில் இருந்தது.

காவல் நிலையம் சென்றவுடன், ‘சார் இவர்கள் எல்லாம் சிலோன் நக்ஸலைட் போல இருக்கு. துப்பாக்கியால் சண்டை போட்டுக் கொண்டார்கள்” என்றுதான் ஆய்வாளர் கூறுகிறார். அவர்கள் எல்லாம் விடுதலைக் கேட்டுப்போராடும் இயக்கத்தினர் என்ற விவரத்தைக்கூற, பிறகு சம்பிரதாய விடயங்கள் நடந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருந்த மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதுவரையிலும் கே.எஸ்.ஆர். மட்டுமே உடன் இருக்கின்றார்.

தகவல் அறிந்து அன்று இரவே மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த பழ.நெடுமாறன் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்கின்றார். பிரபாகரன் அவர்களை சிலோனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்று அதிபராக இருந்த ஜெயவர்தனே கூற, “அப்படி அனுப்பி வைக்கக்கூடாது” என்ற முனைப்பில் இறங்கினார் நெடுமாறன் அவர்கள்.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். (முந்தைய பதிவில் விரிவாக உள்ளது)

நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு ஆகஸ்ட்டு மாதம் 5-ம் தேதி தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க மனு தாக்கல் செய்யப்ப்பட்டது.

ஆகஸ்ட்டு 6-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் கே.எஸ்.ஆர், பழ.நெடுமாறன், வானமாமலை உள்ளிட்டவர்கள் நேர்நின்றிருந்தார்கள். ஜாமீன் கிடைத்தது.

அதுவரை நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்து போராடிப் பெற்றவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். வழக்கும் அவர் பெயரில்தான் தாக்கல் செய்யப்பட்டது. கே.எஸ்.ஆருக்கு பின்புலமாக பழ-நெடுமாறன் இருந்தார். நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை அவர்கள் வாதாடினார்.

மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையொப்பம் இடவேண்டும் என்பதுதான் நிபந்தனை.

அதன்படி 7-ம் தேதி அன்று தலைவர் பிரபாகரன் அவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்றார் பழ.நெடுமாறன். அவரது வீட்டில் தங்கிக்கொண்டுதான் அடுத்த நாள் எட்டாம் தேதியில் இருந்து தினசரி காவல் நிலையம் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்தார் தலைவர் பிரபாகரன்.

உண்மை இப்படி இருக்க, அவரை திமுக பிரமுகரும் சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த ஜெ. அன்பழகன்தான் ஜாமீன் எடுத்து, அவரது தி.நகர் அலுவலகத்திலேயே 21 நாட்கள் தங்க வைத்துக்கொண்டிருந்தார் என்கிறார் இயக்குனர் அமீர் அவர்கள். அதாவது அப்படியான தகவலை மறைந்த ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாக கூறுகிறார்.

நிபந்தனையே ‘மதுரையில் தங்கி கையொப்பமிட வேண்டும்’ என்பதுதான்.

அப்படியிருக்க சென்னை தி.நகரில் எப்படி 21 நாட்கள் தங்கியிருக்க முடியும். அந்த காலகட்டத்தில் எல்லாம் ஜெ.அன்பழகனின் தந்தையார் மறைந்த பழக்கடை ஜெயராமன் அவர்கள் பகுதிச் செயலாளர் பதவியில்தான் இருந்தார்.

பழ.நெடுமாறன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வைகோ, உள்ளிட்டவர் இன்றும் நேரடி சாட்சியாக, விவரம் அறிந்தவர்களாக உள்ளார்கள்.

உண்மை இப்படி இருக்க இயக்குனர் அமீர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அதுவும் அவருடையக் கருந்தாக அல்ல, மறைந்த தலைவர் ஜெ.அன்பழகன் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். அவர் ஏன் அப்படி உண்மைக்கு மாறாக கூறினார் என்பதும் தெரிவில்லை.

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அடுத்த நாளே தலைவர் கலைஞர் அவர்களுடன் நேர்நின்று புகைப்படம் எடுத்து அதை முரசொலியில் வெளியிட்டு பதிவு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதோடு, அந்த காலகட்டத்தில் திமுக-நிர்வாகிகள் யாரோடும் தலைவருக்கு நேரடி தொடர்பும் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதன் பிறகு 1986-ம் ஆண்டு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் திருமணத்தின் போதுதான், அங்கிருந்த தலைவர் பிரபாகரன் அவர்களை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். தவைலர் பிரபா அவர்கள் கலைஞருக்கு வணக்கம் கூறுகிறார். ‘பார்க்கலாம், சந்திக்கலாம்’ என்றபடியே காரில் ஏறிச்சென்றார்.

இந்த உண்மைகளை எல்லாம் அறியாத “பிரசாந்த் கிஷோர் உடன் பிறப்புகள் (அப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்களாம்) விதம் விதமாய் வந்து பின்னூட்டம் போட்டுக்கொள்கிறார்கள்.

இப்படியான தகவல்களை எல்லாம், பணம் குவிந்திருக்கிறது என்பதற்காக பெரியார் மடத்து ஆட்கள், ஆமீர் சொல்லும் இப்படியான தகவல்களை எல்லாம் திரட்டி “யுனெஸ்கோ மன்ற பார்வையில் பாண்டிபஜார் துப்பாக்கிச்சூடு” என்று புத்தகம் போட்டுவிடுவார்கள். அதுதான் வரலாறு என்றும் கூறுவார்கள்.

காலம்தோறும் வரலாறுகள் இப்படித்தான் திரிக்கப்படுகிறது.

பதிவு
ஐயா பா.ஏகலைவன்

பத்திரிகையாளர்.

கொளத்தூர் மணியும், சுப வீரபாண்டியனும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த “வரனே அவசியமுண்டே” என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் வைத்து அழைத்தது, தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை இழிவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது என்று, தமிழின உணர்வாளர்கள் வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப் படத்தில் மட்டுமல்ல, ஏற்கெனவே ஏராளமான மலையாளப் படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகளைக் கேரளத் திரைப்பட இயக்குநர்களும் கதை ஆசிரியர்களும் கதாநாயகர்களும் திட்டமிட்டுச் சேர்த்துள்ளார்கள் என்பதை எழுத்தாளர் சாம்ராஜ் உட்பட பலர் வரிசையாகப் பட்டியலிட்டார்கள்.

தமிழர்களுக்கும் மலையாளிகளுக்குமான இனச் சிக்கலாகப் பேசப்பட்ட – இந்த விவாதம், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், தி.மு.க.விற்கும் இடையிலான சிக்கலாக மாறிப் போனது ஏன்?

தி.மு.க. தரப்பைச் சேர்ந்தவர்களுக்குக் கலைஞர் கருணாநிதி மட்டும் தலைவரல்லர், தமிழின அழிப்பு வெறியர்களான இராசபட்சே, கோத்தபய கூடத் தலைவர்கள்தாம் போல – என்று கருதும் அளவிற்கு, பிரபாகரன் மீது மிகமிகக் கொச்சையான, குரூரமான, வன்மமான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள்.

தி.மு.க. தரப்பினர் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து இழிவாகவும், கீழ்த்தரமாகவும் வலைத்தளங்களில் பரப்பிய அவதூறுகளை கண்டிப்பதற்கு மாறாக, அதை இப்போது தேவையில்லை என்று சாதாரணப்படுத்துகிறார் தோழர் கொளத்தூர் மணி. பேராசிரியர் சுப.வீ. விடுத்த இரண்டாவது அறிக்கையில் (11.05.2020) மேற்படி இழிவுகள் மற்றும் அவதூறுகளுக்கு பின்னால் உள்ள ஞாயங்களை எடுத்துக் கூறுகிறார். விடுதலைப் புலிகள் மீது இராசபட்சே கும்பல் என்னென்ன குற்றச்சாட்டுகள் சொன்னதோ, அவை அனைத்தையும் தி.மு.க. தரப்பினர் அடுக்கினார்கள்.

  • முதல் முதலாக 1983இல் சிங்களப் படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதால்தான் சிங்களர்கள் 1983 சூலை படுகொலை நிகழ்ச்சிகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.
  • முசுலிம்களை விடுதலைப்புலிகள் கொன்றார்கள், வெளியேற்றினார்கள்.
  • சிறீ சபாரத்தினத்தையும் டெலோ போராளிகளையும் கொன்றார்கள்.
  • ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபாவையும் அவருடன் இருந்தோரையும் கொன்றார்கள்.

இன்னும், இன்னும் பல கொலைக் குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீதும் குறிப்பாகப் பிரபாகரன் மீதும் தி.மு.க. தரப்பினர் சுமத்தினார்கள்.

சிங்களப் படையாட்கள் 13 பேரை ஈழத்தமிழ் மண்ணில் விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றதைக் குற்றமாகச் சொல்கிறார்கள்! ஏன் புலிகள் அவர்களைக் கொன்றார்கள்?

1956லிருந்து தமிழீழத் தமிழர்களை சிங்களப் படையாட்களும் காவல்துறையினரும் தொடர்ந்து சுட்டுக் கொன்றார்கள். தமிழச்சிகளைப் பாலியல் வல்லுறவு கொண்டு பின் சுட்டுக் கொன்றார்கள்.

இவற்றையெல்லாம் மக்கள் திரள் போராட்டம் நடத்திய தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களும், அமிர்தலிங்கம் அவர்களும் பட்டியலிட்டுள்ளார்கள்.

தமிழர்களின் சனநாயக உரிமைகளை மட்டுமின்றி, மனித உரிமைகளையும் பறித்த சிங்களக் காடையர்களையும் சிங்களப் படையாட்களையும் எதிர்கொள்வதற்காக தம்பி பிரபாகரன் அவர்களுக்கு முன்பாகவே தமிழர் தற்காப்பு ஆயுதக் குழுக்கள் உருவாயின. ஆயுதப் போராளி பொன். சிவக்குமரன் சிங்களப் படையாட்களிடம் பிடிபட்டபோது, நச்சுக் குப்பி கடித்து உயிரீகம் செய்தார். எதிரியிடம் சிக்கினால் நச்சுக் குப்பி கடித்து சாக வேண்டும் என்ற போர் முறை கூட தம்பி பிரபாகரனுக்கு முன்பாக ஈழத்தமிழர்களிடம் உருவானதுதான்!

டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் என்ற ஈழத்தமிழர் படை அமைப்புகள் எதற்காக உருவாயின? தமிழர்களை அழிக்கும் சிங்கள இராணுவத்தையும் காவல் துறையினரையும் எதிர்த்துக் கொல்வதற்குத்தானே!

தமிழீழப் பகுதியில் தமிழர்களைத் தாக்கிய சிங்களப் படையாட்கள் 13 பேரை விடுதலைப்புலிகள் சுட்டுக் கொன்றது என்ன குற்றம்?

“அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு” என்று முழங்கிவிட்டு, தில்லி ஏகாதிபத்தியத்தின் திராவிட முகமையாக மாறிப் போன தி.மு.க. போல் புலிகள் செயல்படாதது குற்றமா?

தமிழ்நாட்டிற்குத் தனிக்கொடி என்று முழங்கிவிட்டு, இந்தியக் கொடியை ஏற்றும் உரிமையை நான்தான் வாங்கினேன் என்று மார்தட்டியது போன்ற கருணாநிதியின் சற்சூத்திர “சாதனைப் பட்டியல்” புலிகளிடம் இல்லைதான்!

இந்திரா காந்தி ஆட்சி, இந்தியாவில் தமிழீழ ஆயுதப் படை அணிகளுக்குப் போர்ப் பயிற்சி அளித்தபோதே, அந்த அமைப்புகளைத் தனது கையடக்கக் குழுக்களாக வைத்துக் கொள்ளத் திட்டமிட்டது. இந்திய அரசு விரும்பும் அளவிற்கு மட்டும் இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அமைப்புகளாக அவை செயல்பட வேண்டும் என்பதே இந்திரா காந்தியின் திட்டம். சில அமைப்புகள் அவ்வாறு இந்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் போய்விட்டன.

இந்திய அரசுக்கு மட்டுமின்றி, தி.மு.க.விற்கும் வேண்டிய அமைப்பாக டெலோ மாறிப் போனது. இந்திய அரசுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் கட்டுப்படாத ஈழ விடுதலை அமைப்பாக செயல்பட்டது புலிகள் அமைப்பு!

இந்தியப் பயிற்சிக்குப் பின் நாடு திரும்பிய டெலோ படையினர் பல தடவை புலிகளைத் தாக்கினர்; படுகொலை செய்தனர். விடுதலைப்புலிகள் முகாம் ஒன்றைத் தாக்கிப் புலி வீரர்கள் பலரைக் கொன்றார்கள். இதற்கான எதிர்வினையாகத்தான் விடுதலைப்புலிகள் டெலோவின் தலைமை முகாமைத் தாக்கி அழித்தனர்.

தி.மு.க. தரப்பினர், “பிரபாகரன் படையினர் டெலோவைத் தாக்கி அழித்தார்கள்; அதன் தலைவர் சிறீ சபாரத்தினத்தைக் கொன்றார்கள்” என்று ஒருபக்க நிகழ்வை மட்டும் சுட்டிக்காட்டுவது நேர்மையா?

அமைதிப்படை என்ற பெயரில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக – ஈழத்தமிழர்களுக்கு எதிராக ஆக்கிரமிப்புப் படையை ஏவினார் இராசீவ் காந்தி! இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இந்தியப் படை கொன்றது. சிங்களப் படையாட்கள் செய்ததைப் போலவே இந்தியப் படையாட்கள் ஈழத்தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொன்றார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எப். இந்தியப் படையை வரவேற்றது. இந்தியப் படைக்குத் துணையாகச் செயல்பட்டது. விடுதலைப் புலிகளை அடையாளம் காட்டி, அவர்களை இந்தியப் படையாட்கள் சுட்டுக் கொல்ல உதவியது. இதற்கு எதிர்வினையாக சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். முகாமைத் தாக்கி, அதன் தலைவர் பத்மநாபா உள்ளிட்டோரை புலிகள் கொன்றார்கள்.

இந்த வரலாறெல்லாம் என்னைவிடத் தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்குக் கூடுதலாகத் தெரியும்; துல்லியமாகத் தெரியும்! பல கருத்தரங்குகளில் பொதுக்கூட்டங்களில் இவற்றையெல்லாம் விலாவாரியாகப் பேசியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்குத் தம் சொந்த ஊரில் – சொந்த நிலத்தில் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுத்தவர் தோழர் கொளத்தூர் மணி! பல உதவிகள் செய்தவர். அதற்காகப் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அதிகம் சிறை சென்றிருப்பார் என நினைக்கிறேன்.

2008 நவம்பர் மாதம் சிங்களப் படை மிகக் கடுமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது வானத்திலிருந்து கொத்துக் குண்டுகள் போட்டுக் கொல்கிறது. புலிகளும் பொது மக்களும் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுகிறார்கள்.

இதைக் கண்டித்து ஈரோட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.) பொதுக்கூட்டம் போட்டது. அதில் தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி மற்றும் நான் மூவரும் பேசினோம். மூன்று பேரையும் கோவை நடுவண் சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி! இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி. அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு அடுத்த அறைகளில்தாம் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம்! 32 நாட்கள் மட்டுமே! பிணையில் வெளி வந்தோம்! மற்றொரு வழக்கில், பல மாதங்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தவர் தோழர் மணி!

அத்தனையையும் பொக்கென்று போட்டு உடைத்து விட்டார் தோழர் கொளத்தூர் மணி.

பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவர் மட்டும் அல்லர்; ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின் அடையாளம்! சேர சோழ பாண்டியர் வீரம் பற்றி நாம் பேசுவது ஆரியப் புராணக்கதைகளைப் போன்றதன்று! தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கைதான் என்பதற்குச் சமகாலச் சான்று பிரபாகரன் – புலிப்படைப் போராளிகள் – தமிழீழத் தமிழர்கள்!

அப்படிப்பட்ட பிரபாகரனை, மலையாளத் திரைப்படத்தில் நாயோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியதை ஆதரித்துத் தமிழ்நாட்டுத் தி.மு.க. தரப்பினர் வலைத்தளங்களில் எழுதியதையும், இவர்கள் கட்டுக்கதைகளை கற்பித்துக் கொண்டு பிரபாகரனை இழிவுபடுத்தியதையும் ஒற்றை வரியில் கண்டிக்கத் தோழர் கொளத்தூர் மணிக்கு மனம் பாயவில்லை!

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரு தரப்பாரும் (தமிழ்த்தேசியத் தரப்பினரும், தி.மு.க. தரப்பினரும்) தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி, இரு தரப்பையும் சமப்படுத்துகிறார் தோழர் மணி.

பிரபாகரனால்தான் ஈழத்தமிழர்கள் அழிந்தார்கள், பிரபாகரன் ஒரு வன்முறை அராஜகவாதி என்று தி.மு.க. தரப்பினர் வலைத்தளங்களில் அவதூறு செய்தது தோழர் மணியின் மனத்தில் வலியை ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே தோழர் மணி வர்ணித்து வந்த கருணாநிதியின் இனத்துரோகங்களை இப்போது, தமிழின இளைஞர்கள் வரிசைப்படுத்தும்போது அவருக்கு வலிக்கிறது. திராவிடப் பாசம், தமிழினத்திற்குத் துரோகம் செய்யத் தூண்டுகிறதோ?

திராவிடப் பாசம் மட்டுமல்ல, புதிதாகப் பாரதப் பாசமும் தோழர் மணியைப் பற்றிக் கொண்டுவிட்டது!

“2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின் போது, இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது. மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர் அது – என்பது ஒரு காரணம்”.

“பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரையும், பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சரையும், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியாகச் செல்ல இருந்த முன்னாள் சுவீடன் பிரதமரையும் உள்ளே நுழைய மறுத்து இலங்கை அரசு போரை நடத்தியது” என்றும் தோழர் மணி கூறுகிறார்.

மேற்கத்திய வல்லரசுகள் நடத்தும் இப்போரில் மேற்கத்திய நாடுகள் அனுப்பிய வெளியுறவு அமைச்சர்களை இலங்கை அரசால் எப்படித் தடுக்க முடியும்? தோழர் மணியின் தருக்கத்தில் தன் முரண்பாடு ஏன்? யாருடைய பின்பலத்தில் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட குட்டித் தீவான இலங்கைக்கு இத்துணிச்சல் வந்தது? இந்தியா தந்த துணிச்சல்!

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் மீது தமிழ் ஈழத்தின் மீது தனிப்பட்ட பகை உணர்ச்சி ஏதுமில்லை! இந்நாடுகளின் இராணுவக் கூட்டணியில் சிங்கள இலங்கை இல்லை! இலங்கை இரண்டாகப் பிரியாமல் தடுக்கும் தனி அக்கறை மேற்கத்திய நாடுகளுக்கு இல்லை.

இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில், இந்தியத் துணைக் கண்டத்தில் சீன ஆதிக்கத்தைத் தடுக்கும் தேவை மேற்கத்திய வல்லரசுகளுக்கு உண்டு. அதற்கு இந்தியாவின் துணையை அவை நாடுகின்றன.

ஆரிய அதிகாரத் தலைமையில் உள்ள இந்தியா தமிழினத்தைத் தனது வரலாற்றுப் பகை இனமாகப் பார்க்கிறது. இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி இல்லை என்றாலும், தமிழ்நாட்டிற்கு எதிராகக் கூடுதலான இனப்பாகுபாடு காட்டுகிறது இந்திய அரசு!

சங்க காலத்திலிருந்து ஆரியத்தை எதிர்த்து வருபவர்கள் தமிழர்கள்; சமற்கிருதத்தைத் தேவமொழி என்று ஏற்காதவர்கள். ஆன்மிகத்திலும் இருபதாம் நூற்றாண்டு அரசியலிலும் பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு விடுதலை கோரியவர்கள். இப்பொழுதும அனைத்திந்தியக்கட்சிகள் மாநில ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை. எனவே, தமிழர்களைப் பகைவர்கள் போல் பார்ப்பதும், பழிவாங்குவதும் இந்திய ஆட்சியாளர்களுக்கு வழக்கம்!

ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கையின் நீட்சியாகவே வெளிநாட்டுக் கொள்கை இருக்கும். இந்தியாவில் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்திருப்போர், அண்டை நாட்டில் தமிழர்கள் தனிநாடு கோருவதை ஆதரிப்பார்களா? அதிலும், “ஆரிய இனத்தைச்” சேர்ந்த சிங்களர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தமிழர்கள் தனி ஈழம் அமைப்பதை ஏற்பார்களா?

நான் ஈழ விடுதலைப் போராட்ட காலத்திலேயே எழுதியதைத் திரும்பச் சொல்கிறேன்: “ஒரு வேளை சிங்களர்கள் தனி ஈழத்தை ஏற்றுக் கொண்டாலும், இந்திய ஆளும் வர்க்கம் தனி ஈழத்தை ஏற்காது!”.

இந்திய அரசுதான் மேற்கத்திய நாடுகள் உட்பட பல அயல்நாடுகளிடம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்களர்களின் போருக்கு ஆதரவு திரட்டித் தந்தது. இந்திய அரசின் வற்புறுத்தலால் தான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட பல நாடுகள் ஈழ விடுதலைப் போரை எதிர்த்தன.

தமிழீழத் தமிழர்களுக்கு எதிரான ஒவ்வொரு போர் நகர்வையும் இந்திய அரசின் அறிவுரையோடும் ஒப்புதலோடும்தான் சிங்கள அரசு முன்னெடுத்தது.

2008-இல் சிங்கள அரசு தொடங்கிய இறுதிப் போர்க்கு முன்பாக 2008 மார்ச்சு மாதம் இலங்கைப் படைத்தளபதி சரத் பொன்சேகா புதுதில்லி வந்து, அமைதி உடன்படிக்கையை மீறி போர் தொடங்குவதற்கு இந்திய அரசிடம் ஒப்புதலும் உதவியும் பெற்றுச் சென்றார். அப்போது பொன்சேகா மூன்று கோரிக்கைகளை இந்திய அரசிடம் வைத்தார்.

  1. வரும் சூன் மாதம் (2008) விடுதலைப்புலிகள் வசம் உள்ள வன்னிப் பெருநிலத்தைக் கைப்பற்ற போர் தொடுக்கப் போகிறோம்.
  2. அப்போரில் இலங்கைக் கப்பற்படைக்கு – இந்தியா கடல்வழியாக ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் இன்றியமையாப் பொருட்களை வழங்க வேண்டும்.
  3. ஒருவேளை, ஆனையிறவில் இலங்கைப் படை தோற்றதைப் போல் இதில் தோற்றால் – புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டால் உயிர்ச்சேதம் இல்லாமல் எங்கள் படையினரை இந்தியா மீட்டுத் தர வேண்டும்.

கமுக்க உடன்படிக்கையில் வெளியே கசிந்த செய்திகள் இவை! அப்போதே எங்களின் தமிழர் கண்ணோட்டம் ஏப்ரல் (2008) இதழ் ஆசிரியவுரையில் மேற்படி மூன்று கூறுகளையும் வெளியிட்டோம்.

இறுதிப் போரில் ஈழத்தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டால் தமிழ்நாட்டில் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்படும். அவ்வாறு தமிழ்நாட்டு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினால், உலக நாடுகள் தலையிடும் சூழல் உருவாகும். அப்படி ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பையும் இந்தியா ஏற்க வேண்டும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் கோரினர். அதற்கு ஒப்புக் கொண்ட இந்திய ஆட்சியாளர்கள், சிங்கள அரசின் உயர் அதிகாரிகளை வரச்சொல்லி – அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வர் செயலலிதாவையும் சந்தித்து வேண்டுகோள் வைக்க ஏற்பாடு செய்தனர்.

2008 சூன் – சூலையில் பெரும் போரைத் தொடுத்தது சிங்கள அரசு. வான் கொத்துக் குண்டு வீச்சில் கூட்டம் கூட்டமாகத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கலைஞரோ, செயலலிதாவோ பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று கூறி சிங்கள அரசு நடத்தும் போரை ஞாயப்படுத்தினார் செயலலிதா.

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தின. “ஆனந்த விகடன்” இதழ் அப்போது தமிழ்நாட்டில், விடுதலைப்புலிகளை ஆதரிப்போர், தனி ஈழத்தை ஆதரிப்போர், பிரபாகரனை ஆதரிப்போர் என்று பல வினாக்களைக் கேட்டுக் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள், 06.08.2008 நாளிட்ட “ஆனந்த விகடன்” இதழில் வந்தன. அதில், தனி ஈழத்தை ஆதரிப்போர் 55.44 விழுக்காட்டினர் என்று வந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை எப்போதும் ஆதரிக்கிறோம் என்று கூறியவர்கள் 54.25 விழுக்காட்டினர்.

விடுதலைப்புலிகளை தி.மு.க. இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறியோர், 22.71 விழுக்காட்டினர். ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்று கூறியோர் 47.48 விழுக்காட்டினர். இப்போது போலவே பட்டும் படாமலேயே தி.மு.க. இருக்கலாம் என்று கூறியோர் 29.79 விழுக்காட்டினர்.

இராசீவ் காந்தி கொலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்குப் போதிய ஆதரவில்லை என்று கூறியவர்களின் கணிப்பு பொய் ஆனது. கருணாநிதி, செயலலிதா, காங்கிரசார் எல்லோர்க்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அவர்களுக்கு அடுத்த பேரிடி “தினமணி” இதழிலிருந்து வந்து விழுந்தது.

“விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் ஒன்றா?” என்ற வினாவைக் கேட்டு “தினமணி” கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்கு, “ஆம்” என்று விடையளித்தோர் 72.58 விழுக்காட்டினர்.

அதன்பிறகே, இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு கோர வேண்டும் என்று வலியுறுத்தி காந்தியடிகள் பிறந்த நாளான 02.10.2008 அன்று சென்னையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒருநாள் உண்ணாப் போராட்டம் நடத்தியது. அதில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்தது. மிகப்பெரிய போராட்டமாக நடந்தது. மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தமிழ்நாட்டில் கணிசமான “வாக்குச்சந்தை” இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். புதிய ஒப்பனைகளுடன் புதிய நாடகங்கள் அரங்கேற்றத் தொடங்கினர்.

முதலமைச்சர் கருணாநிதி 06.10.2008 அன்று மயிலை மாங்கொல்லையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி, “இந்திய அரசின் எச்சரிக்கையை மீறி ஈழத்தமிழர்களை இலங்கை அரசு கொன்றால், அதற்குப் பிறகு நாங்கள் இந்த அரசு தேவையா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்” என்று முழங்கினார்.

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 14.10.2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினார். அதில் ஒரு காலக்கெடு விதித்து அதற்குள் இந்திய அரசு இலங்கையிடம் போர் நிறுத்தம் கோரவில்லை என்றால், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.

கெடு முடிவதற்கு முதல்நாள் மாலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 26.10.2008 அன்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். “பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது; தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மாட்டார்கள்” என்று கலைஞர் வீட்டுவாசலில் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது செய்தியாளர்கள் கேட்டதும் பிரணாப் விடையளித்ததும் வருமாறு :

கேள்வி 1 : இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் கோர ஒப்புக் கொண்டீர்களா?

பிரணாப் : நாங்கள் போர் நிறுத்தம் கோர மாட்டோம் (We are not for Ceasefire).

கேள்வி 2 : இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுமா?

பிரணாப் : இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இராணுவக் கருவிகள் சில கொடுத்துள்ளோம்.

கேள்வி 3 : இலங்கைப் படைவீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது நிறுத்தப்படுமா?

பிரணாப் : இந்தியாவில் பலநாட்டுப் படை வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம். இலங்கைப் படை வீரர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறோம். இது எப்போதும் உள்ள வழமையான நடவடிக்கைதான்!

பிரணாப் முகர்ஜியின் வாக்குறுதியை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் திட்டத்தைக் கைவிட்டோம் என்று அறிவித்தார் கருணாநிதி. “எனது நம்பிக்கை வீண் போகவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன” என்றார் கருணாநிதி!

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து முடித்தபின் இலங்கைக் குடியரசுத் தலைவர் இலங்கை நாடாளுமன்றத்தில், “நாம் இந்தியாவுக்கான போரைத்தான் நடத்தினோம்” என்று அறிவித்தார். அதற்கு எந்த மறுப்பும் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கும் சொல்லவில்லை, ஆளுங்கட்சித் தலைவி சோனியா காந்தியும் சொல்லவில்லை!

தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்தப் போர் இந்தியா நடத்தியதா? மேற்கத்திய நாடுகள் நடத்தியதா? கலைஞர் கருணாநிதி தமிழர்களை ஏமாற்ற நடத்திய நாடகங்களை மறந்துவிட வேண்டுமா?

போர் நடத்திய அறுவர் குழு

இலங்கை அரசு நடத்திய ஈழத்தமிழர் அழிப்புப் போரை ஆறு பேர் கொண்ட வல்லுநர் குழு அடிக்கடி விவாதித்து வழிநடத்தியது. அதில் மூன்று இலங்கையர், மூன்று பேர் இந்தியர்!

சிங்களத் தரப்பில் 1. கோத்தபய இராசபட்சே (இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளர்), 2. பசில் இராசபட்சே (நாடாளுமன்ற உறுப்பினர்), 3. லலித் வீரதுங்க (குடியரசுத் தலைவரின் செயலாளர்).

இந்திய அரசுத் தரப்பில்,

  1. எம்.கே. நாராயணன் (இந்தியப் பாதுகாப்புத்துறையின் மதியுரைஞர் – மலையாளி).
  2. சிவசங்கர மேனன் (வெளியுறவுத்துறை செயலாளர் – மலையாளி).
  3. விஜய் சிங் (பாதுகாப்புத்துறை செயலாளர் – இந்திக்காரர்).

இச்செய்தி ஏற்கெனவே ஊடகங்களில் வெளியானதுதான். கோத்தபய இராசபட்சே இந்தியன் டிஃபென்ஸ் ரிவ்வியூ (Indian Defence Review) என்ற இதழுக்கு அளித்த செவ்வியிலும் இந்த அறுவர் குழு இலங்கையின் போர் நடவடிக்கைகளை நிர்வகித்தது பற்றிக் கூறியுள்ளார்.

அந்த செவ்வியில் கருணாநிதியின் போர் நிறுத்த உண்ணாப் போராட்ட நாடகத்தையும் அம்பலப்படுத்திவிட்டார் கோத்தபய! (கோத்தபய இப்போது இலங்கையின் குடியரசுத் தலைவர்).

2009 ஏப்ரல் 24ஆம் நாள் விடியும் நேரத்தில், மெரினா கடற்கரையில் முதலமைச்சர் கருணாநிதி திடீர் உண்ணாப் போராட்டம் தொடங்கினார். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்பது கோரிக்கை!

உணர்ச்சி வசப்பட்டு திடீரென்று உண்ணாப் போராட்டம் நடத்துகிறார் என்ற அதிர்ச்சிச் செய்தி! ஆனால், இந்த நாடகம் முதல் நாளான ஏப்ரல் 23ஆம் நாள் மாலையே இந்திய அரசுக்குத் தெரிந்தது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் தன்னை அவசரமாகத் தொலைப்பேசியில் அழைத்து இச்செய்தியைக் கூறியதாக கோத்தபய மேற்படி செவ்வியில் கூறியுள்ளார். மறுநாள் கருணாநிதியின் உண்ணாப் போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில், “தாக்குதல்கள் நிறுத்தப்படும்” என்று போலி அறிக்கை வெளியிடுவதற்கான தயாரிப்பில் அப்போதே இறங்கிவிட்டோம் என்கிறார் கோத்தபய!

சிவசங்கர மேனன் பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் தலைப்பு Choices : Inside the Making of Indian Foreign Policy (வாய்ப்புகள் : இந்திய வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தின் உட்புறம்).

போரின் இறுதி நாட்களில் நார்வேயும், அமெரிக்காவும் புலித்தலைமைகளை வான் வழியே அழைத்துச் சென்று காப்பாற்றி, போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று விரும்பின. ஆனால், அதில் சிங்கள, இந்திய அரசியல்வாதிகளுக்கு உடன்பாடில்லை என்று சிவசங்கர மேனன் குறிப்பிட்டுள்ளதாக ஒரு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்கள். ஆனால், இச்செய்தி போரின் இறுதிக் கட்டத்திலும் போர் முடிந்த பின்னும் பரவலாகப் பேசப்பட்ட செய்திதான்!

தோழர் கொளத்தூர் மணி அவர்களே, இந்திய அரசுதான் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை நடத்திய போரை இயக்கியது என்பதற்கு இந்தச் சான்றுகள் போதுமல்லவா!

கருணாநிதியின் துரோகத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இனப்பகை இந்திய அரசையும் அல்லவா பாதுகாக்கிறீர்கள்!

உங்கள் திராவிடக் கொள்கை மீதும், பெரியாரியத்தின் மீதும் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், உங்கள் மீது தனிப்பட்ட மதிப்பு இருந்தது. அனைத்தையும் தகர்த்து விட்டீர்கள் தோழரே!

இந்தியா நினைத்தாலும் இலங்கை நடத்திய போரை நிறுத்தி இருக்க முடியாது என்று கூறி, ஆரிய இந்திய அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்ய சிங்கள அரசுக்குத் துணை போனதை மறைக்க விரும்புகிறீர்களே!

கருணாநிதி வஞ்சகமாக நாடகமாடாமல் இலங்கைப் போர் நிறுத்தத்தை வலியுறுத்திப் போராடியிருந்தால், தனிப்பெரும்பான்மை இல்லாத மன்மோகன் அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை தி.மு.க. விலக்கிக் கொண்டிருந்தால், ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காங்கிரசு அரசு, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இருக்கும் என்று நான் கருதவில்லை. ஈழத்தமிழர்களுக்காக – நாடகமாடாமல் உண்மையிலேயே கருணாநிதி பதவி விலகியிருந்தாலும், காங்கிரசுக்குத் தந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தாலும் மன்மோகன் ஆட்சி வீழ்ந்துவிடாமல் இந்தி மண்டலக் கட்சிகள் பாதுகாத்திருக்கும். தமிழர்களுக்காக காங்கிரசு ஆட்சி வீழ்வதை, முலாயம் சிங்கின் சமாஜ்வாதியோ, மாயாவதியின் பகுசன் சமாஜ் கட்சியோ மற்றும் சில கட்சிகளோ விரும்பி இருக்க மாட்டா! தங்கள் ஆதரவைக் கொடுத்திருப்பார்கள்!

கலைஞர் கருணாநிதி மன்மோகன் சிங் அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டு, தாமும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தால் அன்றைக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றி மக்கள் பக்கம் நின்ற ஒரு போராளியாகக் காட்சியளித்திருப்பார்.

ஆனால், கருணாநிதி தமிழீழத்தை – ஈழத்தமிழர்களை ஆதரிப்பதுபோல் நாடகமாடி ஏமாற்றினார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

தோழர் கொளத்தூர் மணி இன்னொரு ஆபத்தான தத்துவம் சொல்கிறார். “பத்தாண்டுகள் கழிந்த பின்னாலும் அந்த ஒற்றைக் காரணத்தைச் சொல்லியே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாக்க வேண்டிய தேவை இப்போது இல்லை” என்கிறார்.

பதினோராண்டுகள் கழிந்து போய்விட்டன என்றுகூறி, ஈழத்தமிழர்கள் கருணாவை ஏற்றுக் கொள்வார்களா? இன்னொன்று, ஈழத்தமிழர் இனம் அழிக்கப்பட்டதை, விடுதலைப் போர் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையோடு வீழ்த்தப்பட்டதை – அந்த இன அழிப்பிற்கு மறைமுகமாகத் துணைபோனவர்களை பத்தோடு பதினொன்றாக மறந்துவிட தோழர் மணி அவர்களால் முடிகிறது என்பதை நான் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை!

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்துவிட்டன என்று அதை மறந்து விடலாமா? திராவிடத் தத்துவத்தின்படி மறந்து விடலாம்! மறந்துவிட்டுத்தானே, திராவிடத் தளபதி கருணாநிதி பா.ச.க.வுடன் 1999-இல் கூட்டணி சேர்ந்து நடுவண் அமைச்சரவையில் தி.மு.க.வினரை உட்கார வைத்தார்!

1965 – இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் 400க்கும் மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொன்ற காங்கிரசுக்குத்தானே கருணாநிதி 1969 முதல் ஆதரவு தந்தார். 1971 பொதுத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார்!

இந்தப் பாதையெல்லாம் திராவிடத் தந்தை பெரியார் வகுத்துக் கொடுத்த பாதைதான்!

வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தியபோது, அவனை ஆதரித்தார்! அவன் 1947 ஆகத்து 15இல் விடைபெற்ற போது அது துக்க நாள் என்றார் பெரியார். சில ஆண்டுகள் காங்கிரசு எதிர்ப்பு. பின்னர் 1954லிருந்து காங்கிரசு ஆதரவு. இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டே தமிழ்நாடு விடுதலை பற்றியும் அவ்வப்போது பேசிய அந்நாளையக் கலைஞர் அவர்! தி.மு.க. ஒழிப்புதான் முதல் வேலை என்று 1949லிருந்து 1967 பிப்ரவரி வரை செயல்பட்ட பெரியார் இப்படிப்பட்ட அரசியல் சந்தர்ப்பவாத பண்பாட்டிற்குத் தானே அடித்தளம் அமைத்தார்!

1970களின் தொடக்கத்தில் தந்தை செல்வா அவர்கள், சென்னையில் பெரியாரை சந்தித்து தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கோரியபோது, “நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்” என்று விடை கூறி, ஈழத்திற்கு ஆதரவு தர மறுத்தவர் பெரியார்.

வரலாற்றில், ஏகாதிபத்தியங்களிடமிருந்து விடுதலையடைய காலனி நாடுகள் நடத்திய விடுதலைப் போராட்டத்தில், ஒரு காலனி நாடு இன்னொரு காலனி நாட்டை ஆதரிப்பதுதான் வலிமையாக இருந்திருக்கிறது. தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல், ஒதுங்கிக் கொள்வதற்காக – தந்திரமாக ஓர் அடிமை இன்னொரு அடிமையின் விடுதலையை எப்படி ஆதரிக்க முடியும் என்று கேட்டு ஆதரவு தர மறுத்துள்ளார்.

கொளத்தூர் மணி, சுப.வீ. போன்றவர்கள் நடைமுறையில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள். பிரபாகரனை எவ்வளவு புகழ்ந்தாலும் ஈழத்தமிழர்களை எவ்வளவு ஆதரித்தாலும் அவர்களைத் திராவிடத் தத்துவத்திற்கும் திராவிட அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

பிரபாகரன் என்ற படிமம் தமிழ்த்தேசியத்தின் வடிவமாகத்தான் காட்சியளிக்கிறது! எனவே, பிரபாகரனைத் தூற்றுவோரை அரவணைக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சுப.வீ.யும் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது.

இதோ சுப.வீ. அவர்களுடைய ஒப்புதல் கூற்று : “புலிகளைக் காட்டிக் காட்டித்தானே திமுகவை அழிக்கப் பார்க்கின்றனர் என்ற கோபத்தில், புலிகளைப் பற்றிய பிம்பத்தையே உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு எழுந்திருக்கலாம். அதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று எனக்குப்பட்டது”. (சுப.வீ. அறிக்கை, 11.05.2020).

“மதவாத பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உறுதியாக இப்போது களத்தில் நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தை மட்டும் தொடர்ந்து குறைகூறுவது, செயற்கையான உள்நோக்கத்தோடும், எதிரிகளுக்கு ஆதரவாகவும் செய்யப்படுகிற சதியாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தோழர் கொளத்தூர் மணி தனது கட்டுரையில் கூறுகிறார்.

பா.ச.க. பாசிசத்தை எதிர்த்து முறியடிப்பதற்கான கொள்கைத் திட்டம் – வேலைத் திட்டம் எதையாவது தி.மு.க. வெளியிட்டிருக்கிறதா? பீகாரின் பிராமண பிரசாந்த் கிசோர் ஏற்கெனவே மோடிக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தவர். இப்போது மு.க. ஸ்டாலினுக்கும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கிறார். பிரசாந்த் கிசோர் கலைத்திட்டத்தில் (Curriculam) பாசிச எதிர்ப்புக் கோட்பாடுகள் இல்லையே! எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை இதுவரை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா?

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. கடைபிடிக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார் என்பதற்காக, காங்கிரசோடு தொடர்பை துண்டித்துக் கொண்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அந்நேரத்தில், பா.ச.க. ஆட்சிக்கு எதிராக சோனியா காந்தி புதுதில்லியில் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை (14.01.2020) தி.மு.க. புறக்கணித்தது. இதுதான் பா.ச.க. எதிர்ப்புக் கூட்டணியா?

காங்கிரசைக் கைவிட்டு பா.ச.க.வோடு தி.மு.க. கூட்டணி சேராது என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது? கருணாநிதி அவர்களே 1999லிருந்து ஐந்தாண்டுகள் பா.ச.க. கூட்டணியில்தானே இருந்தார்! எதிரும் புதிருமானவர்கள் காலப்போக்கில் சேர்ந்து கொள்வதில் தவறில்லை என்று இதே கட்டுரையில் தோழர் மணி கூறுகிறார். அவர் வாதப்படி தி.மு.க. பா.ச.க.வோடு சேர்ந்தாலும் பெரிய தவறு ஒன்றுமில்லை!

தோழர் கொளத்தூர் மணி கட்சி பா.ச.க. மதவாத பாசிச எதிர்ப்பு வேலைத் திட்டம் தயாரித்து, அதை பரிசீலித்து ஏற்குமாறு மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்குமா?

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும், விடுதலைப் புலிகளையும் இழிவுபடுத்துவதை பாசிச எதிர்ப்பு உத்தியின் கீழ் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தோழர் மணி பரிந்துரைப்பது முற்றிலும் முரண்பாடானது!

தோழர் கொளத்தூர் மணி – பேராசிரியர் சுப.வீ. ஆகிய இருவரும் ஈழவிடுதலைக்காக மிகக்கடுமையாகப் போராடியவர்கள்! மிக அதிகமாக ஈகம் செய்தவர்கள்! என்ன செய்வது? அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர்களை இனத்துரோக முகாமுக்குள் கொண்டு போய் சேர்த்துவிட்டது!

“நேற்று ஒருவன் புரட்சியாளனாக இருந்தான் என்பதற்காக, இன்றும் அவன் புரட்சியாளனாக இருக்கிறான் என்று எடுத்துக் கொள்ள முடியாது. நடைமுறையில் இன்றும் புரட்சியாளனாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும்” – மா சே துங்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

என் பெயர் கரிகாலன் என்கிற…

19.5.1982 அன்று சென்னை பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு…

மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு பெசண்ட் நகர் வேளாங்கன்னி கோயில் எதிரே இன்று முருகன் இட்லி கடை உள்ளதே, அதற்கு பின்புறம் ஒரு வீட்டில் குடியிருந்தார். அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது பழ.நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும்தான். அங்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க, பெரும் சிக்கலானது.

அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர்.

அப்போது முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனுக்கும், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தார். தலைவர் பிரபாகரன் அவர்கள் மயிலையில்.

புலிகள் இயக்கம் பிரதான அறிமுகமில்லா காலம் அது.

குறிப்பிட்ட அந்த நாளில், ரவீந்திரன், ஜெகதீஸ்வரன் ஆகிய இரண்டு போராளிகளோடு பாண்டிபஜாருக்கு சென்றார் தலைவர் பிரபா அவர்கள். அங்கே எதேச்சையாக முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனும் எதிரில் வந்தார். சந்தித்துக்கொண்டபோதில் பழைய முரண்பாடுகளைப் பற்றி பேச, அது முற்றி ஆவேசத்தில் முடிய, இருவருமே தற்காப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள்.

தலைவர் பிரபாகரனும் அவருடனிருந்தவர்களும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் வீட்டிற்கு ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர், ‘என்ன சார், என நடந்த சம்பவத்தைச்சொல்லி, கைதான நபர் உங்க வீட்டில்தான் தங்கியிருந்தாராமே’ என்ற தகவலைச் சொல்ல, உடனே ஆட்டோ பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார்.

நடந்த விடயத்தைச் சொல்லி, “நான் இப்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். ஆனபடியால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டியது என் கடமை. அதான் துப்பாக்கிச் சண்டை முடிஞ்சதும் நானே போலீஸ்கிட்ட அரெஸ்ட்டாகிட்டேன்” என்று நடந்ததை சொன்னார்.

காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன், துப்பாக்கி சண்டை போட்டக்கொண்டவர்களை நக்ஸலைட்டுகள் என்றே கூறினார். இலங்கை போராளிகள் இயக்கம் பற்றி ஏதும் அவருக்கு தெரியாது. பிரபாகரன் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் துப்பாக்கியை கொடுத்துவிட்டு, தங்களோடு வந்ததாக கூறினார் இன்ஸ்பெக்டர்.

(இரண்டு நாட்கள் கழித்து உமா மகேஸ்வரன் (முகுந்தன்) பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.)

தலைவரின் வாக்குமூலம் இப்படித் தொடங்குகிறது.

“என் பெயர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன். நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன். நாங்கள் எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை வீரர்கள்” என்று தொடங்கி TNT(Tamil National Tigers) என்ற பெயரில் இயக்கம் இருந்தது, முகுந்தனை விட்டு பிரிந்த பிறகு LTTE என்ற இயக்க்ததை தொடங்கியது என்பதை சொல்லி, நடந்த துப்பாக்கி சண்டையின் பின்னணியையும் எழுதிக்கொடுத்தார்.

அடுத்த நாள் அவர் சென்னை மத்திய சிறையில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே இருந்த சிறை) அடைக்கப்பட்டார். அதுவரையிலும் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்தான் உடன் இருந்தார். வேறு யாருமில்லை. ஜாமீன் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை இருந்துள்ளார்.

செய்தி வெளியாக, இலங்கை அதிபர் ஜெயவர்தனே, ‘பிரபாகரன்-முகுந்தன் உள்ளிட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்தியாவுக்கும்-இந்திராவுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.

தகவல் கிடைத்து, மதுரையில் இருந்து அடித்துப் பிடித்துவந்த பழ.நெடுமாறன் அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தகவலைக் கூறிவிட்டு, உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். ஓமந்தூரார் தோட்ட வளாகத்தினுள், பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்த பழ.நெடுமாறன் அலுவலகதில் தான் அந்த கூட்டம் நடந்தது.

அந்த வளாகத்திற்குள்ளாகவே இருந்த திமுக-வின் கட்சி அலுவலத்தில் இருந்த கலைஞரை, வழக்கறிஞர் கே. எஸ் ராதாகிருஷ்ணனும், பேபி சுப்ரமணியனும் நேரில் சென்று சந்தித்து, நடந்தவைகளை கூறினார்கள்.

கருணாநிதி கேட்டுக்கொண்டரே ஒழிய எந்த கருத்தையும் கூறவில்லை.

அனைத்துக்கட்சி கூட்டதிலும் திமுக-கருணாநிதி சார்பாக ஒருவரும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளவில்லை. ஆளும் கட்சி என்றதால், எம்.ஜி.ஆர்-அதிமுக தரப்பில் யாரும் வரவில்லை.

ஆனால், ‘இப்படி ஒரு கூட்டம்-தேவை’ என்பதை எல்லாம் எம்ஜிஆரும்-நெடுமாறனும் தான் திட்டமிடுகிறார்கள்.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, கா.கா.தே.கா (காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ்) குமரி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் பா.மாணிக்கம், ஜனதா கட்சி இரா.செழியன், பார்வர்டு பிளாக் ஆண்டித்தேவர், லோக்தல் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் பங்கேற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது என்பதுதான் தீர்மானத்தின் அழுத்தம்.

அந்த அந்த தீர்மானத்தோடு அடுத்தநாள் டெல்லிக்கு சென்றார் பழ.நெடுமாறன். கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்து, நடந்தவைகளை எல்லாம்கூறி, “பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது” என்பதை வலிறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

அப்போது இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்தவர் பார்த்தசாரதி ஐயங்கார். (அண்ணல் அம்பேத்கர் சட்டவரைவை எழுதிய குழுவில் இருந்த கோபால்சாமி ஐயங்காரின் மகன்) அந்த பார்த்தசாரதி ஐயங்காரும் அங்கே இருந்தார்.

அந்த ஐயங்காரும் ‘பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்ககூடாது. பங்களாதேஷ்கு விடுதலையை வாங்கிக்கொடுத்ததைப் போல் இவர்களுக்கும் (தமிழீழம்) விடுதலையை வாங்கிக்கொடுக்க வேண்டும்’ என்ற கருத்தை பார்த்தசாரதி ஐயங்காரும் கூறினார்.

இங்கே திமுக-வின் பங்கு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் சில உடன் பிறப்புகள் எழுதி வருவதைப்போல், பிரதமர் இந்திராவிடம் வலியுறுத்தி கடிதம் ஏதும் கலைஞர் அளிக்கவில்லை. பிரதமரிடம் பேசவுமில்லை.

ஆனால், சில நாட்கள் கழித்து, ‘பிரபாகரனை இலங்கையில் ஒப்படைக்கக்கூடாது’ என்ற அறிக்கை அளித்திருக்கின்றார்.

நடந்தது இதுதான். எல்லா கட்சிகளுடனும் பேசி ஓடி உழைத்தது எல்லாமும் பழ.நெடுமாறன் அவர்கள்தான், சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்தது வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். அறிக்கை விட்டு ஆதரித்து நின்றுகொண்டார் கலைஞர்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் அப்படி சிறைச்சாலைக்கு சென்று தலைவர் பிரபாகரன் அவர்ளை சந்தித்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில்தான் வைகோ உள்ளிட்ட சிலரை அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

தலைவர் கலைஞர் ஆதரித்தார். பின்னாளில் உதவியுமிருக்கலாம். ஆனால் அவர்தான் பிரபாகரன் அவர்களை அன்று காத்தார். இல்லை என்றால் இந்த பிரபாகரனே இருந்திருக்க மாட்டார் என்று ‘யுனஸ்கோ விருது’ கணக்காக அடித்துவிட்டு, வரலாற்று திரிபு வேலைகளை செய்யக்கூடாது என்கிறோம்.

பா. ஏகலைவன்
மீள்பதிவு.

மனிதக் கறியும்! ஆமைக் கறியும்!

எல்லாமும் 380 கோடி PK திட்டப்படியே
நடந்துகொண்டிருக்கின்றது.

தலைவர் பிரபாகரனை தாழ்த்தி பேசியதும் அவர்கள்தான். புலிகளை விமர்சித்ததும் அவர்கள்தான்.

அதற்கு எதிர்வினையாற்றியவுடன்

குரோனா வந்திருக்கு, மருத்துவமனைகள் நிறைந்திருக்கு, பட்டினி கிடக்கிறார்கள், இப்போது பிரபாகரன் பேச்சா முக்கியம் என்று மீண்டும் எழுதிக்கொள்வதும் அவர்களே.

திமுக-வின் பின்னணியில் உள்ள சில இஸ்லாமிய முகவரியில் உள்ள உபிக்கள் வேறு குறுக்கால் வந்து

மலையக தமிழர்களின் ஓட்டு உரிமையை யாழ்ப்பாணம் தமிழர்கள்தானே தடுத்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக புது பிரச்சனை இழுக்கிறார்கள். இஸ்லாமிய – தமிழர் விரோத பதிவை வைக்கிறார்கள். தொடக்கத்தில் இது மலையாள திரைப்படம் Vs தமிழர்கள் என்றுதான் போனது. உடன் பிறப்புகள்தான் வலிய வந்து வண்டியில் ஏறி திசை மாற்றிக்கொண்டார்கள்.

இப்படி எல்லாமும் அவர்களாகவே கிளப்பி- இப்போது, ‘அதுவா முக்கியம்’. நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறதே என்கிறார்கள். இது ஒரு நுணுக்க அரசியல்.

அலுங்காமல் குலுங்காமல் காங்கிரஸ் கட்சியின் துரோகத்தை மறைத்து, திமுக-வை, தாங்கிப்பிடிக்கும் ‘ஒரு கட்டமைப்பு’ வேலை இது. இனத்துரோகம் செய்த கட்சிகளுக்கு பின்னால் செல்வது என முடிவெடுத்துவிட்டால் தாராளமாக போகலாம். யாரும் தடுக்கப் போவதில்லை. இப்படியெல்லாம் கட்டமைத்துவிட்டுதான் போகவேண்டுமா என்ன?

மதிப்பிற்குரிய தோழர் கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கையையும் அப்படித்தான் பார்க்கவேண்டி உள்ளது.

அவர்தான் ‘திமுக இனத்துரோகம் செய்த கட்சி’ என்றார் (விரிவாக வேண்டாம்). இப்போதும் அவர்தான், ‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை’ என்கிறார். திரும்ப திரும்ப நமக்குள்ளாகவே முரண்பட்டு நிற்கவேண்டியுள்ளது.

1936- பெரியாரோடு தோழர் ஜீவா எங்கே ஒன்றாக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்துதானே அவர் வெளியேறி வந்தார், பெரியாரோடு மேடைகளில் இருந்திருக்கலாம், ஆனால் பெரியார் கட்சியில் இருந்தாரா என்ற குழப்பம். பிரச்சனை அதுவல்ல.

விரோதித்து-விமர்சித்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதில் சிக்கல் இல்லை என்கிறார் தோழர். பொது எதிரிக்காக வேண்டி

இதே காரணத்தை நாளை, ‘ திமுக-பாஜகவோடும் கைகோர்த்துக் கொண்டால் சொல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம். முன்பு அப்படித்தானே அவர்கள் காங்கிரஸ் கட்சியோடு இருந்து பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, கட்டக்கடைசியாக போய் பாஜகவோடு இணைந்து பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் மந்திரி பதவியையும் பெற்று அனுபவித்தார்கள், அப்படி திரும்பவும் போய் நிற்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

சரி, வெற்றிக்குப் பிறகு திமுக, பாஜக-வோடு சமரசமாகாமல் எதிர்க்கும் என்பதை எதைவைத்து உறுதி படுத்துகிறீர்கள். இதற்கு முன் எதையெல்லாம் எதிர்த்து முடக்கினார்கள்? இனப்படுகொலை நடந்த 2009 காலத்திலேயே ‘மத்திய அரசின் அதிகாரத்தில் பங்கு வகித்த போதே’ எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல், இன அழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்தானே இவர்கள்.

எதுவும் வேண்டாம், இதற்கு முன் மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்தபோது பறிக்கப்பட்ட மாநில உரிமைகளில் எதையெதை எதிர்த்து போராடி மீட்டு வந்தார்கள்? சரி, தாங்கள் பாஜக- இந்துத்துவா பாசிசம் என்கிறீர்கள். தலைவர் ஸ்டாலினோ நாங்களும் இந்துக்கள்தான், கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள்தான் என்கிறார். இரண்டு இந்துக்களும் வேறு வேறா?

யார் தடுத்திருந்தாலும் போரை நிறுத்தியிருக்க முடியாது. இது சர்வதேச சதி என்று இப்போது கூறும் தாங்கள், 2008-2009-ல் ‘போர் நிறுத்தம்’ என போராட்டம் நடத்தியது எதற்காக?

இந்தியாவுக்கான போரைதான் நாங்கள் நடத்தினோம் என்றார் மகிந்த ராஜபக்சே. நடப்பதை எல்லாம் தினந்தோறும் இந்தியாவிடம் ஆலோசித்துவிட்டுதான் போரை நகர்த்தினோம் என்றார் கோத்தபாய ராஜபக்சே. இந்தியாவின் ஆயுத- ஆலோசனை உதவிகள் இல்லாமல் நாங்கள் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என்றார் சிங்கள ராணுவ தளபதி சரத்பொன்சேகா.

தமிழகம் கொந்தளித்து வீதிக்கு வந்திருந்தால் இந்தியா பணிந்திருக்கும். இலங்கை போர் நின்றிருக்கும் என்ற அச்சம் எங்களுக்கு இருந்தது என்றார் கோத்தபயா ராஜபக்சே. இதுவெல்லாம் பலராலும் பேசப்பட்டுவிட்டது. சர்வதேச சதி என்றாலும் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவைக் கேட்காமல் அனுசரணை இல்லாமல் எந்த சதியும் வெல்லாது என்பது கருஞ்சட்டைகள் முதல் பலராலும் பேசப்பட்டுவிட்டது. ஆனாலும் சாதிக்கின்றார் மணி தோழர்.

அந்த நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரனாப் முகர்ஜி, இலங்கைக்கு பயணமான போதெல்லாம் கோபாலபுரம் வந்து கலைஞரை சந்தித்து பேசிச் சென்றது எல்லாம் சர்வதேச சதியின் ‘கிளை ஆலோசனையா’? அதைப் பற்றி எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?

அடுத்து “ஈழ விடுதலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை தூக்கில் போட வேண்டும் என்கிற அளவிற்கு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்களைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாமல்”’ இன்று பாஜக-வை தீவிரமாக எதிர்க்கும் திமுக-வை விமர்சிப்பது உள்நோக்கம் கொண்டது. அது எதிரிகளுக்கு ஆதரவு ஆகும் என்கிறீர்கள். நியாயம்தான்.

இதே திமுக-வின் முதுகெலும்பான திரு. முரசொலி மாறன் அவர்கள் டெல்லி மாநிலங்களவையிலேயே, “ராஜீவ் கொலைக்கு பிரபாகரன்தான் காரணம் என்றால் ராணுவத்தை அனுப்பி கைது செய்து அவரை தூக்கில் போடுங்கள்” என்று சொன்னாரே, அதுவும் நியாயம்தானே? இருவரின் கருத்தும் வேறு வேறா? ஒன்றா? அதை என்னவாக எடுத்துக் கொள்கிறீர்கள்?

சட்டமன்றதில் “பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவுக்கு, ‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ என்ற பட்டத்தை அளித்தாரே, ஐயா, ஆசிரியர் கி. வீரமணி! அந்த ‘பெருமையை’ என்னவாக பார்க்கின்றீர்கள்?

சரி, முன்பு அப்படி தீர்மானம் நிறைவேற்றிய அதே ஜெயலலிதாதான் பின்னாளில், அதே சட்டமன்றத்தில் ராஜிவ் கொலையாளிகள் ஏழுபேரையும், “திருவாளர்கள்’ என பெயரிட்டு அழைத்து விடுதலை செய்வதாக தீர்மானம் போட்டார். அந்த துணிச்சலை என்னவாக பார்க்கிறீர்கள்?

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் விடுவித்து ‘வரலாற்றில் நீங்க இடம் பிடித்த தமிழக முதல்வருக்கு நன்றி’ என தங்கள் சார்பாக போஸ்ட்டர் போட்டீர்களே அப்போது, ‘பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்” என பேசிய ஜெயலலிதா நினைவுக்கு வந்தாரா? இல்லையா? அதை எப்படி எடுத்துக்கொள்வது?

அடுத்து, ஈழத் தமிழர் விடுதலைக்காக போராடும் பிரட்டிஷ் தமிழ் போரமே (BTF) லண்டனில் நடத்திய மாநாட்டிற்கு தலைவர் ஸ்டாலினை அழைத்திருந்தார்களே என்கிறீர்கள்.

உண்மையில் அவர்கள் அழைக்கவில்லை. திமுக.வில் இருக்கும் திரு கே.எஸ். ராதாகிருஷ்ணன்தான் அன்று கலைஞர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க-அந்த முயற்சிகளை மேற்கொண்டு, லண்டன் BTF -வோடு பேசி அழுத்தம் கொடுத்து அதன் பேரில் அவர்கள் ஸ்டாலினை அழைத்தார்கள். உண்மை அதுதான்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று மறுத்து பேசினாலும் பேசலாம். உண்மை அதுவே. அந்த மாநாட்டில்கூட BBC ஆனந்தி அவர்கள், ‘எங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டீர்களே’ என விமர்சிக்க, அது காரம்சாரமாக மாற, பிறகு கேஎஸ்ஆர் சமாதானம் செய்து பிரச்சனை சுமூக்கமாக்கினதும் நடந்தது. ஆக அங்கும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை.

இங்கே சிலருக்கு
இனப்படுகொலையில் மனிதக்கறி தின்ற திமுக-காங்கிரஸ் கட்சியின் உறவு பிடிக்கின்றது. ஆமைக்கறி சாப்பிட்ட சீமானையும்-நாம் தமிழர் கட்சியையும் பிடிக்க மாட்டேங்கிறது.
எப்படிப்பட்டவர்களோடும் கசப்பை மறந்து நட்பை பாராட்ட தெரிகிறது. நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ்தேசியர்களை பிடிக்கமாட்டேங்கிறது.

வேண்டும் எனும்போது ஒரு விளக்கம்! வேண்டாம் எனும்போது ஒரு விளக்கம்!!

கலைஞர்தான் பாஜக-இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்தார் என்றீர்கள். அவருக்குப் பிறகு ஸ்டாலின் அவர்கள்தான் பாஜக-வை தீவிரமாக எதிர்க்கிறார் என்கிறீர்கள். அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின்தான் இந்துத்துவ பாஜக-வை எதிர்ப்பார், அவருக்கும் பிறகு இன்பநிதி உதயநிதிதான் பாஜக-வை எதிர்ப்பார் என்று போய்க்கொண்டிருந்தால் எப்படி? உண்மையிலேயே இவர்கள் பாஜக-வை எதிர்க்ககூடியவர்களா? அப்படிப்பட்டவர்களா ? மடி நிறைய கணமும்- பணமும் இருப்பவர்கள் எப்படி போராட முடியும்?

ஏன், விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, டி.டி,வி தினகரனின் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவர்களை ஒருங்கிணைத்து புதிய தலைமையை உருவாக்கினால், அது பாஜக-வை எதிர்க்காதா? திமுக மட்டுமேதான் எதிர்க்கும் என்றால் எப்படி? இன்று அதிகமு எப்படி இருக்கின்றது என நீங்கள் சொல்கிறீர்களோ, அதே இடத்தில் நாளை திமுக இருக்கப்போகிறது. வேறு என்ன மாற்றம் வந்துவிட முடியும்?

ஒவ்வொரு முறையும் கேழ்வரகில் எண்ணெய் வடியும்ங்கிற கதையையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்…அலுத்துப்போய்விட்டது.


பா.ஏகலைவன்
மூத்த பத்திரிக்கையாளர்

மூலப்பதிவு: https://m.facebook.com/story.php?story_fbid=3289318421080268&id=100000064280192

பிரபாகரனை கருணாநிதியோடு ஒப்பிடும் திமுகவினர்

எங்க தலைவர் குடிக்க மதுக்கடை தந்தார், பார்க்க டிவி தந்தார், போன் தந்தார், ஃபேன் தந்தார், ஆடு தந்தார், மாடு தந்தார், வீடு தந்தார்… உங்க தலைவர் பிரபாகரன் தமிழர்களுக்கு என்ன தந்தார்?

இப்படியான கூமுட்டைத்தனமான கேள்வியை ஒரு கூட்டம் கேட்கத் தொடங்கியுள்ளது. அந்த அறிவீனக் கூட்டத்திற்கு என் இனமான சொந்தங்கள் சார்பாக இந்த பதில்…

எட்டு வயதில் பகத்சிங்கை படித்துவிட்டு, அப்பா ஆசைப்படுவது போல அரசாங்க வேலையல்ல என் இலக்கு, என் மக்களுக்காக அரசாங்கத்தை உருவாக்குவதே என் இலக்கு என சொன்ன பிரபாகரன், எனக்கு சிறுவயதிலேயே மக்களைப்பற்றி சிந்திக்கும் சிந்தனையை தந்தார்.

தமிழர்களுக்கென ஒரு தலைவனை சொல் என யாராவது கேட்டால் பிரபாகரன் என பெயர் சொல்லும் வாய்ப்பை தந்தார்.

தமிழர்களுக்கு ஒரு இடரெனில் புயலென வரும் புலிப்படை எனும் நம்பிக்கை தந்தார்.

ராணுவம், வங்கி, ஊடகம் என தீவுக்குள் தனிநாட்டை கட்டியெழுப்பிய சமகால தமிழ்ப் பேரரசரை பற்றி எம் தலைமுறை படிக்க வரலாறு தந்தார்.

இனமே பலம், பலமே இனம் என இன விடுதலைக்காக போரிட்டு செத்தாலும் சாவேன், மண்டியிட்டு கால் நக்கி வாழ மாட்டேன் என்ற திமிரை தந்தார்.

பெண்களை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும், பெண்ணின் வீரத்தை புலிப்படையாக மாற்றி எப்படி மதிக்க வேண்டும் என்றும் அறிவை தந்தார்.

இனத்துக்கு துரோகம் இழைப்பவன் தேர்தல் உட்பட எதிலும் வெல்லவே முடியாது என்ற பயத்தை தமிழக/திராவிட அரசியலுக்கு தந்நார்.

சொந்த மகனுக்கு பூ பாதை, மற்றவர் மகனுக்கு முட் பாதை என இல்லாமல் சொந்த மகன்களை போர்க்களத்தில் பலிகொடுத்து தேர்க்காலில் மகனையிட்ட மனுநீதிச்சோழனுக்கு மறு பிறவி தந்தார்.

போர் உச்சத்தில் இருந்தபோது கொத்து கொத்தாக உயிர்கள் போகிறது, எதிரிகளை சிதறடிக்க அவர்களின் சிலரின் குடும்பத்தை சிதறடித்தாலே போதும், அனுமதியுங்கள் என கேட்ட படையிடம் நமக்கு எதிரி அதிகார வர்க்கமே ஒழிய அவர்கள் குடும்பம் இல்லை, அவர்கள் பெண்களும் நம் பெண்களும் வேறல்ல என சொல்லும் அளவுக்கு, அறமென்றால் என்ன என்ற அர்த்தத்தை தந்தார்.

உலகநாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் நேருக்கு நேர் வீழத்த முடியாமல் துரோகத்தால் தான் என் தலைவனை வீழ்த்த முடிந்தது என பேசும் வீரச் செருக்கை தந்தார்.

மகான் கிருபானந்த வாரியாரால், இறைவன் எப்பொழுதாவதுதான் ஒரு அவதார பிறப்பை உருவாக்கி இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், பூமிக்கு அனுப்புவதுண்டு. அப்படிப்பட்ட அவதாரம்தான் தம்பி பிரபாகரன். தம்பி பிரபாகரன் என் அப்பன் முருகனுக்கு சமமானவன், அவனுக்கு மரணமில்லை என விவரிக்கப்பட்டவர் தலைவர் பிரபாகரன். அப்படி ஒரு மனிதன் மக்களுக்காக வாழ்ந்தால் அவனுக்கு மரணமே இல்லை என்ற புரிதலை தந்தார்.

அவர் இருந்தால் எம் தலைவன், இல்லாவிட்டால் எம் இறைவன்.

ஓட்டுப் பிச்சைக்காக இந்த மண்ணை ஆண்டவர்கள் அள்ளிப் போட்ட இலவசங்களை பொறுக்கித் தின்ற நன்றிக்காக வாலாட்டும் நாய்க்கூட்டம் அல்ல இது. உரக்கச் சொல்வோம்
இது புலிக்கூட்டம்.

https://m.facebook.com/story.php?story_fbid=10223299663023921&id=1355437973

நாயினும் கீழா தமிழினம்?

குளவி தன் இனத்தை பெருக்குவதற்கு ஒரு புழுவை எடுத்து வந்து அதற்கு தன் நஞ்சை ஊட்டி உறங்க வைத்து அதனை கூட்டுப் புழுவாக்கி, பின் அதுவே குளவியாகி பறந்து வெளியாகி போய்விடும். அது போல் தமிழரிடத்தில் இருந்து போன இனமாக கன்னடரும் தெலுங்கும் மலையாளிகளும் இன்னமும் பல பிற மொழியினரும் அவர்களுக்கு அந்த ஆரிய சிந்தனையும் பார்வையும் மாறாமல் தொடர்கிறது. அதனால் தான் தனித்த பெருமைக்குரிய இனமாக வாழ்ந்து வரும் தமிழரை பிடிப்பதில்லை.

அதனாலே தமிழரை பார்த்து அறிவுரை சொல்ல எழுவதும். தமிழரிடையே தன்மானம் இல்லை என்பதும். ஆரிய அடிமைகள் என கூசாமல் தேங்காய் வியாபாரம் செய்வதும் அதன் வழியாக தமிழரென்றால் திட்டித் தீர்ப்பும்.

மாவீரரான ஈழத்தமிழ் மறவர் தலைவர் பிரபாகரன் போன்றவர் பெயர்களை கேட்டாலே வெறுப்பதும். தமிழரின் உணர்வுகளை பார்த்து அவர்களுக்கு உறவாக நடிப்பதும் பின்னால் நின்று, தமிழரின் காவல் தெய்வமாக நின்ற வீரப்பன் அவர்களை சுட்டு முடிப்பதும் என்பதெல்லாம் தொடரும் கதை.

தமிழருக்கு தான் அவை யாவும் புரியாது என்பதை திரிபுகள் புரிந்து வைத்துள்ளன. தங்களுக்குள்ளே அவர்கள் பலவாக பிரிந்து நின்று அவரை இவர் வெறுப்பதாகவும் இவரை அவர் வெறுப்பதாகவும் காட்டி நம்மை ஏதாவது ஒருபக்கம் இருக்க வைத்து ஏமாற்றுகின்றனர்.

வெறுப்பதும் இருந்தாலும் புழுவானாலும் அது ஆரிய குளவியாகவே மாறிவிடுகிறது. அது தன் இனம் எது? தன் நட்பு உறவுகள் எது என்பதை மறந்து விடும். அந்த குளவியே மீண்டும் ஒரு புழுவை தேடி அலையுமே தவிர, தான் பட்ட துன்பத்தையும் உரு மாற்றத்தையும் மறந்தே விடும்.

அவற்றை உணராத தமிழரே தன்னை திராவிடன் என சொல்வோரை பார்த்து ஆமாம் ஆமாம்! என் கட்டியழ.. நம் உரிமைகளை அவர்களிடமே இழந்து கிடக்கிறோம். அதனை உணர்வதே துல்மான் போன்ற பலருக்கும் நாம் தரும் சரியான பதிலாக இருக்கும். நாயினும் கீழானவர்களின் அறிவு திருந்தும்

வாழ்க எங்களின் தமிழினம்!
வலு பெறுக தமிழரின் ஒற்றுமை உணர்வுகள்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

தமிழனை அவமதிக்கும் மலையாளியே திராவிடனுக்கு நண்பன்?

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு பிறகு திராவிடக் கட்சிகள் ரொம்பவே அம்பலப்பட்டு கிடக்கின்றன.

அதேபோல், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வந்த பெரியாரிய இயக்கங்களும் தற்போது விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதரிப்பதையும் கை கழுவத் தொடங்கி விட்டன.

தமிழக இளைஞர்களிடையே எழுந்து வரும் தமிழ்த் தேசிய எழுச்சி தான் இதற்குக் காரணம்.

முள்ளிவாய்க்கால் படுகொலையில் தி.மு.க.வும் குற்றவாளி என்பதை உணர்ந்த தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்ட இளைஞர்கள் இன்றுவரை அம்பலப்படுத்தத் தவறுவதில்லை.

அதுமட்டுமின்றி, முள்ளிவாய்க்கால் படுகொலைப் புயலில் ஆலமரமாய் நின்ற திராவிடக் கருத்தியல் கோட்பாடு சுக்குநூறாய் உடைந்து தொங்கி கொண்டிருக்கின்றன.

திராவிடம் என்ற பெயரில், ஒரு கையில் திமுகவையும், மறு கையில் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தூக்கி வந்த பெரியாரிய இயக்கங்களுக்கு இது பலத்த அடியைத் தந்தது. எனவே இனிமேல் திமுகவை பாதுகாத்தால்தான் திராவிட கருத்தியலை பாதுகாக்க முடியும் என்று கணக்கு போட்டனர்.

அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பை தூக்கி எறிந்து விட்டு, இரண்டு கைகளாலும் திமுகவை தாங்கிப் பிடித்து தேர்தலில் திமுகவிற்கு வாக்கு கேட்டனர்.

அதேபோல், அண்டையில் வாழும் தேசிய இனங்களையும் தங்களின் சொந்த திராவிட இனச் சகோதரராக ஏற்றுக் கொள்வதன் மூலமும் திராவிடத்தை பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர்.

முள்ளி வாய்க்கால் படுகொலைச் போரின் போது மலையாளிகள் துணை நின்றதை அம்பலப்படுத்திய வாயை தற்போது பினாயில் போட்டு கழுவவும் துணிந்து விட்டனர்.

தமிழ்த் தேசிய இயக்கங்கள் எதை ஆதரித்தாலும் அதை எதிர்ப்பது, எதை எதிர்த்தாலும் அதை ஆதரிப்பது என்பதுதான் இன்றைய பெரியாரிய இயக்கங்களின் நிலைப்படாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை “வரனே அவஷிமுண்டு’
என்ற படத்தில் நாயோடு ஒப்பிட்டதற்காக மலையாள நடிகர் மம்மூட்டி மகன் துல்கர் சல்மானை கடுமையாக இணையத்தில் எதிர்த்து தமிழ்த் தேசிய இயக்கங்கள் மன்னிப்பு கேட்க வைத்துள்ளன.

ஆனால் “பிரபாகரன் தோழன்” என்று சொல்லக்கூடிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்களோ எதிர்ப்பது பயனற்றது என்கிறார். மலையாளிகளும் பிரபாகரன் என்று பெயர் வைத்துக் கொள்வதால் இழிவுபடுத்தும் நோக்கம் அவர்களுக்கில்லை என்கிறார்.

அந்த திரைப்படம் குறித்து நடுநிலையாளர்கள் பலரும் இது வஞ்சனையுடன் திணிக்கப்பட்ட காட்சி என்கின்றனர். ஆனால் படத்தையே பார்க்க வில்லை என்று சொல்லி விட்டு கொளத்தூர் மணி அவர்கள் முன்கூட்டியே அந்தப் படத்திற்கு நற்சான்றிதழ் தருவது எப்படி?

எழுத்தாளர் சாம்ராஜ் என்பவர் மலையாள திரைப்படங்கள் குறித்து ”நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்” (நற்றிணை வெளியீடு) என்று ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்.

அதில் “மலையாள சினிமா சித்தரிக்கும் தமிழர்கள் ” என்ற மிக முக்கியமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தமிழர்களை இழிவுப்படுத்தி எடுத்த 56 மலையாள படங்களை கொடுத்துள்ளார். 1985 முதல் 2015 வரை வந்த திரைப்படங்களாகும்.

தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கம் இந்தப்படத்தில் இல்லை என்று சொல்லும் கொளத்தூர் மணி அவர்கள் மற்ற படங்களில் அப்படி இல்லை என்று இந்தப் புத்தகத்தை படித்து விட்டு சொல்லத் தயாரா?

காலங்காலமாக பாண்டியன் என்றும், பட்டி என்றும் தமிழர்களை இழிவு செய்யும் மலையாளிகளை நட்பு சகோதரர்கள் என்று வாய் கூசாமல் புளுகுவதேன்?

இனிமேல், தாங்கள் ‘துல்கர் சல்மானே என் தோழன்” என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், இற்று விழுந்து கொண்டிருக்கும் திராவிடத்தை பாதுகாக்க அது ஒன்றுதானே வழி!

-கதிர் நிலவன் தமிழ்த்தேசியன்

பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் காட்சியை நீக்க வேண்டும்

அறிக்கை: துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு .வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்! – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி

https://bit.ly/2Scv8OH

மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த்தேசிய இனத்தின் முகமாகவும் முகவரியாகவும் அடையாளமாகவுமிருக்கும் இப்பேரினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்ந்த உன்னதத் தலைவராம் மேதகு.வே.பிராபகரன் அவர்களின் பெயரை தவறாகப் பயன்படுத்திக் அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலகமே வியக்கும் தம்முடைய போர்த்திறனாலும், மரபு சார்ந்த நவீன வலிமை வாய்ந்த இராணுவ கட்டமைப்பினாலும், கட்டுகோப்பான ஒழுக்கத்தினாலும், இன விடுதலைக்குக் குரல்கொடுக்கும் உலக மாந்தர்களால் இன்றளவும் போற்றப்படும் மேதகு. வே.பிரபாகரன் அவர்களைத் நடிகர் துல்கர் சல்மான் அவர்களோ, அல்லது தொடர்புடைய அவரது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. மேலும் துல்கர் சல்மான் அவர்களின் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA)” திரைப்படத்திலும் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்த பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும். அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

எனவே தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது. பழைய படத்தில் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிப்பு என்பது தொடர்ந்துக்கொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம்பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி