வீரம் செறிந்த புலிக்கூட்டமும்; மலத்தில் மேயும் பன்றிக்கூட்டமும்!?

இச்செய்தி உண்மையாக இருந்தால்,

மண்புழுவைப் பார்த்து பயப்படுகிற ஆரியக் கூட்டத்தின் வழிவந்த எஸ்வி சேகர்,

புலிக்கூட்டமாம் தமிழர் கூட்டம் “அந்த கூட்டத்தின் வழிவந்த மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களே கூறியிருப்பது,

உச்சபட்ச அதிகாரம் முழுமையும் பிராமணர்களால் நிரம்பியே இருக்கிறதைக் காட்டுகிறது..!

தமிழகத்தின் முதல்வரை
இவன் இப்படி பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..!

இதற்கெல்லாம் யார் காரணம் தமிழர்களாகிய நாம் தான்..!!

ஆரியனா வருவான்,
தமிழருக்கு எதிராக தமிழகத்தில் தமிழிலே படம், நாடகம் எடுப்பான்,

நாமளும் வாயைப் பிளந்துகொண்டு பார்த்தோம்.!

திராவிடன் என்று கூறி தெலுங்கர்கள் வந்தார்கள்,

ஒட்டுமொத்த சினிமா துறையையும் கைப்பற்றி வைத்துக் கொண்டார்கள்.!

அதையும் தமிழர்கள் வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!!

எவ்வளவு தூரம் இந்த ஓட்டம் ஓடும் என்று பார்ப்போம்…!?

எடப்பாடி ஐயா உங்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் மக்கள் வைத்த பெயர் அடிமை என்பது..!

இந்தச் சொல்லை மற்றவர்கள் வாயால் நான் கேட்கும் பொழுது,

என் மனம் ரொம்ப வருந்தும்.!

அதுவும் திராவிட சிந்தனை கொண்டு சில அதிகாரத்திலுள்ள தெலுங்கர்கள் பேசும்பொழுது,

மிகவும் மட்டமாக பேசுவார்கள்.!

ஒரு தமிழர் தானே தமிழ்நாட்டை தற்பொழுது ஆளுகிறார்,
அவரால் இந்திய ஒன்றிய அரசையும் எதிர்த்து மாநில உரிமையை நிலை நாட்ட முடியுமா.??

“அதற்கு கருணாநிதி மேல்..!
‘கன்னட ஜெயலலிதா மேல்..!தெலுங்கர் அண்ணாதுரை மேல்..!”தமிழகத்தை ஆண்டதற்கு என்று கூறுவார்கள்…!

இதற்கு என்ன அர்த்தம் ?தமிழகத்தை பிற மொழியாளர்கள் தான் ஆட்சி செய்வார்கள் ..!
தமிழர்கள் ஆட்சி செய்வதற்கு ஒரு போதும் தகுதி இல்லாதவர்கள் ..!!
என்ற தொனியில் பேசி வருகிறார்கள்..!

ஐயா’ தரணி ஆண்ட இனம் நாம்..!

இமயமலையை ஆண்ட இனம் நாம்..!

உலகம் முழுக்கும் படையெடுத்து உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த இனம் நாம்..!!

உலகில் மூத்த மொழி தமிழ் மொழிதான்..!
உலகின் முதல் மொழி தமிழ் மொழிதான்..!!
அப்பேர்ப்பட்ட இனத்திற்கு சொந்தக்காரர் நாம்..!!

காட்டை திருத்தி, செழுமைப்படுத்தி, நிலத்தைப் பண்படுத்தி, நாகரீக வளர்ச்சியை இந்த உலகத்திற்கு கொடுத்த இனம் நாம்..!

நாகரிகம் என்றால் என்னவென்று தெரியாத கூட்டத்தில் வந்தவன் எல்லாம் என்னென்னமோ வாய்க்கு வந்ததையெல்லாம் தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு பேசி வருகிறார்கள்.

‘உங்கள் மனம் துடிக்கிறதோ இல்லையோ’ எங்கள் தமிழர் மனம் துடிக்கிறது..!

உங்கள் அதிகாரம் இந்த மக்களுக்காக போராடுகின்ற எங்களை சிறைப்படுத்த மட்டும்தான் காவல்துறையை பயன்படுத்தி கொள்வீர்களா..??

இந்த நாய் சேகர் மீது உங்கள் அதிகாரம் அல்லது உங்க கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறையினர் செயல்பட மாட்டார்களா..??

இவனை பிடியுங்கள் ,சட்ட நடவடிக்கை எடுங்கள் ,பிடித்து உள்ளே போடுங்கள்..!

இல்லையெனில் ஆண்மையுள்ள ஒரு தமிழரிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு நீங்கள் உட்கார்ந்து ஓரமாக வேடிக்கை பாருங்கள்..!

கண்ட கண்ட பன்னிக் கூட்டமெல்லாம் பேசுகிறது புலியிடம்..!?

-தீரன் திருமுருகன்.

ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்

திராவிடம் எனும் சொல்லாடலுக்கு முன்பே வரலாற்றில் ஆரியனை அஞ்சி நடுங்க வைத்த தமிழினத்தின் கதை

கடைச்சங்க கால பாண்டியர்களில் ஒருவரான இவர் மதுரையை தலைநகரமாக கொண்டு பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தமிழகத்தை கைப்பற்ற வந்த ஆரியர் போரில் வென்று அடித்து துரத்தியதால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான்

சேர,சோழர்கள் என பலரையும் வென்றவன், சேரன் செங்குட்டுவனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவன்
கல்வியின் பெருமையை புறநானூற்றில் பாடலாக பாடி வரலாற்றுப் புகழ் பெற்றான்.

கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய உத்தரவிட்ட நெடுஞ்செழியன், கண்ணகியின் விளக்கம் கேட்டு தான் நீதி தவறியதை உணர்ந்து மனம் நொந்து

“யானோ அரசன்! யானே கள்வன்!
தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது”


எனத் தன் உயிரை விட்டான் இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றாா்கள்

மதுரை பாண்டிகோவிலில் கடவுளாக இருப்பது இவர்தான் என்றும் செவி வழிச்செய்தி உள்ளது

ஆரியமும் திராவிடமும் தமிழர் பகையே!

கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிவிற்கு பிறகு தமிழக அரசியல் பரப்பில் கருத்தியல் தளத்தில் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. நீதி வேண்டி தன்னையே தீக்கிரையாக்கி மறைந்த மாவீரன் “முத்துக்குமார்” பெயரில் கூட எண்ணற்ற இயக்கங்கள் ஊருக்கு ஊர் முளைத்தன. அதுவரை திராவிடம் – தமிழ் தேசியம் என்ற இரண்டு சொற்களுக்கான முரண்கள் குறித்து வெகுமக்கள் தளத்தில் புரிந்து கொள்ளும் போதாமை இருந்து வந்தது.

ஆனால் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து “திராவிடம் என்பது பகை கருத்தியல். தமிழ் தேசியமே மண்ணின் மைந்தர்களான விடுதலைக் கருத்தியல்” என்கிற புரிதலை இந்த மண்ணில் உண்டாக்கினார்கள். மக்களிடையே ஏற்பட்ட புரிதல் சார்ந்தும் எழுச்சி சார்ந்தும் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.

இதில் காலப்போக்கில் பல இயக்கங்கள் மறைந்தன. தோன்றிய ‘முக்கிய இயக்கங்கள்’ சில திமுக கம்பெனியின் கிளை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில் சமரசம் ஆகாமல் திராவிடத்தை எதிர்த்தும், இந்திய தேசியக் கட்சிகளை எதிர்த்தும் தனித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்காக இந்த நொடி வரை உறுதியாக நாம் தமிழர் மட்டுமே களத்தில் நிற்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மதுரையிலே தொடங்கப்பட்டபோது அந்த மேடையிலேயே, “இனி ஒருபோதும் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை” என்கிற தனது அரசியல் நிலைப்பாட்டை சீமான் அறிவித்தார். அந்த நொடி முதல், இந்த நொடி வரை அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து துளியும் பிசகாமல் உறுதியாக இருந்து வருகிறார். அதனால் அவர் அடையும் தோல்விகளைப் பற்றியோ பின்னடைவுகளை பற்றியோ அவர் பொருட்படுத்துவதே இல்லை. சொல்லப்போனால் சமரசம் ஆகாமல் இருப்பதுதான் தனது அடையாளம் என அவர் எண்ணுகிறார். இன்னும் சுருக்கமாக சொன்னால் அதுவே அவரது வெற்றி.

ஆனால் ஒரு இன அழிவின் துயரத்திலிருந்து இயக்கங்களாக பரிணமித்த “சிலர்” எந்த திராவிடம் தமிழர்களின் அழிவிற்கு துணை போனதோ அந்த திராவிடத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு செயல்பட்டு வருவது குறித்து நமக்கு எந்தக் கருத்தும் இல்லை.
அது அவர்களது பிழைப்பு குறித்தான அவர்களது பாடு.

ஆனால் அவர்களது பிழைப்பிற்காக.. தங்கள் கொள்கையில் உறுதியாக நிற்பவர்களை பற்றி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருவதை நாம் கவனித்து வருகிறோம். பல அவதூறுகளுக்கு நாம் பதில் சொல்வதில்லை. அது நம் வேலையும் இல்லை. ஆனால் பதில் சொல்லாமல் நாம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அதையே வரலாறாக பதிவு செய்வதை எதனாலும் அனுமதிக்க முடியாது.

பத்தாண்டுகள் கழிந்து விட்டது. தமிழ் சமூகத்தின் அழிவை கடந்து போகச் சொல்லும் பத்தாம் பசலிகள் சொற்களை
வரலாறாக பதிய முடியாது. கருணாநிதி மகன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டியவர்களோடு தமிழ் சமூகத்திற்கான அரசியல் பேசுவதாக சொல்பவர்கள் இணைந்து செயல்பட முடியாது. அவ்வாறு இணைந்து செயல்படும் பட்சத்தில் அது தமிழர்களுக்கான அரசியல் அல்ல. அது கருணாநிதி குடும்பத்திற்கான சேவை.

அப்படி சேவை செய்ய துணிந்தவர்கள் அதை தாராளமாக பரவசமாக செய்துவிட்டு போகட்டும். அதில் நமக்கு துளியும் கருத்தில்லை.

உண்மையாக நிற்பவர்களை பற்றி அவதூற்றுக் கற்பிதங்கள் உருவாக்குவதற்காக கூலி வாங்கிக்கொண்டு உளறி தொலைப்பதை எல்லாம் அறிவுஜீவித்தனம் என காட்டவும் கூடாது.
அதேபோல் யாரை அறிவுஜீவிகள் என அடையாளம் காட்டுவதிலும் கவனம் தேவை.

கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் தக்க பதில் இருக்கிறது. எங்கே பதிலளித்தால் பொறாமையினாலும், பிழைப்புத்தனத்தினாலும் கேள்விகள் போன்று எழுந்து வருகிற சில்லறைத் தனங்களுக்கு எங்கே முகவரி கிடைத்து விடுமோ என்கிற கவனத்தில் பதில் சொல்லாமல் கடந்து போகிறோம்.

இதில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது.

பதில் சொல்லாமல் இருப்பதாலேயே அவதூறுகள் உண்மையாகி விடாது. அதுவே வரலாறாகவும் மாறிவிடாது.

மணி செந்தில்.

தமிழனின் பொருளாதாரத்தைச் சுரண்டும் திராவிடமும் இந்தியமும்

கீழ்மட்ட வேலையும் நமக்கில்லை,

அரசு மற்றும் பொது நிறுவனங்களிலும் நமக்கு வேலையில்லை,

மேல்மட்ட படிப்பும் நமக்கு இல்லை,

தமிழனை கொன்ற வஞ்சம் தீர்த்த ஆரியம் சீனத்திடம் பம்முகிறது.

நல்லத சொன்னா எவன் கேக்குறான்!
இந்தியா சீனா தாக்குதல் பிரச்சினையை அன்றே பேசிய சீமான்! அது மட்டும் அல்ல இரண்டாம் பாக் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து பாக் நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் கொழும்புவில் தங்கி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த உதவியது (விசாகபட்டின தாக்குதல்). தற்சமயம் சீனாவின் உத்தரவு படி இலங்கையின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த.

வடுகமும் ஆரியமும் கைக்க

1)பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ந்து மிக நன்றாக படித்து குரூப்-1 குரூப்-2 டிஎன்பிசி(tnpsc) யுபிஎஸ்சி (upsc)தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும் மற்ற அரசு துறையில் அதிகாரியாகவும் நாம் அமர வேண்டும்.

2)சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து மிகப்பெரிய வழக்கறிஞராகவும் நாம் ஆக வேண்டும். வழக்கறிஞராக ஆனபின் நம் நாயுடு சமூகத்திற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் இப்படி எல்லாத் துறைகளிலும் நாம் நாயக்கர் மக்கள் இடம்பெற வேண்டும் ,
இருக்க வேண்டும்.

3)பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வேண்டும் பின்பு நம் இனத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாக வழிநடத்தி அவர்களையும் அரசுப்பணியில் அமரச் செய்வது நமது கடமையாகும்.
.
4)நம் நாயுடு சமுதாய ஜனத்தொகையை பெருக்க மூன்று அல்லது நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு கல்வியும் நல்ல ஒழுக்கமும் கற்பித்து வளர்த்து அவர்களுக்கு நம் நாயக்கர் குல கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வரலாற்றையும் போதிக்க வேண்டும்.

5)நம் குழந்தைகளுக்கு தெலுங்கு மொழியில் பேச கற்றுக் கொடுக்க வேண்டும்.

6)சனிக்கிழமை தவறாமல் பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் நெற்றியில் திருநாமம் இடுவது ஒவ்வொரு நாயக்கரின் கடமையாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து பெருமாளை சேவிக்க வேண்டும். சனிக்கிழமை அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.

7)நம் நாயக்கர் மன்னர்கள் இந்து மதத்தை காப்பாற்ற தங்கள் இரத்தத்தை சிந்தி நமது மதத்தை காப்பாற்றினார்கள். ஆதலால் நாயக்கர் ஆகிய நாம் ஹிந்து மதத்தின் மேல் பற்றாக இருக்கவேண்டும்.

8)நாயக்கர் ஆகிய நாம் அரசியலிலும் எம்பி எம்எல்ஏ ஆகிய பொறுப்பில் அமரவேண்டும் .

9) நம் ஊர்களில் உருவாக உள்ள தெருக்களில் நம் மன்னர் பெயரை வைக்க வேண்டும் (உதாரணமாக திருமலை நாயக்கர் நகர் )(கிருஷ்ணதேவராயர் நகர்) நாம் குடியிருக்கும் ஒவ்வொரு ஊரிலும் நாயக்கர் சங்கங்களை ஏற்படுத்த வேண்டும்.

10)இந்து மதமும் நாயக்கர் ஜாதியும் நம் இரு கண்கள் அதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

11)திருமண பத்திரிகையில் நம் மன்னர்கள் படத்தையும் இடம்பெறச் செய்யவேண்டும்.

12)நம் பெயருக்கு பின்னால் நாயுடு என்றும் நம் குழந்தைகளுக்கு பெயருக்குப் பின்னால் நாயுடு என்ற பெயரும் சேர்த்துக் கொள்ள வேண்டும் நம் பிறப்புச் சான்றிதழும் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.

13)ஆண்டுக்கு இருமுறை திருப்பதி செல்ல வேண்டும்…..

14)நம்மிடம் கிளை சண்டைகள் கூடாது நான் கவரா, நான் கம்மவார், நான் வெள்ளமா, நான் ராஜகம்பலம், என்று கூறிக் கொண்டு சண்டையிட கூடாது ஒற்றுமையே நமது பலம்.

15) ஹிந்து மத விரோத கட்சிகள் ஆகிய திமுக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுக்கு நாம் ஓட்டளிக்க கூடாது … நம் நாயக்கர் குலமக்கள் இந்துக்களுக்கு ஆதரவாக செயல் புரியும் பிஜேபி (bjp) கட்சி வாக்களிக்க வேண்டும் வாழ்க நாயக்கர் குல சமுதாயம் !! வாழ்க திருமலை நாயக்கர்!!

மனிதப் புனிதரா சீமான்?

எழுத்துக்களை ஊடறுத்து உள் செல்லும் முன் ஒரு அன்பு வேண்டுகோள். விருப்பு வெறுப்பின்றி, மனதை சமநிலைப் படுத்திக்கொண்டு இதை வாசித்தால் நன்று.

சீமான்

இந்த ஒற்றைப் பெயர் இன்று பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் நண்பர்களையோ, அல்லது சீமானை எனக்குப் பிடிக்கும் என்று சொல்பவர்களையோ பார்த்த உடனேயே பதறிப்போய் அவர்களிடம் தர்க்கம் செய்யத் தொடங்கி விடுகின்றனர்.

சீமான் வெறுப்பாளர்களே!


திறந்த மனதோடு, சமநிலையான புத்தியோடு ஒரு நிமிடம் நின்று சிந்தித்து சொல்லுங்கள் சீமானை நீங்கள் வெறுப்பதற்கான மிகச்சரியான குறைந்தபட்சம் உங்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே ஒரு காரணத்தைச் சொல்லுங்கள்.

நல்லது.

இப்போது உங்களுக்கு ஏதோ ஒரு காரணம் தோன்றியிருக்கும் அல்லவா. அந்த காரணத்தை அல்லது அந்த விமர்சனத்தை நீங்கள் நேசிக்கும் கட்சிக்கு அப்படியே பொருத்திப் பாருங்கள். விருப்பு வெறுப்பற்று சொல்லுங்கள் நீங்கள் சீமான் மீது வைக்கும் விமர்சனம் நீங்கள் விரும்பும் கட்சிக்கு கொஞ்சமும் பொருந்தவே பொருந்தாதா ? எனில் சீமானை மட்டும் விமர்சிக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது. இன்னும் எளிமையாகவே சொல்கிறேன்.

சீமான் மீது பொது வெளியில் மாற்றுத் தரப்பு நண்பர்களால் முன் வைக்கப்படும் விமர்சனங்கள் ஒவ்வொன்றாய் பார்ப்போம்.
திமுக, மதிமுக மற்றும் இடதுசாரி தோழர்களால் வைக்கப்படும் பிரதான விமர்சனம் சீமான் மறைமுக பாஜக ஆதரவாளர். தமிழ்த்தேசியம் என்ற பெயரில் சாதிய உணர்வோடு இருப்பவர். சீமான் மீது மதம், சாதி சார்ந்து பிரதானமாக வைக்கப்படும் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளை முதலில் பார்ப்போம்.
திராவிடம் என்பது ஒரு சித்தாந்தம். அது ஆரியத்திற்கு எதிரானது. திராவிடத்தை மறுப்பது என்பது ஆரியத்திற்கு வலு சேர்ப்பது போலாகும். என்பதே திராவிட சித்தாந்தவாதிகள் மற்றும் திராவிடக் கட்சிகளின் விமர்சனம்.

ஆரியருடன் கைக்கோர்த்திருக்கும் திராவிடம்

நல்லது திராவிடம் என்பது ஆரியத்திற்கு எதிரானது. ஆரியத்தை வீழ்த்துவதே பிரதான நோக்கம் என்று சொன்னது திமுக. 1967 தேர்தலில் அதே திமுக வால் குல்லுகப்பட்டர் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்ட, குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வர முயற்சித்தார் என்று திமுக இப்போது வரை கடும் விமர்சனத்தை முன் வைக்கும் ஆரியரான, ராஜாஜியுடன் தேர்தலில் கூட்டணி வைத்தது திமுக. ஆரிய ராஜாஜியால் மூடப்பட்ட பள்ளிகளை தெருவுக்கு தெரு திறந்து, மதிய உணவு அளித்து குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்த பச்சைத்தமிழரை, அவர்களின் மொழியில் சொல்வதென்றால் பச்சை திராவிடரான காமராஜரை வீழ்த்தியது திமுக. காமராஜரை வீழ்த்த ஆரியருடன் கைகோர்த்த திமுகவினர் சொல்கின்றனர் சீமானைப் பார்த்து அவர் ஆரிய ஆதரவாளர் என்பது விந்தையிலும் விந்தை.

வாஜ்பாய் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பார்ப்பனரான ஜெயலலிதா விலக்கிக் கொண்டபோது, பார்ப்பனக் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரம் வாய்ப்பே இல்லாமல் போக வேண்டிய சூழலில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்ததோடு தேர்தலில் கூட்டணியும் வைத்து முதல் முறையாக மத்தியில் பாஜக ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியை நிறுவிட துணை நின்றது திமுக. அந்த திமுகதான் சொல்கிறது சீமானை பாஜக வின் மறைமுக ஆதரவாளர் என்பது விந்தையிலும் விந்தை.

நாடி நரம்பெல்லாம் பார்ப்பனத்தன்மை ஊறிப்போய் உள்ள ஒரு மனிதர் ஹெச்.ராஜா. தமிழகத்தில் சாரணர் ( ஸ்கவுட் ) படைக்கான தேர்தலில் கூட வெற்றி பெற வலிமையில்லாத மனிதர், நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கும் பாஜகவைச் சேர்ந்தவர். தமிழகத்தில் தலைகீழாக நின்றாலும் அவரால் ஒரு கவுன்சிலா் தேர்தலில் கூட வெல்ல முடியாது. அவருக்காக வீதி வீதியாக வாக்குகள் சேகரித்து தேர்தலில் கடும் உழைப்பைச் செலுத்தி ஹெச்.ராஜாவை எம்.எல்.ஏ. ஆக்கி அழகு பார்த்தது திமுக. அந்த திமுக சீமானைப் பார்த்து கேள்வி கேட்பது விந்தையிலும் விந்தை.

காமராஜரையும், கக்கனையும் பார்க்காதவர்கள் இன்றளவும் வாழும் காமராஜராக, கக்கனாகப் பார்ப்பது ஐயா நல்லகண்ணு அவர்களைத்தான். பாஜக உடன் கூட்டணி வைத்த திமுக, நாடாளுமன்றத் தேர்தலில் ஐயா நல்லகண்ணுவை தோற்கடிப்பதற்காக அயராது உழைத்ததோடு அவரை தோல்வியடைச் செய்தது மட்டுமின்றி அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்த்தது திமுக. அவர்கள்தான் சீமானைப் பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.

சிறுபான்மையினரை ஏமாற்றும் திராவிடம்

குஜராத்தில் அப்பாவி இசுலாமியச் சொந்தங்கள் மோடி ஆட்சியின்போது கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டும் காணாமல் இருந்ததோடு, அப்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து, மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்திருந்த திமுக தான் சொல்கிறது நண்பர்களே சீமானை நம்பாதீர்கள் என்று.

மக்களவையில் முத்தலாக் மசோதாவை ஆதரித்து வாக்களிக்கிறது அதிமுக, மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களிக்க மனமின்றி வெளிநடப்பு செய்கிறது. அந்த அதிமுக. அதே அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரவோடுதான் நிறைவேறுகிறது சிஏஏ மசோதா. மக்களவையில் ஒரு நிலைப்பாடு மாநிலங்களைவியல் ஒரு நிலைப்பாடு என்றிருக்கும் அதிமுகவிற்கு கொஞ்சமும் சளைக்காமல் என்.ஐ.ஏ. மசோதாவை ஆதரித்து வாக்களித்த திமுக அடுத்த நாள் முரசொலியில் என்.ஐ.ஏ. மசோதா சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது என்று நீலிக்கண்ணீர் வடித்தது. எனில் அந்த மசோதாவை ஏன் ஆதரித்தீர்கள் என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் அவர்கள் உங்களை நோக்கி ஒரு எதிர்கேள்வி கேட்பார்கள், “ தோழர் நீங்கள் ஏன் பாஜக ஆதரவாளர் போல் பேசுகிறீர்கள் “ என்று. சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்று தெரிந்தே சிஏஏ வை ஆதரித்த அதிமுக, என்.ஐ.ஏ.வை ஆதரித்த திமுக இரண்டும் சிறுபான்மை மக்களுக்கான கட்சி. ஆனால், இந்த இரண்டையும் எதிர்த்து தொண்டை கிழிய கத்தி எதிர் பரப்புரை செய்து அதனால் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கை வாங்கிய சீமான் பாஜக ஆதரவாளரா ? விந்தையிலும் விந்தை.

தமிழர்களுக்கு எதிரான பொதுவுடைமை

ஒரு விவாதத்தில் யாரென்றே தெரியாத ஒரு சங்கி, சிபிஎம் தோழர் சுந்தரவள்ளியைப் பார்த்து நாம் தமிழர் கட்சிக்கு பதில் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டாராம். எனவே நாம் தமிழர் கட்சிக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதாம். என்ன வாதம் இது. இதுதான் உங்கள் அளவுகோல் எனில், எத்தனை விவாதங்களில், பாஜக வினர், சிபிஎம் கட்சியினரைப் பார்த்து கேரளாவில் காங்கிரஸ் உங்களை நோக்கி வைக்கும் விமர்சனங்களுக்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். எனில், பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் ரகசிய உறவு என்று சொல்வீர்களா ? இது என்ன சொத்தையான வலுவற்ற வாதம்.

பொதுவுடைமையும் பார்ப்பனியமே

வலுவான ஆதாரப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். மோடி அரசால் கொண்டுவரப்பட்ட உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஆதரித்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதை விடவா ஒரு பார்ப்பனத் தன்மை இருக்கப்போகிறது. ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்கும் செலுத்தியதே. அந்த உயர் சாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து தொடர் பரப்புரை செய்து வரும் சீமானைப் பார்த்து ஆதரித்து வாக்களித்த சிபிஎம் சொல்கிறது சீமான் ஒரு பார்ப்பன ஆதரவாளர் என்று, இது விந்தையிலும் விந்தை.

உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இதுவரை அக்கட்சியின் பொலிட் பீரோவில் ஒரே ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினருக்குக் கூட இடம் கொடுக்கவில்லையே அது ஏன் ?
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கூட பொலிட் பீரோ உறுப்பினராக ஆக்க மனமில்லாத கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் பொதுத்தொகுதியிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி, இவரை தமிழராக பார்த்தால் எனக்கு வாக்கு செலுத்து, இல்லையேல் உன் ஓட்டு எனக்கு தீட்டு, உன் ஓட்டே வேண்டாம் என்று மேடைக்கு மேடை பரப்புரை செய்த சீமானைப் பார்த்துச் சொல்கிறது அவர் தமிழ்த் தேசியத்தின் பெயரால் சாதியை வளர்க்கிறார் என்று. விந்தையிலும் விந்தை.

திராவிடமும் சாதிய வன்மமும்

மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களை சாதியைச் சொல்லி மிக மிக இழிவாகப் பேசியவர் வைகோ. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அவர் மக்கள் நலக்கூட்டணியில் இருந்தார். அப்போது ஒரு செய்தியாளர் சந்திப்பில், கலைஞரைப் பார்த்து, இதற்குப் பதில் நீங்கள் வேறு ஏதாவது தொழில் செய்யலாம். உங்கள் பரம்பரைத் தொழில் இருக்கிறதே என்றார். இப்போது கூட பலரும் அந்த தொழிலை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே அந்த தொழிலைச் செய்யுங்கள் என்று மிக மிக இழிவாகப் பேசினார். அந்த வைகோவை அடுத்த சில ஆண்டுகளிலேயே மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்த திமுகவைச் சேர்ந்த அப்பாவித் தொண்டர்களிடம் ஒரு கேள்வி. இது போல் சாதி ரீதியில் என்றாவது கலைஞரை தரக்குறைவாக சீமான் பேசியதுண்டா ?

ஒரு புறம் உங்கள் தலைவரை மிக இழிவாக பேசிய ஒருவரை மாநிலங்களவைக்கு அனுப்புவதும், இன்னொருபுறம், அரசியல் ரீதியிலான விமர்சனங்களை முன் வைக்கும் சீமானை தரம் தாழ்ந்து பேசுவதும் வேதனையிலும் வேதனை.

கொள்கையற்ற திராவிடம்

காங்கிரசை கருவறுப்பதே நோக்கம் என்று சொல்லி பாஜக உடன் கூட்டணி வைத்து மோடியை தன் தோள்களில் சுமந்து தமிழகம் முழுவதும் வலம் வந்த வைகோ, அடுத்த தேர்தலிலேயே பாஜக மதவாதக் கட்சி என்று முத்திரை குத்தி, ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம் அவரை பிரதமர் ஆக்குவோம் என்று பேசினார்.. அடுத்த சில மாதங்களிலேயே டெல்லி சென்று அத்வானியின் காலில் விழுந்து வணங்கினார்.

பின் மீண்டும், ஈழத்தில் தமிழர்களை கொன்று குவித்த படுபாதகச்செயலை செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்று வீரவேசமாக பேசினார். இதற்கு பெயர் சுயமரியாதை. பகுத்தறிவு. ஆனால், தொடர்ந்து தேர்தல் வெற்றி முக்கியமல்ல. தேவை ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை அரசியல் மாற்றம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் சீமான் தெளிவற்றவரா ? கொடுமையிலும் கொடுமை.

கொள்கைப் பிடிப்புடன் தமிழியம்

திருச்செந்தூரில், முருகன் கோவில் வாயிலில் மேடை போட்டு, இது தமிழர்களின் கோவில், முருகன் தமிழ்க் கடவுள், சமஸ்கிருதம் பேசும் பார்ப்பனர்களுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்டதோடு, நாம் தமிழர் ஆட்சிக்கு வந்த உடன் கோவில்களில் பூசை செய்வதற்கு தமிழர்களுக்கே அனுமதியளிக்கப்படும். அதுவும் தமிழிலும் வழிபாடு என்றெல்லாம் பூசி மெழுகாமல் தமிழில் மட்டுமே வழிபாடு நடத்தப்படும் என்று முழங்கிய சீமானைப் பார்த்து கேள்வி கேட்பவர்கள் யார் என்று பார்த்தால், நல்ல நேரம் பார்த்து வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள், ஜாதகம் பார்த்து தேர்தலில் சீட் கொடுப்பவர்கள், அத்தி வரதரை தரிசிக்க விஐபி – பாஸ் வாங்கிச் சென்றவர்கள் எல்லோரும்தான் சீமானைப் பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.

தமிழகத்திற்கு எதிரானது பொதுவுடைமை

வட மாநிலங்களில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் அணு உலை அமைக்க ஆதரவு தெரிவிக்கும். தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைக்கழிவுகளை கர்நாடகாவில் வீணாக மூடிக்கிடக்கும் கோலார் தங்க வயலில் புதைக்க பாஜக உடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும். இது குறித்து நீங்கள் கேள்வி எழுப்பினால், காரல் மார்க்ஸ்சில் ஆரம்பித்து உங்களுக்கு ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுக்கும். மாநிலத்திற்கு மாநிலம் வாக்கு வங்கி அரசியலுக்காக வேடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் இவர்கள்தான் தமிழக நலனுக்காக தொடர்ந்து கேள்வி கேட்கும் சீமானை இன அரசியல் பேசுகிறார் என்கிறார்கள். துயரத்திலும் துயரம்!

தமிழியத்திற்கு அஞ்சும் திராவிடம்

நிறைவாக, பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்டுகள் என்று எல்லோரையும் குறித்து சீமான் விமர்சித்து வந்தாலும் திமுக வை மட்டுமே விமர்சிப்பது போல் எண்ணிக்கொள்வதும், திமுகவை விமர்சிப்பதாலேயே அவருக்கு பாஜக சாயம் பூச முயற்சிப்பதையும் நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளின் மூலம் சீமானை நோக்கி நகரும் இளைஞர்களை உங்கள் பக்கம் இழுக்க முயற்சியுங்கள்.. ஒரு வேளை அது வேண்டுமானால் உங்களுக்கு ஓரளவு வெற்றியைத் தரலாம். மாறாக, அடிப்படையற்ற விமர்சனங்களை சீமானை நோக்கி வீசுவதன் மூலம் அவரின் வெற்றியை உங்களால் ஒருபோதும் தடுக்கவே முடியாது.

இதே போல் நீங்கள் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வைக்கும் விமர்சனங்களுக்கு ஏராளமான பதில்கள் எதிர் கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் அவையாவும் உங்களின் கட்சிகளை வழிநடத்திய / வழிநடத்தும் தலைமைகளின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக இருக்கும். எனவே அரசியல் நாகரீகம் கருதி அதை தவிர்த்திருக்கிறேன்.

இல்லையில்லை… கண்டிப்பாக அந்த ஒப்பீடும் தேவையெனில் இந்த கட்டுரையின் இரண்டாம் பாகமாக அதுவே இருக்கும். நீங்கள் அந்த ஒப்பீட்டை எதிர்பார்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

இப்படிக்கு,
சீமானின் தம்பி
தமிழ்த் தேசிய அரசியல் விரும்பி!

கம்ம நாயுடுகளின் எழுச்சியும் தமிழர்களின் போர் முழக்கமும்

தமிழர்களின் முதன்மையான எதிரி ஆரியர்களா? தெலுங்கர்களா? என்றால் தத்துவார்த்த ரீதியாக ஆரியர்களாக இருந்தாலும், பொருளாதாரம், அதிகாரம், அரசியல் ரீதியாக தெலுங்கர்களே வலிமையான எதிரிகளாக உள்ளனர். அதிலும் குறிப்பாக தெலுங்கு ஆதிக்கச் சாதியைச் சார்ந்த நாயுடுகளும் நாயக்கர்களும் மிகக் கொடூரமான அரசியல் எதிரிகளாக மாறி வருகின்றனர்.

அதனை உணர்ந்துதான், 11.10.18 அன்று ‘தெலுங்கு ஆதிக்க சாதிகளில் வைகோவின் லாபி’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டு இருந்தேன். அக்கட்டுரையில் சொல்லப்பட்ட விடையங்கள் இன்று நம் கண்முன்னே நடக்கத் தொடங்கிவிட்டன.

கோவையில் நடைபெற்ற கம்ம நாயுடு எழுச்சி மாநாட்டில் பேசிய அத்தனைப் பேரும், தெலுங்கு ஆதிக்கச் சாதியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஏற்கனவே கேஜி மருத்துவமனையின் நிறுவனர் இனி தெலுங்கர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று வெளிப்படையாக பேசியது, இன்று நாயுடுகளின் மாநாட்டில் பேசியப் பலரும் தமிழ்நாட்டை ஆளப் பிறந்தவர்கள் நாங்கள்தான் என்று பேசியதும் அவர்களின் ஒட்டுமொத்த மனநிலையை வெளிப்படுத்துகிறது. மாநாட்டில் பேசிய ஒருவர் தமிழர்கள் லெமூரியாவில் இருந்து வந்தேறிகளாக இன்றைய தமிழ்நாட்டில் நுழைந்தவர்கள். தெலுங்கர்களே ஆதி குடி மக்கள் என்று பேசியுள்ளார்.

‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியா மனுசனையே கடிக்குமாம் வெறிபிடித்த நாய்’ என்ற கிராமத்து சொலவடை இன்று நாயுடுகளுக்கு சரியாக ஒத்துப்போகிறது. வட வேங்கடம் முதல் குமரிவரை பரவி வாழ்ந்தவர்களே தமிழர்கள் என்பது உலகறிந்த விடயம். ஆனால், இன்று நாயுடுகளின் மாநாட்டை இந்நிலத்தில் நடத்தியதோடு மட்டுமல்லாமல் நிலம் எங்களுடையது என்று இவ்வளவு திமிராகப் பேசுகின்றனர் என்றால் இதனை எப்படி பொறுத்துக் கொள்வது?

இதேப் போல ஒரு தேவர் மாநாட்டையோ, ஒரு மறவர் மாநாட்டையோ, ஒரு பறையர் மாநாட்டையோ, ஒரு வன்னியர் மாநாட்டையோ அல்லது தமிழர்களின் மாநாட்டையோ ஆந்திராவில் நடத்தி, இனி ஆந்திராவை நாங்கள்தான் ஆள்வோம் என்று நம்மால் பேசிவிட முடியுமா? அப்படி என்றால் தமிழர்களை எவ்வளவு இழிவாகக் கருதியிருந்தால் இவர்கள் நமது தாய் நிலத்தில் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி இருப்பர். இவர்களின் ஆதி என்ன? இவர்களின் பின்புலம் என்ன? இவர்களை யார் வழிநடத்துகிறார்கள்? என்று தமிழர்கள் உடனடியாக ஆராய வேண்டாமா?

சாதி ஒழிப்பு போராளி என்று இறுதிவரை பீற்றித் திரிந்த ஐயா ஈவேராமசாமின் வாரிசுகளால் முட்டுக் கொடுக்கப்படும் திராவிட பகுத்தறிவு பக்கோடாக்கள் இந்த மாநாடு குறித்து என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள்? ஒரு சாதியின் பெயரால் நடத்தப்படுகின்ற மாநாட்டில் திமுகவின் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அதிமுகவின் கடம்பூர் ராஜூ மதிமுகவின் தனமணி வெங்கடபதி போன்றவர்கள் கலந்து கொண்டு சாதி வெறியைத் தூண்டி, இனக்கலவரத்தை தூண்டும் அளவிற்கு பேசியிருக்கின்றனர் என்றால் இதுதான் பெரியாரின் பேரன்களது சாதி ஒழிப்பு பணியா?

இந்த இடத்தில் இருந்தேனும் மானத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தெலுங்கர்கள் இதுவரை மறைமுகமாக தமிழ்நாட்டின் ஆட்சி, அதிகாரம், அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற அனைத்தையும் சுரண்டி வந்தனர். தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சி அடைவதை மோப்பம் பிடித்தவுடன், நேரடியாக மோதுவதற்கு அணி திரட்ட தொடங்கிவிட்டனர். தெலுங்கு ஆதிக்க அரசியலைப் பொறுத்தவரை திமுக அதிமுக மதிமுக அனைத்தும் ஒரே கோட்டில்தான் இறுதியாக நிற்பார்கள் என்பதன் தொடக்கம் தான் இந்த மாநாட்டில் மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கெடுத்தது. இதனை கணக்கச்சிதமாக நடத்தி முடித்தவர் வைகோபல் சாமி நாயுடுதான் என்றால் அது மிகையல்ல. சத்தியம்.

தமிழ்த்தேசிய அரசியலை அழிக்க வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றார் ஐயா வைகோ. அவரது வழிகாட்டுதலில் தான் ஆதிக்கச் சாதித் தெலுங்கர்களை ஓர்மைபடுத்தும் வேலையை நாயுடு நாயக்கர் சாதி வெறி அமைப்புகள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளன. இவர்களுக்கான அடிப்படை பலங்களை இனி தமிழர்கள் வீழ்த்தியாக வேண்டும். அவர்களின் மூலத்தை இனி தகர்த்தாக வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அழிக்கின்ற வேலையை அவர்கள் தொடங்கிவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் 88% பேர் வாழ்கின்றனர். வெறும் 12% பேர்தான் தமிழர் அல்லாதோர் வாழ்கின்றனர். ஆனால் பெருவாரியான அரசியல் கட்சியின் தலைவர்களும், அரசு அதிகாரிகளும், ஆசிரியர்களும், காவல்துறை அதிகாரிகளும் தெலுங்கர்களாகவே இருக்கின்றனர். இது எப்படி சாத்தியம்? சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனைத்து அரசு பணிகளிலும் திட்டமிட்டு தெலுங்கர்கள் திணிக்கப்பட்டு உள்ளனர். இதனை இதுவரை சத்தமில்லாமல் செய்தவர்களே திராவிட கட்சியினர். அவர்களே தமிழர்களை இதுவரை ஆண்டு கொழுத்தனர். கொடுமையிலும் பெரும் கொடுமை தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில், தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட பலரும் தமிழ் ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். தமிழர்களையும் தமிழையும் அழிக்கின்ற வேலையை பள்ளிக்கூடங்களில் இருந்தே தொடங்கிவிட்டனர்.

எனவே உடனடியாக தமிழர்கள் ஒரு புரட்சிக்கு தயாராக வேண்டும். தமிழ்நாட்டின் அரசு பணிகளில் தமிழர்களுக்கு 88% இட ஒதுக்கீடும், தமிழரல்லாதோருக்கு 12% இட ஒதுக்கீடும் வழங்கிட வேண்டுமென சட்டம் இயற்றக்கோரிப் போராட்டத்தை தொடங்க வேண்டும். எல்லா அதிகாரப் பதவிகளுக்குள்ளும் வந்து உட்கார்ந்துவிட்டோம் என்ற திமிரில்தான் நாயுடுகளின் மாநாட்டை நடத்தியுள்ளனர். இனி எந்த பதவியும் அவர்களுக்கு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்.

தமிழர்களை வந்தேறிகள் என்று தெலுங்கு நாயுடுகள் பேசத் தொடங்கி இருப்பது அவ்வளவு எளிதாக கடந்துச் செல்லக்கூடிய விடயமல்ல. தமிழர் நிலத்தில் நின்று தமிழர்களை வந்தேறி என்று பேசிய ஒருவரையும் இனி விடக்கூடாது. தெலுங்கர்களின் பள்ளி, கல்லூரிகளில் நமது பிள்ளைகளை சேர்க்க கூடாது. தெலுங்கர்களின் வணிக நிறுவனங்களில் பொருள்களை வாங்க கூடாது. இனி தெலுங்கர்கள் தமிழர்களுக்கு தீட்டு என்றெண்ணி தெலுங்கர்கள் ஒதுக்கித் தள்ள வேண்டும். ஒரு நேரடிப் பொருளாதார யுத்தத்தையே தெலுங்கர்களுக்கு எதிராக தமிழர்கள் தொடங்க வேண்டும். இனியும் மெளனித்தால் நாம் மரணித்துப் போவோம்… எழுந்து தாக்குங்கள் மானத் தமிழர்களே…

800 ஆண்டுகளுக்கு பிறகு சோழப் பேரரசின் பேரன்களுக்கும் விஜயநகரப் பேரரசின் பேரன்களுக்கும் யுத்தம் தொடங்கட்டும்.

புலியா? பன்றியா? மோதி முடிவெடுப்போம் தமிழர்களே! போர் முரசுக் கொட்டுங்கள்!

-பேராசிரியர் ஆ.அருளினியன்

இட்லி கறியும் ஆரிய திராவிட புரட்டு அரசியலும்

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பது அவ்வளவு சாதாரணமல்ல. மிகப்பெரும் ரணத்தைக் கடந்துதான் வரவேண்டும். தமிழ்தேசியம் பேசினால் எல்லாக்கூட்டமும் ஒன்று சேர்ந்துதான் எதிர்க்கும். அதைத் தாண்டி தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பது சாதாரணமல்ல. இவர்களுக்கு அண்ணன் சீமான் பேசும் அரசியலைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தங்களின் அரசியல் கோட்டை சிதைந்து விடுமோ என்ற பயம். மக்கள் தங்களுக்கான உண்மையான அரசியல் எது எனக் கண்டு பிடித்து விடுவார்களோ என்ற பயம்.

அதனால் அவன் பேசும் அரசியலை பகிடியாக்கத் துடிக்கின்றனர். அரசியல் விவாதங்களுக்கு நேர் நின்று பேசத் தகுதியற்ற லஞ்ச லாவண்யத்தில் ஊறிப்போன கட்சிகளும், அதன் தலைவர்களும் பதறிப்போய் மடைமாற்று வேலைகளை வேகமாக முன்னெடுக்கின்றனர்.

நேர்நின்று போர்புரியத் தகுதியற்ற கோழைகள் முதுகில் குத்துகின்றன. இட்லியைப் பற்றி, உணவருந்தியதைப் பற்றி கிண்டலைப் பரப்பிக் குளிர்காய்கின்றன.

இதைக் கிண்டல் செய்யும் பலர் ஊழல் பெருச்சாளிகளின் கூவலுக்குப் பின் நின்று கொண்டிருப்பது தான் நகைப்பு.

சீமான் பொய் பேசுகிறார். சரிப்பா. பொய்தான் பேசுகிறார். சீமான் கதைவிடுகிறார். சரிப்பா, கதைதான் விடுகிறார்.

அப்படியே வைத்துக்கொள்வோம். இதனால் உனக்கு என்ன இழப்பு? இட்லியிலும் ஆமைக் கறியிலும் உனக்கு என்ன இழப்பு? உன் சோத்துல மண்ணா விழுந்தது??

அட சாமிகளா! அரைநூற்றாண்டாக உன் மொழியைக் காணவில்லை. உன் உழைப்பைக் காண வில்லை. உன் இனத்தால் உன்னை ஆள முடியவில்லை. கோடிகோடியாய் கொள்ளையடித்து விட்டார்கள். உன் வளத்தைக் காணவில்லை. அதைக் கேட்க துப்பில்லை.

அதையெல்லாம் யார் செய்தது? அவர்களைக் கேள்வி கேட்டாயா? அவர்களைக் கேலி செய்தாயா? பொய்யர்கள் என்றாயா? திருடர்கள் என்றாயா? கொள்ளையடித்த பணத்தை எங்கே எனக் கேட்டாயா?

உன் பேச்சு மொழி, எழுத்து மொழி, உன் உணர்வுகள் யாவும், அடிமைப்பட்டு பல ஆண்டுகாலம் கிடக்கே அதைப் பற்றிக் கவலைப்பட்டாயா??

இதையெல்லாம் விட்டுவிட்டு உனக்கு இட்லிதான் முக்கியமா? அண்ணன் சீமான் பேசும் அரசியலைப் பார்.

கொண்டிருக்கும் கனவுகளைப் பார். ஆடு மாடு தொழிலைப் பற்றிக் கிண்டலடித்தவன் தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைக் கிண்டலடித்தவனெல்லாம் இன்னைக்கு மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு விவசாயத்தை நோக்கியும், ஆடுமாடு மேய்க்கவும் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.

அதைப்போலத்தான் அவனைப் பற்றி நீங்கள் கிண்டல் பேசப் பேச அவனெடுக்கும் அரசியலே சரியென்று முன் நிற்கும்.

திராணியிருந்தால், அவன் பேசும் அரசியலைப் பேசுங்கள். தைரியமிருந்தால் சூட்கேஸ் வாங்காத ஒரு அரசியல்வாதி வந்து அவன் முன் நின்று பேசட்டும்.

கோடி கோடியாய்க் கொள்ளையெடுத்து, பல்லிளித்து பெட்டி வாங்கிக் கொண்டு இன்றைக்கு ஒரு கூட்டணி நாளைக்கு ஒரு கூட்டணி எனத் தாவிக்கொண்டிருக்கும் பசலைவாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் நீங்களெல்லாம் ஒரே கொள்கை ஒரே நோக்கத்தில் நிற்கும் சீமானைப் பற்றி கிண்டல் செய்ய அருகதையற்றவர்கள்.

இன்னும் நிறைய கதைகள் சொல்லட்டும். இன்னும் நிறைய பொய்கள்கூட சொல்லட்டும் சீமான் அண்ணன். ஆனால் அவனின் உண்மை உங்களுக்குப் பொய்யெனத் தெரிந்தால் அதற்கு நீங்கள் செய்யும் அரசியல் பின்புலம்தான் காரணம். இட்லியில் கறி வைத்து நீங்கள் சமைத்ததே இல்லையா?? இல்லை அப்படியொன்று இந்த உலகத்திலேயே இல்லையா? ஏதோ ஒரு முட்டாப் பய அதைக் காமெடியாக்கினா நாமும் மந்தை மாதிரி பின்னாடியே பேசுவோமா?? சினை இட்லின்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?? தமிழ்நாட்டுலதான் இருக்கு. அதைச் செய்யும்போது கறி இட்லி செய்ய முடியாதா?? இதோ ஆன் லைனில் இருப்பதைப் பாருங்க.

அண்ணன் தலைவர் மேதகு பிரபாகரனாரைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் சொல்லிச் சொல்லி அவரைப் பதிய வைக்கட்டும் இப்பிள்ளைகள் மனதில். அவரைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கட்டும். ஏனெனில் தமிழினத் தலைவராக அவரை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதை உடைத்தால்தான் இன்னும் சிலரை அந்த இடத்தில் வைக்க முடியும் என்பதற்காக சிலர் தந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நம் தமிழ்ப் பிள்ளைகள் இன்னும் அதிகமாக தலைவர் பிரபாகரனைப் பற்றிப் பேச வேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் நம் இனத் தலைவனை, அவரது புகழைப் பதிய வைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

எதை உடைக்க நினைக்கிறார்களோ அதை வலுவாக்க உழைக்க வேண்டும்.

உண்மையும் நேர்மையும் அற்றவர்கள், அண்ணனைப் பற்றிப் பகடி செய்ய காரணம் தேடி சின்னப் பிள்ளை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் காசுகொடுத்து வேலைக்கு வைத்திருக்கும் ஊடக வாசிகள் மற்றும் ஊடகம் என்ற பெயரில் வைத்திருக்கும் கட்சி ஒலிபெருக்கிகள் துணைபோகும்.

அதையெல்லாம் கடந்துதான் நம் தமிழ்தேசியத்தை கட்டமைக்க முடியும்.

தம்பிகளே, அண்ணன்களே இந்தக் கிண்டல்களைக் கேலிகளைப் புறந்தள்ளி நம் அரசியலை முன்னெடுங்கள்.

இந்தக் கிள்ளுக் கீரைகள் நரி விடும் குசுவை மோந்துகொண்டே நிற்கட்டும். நாம் ஓடுவோம் பேரிலக்கை நோக்கி…

சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர்/ இயக்குநர்

https://bit.ly/2TQHKMb