இந்தியப் பொருளாதாரமும் பசுநேசர்களும்

அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.

அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 ‘தாய் பாட்’ கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 ‘தாய் பாட்’ தான் கிடைக்கும்.

அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10,000 ரூபாய்க்கு 1,31,00 பங்களாதேஷ் ‘டக்கா’ கிடைத்திருக்கும். இப்போது போனால் 1,13,00 டக்கா தான் கிடைக்கும்.

காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?

காமன்மேனாக – எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும்.

2014 ஆம் ஆண்டு (பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) சமையல் கேஸ் விலை, பெட்ரோல் – டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சினிமா டிக்கெட் விலை, ஹோட்டல்களில் உணவுகளின் விலை, பால் விலை, மின்சாரக் கட்டணம் & இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை என்னவாக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடும் போது, கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது? ஒரு காமன்மேனின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளன தானே? (இதுல மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒரு சிலது மட்டுமே உண்டு).

2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 113 டாலர். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அது குறைந்து 36 டாலர் வரைக்கும் வந்ததாக ஞாபகம். இப்போது 45 டாலர். சில மாதங்களுக்கு முன்பு 10 டாலர், 0 என மைனஸில் கூட வர்த்தகம் ஆனது.

ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது என்ன லாஜிக்? எங்கே போகிறது அந்தப் பணம்? காமன்மேன்களுக்கு ஏன் ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை?

கொரோனா லாக் டவுன் காலத்திலும், அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் போதும் டோல் கேட்டில் சுங்க வரியை உயர்த்தினார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் ?

இதுபற்றியெல்லாம் யாரையும் சிந்திக்க விடாமல், கேள்வி கேட்க விடாமல் தேசபக்தி, மாட்டுக்கறி, எல்லையில் ராணுவ வீரர்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதி, முஸ்லீம்கள் நாய்க்கறி சாப்பிட்டு பாகிஸ்தான் போகணும், இது இந்துக்களின் பூமி, கந்தர் சஷ்டி, ராமர் கோயில், விநாயகர் சதுர்த்தி, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க. அதுக்கு முரட்டு முட்டுக்கொடுக்க முட்டாள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவங்களை நினைச்சா தான் இன்னும் கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. அவங்க கட்சியால் ஒரே ஒரு நல்லது கூட நடக்காமல், காமன்மேன்களில் ஒருவராக அவர்களுக்குமே பாதிப்பு தான் அதிகம். ஆனால், எனக்கு வலிக்கலயேன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. வெறுப்பை பரப்பிட்டும் இருக்கானுங்க.

அப்பவும் அவனுங்க முட்டுத்தறாய்ங்க. இதான் ஹைலைட்டே !

அமெரிக்காவோ, தாய்லாந்தோ, வங்கதேசமோ… அப்போ பத்தாயிரம் எடுத்துட்டு போனதுடன் ஒப்பீடு செய்தால் இப்போ வீழ்ச்சி. இது ஒருபுறம் இருக்கட்டும். 10,000 எடுத்துட்டு போறதுல எவ்ளோ சிக்கல் இருக்கு பாருங்க… இவ்வளவு விலைவாசி ஏற்றங்களையும் தாக்குப் பிடித்து, வருவாய் ஈட்டி, அதற்கு தனியா ஜி.எஸ்.டி கட்டி, கஷ்டப்பட்டு 10,000 எடுத்துட்டுப் போனா, அதோட மதிப்பும் வீழ்ந்திருக்கும்! வெந்தப் புண்ணில் வேல் !

பாஜக ஆளும் வரை ஒவ்வொரு ஆண்டும் இது பொருந்தும்.

2014 இல் பாஜக ஆட்சி அமைக்கும் போதும் சரி, 2016 இல் டீமானிடைசேஷன் சமயத்திலும் சரி… மோடியின் பக்தர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். டாலர் மதிப்பு 40 வரும்… பெட்ரோல் டீசல் விலை 50 க்கு கீழ் வரும்… தீவிரவாதிகள் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும்… ப்லா ப்லா ப்லா… ஆனால் என்ன தான் நடந்தது?

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட போதும், பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு வரலாறு காணாத விலையேற்றம், பதான்கோட், புல்வாமா எனத் தீவிரவாத தாக்குதல்கள். (350 கிலோ வெடி பொருட்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே இன்றளவும் மர்மமாக இருக்கிறது), சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்… 20 இந்திய வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணித்தார்கள். என்ன தான் செய்கிறது இந்தியாவை ஆளும் பாஜக அரசு? யோசிக்கவே மாட்டார்களா? சீனா செய்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருந்தால் எவ்வளவு பொங்கியிருப்பார்கள்? இங்கே நாம் அண்டை வீட்டில் வாழும் இஸ்லாமியர்களைக் கூட விரோதிகளாக கட்டமைத்திருப்பார்களே. ஆனால் சீனா விஷயத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியது ஏன்?

சிந்திப்போம். அறியாமையால் இருப்போருக்கு புரிய வைப்போம். மதமோ, கடவுளோ நம்மைக் காப்பாற்றாது. நம்மை ஆளும் அரசு தான் நம் அனைவரையும் சமமாகப் பாவித்து, நமக்கான நல்லாட்சியைத் தர வேண்டும் !

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

  1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
  2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது?
  3. பாஜக மீது கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?
  4. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட…
  5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
  6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன் அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?
  7. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியதேன்?
  8. பல லட்சம் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லை?
  9. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?
  10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன?
  11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
  12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
  13. மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
  14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
  15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து ஏன்?
  16. பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால் இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?
  17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
  18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
  19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
  20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?
  21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

இன்னும் பல ஆயிரம் புதிரான கேள்விகளுக்கு விடை தெரியா சாமானியனின் பகிர்வு.

பாஜகவை வெளுத்து வாங்கும் 14 கேள்விகள்

இந்த கேள்விகள் பாஜகவினர் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் அவர்கள் மனநிலை சரியல்லாதவர்களே. இதை நாம் கூறவில்லை. அவர்களே ஒவ்வொரு முறையும் சல்லித்தனம் செய்து மாட்டிக்கொள்ளும் போதும் காவல்துறையும் நீதிமன்றமும் இதையே கூறியிருக்கிறது. கேள்விகள் அனைத்தும் மனநிலை சரியாக இருக்கும் பொதுமக்களுக்கானவையே.

  1. இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதேனும், #கற்பழிக்கப்பட்ட ஒரு #பெண்ணின் #தந்தையை போலிஸ் நிலையத்திலேயே ஒரு எம்.எல்.ஏ. #கொலை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  2. இந்திய வரலாற்றில் #ஊழல் வழக்கில் #குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் #தேர்தல் #ஆணையராக #நியமிக்கப்பட்டதுண்டா? தேர்தல் ஆணையரான பிறகு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டை மாநில அரசு திரும்பப்பெற்றதுண்டா?
  3. இந்திய வரலாற்றில் #பிரதமரின் #கல்வித்தகுதியை எப்போதாவது #ரகசியமாக #மறைத்து வைத்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  4. இந்திய வரலாற்றில் தலைமை #நீதிபதியே தனது வழக்கில் #நீதிபதியாக இருந்ததை கேட்டிருக்கிறீர்களா?
  5. இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏ. ஒருவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், அந்த மாநில முதல்வரின் வீட்டுமுன் தற்கொலைக்கு முயன்றதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  6. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டு கிடைக்காமல் திண்டாடியதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  7. இந்திய வரலாற்றில் தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன் பா.ஜ.க.வின் ஐ.டி.விங் தலைவர் தேதிகளை அறிவித்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  8. இந்திய வரலாற்றில் ரூபாய் நோட்டுக்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்களைக் காக்கவைத்த நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
  9. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பு, தீர்ப்பு நகலை சட்டத்துறை அமைச்சர் வாங்கிய நிகழ்வை கேள்விப்பட்டதுண்டா?
  10. இந்திய வரலாற்றில் ராணுவ வீரர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று புகார் செய்ததை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
  11. இந்திய வரலாற்றில் கற்பழிப்புக் குற்றச்சாட்டுக்கு ஆளான குற்றவாளியை பாதுகாக்க மாநில அமைச்சர்களே ஊர்வலம் நடத்தியதை கேட்டிருக்கிறீர்களா?
  12. இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூடி செய்தியாளர்களைச் சந்தித்து புகார் கூறியதை கேட்டிருக்கிறீர்களா?
  13. இந்திய வரலாற்றில் சாலைகளில் கிடந்த பசு சாணத்தை திண்ணும்படி தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயப்படுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா?
  14. இந்திய வரலாற்றில் மதக்கலவரத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளியை பாதுகாக்க, நீதிமன்றக்கூண்டில் ஏறி, தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் சாட்சியம் அளித்திருக்கிறாரா?

இந்த 14 கேள்விகள் இப்போது பரபரப்பாக உலா வருகின்றன. சமூகவலைத்தளங்களில் பரவும் இந்தக் கேள்விகள் அனைத்தும் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய சரித்திரத்தில் இடம்பெற்றவை. அனைத்து நிகழ்வுகளிலும் பா.ஜ.க. அரசுக்கும், பாஜக ஆட்களுக்கும் தொடர்பு உண்டு.

கல்வியை ஆரியமயமாக்குதலுக்கு கண்டனம்

அறிக்கை: இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தற்காலப்பேரிடர் சூழலிலும் தனது ஒற்றைமயமாக்கல் நடவடிக்கைகளை வீரியமாய்ச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் நீட்சியாகவே தற்போது பாடத்திட்டத்தில் கைவைத்து, இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்புத் தூண்களாக இருக்கிற சனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றைப் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது. பள்ளியில் பயிலும் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து சனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை குறித்த சிந்தனைகளையே அகற்ற முயலும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கும் பேராபத்தாகும்.

9ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயக உரிமைகள் எனும் பாடமும், 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், சாதி, சமயம், இயக்கங்கள், போராட்டங்கள், சனநாயகத்திற்கு எதிரான சவால்கள் உள்ளிட்டவைகளும், 11ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகளும், 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்நாடு கொண்டிருக்கிற பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை எனும் மகத்தானக்கோட்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதைத் தடுக்கும்வகையில் அவற்றைப் பாடத்திட்டத்திலிருந்தே அப்புறப்படுத்தும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் ஒற்றைமயக்காலின் மற்றொரு வடிவமே! மக்களாட்சிக்கும், சனநாயகத்திற்குமே ஊறு விளைவித்து இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பையே ஒவ்வொரு நகர்வின் மூலமாகத் தகர்க்க முயலும் பாஜக அரசின் படுபாதக நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கெதிராக தேசிய இனங்களும், மாநிலக் கட்சிகளும், சனநாயக ஆற்றல்களும் அணிதிரண்டு அதனை முறியடிக்க வேண்டியது தற்காலத்தின் பெருங்கடமையாகிறது.

ஆகவே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்திலிருந்து சனநாயகம் தொடர்பாக 30 விழுக்காடு பாடத்திட்டத்தை நீக்குவது தொடர்பான அறிவிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://bit.ly/3enSj0S

ஒரே பிரதமர் இவர்தான்

இரண்டு விடயங்களை பேசனும்.

ஒன்று மோடியின் கதை கதையாம் பட சூட்டிங் பறறி.

சீனாவுக்கும்-இந்தியாவுக்கும் எங்கே பிரச்சனை வந்ததோ, அந்த கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆறு கிலோமீட்டர் இந்தியா உள்ளே தள்ளியிருக்கும் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள முகாமில் பார்வையிட்டு, வழக்கம்போல் வசனங்களை பேசி திரும்பியிருக்கின்றார்.

இதைச் சொல்லி வரப்போகிற பீகார் மாநிலத் தேர்தலில் கல்லாகட்டும் திட்டம் இருக்கலாம். அதான் ‘பீகார் ரெஜிமெண்ட்’டுக்கு பாராட்டு என்றெல்லாம் வார்த்தைகளை முன்பு உதிர்த்திருந்தார். இல்லை என்றால் இவ்வளவு மெனக்கிட்டிருக்க மாட்டார்.

அப்படியே கொஞ்சம் பின்னாடி போவோம்.

இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தின் போது இந்திராகாந்தி பிரதமர். அமெரிக்கா என்ன செய்தது என்றால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு போர்க்கப்பலைக் கொண்டு வந்து இங்கே நிறுத்தியிருந்தது. எல்லைப்பகுதியில்! அதாவது பாகிஸ்தானுக்கு உதவியாக!!

அப்போது இந்திராகாந்தி சொன்னார், ‘இன்னும் நான்கு நாட்கள் அவகாசம். அதற்குள் போர்க்கப்பல் திரும்பி போகவேண்டும். இல்லை என்றால் அந்த அமெரிக்கக் கப்பல் சிதறிவிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார். ‘தில்‘ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். அதன்படியே அமெரிக்க போர்க்கப்பல் திரும்பிச்சென்றது.

ஆனால் மோடி, கதை கதையாக அளந்து கொண்டிருக்கின்றார்.

இராணுவத்தை தேர்தலுக்கு தேர்தல் பயன்படுத்திக்கொள்ளும் ஒரே பிரதமர் ஐயா மோடியாகத்தான் இருக்க முடியும்.

பாரத் மாதாக்கீ ஜெ.

இரண்டாவது விடயம்,

பிரதமர் மோடி பார்வையிட்டுக்கொண்டிருப்பது ராணுவ மருத்துவமனையேதான். பொதுவாக இராணுவ மருத்துவமனை எவ்வளவு சுத்தமாக இருக்கும் என்பதை நேரில் பார்த்திருப்பவர்களுக்குத் தெரியும். அதிலும் பிரதமர் வருகை என்பதால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருப்பார்கள். அவ்வளவுதான்.

(இந்திராகாந்தி படம். அதே கல்வான் பள்ளத்தாக்கில் வீரர்களுடன் பிரதமராக இந்திரா)

மூத்த பத்திரிக்கையாளர்
— பா. ஏகலைவன்

https://bit.ly/2ZwQbOI

யுத்த காதை – 2

20 இந்திய வீரர்களை கொன்றுவிட்டதாலும் 80 சதுர கிமீ பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றியதாலும் இறுமாந்திருந்தனர் எதிரிகள்.

உலகமே இந்தியாவை உற்று நோக்கியபடி இருந்தது. ஏற்கனவே கொரோனாவின் தாயகமான சீனா மீது எல்லாரும் கடுப்பிலிருக்க, wanted ஆக வந்து இந்தியாவை வம்பிழுத்த காரணத்தால் மூன்றாம் உலகப் போர் தான் தொடங்கப் போகிறதாே என்ற அச்சம் மேலோங்கியது.

உலகின் மிகச் சிறந்த முன்னேறிய மாநிலமான குஜராத் தந்த மோடி தலைமையில் இந்தியா இருக்கும் போது யுத்தத்தை எண்ணி நாம் கலங்க வேண்டியதே இல்லை, அவரின் கண்ணசைவில் சடுதியில் காணாமல் போகப்போகிறது பாருங்கள் சப்பை மூக்கு பரம்பரை என்று பக்தாள் கூட்டம் டிவி முன் ஆர்வமாக அமர்ந்திருக்க…
அரசு அமைதியாக இருந்தது.

அரசை நோக்கி கேள்வி கணைகளாக வந்து விழுந்த வண்ணமிருந்தன. பிரதமர் தன் போர்தந்திரங்களை வகுக்கவே அமைதியாக சிந்திக்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.

திடீரென சீனா இந்தியாவின் எந்த பகுதியையும் ஆக்கிரமிக்கவில்லை என்றார் பிரதமர். ஒன்றும் புரியாத தேசவிராதிகள் வழக்கம் போல் அவரை கேலி பேசினர். சீனாவும் இவரின் பேச்சை தன் நாட்டின் பத்திரிக்கைகளில் மேற்கோள் காட்டி கொண்டாடியது.

எப்போதும் அவரின் நீண்ட அமைதிக்கு பின் ஓர் ஆவேசம் இருக்குமல்லவா?

அது வெளிவந்த போது உலகமே ஆடிப்போனது.

ஆம் அவர் டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளை தடை செய்தார்.

நேற்றிரவு நடந்த Digital Surgical Strike மூலம் இன்று சீனாவின் ஒட்டுமொத்த பங்குசந்தையும் அதலபாதாளத்தில் வீழ்ந்தது.

சீனா இந்தியாவில் ஆக்கிரமிப்பில் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு இல்லவே இல்லை என்று பதில் சொல்லி தேசபக்தர்களை மகிழ்வித்த பிரதமர். . .

இந்தியாவின் ஒரடி நிலம் கூட ஆக்கிரமிக்காத சீனாவுக்கு இப்படி ஒரு Digital பதிலடி தந்தன் மூலம் தேசவிரோதிகளையும் மகிழ்வித்தார்.

பிரதமரின் ராஜதந்திரத்தை பார்த்தீர்களா?

நாங்கள் உங்கள் நாட்டின் எந்த பகுதியையும் ஆக்கிரமிக்காத நிலையில் எங்களுக்கு ஏன் இந்த கொடூர தண்டனை என்று சீன அதிபர் கண்ணீருடன் இன்று காலை கேள்வி எழுப்பினார்.

சப்பை மூக்கன்களுக்கு எப்போது மண்டையில் சரக்கிருந்திருக்கிறது?

இருந்திருந்தால் இக்கேள்வியை நம் பிரதமரிடம் கேட்டிருப்பார்களா?

அமைதியே வடிவான நம் பிரதமர் அதற்கும் கீழ்கண்ட இந்த பதிலை சொன்னார்,

சீன மித்ரோன், நான் தடை செய்த 59 செயலிகளை எங்கள் நாட்டில் பெரும்பான்மையானோர் உபயோகிப்பதே இல்லை என்று அவர்களாகவே வந்து வாக்குமூலம் தந்ததை நீ இன்னுமா பார்க்காமலிருக்கிறாய்?

இங்கே எங்கள் புண்ணிய பூமியான பாரதத்தில்
உங்கள் சீனாவின்
♦ Bigbaskat தடை செய்யப்படவில்லை
♦ Byjus தடை செய்யப்படவில்லை
♦ Flipkart தடை செய்யப்படவில்லை
♦ Make my trip தடை செய்யப்படவில்லை
♦ OLA தடை செய்யப்படவில்லை
♦ OYO தடை செய்யப்படவில்லை
♦ Quickr தடை செய்யப்படவில்லை
♦ Snapdeal தடை செய்யப்படவில்லை
♦ Swiggy தடை செய்யப்படவில்லை
♦ Zomato தடை செய்யப்படவில்லை

எல்லாவற்றுக்கும் மேலாக என்னையே தன் விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொண்ட
♦ PayTM தடை செய்யப்படவில்லை

அவரவர்களுக்கு தேவையானதை செய்வது தானே ராஜதர்மம்?

நீ Mapல் கை வைத்தாய்
நான் Appல் கை வைத்தேன்

அதை நான் செய்தது தவறா?

தேசபகதர்களுக்கு தேவை ஏதேனும் சில தடைகள்…செய்தேன்.

சேவிரோதிகளுக்கு தேவை உனக்கெதிரான நடவடிக்கை…எடுத்துவிட்டேன்.

உனக்கு தேவை வளம் கொழிக்கும் வர்த்தகம்…அதற்கெதுவும் என்னால் குந்தகமில்லையே!

இந்த நாட்டு தேசவிரோதிகள் என்னை புரிந்துக்கொள்ளாமலிருப்பதை கூட என்னால் புரிந்துக்கொள்ள முடியும். உனக்குமா விளங்கவில்லை?

தங்களுடைய ஊரில் நீ காரி்ல் வருவதை கூட ஏற்றுக்கொண்ட தமிழர்கள் என்னை காரில் வரவிடமாட்டார்கள் என்று தெரிந்தும் உனக்காக ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஒரு Tourist Guide போல உனக்கு மாமல்லபுரத்தையே சுற்றிக் காட்டினேனே, உன்னோடு சேர்ந்து இளநீரெல்லாம் குடித்தேனே…நீ என்னை புரிந்துக்கொண்டது அவ்வளவு தானா? என்று சீன அதிபரிடம் பதிலுக்கு நெக்குருகினார் நம் பிரதமர்.

எல்லாம் சரி தான், எங்கள் நாட்டு தொழிலதிபர்கள் என்னை கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன் என்று கேட்டார் சீன அதிபர்.

எங்கள் நாட்டு தொழிலதிபர்கள் என்னை கேள்வியே கேட்பதில்லை என்றார் மோடி.

என் நாட்டு மக்கள் என்னை கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன் என்று கேட்டார் சீன அதிபர்.

என் நாட்டு மக்களின் எந்த கேள்விக்கும் நான் பதிலே சொன்னதில்லையே என்றார் மோடி.

கன்பூசியசையும் மாசேதுங்கையும் ஒரு சேர காணும் பாக்கியம் பெற்று தன்யன் ஆனேன் சுவாமி என்றபடி விடைறெ்றார் சீன அதிபர்.

அந்த 20 ராணுவ வீரர்கள் குடும்பத்தினரும் ஆனந்த பெருக்கால் பிரதமரை வாயார வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் என்று இனியும் நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா?

பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை ஏறவேயில்லை?

2011 – 12ம் ஆண்டுகளுக்கு பின்னர் பெட்ரோல் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறவில்லை என்பதால் நவதுவாரத்தையும் பொத்துக்கொண்டு இருக்கும் பிரபலங்கள். தங்களை நடுநிலையாக காட்டிக்கொண்ட சங்கிகளுள் இவர்களும் அடங்குவர்.

போரை உருவாக்க தலைவன் தேவையில்லை;கிறுக்கன் போதும்.

தேசபக்தி, தேசபக்தி என்று மார்தட்டிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஜெய்ஹிந்த் சொல்லும் நமக்கு போரின் வலி தெரியாது. தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் விட்டு, உயிர்துறக்கும், ராணுவ வீரர்களும் அதிகாரிகளும்தான் போரின் வலியை அனுபவிப்பார்கள். எல்லையில் குடியிருக்கும் சாதாரண மக்களும் இதில் அடக்கம்.

இந்த வலியும், இதன் பாதிப்பும் ஒரு நாட்டை விட்டு விலக பல ஆண்டுகள் ஆகும். ஒரு போரின் இறுதியில், வெற்றி அல்லது தோல்வி என்று ஒரு நாடு மார்தட்டிக் கொண்டாலும், வெற்றி பெற்ற நாடு அனுபவித்த வேதனைகளும் இருக்கத்தான் செய்யும், உயிர்ச்சேதம் இல்லாத போர்கள் வரலாறில் இல்லை.

இதனால்தான், சமயோசிதம் மிகுந்த, மனிதநேயம் கொண்ட தலைவர்கள், போர்களை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்துள்ளார்கள். 2008ம் ஆண்டில், பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் 3 நாட்கள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவின் ராணுவ தலைமை, மன்மோகன் சிங்கிடம், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்றே ஆலோசனை சொன்னது. ஆனால், மன்மோகன் உறுதியாக மறுத்தார். அந்தத் , தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், குஜராத் முதல்வராக இருந்த மோடி, தாஜ் ஹோட்டல் அருகே, மத்திய அரசை குறை கூறி பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற தீவு அல்ல. இந்தியா, எல்லையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். இத்தகைய நிலப்பரப்பில் இருக்கும் ஒரு நாடு. சுற்றுப்புறம் உள்ள நாடுகளோடு நல்ல நட்புறவை பேணுவதும், அதை செழுமைப்படுத்துவதும் அவசியம். அது மட்டுமே அறிவார்ந்த நடவடிக்கையும் கூட. ஏனெனில் போர்க்காலத்தில் எந்த ஒரு சிறிய நாடும், நமக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அந்த சிறிய நாட்டில், எதிரி நாடு தங்களது விமானங்களுக்கு எரிபொருள் போடலாம். தன் துருப்புக்களை தங்க வைக்கலாம். ஆயுதங்களை சேமித்து வைக்கலாம்.

இது போல நீண்டகால ஆபத்துக்களை கருத்தில் கொண்டே, இந்தியா, ஈழப் போரில், சிங்களர்களுக்கு ஆதரவாக நின்றது. இது நம் மனதுக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்தாலும், இதுதான் யதார்த்தம். இந்தியா போன்ற ஒரு நாடு, தன் நீண்டகால நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும். உணர்ச்சிப்பூர்வமாக அல்ல.

இந்த விஷயங்களையெல்லாம் அலசி ஆராய்ந்தே, இந்தியாவின் இது நாள் வரை இருந்த பிரதமர்கள், நமது அண்டை நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணி வந்தார்கள். 2003ம் ஆண்டு, அமெரிக்கா இதர நாடுகளோடு இணைந்து, ஈராக் மீது போர் தொடுத்தபோது, இந்திய துருப்புகளை அனுப்புமாறு, சீனியர் புஷ், அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைத்தார். வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா ? எதிர்க்கட்சித் தலைவர் சோனியா மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆலோசித்தார். இறுதியாக, ஈராக் போரில், இந்தியா தன் துருப்புகளை அனுப்பாது என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மோடியாக இருந்தால், அமெரிக்க அதிபர் கேட்பதற்கு முன்னதாகவே இந்திய துருப்புகளை அனுப்பியிருப்பார். இதுதான் ஒரு உண்மையான தலைவனுக்கும், தன்னை ஒப்பற்ற தலைவனாக நினைத்துக் கொள்பவனுக்கும் உள்ள வேறுபாடு. \

https://thewire.in/…/india-nearly-gave-us-pressure-join-ira…

ஆனால், ஜவஹர்லால் நேருவைப்போல தன்னை ஒரு பெரும் தலைவராக நிரூபிக்க முயலும் மோடிதான், இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தையும் எதிரியாக்கி உள்ளார். ஒரு கட்டத்தில், இந்தியாதான், நேபாளத்தின் வெளியுறவு கொள்கையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இன்று அந்த நாட்டின் வீரர்கள், இந்தியர்களை சுட்டுக் கொல்லும் அளவுக்கு எதிரியாகி உள்ளார்கள்.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு மேஜர் ஒருவர் முன்பு ஒரு முறை என்னிடம் பேசுகையில் இந்திய ராணுவம், பூட்டான் நாட்டின் உள்ளே சர்வ சாதாரணமாக நுழைந்து, உல்பா தீவிரவாதிகளை பிடித்து வரும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு, தெற்காசிய பிரதேசத்தில் நாம் ஒரு வளர்ந்த நாடாகத்தான் இது வரையில் இருந்துள்ளோம்.

சீனாவை நாம் தொடக்கம் முதலே சந்தேகமாகத்தான் பார்த்து வந்தோம். சீனாவும், நம்மை ஒரு போதும் நட்புநாடாக பார்த்தது இல்லை. இந்தியா சீனாவைப் பொறுத்தவரை, ஒரு சந்தை. அவ்வளவே. சீனா, தொடர்ந்து, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், 26/11 தாக்குதல் மற்றும் இந்தியாவின் மீது நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான தீவிரவாதி மசூத் அஸாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை, சீனா தடுத்து நிறுத்தியது. ஆனால் அதற்கு பிறகுதான் அக்டோபரில், சீன அதிபரை மகாபலிபுரம் வரவைத்து, இளநீர் அளித்தார் மோடி. இது போன்ற சந்திப்புகள் புகைப்படம் எடுப்பதை தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.
இது போன்ற ஒரு நாட்டோடு இந்தியா கொஞ்சிக் குலவ வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் Equidistance என்று சொல்லப்படும் முறையில் இந்நாடுகளை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, சீனா அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் மோதலில், இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால், மோடி எந்த பெரிய நாட்டுக்கு சென்றாலும், அந்நாட்டின் அதிபர்களை கட்டிப் பிடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் காட்டிய கவனத்தை, இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் காட்ட மறந்தார். அதே போல சிறிய நாடுகளுக்கு செல்கையில், அந்நாட்டின் அதிபர்களை, ஒரு கடைகோடி பிஜேபி தலைவரைப் போல, ஆணவமாக நடத்தினார்.

மோடி ஒரு சுயமோகி என்பதை பல முறை எழுதியுள்ளேன். மோடி வெளியுறவு கொள்கை உள்ளிட்ட அத்தனை விவகாரங்களிலும் அடைந்துள்ள தோல்விக்கு காரணமும் இந்த சுயமோகமே.
சீனாவோடு போருக்கு செல்லும் நிலையில் நாம் இல்லை என்பது நம்மை விட மோடிக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாகத்தான், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சீனாவோடு தொடங்கிய சிக்கலை, இரு நாட்கள் முன்பு வரை மறைத்தார் மோடி. எத்தியோப்பிய காட்டில் தீப்பிடித்தால் உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் மோடி, நம் சொந்த நாட்டின் வீரர்கள் 20 பேர் இறந்த பிறகும், 24 மணி நேரத்துக்கு மேலாக அமைதி காத்தார். சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூட மோடிக்கு அச்சமாக உள்ளது.

மோடியின் வெளியுறவுக் கொள்கைக்கு சிறந்த உதாரணம், சீனாவின் இந்த அடாவடியான தாக்குதலை, உலகில் எந்த நாடும் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்பது. மோடி ஊர் ஊராக சென்று கட்டிப்பிடித்த ஒரு தலைவர் கூட சீனாவை கண்டிக்கவில்லை. ஏனெனில், உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும், சீனாவோடு வர்த்தக உறவு உள்ளது. உலக நாடுகளில் ஒன்று கூட சீன-இந்திய சிக்கலில் மாட்டிக்கொள்ள தயாராக இல்லை. இதுதான் மோடி 2000 கோடி செலவு செய்து, ஊர் ஊராக சுற்றி அடைந்த பலன்.

தேர்தலுக்காக, மோடியும், பிஜேபியின் இதர தலைவர்களும், பாகிஸ்தானை எத்தனை முறை சீண்டியுள்ளார்கள் !!! சீனாவோடு இன்று நாம் சிக்கலில் உள்ள நிலையில், பாகிஸ்தான், தன் துருப்புக்களை எல்லையை நோக்கி நகர்த்தினால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் ?

மோடி மற்றும் பிஜேபியால், இந்தியா இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்த, புகழ், மரியாதை, ஸ்திரத்தன்மை அனைத்தையும் இழந்து நிற்கிறது. எதிரிகளால் சூழப்பட்டு நிற்கிறோம்.

56 இன்ச் மார்பு என்று பீற்றிக் கொள்பவரின் தோல்வி இது.

சவுக்கு சங்கர்
18 ஜூன் 2020