தேர்தல் மக்களுக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுத்தருமா?

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேர்தல்கள் வருகின்றன.
புதிது புதிதான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம்,
சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் மனங்களும் மாற்றங்களை விரும்பினாலும் மாற்றங்களை ஏற்படுத்த விளைவதில்லை. அந்தளவிற்கு மக்களின் மனங்களில் பலவிதமான எண்ணங்களை விதைத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே மக்களை முடிவெடுக்க வைக்கின்றனர். கருத்துக்கணிப்புகள், நம்பும்படியான கட்டுக்கதைகள், இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் என்று பல்வேறு காரணிகளால் தவறான வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் மக்களின் கால்களிலும் விழும் வேட்பாளர்கள் வென்ற பின்னர் தொகுதி பக்கம் வருவதும் இல்லை; பிரச்சனை என்று சென்றால் தீர்வை தருவதில்லை என்பது மட்டுமல்ல மதிப்பதும் இல்லை. காரணம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் கட்சிகளே.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழர்களுக்கும்
தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் என்னென்ன கெடுதல் செய்திருக்கின்றனர்
என்பதை பட்டியலிட்டுள்ளோம். நம் சாதி வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக
இவர்களது கெடுதலை மன்னித்து மறந்து வாக்களிப்பது நமக்கு நாமே துரோகம்
இழைப்பதற்கு சமம் என்பதை உணர்வோம்.

அதிமுக:

தற்போதைய ஆளும் கட்சியான இவர்கள் மத்திய அரசின் கைப்பாவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட், உதய் மின் தொகுப்பு திட்டம், போன்றவற்றை தமிழகத்தின் நலன் கருதி ஜெயலலிதா அவர்கள் தடுத்துவைத்திருந்த போது அதை அனுமதித்ததிலிருந்து பல்வேறு துரோகங்களை செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் என்ற தனியார் நிறுவனத்திற்காக 14 மக்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். சல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவினர். கூடங்குளம் போராட்டத்தின் போதும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை என்று மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முனைப்புக்காட்டி மக்களை துன்பப்படுத்தியிருக்கின்றனர். மணல் கடத்தல், கோடநாடு கொலைகள், வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் இந்தக்கட்சியில் ஒரு உத்தமர் கூட இல்லை என்றளவில் தான் உள்ளது. பிறமொழியில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்றுவதாகக் கூறி அதில் சமற்கிருதத்திற்கு விலக்கு அளித்தது, தமிழை கட்டாய பயிற்று மொழியாக்காதது, கீழடி போன்ற அகழ்வாய்வுகளை சரிவர வெளிக்கொணராதது இவர்கள் தமிழுக்கு இழைத்த துரோகம்.

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் மட்டுமல்லாது தமிழக அரசின் வேலைகளுக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமல்ல என்று சட்டம் இயற்றிய நல்லவர்கள். உலகெங்கிலுமுள்ளவர்கள் தமிழக அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டத்தை மத்திய அரசின் விருப்பங்களுக்கேற்ப மாற்றியவர்கள். குறிப்பிட்டுச்சொல்லும் படியாக எந்தவொரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்யாவிடிலும் துரோகமாவது செய்யாமலிருந்திருக்கலாம். தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களது வயிற்றில் அடிக்கும் வேலையை கூச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

திமுக:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது துரோக பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சன் டிவியை வளர்த்தது, டாடா வை மிரட்டியது, பில் கேட்ஸிடம் பேரம் பேசியது என பட்டையை கிளப்பிய மாறன் சகோதரர்கள் பி எஸ் எண் எல்லின் அதிவேக இணைப்புகளை திருட்டுத்தனமாக தமது தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். 2G வழக்கிலிருந்து இவர்கள் வெளியில் வந்தாலும் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், நீரா ராடியா பேரம் பேசியது போன்றவை இவர்களது கயமைத்தனத்தை துகிலுறித்து காட்டத்தான் செய்கிறது. தமது பெருமையை பறைசாற்ற செம்மொழி மாநாடு நடத்தியது, தொலைக்காட்சிகளை இலவசமாக வழங்கி தமது சன் டீவி சேனல்களை வளர்த்தது. இவர்களது ஆட்சிகாலத்தில் அமைந்த அத்தனை நிறுவனங்களிலும் கையூட்டாக (லஞ்சம்) பங்குகளைப் பெற்றது.

தமிழகத்தில் உள்ள பெருவாரியான சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியிருக்கின்றனர். தமது கட்சியிலிருந்தவரையே மிரட்டி தினகரன் நாளிதழ், கரன் நெட்வோர்க், போன்றவற்றை பிடுங்கியவர்கள். தமிழ் சேனல்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு பிற மொழி சேனல்களுக்கு அந்தந்த மொழிகளிலேயே பெயர் வைத்திருப்பது தமிழின் மீதான காழ்ப்புணர்ச்சியோ. கிரிக்கெட்டில் கூட தமது மொழி சார்ந்த மாநிலத்தின் அணியையே வாங்கியிருக்கின்றனர். தங்களுக்கிடையேயான அதிகார போட்டியில் தினகரன் அலுவலகத்தை எரித்தது. ஏர்செல் நிறுவனத்தை நிப்பந்தப்படுத்தி விற்றது, ஸ்டெர்லிங் கட்டிடத்தைக் கேட்டு மிரட்டியது. அனைத்து சிமெண்ட் ஆலைகளிலுமுள்ள பங்குகளின் மூலம் விலையேற்றி பயனடைவது. கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.

காங்கிரஸ்:

பிரதானமாக ஈழத்தில் நல்ல நிலைக்கு முன்னேறிக்கொண்டிருந்த தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேரை கொன்றிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்டின் பங்குதாரர் ப சிதம்பரம். வரிக்கு வரி கொண்டுவந்த புண்ணியவான். நீட் தேர்வில் தமிழக நலனுக்கு எதிராக வழக்காடியவர் இவரது மனைவி. பங்குச்சந்தையில் சில கோல்மால்களைச்செய்தவர் இவரது மகன்.

காவேரிப்பிரச்சனையை பெரும் பிரச்சனையாக்கி அரசியல் பொருளாக்கியது. பலமுறை கர்நாடகத்தையும் கேரளத்தையும் ஆண்டபோதும் கூட நம் தண்ணீர் பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை. காங்கிரஸ் வென்றால் மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து தமிழக மீனவர்களை கொல்வது. குற்றமே சரிவர நிறுபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுவிக்காலிருந்திருக்கின்றனர்.

தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு இயக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தை கொச்சியிலிருந்து இயக்கியவர்கள். தமிழர்களுக்கிடையில் வியாபாரத்தொடர்பு ஏற்படாமலிருக்க வழிவகை செய்தவர்கள்.

பாஜக:

காங்கிரஸ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைத்த கொடுமைகளை கொஞ்சம்
கடுமையாக்கினர்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுங்கக்கட்டணத்தை 3 மாதங்களுக்கு
ஒரு முறை என்றளவில் ஏற்றி வந்திருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை
தினமும் ேற்றிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் உடனடியாக
ரு. 100 ஆகிவிடும்.
மேக் இன் இந்தியா என்று விளம்பரம் செய்வர் ரஃபேல் விமானத்தை
பிரான்சிலிருந்து தயாரித்து இறக்குமதி செய்வர். பணமதிப்பிழப்பு என்ற பெயரில்
கள்ள நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து பொருளாதாரத்தை சீரழித்துவிட்டனர்.
திருப்பூரை ஒன்றுமில்லாமலாக்கி உத்தர பிரதேசத்தில் ஜவுளி பூங்காவை
தொடங்கியிருக்கின்றனர்.
வரலாறு காணாத வரி விதிப்பை ஜிஎஸ்டி மூலம் கொண்டு
வந்திருக்கின்றனர். 28% வரி விதிப்பு. அனைத்து அத்தியாவசிய பொருட்களும்
விலையேறியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் வங்கி வாசலில் காத்துக்கிடக்க வைத்து
காவு வாங்கினர்.
எல்லாவற்றிர்க்கும் உதாரணமாக காட்டும் இராணுவ வீரர்களை பலி
கொடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.
தமிழகத்தின்
வளங்களோடு வேலைகளையும் வட இந்தியர்களுக்கு கொடுப்பது இவர்களே.
தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மிக முக்கிய காரணமே இவர்கள்
தான். பொது மக்கள் போராட்டங்களை கெடுப்பது, கள்ளக்காதல்
உயிரிழப்புகளுக்காகவும் பிரியாணி திருடுவதற்காகவும் போராட்டங்கள் நடத்துவதே
இவர்களது வாடிக்கை.
நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும்
பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாமக:

நான் தான் யோக்கியம் என்பது போல பேசி அனைத்து அயோக்கியத்தனங்களையும்
செய்துகொண்டிருக்கின்றனர்.
சேலம் சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு
தொடர்வதற்கு 2 கோடி ரூபாய்களை விவசாயிகளிடம் வசூலித்திருக்கின்றனர்.
தற்போது அதிமுக வுடன் கூட்டணியில் போட்டியிட பல கோடிகள் பெறப்பட்டதாக
தகவல். மத்திய மந்திரியாக இருந்தபோது கையூட்டு பெற்றுக்கொண்டு சில மருத்துவ
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அன்புமணி.
தமிழ், தமிழர் என்று வாய்கிழிய
பேசும் மருத்துவர் தேர்தல் வந்துவிட்டால் பணத்திற்கு அடிமை.

தேமுதிக:

தமிழக வரலாற்றிலேயே வெளிப்படையாக இரண்டு கூட்டணிகளிடமும் பேரம் பேசி
பெரும் தொகையை சம்பாதித்திருக்கின்றனர்.
கிடைத்த 4 தொகுதிகளில் ஒன்றில் கூட
தமிழர்களை நிறுத்த மனமில்லாதவர்கள் தமிழகத்திற்காக எந்த நன்மையை செய்வார்.
ஊடகங்களிடம் பேசும் திமிர் பேச்சு. தமது தாய்மொழி நாளிதழ்களை தவறாமல்
இவர்கள் படிப்பதுபோல நாமும் நம் தாய்மொழி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தி
நம் மொழியுணர்வை காட்ட வேண்டிய தருணம்.

பொதுவுடைமை (கம்யுணிஸ்ட்):

உலகெங்கும் இனம் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்து இயங்கும் பொதுவுடைமை
கொள்கை கொண்ட கட்சிகளில் தமிழகத்தில் மட்டுமே மாற்றினத்து முதலாளிகளின்
நலனுக்காக இயங்குகிறது. போட்டியிடும் இரு தொகுதிகளிலும்
தமிழரல்லாதவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கேரளத்திலிருந்து இங்கு
கொட்டப்படும் குப்பைகளைக் கூட கண்டுகொள்ள மாட்டர். அமெரிக்கா அணுவுலை
வைத்தால் எதிர்ப்பர். ரஷ்யா வைத்தால் வரவேற்பர். இவர்களால் தமிழர்களால்
நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் நிறுவனங்களே பெருவாரியாக மூடப்பட்டுள்ளது.
கூட்டுறவு ஆலைகளையும் சிதைத்த நல்ல உள்ளங்கள் இவர்கள். மொத்தத்தில்
இவர்களும் தமிழகத்தின் சாபக்கேடுகளே.

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்:

இந்த கட்சிகளில் எதுவுமே தம் மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான காரியங்கள்
எதுவுமே செய்வதில்லை. தேர்தல் நேரங்களில் இங்கொன்று அங்கொன்று என பேரம்
பேசி போட்டியிடும். இவர்களனைவரும் உப்புக்குச் சப்பு தான்.

அ ம மு க:

சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பக்கட்சி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அபகரித்துக்கொண்டுள்ளனர்.
ஜெயா டி வி யும் இவர்களது. ஆர் கே நகர் தேர்தலில் 20 ருபாய் டோக்கன் கொடுத்து
மக்களை ஏமாற்றி வெற்றி கண்டவர். திருடர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பர்.
அதில் கூட ஏமாற்றி இருக்கிறார். எப்படி நம்புவது? கட்டு கட்டாக பணம் பட்டுவாடா
செய்கிறார். பல இடங்களில் மாற்றிக்கொண்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு
வந்த பெண்ணை கற்பழித்த மூவர் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடும்
வேட்பாளர்கள். இவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் ரோட்டில் ஒரு பெண் நடமாட
முடியுமா?

எல்லா கட்சியையும் குறை கூறினால் எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது.
கடைசியாக நாம் தமிழர் கட்சி மீது மேலே குறிப்பிட்ட யோக்கிய கட்சிகளும்
அவைகளின் அனுதாபிகளான நடுநிலைவாதிகள் போர்வையில் செயல்படுபவர்கள்
வைக்கும் குற்றச்சாட்டையும் பார்ப்போம். இன்று வரை இவர்கள் அரசியலில்
வெல்லாததால் மற்ற கட்சிகள் மீதுள்ள விமர்சனம் போல எதுவும் சொல்ல இயலாததால்
கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டைப்பார்க்கலாம்
. அதற்கு முன்பதாக கமலின்
கட்சியையும் பார்த்துவிடலாம்.

ம நீ ம:

விஸ்வரூபம் படம் திரைக்கு வராவிட்டால் நான் நாட்டை விட்டு ஓடவேண்டியது தான்
என்று செய்தியாளர்கள் முன் அழுது பேட்டிகொடுத்தவர். அதன் பின்னர் எவ்வளவு
சம்பாதித்தார் என்றே தெரியவில்லை. இன்று திமுக அதிமுக கட்சிகளை விட
அதிகளவில் விளம்பரம் செய்கிறார். தேர்தல் தொடங்கும் வரை கட்சியில்
உறுப்பினர்களே இல்லை. போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு 20000 ருபாய் திருப்பி
செலுத்தாத வாய்ப்பு நிதி என்று தன் கட்சியினரிடமே சுரண்ட தொடங்கினார்.
இது குறித்த செய்தி நாளிதழ்களிலும் வந்திருக்கிறது.

நடுநிலையாளர்களும் மற்ற கட்சியினரும் கமலின் கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டு
இவை
.

நாம் தமிழர் கட்சி:

ஈழத்து விதவையை மணந்து கொள்வேன் என்றார் ஆனால் முன்னாள் சபாநாயகர்
பெண்ணை மணந்துள்ளார். இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார்.
கிறித்தவர்களுக்கு எதிராக பேசியுள்ளார். முகமதியர்களுக்கு எதிராக பேசியுள்ளார்.
இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம் பெறுகிறார். பிரபாகரனை ஆதரிக்கிறார்.
இலங்கை மாணவர்களை அடிப்பேன் என்று கூறினார். இன வெறியை தூண்டுகிறார்.
சீமான் மலையாளி. இவர் கிருத்துவர். சாதிக்கட்சி நடத்துகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள
குரோதத்தால் பரப்பப்படுபவையே. ஆதாரமற்றவை.

மதங்களுக்கு எதிராக சீமான் பேசியதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் திராவிட

கழகமும் திராவிட முன்னேற்ற கழகமுமே.

இவர்கள் மீதிருந்த நம்பிக்கை அற்றுப்போனபின் தொடங்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.

இந்த கட்சி முன் வைக்கும் கொள்கைகள் நம் தமிழகத்தை தற்சார்பு பொருளாதார
நிலைக்கு கொண்டு செல்லும். பெண்களுக்கான பாதுகாப்பு, வளம் பாதுகாப்பு, மீட்பு
என பல்வேறு காரணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தல் பரப்புரையின் போது
ஒரு வழக்கு கூட நாம் தமிழர் கட்சி மீது பதிவு செய்யப்படவில்லை. ஒழுக்கமாக
செயல்படும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் இந்த தேர்தல்
நிச்சயமாக நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நம் பாட்டனார் காலத்திலிருந்த பசுமையான தமிழகத்தை மீண்டும் காணவேண்டும்
என்ற எண்ணமும் ஆசையும் கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே
வாக்களிக்க முடியும். மரம் நடுதல், கையூட்டு ஒழித்தல் என்று பல்வேறு சமூக நலத்தை
பேணும் காரியங்கள் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு மீட்பையும்
குறித்த அக்கறை கொண்ட ஒரே கட்சி இது தான்.

தேர்தல் மக்களுக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுத்தருமா?

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேர்தல்கள் வருகின்றன. புதிது புதிதான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் மனங்களும் மாற்றங்களை விரும்பினாலும் மாற்றங்களை ஏற்படுத்த விளைவதில்லை. அந்தளவிற்கு மக்களின் மனங்களில் பலவிதமான எண்ணங்களை விதைத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே மக்களை முடிவெடுக்க வைக்கின்றனர். கருத்துக்கணிப்புகள், நம்பும்படியான கட்டுக்கதைகள், இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் என்று பல்வேறு காரணிகளால் தவறான வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் மக்களின் கால்களிலும் விழும் வேட்பாளர்கள் வென்ற பின்னர் தொகுதி பக்கம் வருவதும் இல்லை; பிரச்சனை என்று சென்றால் தீர்வை தருவதில்லை என்பது மட்டுமல்ல மதிப்பதும் இல்லை. காரணம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் கட்சிகளே.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் என்னென்ன கெடுதல் செய்திருக்கின்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளோம். நம் சாதி வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக இவர்களது கெடுதலை மன்னித்து மறந்து வாக்களிப்பது நமக்கு நாமே துரோகம் இழைப்பதற்கு சமம் என்பதை உணர்வோம்.

அதிமுக:

தற்போதைய ஆளும் கட்சியான இவர்கள் மத்திய அரசின் கைப்பாவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட், உதய் மின் தொகுப்பு திட்டம், போன்றவற்றை தமிழகத்தின் நலன் கருதி ஜெயலலிதா அவர்கள் தடுத்துவைத்திருந்த போது அதை அனுமதித்ததிலிருந்து பல்வேறு துரோகங்களை செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் என்ற தனியார் நிறுவனத்திற்காக 14 மக்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். சல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவினர். கூடங்குளம் போராட்டத்தின் போதும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை என்று மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முனைப்புக்காட்டி மக்களை துன்பப்படுத்தியிருக்கின்றனர். மணல் கடத்தல், கோடநாடு கொலைகள், வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் இந்தக்கட்சியில் ஒரு உத்தமர் கூட இல்லை என்றளவில் தான் உள்ளது. பிறமொழியில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்றுவதாகக் கூறி அதில் சமற்கிருதத்திற்கு விலக்கு அளித்தது, தமிழை கட்டாய பயிற்று மொழியாக்காதது, கீழடி போன்ற அகழ்வாய்வுகளை சரிவர வெளிக்கொணராதது இவர்கள் தமிழுக்கு இழைத்த துரோகம்.

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் மட்டுமல்லாது தமிழக அரசின் வேலைகளுக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமல்ல என்று சட்டம் இயற்றிய நல்லவர்கள். உலகெங்கிலுமுள்ளவர்கள் தமிழக அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டத்தை மத்திய அரசின் விருப்பங்களுக்கேற்ப மாற்றியவர்கள். குறிப்பிட்டுச்சொல்லும் படியாக எந்தவொரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்யாவிடிலும் துரோகமாவது செய்யாமலிருந்திருக்கலாம். தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களது வயிற்றில் அடிக்கும் வேலையை கூச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

திமுக:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது துரோக பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சன் டிவியை வளர்த்தது, டாடா வை மிரட்டியது, பில் கேட்ஸிடம் பேரம் பேசியது என பட்டையை கிளப்பிய மாறன் சகோதரர்கள் பி எஸ் எண் எல்லின் அதிவேக இணைப்புகளை திருட்டுத்தனமாக தமது தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். 2G வழக்கிலிருந்து இவர்கள் வெளியில் வந்தாலும் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், நீரா ராடியா பேரம் பேசியது போன்றவை இவர்களது கயமைத்தனத்தை துகிலுறித்து காட்டத்தான் செய்கிறது. தமது பெருமையை பறைசாற்ற செம்மொழி மாநாடு நடத்தியது, தொலைக்காட்சிகளை இலவசமாக வழங்கி தமது சன் டீவி சேனல்களை வளர்த்தது. இவர்களது ஆட்சிகாலத்தில் அமைந்த அத்தனை நிறுவனங்களிலும் கையூட்டாக (லஞ்சம்) பங்குகளைப் பெற்றது.

தமிழகத்தில் உள்ள பெருவாரியான சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியிருக்கின்றனர். தமது கட்சியிலிருந்தவரையே மிரட்டி தினகரன் நாளிதழ், கரன் நெட்வோர்க், போன்றவற்றை பிடுங்கியவர்கள். தமிழ் சேனல்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு பிற மொழி சேனல்களுக்கு அந்தந்த மொழிகளிலேயே பெயர் வைத்திருப்பது தமிழின் மீதான காழ்ப்புணர்ச்சியோ. கிரிக்கெட்டில் கூட தமது மொழி சார்ந்த மாநிலத்தின் அணியையே வாங்கியிருக்கின்றனர். தங்களுக்கிடையேயான அதிகார போட்டியில் தினகரன் அலுவலகத்தை எரித்தது. ஏர்செல் நிறுவனத்தை நிப்பந்தப்படுத்தி விற்றது, ஸ்டெர்லிங் கட்டிடத்தைக் கேட்டு மிரட்டியது. அனைத்து சிமெண்ட் ஆலைகளிலுமுள்ள பங்குகளின் மூலம் விலையேற்றி பயனடைவது. கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.

காங்கிரஸ்:

பிரதானமாக ஈழத்தில் நல்ல நிலைக்கு முன்னேறிக்கொண்டிருந்த தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேரை கொன்றிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்டின் பங்குதாரர் ப சிதம்பரம். வரிக்கு வரி கொண்டுவந்த புண்ணியவான். நீட் தேர்வில் தமிழக நலனுக்கு எதிராக வழக்காடியவர் இவரது மனைவி. பங்குச்சந்தையில் சில கோல்மால்களைச்செய்தவர் இவரது மகன்.

காவேரிப்பிரச்சனையை பெரும் பிரச்சனையாக்கி அரசியல் பொருளாக்கியது. பலமுறை கர்நாடகத்தையும் கேரளத்தையும் ஆண்டபோதும் கூட நம் தண்ணீர் பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை. காங்கிரஸ் வென்றால் மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து தமிழக மீனவர்களை கொல்வது. குற்றமே சரிவர நிறுபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுவிக்காலிருந்திருக்கின்றனர்.

தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு இயக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தை கொச்சியிலிருந்து இயக்கியவர்கள். தமிழர்களுக்கிடையில் வியாபாரத்தொடர்பு ஏற்படாமலிருக்க வழிவகை செய்தவர்கள்.

பாஜக:

காங்கிரஸ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைத்த கொடுமைகளை கொஞ்சம் கடுமையாக்கினர்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுங்கக்கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை என்றளவில் ஏற்றி வந்திருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் ேற்றிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் உடனடியாக ரு. 100 ஆகிவிடும்.

மேக் இன் இந்தியா என்று விளம்பரம் செய்வர் ரஃபேல் விமானத்தை பிரான்சிலிருந்து தயாரித்து இறக்குமதி செய்வர். பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கள்ள நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து பொருளாதாரத்தை சீரழித்துவிட்டனர். திருப்பூரை ஒன்றுமில்லாமலாக்கி உத்தர பிரதேசத்தில் ஜவுளி பூங்காவை தொடங்கியிருக்கின்றனர்.

வரலாறு காணாத வரி விதிப்பை ஜிஎஸ்டி மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். 28% வரி விதிப்பு. அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலையேறியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் வங்கி வாசலில் காத்துக்கிடக்க வைத்து காவு வாங்கினர்.

எல்லாவற்றிர்க்கும் உதாரணமாக காட்டும் இராணுவ வீரர்களை பலி கொடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தின் வளங்களோடு வேலைகளையும் வட இந்தியர்களுக்கு கொடுப்பது இவர்களே. தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மிக முக்கிய காரணமே இவர்கள் தான். பொது மக்கள் போராட்டங்களை கெடுப்பது, கள்ளக்காதல் உயிரிழப்புகளுக்காகவும் பிரியாணி திருடுவதற்காகவும் போராட்டங்கள் நடத்துவதே இவர்களது வாடிக்கை.

நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாமக:

நான் தான் யோக்கியம் என்பது போல பேசி அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்துகொண்டிருக்கின்றனர்.

சேலம் சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு 2 கோடி ரூபாய்களை விவசாயிகளிடம் வசூலித்திருக்கின்றனர். தற்போது அதிமுக வுடன் கூட்டணியில் போட்டியிட பல கோடிகள் பெறப்பட்டதாக தகவல். மத்திய மந்திரியாக இருந்தபோது கையூட்டு பெற்றுக்கொண்டு சில மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அன்புமணி.

தமிழ், தமிழர் என்று வாய்கிழிய பேசும் மருத்துவர் தேர்தல் வந்துவிட்டால் பணத்திற்கு அடிமை.

தேமுதிக:

தமிழக வரலாற்றிலேயே வெளிப்படையாக இரண்டு கூட்டணிகளிடமும் பேரம் பேசி பெரும் தொகையை சம்பாதித்திருக்கின்றனர்.

கிடைத்த 4 தொகுதிகளில் ஒன்றில் கூட தமிழர்களை நிறுத்த மனமில்லாதவர்கள் தமிழகத்திற்காக எந்த நன்மையை செய்வார். ஊடகங்களிடம் பேசும் திமிர் பேச்சு. தமது தாய்மொழி நாளிதழ்களை தவறாமல் இவர்கள் படிப்பதுபோல நாமும் நம் தாய்மொழி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தி நம் மொழியுணர்வை காட்ட வேண்டிய தருணம்.

பொதுவுடைமை (கம்யுணிஸ்ட்):

உலகெங்கும் இனம் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்து இயங்கும் பொதுவுடைமை கொள்கை கொண்ட கட்சிகளில் தமிழகத்தில் மட்டுமே மாற்றினத்து முதலாளிகளின் நலனுக்காக இயங்குகிறது. போட்டியிடும் இரு தொகுதிகளிலும் தமிழரல்லாதவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து இங்கு கொட்டப்படும் குப்பைகளைக் கூட கண்டுகொள்ள மாட்டர். அமெரிக்கா அணுவுலை வைத்தால் எதிர்ப்பர். ரஷ்யா வைத்தால் வரவேற்பர். இவர்களால் தமிழர்களால் நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் நிறுவனங்களே பெருவாரியாக மூடப்பட்டுள்ளது. கூட்டுறவு ஆலைகளையும் சிதைத்த நல்ல உள்ளங்கள் இவர்கள். மொத்தத்தில் இவர்களும் தமிழகத்தின் சாபக்கேடுகளே.

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்:

இந்த கட்சிகளில் எதுவுமே தம் மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான காரியங்கள் எதுவுமே செய்வதில்லை. தேர்தல் நேரங்களில் இங்கொன்று அங்கொன்று என பேரம் பேசி போட்டியிடும். இவர்களனைவரும் உப்புக்குச் சப்பு தான்.

அ ம மு க:

சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பக்கட்சி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அபகரித்துக்கொண்டுள்ளனர். ஜெயா டி வி யும் இவர்களது. ஆர் கே நகர் தேர்தலில் 20 ருபாய் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி கண்டவர். திருடர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பர். அதில் கூட ஏமாற்றி இருக்கிறார். எப்படி நம்புவது? கட்டு கட்டாக பணம் பட்டுவாடா செய்கிறார். பல இடங்களில் மாற்றிக்கொண்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த மூவர் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள். இவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் ரோட்டில் ஒரு பெண் நடமாட முடியுமா?

எல்லா கட்சியையும் குறை கூறினால் எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது. கடைசியாக நாம் தமிழர் கட்சி மீது மேலே குறிப்பிட்ட யோக்கிய கட்சிகளும் அவைகளின் அனுதாபிகளான நடுநிலைவாதிகள் போர்வையில் செயல்படுபவர்கள் வைக்கும் குற்றச்சாட்டையும் பார்ப்போம். இன்று வரை இவர்கள் அரசியலில் வெல்லாததால் மற்ற கட்சிகள் மீதுள்ள விமர்சனம் போல எதுவும் சொல்ல இயலாததால் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டைப்பார்க்கலாம்.

அதற்கு முன்பதாக கமலின் கட்சியையும் பார்த்துவிடலாம்.

ம நீ ம:

விஸ்வரூபம் படம் திரைக்கு வராவிட்டால் நான் நாட்டை விட்டு ஓடவேண்டியது தான் என்று செய்தியாளர்கள் முன் அழுது பேட்டிகொடுத்தவர். அதன் பின்னர் எவ்வளவு சம்பாதித்தார் என்றே தெரியவில்லை. இன்று திமுக அதிமுக கட்சிகளை விட அதிகளவில் விளம்பரம் செய்கிறார். தேர்தல் தொடங்கும் வரை கட்சியில் உறுப்பினர்களே இல்லை. போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு 20000 ருபாய் திருப்பி செலுத்தாத வாய்ப்பு நிதி என்று தன் கட்சியினரிடமே சுரண்ட தொடங்கினார். இது குறித்த செய்தி நாளிதழ்களிலும் வந்திருக்கிறது.

நடுநிலையாளர்களும் மற்ற கட்சியினரும் கமலின் கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டு இவை.

நாம் தமிழர் கட்சி:

ஈழத்து விதவையை மணந்து கொள்வேன் என்றார் ஆனால் முன்னாள் சபாநாயகர் பெண்ணை மணந்துள்ளார். இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார். கிறித்தவர்களுக்கு எதிராக பேசியுள்ளார். முகமதியர்களுக்கு எதிராக பேசியுள்ளார். இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம் பெறுகிறார். பிரபாகரனை ஆதரிக்கிறார். இலங்கை மாணவர்களை அடிப்பேன் என்று கூறினார். இன வெறியை தூண்டுகிறார். சீமான் மலையாளி. இவர் கிருத்துவர். சாதிக்கட்சி நடத்துகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள குரோதத்தால் பரப்பப்படுபவையே. ஆதாரமற்றவை. மதங்களுக்கு எதிராக சீமான் பேசியதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் திராவிட கழகமும் திராவிட முன்னேற்ற கழகமுமே. இவர்கள் மீதிருந்த நம்பிக்கை அற்றுப்போனபின் தொடங்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.

இந்த கட்சி முன் வைக்கும் கொள்கைகள் நம் தமிழகத்தை தற்சார்பு பொருளாதார நிலைக்கு கொண்டு செல்லும். பெண்களுக்கான பாதுகாப்பு, வளம் பாதுகாப்பு, மீட்பு என பல்வேறு காரணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தல் பரப்புரையின் போது ஒரு வழக்கு கூட நாம் தமிழர் கட்சி மீது பதிவு செய்யப்படவில்லை. ஒழுக்கமாக செயல்படும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் இந்த தேர்தல் நிச்சயமாக நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நம் பாட்டனார் காலத்திலிருந்த பசுமையான தமிழகத்தை மீண்டும் காணவேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். மரம் நடுதல், கையூட்டு ஒழித்தல் என்று பல்வேறு சமூக நலத்தை பேணும் காரியங்கள் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு மீட்பையும் குறித்த அக்கறை கொண்ட ஒரே கட்சி இது தான்.

இது கம்யூனிஸ்ட்கள் தேய்ந்த கதை !

உலக அரசியல் பேசும் மாமேதைகளின் கூடாராமாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் இறுதிகாலம் இது. 2014-தேர்தலுக்கு முன்பு எப்பொழுதும் 80 பேருக்கு குறைவில்லாமல் இந்திய பாராளுமன்றத்தில் இருந்த இந்த பொதுவுடமைவாதிகளின் எண்ணிக்கை இன்று 10 பேர்கூட இல்லாத பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. கம்யூனிஸ்ட்களின் தவறான அரசியல் அணுகுமுறைதான் அவர்கள் சிதைந்து அழிந்து போனதற்கு காரணம்.

ஐயா ஜீவானந்தம் போன்ற ஆகச்சிறந்த அறிவாளிகள் வழிநடத்திய தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐயா அருணன் போன்ற அரைகுறை பொதுவுடமைவாதிகள் வழிநடத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. ஜீவானந்தம், ‘ஒவ்வொரு தேசிய இனமும் அதனதன் தாய் மொழியை நேசிக்க வேண்டும்’ என்றார். ஏனெனில் அவர் உண்மையான கம்யூனிஸ்ட். அதனால்தான் அப்பொழுது அவரால் தமிழக சட்டமன்றத்தில் வலிமையான எதிர்கட்சி தலைவராக இருக்க முடிந்தது. இன்றுள்ள கம்யூனிஸ்ட்கள் ‘மொழி வெறும் தொடர்பு சாதனம்தான்’ என்ற பேசத் தொடங்கியதால்தான் கூட்டணி வைத்து வயிறு கழுவுகின்ற நிலைக்கு மொத்த கம்யூனிஸ்ட்களும் வந்துவிட்டனர்.

கார்ல் மார்க்ஸ் தனது ஒரு கட்டுரையில் ‘மொழிவழி தேசிய இனங்கள் தனித்து வாழும் அதிகாரம் பெற்றவை. ஓர் இனத்தின் விடுதலை என்று வரும்பொழுது, அங்கு முதலாளி, தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடு தேவையில்லை’ என்று எழுதினார். அது உலகம் முழுவதும் உள்ள பொதுவுடமைவாதிகளிடம் விவாதப் பொருளாக மாறியது. மீண்டும் அதற்கு விளக்கம் அளித்த மார்க்ஸ், ‘ஒரே இனத்திற்குள் வர்க்க பாகுபாடுகளை பார்க்க முடியும். ஆனால் வெவ்வேறு இனத்திற்கு இடையே வர்க்க வேறுபாடு பொருந்தாது. அவர்கள் இனமாகத்தான் ஓர்மைபடுவார்கள்’ என்றார். இதனை இன்றுள்ள அரைகுறை கம்யூனிஸ்ட்கள் புரிந்து கொள்ளுமாறு ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன்.

‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பது கம்யூனிஸ்ட்களின் முழக்கம். அது எளிதானது அல்ல. இந்திய அரசியல் சூழலுக்கு ஒத்துவராத முழக்கம். ஏனெனில், தமிழர்களிலும் தொழிலாளி உண்டு; மலையளிகளும் தொழிலாளி உண்டு. இவர்களை தொழிலாளி என்ற குடையின்கீழ் கொண்டு வந்தாலும், அவர்களை மொழியால் ஓர்மைபடுத்த முடியாது. அதனால்தான் கம்யூனிஸ்ட்கள் தமிழகத்தில் ஒரு அரசியல் நிலைபாடும், கேரளாவில் ஒரு அரசியல் நிலைபாடும் எடுக்கின்றனர். இதனைத்தான் மண்ணுக்கேற்ற மார்க்சியத்தை கட்டியெழுப்புங்கள் என்றார் லெனின். இந்த இடத்தில்தான் இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் குழம்பிப் போனார்கள்.

‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் கட்டுப்பட்டு வாழ வேண்டும். தனிஈழம் கேட்பது குற்றமென’ பேசும் இந்திய கம்யூனிஸ்ட்கள், மாவோயிஸ்ட்களாகவும் நக்சல்பாரிகளாகவும் மாறி இந்தியாவின் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட முடியாது என்கின்றனர். பிரபாகரன் ஆயுதம் தூக்கினால் ஈழத் தமிழர்களை வன்முறையாளர்கள் என்று குற்றம்சாட்டும் இவர்கள் மாவோயிஸ்ட்களை ஆதரிக்கின்றனர். என்ன சார் உங்க சட்டம்?

மாவோயிஸ்ட்களுக்கும் நக்சல்பாரிகளுக்கும் அவர்களின் ஆயுதவழிப் போராட்டத்திற்கும் எவ்வளவு நியாயமான காரணங்கள் உள்ளதென நீங்கள் சொல்கிறீர்களோ, அதற்கு சற்றும் குறைவில்லாத கோடிக்கணக்கான காரணங்களை ஈழ விடுதலைப் போராளிகளும் வைத்திருக்கின்றனர். ஈழ விடுதலையை மட்டும் எதிர்க்கும் இந்திய கம்யூனிஸ்ட்கள் வெறும் போலி கம்யூனிஸ்ட்களாகவே இருக்க முடியும்.

தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிக்க அடையாளமாக இருக்கும் தேசியத் தலைவர் பிரபாகரனை கொலைகாரன் என்று இந்தியாவின் எல்லா கம்யூனிஸ்ட்களும் பேசுவது எவ்வளவு பெரிய கொடுமை. கேரளாவில் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் நூற்றுக்கணக்கான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களை கூலிக்கு ஆள் வைத்து கொன்றது யார்? கேரள கம்யூனிஸ்ட்கள் அரசியல் கொலைகளை செய்கின்றனர் என்று ஆய்வுகள் நிரூபிப்பதை எவரேனும் ஒருவர் மறக்க முடியுமா?

கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தால் முல்லைபெரியாறு அணை பிரச்சனை வரும் போது, தமிழக கம்யூனிஸ்ட்கள் முக்காடு போட்டுக் கொண்டு வீட்டில் படுத்துக் கொள்வர். அதேசமயத்தில், கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி வந்தால், தமிழக வீதிகளில் போராட கிளம்பிவிடுவர்…

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா கையெழுத்து இட்டபோது, மன்மோகன் அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானைத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த கம்யூனிஸ்ட்கள். கேட்டால், ‘அணு சக்தி ஆபத்தானது’ என்றனர். ரஷ்ய அரசால் கூடங்குளத்தில் நிறுவப்பட்ட அணு உலை பாதுகாப்பானது. நாட்டின் வளர்ச்சி என்றனர் இதே கோமாளிகள். அணுசக்தியைவிட ஆபத்தானவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள்.

இந்திய கம்யூனிஸ்ட்களுக்கென்று எந்த பொதுவான சித்தாந்தமும் இல்லை; பொதுவான செயல்திட்டமும் கிடையாது. எந்தெந்த மாநிலங்களில் யார் யாருடன் கூட்டணி வைக்கின்றனரோ, அவர்களின் தேர்தல் அறிக்கைதான் அவர்களின் கொள்கையாக மாறிப்போனதுதான் பரிதாபத்துக்குரியது. திமுக, அதிமுக கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேரம் பேசுவதில் தேமுதிகவின் முன்னோடியே கம்யூனிஸ்ட் கட்சிகள்தான். இரண்டு சீட்டுக்கு திமுக, அதிமுக கட்சிகளிடம் மண்டியிட்டு நிற்பதில் சாதிக் கட்சிகளுக்கு நிகரானவர்கள்தான் இந்த தமிழக கம்யூனிஸ்ட்கள்.

தனிப்பெரும் முதலாளிகளை எதிர்ப்பதுதான் கம்யூனிசம் என்றால் தமிழகத்தில் இவர்கள் கூட்டணி அமைத்துள்ள திமுகவின் வேட்பாளர்கள் ஜெகத்ரட்சகன், டிஆர்பாலு, தயாநிதி மாறன் போன்றவர்கள் என்ன பஞ்சப்பறாதிகளா? ஏழைகளா? தொழிலாளி வர்க்கமா? இவர்கள் எல்லாம் தனிப்பெரும் முதலாளிகள் என்றால் அங்கு வாழும் கம்யூனிஸ்ட்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்?

கேரளாவில் ‘ராகுல்காந்தி ஒழிக’ என்று கத்தும் காம்ரேட்டுகள்.. தமிழகத்தில் ‘ராகுல் காந்தி வாழ்க’ என்று கத்தும் போதே அவர்களின் கொள்கை கோட்பாடுகள் எல்லாம் சுக்குநூறாக உடைகிறது. கம்யூனிஸ்ட்கள் இனி உதிரிக்கட்சியாக வாழ்ந்து அழியும் என்பதே நிதர்சனம்.

பொதுவாக கம்யூனிஸ்ட்கள் தங்களை எளிமையானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் காட்டிக் கொள்வர். எளிமையான, தூய்மையான கம்யூனிஸ்ட்கள் எதற்காக திருட்டு திமுகவோடும், அதிமுகவோடும் மாறி மாறி கூட்டணி வைக்கின்றனர்?

இங்கு உங்கள் எளிமை, தூய்மையைவிட நேர்மையானவர்களோடு கூட்டணி வைப்பதுதான முக்கியம். திருடர் குலத் திலகங்களான திராவிட தலைவர்களோடு ஒரே மேடையில் உட்கார்ந்து, ‘நாங்கள் எளிமையானவர்கள், தூய்மையானவர்கள்’ என்பது அப்பட்டமான ஒப்பாரி.

நல்லவனுக்கு இருட்டில் என்ன வேலை?
எளிய, தூய கம்யூனிஸ்ட்களுக்கு திராவிடக் கட்சிகளோடு என்ன வேலை?
கம்யூனிஸ்ட்கள் போடுகின்ற ஓட்டை வாங்கி திமுக முதலாளித்துவத்தை எதிர்க்கவா போகின்றது?
யாரை ஏமாற்ற இந்த கூட்டணியை வைத்திருக்கிறீர்கள் காம்ரேட்டுகளே?

எழுதி வைத்துக் கொள்ளுங்கள், கம்யூனிஸ்ட்களின் கலிகாலம் இது…

திராவிடம் புதைக்கப்பட்டு, தமிழ்த்தேசியம் மலரப்போகும் போது, திராவிடத்திற்கு துணைப் பிணமாக தமிழகத்தில் உள்ள போலி கம்யூனிச கட்சிகளையும் அனுப்பி வைப்போம்…

-பேராசிரியர் ஆ.அருளினியன்

பழைய சுப.வீ

இன்று திராவிட கருத்தியலுக்கு பிரச்சார பீரங்கியாகவும் தி.மு.க -வுக்கு விசுவாசமான அடிமையாகவும் மாறிக்கிடக்கும் சுப.வீ (எ) சுப.வீரபாண்டியன் தமிழினத்தில் பிறந்த ஒரு இனத்துரோகி ஆவார்.

ஆனால், இவர் 1990 களில் திராவிடத்தை விமர்சித்தும் தமிழ்தேசியத்தை ஆதரித்தும் எழுதிவந்தார் என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கலாம்.

தி.மு.க இவரை எதைக் காட்டி வளைத்தார்களோ தெரியாது.
அப்போது நிறம் மாறிய பச்சோந்தியான சுப.வீ இப்போது நாயினும் கேடாக நக்கிப் பிழைக்கும் இழிபிறப்பாகி நிற்கிறார்.

இவரை சான்றுடன் தோலுரிப்பது நமது கடமையாகும்.

1990 இல் துக்ளக் இதழில் தனித்தமிழ்நாடு ஆதரவாளர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கம் பற்றி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் சுப.வீ பேசியது இடம்பெற்றுள்ளது.
அது வருமாறு,

“1963 -ல் பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அந்த சட்டத் திருத்தத்தின் மூலம் பிரிவினை என்றே சொல்லவே கூடாது என்று பேச்சுரிமை பறிக்கப்பட்டது.
அந்தச் சட்டம் வந்தவுடனேயே அண்ணா திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்ட அந்தச் சட்டம் வந்தவுடனேயே அண்ணா திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்.
அதற்கு அவர் சொன்ன காரணங்கள் சாதூர்யமான பேச்சுதான்.
பிறகு 1965 -ல் மாணவர்கள் நடத்திய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி 67 -ல் முடிந்துவிட்டது.
அதற்கு காரணம் (தி.மு.க) ஆட்சிக்கு போனதுதான்.

திருச்சி (தி.மு.க)மாநாடு ஒரு திருப்புமுனை என்றார்கள்.
ஆனால் ஒரு மாற்றமும் இல்லை.
குடியரசு, விடுதலை, குத்தீட்டி, எரியீட்டி என்று ஒரு காலத்தில் (திராவிட) பத்திரிக்கைகள் வந்தன.
ஆனால் இன்று திராவிட இயத்திலிருந்து குங்குமம், முத்தாரம், மெட்டி என்று வருகின்றன.

குங்குமம் பத்திரிக்கையிலே ஆபாச இலவச கிளுகிளுப்பு இணைப்பு வெளியிட்டு அதை எதிர்த்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.
ஏ.பி.வி.பி யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஒவ்வொரு கல்லூரியிலும் பள்ளியிலும் வேலை செய்கிறார்கள்.
நாம் இலவச கிளுகிளுப்பு வெளியிட்டுக்கொண்டு இருக்கிறோம்.
திராவிட இயக்கம் எந்த தேய்வுக்கு வந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இரண்டு திராவிட இயக்கங்களும் மாறி மாறி டெல்லிக்கு காவடி எடுத்ததால் இங்கு தமிழ் தேசிய உணர்வு பட்டுப் போயிருக்கிறது”
[துக்ளக் 16.02.1990]

இன்னொரு சான்றையும் பார்ப்போம்.
சுப.வீ ‘இனி’ என்கிற பெயரில் நடத்தி வந்த மாத இதழில் 1994 இல் எழுதியது வருமாறு,

“மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் பெறாமல் இருந்த சென்னைத் தலை மாகாணத்தில் ஆந்திரர்கள் பெரும் செல்வாக்குடன் இருந்தனர்.

காங்கிரசு எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு மூன்றும் தெலுங்கர் முதலான பிற திராவிட இனத்தவருக்கும் உரியதாக இருந்தமையால், அவர்களையும் அணைத்துக் கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதனால் தமிழ்த் தேசிய உணர்வை திராவிட தேசிய உணர்வு விழுங்கி விட்டது.

நீதிக்கட்சி என்று அறியப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தெலுங்கர்களின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது என்பதனை ஹ்யூஜின் இர்ஷிக், கிறிஸ்டோபர் ஜான் பேக்கர், குணா முதலான ஆய்வாளர்கள் தத்தம் ஆய்வு நூல்களில் விளக்கமாகக் குறித்துள்ளார்கள்.

‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்றே குணா கருதுகின்றார்.

நீதிக்கட்சியை தொடங்கிய பி.டி.தியாகராயர், மருத்துவர் டி.எம். நாயர் இருவரும் தமிழரல்லர்.

பனகல் அரசரும் 1915ஆம் ஆண்டிலேயே ஆந்திர இயக்க மாநாட்டிற்குத் தலைமை தாங்கியுள்ளார்.

நீதிக்கட்சியின் சார்பாகத் தொடங்கப்பெற்ற தமிழ் ஏட்டிற்கு ‘திராவிடன்’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனால், தெலுங்கு ஏட்டின் பெயர் ‘ஆந்திர பிரகாசிகா’ என்று தான் இருந்தது.

நீதிக்கட்சியின் சார்பில், சென்னை தலை மாகாணத்திற்கு முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் பலர் (ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், கே.வேங்கட ரெட்டி நாயுடு, சித்தூர் வி.முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், கூர்ம வெங்கட ரெட்டி) நீதிக்கட்சியின் சார்பில், சென்னை தலை மாகாணத்திற்கு முதலமைச்சர்களாகவும், அமைச்சர்களாகவும் பலர் (ஏ.சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர், கே.வேங்கட ரெட்டி நாயுடு, சித்தூர் வி.முனுசாமி நாயுடு, பொப்பிலி அரசர், கூர்ம வெங்கட ரெட்டி) தெலுங்கர்களே.

நீதிக்கட்சியின் கூட்டங்கள் தெலுங்குப் பகுதியில் நடைபெற்றபோது தெலுங்கிலும், தமிழ்ப் பகுதியில்
நடைபெற்ற போது ஆங்கிலத்திலும் நடைபெற்றன.

மொழிவழித் தேசங்கள் உருவாகாத அன்றையச் சூழலில், தேசிய இன உணர்வை (National race) முன் நிறுத்த முடியாமல், சமூக நீதியில் சரியாக இயங்கினர் என்னும் நிறைவில், ‘திராவிடர்’ என்னும் மரபு இன உணர்வையே (Ethnic race) பெரியார் உட்பட அனைவரும் முன் நிறுத்திய சூழலை நாம் இன்று உணர முடிகிறது.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய உணர்வு பின்னடைந்தமைக்கு, திராவிட தேசிய உணர்வு ஒரு முகாமையான காரணம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.”

[இனி -சமூக மாத இதழ்,
திருவள்ளுவர் ஆண்டு 2025,
மடங்கல் -கன்னி, செப்டம்பர் ’94 ]

இவ்வளவு தெளிவாக இருந்த சுப.வீ எப்படி மாறினார்?!

பெற்றோர் காலத்தில் இருந்தே திராவிட சிந்தனையுடன் வளர்க்கப்பட்ட சுப.வீ, 1970களில் பெருஞ்சித்திரனார் இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு தமிழ்தேசியத்திற்கு மாறினார்.
‘தமிழர் இயக்கம்’ எனும் அமைப்பையும் தொடங்கினார்.

பிறகு தியாகுவின் தமிழ்தேசிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

ஈழ ஆதரவு பணிகளில் ஈடுபட்டபோது 2002 இல் ஜெயலலிதாவினால் பொடா சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் இவருக்கு தி.மு.க உதவி செய்தது.

திமுக என்ற கழுதை தேய்ந்து கட்டெரும்பானது!

திமுகவை தமிழ்தேசியவாதிகள் விமர்சிக்கும் போதெல்லாம் அதற்கு முட்டுகொடுக்க ஓடிவரும் திராவிடிய பாடிசோடாக்கள் சொல்லும் ஒரு முக்கியமான வாதம்.

ஊழல் குற்றச்சாட்டைக் கடந்து பார்த்தால் திராவிட சித்தாந்தம் மற்றும் கொள்கை ரீதியாக வலிமையாக உள்ளது திமுக மட்டும்தான். அதிமுகவோடு ஒப்பிடும்போது திமுக தத்துவார்த்த ரீதியாக இன்றும் தேவையான அமைப்புதான்.

என்று அடுக்கடுக்காக அவிழ்த்துவிடுகிறார்கள்.

இது அப்பட்டமான பொய்.

திமுகவை அதிமுகவோடு ஒப்பிடுவதே முதல் பிழை. ஏனெனில் அதிமுகவிற்கு கொள்கை என்ற ஒன்று எப்பொழுதுமே இருந்தது இல்லை. தெளிவாக சொன்னால் எம்ஜியாரும் விஜயகாந்தை போன்ற தத்துவார்த்த புரிதலற்ற ஒரு கோமாளி.

எம்ஜியார் அதிமுக என்று பெயர் வைத்தவரை பிழையில்லை. அதனை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றியபோதே தனது அரசியல் புரிதல் இன்மையை காட்டிவிட்டார்.

திராவிட கோட்பாடு ஒரு போதும் இந்தியத்தோடு ஒன்றுபட்டதல்ல என்றே அதுவரை பெரியாரும் அண்ணாவும் பேசிவந்தார்கள். அண்ணா வழிவந்த எம்ஜியார் என்ற கோமாளிக்கு இந்த புரிதல்கூட இல்லை. எனவே அதிமுக பிறக்கும்போது அதுவொரு குறைபிரசவ கட்சி.

ஆனால் திமுக அப்படி அல்ல. அண்ணாதுரை தெளிந்த புரிதலோடே கொள்கைகளை வரையறை செய்தார். திராவிட நாடு கோரிக்கையோடு கிளம்பிய அண்ணாதுரை இந்திய தேர்தல் நடைமுறைகளுக்கு உட்பட்டு மாநில சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து தனது அரசியலை நகர்த்தினார். உண்மையில் இது ஒரு பின்வாங்கலோடு கூடிய சாமர்த்திய தனமே!

அவர் 1967-ல் ஆட்சி பொறுப்பேற்றதும் தனது சுயாட்சி கோரிக்கையை நடைமுறைபடுத்த முயன்றார். ஆனால் அவர் உடல்நலம் குன்றி இறந்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி ராஜமன்னார் குழு அமைத்து சுயாட்சி கோரிக்கையை வழியுறுத்தி 1974-ல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
பிரதமராக இருந்த இந்திராகாந்தி அதை கிடப்பில் போட்டார்.

அதன்பிறகு இந்திராவோடு கூட்டணி
அதன்பிறகு விபிசிங்கோடு கூட்டணி
அதன்பிறகு வாஜ்பாயோடு கூட்டணி
அதன்பிறகு மன்மோகனோடு கூட்டணி என பல வாய்ப்புகளை கருணாநிதி பெற்றபோதும் ஒருநாளும் வாய்திறந்து மாநில சுயாட்சியை பேசவில்லை.

டெசோ மாநாடு
மாநில சுயாட்சி மாநாடு
இப்படி அடிக்கடி திமுக போடுவதெல்லாம் ஒரு வேசம்.

கொள்கை ரீதியாக கருணாநிதி உயிரோடு இருக்கும்போதே திமுக செத்துவிட்டது. கருணாநிதி செத்தப்பிறகா திமுக கொள்கை பற்றோடு வாழும்.

அதுவொரு செத்தபாம்பு.
தேய்ந்துபோன கழுதை.

பேராசிரியர் #அருளினியன்

காமராசரின் நிழற்படம்

கல்விக்கண் திறந்த காமராஜர் நிழற்படத்தை நடிகர் ஒருவர் வீட்டில் மாட்டி வைத்துள்ளார். நாடார் சமுதாய ரசிகர் ஒருவர் ஆர்வ மிகுதியால் அந்த நடிகரிடம், “அய்யா நீங்க நாடார் சமுதாயமா?” என கேட்டிருக்கார்.

நடிகர் சிரித்துக்கொண்டே சொன்னாராம்.

நான் கள்ளர் சமுதயத்தை சேர்ந்தவர் என்று.

காமராஜரை கல்விக்கண் திறந்த தெய்வமாக தான் அனைத்து சாதி மக்களும் பாக்குறாங்க தம்பி. காமராஜர் போட்டோ வைத்திருப்பவர்கள் எல்லோரும் நாடார் சமுதாயமாக தான் இருப்பார்கள் என்ற உன் எண்ணத்தை மாற்றிக்கொள், காமராஜர் இந்திய பாரத தேசத்திற்கே சொந்தம் என்றாராம்.

காமராஜர் நினைவால் தங்கள் குழந்தைகளுக்கு காமராஜர் என பெயர் சூட்டியதில் பல சமுதாய மக்களும் உண்டு.

சாதி மத வேறுபாடு இல்லாமல் மக்களுக்காக வாழ்ந்து தமிழ்நாட்டின் தலைஎழுத்தையே மாற்றிபோட்டு காட்டிய தலைவர் காமராஜர் அவர்.

நீங்கள் காமராஜர் வாழ்க்கையை நன்றாக படியுங்கள்.அவரை போல வாழ்ந்து காட்டுங்கள் என்றாராம்.

அந்த இளைஞன் தெளிவான சிந்தனையுடன் வெளியேறினான்.

அந்த நடிகர் “நடிகர் திலகம் சிவாஜி கணேசன்” தான்.

சிவாஜி கணேசன் காமராஜர் படத்தை மாட்டிவைத்திருந்த இடம்
அவருடைய பூஜை அறை என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

காமராஜர் இறந்த பின் சிவாஜி கணேசன் எந்த பொது மேடையில் பேசினாலும் ” என்னை படைத்த இறைவன் அருளும் என் தலைவன் காமராஜர் அருளும் ” என்று சொல்லியே நிறைவு செய்வார்.

சாதிக்கு அப்பாற்பட்டு தமிழனாக இந்திய குடிமகனாக வாழ்ந்து சாதித்த நம் தலைவர்கள் மீது சாதிய அடையாளத்தை திணித்தும், மாற்றுச்சாதி தலைவர்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தியும் வருவதே திராவிடம் என்பதை சமீபத்திய சுப வீரபாண்டியனின் சீமான் குறித்ததான கருத்துக்கள் மூலம் அறியலாம்.

சீமான் ஆபாசமாகப் பேசினார்

சீமான் பேசியது திராவிடம் ஆரியத்திடம் வீழ்ந்தது குறித்து. ஆனால் தொடர்பே இல்லாமல், சீமான் ஆபாசமாகப் பேசினார் என்று பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர் பேசியது அப்படியே கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது (நக்கீரன் முகநூல் பக்கத்திலிருந்து எடுத்தது).

இதில் என்ன ஆபாசம் இருக்கிறது என்று அறிவார்ந்த கருணாநிதி பக்தர்கள் சொல்வார்களாக.

“திராவிட முனேற்றக் கழகத்தின் புதிய தலைவராக ஐயா ஸ்டாலின் பொறுப்பேற்று இருக்கிறார். ஒரு தலைவரின் மகன் மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சு தலைவர் ஆகியிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் இப்படித்தான் பேசுகிறார் ‘படிப்படியாக, உழைத்து, கஷ்டப்பட்டு தலைவர் ஆகியிருக்கிறேன்’ என்று ஸ்டாலின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய சாதனை!!! அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர் மகன் தலைவரானது சாதனையாம். ஏன்னா அவரு படிப்படியா வந்தாராம்.

‘தமிழ் இனமே உனக்காக நான் உயிர் உள்ள வரை பாடுபடுவேன்’ என்று அவர் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் இனவாதிகள், ஃபாசிஸ்ட்டுகள், தூய இனவாதிகள் என்பார்கள். கலைஞர் ஐயாவே ‘நாமெல்லாம் தமிழர் என்ற உணர்வை பெற வேண்டும்’ என்று ஒரு மேடையில் சொல்லுகிறார். இதையே நாம் சொன்னால் அது குற்றமாகிறது. ஏன் அவர்கள் ‘திராவிட இனமே உனக்காக நான் பாடுபடுவேன்’ என்று சொல்லவில்லை? ஏன் என்றால் இங்கே யாரும் திராவிடர்கள் இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். இதுவரை அங்கு யாருக்கும் திராவிடம் என்றால் என்னவென்ற சரியான தெளிவு, சரியான பதில் எதுவும் இல்லை. முதலில் ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்றார்கள், திராவிடம் என்று இல்லாமல் தமிழர் என்று இருந்திருந்தால் பிராமணர்கள் ‘நாங்களும் தமிழர்’ என்று கட்சியில் சேர்ந்துவிடுவார்கள் என்றுதான் இவர்கள் காரணம் சொன்னார்கள். ஆனால் என் கட்சியில் ஒரு பிராமணனும் இல்லையே, நானும் ‘தமிழன்’ என்றுதான் பெயர் வைத்துள்ளேன். ஆனால் முப்பத்திஐந்து ஆண்டுகளாக ஒரு பிராமண பெண் அந்த திராவிட கட்சிக்கு தலைவராக இருந்துவிட்டு போனார். யாரை சொல்லுகிறேன் தெரிகிறதா?

திராவிட சுடுகாட்டில் மூன்று பேர் படுத்திருக்கிறார்கள், அவர்களுடன் அந்தப் பெண்மணியும் படுத்திருக்கிறார்கள். நல்லவேளை அதில் காமராஜருக்கு இடம் தரவில்லை. அந்த திராவிட சுடுகாடு நமக்கு தீண்டத்தகாத இடம், அங்கேதான் இவர்கள் எந்த ஆரியத்தை எதிர்த்து புரட்சி செய்தார்களோ, அதே ஆரியத்தை சேர்ந்த பெண்மணியும் இருக்கிறார். அவர்களுடன்தான் இவரும் படுத்திருக்கிறார்.

ஆரியத்தை எதிர்க்க வந்த திராவிடம் மண்டியிட்டுக் கூட நிற்கவில்லை, அப்படி நின்றிருந்தால்கூட தாண்டி போவது கடினம் எனலாம். இப்போது மல்லாக்கப் படுத்துவிட்டது.

என்று பேசியிருக்கிறார்.

சிந்திக்காத தமிழர் பலரே.. சிந்திப்போம்!

திராவிடமும் இந்தியமும் தமிழர் மேல் தொடர்ந்து திணிக்கப்படுகின்றன, ஆளுமை நம்மிடம் இல்லாமல் போனதால்

நாம் நம்மை இழந்து, நன்மைகள் இழந்து, நலம் பல இழந்து தொழில்களை இழந்து தாழ்நிலையில் கிடக்கிறோம் என்பதையும் மறந்து கிடக்கிறோம்.

தமிழர் நாம் ஏமாளிகளாக ஆக்கப் படுகிறோம் ஆள்மாற்றி ஆள் என இருவருமாக தமிழ் நிலத்தின் உணர்வை அடையாளத்தை பறித்து விட்டனர்.

இது போன்ற ஒரு கொடுமை வேறு எந்த இனத்தின் மீதும் சுமத்தப்படுவதில்ல, காரணம், நாம் மட்டுமே தனி மொழியினர் என்ற தனித்தன்மை.

நாம் மட்டுமே, தமிழ்மொழிக்கு எதிராக வைக்கப்படும் இந்தியை எதிர்க்கிறோம்.

நம்மை அடக்க நினைக்கும் வடக்கை எதிர்த்து வடக்கு தெற்கு என பேசுகிறோம். அடிமைபடா உணர்வுடன்.

இதுவெல்லாம் திராவிடத்திற்கு கிடையாது. பொய்யாக ஆரியம் என்பதும் போலியாக தமிழர் என்பதும். தமிழர் பலரை ஏமாற்றவே.

அப்படி இல்லையென்றால் தமிழ் தன் இடத்தை இழந்து நிற்பது அவர்களின் ஆட்சிகள் தொடர்ந்த பின்னால் தானே. நாம் தமிழ்மொழியில் படிக்கும் உரிமைகளை இழந்துவிட்டோம்.

ஆங்கிலம் இல்லாமல் இன்று எதுவும் இல்லை. இந்தி இல்லாமல் வாழ்க்கை இல்லை. இவை இரண்டும் இல்லாமல் எந்த வேலையுமில்லை.

இப்பொழுது தமிழர் என பேசாமலே திராவிடர் ஆட்சி? திராவிடம் என பேசாமல் அரசியல் இல்லை. அதற்கு விதை போட்டவர்களின் சூழ்ச்சி வென்றது. இதனை உணராத தமிழர் உணர்வுகள் இன்னமும் உரம் போடுகிறது அதற்கு.

இதனால் உணர்வு மழுங்கடிக்கப்பட்ட தமிழினம், பிற மொழிக்காரர்களை புகழாமல் தன்மானம் இல்லை என்றாகி கிடக்கிறது. தன் மானம் என்பது புரியாமல் போனது.

நடிப்பே பெரியதானது. பிறரை வாழ்த்திற்கு பேசுவதே வழியானது. தன்னிலையோ மறந்தே போனது.

தமிழர் அல்லாத நடிகர்கள் இல்லாமல் அரசியலும் இல்லை. அவர்களின் பேச்சு இல்லாமல் உணர்வு இல்லை. மக்களுக்கு அகமகிழ்வும் இல்லை. இவை போதாதென்று குடிகார நாடானது இவர்களால்.

இது போதாதென்று ஊடுபயிராக ஊழல். ஊழல்களே திரும்பத் திரும்ப இனமானம் தன்மானம் பேசுகின்றன. அதுவே அரசியலுக்கு ஒரு கூண்டு கட்டி, அது இடம் மாறாமல் இருக்க மதில் சுவர்களாக அவர்களே?

இன்னமும் ஆரியர் பார்ப்பனர் பகை நெருப்பை ஊதியே, தமிழரை சூழ்ச்சியால் பிரித்து வெல்ல நினைக்கும் கயமைத் தனம்.

உருப்படாத பேச்சுகளே தமிழருக்கு வெறியூட்டுகின்றன. மீண்டும் வடக்கு நோக்கி படை எடுப்பு என்கின்றன. இன்னமும் எத்தனை முறைதான் அப்படி வேடமிட்டு கத்தும் திராவிடம்?

சனநாயகம் என்னும் மக்களாட்சி நாளும் தன் அடிமை பயணத்தில் முன்னேறுகிறது. அவரகளின் பின்னால்.

ஏழைகளின் பெருக்கம், வேலை இல்லாதவர்கள்,விலையேற்றம் என இருக்கும் பலவற்றை இலவய ஏமாற்றல்களால் மறைக்கும் திராவிடம்.

இன்னமும் இழந்தவை எத்தனை எத்தனையோ. திராவிடம் இங்கே எழாமல் இருந்திருந்தால் தமிழகம் இயல்பாகவே முன்னேறி இருக்கும்.

இனியாவது தமிழர் நாம், தமிழர் என முழங்க சிந்திப்போம். சிறப்புகளை அன்னைத் தமிழுக்கும் அன்புத் தமிழருக்கும் என்றாக்குவோம்!

பதவிகளை எல்லோருக்கும் பங்கு வைப்போம். வேலை வாய்ப்புகளை அடையாதவரும் அனுபவிக்க வைப்போம். சாதி ஏற்றத்தாழ்வுகளை மறக்கடிப்போம். சாதிக்கும் தமிழரை எல்லாம் தலையில் வைப்போம். சாமானியரும் உயர வழி வகுப்போம்!

பாவலர் மு இராமச்சந்திரன
தலைவர்
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

நாம் தமிழர் கட்சிக்கும் மற்ற தமிழ் அரசியல் கட்சிகளுக்குமிடையில் என்ன பிரச்சனை?

பாமகவுக்கும் நாதகவுக்கும் என்ன பிரச்சனை??? – ஒன்றுமில்லை.

விசிகவுக்கும் நாதகவுக்கும் என்ன பிரச்சனை?? – ஒன்றுமில்லை.

அப்போது எதனால் இந்த இரு கட்சிகளும் நாதகவை எதிர்க்கின்றன…??

வேறென்ன காரணம். நாம் தமிழரின் வளர்ச்சிதான்.

தமிழகத்தின் இருபெரும் இனக்குழுக்களின் தன்னிகரற்ற தலைமைகளாக தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள், இவர்கள். அந்தப் பிம்பம் உடைந்து போகாமலும், இதுபோன்ற இன்னொரு தலைமை உருவாகாமலும் பார்த்து கொண்டவர்கள்.

ஆனால் சீமான் எல்லா இனக்குழுக்களையும் ஒருங்கிணைத்து, ‘நாம் தமிழர்’ என்ற உணர்வில் ஒரு கட்சியை கட்டமைக்கும் போது, இது சாத்தியமில்லை என்றுதான் கடந்துபோனார்கள்.

சீமான் அதனை நிரூபித்து கட்டியபின், கோபம் கொள்ளுதல், குறை சொல்லுதல் தவிர வேறு என்ன செய்ய முடியும். அவர்களால் சீமானை நேரடியாக விமர்சிக்க முடியாது. அப்படி செய்தால், அது அவர்களுக்குத் தான் பாதகமாக முடியும். அதனால் திராவிடர்களோடு அல்லது ஆரியர்களோடு இணைந்து கொண்டு, விமர்சித்து இன்பம் அடைகிறார்கள். மற்றபடி, ‘எல்லா இனக்குழுக்களையும் கொண்டு கட்சி அமைத்து விட்டானே’ என்ற பயமும் கோபமும் அப்படியே உள்ளது.

ஆனால் உண்மையில் சீமான் மீது இவர்கள் கோபம் கொள்ள தேவையில்லை. நியாயப்படி தங்களின் இயலாமையின் மீதுதான் கோபம் கொண்டிருக்க வேண்டும்.

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என தங்களையும் பாமக-விசிக என கட்டமைத்துக் கொண்டு, அரசியல் செய்து விடலாம் என உருவாக்கிய திட்டம் தான் என்று அவர்களுக்கு பாதகமாக நிற்கிறது. கடைசிவரை அவர்களின் வாக்கு வங்கி உயர போவதே கிடையாது. ஏனெனில், அவர்களுக்கே தெரியும், நமக்கு வாக்களிக்கப் போகிறவர்கள் யார் என்று. அப்படித்தான் தங்களின் அரசியலை கட்டமைத்திருக்கிறார்கள்.

சீமானின் கட்டமைப்போ முற்றிலும் வேறுமாதிரியானது. சாதி கடந்து இனமாக நில் எனச் சொல்கிறார். சாதிய கட்டமைப்பினால் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்படைந்த எம் மக்கள், அவர் பின்னால் நிற்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

பாமகவும் விசிகவும் வளர்ந்து முடித்துவிட்டன. அதைத் தாண்டி வளர்வதற்கு, அவர்கள் உருவாக்கிய வட்டத்தை அவர்களே உடைத்தாக வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல.

ஆனால் சீமான் விரிவுபடுத்தி வைத்திருக்கிற எல்லை மிக விசாலமானது. அதனால் வளர்ச்சி சீமானுக்கு சாத்தியப்படுகிறது. சீமான் வளர்கிறார். வளருவார்.