ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேர்தல்கள் வருகின்றன.
புதிது புதிதான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம்,
சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் மனங்களும் மாற்றங்களை விரும்பினாலும் மாற்றங்களை ஏற்படுத்த விளைவதில்லை. அந்தளவிற்கு மக்களின் மனங்களில் பலவிதமான எண்ணங்களை விதைத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே மக்களை முடிவெடுக்க வைக்கின்றனர். கருத்துக்கணிப்புகள், நம்பும்படியான கட்டுக்கதைகள், இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் என்று பல்வேறு காரணிகளால் தவறான வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.
தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் மக்களின் கால்களிலும் விழும் வேட்பாளர்கள் வென்ற பின்னர் தொகுதி பக்கம் வருவதும் இல்லை; பிரச்சனை என்று சென்றால் தீர்வை தருவதில்லை என்பது மட்டுமல்ல மதிப்பதும் இல்லை. காரணம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் கட்சிகளே.
தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழர்களுக்கும்
தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் என்னென்ன கெடுதல் செய்திருக்கின்றனர்
என்பதை பட்டியலிட்டுள்ளோம். நம் சாதி வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக
இவர்களது கெடுதலை மன்னித்து மறந்து வாக்களிப்பது நமக்கு நாமே துரோகம்
இழைப்பதற்கு சமம் என்பதை உணர்வோம்.
அதிமுக:
தற்போதைய ஆளும் கட்சியான இவர்கள் மத்திய அரசின் கைப்பாவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட், உதய் மின் தொகுப்பு திட்டம், போன்றவற்றை தமிழகத்தின் நலன் கருதி ஜெயலலிதா அவர்கள் தடுத்துவைத்திருந்த போது அதை அனுமதித்ததிலிருந்து பல்வேறு துரோகங்களை செய்துள்ளனர்.
ஸ்டெர்லைட் என்ற தனியார் நிறுவனத்திற்காக 14 மக்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். சல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவினர். கூடங்குளம் போராட்டத்தின் போதும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை என்று மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முனைப்புக்காட்டி மக்களை துன்பப்படுத்தியிருக்கின்றனர். மணல் கடத்தல், கோடநாடு கொலைகள், வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் இந்தக்கட்சியில் ஒரு உத்தமர் கூட இல்லை என்றளவில் தான் உள்ளது. பிறமொழியில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்றுவதாகக் கூறி அதில் சமற்கிருதத்திற்கு விலக்கு அளித்தது, தமிழை கட்டாய பயிற்று மொழியாக்காதது, கீழடி போன்ற அகழ்வாய்வுகளை சரிவர வெளிக்கொணராதது இவர்கள் தமிழுக்கு இழைத்த துரோகம்.
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் மட்டுமல்லாது தமிழக அரசின் வேலைகளுக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமல்ல என்று சட்டம் இயற்றிய நல்லவர்கள். உலகெங்கிலுமுள்ளவர்கள் தமிழக அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டத்தை மத்திய அரசின் விருப்பங்களுக்கேற்ப மாற்றியவர்கள். குறிப்பிட்டுச்சொல்லும் படியாக எந்தவொரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்யாவிடிலும் துரோகமாவது செய்யாமலிருந்திருக்கலாம். தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களது வயிற்றில் அடிக்கும் வேலையை கூச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.
திமுக:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது துரோக பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சன் டிவியை வளர்த்தது, டாடா வை மிரட்டியது, பில் கேட்ஸிடம் பேரம் பேசியது என பட்டையை கிளப்பிய மாறன் சகோதரர்கள் பி எஸ் எண் எல்லின் அதிவேக இணைப்புகளை திருட்டுத்தனமாக தமது தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். 2G வழக்கிலிருந்து இவர்கள் வெளியில் வந்தாலும் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், நீரா ராடியா பேரம் பேசியது போன்றவை இவர்களது கயமைத்தனத்தை துகிலுறித்து காட்டத்தான் செய்கிறது. தமது பெருமையை பறைசாற்ற செம்மொழி மாநாடு நடத்தியது, தொலைக்காட்சிகளை இலவசமாக வழங்கி தமது சன் டீவி சேனல்களை வளர்த்தது. இவர்களது ஆட்சிகாலத்தில் அமைந்த அத்தனை நிறுவனங்களிலும் கையூட்டாக (லஞ்சம்) பங்குகளைப் பெற்றது.
தமிழகத்தில் உள்ள பெருவாரியான சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியிருக்கின்றனர். தமது கட்சியிலிருந்தவரையே மிரட்டி தினகரன் நாளிதழ், கரன் நெட்வோர்க், போன்றவற்றை பிடுங்கியவர்கள். தமிழ் சேனல்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு பிற மொழி சேனல்களுக்கு அந்தந்த மொழிகளிலேயே பெயர் வைத்திருப்பது தமிழின் மீதான காழ்ப்புணர்ச்சியோ. கிரிக்கெட்டில் கூட தமது மொழி சார்ந்த மாநிலத்தின் அணியையே வாங்கியிருக்கின்றனர். தங்களுக்கிடையேயான அதிகார போட்டியில் தினகரன் அலுவலகத்தை எரித்தது. ஏர்செல் நிறுவனத்தை நிப்பந்தப்படுத்தி விற்றது, ஸ்டெர்லிங் கட்டிடத்தைக் கேட்டு மிரட்டியது. அனைத்து சிமெண்ட் ஆலைகளிலுமுள்ள பங்குகளின் மூலம் விலையேற்றி பயனடைவது. கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.
காங்கிரஸ்:
பிரதானமாக ஈழத்தில் நல்ல நிலைக்கு முன்னேறிக்கொண்டிருந்த தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேரை கொன்றிருக்கின்றனர்.
ஸ்டெர்லைட்டின் பங்குதாரர் ப சிதம்பரம். வரிக்கு வரி கொண்டுவந்த புண்ணியவான். நீட் தேர்வில் தமிழக நலனுக்கு எதிராக வழக்காடியவர் இவரது மனைவி. பங்குச்சந்தையில் சில கோல்மால்களைச்செய்தவர் இவரது மகன்.
காவேரிப்பிரச்சனையை பெரும் பிரச்சனையாக்கி அரசியல் பொருளாக்கியது. பலமுறை கர்நாடகத்தையும் கேரளத்தையும் ஆண்டபோதும் கூட நம் தண்ணீர் பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை. காங்கிரஸ் வென்றால் மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து தமிழக மீனவர்களை கொல்வது. குற்றமே சரிவர நிறுபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுவிக்காலிருந்திருக்கின்றனர்.
தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு இயக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தை கொச்சியிலிருந்து இயக்கியவர்கள். தமிழர்களுக்கிடையில் வியாபாரத்தொடர்பு ஏற்படாமலிருக்க வழிவகை செய்தவர்கள்.
பாஜக:
காங்கிரஸ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைத்த கொடுமைகளை கொஞ்சம்
கடுமையாக்கினர். ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுங்கக்கட்டணத்தை 3 மாதங்களுக்கு
ஒரு முறை என்றளவில் ஏற்றி வந்திருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை
தினமும் ேற்றிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் உடனடியாக
ரு. 100 ஆகிவிடும். மேக் இன் இந்தியா என்று விளம்பரம் செய்வர் ரஃபேல் விமானத்தை
பிரான்சிலிருந்து தயாரித்து இறக்குமதி செய்வர். பணமதிப்பிழப்பு என்ற பெயரில்
கள்ள நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து பொருளாதாரத்தை சீரழித்துவிட்டனர்.
திருப்பூரை ஒன்றுமில்லாமலாக்கி உத்தர பிரதேசத்தில் ஜவுளி பூங்காவை
தொடங்கியிருக்கின்றனர். வரலாறு காணாத வரி விதிப்பை ஜிஎஸ்டி மூலம் கொண்டு
வந்திருக்கின்றனர். 28% வரி விதிப்பு. அனைத்து அத்தியாவசிய பொருட்களும்
விலையேறியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் வங்கி வாசலில் காத்துக்கிடக்க வைத்து
காவு வாங்கினர். எல்லாவற்றிர்க்கும் உதாரணமாக காட்டும் இராணுவ வீரர்களை பலி
கொடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர். தமிழகத்தின்
வளங்களோடு வேலைகளையும் வட இந்தியர்களுக்கு கொடுப்பது இவர்களே.
தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மிக முக்கிய காரணமே இவர்கள்
தான். பொது மக்கள் போராட்டங்களை கெடுப்பது, கள்ளக்காதல்
உயிரிழப்புகளுக்காகவும் பிரியாணி திருடுவதற்காகவும் போராட்டங்கள் நடத்துவதே
இவர்களது வாடிக்கை. நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும்
பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
பாமக:
நான் தான் யோக்கியம் என்பது போல பேசி அனைத்து அயோக்கியத்தனங்களையும்
செய்துகொண்டிருக்கின்றனர். சேலம் சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு
தொடர்வதற்கு 2 கோடி ரூபாய்களை விவசாயிகளிடம் வசூலித்திருக்கின்றனர்.
தற்போது அதிமுக வுடன் கூட்டணியில் போட்டியிட பல கோடிகள் பெறப்பட்டதாக
தகவல். மத்திய மந்திரியாக இருந்தபோது கையூட்டு பெற்றுக்கொண்டு சில மருத்துவ
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அன்புமணி. தமிழ், தமிழர் என்று வாய்கிழிய
பேசும் மருத்துவர் தேர்தல் வந்துவிட்டால் பணத்திற்கு அடிமை.
தேமுதிக:
தமிழக வரலாற்றிலேயே வெளிப்படையாக இரண்டு கூட்டணிகளிடமும் பேரம் பேசி
பெரும் தொகையை சம்பாதித்திருக்கின்றனர். கிடைத்த 4 தொகுதிகளில் ஒன்றில் கூட
தமிழர்களை நிறுத்த மனமில்லாதவர்கள் தமிழகத்திற்காக எந்த நன்மையை செய்வார்.
ஊடகங்களிடம் பேசும் திமிர் பேச்சு. தமது தாய்மொழி நாளிதழ்களை தவறாமல்
இவர்கள் படிப்பதுபோல நாமும் நம் தாய்மொழி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தி
நம் மொழியுணர்வை காட்ட வேண்டிய தருணம்.
பொதுவுடைமை (கம்யுணிஸ்ட்):
உலகெங்கும் இனம் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்து இயங்கும் பொதுவுடைமை
கொள்கை கொண்ட கட்சிகளில் தமிழகத்தில் மட்டுமே மாற்றினத்து முதலாளிகளின்
நலனுக்காக இயங்குகிறது. போட்டியிடும் இரு தொகுதிகளிலும்
தமிழரல்லாதவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து இங்கு
கொட்டப்படும் குப்பைகளைக் கூட கண்டுகொள்ள மாட்டர். அமெரிக்கா அணுவுலை
வைத்தால் எதிர்ப்பர். ரஷ்யா வைத்தால் வரவேற்பர். இவர்களால் தமிழர்களால்
நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் நிறுவனங்களே பெருவாரியாக மூடப்பட்டுள்ளது.
கூட்டுறவு ஆலைகளையும் சிதைத்த நல்ல உள்ளங்கள் இவர்கள். மொத்தத்தில்
இவர்களும் தமிழகத்தின் சாபக்கேடுகளே.
விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்:
இந்த கட்சிகளில் எதுவுமே தம் மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான காரியங்கள்
எதுவுமே செய்வதில்லை. தேர்தல் நேரங்களில் இங்கொன்று அங்கொன்று என பேரம்
பேசி போட்டியிடும். இவர்களனைவரும் உப்புக்குச் சப்பு தான்.
அ ம மு க:
சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பக்கட்சி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அபகரித்துக்கொண்டுள்ளனர்.
ஜெயா டி வி யும் இவர்களது. ஆர் கே நகர் தேர்தலில் 20 ருபாய் டோக்கன் கொடுத்து
மக்களை ஏமாற்றி வெற்றி கண்டவர். திருடர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பர்.
அதில் கூட ஏமாற்றி இருக்கிறார். எப்படி நம்புவது? கட்டு கட்டாக பணம் பட்டுவாடா
செய்கிறார். பல இடங்களில் மாற்றிக்கொண்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு
வந்த பெண்ணை கற்பழித்த மூவர் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடும்
வேட்பாளர்கள். இவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் ரோட்டில் ஒரு பெண் நடமாட
முடியுமா?
எல்லா கட்சியையும் குறை கூறினால் எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது.
கடைசியாக நாம் தமிழர் கட்சி மீது மேலே குறிப்பிட்ட யோக்கிய கட்சிகளும்
அவைகளின் அனுதாபிகளான நடுநிலைவாதிகள் போர்வையில் செயல்படுபவர்கள்
வைக்கும் குற்றச்சாட்டையும் பார்ப்போம். இன்று வரை இவர்கள் அரசியலில்
வெல்லாததால் மற்ற கட்சிகள் மீதுள்ள விமர்சனம் போல எதுவும் சொல்ல இயலாததால்
கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டைப்பார்க்கலாம். அதற்கு முன்பதாக கமலின்
கட்சியையும் பார்த்துவிடலாம்.
ம நீ ம:
விஸ்வரூபம் படம் திரைக்கு வராவிட்டால் நான் நாட்டை விட்டு ஓடவேண்டியது தான்
என்று செய்தியாளர்கள் முன் அழுது பேட்டிகொடுத்தவர். அதன் பின்னர் எவ்வளவு
சம்பாதித்தார் என்றே தெரியவில்லை. இன்று திமுக அதிமுக கட்சிகளை விட
அதிகளவில் விளம்பரம் செய்கிறார். தேர்தல் தொடங்கும் வரை கட்சியில்
உறுப்பினர்களே இல்லை. போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு 20000 ருபாய் திருப்பி
செலுத்தாத வாய்ப்பு நிதி என்று தன் கட்சியினரிடமே சுரண்ட தொடங்கினார்.
இது குறித்த செய்தி நாளிதழ்களிலும் வந்திருக்கிறது.
நடுநிலையாளர்களும் மற்ற கட்சியினரும் கமலின் கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டு
இவை.
நாம் தமிழர் கட்சி:
ஈழத்து விதவையை மணந்து கொள்வேன் என்றார் ஆனால் முன்னாள் சபாநாயகர்
பெண்ணை மணந்துள்ளார். இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார்.
கிறித்தவர்களுக்கு எதிராக பேசியுள்ளார். முகமதியர்களுக்கு எதிராக பேசியுள்ளார்.
இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம் பெறுகிறார். பிரபாகரனை ஆதரிக்கிறார்.
இலங்கை மாணவர்களை அடிப்பேன் என்று கூறினார். இன வெறியை தூண்டுகிறார்.
சீமான் மலையாளி. இவர் கிருத்துவர். சாதிக்கட்சி நடத்துகிறார்.
இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள
குரோதத்தால் பரப்பப்படுபவையே. ஆதாரமற்றவை.
மதங்களுக்கு எதிராக சீமான் பேசியதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் திராவிட
கழகமும் திராவிட முன்னேற்ற கழகமுமே.
இவர்கள் மீதிருந்த நம்பிக்கை அற்றுப்போனபின் தொடங்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.
இந்த கட்சி முன் வைக்கும் கொள்கைகள் நம் தமிழகத்தை தற்சார்பு பொருளாதார
நிலைக்கு கொண்டு செல்லும். பெண்களுக்கான பாதுகாப்பு, வளம் பாதுகாப்பு, மீட்பு
என பல்வேறு காரணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தல் பரப்புரையின் போது
ஒரு வழக்கு கூட நாம் தமிழர் கட்சி மீது பதிவு செய்யப்படவில்லை. ஒழுக்கமாக
செயல்படும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் இந்த தேர்தல்
நிச்சயமாக நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
நம் பாட்டனார் காலத்திலிருந்த பசுமையான தமிழகத்தை மீண்டும் காணவேண்டும்
என்ற எண்ணமும் ஆசையும் கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே
வாக்களிக்க முடியும். மரம் நடுதல், கையூட்டு ஒழித்தல் என்று பல்வேறு சமூக நலத்தை
பேணும் காரியங்கள் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு மீட்பையும்
குறித்த அக்கறை கொண்ட ஒரே கட்சி இது தான்.