அமெரிக்காவைப் போல் தமிழ்நாடும் எழுச்சி பெறும்

அமெரிக்கா – கொலம்பஸ் சிலைகள்.
(உடைத்து எறியபட்டன.)

தமிழ்நாடு – திராவிடர் சிலைகள்.
(உடைத்து எறியப்படும்.)

—மஞ்சு மஞ்சுநாதன்

“அடைவதற்கோர் இலட்சியம் இல்லாத வாக்காளர் கூட்டமாகத் தமிழர்களை
திமுக-வும், அதிமுக-வும் மாற்றிவிட்டன!”

  • பெ.மணியரசனார்

தமிழ்த்தேசியத்தையும் அந்த புதைகுழிக்குள் இழுக்க சிலர் முயல்கின்றனர். அவர்கள் இவர்களைவிட ஆபத்தானவர்கள்.

—த தமிழினியன்

திருட்டு விசாவில் அமெரிக்க பயணம்

திருட்டு விசாவில் 2019 வருடம் அமெரிக்காவிற்கு சென்று, சிக்காகோ விமான நிலைய போலீஸ் அதிகாரிகளின் சோதனையின் போது திருட்டு விசா என்று கண்டுபிடிக்கப்பட்டு பின்பு கைது செய்யப்பட்டு உடனே திருப்பி இந்தியாவிற்கு விரட்டி விடப்பட்டார் YG மகேந்திரனின் மகள் மதுவந்தி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த திருட்டு அமெரிக்க விசா தயாரித்த பின்னணியில் யார் யார் உள்ளார்கள் என்று ஏன் இது வரையில் எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை? ஏன் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த பைத்தியத்தை பாதுகாப்பது யார்?

https://bit.ly/2BZFOen

“I cannot breathe!” – இன்று அமெரிக்காவெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் போர்க் குரல் இது

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரத்தின் ஒரு மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த ஓர் இளைஞர், கள்ளநோட்டு கொடுத்ததாக கடைக்காரர் போலீசில் புகார் செய்கிறார். உடனே அங்கு சோதனையிட வந்த காவல்துறையினர், கடைக்கு வெளியே காரில் அமர்ந்திருந்த கருப்பு நிற இளைஞரை சந்தேகத்தின் பேரில் கைது செய்கின்றனர். அவர் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (வயது 46).

காரில் இருந்த அவரை கீழே இறங்கும்படி கூறி, பின்னாலிருந்து அவரது கைகளைக் கட்டி, பொதுவெளியில் இழுத்துச் சென்ற காவலர்கள், அவரை காரின் டயர் அருகில் சாய்த்துப் படுக்க வைத்தனர். வந்திருந்த நான்கு காவலர்களில் ஒருவர் தனது முழங்காலை அவரது கழுத்துப் பகுதியில் வைத்து அழுத்திப் பிடித்துள்ளார். அப்போது, “தன்னால் மூச்சுவிட முடியவில்லை; எனக்கு தண்ணீர் கொடுங்கள்; என்னை கொன்றுவிடாதீர்கள்” என்றெல்லாம் ஃப்ளாய்ட் பலமுறை கெஞ்சியும் அந்தக் காவலர் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

மீதமுள்ள மூன்று காவலர்களும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது அருகிலேயே நின்றுள்ளனர். சுற்றி நின்று கூச்சல் போட்ட பொதுமக்களில் யாருடைய குரலையும் அந்த போலீகாரர் பொருட்படுத்தவுமில்லை. எவ்வளவோ போராடிப் பார்த்தும் அசையக்கூட முடியாமல், இறுதியில் ஜார்ஜ் பேச்சுமூச்சின்றி சலனமற்றுக் கிடந்தார்.

ஆம்புலன்ஸ் வரும்வரை அவருடைய கழுத்தை அழுத்தியிருந்த காவலர் தனது காலை எடுக்கவேவில்லை. மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

உயிருக்குப் போராடிய ஜார்ஜ், இறக்கும்போது உச்சரித்த கடைசி வார்த்தைதான் “I cannot breathe! – என்னால் மூச்சு விடமுடியவில்லை”.

ஒரு வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி பொது இடத்தில் எல்லோருக்கும் முன்னால் ஜார்ஜின் கழுத்தின் மீது தனது முழங்கால்களை அழுத்தி ஐந்து நிமிடம் அவரை துடிதுடிக்க கொலை செய்த காட்சியை “டேர்னெல்லா ஃப்ரேசியர்” என்ற 17 வயதுப் இளம்பெண் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். சற்றுநேரத்தில் சம்பவம் வைரலானது. இக்காட்சியைப் பார்த்த பலரும் ஜார்ஜைப் போலவே மூச்சுத் திணறினர். நம்மாலும் அந்தக் கொடூரத்தை முழுவதுமாக பார்க்கமுடியவில்லை.

வெள்ளையரின் இனவெறிக்கெதிராக அமெரிக்காவெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அணியணியாக வீதிக்கு வந்து போராடினர். வன்முறை வெடித்தது. தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆறு நாட்களாக அமெரிக்காவே பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்துவருகிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். அமைதியும், அடக்கமும் நிறைந்தவர். யாரிடமும் வம்புதும்புக்குப் போகாதவர். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராதவர். அவருக்கு எதிரிகள் கூட இல்லை என்கின்றனர் அவருடைய நெருங்கிய கூட்டாளிகள்.

கறுப்பின மக்கள் மீது அமெரிக்க வெள்ளையினத்தவர் காட்டும் நிறவெறித் தீண்டாமைக்கு மற்றுமொரு உதாரணமாக காவலர்களால் குரல்வளை நசுக்கப்பட்டு ஜார்ஜ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கூறலாம். கருப்பினத்தவர் இரண்டாம்தர குடிமக்களாக கருதப்படும் அமெரிக்காவில், அவர்களுக்கெதிராக அடிக்கடி நடைபெறும் இத்தகைய கொலைகள் ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை என்பதே எதார்த்தம்.

“கறுப்பினத்தவர் மீது அமெரிக்க வெள்ளையர் காட்டும் நிறவெறியின் உச்சம் இது. இத்தகைய கொடூரச் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று பிரபலங்கள் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

“ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்த சம்பவம் மிகவும் வேதனையைத் தருகிறது. அந்த வீடியோவைப் பார்த்ததும் மனமுடைந்து நானும் அழுதுவிட்டேன். அவருடைய கழுத்தின் மீது வைக்கப்பட்டிருந்த முழங்கால், உதவிக்கான அழுகையைப் புறக்கணித்துவிட்டு கறுப்பின மக்களைக் எப்போதும் கீழேநிலையில்தான் வைத்திருக்கவேண்டும் என்பதற்கான குறியீடாக உள்ளது. உண்மையிலேயே இது மிகவும் சோகமான விஷயம்” என்கிறார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா.

“அமெரிக்காவில் கருப்பினத்தவராகப் பிறப்பதால் ஒருவர் கொல்லப்படுவதற்கான தகுதி பெறுகிறார் என்பது பொருளல்ல” என்று மினியாப்பொலிஸ் மேயர் jacob frey கருத்து தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு 1004 பேர் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகம் பேர் கறுப்பினத்தவர்” என்கிறது, Washington Post நடத்திய ஒரு கருத்துகணிப்பு.

2015 இல் Guardian பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பு, “அமெரிக்க காவல்துறையினரால் கருப்பினத்தவர் கொல்லப்படுவது வெள்ளையர்களை விடவும் 9 சதவீதம் அதிகம்” என்கிறது.

ஜார்ஜின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடுபவர்கள், “கருப்பர்களையும் சக மனிதனாக மதிக்கும் ஒருநாள் அமெரிக்காவில் மலர வேண்டும்” என்கின்றனர்.

Please! Please! I cannot breathe!
My Stomach hurts!
My Neck hurts!
Everything hurts!
They’re going to kill me!

உயிருக்குப் போராடும் ஒரு அப்பாவி மனிதனின் கடைசி மூச்சுடன் வெளியேறிய சொற்கள் இவை!
மரணத்தை நேருக்குநேர் சந்தித்த ஒரு எளிய மனிதனின் கடைசிக் கோரிக்கை இது! கருப்பராகப் பிறந்துவிட்ட குற்றத்திற்காக
அநியாயமாக கொலை செய்யப்பட்ட ஒரு அப்பாவி மனிதனின் இறுதிக் கூச்சல் இது.

57 வருடங்களுக்கு முன் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர்கிங் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் இடம்பெற்ற “I have a dream” என்ற வாசகத்தைப்போல்

அமெரிக்க வெள்ளையரின் நிறவெறிக்கு எதிராகவும், கருப்பின மக்களின் விடுதலைக்காகவும் போராடும் ஒவ்வொருவர் இதயத்திலிருந்தும் I cannot breathe! என்ற குரல் இனி ஒலித்துக்கொண்டே இருக்கும்.

உலகத்திற்கு வெள்ளையர்கள் கற்றுக் கொடுக்கும் பாடம்!

ஒரே ஒரு மனிதன். அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ அல்லது தியாகியோ முக்கியமான நபரோ அல்ல.

ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான்.

தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன் “i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே. ஐயோ! அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகிறது. அந்த இறுதி மூச்சு காணொளி பார்க்கும் எவரையும் கொதித்தெழ செய்யும்.

அந்த கொதித்தெழுதலைதான் இன்று அமெரிக்கா பிரிட்டன் உட்பட வெள்ளையர்களும் கறுப்பினத்தவர்களும் கலந்து வசிக்கும் நாடுகளில் பற்றி எரியும் போராட்டங்கள் மூலம் பார்க்கிறோம்.

இந்த போராட்டங்கள் எல்லாம் வரலாற்றின் பக்கங்களில் நிரப்பக்கூடிய முக்கியமான போராட்டங்களாக பார்க்கிறேன்.

இந்த போராட்டங்கள் உலக சமூகத்திற்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கிறது.

அதன் பெயர் ‘அறம்’.

இந்த பூமி பந்து முழுமைக்கும் பரவியிருக்கும் மனித இனம் கற்றுக்கொள்ள வேண்டியது அந்த அறம்தான்.

காவலர் சீருடை அணிந்த ஒரு வெள்ளைக்காரனின் நிறவெறிக்கு கொல்லப்பட்டவர் ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவர்.

ஆனால் அந்த கொலையை கண்டித்து உலகத்தையே வீட்டுக்குள் முடக்கிப்போட்ட இந்த கொடூரமான கொரோனா காலத்திலும் மக்கள் வீதிக்கு வந்தார்கள்.

அப்படி வீதிக்கு வந்தவர்கள் எல்லாம் கறுப்பினத்தவர்கள் அல்ல.. என்பதும் வெள்ளை நிறவெறிக்கு எதிராக கிளர்ந்த இந்த போராட்டங்களில் முன் வரிசையில் நிற்பவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்பதுதான் பற்றி எரியும் இந்த போராட்டத்திற்கு நடுவில் நம்மை நெகிழச் செய்கிறது.

ஆம் கொன்றவன் என் இனத்தானாக இருந்தாலும் அவன் செய்தது மாபெரும் பிழை என்று அறத்தின்பால் நிற்க வீதிக்கு வந்தார்கள் வெள்ளையர்கள்..

இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இதை அப்படியே இந்திய மனநிலைக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அசிங்கமாக இருக்கிறது.

நடந்து போய்விடக்கூடிய தூரமான ஈழத்தில் இந்தியாவின் துணையுடன் மாபெரும் இனப்படுகொலை நடக்கிறது.. இந்தியர்கள் அனைவரும் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிங்களர்கள் ஈழத்தமிழர்களை கண்ணைக் கட்டி பின் மண்டையில் சுட்டுக் கொன்றதுபோலவே ஆந்திராவில் மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி 20 தமிழர்களை தெலுங்கர்கள் சுட்டுக்கொன்றார்கள்..

ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கர்களை விடுங்கள்.. இங்கு தமிழில் பேசி தமிழில் எழுதி தமிழால் வாழ்ந்து கொண்டு. வெளியே தமிழராகவும் உள்ளே தெலுங்கராகவும் இருப்பவர்களே அந்த படுகொலைகளை நியாயப்படுத்தி தமிழில் தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். மடை மாற்றினார்கள்

சுத்தமான காற்று வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்று போராடிய தூத்துக்குடி மக்களை குருவியை சுடுவதுபோல் சுட்டுக்கொன்றார்கள் காவலர்கள். வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை என்று மாநில முதல்வர் வெட்கமே இல்லாமல் சட்டசபையில் சொன்னார்.

தமிழர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறி இந்து மதவெறியர்களால் இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படுகிறார்கள்.

இந்துக்கள் எனும் பொது சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கடவுள் இல்லை என்று எழுதிய காரணத்திற்காக இஸ்லாமிய இளைஞன் பரூக்கை அவன் மதத்தவர்களே வெட்டிக் கொன்றபோதும்.

இஸ்லாமியர் ஒருவரின் நெற்றியில் திருநீற்றை பூசிவிட்டு அவர் தொப்பியை எடுத்து தன் தலையில் மாட்டியதால் ராமலிங்கம் வெட்டிக் கொல்லப்பட்டபோது இஸ்லாமிய சமூகம் முட்டுக்கொடுத்தும் கடந்தும்தான் போனார்கள்.

ஒடுக்கப்பட்ட சாதிக்காரனையும் அவனை காதலித்த மகளையும் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யும்போதும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் மலம் கரைத்து ஊற்றப்படும்போதும், சேரிகள் கொளுத்தப்படும்போதும் ஊர் சமூகம் குற்ற உணர்ச்சி இல்லாமல் வேடிக்கைப் பார்த்தபடியே இருக்கிறது.

இந்த வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு பச்சை தமிழன் பச்சை திராவிடன் பச்சை இந்தியன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை. எல்லா பொது புத்தியும் ஒன்றுதான்.

அசுரன் படத்தில்,

“செருப்பு போட்டதுக்காக அவன் என்ன அடிச்சது கூட வலிக்கல மாமா, ஆனா சுத்தி நின்னு வேடிக்கைப் பார்த்த ஒருத்தர் கூட ஏன் அந்த பிள்ளையை அடிக்கேனு கேட்கல மாமானு” என்று தனுஷ் கட்டிக்கப்போகும் பெண் சொல்வதுபோல் ஒரு அற்புதமான காட்சி வரும்.

அதுதான் உண்மை.

எல்லா அநீதிக்கும் துணையாக நிற்பது இந்த வேடிக்கைப் பார்க்கும் புத்திதான். ஆனால் மனிதம் என்பது வேடிக்கைப் பார்ப்பது அல்ல. அநீதி நடக்கும்போது அறத்தின் பால் நிற்க வேண்டும் என்பதுதான் வெள்ளை நிறவெறியால் மூச்சு நரம்பு நெறித்து கொல்லப்பட்ட கறுப்பினத்து ஜார்ஜ் ஃப்ளாய்டுக்காக வீதிக்கு வந்து போராடும் வெள்ளையர்கள் இந்த உலகத்திற்கு கற்றுக் கொடுக்கும் பாடம்.

ஆம்! அறம் என்பது யாதெனில் என்பதை கொஞ்சம் வெட்கத்தை விட்டு வெள்ளையர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்!

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா
1-6-2020

இதுதான் உலக அரசியலா?

உலகின் இயற்கை வளங்களையும் உலக மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தையும் கொள்ளையடிப்பது,பங்கு பிரிப்பது- ஆகியவற்றில் நடக்கும் சண்டைகள், சச்சரவுகள்,பேரங்களே உலக அரசியல்.

உலக அரசியலே ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் தீர்மானிக்கிறது. மக்கள் ஒவ்வொருவரும் உலக அரசியலை கற்றுக் கொள்ள வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது மிக அத்தியாவசியமாகி விட்டது.

ஏனென்றால் நாளை நாம் உயிருடன் இருப்போமா? இல்லையா என்பதை தீர்மானிக்கும் கட்டத்துக்கு உலக அரசியல் வந்துவிட்டது..

– நந்தினி ஆனந்தன்.

சர்வதேசத்தால் அழிக்கப்பட்ட புலிகளின் ஆயுத வழங்கல் – ஈழத்து துரோணர்

இந்த பூமிப்பந்தின் அசைக்க முடியாத சக்தியாக,ஒரு அரசுக்கு நிகரான கட்டுமானங்களுடன், பலம் மிக்க அமைப்பாய் தமிழர் சேனை 40வருடங்களுக்கு மேலாக மாவீரர், போராளிகளது வியர்வையாலும், இரத்ததாலும், தியாகங்களாலும் கட்டி வளர்ந்த அமைப்பு, மூன்று ஆண்டுகளில் எப்படி அழிந்து போனது??

இதற்கு பின்னால், கண்ணுக்கு தெரியாத பெரும் சதி வலைகள் பல பின்னப் பட்டிருந்தது. முக்கியமாக இருபதற்கு மேற்பட்ட நாடுகளின் கரம், சிங்கள அரசுக்காக நீண்டிருந்தது.
இந்தச்சதி பற்றிய தெளிந்த, நேரிய பாதை எம் இளைய சந்ததிக்கு தோன்ற வேண்டும் என்பதால், எமது அழிவுக்கான காரணங்களை, எனது அனுபவத்தின் ஊடாக உங்களோடு பகிர விளைகின்றேன்.!

நாம் விட்ட தவறை சரியாக இனம் காணாதோ அல்லது கருத்தில் எடுக்காதோ போனால், மீண்டும் இது போன்ற தோல்வியை எம் அடுத்த சந்ததியும் சந்திக்க வேண்டி வரும் என்பதே உண்மை.!

இதன் ஆரம்பம் 2003இல், பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே மறுபக்கத்தில், இதே ஆண்டில் முதலாவது புலிகளின் ஆயுதக்கப்பல் எதிரியால் தாக்கி அழிக்கப் பட்டது. அதன் பின்பும் 2 கப்பல்கள் தாக்கி அழிக்க பட்டது. இதில் சிங்கள அரசின் சாதனை போல பரப்புரை செய்யப்பட்டபோதும் உண்மை அதுவல்ல.!

2002இன் பின் கனேடிய நிறுவனம் ஒன்றின் ஊடாக, புலிகளின் பாவனைக்கென்று சில சற்றலைட் அலைபேசிகள் இரகசியமாக வாங்கப்பட்டது. வாங்கிய சற்றலைட் அலைபேசிகளையே புலிகள் தமது கடல்சார் நடவடிக்கைக்கும், அதனோடு சம்பத்தப் பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தினர்.

இந்தத் தொடர்பாடல் வசதி இலவுவாக இருந்தமையாலும், இதை எதிரி “ட்ரக் பண்ண, எதிரிக்கு அடி இலக்கம்” தெரியாது என்னும் துணிவில், அந்தநேரம் பரவலான பாவனையில் இருந்தது.

இதை எப்படியோ கனேடிய உளவுத்துறை மோப்பம் பிடித்து விட்டிருந்தது.(பெரும்பாலும் CIA கண்ணை காட்டி இருக்கலாம் என்பது எனது நம்பிக்கை) அலைபேசிகளை விற்ற நிறுவனத்திடமிருந்து அந்த இலக்கங்களை பெற்று, எதிரியின் உளவுத்துறையான SIS க்கு (இதன் பழைய பெயர் NIV ) 2003இல் கொடுத்து விட்டது.!

இதைத் தொடர்ந்து எதிரி எங்களை ஒசைபடாது “மொனிடர்”பண்ணிக் கொண்டிருந்தான். அதன் ஒரு அங்கமாகத் தான் “கனடாவின் துரோகத்தால்” 2003இல் முதல் கப்பலும், அதைத் தொடர்ந்து இரண்டு கப்பலும் அழிக்க பட்டது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் லண்டன் நிறுவனம் ஒன்றின் ஊடாகவும் தொலைபேசிகள் வாங்கப்பட்டது.

அவையும் MI5 மோப்பம் பிடித்து அதையும் எதிரிக்கு கொடுத்திருந்தது. தொலைபேசி கொள்முதல்கள் நடக்கும் போது பொதுவாக எந்த உளவுத்துறைகளும் தடுப்பதில்லை. காரணம், பின்னர் தேவைப்படுமிடத்து அடி இலக்கம் பெற்று மொனிட்டர் பன்னுவதற்கு இலகுவாக இருக்கும் என்பதே.!

இப்படி இருக்கும் போது 2006இல் நோர்வேயில் வைத்து பேச்சு வரத்தை முறிவுண்டபின், நோர்வேயால் புலிகள் எச்சரிக்க பட்டு எமது பேச்சு வார்த்தை குழு நாடு திரும்பியது. நோவேயின் எச்சரிக்கை அமெரிக்காவின் எச்சரிக்கையே. நோர்வேயின் பின்னால் இருந்தது அமெரிக்கா என்பது ஊர் அறிந்த ரகசியம்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலின் பின் விடுதலை அமைப்புகள் குறிப்பாக தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளும் அமைப்புக்களை அமெரிக்கா தடை செய்தது. அதில் புலிகளையும் இணைத்துக்கொண்டது தான் வேடிக்கை.!

அதனால் எம்மைக் கண்காணிக்கவென புதிய இலாகா ஒன்று CIA வாள் உருவாக்க பட்டு, 24 மணி நேரமும் நாம் கண்காணிக்க பட்டு, எமது பலம், பலவீனம் ஆராயப்பட்டு கொண்டிருந்தது. அப்போது எம்மை அழிக்குமளவுக்கு CIA இன் கழுகு பார்வை எங்கள் மேல் விழுந்திருந்தது எமக்குத்தெரியாது .

இது இப்படியே இருக்கும் போது 2006இல் சண்டை ஆரம்பமானவுடன் சர்வதேசம் எமது பிரச்சனையிலிருந்து ஒதுங்குவதாக வெளியில் கூறியது. ஆனால்,அப்படிச் செய்யாது, சண்டை ஆரம்பமானவுடன் நாம் வெற்றியை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தோம்.

சமகாலத்தில் ஆயுதங்களுடன் சர்வதேசக்கடலில் தரித்து நின்ற எமது நான்கு “கார்கோ” கப்பல்களை இந்து சமுத்திரத்தில், இகுவேட்டர் கோட்டோடு வைத்து, சர்வதேச விதிமுறைகளை மீறித் தாக்கி அழித்தான் எதிரி.! அத்தோடு எமக்கான ஆயுத வளங்கள் இல்லாது போனது.!

இந்தத் தாக்குதல் அந்த நேரத்தில் பெரும் அதிர்வலைகளை புலிகளுக்கு ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. இது எதிரிக்கு சாத்தியமில்லாத ஒரு தாக்குதல் என்பதால், இந்தத் தாக்குதல் பற்றியும், சிங்கள அரசின் “வெளி தொடர்புகள்” பற்றியும் தகவல் திரட்டும் படி அண்ணையாள் பணிக்கபட்டு, தமிழர் உளவமைப்புகள் களத்தில் இறக்கிவிடப்பட்டது. சரியான உளவுத்தகவல்கள் எமக்கு கிடைக்கும் போது, எல்லாம் எம் கையை விட்டு போயிருந்தது.

புலிகளின் முன்னைய செயல்பாடுகள் அனைத்தும், இறுதி யுத்தத்தின் பின், அந்தத் துறைகளுடன் சம்பந்தப்பட்ட போராளிகளின் கைதின் மூலம், எதிரிக்கும் இந்தச் செயல்பாடுகள் பற்றிய தகவல்கள் தெரிந்த பின், எதுவும் ரகசியம் என்று இங்கு இல்லை.! அத்தோடு இதே முறையில், அல்லது இதே பாதையில் “மீண்டும் முயற்சிக்க” முடியாது.! அப்படி யாராவது முயற்சிப்பதனால் வேறு பாதை தான் தேடவேண்டும்.!

சரி இனி வரலாற்றுக்கு திரும்புவோம்.!

இத்தோடு புலிகளின் ஆயுத வளங்கள் வலையமைப்பும் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது.!

எதிரிக்கு இது எப்படி சாத்தியமாச்சு? என்ற ஒரு குழப்பம் எமக்கு இருந்தது, உங்களுக்கும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.?

இதை தெரிந்து கொள்ள புலிகளின் ஆயுத “நெட்வொர்க்” எப்படி இயங்கியதென்று நீங்கள் அறிய வேண்டும்.!

அந்த நேரத்தில் ஆயுத வழங்களுக்காக புலிகளால், இந்தோனேசிய, தாய்லாந்து போன்ற நாடுகளே தளமாகப் பயன் படுத்தப் பட்டது. இதில் இந்தோனேசியாவில் தான் ஆயுதம் தவிர்ந்த ஏனைய பொருட்கள் களஞ்சிய படுத்த பட்டது. மற்றும் கப்பல் மாலுமிகள் தங்குவதும் அங்கு தான். ஆயுதங்கள் அங்கு வைத்து ஏற்றபடுவதில்லை. அதனால் இந்தோனேசிய அரசாங்கமும் இதை கண்டுகொள்வதில்லை.

அதனால் மருந்து பொருட்கள், இயந்திர உதிரிப்பாகங்கள் போன்ற பொருட்கள் அங்கேயும், தொலைத் தொடர்புக் கருவிகள் மலேசியாவிலும், கடற்புலிகலுக்கான வெளியிணைப்பு இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள், கதுவிகள் (radar) போன்றவை ஜப்பானிலும் வாங்கி இங்கு கொண்டுவந்து களஞ்சியப் படுத்தப் படும்.

இந்தப் பொருட்களை “கார்க்கோ” கப்பலில் ஏற்றிய பின் கப்பலை வெளியில் கொண்டு செல்வதற்கு இந்தோனேசிய கஸ்டம் அதிகாரிகலாள் கிளியரன்ஸ் கொடுக்கப்படும். அங்கிருந்து வடகொரியா சென்று ஏற்றும்.(இறுதி நேரத்தில் கொரியர்களே ஆயுதங்களை எமக்கு சப்ளை செய்தார்கள்)

ஆயுதங்களுடன் “கார்கோ கப்பல்” புறப்படும். (இதற்கான பணம் தாய்லாந்தில் வைத்து கொரியர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றபடும்) சிலவேளைகளில் சர்வதேச உளவமைப்புகளின் கெடுபிடியான நேரத்தில் கொரியர்கள் கடலில் வைத்து ஆயுதங்களை மாற்றிய சம்பவங்களும் நடந்துள்ளது. இது நிலைமைக்கு ஏற்றால் போல மாறுபடும்.

இந்த ஆயுத வழங்கல் நடைமுறையைத் தான், உலகம் முழுவதும் தனது முகவர்களை பரப்பியுள்ள CIA கண்டு பிடித்திருந்தது. (சில வேளை இந்தோனேசியா அரசாலும் சொல்ல பட்டிருக்கலாம்) அதன் பின்பு எமது கப்பல் நடமாட்டங்களை சற்றலைட் கண்காணிப்பில் கொண்டு வந்தது CIA.!

சரி இதன் பின் இந்த பொருட்கள் எப்படி ஊர் போய் சேர்ந்தது?

புலிகளின் ஆயுத வளங்கள் மூன்று பிரிவாக நடக்கும். முதலாவது பிரிவு “கார்கோ” கப்பல்களில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டு இந்து “சமுத்திரத்தில் இகுவேட்டர் கோட்டோடு” வந்து நிக்கும்.

இரண்டாவதாக பிரிவு, “கார்கோ” கப்பல்களிலிருந்து, சர்வதேசக்கடலில் வைத்து “டேங்கர் கப்பலளுக்கு” மாற்றப்படும் (ஒரு கார்க்கோ கப்பலில் வரும் பொருட்கள்,7இல் இருந்து 10 டேங்கர் கப்பல்களில் ஏற்றப்படும்) இந்த கப்பல்கள் கிழக்கு கரைகளில் இருந்து (மட்டக்களப்பு) 300கடல் மைல்களுக்கு அப்பால் தரித்து நிக்கும்.

மூன்றாவதாக கடற்புலிகளின் வினியோக படகுகள் மற்றும் பெரிய மீன் பிடி றோலர்களின் அவை ஏற்றபட்டு கரையை அடையும். இதுவே நடை முறையாக இருந்தது.!

பதிவைப்பார்க்கும் போது எதோ கடையில் போய் பொருட்கள் வாங்குவது போல, உங்களுக்கு இலவுவாக தெரியும், நிச்சயமாக அது அப்படி இருக்காது. இதற்கு பின்னால் பல நூறு போராளிகள், மக்களின் தியாகங்கள் நிறைந்துள்ளது. (கீழே “கார்கோ” மற்றும் “டேங்கர்” ரக கப்பல்களின் படங்களை பார்க்கவும்)

இதற்கு முன்னரான காலங்களில், எதிரியின் தாக்குதல்களில் புலிகளின் கப்பல்கள் சிக்கியுள்ளன. ஆனால், அவை சிறிய ரக “டேங்கர் “ரக கப்பல்களே தாக்குதல்களில் சிக்கியிருந்தது. அதாவது ஒரு மரத்தின் கிளையை வெட்டுவது போன்றது. அது வெட்டப்பட்டாலும் உடனேயே அந்த இடத்திற்கு புதிதாக இன்னொன்று வந்து விடும். அதனால் புலிகளுக்கும் பெரும் பாதிப்பை இந்தத்தாக்குதல்கள் ஏற்படுத்தவில்லை.!

இந்தத் தாக்குதல்களுக்கு முன், ஒரு பெண் அதிகாரியின் தலைமயில் நான்கு பேர் கொண்ட CIA அதிகாரிகள் ஸ்ரீலங்கா வந்தடைந்தனர். வந்த அன்றே, சிங்களக் கடற்படைத் தளபதி வசந்த கர்னகொடவை சந்தித்து, எதிரிக்கு அதுவரை தெரியாத, புலிகளின் ஆயுத வளங்களின் பின்னணி பற்றியும், நடைமுறைகள் பற்றியும் விளக்கி கூறியுள்ளார்.

அதுவரை 30வருடங்களாக சிங்கள உளவுத்துறையின் கண்ணுக்கு தெரியாது, சிங்கள உளவுத்துறையின் கண்ணில் விரலை விட்டாட்டிய புலிகளின் சாணக்கியத்திற்கு இதுவும் ஒரு உதாரணம்.! அதுவரை மர்மமாகவே இருந்த, புலிகளின் ஆயுத வழங்கல் முடிசுகள், CIA வின் புண்ணியத்தில் சிங்கள அரசுக்கு அவிழ்ந்து.! (இது தங்களின் சாதனை போல சிங்களம் இன்றுவரை பீத்துவது வெருவிடையம்.)

இதன் போது, புலிகளின் ஆயுத வழங்களின் ஆணிவேரான “கார்க்கோ கப்பல்கள்” தரித்து நிற்கும் இடத்துக்கான “சற்றலைட்” படங்களை கொடுத்து, நான்கு கப்பல்களையும் இனம் காட்டி கொடுத்திருந்தது.(இந்த படங்களின் பிரதிகள் புலிகளின் உச்ச புலனாய்வின் ஊடாக பெறப்பட்டு தலைவருக்கு கொடுக்கப்பட்டது)

அத்தோடு தமது செய்மதியில் தொடந்து கப்பல்களை கண்காணித்து வருவதையும் கூறி, அதை அழிப்பதற்கான பொறிமுறையையும் உருவாக்கி கொடுத்தது CIA. சர்வதேச கடலில் ஒரு கப்பலை தேடுவது என்பது “வைக்கோல்போரில் குண்டூசியை” தேடுவது போன்றது.

ஒரு கப்பல் புறப்படும் இடத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்கானித்தால் மட்டுமே, அதை இனம் காண முடியும். சர்வதேச கடலில் ஆயிரகணக்கில் கப்பல்கள் நடமாடும், அதனால் இந்த தாக்குதலுக்கு, சிங்கள அரசால் உத்தியோக பூவமாக CIA இன் உதவி கோரப்பட்டது.

அதன் படி CIA வின் சற்றலைட் உதவியுடன், எதிரியின் நான்கு சண்டை கப்பல்கள் புறப்பட்டது. (சயூரா-p 714,சமுதுரா p-621,சக்தி- L880,சுரனிமாலா-P702) இந்த தாக்குதலுக்கு வழிநடத்தி சென்றது மட்டுமல்லாது, இந்த தாக்குதலுக்கான கட்டளை அதிகாரியும், D.L.சின்னையா என்ற ஒரு தமிழன்.(இப்போதைய சிங்கள கடற்படைத் தளபதி)

இந்த இனத்துரோகியால் மூன்று கப்பல்கள் அழிக்க பட்டது. ஒன்று தப்பி சென்றது. மீண்டும் முன்று வாரங்களின் பின் CIA இன் இன்னுமொரு ஒரு வழிகாட்டலில் அந்த கப்பலும் மூழ்கடிக்கப்பட்டது. அத்தோடு கடல் ஆயுத வளங்கள் “நெட்வொர்க்” முற்று முழுதாக உடைந்து போனது.

இந்தக்கப்பல்களின், போர்க்கப்பல்களை எதிர்கொள்ளும் ஆயுதங்கள் இல்லாமையும், வேகமின்மை இல்லாமையும், எதிரியின் தாக்குதல் இலக்கிற்கு வழிவகுத்தது. இப்படி சர்வதேசத்தின் யுத்தத்தை தான் சிங்களம் முடித்து விட்டு மார் தட்டுகின்றது.!

இதில் வேடிக்கை என்னவென்றால் எம்மை அழித்தவர்களிடமே, எமக்கான நீதியை வழங்கும் படி நாம் இன்று ஜெனிவாவில் கையேந்தி நிக்கின்றோம்.! இப்போதைய எமது தலைமைகளும் சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தான் சுழல்கின்றார்கள் என்பது கூடத்தெரியாத அரசியல் வறட்சி எமது இளையோர் மத்தியில் விதைக்கப்பட்டு, அதன் படி வழிநடத்தப்படுகின்றனர் என்பது தான் வேதனைக்குரிய விடையம்.!

என் அன்புக்கினிய இளையோரே.! எங்கள் வாழ்நாட்கள் எண்ணப்படுகின்றன. ஒரு அண்ணனாய், தம்பியாய், சகோதரனாய் உங்களிடம் கேட்கின்றேன். எம் அடுத்த சந்ததியான நீங்கள் அரசியல் தெளிவு பெறவேண்டும். எல்லோரையும் நம்பாதீர்கள்.! “நம்ப நட, நம்பி நடவாதே” இன்றைய நேரத்தில் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்.!


மனச்சுமையுடன், துரோணர்.

பழங்குடிகளின் இயற்கை சார்ந்த அறிவு

ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு, இத்தாலி நாட்டில் ரோமர்களின் ஆட்சி வருவதற்கு முன்னால், அந்த நாட்டின் மத்திய மேற்குப்பகுதியில் எட்ருஸ்கன் இன மக்கள் வாழ்ந்து வந்தனர். தஸ்கனி, ரோம் பகுதிகளில் அவர்கள் ஆட்சி நடத்தினர்.

எட்ருஸ்கன் இனத்தவர்கள் மிகப்பெரிய நகரங்கள், கோயில்கள், சலவைக்கல் நினைவில்லங்களை கட்டினார்கள். வெண்கல உலோக வேலையில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். அதேவேளையில் தமிழர்களைப் போலவே எட்ருஸ்கன் இன மக்களும் அக்காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார்கள். (தமிழர்களுக்கும் எட்ருஸ்கன் இன மக்களுக்கும் நிறைய தொடர்புகள், ஒற்றுமைகள் உள்ளன. அது தனிக்கதை)

தமிழர்களைப் போலவே புள் (பறவை), பொழுது ஆகியவற்றைப் பயன்படுத்தி நற்குறி, தீக்குறி பார்க்கும் பழக்கம் எட்ருஸ்கன் மக்களுக்கு இருந்திருக்கிறது. இயற்கை தரும் எச்சரிக்கைகளை ஒருவித உள்ளுணர்வு மூலம் அவர்கள் திறமையுடன் புரிந்து கொண்டு, அதன்மூலம் எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம், கொள்ளைநோய் போன்றவற்றில் இருந்து தப்பி வந்தார்கள்.

கலை, கட்டுமானம், வானவியல், கடற்பயணம், நகர உருவாக்கம், நீர்ப்பாசனம் போன்றவற்றிலும் எட்ருஸ்கன் மக்கள் சிறந்து விளங்கினார்கள்.

எட்ருஸ்கன் இனத்து அறிஞர்கள் ‘டிசிப்பிளினா எட்ருஸ்கா’ என்ற கலைக் களஞ்சியத்தைத் தொகுத்தார்கள். குறியீடுகள் வடிவில் அமைந்த அந்த புத்தகம் ஒரு மிகப்பெரிய அறிவுநூலாக அந்தகாலத்தில் இருந்தது.

ஆனால் இத்தாலியின் ரோம் பகுதியில் பிற்காலத்தில் ஆட்சிக்கு வந்த ரோமானியர்களுக்கு எட்ருஸ்கன்களின் இந்த அறிவும், திறமையும் பிடிக்கவில்லை. குறிப்பாக, எட்ருஸ்கன் மக்கள் தொகுத்த ‘டிசிப்பிளினா எட்ருஸ்கா’ என்ற கலைக்களஞ்சியத்தை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அது ‘பழங்கால மக்களின் மூட நம்பிக்கை, பகுத்தறிவுக்கு ஒவ்வாதது’ என்று கூறி, ரோமர்களால் ‘டிசிப்பிளினா எட்ருஸ்கா’ என்ற கலைக்களஞ்சியம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

எட்ருஸ்கன் மக்கள் அவர்கள் காலத்தில் தாவரங்கள், விலங்குகள், அசையும், அசையாப் பொருள்கள், விண்மீன்கள் பற்றியெல்லாம் அந்தப் புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஒரு மரத்தின் பழத்தைப் பறவை தின்று அது எச்சமிட்டு, அந்த எச்சத்தில் உள்ள விதை முளைத்து மீண்டும் மரமாகிறது என்பதையெல்லாம் அவர்கள் சங்க கால புலவர்கள் போல உன்னிப்பாகக் கவனித்து பதிவிட்டு இருந்தார்கள்.

ஆனால் எட்ருஸ்கன் மக்களின் இந்த மாபெரும் அறிவை ரோமர்கள் குப்பை என்று ஒதுக்கித் தள்ளி, அழித்துவிட்டதுதான் கொடுமையான விடயம்.
இதில் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், எட்ருஸ்கன் மக்கள் ஆட்டின் கல்லீரலை ஒரு வெண்கல மெத்தை போன்ற பொருளில் வைத்து அதை தெய்வீக சடங்குகளுக்குப் பயன்படுத்துவது வழக்கம். காரணம், இந்த பேரண்டம் அல்லது பிரபஞ்சம் ஆட்டின் கல்லீரல் போல இருக்கிறது என்பது எட்ருஸ்கன்களின் நம்பிக்கை.

பிற்காலத்தில் வந்தவர்கள் எட்ருஸ்கன்களின் இந்த நம்பிக்கையை கேலி செய்து வந்தார்கள். ஆனால், 90களில், விண்வெளியில் உள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் எடுத்த படத்தில் இந்த பிரபஞ்சம் ஆட்டின் கல்லீரல் போலவே இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்படாதவர்களே கிடையாது.


உலகம் முழுவதும் பழங்கால மக்கள் இனங்களின் அறிவுசார்ந்த, இலக்கியம் சார்ந்த நூல்கள் அடுத்தடுத்து வந்த ‘செவ்வியல்’ ‘நாகரீக’ அரசுகள் அல்லது கிறிஸ்துவ அரசுகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டன என்பதே வரலாறு.

(தமிழர்களின் அறிவுசார் பொதுமறையான திருக்குறள் நூலை சிலர் திட்டுவதும், தஞ்சை பெரியகோயிலை குட்டிச்சுவர் என அழைப்பதும்கூட இதில் சேர்த்திதான்)

கொலம்பசுக்கு முற்பட்ட மத்திய அமெரிக்க மக்களான அஸ்டெக் மக்களிடம் ஒரு வெள்ளை நிற பிரமிடு இருந்தது. தற்போது மெக்சிகோ நாட்டின் தலைநகரமாக உள்ள டெனோசிட்லான் பகுதியில் அந்த பிரமிடு அமைந்திருந்தது. அங்கே 12 அடி உயரத்தில், 20 டன் எடையில் காலண்டர் கல் என்ற பெயரில் பெரிய தூண் ஒன்றை அஸ்டெக் மக்கள் நிறுவியிருந்தார்கள். ‘காலத்தின் கலன்’ என்று அழைக்கப்பட்ட அந்தத் தூண், பழங்கால நாள்காட்டிபோல ஒரு கணினி (கம்ப்யூட்டர்) போல அக்காலத்தில் விளங்கியது. அஸ்டெக் மக்களின் கலை, அறிவியல் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அந்த கல்தூண் இருந்தது.

ஆனால், கி.பி. 1,543ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஸ்பெயின் நாட்டு கிறிஸ்துவ பாதிரியார்கள் அந்த கல்தூணை ‘சாத்தானின் தூண்’ என்றுகூறி, அதை அஸ்தி வாரத்தோடு பிடுங்கி எடுத்தார்கள். அந்த கல்தூண், டெனோசிட்லான் பிரமிடின் உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கீழேபோட்டு ‘டமார்’ என உடைக்கப்பட்டது.

தொல்குடிகள், புறவினத்தார், ‘காட்டுமிராண்டிகள்’ என பல பெயர்களில் அழைக்கப்படும் பழங்கால மக்களின் கலை, வரலாறு போன்ற பதிவுகளை அடியோடு அழிப்பதில் மதவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும் எப்போதும் ஓரணியாகச் செயல்படுவதுதான் வழக்கம்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தொல்பழங்குடி மக்களின் காலத்தை ‘இருண்ட காலம்’ என்று கூறிவிட்டு, இயற்கையை இருவேறு கூறுகளாக பிற்கால ‘அறிவுவாதிகள்’ பகுத்தார்கள். பிரான்ஸ் நாட்டு கணிதமேதையான ரெனி டெஸ்கார்ட்ஸ், கார்ட்டீசியன் என்ற கொள்கையை வகுத்தார்.
இயற்கையை இரண்டாகப் பகுத்து மனம் மற்றும் பொருள் என்ற இருவேறு எதிரிமுகாம்களாக அவர் உருவாக்கினார்.

புகழ்பெற்ற விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் அவர் பங்குக்கு கார்ட்டீசியன் விதியை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச் சென்று, இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ‘ஆன்மா இல்லாத ஓர் இயந்திரம்’ என்பதுபோல நிறுவிக்காட்டினார்.

ஆக, ஐரோப்பா கண்டத்தின் மதம், தத்துவ ஞானம், அறிவியல், பகுத்தறிவு எல்லாமே மனிதனை இயற்கையில் இருந்து பிரித்து வேறுபடுத்திக் காட்டத் தொடங்கியது.

ஐரோப்பிய வெள்ளையர்கள் முதன்முதலாக அமெரிக்க கண்டத்தில் காலடி எடுத்து வைத்தபோது அந்த கண்டம் இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இருந்தது. அங்கே வாழ்ந்த செவ்விந்திய பழங்குடி மக்கள் இயற்கையோடு கைகோர்த்தபடி இயைந்து வாழ்ந்தார்கள்.

ஆனால், ஐரோப்பியர்களுக்கோ அமெரிக்காவின் அழகிய பைன் மரக்காடுகளும், பிரெய்ரி புல்வெளிகளும் பணம் கொழிக்கும் களஞ்சியங்களாகத் தெரிந்தன. அசையா பொருளான இந்த உலகத்திடம் இருந்து எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ள வேண்டும் என்பதே ஐரோப்பியர்கள் கற்றிருந்த பாடம். ஆகவே, அமெரிக்க மண்ணை கொள்ளையிடும் முயற்சியில் அவர்கள் இறங்கினார்கள்.

விஸ்கான்சின் பகுதியில் மட்டும் இருபதாம் நூற்றாண்டில் அனைத்து பைன் மரக் காடுகளும் அழிக்கப்பட்டு அந்த இடம் வெறும் தரிசாக விடப்பட்டது. 1930களில் டஸ்ட்பவ்ல் என்ற பேரழிவு நிகழ்த்தப்பட்டது.

( The power of coincidence by Frank Joseph என்ற புத்தகத்தில் இருந்து…)

Important Note: பழங்கால மக்களின் கலை, வரலாறு போன்ற பதிவுகளை அடியோடு அழிப்பதில் மதவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும் எப்போதும் ஒரணியாகச் செயல்படுவது வழக்கம்.

ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?’ – இந்த வரலாறு முக்கியம்

மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன. வழக்கம் போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை, இந்திரா காந்தி.

இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி செய்யச் சொல்லிக் கேட்கிறார். இது கொரோனா சிகிச்சைக்கு பயன்படக்கூடும் என்று அவர் நம்புகிறார். ஏற்றுமதி செய்யச்சொல்லி மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். அது இருக்கட்டும். அலோபதி மருந்துகளை இந்திய மருந்துக் கம்பெனிகளோ, விஞ்ஞானிகளோ கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்தியா மருந்து உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக, உலகின் மருந்தகமாக திகழ்வது எப்படி? இதை சாத்தியமாக்கியவர் யார்?

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் மருந்துகள் பெரும்பாலானவற்றை கண்டறிந்தது மேற்கத்திய நாடுகள். அவற்றின் காப்புரிமையும் அவர்களிடமே இருந்தது. அந்த கம்பெனிகள், இந்தியாவில் மருந்துகளை விற்பனை செய்து வந்தன. அவை விலை அதிகமானவை. எனவே, மருந்துகள் வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நேரத்தில் இந்திராகாந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்திய மக்களின் நலம் காக்க, உலகின் வல்லரசுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டு ஒரு முடிவெடுத்தார்.

இந்தியாவில், உணவு மற்றும் சுகாதாரம் தொடர்புடைய PRODUCT காப்புரிமைகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், இந்திய பயன்பாட்டிற்கு மருந்துகளைத் தயாரிக்கும் சட்டரீதியான உரிமை இந்திய கம்பெனிகளுக்குக் கிடைத்தது. அதாவது, பல்லாண்டு காலமாகப் பெரும் பொருள் மற்றும் உழைப்பின் மூலம் கண்டுபிடித்து காப்புரிமை வாங்கிய மேற்கத்திய கம்பெனிகளின் மருந்துகளை `காப்பி’ அடித்து இந்திய கம்பெனிகள் தயாரிக்கலாம். நெறிமுறைகளின்படி தவறான நடவடிக்கை என்றாலும், காப்பியடிப்பது இந்திராகாந்தி கொண்டு வந்த சட்டப்படி சரி. இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கல். எனவே, மேற்கத்திய அரசாங்கங்கள் பல அழுத்தங்களைக் கொடுத்தன.

வழக்கம்போல எந்த மிரட்டலுக்கும் அடிபணியவில்லை இந்திரா காந்தி. எனவேதான் அவர் இரும்புப் பெண்மணி. சட்ட உரிமையை இந்திராகாந்தி கொடுத்தாலும், மருந்துகளைத் தயாரிப்பதில் இந்தியாவுக்கு வேறு சிக்கல் இருந்தது. மருந்துகளைக் காப்பியடித்து தயாரிக்கும் திறமைகூட இந்திய கம்பெனிகளிடம் இல்லை. இந்த இடத்தில் இந்திராகாந்திக்கு கை கொடுத்தது, அவர் தந்தை பண்டித நேரு தொடங்கிய நிறுவனங்கள்,

புனேயில் உள்ள CSIR-National Chemical Laboratory மற்றும் ஹைதராபாத்தில் உள்ள CSIR-Indian Institute of Chemical Technology. இங்கே பணியில் இருந்த விஞ்ஞானிகளை மருந்துகள் தயாரிக்க கேட்டுக்கொண்டார். எளிதான விஷயம் இல்லை என்றாலும், இந்த ஆய்வக விஞ்ஞானிகள் பல மருந்துகளை Reverse Engineering மூலம் தயாரித்து, அதை இந்திய மருந்து கம்பெனிகள் தயாரிக்கவும் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் இந்திய மருந்துக் கம்பெனிகள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றன. இதுதான் Generic Pharma என்பதன் தொடக்கம். இதனால்தான், அமெரிக்காவில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் Paracetamol, இந்தியாவில் 50 பைசாவுக்கு கிடைக்கிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை அனுப்பச் சொல்லி அமெரிக்க அதிபர் கேட்பதற்கும் இந்திரா காந்தி எடுத்த முடிவுதான் காரணம்.

இந்திரா காந்தியின் இந்த அபரிமிதமான துணிச்சல்மிக்க நடவடிக்கையால் இந்தியா உலகின் மருந்தகமாக மாறியது. அதற்கு CSIR-NCL மற்றும் CSIR-IICT விஞ்ஞானிகள் உறுதுணையாக இருந்தனர்.

எல்லா சாதனைகளுக்குப் பின்னும் UNSUNG HEROES இருப்பார்கள். இந்தச் சாதனைக்குப் பின் இருக்கும் UNSUNG HEROES தமிழர்கள்.
இந்த மருந்துகளைத் தயாரிக்கும் கொள்கலனில் வேதிப்பொருள்களை வாளிகளில் தூக்கி ஊற்ற வேண்டும். மிகவும் ஆபத்தான பணி. இதற்காகத் தமிழகத்தில் இருந்து ஏறக்குறைய 600 குடும்பங்கள் புனேவுக்கு வந்தன. அவர்களின் வாரிசுகள் இன்றைக்கும் CSIR-NCL-ல் இருக்கிறார்கள்.

இங்கே விஞ்ஞானியாகச் சேர்ந்தபோது, அங்கிருந்த தமிழ் குடும்பங்களைப் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. மஹாராஷ்டிராவில் உள்ள இந்த ஆய்வகத்தில் இவ்வளவு தமிழர்கள் எப்படி வேலைக்கு வந்தார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன், பதிலில்லை. தொடர்ந்து தேடியபோது கிடைத்ததுதான் இந்த வரலாறு. ஒவ்வொரு இந்தியனும் ஒரு மாத்திரையை விழுங்கும்போது, நினைவில் வைக்க வேண்டியது, இந்திராகாந்தி, CSIR விஞ்ஞானிகள், 600 தமிழ் குடும்பங்கள் மற்றும் Generic Pharma கம்பெனிகள்.

பின் குறிப்பு 1: புனேவில் CSIR-National Chemical Laboratory-ல் மாணவராக இருந்த அஞ்சி ரெட்டி தொடங்கியதுதான் உலகப்புகழ் பெற்ற இந்திய மருந்துக் கம்பெனி Dr Reddy’s Lab. நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் பல Dr Reddy’s Lab தயாரித்ததாக இருக்கும்.

பின் குறிப்பு 2: இந்திரா காந்தியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு முன் இந்தியா தயாரித்த Active Pharma Intermediate மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2005-ம் ஆண்டில் இது 2000 மில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆக உயர்ந்தது. இன்றைக்கு, உலகின் மருந்து உற்பத்தியில் 12% இந்தியாவினுடையது. இந்திராகாந்திக்கு முன்பு இந்திய மருந்து சந்தையில் சர்வதேச கம்பெனிகளின் பங்கு 70%. 2005-ம் ஆண்டு இந்திய கம்பெனிகளின் பங்கு 77%. நிலைமை தலைகீழாக மாறிவிட்டதைக் கவனியுங்கள்.

பின் குறிப்பு 3: சமீபகாலமாக விண்ணில் நிகழ்ந்தவற்றை விதந்தோதி, மண்ணில் நிகழ்ந்ததை மறந்துவிடும் பழக்கம் வந்துவிட்டதோ என்ற ஐயம் என் போன்றவர்களுக்கு வருகிறது.

-முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி #விகடன்

மூலப்பதிவு: https://bit.ly/2x4g0vH

56 Vs விபத்து பிரதமர்

April 4 – மருந்திற்கு தடை
April 5 – போனில் எச்சரிக்கை
April 6 – பகிரங்கமாக மிரட்டல்
April 7 – இந்தியா தடை நீக்கம்

ஜீயோட வீரம்… ப்பா…

இங்கே நான் ஒன்றை நினைவுப் படுத்தணும். 2005 ஜூலை 17, அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த அறிவிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம், அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இதை தான் நாளை அறிவிக்கப் போகிறோம் என்று கள்ளத்தனமாக அமெரிக்கா நீட்டியது.

முதல் நாள் இரவில் கொடுத்தால் இந்தியாவால் ஒன்றும் பண்ண முடியாது என்ற எண்ணம். மன்மோகன் சிங், ஜார்ஜ் புஷ்ஷிற்கு, ரத்தின சுருக்கமாக, நாளை எந்த அறிவிப்பும் இல்லை, இந்த ஒப்பந்தம் கேன்சல் செய்யப்படும் என்று ஒரு செய்தியை அனுப்பினார்,.

அலறி அடித்துக் கொண்டு அந்த இரவிலேயே அமெரிக்காவின் அப்போதைய Secretay of State காண்டோலீசா ரைஸ், மன்மோகன் சிங்கை சந்திக்க தங்கியிருந்த ஓட்டலுக்கே ஓடோடி வந்து காத்திருந்தார். காரணம் அவரை சந்திக்க சரியான நேரமில்லை என்று மறுத்து விட்டார் மன்மோகன் சிங். பிறகு அப்போதைய இந்தியாவின் வெளியிறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங்கிடம் பேசி அவர் மூலம் மன்மோகன் சிங்கை சந்தித்தார் ரைஸ். நாம் முதலில் இறுதி செய்திருந்த ஒப்பந்தத்தில் ஒரு கமா மாறி இருந்தாலும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில்லை என்பதை உங்கள் அதிபரிடம் சொல்லுங்கள் என்றார். பழைய இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தமே கையெழுத்தானது.

இந்தியா திரும்பிய மன்மோகன் சிங் அவர் வேலையை பார்க்கச் சென்று விட்டார். இந்த மாதிரி சீனில் எல்லாம் மோடியை யோசித்துப் பாருங்கள். பாட்ஷா படத்தில் பவர்ஸ்டார் நடித்தது போல் இருக்கும்.

பிராமணர்களை கொரோனா தாக்காது?

கொரானா பாதித்த அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தாமல் மோடி அரசு விலக்கு அளித்தது ஏன்? இவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதாலா? இவர்கள் மூலம் கொரோனா பரவாதா?

ஜனவரி-31 முதல் கொரோனா பாதித்த வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்கள் 14 நாட்கள் அவரவர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் (Home Quarantine) கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.

ஆனால் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்களுக்கு இதுபோன்ற எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.சாதாரண நாட்களில் அனுமதிக்கப்படுவது போல இயல்பாக இவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மார்ச்-18 வரை அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் எவ்வித கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை.

மேலும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிடவில்லை.

இத்தனைக்கும் அமெரிக்காவில் மார்ச்-1 அன்று 74 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மார்ச்-8 அன்று 518 ஆகவும் மார்ச்-15 அன்று 3463 ஆகவும், மார்ச்-18 அன்று 9259 ஆகவும் பல மடங்கு உயர்ந்தது.மார்ச் முதல் வாரத்திலேயே கொரோனா அமெரிக்காவில் சமூகப்பரவலாக மாறிவிட்டது.இந்நிலையில் 18.03.2020 வரை அமெரிக்காவில் இருந்து திரும்பியவர்களை தனிமைப்படுத்தாமல் மோடி அரசு இயல்பாக நாட்டுக்குள் அனுமதித்தது மிகப்பெரிய தவறு..

அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் பேர் இந்தியர்கள் இருக்கிறார்கள்.இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிராமணர்கள்.

அமெரிக்காவில் இருந்து கொரோனாவுக்கு பயந்து உயிர்தப்பி ஓடி வந்த ஏராளமான பிராமணர்களை கொரோனா சோதனைக்கும் உட்படுத்தாமல், 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடாமல், அமெரிக்க பிராமணர்கள் மூலம் இந்தியாவில் கொரோனாவை பரப்ப அனுமதித்துள்ளது மோடி அரசு.

ஆதாரம் : மத்திய சுகாதார துறை அறிக்கைகள்:

Click to access ConsolidatedTraveladvisoryUpdated11032020.pdf

Click to access TravelAdvisory16thMarch.pdf

Click to access TravelAdvisory17thMarch.pdf

Click to access Traveladvisory.pdf