அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. அதற்கான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றன.

அய்.டி.ஆர்.எப். நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு மாநில அரசுகளிடம், தங்களுக்கு, வரிச் சலுகைக்கான சான்றிதழ் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. அதற்கு ‘படிவம் 1023’ என்று பெயர். அதில், இந்தியாவில் கீழ்க்கண்ட 9 முக்கிய நிறு வனங்கள், இந்தியாவில் தங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகார் பாரதி (பீகார்)

சுவாமி விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம் (தமிழ்நாடு)

சேவா பாரதி (டெல்லி)

ஜனசேவா வித்யா கேந்திரா (கருநாடகம்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (ம.பி.)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (குஜராத்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (நாகர் ஹவேலி)

கிரிவாரி வனவாசி சேவா டிரஸ்ட் (உ.பி.)

ஜி. தேஷ்பாண்டே வனவாசி வஸ்திகிரா (மகாராஷ்டிரா)

  • மேற்குறிப்பிட்ட 9 நிறுவனங்களுமே சங் பரிவார் அமைப்புகள்தான். இதை ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இணையத்தளங்களிலே காண முடியும். உதாரணமாக விகாஸ் பாரதி, சங் நீரூற்றிலிருந்து கிளம்பிய நீரோட்டம் என்றும், விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் விசுவ இந்து பரிஷத்தின் தோழமை அமைப்பு என்றும், ஆர்.எஸ்.எஸ். இணைய தளங்களில் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்த அமைப்புகளின் கீழ் – 67 துணை அமைப்புகள் இந்தியாவில் செயல்படுவதாகவும், அய்.டி.ஆர்.எப்., அறிவித்திருக்கிறது. ஆக மொத்த முள்ள 75 நிறுவனங்களில், 60 நிறுவனங்கள் சங் பரிவார்களோடு தொடர்புள்ள நிறுவனங்களாகும்.

அந்த நிறுவனங்களில் பதிவாகியுள்ள அய்.டி.ஆர்.எப். நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நிகராக இந்து சேவக் சங் (எச்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்கா வில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்காவில் அய்.டி.ஆர்.எப். நிறுவனர்கள். இவர்கள் அமெரிக்காவின் ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களாகவும் செயல்படு கிறார்கள். அய்.டி.ஆர்.எப்.பின் பொதுச் செயலாளராக இருக்கம் ஷியாம் கோகல் காந்தி என்பவர் சான்பிரான்சிஸ்கோவில் – எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர். அய்.டி.ஆர்.எப்.பின் ஆலோசகராக இந்தியாவில் செயல்படுபவர் ஷியாம் பாரன்டே எனும் பார்ப்பனர். இவர்தான், வெளிநாடுகளில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கான அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ்.சின் ‘அப்சர்வர்’ பத்திரிகையில் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வாழ் பார்ப்பனர்கள் 1980களிலிருந்து – ‘இந்துத்துவா’வைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். இந்தியாவிலிருந்து 1990களில் – அமெரிக்காவுக்கு குடியேறிய ஏராளமான பார்ப்பனர்கள், இதில் தீவிரம் காட்டினர். குறிப்பாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, வடக்கு-கிழக்கு பகுதிகளிலும், தெற்குப் பகுதி மாநிலங்களான புளோரிடா, டெக்சாஸ் மாநிலங்களிலும், இந்துத்துவா அமைப்புகள் வலிமையாக கால் பதித்தன. இந்த இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவில் சங் பரிவார்களுக்குத் துணை நிற்பதோடு அய்.டி.ஆர்.எப். வழியாக, பெருமளவு நன்கொடைகளைத் திரட்டித் தந்து வருகின்றன.

மத வேறுபாடு இல்லாமல் இந்தியர்களின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய இந்திய வளர்ச்சி (எய்டு) அமைப்பு, குழந்தைகள் மறுவாழ்வு (கிரஸ்), இந்திய வளர்ச்சிக் கழகம் (அய்.டி.எல்.) போன்ற பல பொதுவான தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டாலும், அய்.டி.ஆர்.எப்., இவைகளை அங்கீகரிப்பது இல்லை. சங் பரிவார் களுடன் தொடர்புடைய அமைப்புகளை மட்டுமே சேவை நிறுவனங்களாக அது அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிகவும் , இந்திய முஸ்லிம்கள், சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி களுடன் தொடர்பு கொண்டிப்பதாகவும், குறும் படங்களைத் தயாரித்து, திரையிட்டு நிதி திரட்டும் வேலைகளை அமெரிக்க ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ்.சும், அய்.டி.ஆர்.எப்.பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

நிதி ஒதுக்கீடு : எதற்கு?

‘வளர்ச்சி’, ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் இந்தியாவுக்கு அய்.டி.ஆர்.எப். அனுப்பிய தொகையில் பெரும் பகுதி, சங் பரிவார்களின் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் – மதப் பகைமையை வளர்ப்பதற்குமே பயன்பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

1994 முதல் 2000 வரை அய்.டி.ஆர்.எப். இந்தியாவுக்கு அனுப்பிய தொகையில் 75 சதவீதம் (3.2 மில்லியன் டாலர்), ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு களுக்கே அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு மைனாரிட்டி அமைப்புகளுக்கும் உதவிடவில்லை. அனுப்பிய தொகையில் 70 சதவீதம் – ஆதிவாசிகளை, இந்து மதத்துக்கு மாற்றவும், அதற்குத் தயார் செய்வதற்கான கல்வி, விடுதிகளை நடத்தவுமே செலவிடப்பட்டு இருக்கிறது. 8 சதவீதம் மருத்து வத்துக்கும், 15 சதவீதம் புனர்வாழ்வு திட்டங் களுக்கும், 4 சதவீதம் கிராம வளர்ச்சிக்கும் செல விடப்பட்டு இருக்கிறது. (ஆதாரம்: அய்.டி.ஆர்.எப். – ஆண்டறிக்கை – இணையதளத்திலிருந்து) ‘புனர் வாழ்வுப்பணி’ என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகைக்கூட – மத அடிப்படையிலேயே செலவிடப் பட்டிருக்கிறது. குஜராத் பூகம்பத்தின்போது – புனர் வாழ்வு நிதியிலிருந்து செலவிட்ட தொகையை, பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கினார்கள். இதேபோல் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்க தேச இந்துக்கள், ராணுவம் மற்றும் போராளிகள் தாக்குதலுக் குள்ளான காஷ்மீர் இந்துக்கள் என்று இந்துக்களுக்கு மட்டுமே, இந்நிறுவனம் உதவிகளைச் செய்துள்ளது. இவைகளில் பாதிக்கப்பட்டவர்கள் கிறித்தவர், முஸ்லிம்கள் இருந்தாலும்கூட ‘நிவாரண உதவிகள்’ மதத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன.

குஜராத் பூகம்பத்தின்போது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பகுதியைப் புறக்கணித்தன என்று குல்தீப் நய்யார் எழுதினார். (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், பிப்.21, 2001) இந்து அல்லாத தொண்டு நிறுவனங்கள், நிவாரணப் பணியில் ஈடுபட வந்தபோது, சங் பரிவார் அமைப்புகள் அவைகளைத் தடுத்து நிறுத்திவிட்டன. (கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், ஜன.31, 2001)

ஆதிவாசிகள் – மதமாற்றம்

இந்தியாவின் பழங்குடி மக்களை ஆதிவாசிகள் என்ற பெயரில் தான் அழைப்பது வழக்கம்; ஆனால், இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்று வரலாற்றைப் புரட்ட விரும்பும் ‘சங் பரிவாரங்கள்’ இவர்களை ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிகள் என்று அழைப்பதில்லை. மாறாக ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறார்கள். பழங்குடியினரான ஆதிவாசிகள், இயற்கையை வழிபடக் கூடியவர்கள். அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்து சாதி அமைப்பால் கடந்த நூற்றாண்டில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மீது மதங்கள் திணிக்கப்பட்டன. பலர் கிறிஸ்தவர்களானார்கள். அண்மைக்காலமாக, இந்த மக்களை ‘இந்துக்களாக’ மாற்றும் முயற்சிகளில் சங் பரிவார் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக பழங்குடியினருக்கான கல்வித் திட்டங்களையும், நல் வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதற்கான பெரும் நிதி அய்.டி.ஆர்.எப். போன்ற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது.

பழங்குடியினரை இந்து மதமாற்றம் செய்வதற்கே – அமெரிக்காவின் பணம் அய்.டி.ஆர்.எப். வழியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ என்ற அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதாக அய்.டி.ஆர்.எப். ஒப்புக் கொண்டுள்ளதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம்.“கிறிஸ்தவர்களாக்கப்பட்ட – வனவாசிகளை இந்த மதத்துக்கு மாற்றுவதற்காகவே வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் 1950களில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த வழியில் பழங்குடியினரின் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதில், எங்கள் அமைப்பு வெற்றிகளைக் குவித்து வருகிறது” – என்று ஆர்.எஸ்.எஸ். வெளியீடே எழுதியிருக்கிறது. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றி, தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து, சமூக விரோத, தேச விரோதிகளிடமிருந்து, அவர்களைக் காப்பாற்றி யுள்ளதாக, ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்துக்கு’ – அய்.டி.ஆர்.எப். நிறுவனமே, தனது ஆவணங்களில் புகழாரம் சூட்டி மகிழ்கிறது.

மத பழங்குடியினரை மதம் மாற்றுவதோடு மட்டுமல்ல; அவர்களை ‘இந்துராஷ்டிரம்’ அமை வதற்கான போராளிகளாகப் பயிற்சி தரும் நட வடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள்; அதற்கும் அமெரிக்காவின் பணம் வருகிறது; அமெரிக்காவின் ‘அய்.டி.ஆர்.எப்.’பிடமிருந்து நிதி உதவி பெறும் ‘சேவா பாரதி’ – தனது அறிக்கை ஒன்றில் – இதை உறுதிப்படுத்துகிறது. பழங்குடி யினரில் சில ஆண்களையும், பெண்களையும் தேர்வுசெய்து அயோத்தியில் உள்ள ‘ஸ்ரீராமகதா பிராவச்சான்’ என்ற ராமாயணப் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பி சாமியார்களைக் கொண்டு 8 மாத பயிற்சி தந்து, பிறகு அவர்களைக் கிராமங்களுக்கு அனுப்பி பிரச்சாரகர் களாகப் பயன்படுத்துவதாக சேவா பாரதி கூறுகிறது.

இது மட்டுமல்ல, ஆதிவாசிகளை, இந்துக்களாக மதம் மாற்றும் நிகழ்ச்சி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்கும் பயன்படுகிறது என்று, சங் பரிவார் தலைவர்களே கூறுகிறார்கள். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் – “ஏகல் வித்யாலயா” என்ற பள்ளிகள், அமெரிக்க நிதி உதவியோடு நடத்தப்படுகின்றன. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றுவதில் – இந்தப் பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன. இத்தகைய பள்ளிகளைத் தொடங்கியதன் மூலமே, பீகாருக்குள் தாங்கள் வலிமை பெற முடிந்தது என்றும், பீகாரில் தாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கியது என்றும், குஜராத்திலும் அதே சோதனைகளைத் துவங்கி – காங்கிரஸ் கோட்டைகளைத் தகர்ப்போம் என்றும் ஜார்கண்ட் பகுதியைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் கவுஷிக் பட்டேல் கூறியிருக்கிறார். (ஆதாரம்: ‘தி டெலிகிராப்’ நாளேடு, ஜூலை 4, 2000)

  • ஆக, அமெரிக்கப் பணம், மதமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்து வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மதக் கலவரங்களை உருவாக்கவும்….

அமெரிக்காவிலிருந்து சங் பரிவார்களுக்கு வரும் பணம், இந்தியாவில் மதக் கலவரங்களை நடத்துவதற்கும் பயன்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சுருக்கம் கருதி, அமெரிக்க நிதி உதவியோடு செயல்படும் அமைப்புகள் தந்துள்ள ஒரு சில ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம். மேற்கு குஜராத்தில் வாகை எனுமிடத்தில் அமெரிக்க உதவியோடு ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ நடத்தும் பள்ளியில் சிவாஜியின் படத்துக்குக் கீழே, “சிவாஜி மட்டும் இல்லாவிட்டால் நாம் அனைவரும் ‘சுன்னத்’ செய்யப்பட்டிருப்போம். சிவாஜி தான், நம்மைக் கட்டாய மதமாற்றத்திலிருந்து காப்பாற்றினார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் முதல் தலைமுறையினரான அந்த மாணவர்கள் இப்போது ‘இந்து’க்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஒரு இளம் ஆர்.எஸ்.எஸ்.காரர் அந்தப் பள்ளியை நடத்துகிறார். கலவரத்துக்கான வெறியை இதன் மூலம் தூண்டிவிடுகிறார்கள் என்று, பள்ளியை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய வரலாற்று ஆய்வாளர் அஜய்சிங் எழுதியிருக்கிறார். (ஆசியா வீக், மார்ச் 26, 1999)

அமெரிக்க உதவி பெறும் வனவாசி கல்யாண் பரிஷத்தை நடத்தும் சுவாமி அசீமானந்த் என்பவர் – ஒரு ஆதிவாசிக்கூட கிறிஸ்தவராக இருக்கக் கூடாது என்று கூறி, அனைவரையும் இந்துக்களாக்கும் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் – செய்தியாளர் அருண் வர்கீஸ் அம்பலப்படுத்தினார். (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பிப்.11, 1999)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் நிறுவனத்தினரால், கிறிஸ்தவ ஆதிவாசிகள் தாக்கப்படுவதையும், மன உளைச்ச லுக்கு உள்ளாக்கப்பட்டதையும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியதையும் ஒரு டாக்குமென்டரி படமே அம்பலப்படுத்தியது. (Fishers of Men, Docementary by Ranjankanth and Padmavathy Rao, 1997)

அமெரிக்க வாழ் இந்தியரின் உதவியோடு, இந்தியாவில் கலவரங்களும் வெறுப்புகளும் தூண்டிவிடப்பட்டதற்கு இவை சில உதாரணங்கள். அவர்களின் உதவியோடு நடத்தப்படும் நிறுவனமான வித்யாபாரதி நடத்தும் பள்ளிகளின் பாடத் திட்டங்களில் வரலாறுகள் திருத்தப்பட்டு, இந்து மதவாத உணர்வுகள் தூண்டி விடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

நிதி பெறும் நிறுவனங்கள்

அய்.டி.ஆர்.எப். எனும் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் நடத்தும் நிறுவனத்திடமிருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 184, மாநில வாரியாக நிதி பெறும் நிறுவனங்களின் பெயர்களையும் – நிதியையும், அதன் இணையத் தளங்களில் காண முடிகிறது. இதில் தமிழ்நாட்டில் நிதி உதவி பெறும் நிறுவனங்களையும் பெற்றுள்ள தொகையையும் மட்டும் கீழே தருகிறோம்:

பாரத் கல்சுரல் டிரஸ்ட் – திருச்சி (45,980 டாலர் – மதத்துக்காக)

கிராமகோயில் பூசாரிகள் பேரவை – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

நவஜோதி சாரிட்டி டிரஸ்ட் – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

சிவாலயா – சென்னை (6,650 டாலர் – மதம்-கல்வி)

ஸ்ரீராம தனுஷ்கோடி அபய ஆஞ்சநேயர் சேவா டிரஸ்ட் (9,500 டாலர் – மதத்துக்காக)

சாமி விவேகானந்தா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி (82,290 டாலர் – மதம்-கல்விக்காக)

ஆயுர்வேதிக் டிரஸ்ட் (கோவை) – (2,410 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

யுனிக் பவுண்டேன் டிரஸ்ட் (திருவண்ணாமலை) – (9,035 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

வெர்சல் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை) – (17,500 டாலர்)

விவேகானந்தா கேந்திரா ராக் மெமோரியல் (கன்னியாகுமரி) – (74,885 டாலர் – மதம் – சமூக கல்விக்காக)

ஆரோவில் – ஆரோவில் லேண்ட் பன்ட் – 301,420 டாலர்

அர்பிந்தோ ஆக்ஷன் – 4,750 டாலர்

ஆர்டார்தோ ஆஸ்ரம் – 2,500 டாலர்

அமெரிக்காவின் அய்.டி.ஆர்.எப். வழங்கியுள்ள மொத்த நிதியில்

82.4 சதவீதம் (2,684,915 டாலர்) சங் பரிவார் அமைப்புகளுக்கும்,

8.1.சதவீதம் (2,64,660 டாலர்) மத நடவடிக்கை களுக்கும்,

2.2 சதவீதம் (70,620 டாலர்) மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும்,

7.4 (2,49,785 டாலர்) சதவீதம் ‘தெரியாத நடவடிக்கைகளுக்காகவும்’ ஒதுக்கப்பட்டுள்ளது.

மதநடவடிக்கைகள், கல்விப் பணிகள், நிவாரணப் பணிகள் என்றபெயரில் வாங்கப்பட்ட நிதியும், சங் பரிவாரங்களின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Sabarang Communication/SACW/ தளத்திலிருந்து)

பாஜக RSS சங் பரிவாரத்தில் சாதி உரிமைக்குரல் வெடித்தது

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அயோத்தி ராமர் கோயில் டிரஸ்ட்டில், ஓபிசி (BC / MBC) பிரிவை சார்ந்த ஒருவர் கூட இல்லை.. ஒரே ஒரு தலித் உறுப்பினர் தவிர, மற்ற எல்லோரும் குறிப்பிட்ட மேல் சாதி வகுப்பினர்கள்

இதனால் கடும் கோபமடைந்துள்ள உமா பாரதி, கல்யாண் சிங் போன்ற ஓபிசி பிரிவை சார்ந்த சங் பரிவார் தலைவர்கள், வெளிப்படையாக தங்களின் குமுறலை, தாங்கள் ஒதுக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க துவக்கியுள்ளார்கள்..

ராம ஜென்மபூமி பாபரி மஸ்ஜித் போராட்டங்கள் நடைபெற்றபோது, அதை களத்தில் முன்னின்று நடத்தியது ஓபிசி தலைவர்களான உமா பாரதி, வினய் கட்டியார், கல்யாண் சிங்… அது தொடர்பாக நடந்த கலவரங்களில் பாதிப்படைந்தது ஓபிசிக்கள்,

ஆனால், இப்போது கோயில் கட்ட அமைக்கப்படும் டிரஸ்ட்டில், ஓபிசிக்கள் புறக்கணிக்கப்படுவதா?? என உமா பாரதி, கல்யாண் சிங்க்கும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்..

பாவம் இவர்களுக்கு புரியவில்லை.. தூண்டப்பட்ட மத உணர்வால், சண்டைப்போட்டு, கலவரம் செய்து, அடிபட்டு உதைப்படும் காலாட்படைத்தான் நீங்கள்.. அதன்பின், நோகாமல் நோம்பு கும்பிடும் “அந்த” கும்பல் வந்து, இவர்களை வெளியே துரத்திவிடும் என்பது… காலம் காலமாக, கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் இதுதானே நடந்து வருகிறது.

நன்றி
காந்தி லட்சுமணன்

சல்லித்தனம் பண்ணும் சங்கிகள்

இந்த சங்கியின் பெயர் கோப்பால். போலிச் சான்றிதழ் அடித்து முதலில் பாஸ்டர் வேடத்தில் கிறிஸ்தவத்துக்குள் புகுந்து உளவு பார்த்தான். தான் ஒரு வானத்தில் இருந்து இரங்கிய இறை தூதர் என்று கதை அளந்து விட்டான்.

கிறிஸ்தவத்தில் குழப்பம் விளைவித்த பின்னர் இஸ்லாமியத்திற்குள் புகுந்து தான் ஒரு வானத்தில் இருந்து இரங்கிய நபி என்று கதை அளந்து விட்டு அங்கும் குழப்பம் விளைவித்தான். இப்ப மீண்டும் சங்கி அவதாரம் எடுத்து கிறிஸ்தவத்தையும் இஸ்லாமையும் ஆபாசமாக பேசிக்கொண்டு அலைகிறான்.

இவனுக்கு RSSல் இருந்து மாத மாதம் 75000 சம்பளம் கொடுத்து இப்படி கலகம் செய்வதற்கென்றே இவனை டிசைன் செய்து பயிற்சி அளித்து அனுப்பி இருக்கிறார்கள். எச்சரிக்கை. இவனை போன்று பல சங்கிகள் பாஸ்டராக மாறி குழப்பம் விளைவிக்க வந்துகொண்டு இருக்கிறார்கள்.

வட இந்தியாவா மாறுகிறதா தமிழ்நாடு??

வட இந்தியாவில் உள்ள காவல்துறையில் RSS தீவிரவாதக்கும்பல்கள் புகுந்து, வட இந்தியா முழுவதும் வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்த செய்தி.

இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள காவல்துறையிலும் இந்த RSS கும்பல்கள் Friends of police என்றப் பெயரில் ஊடுறுவியுள்ள அதிர்ச்சி செய்திகள் தற்போது வெளிவந்துக்கொண்டிருக்கின்றன. இந்த (Friends of police) RSS கும்பல்கள் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையிலும் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். தற்போது அந்த RSS கும்பல்கள் தலைமறைவாகி உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழக அரசே!!

Friends of Police (RSS)-ஐ தடை செய்!

RSS கொலைகார கூட்டத்துடன் தமிழக காவல்துறைக்கு என்ன தொடர்பு? என்பதை மக்களுக்கு விளக்கமளி.

RSSன் சேவாபாரதி கும்பலை தமிழகத்தை விட்டு உடனே வெளியேற்று. அமைதிப்பூங்காவான தமிழகத்தை, வட இந்தியா போன்று வன்முறைக்களமாக மாற்ற முயற்சிக்காதே!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைக்கு காரணமான Friends of Police (RSS) குண்டர்கள் அனைவரையும் உடனே கைது செய்!

#BanFriendsOfPolice #BanRSS

காவல்துறை அடக்குமுறையை எதிர்க்கும் மறவர் சமுதாயம்

கள நிலவரபடி சாத்தான்குளத்தில் முதன்முதலில் போராட்டதை தொடங்கியவர்கள் தேவர் சமூகம்தான் கொலை செய்யபட்ட பெனியின் நண்பர்கள் அனைவரும் தேவர் சமூகத்து இளைஞர்கள்.

பெனி ஒரு சாதி மதம் கடந்த தமிழ் உணர்வுமிக்க இளைஞராக இருந்திருக்கிறார் தொடர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியும் சமுகவலைதளங்களில் எழுதியும் வந்துள்ளார்

கிருஸ்தவரான பெனி தன் தேவர் சமூக நண்பர்களுடன் திருப்பதி சென்று மொட்டை அடித்துள்ளார் மேலே உள்ள படத்தில் இருப்பது பெனி தன் தேவர் சமூக நண்பனுடன் திருப்பதியில் எடுத்த படம்

கள நிலவரம் இப்படி இருக்க பசும்பொன் சேனை என்ற பெயரில் சில சங்கிகள் தேவரின் பெயரை பயன்படுத்தி காவல்துறைக்கு ஆதரவாக நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர்

வேண்டும் என்றே தேவர் சமூகத்தை பொதுதமிழ் சாதிகளிடம் இருந்து தேவர் சமூகத்தை தனிமை படுத்த சங்கிகளும் எல்லா சாதியிலும் இருக்கும் காட்டி கொடுக்கும் கூட்டத்தின் ஈன செயலுக்கு தேவர் சமூகம் பொருப்பு அல்ல

நாங்கள் நீதிக்காக எவரையும் எதிர்க்கும், தமிழ்தேசிய குரலை தெலுங்கர்களுக்கு எதிராக முதலில் எழுப்பிய தேவர் சித்தரின் வாரிசுகள்

நீதியும், தர்மமும், அறமும், தமிழும், தமிழர் ஒற்றுமையும் ஓங்கிட என்றும் துணை நிற்ப்போம்..!

தமிழ்நாட்டுக் காவல்துறைக்குள் சாதி மதவாதத் தீவிரவாதிகள் ஊடுறுவல்:அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.


1993-ஆம் ஆண்டு பிரதீப் வி. பிலிப் என்கிற ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் FOP அமைப்பைத் தோற்றுவித்திருக்கிறார். காவல்துறையில் வேலைக்குச் சேர விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்த அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

தற்போது தமிழகத்திலுள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் 15 முதல் 20 வரையிலான FOP உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 34 FOP மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்..

FOP உறுப்பினர்கள் இரவு ரோந்து, சாலைப் போக்குவரத்து மேலாண்மை, பாதுகாப்பு நடவடிக்கைகள், இரத்ததான முகாம்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அண்மைக் காலங்களில் கிரிமினல் வழக்கு விசாரணைகளிலும், ஊரடங்கை மீறும் வாகனங்களைப் பிடிப்பதிலும் இவர்கள் இணைத்துக்கொள்ளப் படுகின்றனர்.

சாத்தான்குளம் படுகொலையில் நான்கு FOP உறுப்பினர்கள் பங்கேற்றதாக தகவல் பரவியதும், அந்த நான்கு பேரும் தங்கள் அமைப்பில் முறைப்படி பதிந்துகொண்டவர்கள் அல்ல என்று FOP நிர்வாகம் யூன் 29 அன்று முகநூல் வழியாக அறிவித்தது.

அப்படியானால் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்சை சித்திரவதை செய்த அந்த நான்கு பேர் (கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா) யார் என்கிற கேள்வி எழுகிறது.

அவர்கள் “சேவா பாரதி” அமைப்பைச் சார்ந்தவர்கள் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களில் பலர் FOP என்கிற போர்வையில் காவல்துறைக்குள் ஊடுருவி சாதிமதவாத அட்டூழியங்கள் செய்து வருகின்றனர் என்று பல சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். FOP அமைப்புக்கும், சேவா பாரதி அமைப்புக்கும் உள்ள உண்மை உறவுநிலை என்ன?

“சேவா பாரதி” ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் துணை அமைப்பு. இதன் தலைமையகம் சென்னையில் உள்ளது. தமிழகத்தில் “சேவா பாரதி” அமைப்பில் 2,500 தன்னார்வலர்கள் இருப்பதாக அவர்களின் இணையதளம் சொல்கிறது.

இவர்கள் உண்மையிலேயே காவல்துறையில் ஊடுருவி இருக்கிறார்கள் என்றால், இவர்களை காவல்துறைக்குள், காவல்நிலையங்களுக்குள் நுழைய விட்டவர்கள் யார்? இந்த முடிவு காவல்துறையில் யார் யாரால், எப்போது, எங்கே எடுக்கப்பட்டது? அல்லது ஆளும் அ.தி.மு.க. அரசு இந்த முடிவை எடுத்ததா? காவல்துறை அமைச்சராக இருக்கிற முதல்வருக்கு இந்தப் பிரச்சினை பற்றி ஏதாவது தெரியுமா, இல்லையா? உள்துறைச் செயலாளருக்கு ஏதாவது தெரியு்மா, இல்லையா?

அண்மையில் உ.பி.யில் “போலிஸ் மித்ரா” என்கிற பெயரில் “ஹிந்து யுவ வாகினி” எனும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் குழு ஊடுருவி, இசுலாமியர்களையும், கிறித்தவர்களையும் அடித்து நொறுக்கியது போல, இங்கே தமிழகத்தில் “சேவா பாரதி” அமைப்பினர் களமிறங்கியிருக்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது.

குடியுரிமைச்சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, டில்லியில் சாதாரண உடையணிந்த பல ரவுடிகள் காவல்துறையினரோடு நின்று மக்களைத் தாக்கியதை நாடேப் பார்த்து அதிர்ந்தது. பாசிசக் குழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்பு அமைப்புகளுக்குள் நுழைந்து கொண்டிருப்பது நாட்டிற்கும், நமது சனநாயக அமைப்புக்கும் மாபெரும் ஆபத்தாக மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த FOP – சேவா பாரதி உறவு பற்றிய ஒரு பொதுவிவாதம் தமிழகத்தில் உடனடியாக நடந்தாக வேண்டும். தேவையற்ற இந்த இரண்டு அமைப்புக்களையும் தமிழக அரசு நிரந்தரமாகத் தடைசெய்ய வேண்டும்.

பச்சைத் தமிழகம் கட்சி
சுப.உதயக்குமார் அவர்களது அறிக்கையிலிருந்து…
யூலை 2, 2020.

சாத்தான்குளம் கொலையை பாஜக நியாயப்படுத்துவது ஏன்?

ஒட்டுமொத்த மனிதகுலமும் இன்று சாத்தான்குளத்தில் காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட 2 வணிகர்களுக்கு நீதி
கேட்டுப் போராடி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்தக் கொலையை கண்டித்தும், கொலைக்கு நீதிகேட்டும் குரல் கொடுக்கின்றனர். ஆனால் பாஜக மட்டுமே அந்தக் கொலையை ஆதரிக்கும் தோனியில் தொடர்ந்து பேசி வருகிறது.

2 வணிகர்களின் கொலைக்கு நீதி கேட்டு கடையடைப்பு நடத்திய வணிகர் சங்கங்களை “தீய சக்திகள்” என்று கொச்சைப்படுத்துகிறான் எச்ச. இராஜா.

(கடந்த 2016 ல் கோவையில் சசிக்குமார் என்றத் தெருப்பொறுக்கி கள்ளக்காதல் பிரச்சினையில் கொலை செய்யப்படதற்க்கு இந்த எச்ச இராஜா சார்ந்துள்ள பாஜக சங்பரிவாரக் கும்பல்கள் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தியது. கடைகளை அடித்து நொறுக்கி, பொருட்களை திருடிச் சென்றதை அப்போது அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பின. இந்தக் கேவலமான வன்முறைக்கும்பல் தான் இன்று வணிகர் சங்கங்களை தீய சக்தி என்று கொச்சைப்படுத்துகிறது.)

இந்தக் கொலையை தொடர்ந்து பாஜக ஆதரித்துப்பேச என்ன காரணம்?. பாஜக விற்க்கும் கொலைக்குற்றவாளிகளுக்கும் என்ன தொடர்பு??.

ஏற்கனவே தென்தமிழக த்தில் உள்ள காவல்துறைகளில் “Friends of Police” என்றப்பெயரில் RSS தீவிரவாதக்கும்பல்கள் ஊடுறுவியுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவருகின்றன.

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் கொலையிலும் இந்த Friends of Police ( RSS கயவர்கள்) 5 பேர் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே இந்தக் கொலையை விவசாரிக்கும் அதிகாரிகள், கொலையில் ஈடுபட்ட Friends of police யும், அதற்க்கு பின்புலமாக உள்ள “தீய சக்தியையும்” விசாரித்து அனைவருக்கும் உரிய தண்டணை வழங்க வேண்டும்.

காவல்துறையில் மத அமைப்பு?

சாத்தான்குளம் படுகொலையில் Friends Of Police என்ற சட்டவிரோத குண்டர்களின் பங்கு தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

இன்று Friends Of Police பெயரில் தமிழ்நாட்டின் காவல்துறையில் ஊடுருவியிருக்கும் “சேவா பாரதி” என்ற அமைப்பினர் யார்?

சேவா பாரதி மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிப்புகளில் ஈடுபட்டதற்காகவும், கிறித்தவர்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதற்காகவும் தடை செய்யப்பட்டிருந்த ஒரு தீவிரவாத கும்பலாகும். அவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்த ஆவணங்களை 2003ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வர் வெளிப்படையாகவே வெளியிட்டு பேசினார்.

மேலும் 2001ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், 1999ல் ஒரிசாவில் ஏற்பட்ட புயலின் போதும், நிவாரண சேவைகள் செய்வதாக சொல்லி களமிறங்கி மக்களிடமும், பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான பணத்தை வசூலித்து அவற்றை RSS தீவிரவாத அமைப்பினை பலப்படுத்துவதற்காக பயன்படுத்தியது. சேவா இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் வாயிலாக 20 மில்லியன் பவுண்ட் பணம் வெளிநாடுகளில் வசூலிக்கப்பட்டது. வசூலித்ததில் நான்கில் ஒரு பங்கு பணம் RSS நடத்திய மதவாத பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. அப்பள்ளிகளில் கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பாடத்திட்டங்கள் நேரடியாக வைக்கப்பட்டிருந்தன. RSS பள்ளிகளின் பாடத்திட்டங்கள் மதவாதத்தன்மையுடன் இருப்பதாக NCERT குற்றம் சாட்டியது. இதனை அப்போதைய Frontline இதழ் அம்பலப்படுத்தியது.

நிவாரண முகாம்களில் RSS ஷாகாக்கள் நடத்தப்பட்டன. இரவு நேரங்களில் சமூக விரோத VHP அமைப்பின் ஆட்கள் கிறித்துவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் எதிரான மதவெறி பிரசங்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகவே 2002 ம் ஆண்டு குஜராத்தில் இசுலாமியர்கள் மீது இனப்படுகொலை RSS கும்பலால் நிகழ்த்தப்பட்டது.

ஒவ்வொரு பேரிடரையும் மதவெறியினை வளர்த்தெடுத்து, சமூக விரோத செயல்பாடுகளை சமூகத்தில் விதைப்பதற்காக இந்த அமைப்பு பயன்படுத்தி வருகிறது. பேரிடர்களில் சேவை செய்கிறோம் என்ற பெயரில் இறங்கி மதவெறியையும், சாதி வெறியையும் தூண்டும் வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவினைப் பயன்படுத்தி சேவா பாரதி என்ற சமூக விரோத அமைப்பிற்கு மட்டும் கோயில் வாசலில் துவங்கி நகர் முழுவதும் பிரசங்கங்கள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு சப்பைகட்டு காரணங்களை சொல்லி தொடர்ச்சியாக அனுமதி மறுக்கும் அதிமுக அரசும், காவல்துறையும் இந்த சமூக விரோத கும்பலுக்கு மட்டும் தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வருவதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

வட மாநிலங்களைப் போல் அல்லாமல், மதக்கலவரம் இல்லாத மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க அதிமுக அரசு RSS சமூக விரோதிகளுக்கு துணைபோகிறதா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இன்று Friends of Police என்ற பெயரைப் பயன்படுத்தி இந்த சேவாபாரதி கும்பல் காவல்துறையில் ஊடுருவி மக்களை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. RSS வன்முறை கும்பலிடமிருந்து காவல்துறையை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

சேவாபாரதி அமைப்பும், Friends of Police என்ற நடைமுறையும் தடை செய்யப்பட வேண்டும்.

#BanSewaBharathi

#BanFriendsOfPolice

Vivekanandan Ramadoss..