அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகள் திட்டவட்டமாகத் தெரிகின்றன. அதற்கான ஆதாரங்கள் கீழே தரப்படுகின்றன.

அய்.டி.ஆர்.எப். நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு மாநில அரசுகளிடம், தங்களுக்கு, வரிச் சலுகைக்கான சான்றிதழ் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது. அதற்கு ‘படிவம் 1023’ என்று பெயர். அதில், இந்தியாவில் கீழ்க்கண்ட 9 முக்கிய நிறு வனங்கள், இந்தியாவில் தங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விகார் பாரதி (பீகார்)

சுவாமி விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம் (தமிழ்நாடு)

சேவா பாரதி (டெல்லி)

ஜனசேவா வித்யா கேந்திரா (கருநாடகம்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (ம.பி.)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (குஜராத்)

வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (நாகர் ஹவேலி)

கிரிவாரி வனவாசி சேவா டிரஸ்ட் (உ.பி.)

ஜி. தேஷ்பாண்டே வனவாசி வஸ்திகிரா (மகாராஷ்டிரா)

  • மேற்குறிப்பிட்ட 9 நிறுவனங்களுமே சங் பரிவார் அமைப்புகள்தான். இதை ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இணையத்தளங்களிலே காண முடியும். உதாரணமாக விகாஸ் பாரதி, சங் நீரூற்றிலிருந்து கிளம்பிய நீரோட்டம் என்றும், விவேகானந்தா கிராம வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் விசுவ இந்து பரிஷத்தின் தோழமை அமைப்பு என்றும், ஆர்.எஸ்.எஸ். இணைய தளங்களில் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்த அமைப்புகளின் கீழ் – 67 துணை அமைப்புகள் இந்தியாவில் செயல்படுவதாகவும், அய்.டி.ஆர்.எப்., அறிவித்திருக்கிறது. ஆக மொத்த முள்ள 75 நிறுவனங்களில், 60 நிறுவனங்கள் சங் பரிவார்களோடு தொடர்புள்ள நிறுவனங்களாகும்.

அந்த நிறுவனங்களில் பதிவாகியுள்ள அய்.டி.ஆர்.எப். நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நிகராக இந்து சேவக் சங் (எச்.எஸ்.எஸ்.) என்ற அமைப்பை அமெரிக்காவில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்கா வில் நடத்தி வருகிறார்கள். பீஷ்ம அக்னி ஹோத்ரி, ஜெதீந்தர் குமார், ராம்ஜெஹானி, வினோத் பிரகாஷ் ஆகிய ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள்தான் அமெரிக்காவில் அய்.டி.ஆர்.எப். நிறுவனர்கள். இவர்கள் அமெரிக்காவின் ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களாகவும் செயல்படு கிறார்கள். அய்.டி.ஆர்.எப்.பின் பொதுச் செயலாளராக இருக்கம் ஷியாம் கோகல் காந்தி என்பவர் சான்பிரான்சிஸ்கோவில் – எச்.எஸ்.எஸ். பொறுப்பாளர். அய்.டி.ஆர்.எப்.பின் ஆலோசகராக இந்தியாவில் செயல்படுபவர் ஷியாம் பாரன்டே எனும் பார்ப்பனர். இவர்தான், வெளிநாடுகளில் சங் பரிவார் நடவடிக்கைகளுக்கான அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ்.சின் ‘அப்சர்வர்’ பத்திரிகையில் இது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வாழ் பார்ப்பனர்கள் 1980களிலிருந்து – ‘இந்துத்துவா’வைத் தீவிரப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர். இந்தியாவிலிருந்து 1990களில் – அமெரிக்காவுக்கு குடியேறிய ஏராளமான பார்ப்பனர்கள், இதில் தீவிரம் காட்டினர். குறிப்பாக, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, வடக்கு-கிழக்கு பகுதிகளிலும், தெற்குப் பகுதி மாநிலங்களான புளோரிடா, டெக்சாஸ் மாநிலங்களிலும், இந்துத்துவா அமைப்புகள் வலிமையாக கால் பதித்தன. இந்த இந்துத்துவா அமைப்புகள், இந்தியாவில் சங் பரிவார்களுக்குத் துணை நிற்பதோடு அய்.டி.ஆர்.எப். வழியாக, பெருமளவு நன்கொடைகளைத் திரட்டித் தந்து வருகின்றன.

மத வேறுபாடு இல்லாமல் இந்தியர்களின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய இந்திய வளர்ச்சி (எய்டு) அமைப்பு, குழந்தைகள் மறுவாழ்வு (கிரஸ்), இந்திய வளர்ச்சிக் கழகம் (அய்.டி.எல்.) போன்ற பல பொதுவான தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டாலும், அய்.டி.ஆர்.எப்., இவைகளை அங்கீகரிப்பது இல்லை. சங் பரிவார் களுடன் தொடர்புடைய அமைப்புகளை மட்டுமே சேவை நிறுவனங்களாக அது அங்கீகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிகவும் , இந்திய முஸ்லிம்கள், சர்வதேச முஸ்லிம் பயங்கரவாதி களுடன் தொடர்பு கொண்டிப்பதாகவும், குறும் படங்களைத் தயாரித்து, திரையிட்டு நிதி திரட்டும் வேலைகளை அமெரிக்க ஆர்.எஸ்.எஸ்.சான எச்.எஸ்.எஸ்.சும், அய்.டி.ஆர்.எப்.பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

நிதி ஒதுக்கீடு : எதற்கு?

‘வளர்ச்சி’, ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் இந்தியாவுக்கு அய்.டி.ஆர்.எப். அனுப்பிய தொகையில் பெரும் பகுதி, சங் பரிவார்களின் திட்டங்களை அமல்படுத்துவதற்கும் – மதப் பகைமையை வளர்ப்பதற்குமே பயன்பட்டிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

1994 முதல் 2000 வரை அய்.டி.ஆர்.எப். இந்தியாவுக்கு அனுப்பிய தொகையில் 75 சதவீதம் (3.2 மில்லியன் டாலர்), ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பு களுக்கே அனுப்பப்பட்டுள்ளது. எந்த ஒரு மைனாரிட்டி அமைப்புகளுக்கும் உதவிடவில்லை. அனுப்பிய தொகையில் 70 சதவீதம் – ஆதிவாசிகளை, இந்து மதத்துக்கு மாற்றவும், அதற்குத் தயார் செய்வதற்கான கல்வி, விடுதிகளை நடத்தவுமே செலவிடப்பட்டு இருக்கிறது. 8 சதவீதம் மருத்து வத்துக்கும், 15 சதவீதம் புனர்வாழ்வு திட்டங் களுக்கும், 4 சதவீதம் கிராம வளர்ச்சிக்கும் செல விடப்பட்டு இருக்கிறது. (ஆதாரம்: அய்.டி.ஆர்.எப். – ஆண்டறிக்கை – இணையதளத்திலிருந்து) ‘புனர் வாழ்வுப்பணி’ என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகைக்கூட – மத அடிப்படையிலேயே செலவிடப் பட்டிருக்கிறது. குஜராத் பூகம்பத்தின்போது – புனர் வாழ்வு நிதியிலிருந்து செலவிட்ட தொகையை, பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு மட்டுமே ஒதுக்கினார்கள். இதேபோல் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட வங்க தேச இந்துக்கள், ராணுவம் மற்றும் போராளிகள் தாக்குதலுக் குள்ளான காஷ்மீர் இந்துக்கள் என்று இந்துக்களுக்கு மட்டுமே, இந்நிறுவனம் உதவிகளைச் செய்துள்ளது. இவைகளில் பாதிக்கப்பட்டவர்கள் கிறித்தவர், முஸ்லிம்கள் இருந்தாலும்கூட ‘நிவாரண உதவிகள்’ மதத்தின் அடிப்படையிலேயே செய்யப்பட்டன.

குஜராத் பூகம்பத்தின்போது ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகள், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் பகுதியைப் புறக்கணித்தன என்று குல்தீப் நய்யார் எழுதினார். (பைனான்சியல் எக்ஸ்பிரஸ், பிப்.21, 2001) இந்து அல்லாத தொண்டு நிறுவனங்கள், நிவாரணப் பணியில் ஈடுபட வந்தபோது, சங் பரிவார் அமைப்புகள் அவைகளைத் தடுத்து நிறுத்திவிட்டன. (கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், ஜன.31, 2001)

ஆதிவாசிகள் – மதமாற்றம்

இந்தியாவின் பழங்குடி மக்களை ஆதிவாசிகள் என்ற பெயரில் தான் அழைப்பது வழக்கம்; ஆனால், இந்தியாவின் பூர்வீகக் குடிகள் ஆரியர்கள்தான் என்று வரலாற்றைப் புரட்ட விரும்பும் ‘சங் பரிவாரங்கள்’ இவர்களை ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிகள் என்று அழைப்பதில்லை. மாறாக ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறார்கள். பழங்குடியினரான ஆதிவாசிகள், இயற்கையை வழிபடக் கூடியவர்கள். அவர்கள் இந்துக்கள் அல்ல. இந்து சாதி அமைப்பால் கடந்த நூற்றாண்டில் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் மீது மதங்கள் திணிக்கப்பட்டன. பலர் கிறிஸ்தவர்களானார்கள். அண்மைக்காலமாக, இந்த மக்களை ‘இந்துக்களாக’ மாற்றும் முயற்சிகளில் சங் பரிவார் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக பழங்குடியினருக்கான கல்வித் திட்டங்களையும், நல் வாழ்வுத் திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இதற்கான பெரும் நிதி அய்.டி.ஆர்.எப். போன்ற அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது.

பழங்குடியினரை இந்து மதமாற்றம் செய்வதற்கே – அமெரிக்காவின் பணம் அய்.டி.ஆர்.எப். வழியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ என்ற அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதாக அய்.டி.ஆர்.எப். ஒப்புக் கொண்டுள்ளதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம்.“கிறிஸ்தவர்களாக்கப்பட்ட – வனவாசிகளை இந்த மதத்துக்கு மாற்றுவதற்காகவே வனவாசி கல்யாண் ஆஸ்ரமம் 1950களில் தோற்றுவிக்கப் பட்டது. அந்த வழியில் பழங்குடியினரின் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதில், எங்கள் அமைப்பு வெற்றிகளைக் குவித்து வருகிறது” – என்று ஆர்.எஸ்.எஸ். வெளியீடே எழுதியிருக்கிறது. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றி, தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வந்து, சமூக விரோத, தேச விரோதிகளிடமிருந்து, அவர்களைக் காப்பாற்றி யுள்ளதாக, ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமத்துக்கு’ – அய்.டி.ஆர்.எப். நிறுவனமே, தனது ஆவணங்களில் புகழாரம் சூட்டி மகிழ்கிறது.

மத பழங்குடியினரை மதம் மாற்றுவதோடு மட்டுமல்ல; அவர்களை ‘இந்துராஷ்டிரம்’ அமை வதற்கான போராளிகளாகப் பயிற்சி தரும் நட வடிக்கைகளையும் மேற்கொள்கிறார்கள்; அதற்கும் அமெரிக்காவின் பணம் வருகிறது; அமெரிக்காவின் ‘அய்.டி.ஆர்.எப்.’பிடமிருந்து நிதி உதவி பெறும் ‘சேவா பாரதி’ – தனது அறிக்கை ஒன்றில் – இதை உறுதிப்படுத்துகிறது. பழங்குடி யினரில் சில ஆண்களையும், பெண்களையும் தேர்வுசெய்து அயோத்தியில் உள்ள ‘ஸ்ரீராமகதா பிராவச்சான்’ என்ற ராமாயணப் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பி சாமியார்களைக் கொண்டு 8 மாத பயிற்சி தந்து, பிறகு அவர்களைக் கிராமங்களுக்கு அனுப்பி பிரச்சாரகர் களாகப் பயன்படுத்துவதாக சேவா பாரதி கூறுகிறது.

இது மட்டுமல்ல, ஆதிவாசிகளை, இந்துக்களாக மதம் மாற்றும் நிகழ்ச்சி, பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்கும் பயன்படுகிறது என்று, சங் பரிவார் தலைவர்களே கூறுகிறார்கள். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் – “ஏகல் வித்யாலயா” என்ற பள்ளிகள், அமெரிக்க நிதி உதவியோடு நடத்தப்படுகின்றன. பழங்குடியினரை இந்துக்களாக மாற்றுவதில் – இந்தப் பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன. இத்தகைய பள்ளிகளைத் தொடங்கியதன் மூலமே, பீகாருக்குள் தாங்கள் வலிமை பெற முடிந்தது என்றும், பீகாரில் தாங்கள் மேற்கொண்ட இந்த முயற்சி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பெரிய வாய்ப்பை உருவாக்கியது என்றும், குஜராத்திலும் அதே சோதனைகளைத் துவங்கி – காங்கிரஸ் கோட்டைகளைத் தகர்ப்போம் என்றும் ஜார்கண்ட் பகுதியைச் சார்ந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் கவுஷிக் பட்டேல் கூறியிருக்கிறார். (ஆதாரம்: ‘தி டெலிகிராப்’ நாளேடு, ஜூலை 4, 2000)

  • ஆக, அமெரிக்கப் பணம், மதமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்து வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மதக் கலவரங்களை உருவாக்கவும்….

அமெரிக்காவிலிருந்து சங் பரிவார்களுக்கு வரும் பணம், இந்தியாவில் மதக் கலவரங்களை நடத்துவதற்கும் பயன்படுகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. சுருக்கம் கருதி, அமெரிக்க நிதி உதவியோடு செயல்படும் அமைப்புகள் தந்துள்ள ஒரு சில ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் சுட்டிக்காட்டலாம். மேற்கு குஜராத்தில் வாகை எனுமிடத்தில் அமெரிக்க உதவியோடு ‘வனவாசி கல்யாண் ஆஸ்ரமம்’ நடத்தும் பள்ளியில் சிவாஜியின் படத்துக்குக் கீழே, “சிவாஜி மட்டும் இல்லாவிட்டால் நாம் அனைவரும் ‘சுன்னத்’ செய்யப்பட்டிருப்போம். சிவாஜி தான், நம்மைக் கட்டாய மதமாற்றத்திலிருந்து காப்பாற்றினார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் முதல் தலைமுறையினரான அந்த மாணவர்கள் இப்போது ‘இந்து’க்களாக மாற்றப்பட்டுள்ளனர். ஒரு இளம் ஆர்.எஸ்.எஸ்.காரர் அந்தப் பள்ளியை நடத்துகிறார். கலவரத்துக்கான வெறியை இதன் மூலம் தூண்டிவிடுகிறார்கள் என்று, பள்ளியை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய வரலாற்று ஆய்வாளர் அஜய்சிங் எழுதியிருக்கிறார். (ஆசியா வீக், மார்ச் 26, 1999)

அமெரிக்க உதவி பெறும் வனவாசி கல்யாண் பரிஷத்தை நடத்தும் சுவாமி அசீமானந்த் என்பவர் – ஒரு ஆதிவாசிக்கூட கிறிஸ்தவராக இருக்கக் கூடாது என்று கூறி, அனைவரையும் இந்துக்களாக்கும் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் – செய்தியாளர் அருண் வர்கீஸ் அம்பலப்படுத்தினார். (‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பிப்.11, 1999)

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள வனவாசி கல்யாண் நிறுவனத்தினரால், கிறிஸ்தவ ஆதிவாசிகள் தாக்கப்படுவதையும், மன உளைச்ச லுக்கு உள்ளாக்கப்பட்டதையும், பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் கண்டன ஊர்வலம் நடத்தியதையும் ஒரு டாக்குமென்டரி படமே அம்பலப்படுத்தியது. (Fishers of Men, Docementary by Ranjankanth and Padmavathy Rao, 1997)

அமெரிக்க வாழ் இந்தியரின் உதவியோடு, இந்தியாவில் கலவரங்களும் வெறுப்புகளும் தூண்டிவிடப்பட்டதற்கு இவை சில உதாரணங்கள். அவர்களின் உதவியோடு நடத்தப்படும் நிறுவனமான வித்யாபாரதி நடத்தும் பள்ளிகளின் பாடத் திட்டங்களில் வரலாறுகள் திருத்தப்பட்டு, இந்து மதவாத உணர்வுகள் தூண்டி விடப்படுவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

நிதி பெறும் நிறுவனங்கள்

அய்.டி.ஆர்.எப். எனும் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் நடத்தும் நிறுவனத்திடமிருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை 184, மாநில வாரியாக நிதி பெறும் நிறுவனங்களின் பெயர்களையும் – நிதியையும், அதன் இணையத் தளங்களில் காண முடிகிறது. இதில் தமிழ்நாட்டில் நிதி உதவி பெறும் நிறுவனங்களையும் பெற்றுள்ள தொகையையும் மட்டும் கீழே தருகிறோம்:

பாரத் கல்சுரல் டிரஸ்ட் – திருச்சி (45,980 டாலர் – மதத்துக்காக)

கிராமகோயில் பூசாரிகள் பேரவை – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

நவஜோதி சாரிட்டி டிரஸ்ட் – சென்னை (2,250 டாலர் – மதத்துக்காக)

சிவாலயா – சென்னை (6,650 டாலர் – மதம்-கல்வி)

ஸ்ரீராம தனுஷ்கோடி அபய ஆஞ்சநேயர் சேவா டிரஸ்ட் (9,500 டாலர் – மதத்துக்காக)

சாமி விவேகானந்தா ரூரல் டெவலப்மென்ட் சொசைட்டி (82,290 டாலர் – மதம்-கல்விக்காக)

ஆயுர்வேதிக் டிரஸ்ட் (கோவை) – (2,410 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

யுனிக் பவுண்டேன் டிரஸ்ட் (திருவண்ணாமலை) – (9,035 டாலர் – மதம்-சமூக நலனுக்காக)

வெர்சல் சாரிட்டபிள் டிரஸ்ட் (சென்னை) – (17,500 டாலர்)

விவேகானந்தா கேந்திரா ராக் மெமோரியல் (கன்னியாகுமரி) – (74,885 டாலர் – மதம் – சமூக கல்விக்காக)

ஆரோவில் – ஆரோவில் லேண்ட் பன்ட் – 301,420 டாலர்

அர்பிந்தோ ஆக்ஷன் – 4,750 டாலர்

ஆர்டார்தோ ஆஸ்ரம் – 2,500 டாலர்

அமெரிக்காவின் அய்.டி.ஆர்.எப். வழங்கியுள்ள மொத்த நிதியில்

82.4 சதவீதம் (2,684,915 டாலர்) சங் பரிவார் அமைப்புகளுக்கும்,

8.1.சதவீதம் (2,64,660 டாலர்) மத நடவடிக்கை களுக்கும்,

2.2 சதவீதம் (70,620 டாலர்) மதச்சார்பற்ற நடவடிக்கைகளுக்கும்,

7.4 (2,49,785 டாலர்) சதவீதம் ‘தெரியாத நடவடிக்கைகளுக்காகவும்’ ஒதுக்கப்பட்டுள்ளது.

மதநடவடிக்கைகள், கல்விப் பணிகள், நிவாரணப் பணிகள் என்றபெயரில் வாங்கப்பட்ட நிதியும், சங் பரிவாரங்களின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Sabarang Communication/SACW/ தளத்திலிருந்து)

வேளாண்மை சட்டம் 2020

பாஜக அரசால் விவசாயிகளின் நலனிற்கு எதிராக இயற்றப்பட்டுள்ள வேளாண்மை திருத்த சட்டத்தின் தமிழாக்கத்திற்கு கீழே சொடுக்கவும்.

https://bit.ly/36dlAuF

தமிழர்களின் சிறப்பை தமதாக்குவதே ஆரியத்தின் முதல் தொழில்

ஆரியர்களின் பூர்வீகமும் இந்து சமவெளி நாகரிகமும் ஆரியருடையதே என ஆய்வு நோக்கில் “Vedic Aryans and the origins of Civilisation”
எழுதிய புத்தகத்தை நண்பர் Krishna Murthy அனுப்பி வைத்தார்.

இதற்கு முன்பே சிந்துசமவெளி நாகரிக ஆர்வலர் மனநல மருத்துவர் செந்தில் குமார் A S. சிந்துசமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றும் அவர்களின் மொழி தமிழே என்றும் (Hindus Civilisation is ancient #TAMIL & Proved) நிருபணம் செய்து தான் செய்த ஆய்வு நூலான READ HINDUSSIAN. The Architect Tamil from C.7000 BC* என்கிற நூலை தந்தார்.

இரண்டையும் நிதானமாக படித்து முடித்தேன்.

இதில் முதல் புத்தகத்தில் ரிக் வேதத்தையும் மகாபாரதத்தையும் சிந்துவெளி முத்திரைகளோடு வலிய திணித்து அது ஆரிய நாகரிகம் என்று சொல்ல முற்ப்படுகிறது.

ஆனால் ஒன்றை இதன் ஆசிரியர்கள் வலிந்து மறைத்து விட்டனர். அதாவது #நாடோடிகூட்டமான ஆரியர்கள் பேசிய மொழிக்கு இன்றுவரை #எழுத்து வடிவம் இல்லை.

அதனால்தான் வேதங்கள் எழுதாக் கிளவி என இன்றுவரை வழங்கப்படுகிறது.

ஆனால் சிந்துவெளி நாகரிக மக்கள் #எழுத்துவடிவம் அறிந்திருந்தனர்.

இந்தப் புத்தகத்தில் இருந்து ஒன்று தெளிவாகிறது. அதாவது ரிக் வேதத்தின் அறம் சார்ந்த சில நல்ல பகுதிகள் சிந்துசமவெளி நாகரிக முத்திரை எழுத்துக்களோடு ஒத்துப்போகிறது.

இது எப்படி சாத்தியம்…?

ஆரியர்களின் இரண்டு முக்கிய குணாதிசயங்கள் தமிழரின் நாகரிகத்தை #மாற்றுவது #ஏமாற்றுவது.

இந்த இவர்களின் அடிப்படை குணாதிசயங்கள்படி சிந்துசமவெளி நாகரிக மக்களின் சிறந்த விழுமியங்களை இவர்கள் அப்படியே எடுத்து தங்களுடையதாக மாற்றி வேதங்களில் உருமாற்றி இருக்கவேண்டும்.

சாம வேதத்தில் கரைகண்டவன் ஓர் அரக்கன் என ஆரிய இராமாயணம் சொல்கிறது. அந்த அரக்கன் #இராவணன் என்பதையும் இங்கு நினைவு கூற வேண்டும்.

இப்படி நடந்திருக்க முடியுமா…என்று வியப்பவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழர்களின் சதிராட்டம் எப்படி படிப்படியாக உருமாறி ஆரிய பரதநாட்டியமாக மாறியது என்பதை பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் பதிவைக் காணுங்கள்:

Palani Deepan ***

வர்ணாசிரம தர்மமும்
சதிராட்டமும்…!

புலம்பலாம்,கதறலாம்,பிதற்றலாம்…செய்யுங்கள்!

’’அய்யோ, உலகம் கெட்டுக் கெடக்கே…, வர்ணாசிரம தர்மம் மீறப்பட்டுடுத்தே! அவா,அவா தொழிலை அவா,அவா செய்தான்னா தானே லோகம் சேஷமா இருக்கும்..! இப்ப இருக்கிற கலிகாலத்திற்கு காரணமே குலத் தொழில் தவறி…எல்லாரும்,எல்லாமுமா இருக்க விருப்பம் காட்றது தான்…!’’

இப்படி ஸொல்றது யாரு! பத்மா மாமி!

ரொம்பச் சரி, மாமி, நீங்க ஏன் நாட்டியமாடுறேள்..!
அது தாசிகுலத்தவாவின் குலதர்மம் அல்லவா? அதை உங்களாவா கபளீகரம் பண்ணிக் கொண்டு இன்னைக்கு திரும்பின திக்கெல்லாம் நாட்டிய பள்ளி நடத்தி கல்லா கட்டறேளே..!

நல்லா நடத்துங்க..அதையெல்லாம் இழுத்துமூடிட்டு உங்களை உச்சவிருத்தி பண்ணி வாழணும்னு நான் கேட்கமாட்டேன்!

ஆனா, அநியாயமா உங்களை நிலை நிறுத்திக்கிறதுக்காக தழிழர் கலையான சதிராட்டத்திற்கு பரத நாட்டியம் என்று பெயர் மாற்றி ’பரதமுனி’ என்ற ஒரு கற்பனை சிருஷ்டியை சிருஷ்டித்து,அவர் தான் பரதக்கலையை உருவாக்கியவர் என்கிறீர்களே! யோகிகளின் குலத்தொழில் அப்பவே மாறிடுத்தா?

’சதிர்’ எப்படி பரதமானது என்ற சதியைச் சொல்லவா?
ஒதுங்கறதுக்கு ஒரமாக இடம் வேணும்னு பரிதாபமாக கேட்பீங்க, இடம் கிடைத்ததும்,மடத்தையே முழுசா வளைத்து போட்டுட்டு..மடத்தின் உரிமையாளனையே தெருவில் இறக்கிவிட்ருவீங்க…இது தான் சதிர் விவகாரத்துல நடந்தது!

பல நூற்றாண்டுகளாக தேவதாசிகுலத்தவங்க தான் சதிராட்டக் கலையை வளர்த்து நடனமாடி சிறப்பித்து வந்தாங்க..! நம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் தொடங்கி சமீபத்தில் முனைவர் எஸ்.சாந்தினிபீ எழுதியுள்ள ’கல்வெட்டுகளில் தேவதாசி’ வரை எத்தனையோ ஆதார நூல்கள் அன்றைய தேவதாசிகளின் உயர்ந்த,மரியாதைக்குரிய, சமூக அந்தஸ்த்தை பறைசாற்ற உள்ளன!

1930 களின் மத்தியில் பிராமணப்பெண்ணான ருக்குமணிதேவி, மயிலையில் இருந்த கெளரி அம்மாளிடமும்,பந்தாநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,கணபதி முதலியார் ஆகியோரிடமிருந்தும் சதிராட்டம் கற்றார்! முதலில் கல்கி போன்றவர்கள், ’’நம்மாத்து பொண்ணுங்க சதிராட்டம் கத்துகிடறதா…அது தாசிகளின் கலையில்லையோ.’’என்று பொங்கி எழுந்தனர்.

ஆனால்,காலப்போக்கில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட நிலையில் தாசிகள் ஆடிய நாட்டியக் கலையை பாதுகாக்க அரசாங்கம் முன்வராத நிலையில்,இந்தக் கலையை கற்றுக் கொண்ட பிராமணப் பொண்ணுங்க தங்களுக்கு இதில் ஒரு சிறப்பான எதிர்காலம் உண்டு என்று கணித்தார்கள்!

அவர்களுக்குத் தான் அகில இந்திய அளவில் அரசியல் சமூக ‘லாபி’ ஒன்று எப்போதும் உண்டு தானே! தான் கற்ற சதிராட்டத்திற்கு ’பரதம்’ என்று பெயரிட்டு அதை டெல்லியில் அரங்கேற்றினார் ருக்குமணி அருண்டேல்!

அந்த நிகழ்விற்குச் சென்ற நாட்டியமேதையும்,தேவதாசி வம்சத்தின் வழிவந்தவருமான பாலசரஸ்வதியம்மா அந்த மேடையில் ஏறி உடனே அதை கண்டித்தார்! ’’இது பாரம்பரியமாக நாங்கள் வளர்த்தெடுத்த சதிராட்டம்! இதை பரதம் என்று அழைப்பது தவறு’’ என்றார்!

ஆனால்,ருக்குமணி அருண்டேல் பிடிவாதமாக அந்த சொல்லையே பயன்படுத்தியதோடு, ’’தேவதாசிகளின் சதிராட்டத்தில் வரும் சிருங்கார ரசம் ஆபாசமானது. நான் அதை புனிதப்படுத்தி உள்ளேன்’’ என்றார்.

உண்மை என்னவென்றால் சிருங்கார ரசம் என்பது தான் நாட்டியக் கலையின் மிக உன்னத கலைவெளிப்பாடு! முதலில் அது பிராமணப் பெண்ணான ருக்குமணிக்கு சரியாக கைகூடவில்லை! ஆகவே, ‘’சீச்சி,அந்தப் பழம் புளிக்கும்’’ என்று பழித்தார்! அத்துடன் தமிழ் நாட்டில் எந்த சபாவிலும் பாலசரஸ்வதியம்மாள் போன்றவர்களை போதிய வாய்ப்பில்லாமல் ஒதுக்கவும் செய்தனர்!

பாலசரஸ்வதியம்மாவின் நாட்டியம் உலகின் பல நாடுகளில் அரங்கேறியது! உலகின் பிரபல பத்திரிகைகள் பாலசரஸ்வதி நாட்டியத்தை வியந்து எழுதியுள்ளன! பிரபல இயக்குனர் சத்தியஜித்ரே பாலசரஸ்வதி குறித்து டாக்குமெண்டரி எடுத்துள்ளார்! அவரது நாட்டியத்தில் உள்ள நளினம் இன்னொருவரிடம் பார்க்கவே முடியாத சிறப்பு வாய்ந்தது என்று அந்த காலகட்டத்தில் அனைவராலும் புகழப்பட்ட பாலசரஸ்வதி காலபோக்கில் காணமலாக்கப்பட்டார்!

அதே போல பத்மாவின் சமகாலத்தவரான நாட்டிய உலகின் அதிசயமாகப் பார்க்கப்பட்டவரான ஸ்வர்ணமுகியைப்( நடிகர் சிலம்பரசனின் பெரியம்மா) போல 108 கரணங்களையும் ஒரே நேரத்தில் ஆடமுடிந்த இன்னொரு நாட்டிய தாரகையை உலகம் இன்றுவரை பார்க்கவில்லை! உடம்பில் எலும்பு என்ற ஒன்று இருக்கிறதா..? என்று வியக்கும் அளவுக்கு உடம்பை வில்லாக வளைப்பதில் வித்தகர்! உலகம் எங்கும் வலம் வந்து புகழ் கொடி நாட்டிக் கொண்டிருந்தவரான ஸ்வர்ணமுகியை ஓரம்கட்ட பத்மா செய்த அரசியலைச் சொல்ல இங்கு பக்கம் போதாது!

என்னுடைய பதினைந்து வயதில் சென்னை பல்கலைக் கழக மண்டபத்தில் நான் ஸ்வர்ணமுகியின் நாட்டியத்தைப் பார்த்து மெய்மறந்து விக்கித்து போனேன்! அதற்கு பிறகு பத்மாவின் நடனத்தை தொழில் முறையில் போட்டோ ஜர்னலிஸ்டாக பார்த்து, பலமுறை படம் பிடித்துள்ளேன்.

ஸ்வர்ணமுகியின் நளினத்தையும்,வேகத்தையும், பாவங்களையும் பாதியளவு கூட பத்மாவிடம் பார்க்கமுடியவில்லை! இந்த அனுபவம் என்னைப் போல ஸ்வர்ணமுகியின் நாட்டியத்தை பார்த்த யாருக்குமே இருக்கும்!

பாலசரஸ்வதி,ஸ்வர்ணமுகி போன்றவர்களின் நடனம் உன்னதமாக இருந்ததற்கு அவர்களின் மரபணுவிலேயே அந்தக் கலை கலந்து இருந்ததும், நான்கு வயத்திலிருந்து காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஆடி,ஆடி அதைத் தவிர எதுவும் தெரியாதவர்களாக அவர்கள் வளர்க்கப்பட்டதும் கூட காரணமாயிருக்கலாம்!

அப்படிப்பட்டவர்களையும்,அவர்களின் மரபையும் சூழ்ச்சியால் ஒழித்துக் கட்டிவிட்டுத் தான், பத்மா மாமி இன்று வர்ணாசிரம தர்மம் பற்றி நமக்கு கிளாஷ் எடுக்குறாங்க..!

பேராசையின் பெருவுருவாக முதன்முதலாக வர்ணாசிரம தர்மத்தை முற்றாக கைவிட்டவர்களே பிராமணர்கள் தான்! பொருளாதார பலன்களுக்காக எத்தனையோ பேரின் குலத்தொழிலை கொன்றொழித்ததே நீங்கள் தான்!

ராணவத் தளபதி தொடங்கி நகை வியாபாரம் வரையிலும் எந்த பதவியில் அல்லது தொழிலில் இன்று பிராமணன் இல்லை! எல்லா இடங்களிலும் இடத்தை கொடுத்தால் மடத்தை அபகரித்த கதை தானே!

முன் நாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்!
இந்நாளில் பொய்மை பார்ப்பார்- இவர்
ஏது செய்தும் காசுபெற பார்ப்பார்..!
என்று பார்ப்பன குலத்தில் விதிவிலக்கான மிகச்சிலரில் ஒருவனான எங்கள் பாரதியே பாடியுள்ளானே!

காலந்தோறும் அரசியல் அதிகாரங்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வரலாறு நெடுகிலும் நீங்கள் ஆடிய,இன்னும் ஆடிக் கொண்டிருக்கும் ’சதி’ராட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

ஆனால்,ஒன்றை உறுதியாகச் சொல்வேன்! உங்களைப் போன்றவர்கள் இன்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களை பயன்படுத்தி பல அரசியல் ஆதாயங்களை அடைந்து கொள்ளலாமே ஒழிய, ஒருபோதும் புதையுண்டு போன வர்ணாசிரமத்தை மீட்டெடுக்க முடியாது!

சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்.

——பதிவர்: பழனி தீபன்

அச்சம் அகற்றிய அண்ணல் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார்

சுயமரியாதை இயக்கத் தலைவர். சமூக சீர்திருத்தவாதி. அச்சம் அறியா அடலேறு. உண்மைக்கு தோழன் பொய்மைக்கு எதிரி.மொழிக்கும் நாட்டிற்கும் பிறந்த சமுதாயத்திற்கும் ஊருக்கும் உலகுக்கும் உழைத்த உத்தமர் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார் அவர்களின் 128வது பிறந்தநாள் புகழ் வணக்கம்!

அன்றைய மதுரை மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலகுண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டியில் 15/09/1893 ஆண்டு திரு.ஊ.பு.அ. அய்யநாடார் திருமதி சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

பாண்டியனார் தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டில் வந்து தங்கியிருந்து கற்றுக்கொடுத்த மதுரை சின்னசாமி நாயுடுவிடம் பெற்றார். பின்னர் மதுரையில் உள்ள ஐக்கிய கிறித்துவ உயர்நிலைப் பள்ளியிலும் (Union Christian High School, Madurai) விருதுநகர் சத்திரிய வித்தியாலாவிலும் பயின்று தன்னுடைய பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.

சென்னை கிறித்துவ கல்லூரியில் (Madras Christian College) கலை இணையர் (Fellow of Arts) கல்வியைப் பெறச் சேர்ந்தார். பின்னர் குடும்பப் பொறுப்பின் காரணமாக அக்கல்வியை இடையிலேயே கைவிட்டார்.

இளம் வயதில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக பள்ளிக்கூடத்தில் கால்பந்து அணி கேப்டனாக டென்னிஸ் வீரராக உடல் உறுதி மிக்கவராக சிறந்து விளங்கியவர் பாண்டியனார்.

தனது 20 வயதில் விருதுநகரைச் சேர்ந்த திருமதி பாலம்மாள் அவர்களை 1913 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தனது 28வது வயதில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1921 ஆம் ஆண்டு முதல் 1936 வரை நடைபெற்ற 4 சட்டமன்றங்களில் தொடர்ந்து நியமன உறுப்பினராக(MLC) பணியாற்றினார்.

1921 ஆண்டு முதல் 1930 வரை நடைபெற்ற ப‌.சுப்புராயன் அமைச்சரவை காலத்தில் அரசு கொறடாவாக பதவியில் இருந்தார்

1928 ஆம் ஆண்டு முதல் 1930 ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பொறுப்பில் இருந்தார்.

1932ஆம் ஆண்டும் 1943முதல்1947ஆண்டுவரை நான்கு ஆண்டுகள் மதுரை மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பொறுப்பில் இருந்தார். இரண்டு மாவட்டங்களுக்கு ஆட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

நாடார் சமுதாயத்தின் முடிசூடா மன்னனாக சௌந்தரபாண்டியன் இருந்தபோதும் மாற்று சமுதாயத்தினர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்தார்

1928ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற ஆதிதிராவிடர்களின் முதல் மாநாட்டில் சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டு மாநாட்டை நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் பொருள் உதவியும் செய்த கொடுத்தார்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்று இந்தியாவை போற்றக் கூடிய அளவிற்கு அந்த மாநாட்டை நடத்தி காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தை 1926ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் அவர்கள் தோற்றுவித்தார் ஆனால் சுயமரியாதை இயக்கத்திற்கு தான் தலைவராக கமல் அனைத்து சமுதாயத்திற்கும் பாடுபடுவர் கூடிய உன்னதமானர் சௌந்தர பாண்டியனார் அவர்களை தலைவராகவும் அவருக்கு பக்கபலமாக தான் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த நிகழ்வின் மூலம் சௌந்தரபாண்டியனாருடைய ஆளுமையை நாம் தெரிந்து கொள்ளலாம்

16 03 1930 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள தலைச்சேரியில் நடைபெற்ற தீயர் நாடார் பில்லர் மாநாட்டிற்கு சௌந்தர பாண்டியனார் தலைமையேற்றார். அங்கே தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்களை பள்ளியில் சேர்க்க மாட்டோம் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஆதிக்க ஜாதியினர் தடுத்து நிறுத்தியபோது தாழ்த்தப்பட்ட மக்களின் பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் பேருந்துகளில் செல்ல அனுமதிக்கவில்லை என்றால் பேருந்துகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அரசாணை பிறப்பித்து சமூக நீதியை நிலைநாட்டினார்.

1918 ஆம் ஆண்டு கமுதியில் ஏற்பட்ட நாடார் மறவர் மோதல் காரணமாக இரு தரப்பினரிடமும் தண்டப் படையை அரசு உருவாக்கி அதற்கான செலவை தண்ட வழி என்றும் திமிர் வரி என்றும் வசூலித்து வந்தது.

4/08/1921 ஆம் தேதி சட்டசபையில் இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாடார் மறவர்கள் ஒற்றுமையாக இருப்பர் என்றும் எடுத்துக் கூறி இந்த வரியை முழுமையாக ஒழித்துக்கட்டியர் சௌந்தரபாண்டியனார்.

1925 ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே அவருக்கு முன்பே உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என யாரும் இல்லை மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான் என சமூக நீதியை நிலைநாட்டிட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சௌந்தர பாண்டியனார்.

நீதிக் கட்சியில் அங்கம் வகித்த சௌந்தரபாண்டியனாரின் செயல்பாடுகளைக் கொண்டு நாடார் சமுதாய மக்கள் மிகப்பெரிய அளவிலே நீதிக்கட்சியை ஆதரித்தார்கள் அந்த காலகட்டத்தில் நீதிக்கட்சி நாடார் கட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாடார்கள் அதிகளவில் அந்த கட்சியில் இருந்தார்கள்.

சுயமரியாதை மாநாடுகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு சமையல் செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது இதன் காரண கர்த்தா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள்.

1939 ஆண்டு மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில் செயல்பட்ட சென்னை மாகாண அரசு தமிழ்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்க முயற்சி செய்தது இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட பெரியார் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நாங்கள் சிறைக்குச் சென்றாலும் தமிழர் தளபதி சௌந்தர பாண்டியனார் இருக்கிறார் அவர் இருக்கும் வரை இந்தி தமிழகத்தில் நுழைய முடியாது அவரது தலைமையில் போராட்டம் தொடரும் என அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்தார்.

பெண்ணுரிமை,விதவை மறுமணம், பெண்களுக்கு ஓட்டுரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, போன்ற செயல்பாடுகளில் முன்னணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இதுகுறித்து பலமுறை பேசி உள்ளார்.

ஆணும் பெண்ணும் சரிசமம் ஆணுக்கு உள்ள அத்தனை வாய்ப்புகளும் சுதந்திரமும் உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் தான் நாடு உண்மையான சுதந்திரத்தை எட்ட முடியும் என்று உறுதியாக இருந்தவர்.

பெண்களுக்கு அதற்கான இருக்கிற ஒரே ஆயுதம் கல்விதான் ஆகவே அனைத்து பெண்களும் கல்வியில் சிறந்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற உதவிகள் செய்தவர் பெண்ணுரிமை போற்றிய விவேகானந்தர் பாரதி பாரதிதாசன் கலைவாணர் ஜிடி நாயுடு போன்றோர் மீது மிகுந்த மதிப்பும் கொண்டிருந்தவர்.

நாடார் சமுதாயத்தின் மிக முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் நாடார் மகாஜன சங்க பல மாநாடுகளை கலந்து கொண்டவர் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.

நாடார் வங்கி எனும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் உருவாக காரணமாக இருந்தவர் அதன் இயக்குனராகவும் செயல் பட்டவர். நாடார் மகாஜன சங்கம் மூலம் கல்லூரிகள் உருவாக ஊன்றுகோலாக இருந்தவர்.

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழை எளிய மக்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் தன்னிடம் வேலை செய்பவர்கள் முதலாளி என்று கூறினால் நாம் எல்லாம் ஒன்று தான் அண்ணன் என்று மட்டும் கூறவார். தாழ்த்தப்பட்ட மக்கள் தோலில் போட்டிருக்கும் துண்டை இடுப்பில் கட்டுவதும், காலில் அணிந்திருக்கும் செருப்பை கழட்டி கொண்டு மரியாதை கொடுப்பதையும் கடுமையாக எதிர்த்தார்.

அரசியலில் மட்டுமல்ல தொழிலிலும் விவசாயத்திலும் மிகப்பெரிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சர்க்கரை தட்டுப்பாடு மக்கள் அவதியுற்றனர். அந்த காலகட்டத்தில் மதுரைக்கும் கொடைக்கானல் செல்லும் சாலைக்கு இடையில் பாண்டியராஜபுரம் எனும் ஊரில் இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய சக்கரையில் ஒன்றை தனது நண்பர் பி டி ராஜன் அவர்களின் இணைந்து உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார்.பாண்டியராஜபுரம் என்ற ஊரின் பெயர் இவரது பெயரிலும் இவரது நண்பரின் பெயரிலும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிவீரன்பட்டி யில் பலருக்கும் பயன்படும் வகையில் காப்பிடம் தொழிற்சாலையை கூட்டுறவு முறையில் தோற்றுவித்தார் 2000 தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலையாக அது இன்று வளர்ந்து நிற்கிறது.

காபி போர்டு தலைவராக 1941 இல் இருந்து பொறுப்பேற்று பல சாதனைகளை நிகழ்த்தியவர் ஆரம்ப நாட்களில் இடைத் தரகர் மூலம் ஏற்பட்டு வந்த காபி வியாபாரம் காபி போர்டு உருவாக்கப்பட்ட பின் நேரடியாக விற்பனை செய்ய முடிந்ததில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கச் செய்தார். இதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார் ஏழை மாணவர்களுக்கு அதன் மூலம் உதவித்தொகை வழங்கிட செய்தார்.

விவசாயத்தில் சாதனை கொடிமுந்திரி ஆகாது என்ற விவசாயிகள் ஆகும் எனக் கூறிவிட்டு இடத்தில்தானே பயிரிட்டு கேகே நாயர் என்கின்ற விவசாயநிபுணர் முன்னிலையில் சாதனை நிகழ்த்தி காட்டியவர்.கறம்பு நிலத்தில் கரும்பு பயிரிட்டு அதிக உற்பத்தி எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி அரசின் புருவம் உயர வைத்தவர்.

காடுகளை கழனி ஆக்கி கட்டாந்தரைகளை பூந்தோட்டம் ஆக்கி குகைகளையும் மரங்களையும் பல தோட்டங்கள் ஆக்கியவர் அதற்கு அவர் பயன்படுத்திய ஒரே விஷயம் கடின உழைப்பு அயராத உழைப்பு அறிவுபூர்வமான உழைப்பு,உழைப்பை களிப்போடு செய்தவர் வேளாண்மை என்ற சொல்லுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டாக்கி தந்தவர்.

வயல்,காடு,மலை காடு என்று பலவகை தன்மை உடைய நிலங்களில் அவர் பண்ணைகள் அமைந்திருந்தன காஃபி, ஏலம்,மிளகு, பலா, எலுமிச்சை, வாழை, கரும்பு, திராட்சை ஆரஞ்சு நெல் தென்னை முதலான விவசாய பண்ணைகள் அவரிடம் இருந்தது தன் வீட்டில் பின்புறம் அமைந்திருந்த தோட்டத்தில் சாத்துக்குடி ஆரஞ்சு பழம் விளைவித்தார் வீட்டுத் தோட்டத்தில் இவைகளை பயிரிட்டிருந்தது ஒரு சாதனை.

தனது நேரடி பார்வையில் 500 ஏக்கர் நன்செய் கரும்பு பழத்தோட்டங்களை பயிரிட்டு இருந்தார். தமிழகத்தில் மட்டும் இல்லாமல் மைசூர் மாநிலத்திலும் இவருக்கு 2300 பெரிய பண்ணை இருந்தது காபி ஏலக்காய் முதலான பயிர்களை பயிரிட்டு வந்தார்.

இயற்கை உரம் என்கின்ற தொன்மையான முறைகளையும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதில் நவீனமான பல முறையிலும் பயன்படுத்தி ஒரு விவசாயப் புரட்சியை நிகழ்த்தி காட்டினார்.

1943இல் தென்னிந்திய ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தை நிறுவினார் இதன் மூலம் ஏழைகளை உற்பத்தியாளர்களுக்கு பல நலன்கள் கிடைக்கச் செய்தார்.

முதல் ஐந்தாண்டு திட்டம் இதில் விவசாயத்திற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் தொழிற்சாலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை அரசுக்கு சுட்டிக்காட்டினார்

நம் நாடு விவசாய நாடு இங்கே பசுமை புரட்சியும் தொழிற்புரட்சியும் ஒருங்கிணைந்து நடந்தேற வேண்டும் நமது நாட்டில் வசிப்பவர்கள் 80% கிராமத்தில் விவசாயத்தை நம்பியே வாழ்பவர்கள் அதனால் விவசாயத்திற்கு போதிய முக்கியத்துவம் தர வேண்டும் இல்லாவிட்டால் உணவுப் பொருளுக்கு நாம் வெளி நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எடுத்துரைத்தார்.

இந்தியன் சர்க்கார் ஆயுள் காப்புக் கழகம் நல்ல சேமிப்பு வழக்கத்தை நாட்டில் உண்டாக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தால் 1933 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். சென்னை தலைமை இடமா கொண்டு இது உருவாயிற்று ஒரு கோடி ரூபாய் வரை தொழில் செய்ய உரிமை பெற்றிருந்தது இத்தொழில் நிறுவனம் பெயரை கவனியுங்கள் இந்தியன் சர்க்கார் ஆயுள் காப்புக் கழகம் இந்த பெயர் வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது சர் ராமசாமி முதலியார் மூலம் அரசுக்கு பெயர் விளக்கம் தெரிவிக்கப்பட்டு அப்பெயரே நிலை பெற்றிட இவர் ஆவன செய்தார் மதுரை கிளைக்கு நிர்வாக இயக்குனர் திரு பாண்டியனார் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்நிறுவனம் அரசு இத்தகு ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள் அரசு உருவாக்கிய பிறகு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்னை இந்தியா ஆயுள் காப்பு கழகம் மதுரையை தலைமையகமாக கொண்டு இவரால் தொடங்கப்பட்டது இந்நிறுவனத்தில் பல புதிய திட்டங்களை புகுத்தி சிறந்த பணியாற்றினார்.இதில் சேர்வதற்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை என்று தெளிவுபடுத்தினார் ஏழை எளியவருக்கு பயன்படும் அமைப்பாக இதை வளர்த்தார்.

கல்வியின் காவலர் பாண்டியனார்
பகுத்து உணரும் அறிவு கல்வியால் தான் பெற முடியும் அந்த ஆறாவது அறிவு நாள் தான் மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாக கருதப்படுகின்றார்.

மனித இனத்தின் உயிர்நாடியான கல்வியை மக்களின் விழிப்புணர்ச்சி மூலமே அவர்களை அறிய செய்யலாம் என்று இயக்கங்களும் பல தலைவர்களும் எண்ணினார்கள் அதற்கான பிரச்சாரங்கள் முன்னெடுத்தார்கள் ஆனால் பாண்டியனார் அவர்கள் கல்வி பற்றிய பிரச்சினைகள் பிரச்சார தோடு நின்று விடாமல் அதனை செயல்படுத்தியும் செய்து காட்டியவர்.

1928ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி கழகத் தலைவரான சௌந்தர பாண்டியனார் அவர்களை ஏழாயிரம்பண்ணை நாடார் பெருங்குடி மக்கள் தங்கள் தலைவருக்கு பாராட்டு விழா எடுத்து வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று விரும்பி தங்கள் ஊருக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது பாண்டியன் அவர் கேட்ட கேள்வி ஏழாயிரம் பண்ணையில் பள்ளியில் பள்ளிக் கூடம் இருக்கிறதா என்பதுதான் வந்தவர்கள் சொன்னார்கள் இல்லை என்று அப்படியா பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு நான் வரமாட்டேன் அந்த மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் முதலில் நீங்கள் உங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்குங்கள் பிறகு நான் வருகிறேன் என்று உறுதியாகக் கூறி அந்த பிரமுகர்களின் அழைப்பை நிராகரித்தார்.

வந்தவர்களுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை ஊருக்கு திரும்பி விட்டார்கள் அங்கே நாடார் உறவின்முறை கூட்டம் கூட்டினார்கள் ஏழாயிரம்பண்ணையில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அவர்களின் தீர்மானம் செயல்வடிவம் பெறும் போது அங்கு பள்ளிக்கூடம் கட்ட பாண்டியனார் போதிய ஒத்துழைப்பு கொடுத்தார் ஏழாயிரம் பண்ணையில் எழுந்து நின்றது பள்ளிக்கூடம் பாண்டியனார் நிற்பந்தத்தால்

பிறகு என்ன? மலர்ந்த முகத்துடன் ஏழாயிரம்பண்ணைக்கு வருகை தந்தார் மாவட்ட ஆட்சி மன்றத்தலைவர் அண்ணல் சௌந்தர பாண்டியனார்.

கல்லூரியில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்திற்கு ஒருமுறை பாண்டியனார் சென்றிருந்தார் கூட்டம் கல்லூரணி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. அப்போது ஒருவர் மல்லாங்கிணறு என்ற பக்கத்து ஊரில் நடுநிலைப்பள்ளி உருவாகியிருப்பதாக பாண்டியனின் கவனத்திற்கு ஒரு செய்தி கொண்டு வந்தார்.

உடனே கல்லூரணிகாரர்களை அழைத்து மல்லாங்கிணறு நாடார்கள் நடுநிலைப்பள்ளி நடத்தினால் உங்கள் கல்லூரி மாணவர்கள் கல்லூரிகளில் நடத்த வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சிந்தனையை தூண்டும் வகையில் பேசினார் மேலும் அவர் கொடுத்த ஊக்கம் இன்று கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி என்ற அளவில் கல்வி வளர்ச்சியை அந்த பகுதி மக்களுக்கு அளித்து வருகிறது.

விருதுநகர் எம்.எஸ்.பி.செந்தில் குமார நாடார் கல்லூரி என்ற புகழ் பெற்ற கல்லூரி உருவாக காரணமாக இருந்த வரும் பாண்டியனார் அவர்கள் தான் 1947 இல் அந்த கல்லூரி உருவாகும்போது அதன் செயற்குழு தலைவராக இருந்து கல்லூரி வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் துணை நின்றார்.

ஏழை மாணவர்களுக்காகவும் கல்வி நிலையங்களுக்காகவும் பாண்டியனார் தனது சொந்தப் பணத்தை வாரி வாரி வழங்கியிருக்கிறார் கல்வி உதவி நிதி திரட்ட என்னை அவர் பல ஊர்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நானும் அவருடைய நல்ல நோக்கத்தை பார்த்து தட்டாமல் மகிழ்ச்சியுடன் அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு இருக்கிறேன் என புகழ் பெற்ற திரைப்பட நடிகர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் வியாபாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக திருடர்கள் கூட்டம் செயல்பட்டு வந்தது அந்தத் திருடர்கள் அங்கிருந்து வியாபாரி காப்பாற்ற பல்வேறு நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்றி யவர் பாண்டியனார்.

மதுரையில் உள்ள பழ மார்க்கெட்டில் கொள்ளையர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்த நிலையில் தனது துப்பாக்கியை கொடுத்து கொள்ளையர்களை சுட்டு வீழ்த்தியவர்.

அந்த காலத்தில் புகழ்பெற்ற கொள்ளையன் ஆன செவத்தையன் என்ற கொள்ளைகாரனுன் நேரடியாக மோதி அவனை சுட்டு வீழ்த்திய வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர் பாண்டியனார்.

மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருந்த காரணத்தினால் அவரை தமிழக மக்கள் அச்சம் அகற்றிய அண்ணல் என்று அழைத்தார்கள்.

விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு சட்டமேதை அம்பேத்கர் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்துவந்து பெருமைப்படுத்தினார்.

அண்ணல் என்ற சொல் இந்தியாவில் மூன்று தலைவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களுக்கும் சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கும், அதே காலகட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க மாபெரும் தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

தாய் சொல்லைத் தட்டாத தனயன்
பட்டிவீரன்பட்டி யில் அதிக அளவில் உற்பத்தியான திராட்சை பழத்தைக் கொண்டு ஒயின் தயாரிக்கும் ஆலையை தொடங்கினார் இச்செய்தியை அறிந்த பாண்டியனாரின் தாயார் மகனே குடி குடியை கெடுக்கும் அந்த தொழிலை நாம் செய்யலாமா என்று கேட்ட ஒரே காரணத்தினால் பல லட்சம் மதிப்புள்ள அந்த ஆலையை உடனடியாக இழுத்து மூடினார் பாண்டியனார் அவர்கள்.

அந்த கால கட்டங்களில் இந்தியாவில் ஒரு சில பெரும்பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை சௌந்தர பாண்டியனார் அவர்கள் பயன்படுத்தி வந்தார்.

வேண்டாம் சர் பட்டம்
சமூக சீர்திருத்த காரணங்களாலும் அரசியல் காரணங்களாலும் பிரிட்டிஷாருடன் இணைந்து பணியாற்றினாலும் அந்நிய ஆதிக்கத்தை பாண்டியனார் விரும்பவில்லை தனக்கு இருந்த பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதான சர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்து தன்னுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தினார் தன்னலமற்ற இந்த முடிவால் தங்களுடைய சுயமரியாதையும் விடுதலை உணர்வையும் நாட்டிற்கு புலப்படுத்தினார்.

நட்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.டி ராஜன் அவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
அரசியல் ரீதியாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தனது நண்பர் வீட்டில் அவர்களுடன் கேட்டு தான் முடிவு செய்வார் அதேபோல பேட்டி ராஜன் அவர்களும் இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி போல் சமூகநீதியை காத்திட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்தார்கள்.
இவர்கள் இருவர் பெயரில் பாண்டியராஜபுரம் என்ற ஊர் உருவாக்கப்பட்டது.

சர் பி டி தியாகராயர்,முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம்.கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், பெரியார், சென்னை மேயர் சிவராஜ்,அண்ணா, இந்திய நிதியமைச்சர் ஆர் கே சண்முகம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் நாடக நடிகர் எம் எஸ் சண்முகம் முன்னாள் முதல்வர்கள் பனகல் அரசர், டாக்டர் பா சுப்புராயன், குமாரசாமி ராஜா, காமராஜர், மன்னர் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,இப்படி தமிழகத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே பாண்டியனார் அவர்களின் நெருங்கிய நண்பர்களாக இருந்தது இவருடைய நட்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பாண்டியனார் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக விருதுநகர் பிரதான சாலைக்கு டபிள்யூ பி ஏ சவுந்தரபாண்டியன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

ஆலந்தூர் கோ மோகனரங்கன் என்பவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் நினைவு படிப்பகம் ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.

சௌந்தர பாண்டியனார் அங்காடிதெரு(பாண்டிபஜார்) என்ற பெயரில் சென்னை தியாகராயநகரில் மிகப்பெரிய தெரு உள்ளது. இங்கு உள்ள காவல் நிலையத்திற்கு சௌந்தரபாண்டியன் அங்காடித்தெரு காவல் நிலையம் என்ற பட்டபெயரும் உள்ளது.

சௌந்தர பாண்டியனார் சிலை முதன்முதலில் மதுரை வெள்ளைச்சாமி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.கல்லூரணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அவருடைய திருவுருவச் சிலை இருக்கிறது.முத்து ரமேசு நாடார்

தியாக ராய நகர் பனகல் பூங்கா முகப்பில் சௌந்தர பாண்டியனார் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை உருவாக்கி தந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் 1992ஆம் தேதி திறந்து வைத்து பெருமை சேர்த்தவர் அன்றைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள்.

1994 ஆம் ஆண்டு பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் திருவுருவச் சிலையை முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் திறந்து வைத்துள்ளார். கோபால சமுத்திரத்தில் 84 ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு டபிள்யு.பி.ஏ. சௌந்தரபாண்டியன் பாலம் என்று அன்றைய முதல்வர் மு கருணாநிதி அவர்களால் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சென்னை அயனாவரத்தில் டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பட்டிவீரன்பட்டியில் டபிள்யு.பி.ஏ‌.சௌந்தரபாண்டியன் பெயரில் வணிக வளாகம் நிறுவப்பட்டிருக்கிறது. பட்டிவீரன்பட்டி யில் பிரசித்தி பெற்ற என் எஸ் வி வி மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு நுழைவாயிலுக்கு டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் நுழைவாயில் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பாண்டியனார் அவர்கள் 17 ஆண்டுகள் நீதிக்கட்சியில் முக்கிய பதவிகளில் பொறுப்பேற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போதிலும், ராமநாதபுரம் மதுரை மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பணியாற்றிய போதிலும்,சமுதாய சங்க பொதுச்செயலாளராக இருந்தபோதிலும், விவசாய சங்க தலைவராக இருந்த போதிலும், தொழிற்சங்க தலைவராக இருந்த போதிலும், நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்த போதிலும், சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராகவும் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்த போதிலும்,அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் அது தன்னலமற்ற சமூக விழிப்புணர்வுக்கான தொண்டு மட்டுமே

வாழ்வு குறுகியது பிறருக்காக வாழ்ந்த அனைவரும் வரலாறாக ஆகிறார்கள் ஆனால் பிறருக்காக வாழ்பவர்களே என்றும் இறப்பதில்லை மக்களின் நினைவில் நின்று நிலைத்து வாழ்வார்கள் என்று சொல்லும் வார்த்தைகள் உள்ளிருக்கும் அர்த்தம் சௌந்தரபாண்டியனார் அவர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்

மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்

அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி குளத்தில் மணல் அள்ளியதை தடுத்த நாம் தமிழர் கட்சியின் ஆலங்குளம் சட்டமன்ற சுற்றுசூழல் பாசறை தலைவர் திரு. கிங்ஸ்லி மீதும், அவருடைய குடும்பத்தினர் தாய், தங்கை, பத்துமாத பச்சிளம் குழந்தை மீதும்..

இன்று காலை நாற்பதுக்கும் அதிகமான அதிமுக மணல் கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மூல காரணமான அதிமுகவை சேர்ந்த முன்னாள் கடையம் ஒன்றிய சேர்மன்

கடையம் மாதவரம் பகுதியை சேர்ந்த
பொன்னுதுரை மீதும் தாக்குதல் நடத்திய அதிமுக ரவுடிகள் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்வதுடன் உடனடியாக கைது செய்யவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறோம்..

பாதிக்கப்பட்ட உறவுகளுடன் கைகோர்த்து என்றென்றும் அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி இருக்கும் என்பதை உறுதியுடன் கூறுகிறோம்..

கு. விமல் குணசேகரன்
சுற்றுசூழல் பாசறை செயலாளர்

நாம் தமிழர் கட்சி
ஆலங்குளம்

இந்தியப் பொருளாதாரமும் பசுநேசர்களும்

அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.

அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 ‘தாய் பாட்’ கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 ‘தாய் பாட்’ தான் கிடைக்கும்.

அமெரிக்கா தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 10,000 ரூபாய்க்கு 1,31,00 பங்களாதேஷ் ‘டக்கா’ கிடைத்திருக்கும். இப்போது போனால் 1,13,00 டக்கா தான் கிடைக்கும்.

காரணம், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன?

காமன்மேனாக – எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும்.

2014 ஆம் ஆண்டு (பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு) சமையல் கேஸ் விலை, பெட்ரோல் – டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சினிமா டிக்கெட் விலை, ஹோட்டல்களில் உணவுகளின் விலை, பால் விலை, மின்சாரக் கட்டணம் & இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை என்னவாக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடும் போது, கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது? ஒரு காமன்மேனின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளன தானே? (இதுல மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒரு சிலது மட்டுமே உண்டு).

2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 113 டாலர். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அது குறைந்து 36 டாலர் வரைக்கும் வந்ததாக ஞாபகம். இப்போது 45 டாலர். சில மாதங்களுக்கு முன்பு 10 டாலர், 0 என மைனஸில் கூட வர்த்தகம் ஆனது.

ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது என்ன லாஜிக்? எங்கே போகிறது அந்தப் பணம்? காமன்மேன்களுக்கு ஏன் ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை?

கொரோனா லாக் டவுன் காலத்திலும், அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் போதும் டோல் கேட்டில் சுங்க வரியை உயர்த்தினார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் ?

இதுபற்றியெல்லாம் யாரையும் சிந்திக்க விடாமல், கேள்வி கேட்க விடாமல் தேசபக்தி, மாட்டுக்கறி, எல்லையில் ராணுவ வீரர்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதி, முஸ்லீம்கள் நாய்க்கறி சாப்பிட்டு பாகிஸ்தான் போகணும், இது இந்துக்களின் பூமி, கந்தர் சஷ்டி, ராமர் கோயில், விநாயகர் சதுர்த்தி, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க. அதுக்கு முரட்டு முட்டுக்கொடுக்க முட்டாள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவங்களை நினைச்சா தான் இன்னும் கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. அவங்க கட்சியால் ஒரே ஒரு நல்லது கூட நடக்காமல், காமன்மேன்களில் ஒருவராக அவர்களுக்குமே பாதிப்பு தான் அதிகம். ஆனால், எனக்கு வலிக்கலயேன்னு முட்டு கொடுத்துட்டு இருக்காங்க. வெறுப்பை பரப்பிட்டும் இருக்கானுங்க.

அப்பவும் அவனுங்க முட்டுத்தறாய்ங்க. இதான் ஹைலைட்டே !

அமெரிக்காவோ, தாய்லாந்தோ, வங்கதேசமோ… அப்போ பத்தாயிரம் எடுத்துட்டு போனதுடன் ஒப்பீடு செய்தால் இப்போ வீழ்ச்சி. இது ஒருபுறம் இருக்கட்டும். 10,000 எடுத்துட்டு போறதுல எவ்ளோ சிக்கல் இருக்கு பாருங்க… இவ்வளவு விலைவாசி ஏற்றங்களையும் தாக்குப் பிடித்து, வருவாய் ஈட்டி, அதற்கு தனியா ஜி.எஸ்.டி கட்டி, கஷ்டப்பட்டு 10,000 எடுத்துட்டுப் போனா, அதோட மதிப்பும் வீழ்ந்திருக்கும்! வெந்தப் புண்ணில் வேல் !

பாஜக ஆளும் வரை ஒவ்வொரு ஆண்டும் இது பொருந்தும்.

2014 இல் பாஜக ஆட்சி அமைக்கும் போதும் சரி, 2016 இல் டீமானிடைசேஷன் சமயத்திலும் சரி… மோடியின் பக்தர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். டாலர் மதிப்பு 40 வரும்… பெட்ரோல் டீசல் விலை 50 க்கு கீழ் வரும்… தீவிரவாதிகள் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும்… ப்லா ப்லா ப்லா… ஆனால் என்ன தான் நடந்தது?

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட போதும், பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு வரலாறு காணாத விலையேற்றம், பதான்கோட், புல்வாமா எனத் தீவிரவாத தாக்குதல்கள். (350 கிலோ வெடி பொருட்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே இன்றளவும் மர்மமாக இருக்கிறது), சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்… 20 இந்திய வீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணித்தார்கள். என்ன தான் செய்கிறது இந்தியாவை ஆளும் பாஜக அரசு? யோசிக்கவே மாட்டார்களா? சீனா செய்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருந்தால் எவ்வளவு பொங்கியிருப்பார்கள்? இங்கே நாம் அண்டை வீட்டில் வாழும் இஸ்லாமியர்களைக் கூட விரோதிகளாக கட்டமைத்திருப்பார்களே. ஆனால் சீனா விஷயத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியது ஏன்?

சிந்திப்போம். அறியாமையால் இருப்போருக்கு புரிய வைப்போம். மதமோ, கடவுளோ நம்மைக் காப்பாற்றாது. நம்மை ஆளும் அரசு தான் நம் அனைவரையும் சமமாகப் பாவித்து, நமக்கான நல்லாட்சியைத் தர வேண்டும் !

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

  1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?
  2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது?
  3. பாஜக மீது கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் கொலையும் செய்யப்படுவது ஏன்?
  4. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட…
  5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?
  6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன் அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?
  7. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியதேன்?
  8. பல லட்சம் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லை?
  9. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?
  10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன?
  11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?
  12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?
  13. மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?
  14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?
  15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து ஏன்?
  16. பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் அரசுக்கு மட்டுமே நோக்கம் என்றால் இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்?
  17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?
  18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?
  19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?
  20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?
  21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மயமானது?

இன்னும் பல ஆயிரம் புதிரான கேள்விகளுக்கு விடை தெரியா சாமானியனின் பகிர்வு.

இயற்கை வேளாண்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் திடீர் மரணங்கள் எப்படி ?

நம் நாட்டில் சிறு தானிய உணவு முறைதான் 75% மக்களிடம் இருந்தது.

நதிகள் பாயும் பகுதிகளைத் தவிர நம் நாட்டில் பெரும் பகுதியாக உள்ள வானம் பார்த்த மானாவாரி நிலங்களில் பனை மரம், நாட்டு எருது வளர்ப்பு மற்றும் சிறு தானிய உற்பத்தி ஆகியவையே பொருளாதாரமாக இருந்ததை பலரும் அறிவார்கள்.

IMFL விஷ எரி சாராய விற்பனையின் மூலமாக பனை மரங்களையும், டிராக்டர் இயந்திரங்களின் மூலமாக நாட்டு மாடு வளர்ப்பையும்,அரிசி மற்றும் கோதுமை பரவலாக்கல் மூலம் மானாவாரி விவசாயத்தையே ஒழித்து கூலிக்கு மாரடிக்கும் ஓர் அடிமைக் கூட்டத்தை உருவாக்குவதுதான் ராத்ஸ்சைல்டின் நோக்கம்.

மக்கள் நிலத்தை விட்டு வெளியேறிய உடன் அதை குறைந்த விலையில் வளைத்துப் போட தன் பிரீமேசன் கபட பினாமிகளை வைத்து ஏவுவதும் இதே ராத்ஸ்சைல்டுதான் !

இதை 3 பிரிவுகளாக பிரித்து செய்தார்கள்.

பிரிவு – 1: நெல் ரகங்களை அழித்தல்

இன்டர்நேஷனல் ரைஸ் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் IRRI மூலமாக நம் நாட்டு வித்துகளை பசுமைப் பரட்சி என்ற பெயரில் திருடி தங்கள் ஜோசியல் இஞ்சினியரிங் என்ற சமூக அழிப்பு வேலையை ராத்ஸ்சைல்டு தொடங்கினான்.

உதாரணத்திற்கு இந்த IRRI நம் கோயம்புத்தூர் பகுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கழகம் மூலமாக கொங்கு பகுதியில் பயிரிடப்பட்ட சத்து மிக்க 250 க்கும் மேலான நெல் வகைகளை அபேஸ் செய்தனர்.

இந்த பாரம்பரிய வித்துகளை என்னமோ கோவை வேளாண் பல்கலை கழகமே உருவாக்கியது போல கோ – 1, கோ – 2 , கோ – 3 என்றெல்லாம் புதிய பெயர்கள் வைத்து விவசாயிகளின் அறிவுடமையான இவ்வித்துகளை அன்னியம் ஆக்கி அரசை துணை ஆக்கி திருடினார்கள்.

அடுத்து இவ்வித்துகள் அனைத்தையும் குண்டுமணி அளவு கூட பாக்கி இல்லாமல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் உள்ள IRRI ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

அங்கு ஜப்பான் நாட்டின் குட்டையான சத்து இல்லாத ஜப்போனிகா நெல் வகை உடன் செயற்கை மகரந்தச் சேர்க்கை மூலமாக கலப்பினத்தை உருவாக்கி International Rice IR – 20 என IR வகை எண்களில் நமக்கே விற்பனை செய்வார்கள்.

இதனால் அவர்களுக்கான பயன்கள்:

  1. சர்க்கரை மாவுச் சத்து மட்டுமே கொண்ட IR வெள்ளை அரிசி மூலமாக மூளை இல்லாத உடல் உழைப்பு அடிமைகளை உருவாக்குதல் !
    கூடவே அதிக உற்பத்தி மூலமாக சிறுதானிய தேவையை ஒழித்துக் கட்டுதல்.
  2. குட்டை வித்துகளின் மூலமாக வைக்கோல் உற்பத்தியை குறைத்து நாட்டு மாடு,நாட்டு எருமைகள் போன்றவற்றை அழித்து ஒழித்தல்.
  3. நாட்டு சம்பா கோதுமை சோறு Emmer, சிறு தானியங்களை நம் உணவு முறையில் இருந்து நீக்குவதன் மூலமாக நம்மை நோயாளிகள் ஆக்குதல் !

இதற்கு பெயர்தான் பசுமைப் புரட்சி.

நம் இந்திய பாராளுமன்றத்தில் இந்திய பிரதமரான இந்திரா காந்தியை கூட கேட்காமல் இதில் சத்தம் இல்லாமல் கையெழுத்து இட்டு வந்தவர் பொள்ளாச்சி பிரீமேசன் சி.சுப்ரமணியம். பயிர்கள் மட்டும் அல்ல. கவுண்டர் சமுதாயத்தை கலப்பினம் ஆக்குவேன் என்று சபதம் செய்தது ஈரோடு ஆர்எஸ்எஸ் பிரீமேசன் டாக்டர் எல்.கே. முத்துசாமி.

கோபிச்செட்டிப்பாளையம் பிரீமேசன் லாட்ஜ் நிரந்தரத் தலைவர் ஆர்எஸ்எஸ் டாக்டர். செங்கோட்டையன் ஆகியோரின் குடும்பங்களின் மூலமாக அதை நிறைவேற்ற முயன்றனர்.

இந்த ஐஆர்ஆர்ஐ IRRI கலப்பின மையத்திற்கு பைனான்சியர்கள் யார் தெரியுமா ?

ஃபோர்டு பவுண்டேஷன் மற்றும் ராக்கபெல்லர் பவுண்டேஷன்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://en.m.wikipedia.org/wiki/International_Rice_Research_Institute&ved=2ahUKEwjA_MTCyNLrAhW56XMBHWeGAjgQFjAAegQIDRAC&usg=AOvVaw3SWmVZymNPXMuKrnbP7E5g

தற்போது நம் வித்துகள் நார்வே நாட்டில் பனிக்கட்டி தீவான ஸ்வால்பார்ட் தீவில் நம்மை எல்லாம் கொரோனா போன்ற நோயால் அழித்த பிறகு இலுமினாட்டிகள் வாழ அத்தனையும் பதுக்கி வைத்து உள்ளனர்.

பிரிவு – 2
காமதேனுவும், நாட்டு விலங்கினங்களும் ஒழிப்பு:

பசுமை புரட்சி என்ற பெயரில் இதே போர்டு, ராக்பெல்லர் பவுண்டேஷன்கள் நாட்டு மாடு, நாட்டு எருமை, நாட்டு ஒட்டகம் ஆகியவற்றை தென் அமெரிக்காவுக்கு பத்திரமாக கடத்தி விட்டு, தங்கள் மாட்டுக்கறி தேவைகளுக்காக சீமை மாடு உள்ளிட்ட கலப்பின ஐட்டங்களை நமக்கு கொண்டு வந்து இறக்கினர்.

இதே ஃபோர்டு, ராக்பெல்லர் பவுண்டேஷன்களுக்கு கூஜா தூக்கிய அடிமைதான் வெர்க்கீஸ் குரியன்.
இவனுக்கு பால் அலர்ஜி. ஆனால் மாட்டுக் கறி உண்ணும் சிரியா மலையாள கலப்பின வெர்க்கீஸ் குரியனை வைத்து நம்மை அழிக்கும் திட்டத்தை செயல் படுத்தினர்.

பிரிவு 3:
கற்பக விருட்சமான பனை மரம்:

சீனக் கரும்பு, சீன வெள்ளைச் சீனி, எரி சாராயம் ஆகியவற்றை பரப்ப கும்பகோணம் திருட்டு மேசானியனும், காஞ்சி மட சிஷ்ய கேடியுமான எம்.எஸ். சுவாமிநாதனை வைத்து நிறைவேற்றினர்.

இதை எல்லாம் அப்போது முதன் முதலில் தட்டிக் கேட்டவர்கள் தபோல்கர், டாக்டர் ரிச்சாரியா போன்றோர்களே !

இவர்கள் அனைவரும் அல்ப ஆயுசில் காணாமல் போய் விடுவார்கள் அல்லது வழக்கம் போல் மென்டல் என்று முத்திரை குத்த வைக்கப்படுவார்கள்.

1990 ஆண்டுகளில் பிரீமேசன் சோசியல் இஞ்சினியரிரிங் காரணமாக பல பிரச்சனைகள் வெடித்தது.

இதை முதலில் எதிர்த்து குரல் கொடுத்தவர் நம்மாழ்வார்.

வேளாண் விஞ்ஞானியாக இருந்த நம்மாழ்வார் பெரிய இயக்கமாக வளரத் தொடங்கிய உடன் ஃபோர்டு பவுண்டேஷன் தனது சகோதர இயக்கமான கிரீன் பீஸ் இயக்கம் மூலமாக தூண்டில் விரித்தது. திமுக மாஜி மந்திரி சுப்பலட்சுமி ஜெகதீசன் மூலமாக நம்மாழ்வார் “வானகம்” என்ற அமைப்பின் மூலமாக நம்ப வைக்கப் பட்டார். வானகம் அமைப்பை பலர் நம்மாழ்வாரின் அமைப்பு என நம்பவைத்தனர். நம்மாழ்வாரும் இந்த கயவன்களை வெகுளியாக நம்பினார்.

அப்போதும் முழுமையாக நம்மாழ்வார் தான் நினைத்ததைதான் செய்தார். இதனால் மேசானியர்கள் தலாய்லாமாவின் சிஷ்யன் ஜக்கி வாசுதவனிடம் ஜென் சூனிய தியானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் நம்மாழ்வார்.

ஈஷாவில் ஜக்கி தன் இன்னர் எஞ்சினியரிங் மூலம் நம்மாழ்வார் சூனிய தியான யோக வசியம் செய்யப்பட்டார்.

நம்மாழ்வார் உடன் ஆரம்பத்தில் கூடவே இருந்த இரண்டாம் கட்ட ஆட்களை நம்மாழ்வார் வாயாலேயே துரத்தி வைக்கப்பட்டனர். காரணம் இவர்களை வைத்து எப்படியாவது நம்மாழ்வார் தனது லட்சியத்தை நிறைவேற்ற எண்ணினார்.

உடனே உங்கள் ஆசை என்ன என்று கேட்டு அத்தனை உதவிகளையும் மேற்கொள்வதாக கேட்டனர் ஈஷா ஜக்கி மேசானியர்கள்.

மஞ்சளுக்கு காப்புரிமை பற்றி பேசினார் நம்மாழ்வார். மஞ்சளுக்கு காப்புரிமை வாங்கித் தருகிறோம் என்று கூறவே அதை நிறைவேற்ற நம்மாழ்வார் அமெரிக்கா ஓடினார்.

அன்று முதல் இயற்கை உணவு செயற்கை ஸ்லோ பாய்சன் உணவு ஆனது. காரணம் ஈஷாவின் தலைமை அலுவலுகமே அமெரிக்காவில் உள்ள ராக்பெல்லர் பவுண்டேஷன்தான் !
இதன் உளவு ஏஜென்ட்தான் ஈரோடை பூ்வீகமாக கொண்ட ஈஷா சுவாமி உல்லாசா கவுண்டர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://isha.sadhguru.org/in/en/blog/article/sounds-of-isha-beyond-the-music&ved=2ahUKEwiMqcGtzNLrAhVDgOYKHXToBssQFjAEegQIAxAB&usg=AOvVaw0TdYr5HHukxeGR15Kbyeod

திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன் கவுண்டர் + ஈஷா உல்லாசா கவுண்டரின் கூட்டணிதான் இயற்கை வேளாண்ஞானி நம்மாழ்வார் மரணத்திற்கு காரணம்.

அரசு நம்மாழ்வார் மரண விசாரணைக்கு தயாரா ?

நெல் ஜெயராமன் இதே பாணியில் நம்மாழ்வாரை விட பல மடங்கு வேகமாக முளைத்து வந்தவர்.

நான் நெல் ஜெயராமன் அவர்களிடம் உங்கள் கூட சுற்றி வரும் டெல்லி ஜிப்பாக் காரனை நம்பாதீர்கள் என்று பல முறை எச்சரித்தேன்.இந்த டெல்லி ஜிப்பாக்காரன்தான் நெல் ஜெயராமனுக்கு குழி பறித்தவன். இவரை வைத்து அரசு நிகழ்ச்சி,வங்கி உதவி என்று சிலந்தி வலை விரித்தனர்.

அத்தனையையும் நம்பிய நெல் ஜெயராமனுக்கு இலவச வைத்தியம் என்று கூறி ரத்த டெஸ்ட் எடுத்தனர். இல்லாத கேன்சர் நோயை உருவாக்கி கதையை கோரமாக முடித்தனர்.

தற்போது போர்டு பவுண்டேஷனின் சிங்கம் 1,2,3 ஹீரோ நெட்வொர்க் சம்சுதீன் சூர்யா கவுண்டர்?, ஜோதிகா சதானாஹ் கவுண்டர்? சிவக்குமார், கார்த்தி என ஒட்டு மொத்த குடும்பமும் விவசாயிகளையும், மக்களையும், சமுதாயத்தையும் ஏமாற்ற கவுண்டர் எனும் வேடத்தை தேர்வு செய்து உள்ளனர்.

நான் வீசிய ஒரு ஊசி வெடிக்கு பதில் சொல்ல இயலாமல் தற்போது சிங்கம் 1,2,3 புகழ் மற்றும் காபி டே ஓணர் சித்தார்த் கவுடா தற்கொலை புகழ் அண்ணாமலை VRS எனும் கவுண்டர் எனும் ஓர் இனத்துரோகியை ஏவி உள்ளனர்.

இவர் ஆட்டு மந்தை போஸ், மாட்டு போஸ் என வேஷம் போட்டாலும் இவரது மர்மங்கள் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் மரணத்தை விட மர்மமாகவே உள்ளது.

விரைவில் காபி டே ஓணர் சித்தார்த்தாவின் மர்மமும் கலையும் !

வேலும் மயிலும் சேவலும் நமக்கு உற்ற துணை.
ஓம் முருகா.

தாழம்பூ

தாழம்பூ மறைத்தாலும் மணக்கும் என்பர். தாழை மரம் நீரோடைகளில், ஆறுகளில், கேட்பாரின்றிப் புதராக வளர்ந்து இன்மணம் பரப்பும். இதனை ஆங்கிலத்தில் fragrant screw pine என்றும் Sacred tree என்றும் கூறுவர்.

திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடியில் உள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரை முற்காலத்தில் தாழையடி அய்யனாா் என்றே அழைப்பார்கள்..

தாழையில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகை உண்டு.இரண்டிலும் மணம் ஒன்றே. ஆடி, ஆவணியில் வெண் தாழம்பூ மடல் விரிக்கும். செந்தாழம்பூ என்றால்
செக்கச் செவேலென்று இருக்காது.
மஞ்சள் நிறத்தைத்தான் செந்தாழம்பூ என்று கூறுகின்றனர். இது பனிக்காலம் தாண்டி மடல் விரிக்கும். மாசி, பங்குனி மாதங்களில்
செந்தாழம்பூ கிட்டும்.தாழம்பூ தைலம் நல்லெண்ணெய்யில் காய்ச்சி எடுக்கப்படுகிறது. இது தலைவலிக்கு நல்லது.

திருச்சாய்க்காடு, பல்லவனம், சங்கவனேச்வரம் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக விளங்குவது தாழையாகும். மணம் மிக்க மலர்களைக் கொண்டது. தமிழகமெங்கும் கடற்
கரைகளிலும் காணப்பெறும்.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு தரும் குங்குமம் தாழம்பூ குங்குமம் என்பர்.. தாழம்பூ வில் மருத்துவ குணம் அதிக அளவில் உள்ளது இருப்பினும் தாழையின் பரவலான பயன், தாழம்பூ சென்ட்.
இப்போது பாரீஸிலிருந்து விதம்விதமான உயர்ந்த ரக சென்டுகள் வருகின்றன.

தமிழகத்தில் தாழையூத்து, தாழை நகர், தாழையப்பன் தெரு தாழைமுத்து என பல வற்றில் தாழை என்ற பெயர் இடம் பெற்றுள்ளது..

அக்காலக்கட்டத்தில் இந்தி எதிர்ப்பு போரா‌ட்ட‌த்த‌ி‌ல் பெரும் பங்கு கொண்டவரின் பெயர் தாழை முத்து நடராஜன் ஆவார்.. இன்றளவும் இவர் பெயரில் தான் சென்னையில் CMDA வளாகம் அமைந்துள்ளது தாழை என்ற பெயர் வைத்து இருப்பவர்களுக்கு இது ஒரு கூடுதல் பெருமை..

தாழை மரம் மற்றும் பூ பற்றி எனக்கு தெரிந்த தகவலை பதிவு செய்துள்ளேன் பிழை உள்ளது என்றால் கூறவும்.. மேலும் தாழை பற்றி தகவல் தெரிந்தவர்கள் பதியவும்.. தாழை என்று பெயர் உள்ளவர்கள் கட்டாயம் சேர் பன்னுங்க..

நன்றி
இவன்: இள.தாழை நாகராஜன்,மதுரை.