திராவிட கட்சிகள் நிகழ்த்திய தமிழின படுகொலைகள்

ராஜபக்சேவுடன் கைக்கோர்த்து ஈழப்படுகொலையை நடத்திய திமுக – காங்கிரஸ் கூட்டணியும்.

ஸ்டெர்லைட் அனில் அகர்வாலோடு கைக்கோர்த்து தூத்துக்குடி படுகொலையை நடத்திய அதிமுக – பாஜக கூட்டணியும்.

8 கோடி தமிழர்களால் வேரோடு வேரடி மண்ணாக ஒருநாள் வீழ்த்தப்படுவார்கள்..!

சீமானை தேடும் இளையதலைமுறை

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழாவில் சீமான் வரவிருக்கும் நிகழ்வை ரத்து செய்ய போவதாக வரும் செய்தியை கேட்டு மாணவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நிகழ்ச்சியை ரத்து செய்தால் நாங்கள் கல்லூரிக்கு வெளியே நடத்துவோம் என்று மாணவர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் காங்கிரஸ் பதட்டமடைந்து உள்ளது.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழா இந்த மாதம் பெப்ருவரி 29ம் தேதி நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்தனர் மாணவ அமைப்பினர். சீமானும் மாணவர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்னார்.

இதை அறிந்த குமரி காங்கிரசின் ஒரு பிரிவினர் பதட்டம் அடைந்தனர். காரணம் சமீப காலமாக சீமான் கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மத்தியில் தூய அரசியல் குறித்து பேசி வருகிறார். இதனால் மாணவர்களிடையே சீமானின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனது முதல் வெற்றியை குமரி மாவட்டத்தில் தான் பதிவு செய்தது. இது ஊழலில் திளைக்கும் குமரி மாவட்ட காங்கிரஸாரை பதட்டம் அடைய வைத்தது.

அதனால் கல்லூரி விழாவில் சீமான் பங்கேற்க இருப்பதை அறிந்த காங்கிரஸ் காரர்களின் தூக்கம் தொலைந்தது. இதை அடுத்து சிஎஸ்ஐ குமரி பேராயத்தின் ஆயர் செல்லையா அவர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதனால் ஆயர் அவர்கள் வேறு வழியின்றி கல்லூரி முதல்வரை நெருக்குவதாக தகவல்கள் வருகிறது.
ஆனால் கல்லூரி முதல்வரோ, நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி சார்பில் சீமானுக்கு கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் சீமான் அவர்கள் வேறு ஒரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதால், கல்லூரி நிகழ்வில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால் சீமான் நிகழ்வை ரத்து செய்ய போவதாக வரும் தகவல்களை கேட்ட மாணவர்கள் கொதித்து போய் உள்ளனர். கல்லூரி அனுமதி தராவிட்டால் நாங்கள் நிகழ்ச்சியை கல்லூரிக்கு வெளியில் வைத்து நடத்துவோம் என்று அறிவித்து உள்ளனர். இது காங்கிரஸரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சீமான் நிகழ்வை காங்கிரஸ் தடுக்கப்போய் அது சீமானுக்கு சாதகமாக போனதை கண்ட பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியை பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.

2014ம் ஆண்டு ஆற்றூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை காங்கிரசார் உடைக்க சென்ற போது நடந்த பிரச்சனையில் பல காங்கிரசார் தலை தெறிக்க ஓடி தப்பித்தனர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

நடிகர் விஜய்யிடம் மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்

விஜய்யிடம் அதிமுகவும் பாஜகவும் மல்லுக்கட்டுவது ஏன் என்பது புரியாத புதிர் தான். விஜய் ஒரு கிறித்தவர் என்பதால் எதிர்க்கின்றனர் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் உத்தி தான். 

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக முதற்கொண்டு விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். நாம் தமிழர் கட்சியும் விஜய் ஒரு தமிழர் என்பதால் வரவேற்கவே செய்கின்றனர்.

விஜய்யின் பட வெளியீட்டின் போது நெருக்கடி தரும் அரசு

விஜயின் படங்கள் வெளியாகும் போதோ இசை வெளியீட்டின் போதோ அரசோ பாஜகவோ எதிர்ப்பது என்பது விஜய்க்காக அவர்கள் செய்யும் மறைமுக விளம்பரமே. மக்கள் மத்தியில் விஜய் தொடர்ந்து நல்ல பெயரை சம்பாதிப்பதற்காக செய்யப்படும் யுக்தி. விஜயின் ரசிகர்கள் தாக்கப்படுவதுவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டமாகவே இருக்கவேண்டும். இது போன்ற நிகழ்வுகளால் ரசிகர்கள் இன்னும் வெறியோடு விஜய்யை விரும்புவர்.

ஒரு படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க வேண்டுமென்றால் தமிழக அரசோ ஒன்றிய அரசோ அந்தப் படம் தணிக்கையில் இருக்கும் போதே செய்யலாம். அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிடுவர். படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்படும் போதும் கண்டும் காணாமல் இருந்துவிடுவர். படம் வெளியிடப்படும் தேதி முடிவானதற்கு பிறகே போராட்டங்கள் நடத்தப்படும்; தடை போடப்படும். இது பொதுமக்களின் மனதை விஜய்க்கு ஆதரவாக திருப்புவதற்காகவே நடத்தப்படுகிறது. இதில் திமுக காங்கிரஸிற்கும் பங்குண்டு.

விஜய்யின் வரவு தமிழர் அரசியலின் மீட்சியா?

ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு விஜய்யை பிரபலப்படுத்துவதென்பது தமிழர்களின் நலனுக்காக என்று நம்புவதற்கில்லை. 

இதன் பின்னணியில் நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு (திராவிட மற்றும் இந்திய ஒன்றிய கட்சிகள்) பயனில்லாமல் இருக்காது.

விஜய்யை அரசியலில் இறக்கிவிடுவதென்பது பெருகி வரும் தமிழ் தேசிய எண்ணத்தை முடக்குவதேயாகும். தமிழர் ஆள வேண்டும் என்பதெல்லாம் சில தமிழரல்லாதவர்களுக்கு மட்டுமே பிரச்சனை. ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கை என்பது ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளுக்கும் பேரடியாக இருக்கும்.

வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று தரகு பார்க்கும் கட்சிகளுக்கு வளங்களை விற்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஒரு கட்சி வளர்வது எவ்வாறு பிடிக்கும். உலகெங்கிலும் இல்லாத கள்ளிற்கான தடை தமிழகத்தில் மட்டும் இருப்பதை எதிர்ப்பதால் சாராய ஆலைகளை நடத்தும் அரசியல் கட்சிகள் அலரத்தானே செய்யும்.

தமிழன் என்ற உணர்வை எழுப்பி மேற்கண்ட கொள்கைகளை செயல்படுத்தவே நாம் தமிழர் கட்சியும் ஏனைய தமிழ் தேசிய இயக்கங்களும் விளைகின்றன. இதில் ஓரளவு வெற்றியும் ஈட்டப்பட்டிருப்பது அரசியல் கட்சிகளுக்கு பெரும் பயத்தை உண்டாக்கியிருக்கிறது. இதன் காரணமாகவே திராவிடத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் செலுத்திக்கொண்டிருந்த நினைவஞ்சலிகள் சில தமிழினத் தலைவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எனினும் இதுபோன்ற காரியங்களால் மக்களின் மனதை வருங்காலத்தில் பெருமளவில் மடைமாற்ற முடியாது என்ற காரணத்தால் தமிழ்தேசிய சிந்தனை உடையவர்களின் வாக்குகளை பிரிக்கும் நோக்கில் விஜய் களம் இறக்கப்படுவார். இதன் காரணமாக தமிழ்தேசியத்தை தொடக்கத்திலேயே எதிரும் புதிருமாக சண்டையிட வைத்து திராவிடத்திடமும் ஆரியத்திடமும் தோல்வியடையச் செய்யலாம்.

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவரா?

விஜய் தமிழ் தேசிய எண்ணமுடையவர் என்று நாம் நம்ப இயலாது. விஜய்யின் படங்களில் வரும் தமிழ் தேசிய கருத்துக்கள், மக்கள் பிரச்சனைகள் பெரும்பாலும் தமிழ் தேசியம் துளிர் விட்டு வளரத்தொடங்கிய பின்னரே வரத்தொடங்கின. இது நடப்பு செய்திகளை வைத்து பணம் பண்ணும் ஒரு செயல். இதன் காரணமாகவும் சிலர் தமிழ்தேசியத்தை ஏற்றுள்ளனர்.

விஜய்யின் தந்தையின் சிவாஜி ராவிற்கு (அதாங்க ரஜினி) ஆதரவான தமிழ்நாட்டின் தண்ணீரை குடித்துவிட்டாலே தமிழன் என்ற பேச்செல்லாம் சிறிது சந்தேகத்தையே தருகிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைவதற்கு ஏதேனும் உதவினாரா என்பதெல்லாம் தெரியவில்லை. சினிமா சூழலிலேயே பிறந்து வளர்ந்து நடிகர் ஆனவருக்கு தமிழுணர்வு இருக்குமா என்பது சந்தேகமே. சென்னையில் இவர்கள் செல்லும் தேவாலயங்கள் தமிழில் மட்டுமே ஆராதனை நடத்துகின்றனவா என்றும் தெரியவில்லை.

ஈழத்து பெண்ணை மணந்ததால் அவருக்கு தமிழுணர்வு இருப்பதாகவும் சிலர் நினைக்கலாம். ஆனால் அவரது மனைவியின் குடும்பம் லண்டனில் பெரும் பணக்காரர்கள் என்பதாலேயே இந்த மண உறவு. இவரது மனைவியின் குடும்பம் கூட தமிழுணர்வு கொண்டதா என்பதும் அறியாத காரியமே.

வருமான வரித்துறை சோதனை

விஜய் போன்ற நடிகர்கள் ஒன்றிற்கு பத்து ஆடிட்டர்களை வேலைக்கு வைத்திருப்பர். எந்தப் பணத்தை எப்படி கணக்கு காட்டவேண்டும். எதை எப்படி மறைக்க வேண்டும், எதை எப்படி செலவு செய்ததாக காட்டவேண்டும் என்று சகலத்தையும் கட்டுக்குள் வைத்துவிடுவர். 

இதை வருமான வரித்துறையும் நன்கு அறியும். இருந்தும் ஏன் சோதனை? விஜய் நேர்மையானவர் என்று மக்களுக்கு தெரியப்படுத்த அல்லது பிடிபட்ட பணத்தை எந்தவொரு தடயமும் இல்லாமல் அள்ளிச்செல்ல. 

எது எப்படியோ இந்த வரிச்சோதனை விஜய்யை நேர்மையானவராக கட்டமைப்பதற்கு பயன்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சிவாஜி ராவ் மீதிருந்த வழக்கை தள்ளுபடி செய்ய விஜய்க்கு நல்லவர் சான்றிதழை ஒன்றிய பாஜக அரசு வழங்கியிருப்பதில் உள்குத்து இருப்பது நிச்சயம்.

உதவும் மனப்பான்மை கொண்டவரா விஜய்

நடிகர் விஜயகாந்த், அஜித், சூர்யா போன்றோரின் உதவும் மனப்பான்மை ஓரளவு பரிச்சயமான அளவிற்கு விஜயின் உதவிகள் வெளியே தெரிவதில்லை. கஜா புயலின் போது ரசிகர்களின் வங்கிக்கணக்கில் பணம் அனுப்பி சேவை செய்யச் சொன்னதாக தகவல் வெளியாகியிருந்ததைத் தவிர வேறெதுவும் வெளியாகவில்லை. வெளியே தெரியாமல் உதவுவது தான் சிறந்தது என்பதால் அவர் அவ்வாறே செய்து கொண்டிருக்கலாம். 

விக்ராந்த் என்ற நடிகர் விஜய் தனக்கு அண்ணன் முறை என்றும் திரைப்படத்துறையில் தனக்கு உதவவில்லை என்றும் கூறியிருந்தார். எங்கே தன்னை விட உயர்ந்த நிலைக்கு சென்றுவிடுவாரோ என்ற எண்ணத்தில் தான் உதவாமல் இருந்திருப்பார் என்று எண்ணலாம். 

இந்துத்துவாக்களின் எதிர்ப்பு

இந்துத்துவா என்பதே வளர்ச்சி பெற தகுதியில்லாத பொறாமையினால் ஒன்று சேர்ந்த கூட்டம் என்பதை ஒட்டுமொத்த தமிழர்களும் அறிவோம். எச் ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றோர் குரூர புத்திக்கொண்ட அறிவிலிகளாக இருந்தாலும் இவர்களை கோமாளிகளாகவே மக்கள் பார்க்கின்றனர்.

இவர்களைப் போன்றோரின் ஆதரவு தான் ஒருவரைச் சிறுமைப்படுத்துமேயொழிய எதிர்ப்பல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மொத்தத்தில் நடிகர் விஜய்(அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ) என்பவரை தமிழ்தேசியராக வெளியுலகிற்கு காட்டி தமிழ்தேசியத்திற்கு எதிராக களம் இறக்க அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன என்பது தான் உண்மை. தமிழினம் தெளிவடைந்து ஆரியம் மற்றும் திராவிடத்தின் மாயையிலிருந்து மீளுவோம். 

நேருவின் குடும்பத்தினரின் மர்ம மரணங்கள்

ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் மொத்தம் 181 பேரணிகள் அல்லது பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளார். அவற்றில் 180 கூட்டங்களில் சோனியா காந்தி அவருடன் இருந்தார். ஆனால் ராஜீவ் காந்தியின் தனது 181வது கடைசி பொதுக் கூட்டத்தில் அவள் அங்கு இல்லை. புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் அவர் இறந்த நாள் மற்றும் இடம் அதுதான், இல்லையா?

ராஜீவ் காந்தியின் மரணம் 14 பேரைக் கொன்றது, அவர்கள் அனைவரும் சாதாரண மக்கள், ஒரு காங்கிரஸ்காரர் கூட சாகவில்லை. பிரதமரின் பொதுக் கூட்டம் காங்கிரசின் எந்தவொரு மூத்த தலைவருடனும் நடத்தப்படவில்லை என்று நினைப்பதில் ஆச்சரியமில்லை?

ராஜீவ் காந்தியுடன் எந்த பெரிய, நடுத்தர அல்லது கீழ் மட்டத் தலைவரும் இறக்கவில்லை. சோனியா காந்தி இல்லை, அவர் எப்போதும் அனைத்து ராஜீவ் பேரணிகளிலும் கலந்து கொள்வார். தலைவலி காரணமாக அவளால் இந்த குறிப்பிட்ட பேரணியில் கலந்து கொள்ள முடியவில்லை …. அதிகாரப்பூர்வ அறிக்கை! அப்படியானால் என்ன நடக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியுமா? இந்த வழியில் முழுமையான காங்கிரஸ் வெளிநாட்டினரால் உயர்த்தப்பட்டது … உங்களுக்கு என்ன புரிகிறது?

பின்னர் இந்த படுகொலை வழக்கை இந்திய நீதிமன்றம் விசாரித்தபோது, ​​பிரியங்கா காந்தி படுகொலை செய்யப்பட்டவரிடம் மன்னிப்பு கோரினார், உங்களுக்குத் தெரியுமா? … … உங்களுக்கு என்ன புரிகிறது?

சோனியா மைனோ ஒரு மருமகளாக குடும்பத்தில் நுழைந்த நாளிலிருந்து இன்று வரை இந்த குடும்பத்தில் சாதாரண மரணம் ஏதும் இல்லை, எல்லா மரணங்களும் இயற்கைக்கு மாறான மர்மமானவை … …!! உங்களுக்கு என்ன புரிகிறது?

இந்திரா காந்தியின் மகனின் மாமியார் கோல் ஆனந்த் சஞ்சய் காந்தி தனது பண்ணை வீட்டின் முன் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்தார் … … உங்களுக்கு என்ன புரிகிறது?

சஞ்சய் காந்தி தனிப்பட்ட முறையில் விமானத்தில் பறக்கும்போது இறந்தார்..

இந்திரா காந்தி தனது சொந்த மெய்க்காப்பாளரால் தனது சொந்த வீட்டில் படுகொலை செய்யப்பட்டார் … …
உங்களுக்கு என்ன புரிகிறது?

ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் இறந்தார். சோனியா காந்தியின் நெருங்கிய நண்பர் (பிரியங்கா காந்தியின் மாமியார், ராபர்ட் வாத்ராவின் தாய்) இவர் இத்தாலியின் அதே பீர் பட்டியில் நடனக் கலைஞராகவும் இருந்தார், அங்கு சோனியா காந்தி நடனக் கலைஞராக இருந்தார். சோனியாவின் மகள் பிரியங்கா தனது மகன் ராபர்ட் வாத்ராவை மணந்தார் … …
உங்களுக்கு என்ன புரிகிறது?

பிரியங்கா காந்தியின் மாமியார் ராஜேந்திர வாத்ரா டெல்லியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இறந்து கிடந்தார்.
டெல்லி அருகே நெடுஞ்சாலை சாலை விபத்தில் பிரியங்கா காந்தியின் மைத்துனரின் மனைவி இறந்தார். மொராதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அண்ணி இறந்து கிடந்தார் … உங்களுக்கு என்ன புரிகிறது?

ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பர்கள் 1) ராஜேஷ் பைலட் 2) மாதவ் ராவ் சிந்தியாவும், ராஜீவ் காந்தியும் சோனியா மைனோ நடனக் கலைஞராக இருந்த பீர் பட்டிக்குசெல்வது வழக்கம். இதையடுத்து ராஜேஷ் பைலட் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார், மாதவ் ராவ் சிந்தியா விமான விபத்தில் இறந்தார் … உங்களுக்கு என்ன புரிகிறது?

சோனியா & ராகுல் காந்தி இருவரும் அப்சல்குரு பாராளுமன்றத்தை தாக்கியபோது பாராளுமன்றத்திற்கு செல்லவில்லை. இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய நாள், இது வெறும் தற்செயலானதா … … உங்களுக்கு என்ன புரிகிறது?

பிழைப்பிற்காக அரசியல் நடத்தும் ஐயா சுப வீரபாண்டியன்

மதிப்பிற்குரிய திரு.சுபவீ ஐயா அவர்களுக்கு..

ஒரு தேடலுக்காய் தங்களின் முகநூல் பக்கம் வந்தேன். ஏன் என்பதை பிறகுச் சொல்கிறேன்.

உங்கள் பதிவில் “சீமான் தனக்கு, ‘400 கோடியில் பேரம் பேசினார்கள்’ என்பதைச் சொல்லி, “தேர்தல் ஆணையத்தில் முறையிட்டீர்களா? ஊழல் ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தீர்களா.? நீங்கள் அறிவும் மான உணர்ச்சியும் உடைய சத்தியத்தின் பிள்ளைகள் என்பதால், கண்டிப்பாக இந்நேரம் புகார் கொடுத்திருப்பீர்கள் என்றும், அந்த உண்மைகளை வெளியிடவும் முன்வருவீர்கள் என்றும் நம்புகிறோம். ஏனெனில் நீங்கள் சத்தியத்தின் பிள்ளைகள் ஆயிற்றே!“ உண்மை அறியக் காத்திருக்கின்றோம்” என்ற வரலாற்றுப் பதிவை எழுதியுள்ளீர்கள்.

முந்தைய காலங்களில் கலைஞர், ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலரும் பல்வேறு தரப்பில் அப்படி பேசியிருக்கிறார்கள். அவர்களிடமும் அப்படியான கேள்வியை வீசுவீர்களா? எனத் தெரியாது. அது உங்கள் விவகாரம். சீமான் அசைவுகளுக்கு ஆடிக்கொண்டிருப்பது உங்கள் அரசியல். போகட்டும்.

‘அறிவும், மான உணர்ச்சியும்’ பெற்றவர் நீங்கள் என்பதாலேயே நான் தங்களின் முகநூல் பக்கத்திற்கு வந்து தேடினேன்.

இன்றைய நாள் 15 மற்றும் 16.05.19 நினைவிருக்கின்றதா ஐயா?

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2009-ஆம் ஆண்டு, இதே நாளில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கின்றதா ஐயா?

ரத்தமும்-சதையுமான பிணங்களாக ஒரு இனமே துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வலிகள் நினைவிருக்கின்றதா,? மற்ற எல்லோரையும் விட தங்களுக்குத்தான் அதிகம் நினைவிருக்க வேண்டும்!

அடுத்தடுத்த நாளில், சடசடவென 60,000 ஆயிரத்திற்கும் மேலான பிணங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வீழ்ந்துகொண்டிருக்கிறது. உங்கள் கலைஞரின் அரை மணி நேர உண்ணாவிரதப் போராட்டம், ‘போர் நிறுத்தம்’ செய்துவிட்டது என நாடகமாடிய பின்னும், தடைச் செய்யப்பட்ட கனரக ஆயுத குண்டுகளை வீசி கொன்றுகொண்டிருந்தது சிங்கள அரசு.

களத்தில் இருந்து, ’24 மணி நேர போர் நிறுத்தமாவது அறிவிக்கச் சொல்லுங்கள்.” என்று புலிகளின் தளபதி, சூசை உள்ளிட்ட சிலர் உங்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள். அதுகூட எனக்கு நேரடியாகப் பழக்கமில்லை, அண்ணன் கொளத்தூர மணி அவர்கள் மூலகமாகத்தான் என் தொடர்புக்கு வந்தார்கள் என கூறினீர்கள்.

புலிகளின் அந்தக் கோரிக்கையை நீங்கள், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கனிமொழி மற்றும் அருட்தந்தை ஜகத்கஸ்பர் ஆகியோரிடம் கூறினீர்கள். அவர்கள் டெல்லியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்கள். ‘ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, நிபந்தனையின்றி சரணடைகின்றோம்’ என்பதாக அருத்தந்தை ஜகத்கஸ்பர் ஒரு வரைறை எழுதி, அங்கே அனுப்பிக்கொண்டிருந்தார்.

தளபதி பா.நடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா. பாண்டியன் அவர்களின் தொடர்பிலும். சரணைவடைது குறித்து அறிக்கையை எழுதும் ஆலோசனை கேட்டிருந்தார். இறுதியாக, ’ஆயுதத்தை மௌனிக்கின்றோம். அமைதி பேச்சுவார்த்தை நடந்த, காயம்பட்ட போராளிகளை மீட்க 24 மணி நேர போர் நிறுத்தம் வேண்டும்’ என்றளவில் எழுதுகிறது புலிகளின் தரப்பு.

நீங்களும்கூட பின்னாளில் ஒரு பேட்டியின் போது, “மே.15 அன்று அதிகாலை 140.மணிக்கு எல்லாத் தொடர்புகளும் அறுந்துபோய்விட்டது. ஏறத்தாழ பனிரண்டேகால் மணி அளவில் என்னிடம் பேசிய ஒரு போராளி சொன்ன வார்த்தை, இப்போதும் என் நெஞ்சைப் பிழிகிறது. அவர் சொன்னார், ‘ஒரு வேளை இது எங்களின் கடைசி அழைப்பாகக்கூட இருக்கும்’ என்று. அதன் பிறகு எங்களுக்குள் நடந்த உரையாடல் எல்லாம் அதிகாலை 1.40 மணிக்கு முடிந்து விட்டது” என வேதனையோடு கூறியிருந்தீர்கள். நினைவில் உள்ளதா ஐயா. இப்போது நினைவிருக்காது.

தொடர்ந்து பேசிய தாங்கள்..
“அவர்கள் கேட்டது 24 மணி நேர போர் நிறுத்தம் ஒன்றுதான். நாங்கள் எங்களது ஆயுதப் போராட்டத்தை முற்றும் முழுதுமாக நிறுத்திவிட்டோம். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. எனவே வெறும் அமைதி உடன்பாடு பற்றி பேசுவதற்கு 24 மணி நேர போர் நிறுத்தம் என்ற கோரிக்கை மட்டும்தான் அவர்கள் கேட்டது. அதுதான் சூசையிடம் இருந்த வந்த கோரிக்கை. அதைத்தான் நாம் மத்திய அரசு வரைக்கும் எடுத்துச் சென்று, அவர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.

அந்த முயற்சிகைளை வெளிநாட்டில் இருந்து கே.பி. தொடர்வார் என்றுதான் களத்திலிருந்து சொன்னார்கள். நான் காத்திருந்தேன். நள்ளிரவு 12 மணியைத் தாண்டியும் அவர்களிடமிருந்து, வெளிநாட்டிலிருந்து தொலைபேசி ஏதும் வரவில்லை. பனிரெண்டேகால் மணிக்கு ஒரு தொலைபேசி வந்தபோது, அவர்தான் அழைக்கிறார் என்று நினைத்து நான் தொலைபேசியை எடுத்தேன். மறு முனையில் கனிமொழி பேசினார். ‘என்ன, இன்னும் எந்தத் தகவலும் வரவில்லையா’ என்று கேட்டார்கள். காத்திருக்கின்றேன், அதுவும் இவ்வளவு நேரத்திற்குப் பிறகு உங்களை எப்படி அழைப்பது என்ற தயக்கத்தில் நான் அழைக்கவில்லை என்று சொன்னபோது, ’நீங்கள் எதுவும் யோசிக்க வேண்டாம். ஈழத் தமிழர்களுக்காகக 24 மணி நேரமும் நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம், கூப்பிடலாம்’ என்று சென்னார். நான் மறுபடி தொலைபேசி வந்தால் சொல்கிறேன் என்றேன்.

அதன் பிறகு இரவு 12.40. மணிக்கு ஏறத்தாழ நான் முதலிலே சொன்ன அந்த செய்திகள் வந்தன. அப்போதும் கே.பி.அவர்கள் பேச முடியவில்லை. அவர் எங்கே இருக்கின்றார் எனத் தெரியவில்லை. மே 17,18-க்குப் பிறகுதான் ஒரு முறை கே.பி. என்னோடு பேசினார். அதற்கு முன்பு வேறொரு நபரிடம் இருந்து, தகவல் வந்தன. நாங்கள் அந்த தகவல்களை எல்லாம் பரிமாறினோம்.

ஏறத்தாழ, பின்னிரவு 1.40 மணிக்கு, என்ன மனநிலையோடு நான் படுக்கச் செல்கிறேன் என்றால், ‘கிட்டத்தட்ட சாதகமான நிலை வந்துவிடும்’ என்ற மன நிலையோடுதான் நான் படுக்கைக்குப் போனேன்.

ஆனாலும், மே 16-ம் தேதி அதிகாலையில் முதலமைச்சரிடம், நடந்தவைகளை எல்லாம் நாம் சொல்ல வேண்டும் என்று அவரது வீட்டிற்கு எவ்வித நேர்காணல் ஒப்புதலும் இல்லாமல் போனேன். நான் சென்னையில் பாம்குரோவ் ஓட்டல் இருக்கிறதே, அந்த இடத்தில் செல்லும் போது எனக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு தகவல் வந்தது. ‘அதிகாலை வெள்ளைக் கொடியுடன் போன நடேசனும் மற்றவர்களும் கொல்லப்பட்டு விட்டார்கள்” என்ற தகவல். எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

சார்லஸ் ஆண்டனியும் இறந்து போய்விட்டார் என்ற செய்தியும் அப்போதுதான் வந்தது. நான் நேரடியாக முதலமைச்சர் வீட்டிற்குப் போனேன். உடனே என்னை மேலே அழைத்தார்கள். அவர் தயாராகக்கூட இல்லை. கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தார்.

நான் எனக்கு வந்த அந்தச் செய்திகளைச் சொன்ன போது, அவர், ‘எனக்கும் அந்த செய்திகள் வந்திருக்கின்றன’ என்று சொன்னார். என்ன செய்யலாம் எனப் புரியாத குழப்பத்தில் நடந்தவைகளை எல்லாம் அவரிடத்தில் சொல்லிவிட்டு வந்தேன். உண்மையைச் சொன்னால் அன்றைக்கு மிகுந்த கவலையோடு, கலக்கத்தோடுதான் அமர்ந்து அந்த செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். இவைகளை எல்லாம் நான் இதுவரை பதிவு செய்யவில்லை. முதன் முறையாக இப்போது இதை பதிவு செய்கின்றேன்”- என பேசியிருந்தீர்கள்.

இவற்றைச் சுட்டிக்காட்ட காரணம் உள்ளது. இது, தழினம், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட நாள். இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நாள். அதை நினைத்து, தாங்கள், எரியும் நெஞ்சோடு கனத்துப்போய் இருப்பீர்கள். அறிவும் மான உணர்ச்சியும் உள்ள தாங்கள் துரோகத்தைப் பற்றி ஏதேனும் பதிவிட்டிருப்பீர்கள் என்றுதான், தங்களின் முகநூல் பக்கம் வந்தேன்.

ஆனால் தாங்களோ, இந்த இன அழிப்பு நாளில் யாரும் காங்.கட்சியின் துரோகத்தைப் பற்றி பேசிவிடக்கூடாது என்று திட்டமிட்டு, சீமான் பற்றிய பதிவைப் போட்டு எல்லோரையும் ‘மடைமாற்றம்’ செய்துகொண்டுள்ளீர்கள். இன்னும் எத்தனைக் காலம்தான் இந்த ‘மடைமாற்ற’ வேலையில் நிற்பீர்கள்? எனத் தெரியவில்லை.!

.
இந்த இனத்துரோகத்தை திமுக-காங்.கட்சிதான் செய்தது என்று நான் கூறவில்லை ஐயா. மதிப்பிற்குரிய திரு. வைகோ அவர்கள்தான் கூறினார். பச்சைப்படுகொலையை, இனத்துரோகத்தைச் செய்தது திமுக-வும் காங்கிரஸும்தான் என்றார். இறந்துபோன புலிகளின் ஆவி, பொது மக்களின் ஆவி அவர்களை மன்னிக்காது என்று குற்றம் சாட்டினார்.

பிறகு வந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, திமுகவும் காங்.கட்சியும் பிரிந்து நின்ற சமயத்தில், காங்கிரஸ் கட்சியை எவ்வளவோ நம்பினோம். போர் நிறுத்தம் செய்வதாய் நம்ப வைத்து கழுத்தறுத்தார்கள் என்று திமுக தரப்பு குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்தார்கள். டெல்லியில் தொடர்பெடுத்துப் பேசிய காங்கிரஸ் புள்ளி யார் என்றும் பேசினார்கள்.

அதையெல்லாம் கூறி ஒரு பதிவு எழுதியிருப்பீர்கள். குமுறியிருப்பீர்கள், துரோகத்தையும் துரோகிகளையும் சுட்டியிருப்பீர்கள். தளபதி பா.நடேசன் உள்ளிட்ட போராளிகளின் மரணத்தை சொல்லியிருப்பீர்கள் என்று பார்த்தால், உதவாத ஒரு விஷயத்திற்காக சீமானிடம் ‘சத்தியத்தின் பிள்ளைகளா? என கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.

ஆக, ஒருபோதும் தாங்கள் சத்தியத்தின் பிள்ளையாக இருக்க மாட்டீர்கள்? அப்படித்தானே ஐயா?

2010-ல் கொடுத்த ஒரு பேட்டியில், ‘1987 செப்டம்பர் 26 திலீபனின் நினைவு நாள். அன்றிலிருந்ததான் நான் பொது வாழ்க்கைக்கும், ஈழ ஆதரவு நிலைப்பாட்டையும், புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும் முழுமையாக இறங்கினேன். கடந்த 22 ஆண்டுகளில் ஒரு நாளும், ஒரு பொழுதும் அதில் நான் பின்வாகியதில்லை” என்று கூறியிருந்தீர்கள். 2009-க்குப் பிறகு பின்வாங்கிவிட்டீர்களா எனத் தெரியவில்லை.

மற்றொரு கேள்வி.

1990 முதல் 2006 ஆறு வரை, தாங்கள் பழ.நெடுமாறன் ஐயா அவர்களோடுதான் தமிழ்த்தேசிய தளத்தில் நின்றிருந்தீர்கள். கலைஞரையும்-திமுகவையும் சீமானைவிட அதிகம் அதிகம் விமர்சனம் செய்து வந்தீர்கள். பட்டென்று 2006-ல் பழ.நெடுமாறன் அவர்களை விட்டு விலகி வந்து, “திராவிட தமிழர் இயக்கப் பேரவையைத்’ தொடங்கினீர்கள்.

அந்தப் பிரிவுக்கு, “ இந்த பிரிவு, முழுக்க முழுக்க தமிழக அரசியலைச் சார்ந்தது. தமிழ்நாட்டிற்கு கலைஞர் தலைமையா? ஜெயலலிதா தலைமையா என்பதில், நான் ‘கலைஞர் தலைமைதான்’ என முடிவெடுத்து வெளியேறினேன் என்று கூறியிருந்தீர்கள். அதாவது பார்ப்பனத் தலைமை வேண்டாம், சூத்திரன் தலைமைதான் வேண்டும் என்று..

இப்போது, நானும் பார்ப்பனர்தான்’ என்று பூநூலை வெளியே எடுத்துக் காட்டிய ராகுல் காந்தி தலைமையிலான காங்.கட்சியை ஏற்கிறீர்களா? நிராகரிக்கிறீர்களா?

அடுத்து கடந்த பத்தாண்டுகளாக மக்களுக்கான பலப் போராட்டங்களில் கலந்துகொண்டு, சிறை சென்று, இந்த மக்களோடு மக்களாக நாம் தமிழர் கட்சி நிற்கிறது. மறுபுறம், இந்த தேர்தலுக்கென்றே திடீரென முளைத்து வந்து நிற்கிறது ‘மக்கள் நீதி மைய்யம்’ கட்சி.

ஒன்று பார்ப்பனர் தலைமையிலான கட்சி. மற்றொன்று சூத்திரன் தலைமையிலான கட்சி. இப்போது தாங்களும் தங்களைச் சார்ந்த திராவிட கட்சிகளும், இந்த இருவரில் யாரை ஆதரிக்கப் போகிறீர்கள்? பார்ப்பன தலைமை ஜெயலலிதாவா? சூத்திரன் தலைமை கலைஞரா என்று முடிவெடுத்து, கலைஞர் பக்கம் நின்றதைப்போல், இப்போது யாரை ஆதரிக்கப்போகிறீர்கள்? பார்ப்பனரையா? சூத்திரனையா? யார் உங்கள் எதிரி. தாங்கள் ‘சத்தியத்தின் பிள்ளை என்றால் பதில்’ அளிக்கலாம்.

இவ்வளவும் எழுதக் காரணம் இருந்தது ஐயா. அன்று நம்பிக்கைத் துரோகம் செய்து இனப்படுகொலை செய்த தலைமைகளுடன் நீங்களும் ஒருவராக இருந்து பேச்சுவார்த்தை நடத்திககொண்டிருந்தீர்கள். அந்த ஆதங்கத்தை, துரோகத்தை இந்த பத்தாம் ஆண்டு நினைவு நாளில் என்னவாக பதிவு செய்திருப்பீர்கள் என பார்க்க வந்து ஏமாற்றமடைந்ததுதான்.

ஒன்றை நினைவுறுத்துகின்றேன் ஐயா.

இந்த இனப்படுகொலை குறித்து பழ.நெடுமாறன் 2009-ல் என்ன பேசினாரோ, அதையேதான் இன்றும் பேசி வருகிறார். பெ.மணியரசன் 2009-ல் என்ன பேசினாரோ அதையேதான் இன்றும் பேசி வருகிறார். தோழர் தியாகு 2009-ல் என்ன பேசி பேசினாரோ, அதையேதான் இன்றும் பேசி வருகிறார். தோழர்கள் இயக்குனர் களஞ்சியம், வ.கௌதமன் ஆகியோர் அப்போது என்ன பேசினார்களோ, அதையேதான் இன்றும் பேசி வருகிறார்.

அதே போன்று 2009-ல் தொடங்கி, 2010-ம் ஆண்டு தன் கட்சியைத் தொடங்கியபோது நாம் தமிழர் கட்சியும் சீமானும் என்ன பேசினார்களோ, அதே குற்றச்சாட்டைத்தான் இன்றளவும் மாறாமல் பேசி வருகிறார்கள்.

தங்களைப் போன்று, தங்களுடன் இருப்பவர்களைப் போன்று முந்தாநாள் ஒரு பேச்சு, நேற்று ஒரு பேச்சு, என இருந்து விட்டு, இன்று “எல்லாமும் மறந்து போச்சு’ என மடைமாற்ற பதிவுக் குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கவில்லை. விரும்பினால் பேசுவதற்கும், விருப்பமில்லை என்றால் போய் படுத்துக்கொள்வதற்கும் ஈழ இனப்படுகொலை ஒன்றும் சினிமா காட்சிகள் அல்ல.

அது ரத்தமும் சதையுமாக சிதைக்கப்பட்ட துரோக வரலாற்றின் பதிவு.

எந்த மனிதனையும்- சம்பத்தையும். வரலாற்றையும் தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்க, ‘அறம்’ அனுமதிக்காது. ‘அறம்’ தோற்றது போலவும், அதனை நசுக்குவோர் வெற்றி பெறுவது போலவும் மாயத் தோற்றம் உருவாகும். ஆனால் இறுதியில் ‘அரசியல் பிழைத்தோர்க்கு ‘அறம்’ கூற்றாகும்’!

பத்திரிகையாளர் பா.ஏகலைவன்.

தேர்தல் மக்களுக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுத்தருமா?

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேர்தல்கள் வருகின்றன.
புதிது புதிதான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம்,
சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் மனங்களும் மாற்றங்களை விரும்பினாலும் மாற்றங்களை ஏற்படுத்த விளைவதில்லை. அந்தளவிற்கு மக்களின் மனங்களில் பலவிதமான எண்ணங்களை விதைத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே மக்களை முடிவெடுக்க வைக்கின்றனர். கருத்துக்கணிப்புகள், நம்பும்படியான கட்டுக்கதைகள், இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் என்று பல்வேறு காரணிகளால் தவறான வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் மக்களின் கால்களிலும் விழும் வேட்பாளர்கள் வென்ற பின்னர் தொகுதி பக்கம் வருவதும் இல்லை; பிரச்சனை என்று சென்றால் தீர்வை தருவதில்லை என்பது மட்டுமல்ல மதிப்பதும் இல்லை. காரணம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் கட்சிகளே.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழர்களுக்கும்
தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் என்னென்ன கெடுதல் செய்திருக்கின்றனர்
என்பதை பட்டியலிட்டுள்ளோம். நம் சாதி வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக
இவர்களது கெடுதலை மன்னித்து மறந்து வாக்களிப்பது நமக்கு நாமே துரோகம்
இழைப்பதற்கு சமம் என்பதை உணர்வோம்.

அதிமுக:

தற்போதைய ஆளும் கட்சியான இவர்கள் மத்திய அரசின் கைப்பாவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட், உதய் மின் தொகுப்பு திட்டம், போன்றவற்றை தமிழகத்தின் நலன் கருதி ஜெயலலிதா அவர்கள் தடுத்துவைத்திருந்த போது அதை அனுமதித்ததிலிருந்து பல்வேறு துரோகங்களை செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் என்ற தனியார் நிறுவனத்திற்காக 14 மக்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். சல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவினர். கூடங்குளம் போராட்டத்தின் போதும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை என்று மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முனைப்புக்காட்டி மக்களை துன்பப்படுத்தியிருக்கின்றனர். மணல் கடத்தல், கோடநாடு கொலைகள், வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் இந்தக்கட்சியில் ஒரு உத்தமர் கூட இல்லை என்றளவில் தான் உள்ளது. பிறமொழியில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்றுவதாகக் கூறி அதில் சமற்கிருதத்திற்கு விலக்கு அளித்தது, தமிழை கட்டாய பயிற்று மொழியாக்காதது, கீழடி போன்ற அகழ்வாய்வுகளை சரிவர வெளிக்கொணராதது இவர்கள் தமிழுக்கு இழைத்த துரோகம்.

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் மட்டுமல்லாது தமிழக அரசின் வேலைகளுக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமல்ல என்று சட்டம் இயற்றிய நல்லவர்கள். உலகெங்கிலுமுள்ளவர்கள் தமிழக அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டத்தை மத்திய அரசின் விருப்பங்களுக்கேற்ப மாற்றியவர்கள். குறிப்பிட்டுச்சொல்லும் படியாக எந்தவொரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்யாவிடிலும் துரோகமாவது செய்யாமலிருந்திருக்கலாம். தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களது வயிற்றில் அடிக்கும் வேலையை கூச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

திமுக:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது துரோக பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சன் டிவியை வளர்த்தது, டாடா வை மிரட்டியது, பில் கேட்ஸிடம் பேரம் பேசியது என பட்டையை கிளப்பிய மாறன் சகோதரர்கள் பி எஸ் எண் எல்லின் அதிவேக இணைப்புகளை திருட்டுத்தனமாக தமது தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். 2G வழக்கிலிருந்து இவர்கள் வெளியில் வந்தாலும் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், நீரா ராடியா பேரம் பேசியது போன்றவை இவர்களது கயமைத்தனத்தை துகிலுறித்து காட்டத்தான் செய்கிறது. தமது பெருமையை பறைசாற்ற செம்மொழி மாநாடு நடத்தியது, தொலைக்காட்சிகளை இலவசமாக வழங்கி தமது சன் டீவி சேனல்களை வளர்த்தது. இவர்களது ஆட்சிகாலத்தில் அமைந்த அத்தனை நிறுவனங்களிலும் கையூட்டாக (லஞ்சம்) பங்குகளைப் பெற்றது.

தமிழகத்தில் உள்ள பெருவாரியான சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியிருக்கின்றனர். தமது கட்சியிலிருந்தவரையே மிரட்டி தினகரன் நாளிதழ், கரன் நெட்வோர்க், போன்றவற்றை பிடுங்கியவர்கள். தமிழ் சேனல்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு பிற மொழி சேனல்களுக்கு அந்தந்த மொழிகளிலேயே பெயர் வைத்திருப்பது தமிழின் மீதான காழ்ப்புணர்ச்சியோ. கிரிக்கெட்டில் கூட தமது மொழி சார்ந்த மாநிலத்தின் அணியையே வாங்கியிருக்கின்றனர். தங்களுக்கிடையேயான அதிகார போட்டியில் தினகரன் அலுவலகத்தை எரித்தது. ஏர்செல் நிறுவனத்தை நிப்பந்தப்படுத்தி விற்றது, ஸ்டெர்லிங் கட்டிடத்தைக் கேட்டு மிரட்டியது. அனைத்து சிமெண்ட் ஆலைகளிலுமுள்ள பங்குகளின் மூலம் விலையேற்றி பயனடைவது. கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.

காங்கிரஸ்:

பிரதானமாக ஈழத்தில் நல்ல நிலைக்கு முன்னேறிக்கொண்டிருந்த தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேரை கொன்றிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்டின் பங்குதாரர் ப சிதம்பரம். வரிக்கு வரி கொண்டுவந்த புண்ணியவான். நீட் தேர்வில் தமிழக நலனுக்கு எதிராக வழக்காடியவர் இவரது மனைவி. பங்குச்சந்தையில் சில கோல்மால்களைச்செய்தவர் இவரது மகன்.

காவேரிப்பிரச்சனையை பெரும் பிரச்சனையாக்கி அரசியல் பொருளாக்கியது. பலமுறை கர்நாடகத்தையும் கேரளத்தையும் ஆண்டபோதும் கூட நம் தண்ணீர் பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை. காங்கிரஸ் வென்றால் மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து தமிழக மீனவர்களை கொல்வது. குற்றமே சரிவர நிறுபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுவிக்காலிருந்திருக்கின்றனர்.

தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு இயக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தை கொச்சியிலிருந்து இயக்கியவர்கள். தமிழர்களுக்கிடையில் வியாபாரத்தொடர்பு ஏற்படாமலிருக்க வழிவகை செய்தவர்கள்.

பாஜக:

காங்கிரஸ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைத்த கொடுமைகளை கொஞ்சம்
கடுமையாக்கினர்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுங்கக்கட்டணத்தை 3 மாதங்களுக்கு
ஒரு முறை என்றளவில் ஏற்றி வந்திருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை
தினமும் ேற்றிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் உடனடியாக
ரு. 100 ஆகிவிடும்.
மேக் இன் இந்தியா என்று விளம்பரம் செய்வர் ரஃபேல் விமானத்தை
பிரான்சிலிருந்து தயாரித்து இறக்குமதி செய்வர். பணமதிப்பிழப்பு என்ற பெயரில்
கள்ள நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து பொருளாதாரத்தை சீரழித்துவிட்டனர்.
திருப்பூரை ஒன்றுமில்லாமலாக்கி உத்தர பிரதேசத்தில் ஜவுளி பூங்காவை
தொடங்கியிருக்கின்றனர்.
வரலாறு காணாத வரி விதிப்பை ஜிஎஸ்டி மூலம் கொண்டு
வந்திருக்கின்றனர். 28% வரி விதிப்பு. அனைத்து அத்தியாவசிய பொருட்களும்
விலையேறியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் வங்கி வாசலில் காத்துக்கிடக்க வைத்து
காவு வாங்கினர்.
எல்லாவற்றிர்க்கும் உதாரணமாக காட்டும் இராணுவ வீரர்களை பலி
கொடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.
தமிழகத்தின்
வளங்களோடு வேலைகளையும் வட இந்தியர்களுக்கு கொடுப்பது இவர்களே.
தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மிக முக்கிய காரணமே இவர்கள்
தான். பொது மக்கள் போராட்டங்களை கெடுப்பது, கள்ளக்காதல்
உயிரிழப்புகளுக்காகவும் பிரியாணி திருடுவதற்காகவும் போராட்டங்கள் நடத்துவதே
இவர்களது வாடிக்கை.
நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும்
பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாமக:

நான் தான் யோக்கியம் என்பது போல பேசி அனைத்து அயோக்கியத்தனங்களையும்
செய்துகொண்டிருக்கின்றனர்.
சேலம் சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு
தொடர்வதற்கு 2 கோடி ரூபாய்களை விவசாயிகளிடம் வசூலித்திருக்கின்றனர்.
தற்போது அதிமுக வுடன் கூட்டணியில் போட்டியிட பல கோடிகள் பெறப்பட்டதாக
தகவல். மத்திய மந்திரியாக இருந்தபோது கையூட்டு பெற்றுக்கொண்டு சில மருத்துவ
கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அன்புமணி.
தமிழ், தமிழர் என்று வாய்கிழிய
பேசும் மருத்துவர் தேர்தல் வந்துவிட்டால் பணத்திற்கு அடிமை.

தேமுதிக:

தமிழக வரலாற்றிலேயே வெளிப்படையாக இரண்டு கூட்டணிகளிடமும் பேரம் பேசி
பெரும் தொகையை சம்பாதித்திருக்கின்றனர்.
கிடைத்த 4 தொகுதிகளில் ஒன்றில் கூட
தமிழர்களை நிறுத்த மனமில்லாதவர்கள் தமிழகத்திற்காக எந்த நன்மையை செய்வார்.
ஊடகங்களிடம் பேசும் திமிர் பேச்சு. தமது தாய்மொழி நாளிதழ்களை தவறாமல்
இவர்கள் படிப்பதுபோல நாமும் நம் தாய்மொழி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தி
நம் மொழியுணர்வை காட்ட வேண்டிய தருணம்.

பொதுவுடைமை (கம்யுணிஸ்ட்):

உலகெங்கும் இனம் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்து இயங்கும் பொதுவுடைமை
கொள்கை கொண்ட கட்சிகளில் தமிழகத்தில் மட்டுமே மாற்றினத்து முதலாளிகளின்
நலனுக்காக இயங்குகிறது. போட்டியிடும் இரு தொகுதிகளிலும்
தமிழரல்லாதவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கேரளத்திலிருந்து இங்கு
கொட்டப்படும் குப்பைகளைக் கூட கண்டுகொள்ள மாட்டர். அமெரிக்கா அணுவுலை
வைத்தால் எதிர்ப்பர். ரஷ்யா வைத்தால் வரவேற்பர். இவர்களால் தமிழர்களால்
நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் நிறுவனங்களே பெருவாரியாக மூடப்பட்டுள்ளது.
கூட்டுறவு ஆலைகளையும் சிதைத்த நல்ல உள்ளங்கள் இவர்கள். மொத்தத்தில்
இவர்களும் தமிழகத்தின் சாபக்கேடுகளே.

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்:

இந்த கட்சிகளில் எதுவுமே தம் மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான காரியங்கள்
எதுவுமே செய்வதில்லை. தேர்தல் நேரங்களில் இங்கொன்று அங்கொன்று என பேரம்
பேசி போட்டியிடும். இவர்களனைவரும் உப்புக்குச் சப்பு தான்.

அ ம மு க:

சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பக்கட்சி.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அபகரித்துக்கொண்டுள்ளனர்.
ஜெயா டி வி யும் இவர்களது. ஆர் கே நகர் தேர்தலில் 20 ருபாய் டோக்கன் கொடுத்து
மக்களை ஏமாற்றி வெற்றி கண்டவர். திருடர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பர்.
அதில் கூட ஏமாற்றி இருக்கிறார். எப்படி நம்புவது? கட்டு கட்டாக பணம் பட்டுவாடா
செய்கிறார். பல இடங்களில் மாற்றிக்கொண்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு
வந்த பெண்ணை கற்பழித்த மூவர் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடும்
வேட்பாளர்கள். இவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் ரோட்டில் ஒரு பெண் நடமாட
முடியுமா?

எல்லா கட்சியையும் குறை கூறினால் எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது.
கடைசியாக நாம் தமிழர் கட்சி மீது மேலே குறிப்பிட்ட யோக்கிய கட்சிகளும்
அவைகளின் அனுதாபிகளான நடுநிலைவாதிகள் போர்வையில் செயல்படுபவர்கள்
வைக்கும் குற்றச்சாட்டையும் பார்ப்போம். இன்று வரை இவர்கள் அரசியலில்
வெல்லாததால் மற்ற கட்சிகள் மீதுள்ள விமர்சனம் போல எதுவும் சொல்ல இயலாததால்
கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டைப்பார்க்கலாம்
. அதற்கு முன்பதாக கமலின்
கட்சியையும் பார்த்துவிடலாம்.

ம நீ ம:

விஸ்வரூபம் படம் திரைக்கு வராவிட்டால் நான் நாட்டை விட்டு ஓடவேண்டியது தான்
என்று செய்தியாளர்கள் முன் அழுது பேட்டிகொடுத்தவர். அதன் பின்னர் எவ்வளவு
சம்பாதித்தார் என்றே தெரியவில்லை. இன்று திமுக அதிமுக கட்சிகளை விட
அதிகளவில் விளம்பரம் செய்கிறார். தேர்தல் தொடங்கும் வரை கட்சியில்
உறுப்பினர்களே இல்லை. போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு 20000 ருபாய் திருப்பி
செலுத்தாத வாய்ப்பு நிதி என்று தன் கட்சியினரிடமே சுரண்ட தொடங்கினார்.
இது குறித்த செய்தி நாளிதழ்களிலும் வந்திருக்கிறது.

நடுநிலையாளர்களும் மற்ற கட்சியினரும் கமலின் கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டு
இவை
.

நாம் தமிழர் கட்சி:

ஈழத்து விதவையை மணந்து கொள்வேன் என்றார் ஆனால் முன்னாள் சபாநாயகர்
பெண்ணை மணந்துள்ளார். இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார்.
கிறித்தவர்களுக்கு எதிராக பேசியுள்ளார். முகமதியர்களுக்கு எதிராக பேசியுள்ளார்.
இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம் பெறுகிறார். பிரபாகரனை ஆதரிக்கிறார்.
இலங்கை மாணவர்களை அடிப்பேன் என்று கூறினார். இன வெறியை தூண்டுகிறார்.
சீமான் மலையாளி. இவர் கிருத்துவர். சாதிக்கட்சி நடத்துகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள
குரோதத்தால் பரப்பப்படுபவையே. ஆதாரமற்றவை.

மதங்களுக்கு எதிராக சீமான் பேசியதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் திராவிட

கழகமும் திராவிட முன்னேற்ற கழகமுமே.

இவர்கள் மீதிருந்த நம்பிக்கை அற்றுப்போனபின் தொடங்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.

இந்த கட்சி முன் வைக்கும் கொள்கைகள் நம் தமிழகத்தை தற்சார்பு பொருளாதார
நிலைக்கு கொண்டு செல்லும். பெண்களுக்கான பாதுகாப்பு, வளம் பாதுகாப்பு, மீட்பு
என பல்வேறு காரணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தல் பரப்புரையின் போது
ஒரு வழக்கு கூட நாம் தமிழர் கட்சி மீது பதிவு செய்யப்படவில்லை. ஒழுக்கமாக
செயல்படும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் இந்த தேர்தல்
நிச்சயமாக நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நம் பாட்டனார் காலத்திலிருந்த பசுமையான தமிழகத்தை மீண்டும் காணவேண்டும்
என்ற எண்ணமும் ஆசையும் கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே
வாக்களிக்க முடியும். மரம் நடுதல், கையூட்டு ஒழித்தல் என்று பல்வேறு சமூக நலத்தை
பேணும் காரியங்கள் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு மீட்பையும்
குறித்த அக்கறை கொண்ட ஒரே கட்சி இது தான்.

தேர்தல் மக்களுக்கான உரிமையையும் சுதந்திரத்தையும் பெற்றுத்தருமா?

ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தேர்தல்கள் வருகின்றன. புதிது புதிதான நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் மனங்களும் மாற்றங்களை விரும்பினாலும் மாற்றங்களை ஏற்படுத்த விளைவதில்லை. அந்தளவிற்கு மக்களின் மனங்களில் பலவிதமான எண்ணங்களை விதைத்து குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே மக்களை முடிவெடுக்க வைக்கின்றனர். கருத்துக்கணிப்புகள், நம்பும்படியான கட்டுக்கதைகள், இலவசங்கள், ஓட்டுக்குப் பணம் என்று பல்வேறு காரணிகளால் தவறான வேட்பாளர்களையே தேர்ந்தெடுக்கின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் மக்களின் கால்களிலும் விழும் வேட்பாளர்கள் வென்ற பின்னர் தொகுதி பக்கம் வருவதும் இல்லை; பிரச்சனை என்று சென்றால் தீர்வை தருவதில்லை என்பது மட்டுமல்ல மதிப்பதும் இல்லை. காரணம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் இயங்கும் கட்சிகளே.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் என்னென்ன கெடுதல் செய்திருக்கின்றனர் என்பதை பட்டியலிட்டுள்ளோம். நம் சாதி வேட்பாளரை நிறுத்தியதன் காரணமாக இவர்களது கெடுதலை மன்னித்து மறந்து வாக்களிப்பது நமக்கு நாமே துரோகம் இழைப்பதற்கு சமம் என்பதை உணர்வோம்.

அதிமுக:

தற்போதைய ஆளும் கட்சியான இவர்கள் மத்திய அரசின் கைப்பாவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். நீட், உதய் மின் தொகுப்பு திட்டம், போன்றவற்றை தமிழகத்தின் நலன் கருதி ஜெயலலிதா அவர்கள் தடுத்துவைத்திருந்த போது அதை அனுமதித்ததிலிருந்து பல்வேறு துரோகங்களை செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் என்ற தனியார் நிறுவனத்திற்காக 14 மக்களை சுட்டுக்கொன்றிருக்கின்றனர். சல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவினர். கூடங்குளம் போராட்டத்தின் போதும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை என்று மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முனைப்புக்காட்டி மக்களை துன்பப்படுத்தியிருக்கின்றனர். மணல் கடத்தல், கோடநாடு கொலைகள், வருமான வரித்துறை ரெய்டுகள் மூலம் இந்தக்கட்சியில் ஒரு உத்தமர் கூட இல்லை என்றளவில் தான் உள்ளது. பிறமொழியில் உள்ள ஊர்ப்பெயர்களை தமிழில் மாற்றுவதாகக் கூறி அதில் சமற்கிருதத்திற்கு விலக்கு அளித்தது, தமிழை கட்டாய பயிற்று மொழியாக்காதது, கீழடி போன்ற அகழ்வாய்வுகளை சரிவர வெளிக்கொணராதது இவர்கள் தமிழுக்கு இழைத்த துரோகம்.

தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்கள், அலுவலகங்கள் மட்டுமல்லாது தமிழக அரசின் வேலைகளுக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமல்ல என்று சட்டம் இயற்றிய நல்லவர்கள். உலகெங்கிலுமுள்ளவர்கள் தமிழக அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சட்டத்தை மத்திய அரசின் விருப்பங்களுக்கேற்ப மாற்றியவர்கள். குறிப்பிட்டுச்சொல்லும் படியாக எந்தவொரு நன்மையையும் தமிழகத்திற்கு செய்யாவிடிலும் துரோகமாவது செய்யாமலிருந்திருக்கலாம். தமிழகத்தில் படித்துவிட்டு வேலைக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் சூழ்நிலையில் அவர்களது வயிற்றில் அடிக்கும் வேலையை கூச்சமில்லாமல் செய்துகொண்டிருக்கின்றனர்.

திமுக:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது துரோக பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சன் டிவியை வளர்த்தது, டாடா வை மிரட்டியது, பில் கேட்ஸிடம் பேரம் பேசியது என பட்டையை கிளப்பிய மாறன் சகோதரர்கள் பி எஸ் எண் எல்லின் அதிவேக இணைப்புகளை திருட்டுத்தனமாக தமது தொழிலுக்கு பயன்படுத்தியிருக்கின்றனர். 2G வழக்கிலிருந்து இவர்கள் வெளியில் வந்தாலும் கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த பணம், நீரா ராடியா பேரம் பேசியது போன்றவை இவர்களது கயமைத்தனத்தை துகிலுறித்து காட்டத்தான் செய்கிறது. தமது பெருமையை பறைசாற்ற செம்மொழி மாநாடு நடத்தியது, தொலைக்காட்சிகளை இலவசமாக வழங்கி தமது சன் டீவி சேனல்களை வளர்த்தது. இவர்களது ஆட்சிகாலத்தில் அமைந்த அத்தனை நிறுவனங்களிலும் கையூட்டாக (லஞ்சம்) பங்குகளைப் பெற்றது.

தமிழகத்தில் உள்ள பெருவாரியான சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியிருக்கின்றனர். தமது கட்சியிலிருந்தவரையே மிரட்டி தினகரன் நாளிதழ், கரன் நெட்வோர்க், போன்றவற்றை பிடுங்கியவர்கள். தமிழ் சேனல்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு பிற மொழி சேனல்களுக்கு அந்தந்த மொழிகளிலேயே பெயர் வைத்திருப்பது தமிழின் மீதான காழ்ப்புணர்ச்சியோ. கிரிக்கெட்டில் கூட தமது மொழி சார்ந்த மாநிலத்தின் அணியையே வாங்கியிருக்கின்றனர். தங்களுக்கிடையேயான அதிகார போட்டியில் தினகரன் அலுவலகத்தை எரித்தது. ஏர்செல் நிறுவனத்தை நிப்பந்தப்படுத்தி விற்றது, ஸ்டெர்லிங் கட்டிடத்தைக் கேட்டு மிரட்டியது. அனைத்து சிமெண்ட் ஆலைகளிலுமுள்ள பங்குகளின் மூலம் விலையேற்றி பயனடைவது. கருணாநிதியின் குடும்ப சொத்து மதிப்பு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது.

காங்கிரஸ்:

பிரதானமாக ஈழத்தில் நல்ல நிலைக்கு முன்னேறிக்கொண்டிருந்த தமிழர்களில் சுமார் 2 லட்சம் பேரை கொன்றிருக்கின்றனர்.

ஸ்டெர்லைட்டின் பங்குதாரர் ப சிதம்பரம். வரிக்கு வரி கொண்டுவந்த புண்ணியவான். நீட் தேர்வில் தமிழக நலனுக்கு எதிராக வழக்காடியவர் இவரது மனைவி. பங்குச்சந்தையில் சில கோல்மால்களைச்செய்தவர் இவரது மகன்.

காவேரிப்பிரச்சனையை பெரும் பிரச்சனையாக்கி அரசியல் பொருளாக்கியது. பலமுறை கர்நாடகத்தையும் கேரளத்தையும் ஆண்டபோதும் கூட நம் தண்ணீர் பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை. காங்கிரஸ் வென்றால் மேகதாது அணை கட்டப்படும் என்று ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்து தமிழக மீனவர்களை கொல்வது. குற்றமே சரிவர நிறுபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுவிக்காலிருந்திருக்கின்றனர்.

தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு இயக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தை கொச்சியிலிருந்து இயக்கியவர்கள். தமிழர்களுக்கிடையில் வியாபாரத்தொடர்பு ஏற்படாமலிருக்க வழிவகை செய்தவர்கள்.

பாஜக:

காங்கிரஸ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இழைத்த கொடுமைகளை கொஞ்சம் கடுமையாக்கினர்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து சுங்கக்கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை என்றளவில் ஏற்றி வந்திருக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் ேற்றிக்கொண்டிருக்கின்றனர். மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் உடனடியாக ரு. 100 ஆகிவிடும்.

மேக் இன் இந்தியா என்று விளம்பரம் செய்வர் ரஃபேல் விமானத்தை பிரான்சிலிருந்து தயாரித்து இறக்குமதி செய்வர். பணமதிப்பிழப்பு என்ற பெயரில் கள்ள நோட்டுக்களை மாற்றிக்கொடுத்து பொருளாதாரத்தை சீரழித்துவிட்டனர். திருப்பூரை ஒன்றுமில்லாமலாக்கி உத்தர பிரதேசத்தில் ஜவுளி பூங்காவை தொடங்கியிருக்கின்றனர்.

வரலாறு காணாத வரி விதிப்பை ஜிஎஸ்டி மூலம் கொண்டு வந்திருக்கின்றனர். 28% வரி விதிப்பு. அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலையேறியுள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் வங்கி வாசலில் காத்துக்கிடக்க வைத்து காவு வாங்கினர்.

எல்லாவற்றிர்க்கும் உதாரணமாக காட்டும் இராணுவ வீரர்களை பலி கொடுத்து இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.

தமிழகத்தின் வளங்களோடு வேலைகளையும் வட இந்தியர்களுக்கு கொடுப்பது இவர்களே. தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு மிக முக்கிய காரணமே இவர்கள் தான். பொது மக்கள் போராட்டங்களை கெடுப்பது, கள்ளக்காதல் உயிரிழப்புகளுக்காகவும் பிரியாணி திருடுவதற்காகவும் போராட்டங்கள் நடத்துவதே இவர்களது வாடிக்கை.

நாட்டின் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாமக:

நான் தான் யோக்கியம் என்பது போல பேசி அனைத்து அயோக்கியத்தனங்களையும் செய்துகொண்டிருக்கின்றனர்.

சேலம் சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கு 2 கோடி ரூபாய்களை விவசாயிகளிடம் வசூலித்திருக்கின்றனர். தற்போது அதிமுக வுடன் கூட்டணியில் போட்டியிட பல கோடிகள் பெறப்பட்டதாக தகவல். மத்திய மந்திரியாக இருந்தபோது கையூட்டு பெற்றுக்கொண்டு சில மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அன்புமணி.

தமிழ், தமிழர் என்று வாய்கிழிய பேசும் மருத்துவர் தேர்தல் வந்துவிட்டால் பணத்திற்கு அடிமை.

தேமுதிக:

தமிழக வரலாற்றிலேயே வெளிப்படையாக இரண்டு கூட்டணிகளிடமும் பேரம் பேசி பெரும் தொகையை சம்பாதித்திருக்கின்றனர்.

கிடைத்த 4 தொகுதிகளில் ஒன்றில் கூட தமிழர்களை நிறுத்த மனமில்லாதவர்கள் தமிழகத்திற்காக எந்த நன்மையை செய்வார். ஊடகங்களிடம் பேசும் திமிர் பேச்சு. தமது தாய்மொழி நாளிதழ்களை தவறாமல் இவர்கள் படிப்பதுபோல நாமும் நம் தாய்மொழி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்தி நம் மொழியுணர்வை காட்ட வேண்டிய தருணம்.

பொதுவுடைமை (கம்யுணிஸ்ட்):

உலகெங்கும் இனம் மற்றும் தொழிலாளர் நலம் சார்ந்து இயங்கும் பொதுவுடைமை கொள்கை கொண்ட கட்சிகளில் தமிழகத்தில் மட்டுமே மாற்றினத்து முதலாளிகளின் நலனுக்காக இயங்குகிறது. போட்டியிடும் இரு தொகுதிகளிலும் தமிழரல்லாதவர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து இங்கு கொட்டப்படும் குப்பைகளைக் கூட கண்டுகொள்ள மாட்டர். அமெரிக்கா அணுவுலை வைத்தால் எதிர்ப்பர். ரஷ்யா வைத்தால் வரவேற்பர். இவர்களால் தமிழர்களால் நடத்தப்பட்ட ஆலைகள் மற்றும் நிறுவனங்களே பெருவாரியாக மூடப்பட்டுள்ளது. கூட்டுறவு ஆலைகளையும் சிதைத்த நல்ல உள்ளங்கள் இவர்கள். மொத்தத்தில் இவர்களும் தமிழகத்தின் சாபக்கேடுகளே.

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்:

இந்த கட்சிகளில் எதுவுமே தம் மக்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான காரியங்கள் எதுவுமே செய்வதில்லை. தேர்தல் நேரங்களில் இங்கொன்று அங்கொன்று என பேரம் பேசி போட்டியிடும். இவர்களனைவரும் உப்புக்குச் சப்பு தான்.

அ ம மு க:

சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பக்கட்சி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தை அபகரித்துக்கொண்டுள்ளனர். ஜெயா டி வி யும் இவர்களது. ஆர் கே நகர் தேர்தலில் 20 ருபாய் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி கண்டவர். திருடர்கள் தங்களுக்குள் உண்மையாக இருப்பர். அதில் கூட ஏமாற்றி இருக்கிறார். எப்படி நம்புவது? கட்டு கட்டாக பணம் பட்டுவாடா செய்கிறார். பல இடங்களில் மாற்றிக்கொண்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த மூவர் இந்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள். இவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் ரோட்டில் ஒரு பெண் நடமாட முடியுமா?

எல்லா கட்சியையும் குறை கூறினால் எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது. கடைசியாக நாம் தமிழர் கட்சி மீது மேலே குறிப்பிட்ட யோக்கிய கட்சிகளும் அவைகளின் அனுதாபிகளான நடுநிலைவாதிகள் போர்வையில் செயல்படுபவர்கள் வைக்கும் குற்றச்சாட்டையும் பார்ப்போம். இன்று வரை இவர்கள் அரசியலில் வெல்லாததால் மற்ற கட்சிகள் மீதுள்ள விமர்சனம் போல எதுவும் சொல்ல இயலாததால் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டைப்பார்க்கலாம்.

அதற்கு முன்பதாக கமலின் கட்சியையும் பார்த்துவிடலாம்.

ம நீ ம:

விஸ்வரூபம் படம் திரைக்கு வராவிட்டால் நான் நாட்டை விட்டு ஓடவேண்டியது தான் என்று செய்தியாளர்கள் முன் அழுது பேட்டிகொடுத்தவர். அதன் பின்னர் எவ்வளவு சம்பாதித்தார் என்றே தெரியவில்லை. இன்று திமுக அதிமுக கட்சிகளை விட அதிகளவில் விளம்பரம் செய்கிறார். தேர்தல் தொடங்கும் வரை கட்சியில் உறுப்பினர்களே இல்லை. போட்டியிட வாய்ப்பளிப்பதற்கு 20000 ருபாய் திருப்பி செலுத்தாத வாய்ப்பு நிதி என்று தன் கட்சியினரிடமே சுரண்ட தொடங்கினார். இது குறித்த செய்தி நாளிதழ்களிலும் வந்திருக்கிறது.

நடுநிலையாளர்களும் மற்ற கட்சியினரும் கமலின் கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டு இவை.

நாம் தமிழர் கட்சி:

ஈழத்து விதவையை மணந்து கொள்வேன் என்றார் ஆனால் முன்னாள் சபாநாயகர் பெண்ணை மணந்துள்ளார். இந்துக்களுக்கு விரோதமாக பேசியுள்ளார். கிறித்தவர்களுக்கு எதிராக பேசியுள்ளார். முகமதியர்களுக்கு எதிராக பேசியுள்ளார். இலங்கை தமிழர்களிடம் இருந்து பணம் பெறுகிறார். பிரபாகரனை ஆதரிக்கிறார். இலங்கை மாணவர்களை அடிப்பேன் என்று கூறினார். இன வெறியை தூண்டுகிறார். சீமான் மலையாளி. இவர் கிருத்துவர். சாதிக்கட்சி நடத்துகிறார்.

இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள குரோதத்தால் பரப்பப்படுபவையே. ஆதாரமற்றவை. மதங்களுக்கு எதிராக சீமான் பேசியதற்கு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் திராவிட கழகமும் திராவிட முன்னேற்ற கழகமுமே. இவர்கள் மீதிருந்த நம்பிக்கை அற்றுப்போனபின் தொடங்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.

இந்த கட்சி முன் வைக்கும் கொள்கைகள் நம் தமிழகத்தை தற்சார்பு பொருளாதார நிலைக்கு கொண்டு செல்லும். பெண்களுக்கான பாதுகாப்பு, வளம் பாதுகாப்பு, மீட்பு என பல்வேறு காரணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த தேர்தல் பரப்புரையின் போது ஒரு வழக்கு கூட நாம் தமிழர் கட்சி மீது பதிவு செய்யப்படவில்லை. ஒழுக்கமாக செயல்படும் இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தால் இந்த தேர்தல் நிச்சயமாக நம் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நம் பாட்டனார் காலத்திலிருந்த பசுமையான தமிழகத்தை மீண்டும் காணவேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் கொண்டவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். மரம் நடுதல், கையூட்டு ஒழித்தல் என்று பல்வேறு சமூக நலத்தை பேணும் காரியங்கள் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பண்பாடு மற்றும் தமிழர்களின் வீரம் செறிந்த வரலாறு மீட்பையும் குறித்த அக்கறை கொண்ட ஒரே கட்சி இது தான்.

வஞ்சம் வைத்து பழி தீர்ப்போம்!

ஐயா கருணாநிதியின் திருவுருவ சிலையை யாரை வைத்தும் திமுக திறந்து இருக்கலாம். நாம் மவுனமாக கடந்து சென்று இருப்போம். ஆனால் மொத்த தமிழினத்தையும் அவமதிக்கும் விதமாக எமது இனத்தின் எதிரி சோனியா காந்தியை கூட்டி வந்து திறந்து வைத்து மீண்டும் ஒரு வரலாற்று பெரும் பிழையை ஸ்டாலின் செய்து இருக்கிறார்.

2009-க்கு முன்னர் வரை தீவிர திமுக பற்றாளராக இருந்த பல இலட்சக்கணக்கான மானத் தமிழர்கள் ஈழப் போரில் திமுக செய்த துரோகத்தினை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுகவை விட்டு வெளியேறினார்கள். கருணாநிதியின் இறப்பிற்கு பின்பு எல்லோருமே கொஞ்சம் இளகிய மனநிலைக்கு வந்தார்கள். கருணாநிதியின் இறுதி நிமிடங்களில் திமுகவின் முன்னாள் தீவிர தொண்டர்கள் எல்லாம் சொன்னது…

‘ஈழப் போரை தடுக்காமல் விட்டதை தவிர கருணாநிதி பெருசாக எதுவும் செய்துவிடவில்லை. அவரது மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கூட அவரது குடும்ப அரசியலால் அவருக்கு கிடைத்த கெட்ட பெயர்தான்’ என்றெல்லாம் பொதுவாக எல்லோரும் பேசினார்கள்.

ஆனால் மீண்டும் மீண்டும் திமுகவும் கருணாநிதியும் கருணாநிதியின் குடும்பமும் கருணாநிதியின் சிலையும் கூட இந்த தமிழினத்திற்கு துரோகமே செய்கின்றது என்பதையே இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி உறுதிபடுத்துகிறது.

சோனியா காந்தி தமிழ்நாட்டில் நுழைந்துவிட்டு நிம்மதியாக திரும்பி வெளியேறும் செயல் என்பது உலகம் முழுவதும் பரவி வாழும் ஒவ்வொரு மானத்தமிழனையும் கூனிக் குறுகி அவமானத்திலும் கையாளாகாத தனத்தையும் வெளிப்படுத்துவதாக உணர்கிறார்கள்.

Go back Sonia என்று உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் பதிவிட்டாலும் அதுவொரு நிகழ்கால வடிகால் தான். ஆனால் இந்த அவமானத்தை தமிழனக்கு கொடுத்த ஸ்டாலினுக்கும் கருணாநிதியின் குடும்பத்திற்கும் கட்டாயம் திருப்பி கொடுப்போம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒரு செத்த பாம்பு. செத்த பாம்பை அடிக்கின்ற பழக்கம் தமிழினத்திடம் இருந்தது இல்லை. அதனால் இனி அடிக்கப்பட வேண்டிய மிக கொடூரமான விசமுள்ள பாம்பு திமுக தான்.

சோனியா தமிழ் நிலத்தில் நுழைந்த அடுத்த கணமே ஒவ்வொரு தமிழனின் மனதிலும் வந்து போன படம் பாலசந்திரன் சுட்டு கொலை செய்யப்பட படம் தான். அந்த பிஞ்சு பிள்ளையின் முகம் ஒரு திமுக தொண்டனுக்கு கூடவா நினைவிற்கு வரவில்லை. இதுவெல்லாம் ஒரு கட்சியா என்று கூறி திமுகாவின் மீது காறி உமிழ்ந்துவிட்டு இந்நேரம் அக்கட்சியைவிட்டு வெளியவந்திருந்தா அவனல்லவோ மானத்தமிழச்சியின் மார்பில் பால் குடித்தவன். அப்படி சூடும் சொரணையும் உள்ள எத்தனை மானத் தமிழர்கள் திமுகாவில் இன்று இருக்கிறார்கள்?

அற்ப பதவிக்கும் காசுக்கும் திமுகாவில் இருந்து இனிமேலும் நீங்கள் அரசியல் செய்து என்ன சாதித்துவிட போகிறீர்கள் உறவுகளே. தனது அருகில் நிற்கும் சோனியா காந்தியிடம் ஈழவிடுதலையே தமிழினத்தின் விடுதலை என்று சொல்கின்ற ஆண்மை உங்களது தலைவர் ஸ்டாலினுக்கு உண்டா?

அப்படியானதொரு ஆண்மை திமுக தலைவருக்கு இல்லை என்றால் ஆண்மையுள்ள மானத்தமிழர்களுக்கு திமுகாவில் என்ன வேலை. திமுகவை விட்டு வெளியேறுங்கள். இனியும் பாவம் செய்யாதீர்கள்.

இன்றில்லை என்றேனும் என்றேனும் ஒருநாள் எம்மை கருவறுத்த ஒவ்வொரு எதிரியையும் துரோகியையும. கட்டாயம் வஞ்சம் வைத்து பலி தீர்ப்போம். இடையில் எவன் வந்தாலும் அவனும் வேட்டையாடப்படுவான். அதற்குள் திமுகாவைவிட்ட ஒன்று இரண்டாக இருக்கும் மானத்தமிழர்களும் வெளியேறிவிடுங்கள்.

இது இறுதி எச்சரிக்கை…

-பேராசிரியர் ஆ.அருளினியன்

மொழிவழி மாநில வரலாறு அறிவோம்!

1895இல் மொழிவழி மாகாணம் கேட்டு முதன்முதலில் போராடியவர்கள் ஒரியர்கள். ஒரிய தேசத் தந்தை மதுசூதன் தாஸ் தலைமையில் அவர்கள் போராடி 1935இல் ஒரிசா என்ற பெயரில் தனி மாகாணம் கண்டனர். அதுபோலவே 1906 முதல் தனி மராத்திய கோரிக்கையும் வலுப்பெற்றது.

1919இல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்த திலகரும் கூட தனி மராத்திய கோரிக்கையையும் சேர்த்தே எழுப்பி வந்தார். காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கிய போது மொழிவழி மாகாண கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தது.

1921இல் மொழிவழி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்படுவதோடு அதற்கு சுயாட்சியும் வழங்க வேண்டும் என்று 1924இல் பெல்காமில் கூடிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.

சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி பிரதேசங்கள் ஒன்றாக இயங்கி வந்த போது 1915 இலிருந்து ஆந்திரர்கள் தான் முதன் முதலில் தனி மாகாணம் கேட்கத் தொடங்கினர். 1921இல் தனி ஆந்திர காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்ட பின்னர் எல்லைச் சிக்கல் ஏற்பட்டது.

திருப்பதிக்கு தெற்கே உள்ள தமிழகப் பகுதிகளும் தங்களுக்கே சொந்தம் என்று ஆந்திரர்கள் வாதிட்டனர். திருப்பதி, திருத்தணி, சித்தூர் ஆகிய. மூன்று தாலுக்காக்களையும் தமிழ்நாடு காங்கிரசில் சேர்க்கப்பட வேண்டுமென்று சத்திய மூர்த்தி ஐயர் கோரினார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆந்திர காங்கிரசுக்கு மேற்படி தாலூக்காக்கள் தாரை வார்க்கப்பட்டது.

1926இல் மத்திய சட்டப்பேரவையில் சி.சங்கரன் நாயர் என்பவர் சென்னை மாகாணத்திலுள்ள தமிழ் பேசும் பத்து மாவட்டங்களை தனியாகப் பிரித்து சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

1937இல் இராசாசி அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை மேற்கண்ட போது தமிழ்நாடு தனி மாகாண கோரிக்கையை தமிழறிஞர்கள் எழுப்பினர். இந்தி திணிப்பிற்கு எதிராக பெரியாரும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். போராட்டம் தீவீரமடைந்த நிலையில் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கம் பிறந்தது. பெரியார் அந்த முழக்கத்தை “திராவிட நாடு திராவிடருக்கே” என்று திசை மாற்றினார். தமிழ்நாடு மாகாணக் கோரிக்கை காணாமல் போனது.

அதற்குப் பிறகு 1946இல் தமிழ்நாடு மாகாணக் கோரிக்கைக்கு புத்துயிர் தந்தவர் ம.பொ.சிவஞானம் ஆவார். மொழிவழித் தமிழகம் அமைக்கக் கோரியும், தமிழக எல்லைகளை மீட்கக்கோரியும் தெற்கெல்லையில் மார்சல் நேசமணி தலைமையிலும், வடக்கெல்லையில் ம.பொ.சி., மங்கலங்கிழாரின் ஒன்றுபட்ட தலைமையிலும் தமிழர்கள் விடாது போராடி வந்தனர். 1.11.1956இல் மொழிவழித் தமிழ்நாடு உருவாக்கப்பட்டது.

இருப்பினும், தமிழர்களின் வரலாற்று வழி வந்த கோலார், கொள்ளேகால், நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை, உடுமஞ்சோலை, செங்கோட்டை வனப்பகுதி, கண்ணகி கோயில், தேவி குளம், பீர்மேடு, திருப்பதி, சித்தூர், புத்தூர், நகரி, ஏகாம்பரம் குப்பம், ஆகிய பகுதிகளை தமிழகம் இழந்ததால் காவிரி நீருக்கும், முல்லைப் பெரியாற்று நீருக்கும், பாலாறு நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வந்து விட்டது.

மா.பொ.சி. அவர்களால் சென்னை, திருத்தணியும், நேசமணி அவர்களால் கன்னியாகுமரியும் தமிழனுக்கு கிடைத்த ஆறுதல் பரிசாகும். மா.பொ.சியின் தமிழரசுக் கழகமும். நேசமணியின் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசும் போராடியிருக்கா விட்டால் மொழிவழித் தமிழ்நாடு கிடைத்திருக்காது. அன்றைய காங்கிரசு அரசும், திராவிட இயக்கங்களும் தனியாக போராட்டம் நடத்த மறுத்த செயல் தமிழக வரலாற்றில் கறை படிந்த அத்தியாயமாகவே உள்ளது. 1946 முதல் 1960 வரை வீறு கொண்டெழுந்த தமிழக எல்லைப் போராட்டங்கள் குறித்து இன்றளவும் காங்கிரசும், திராவிட இயக்கமும் பேசுவதில்லை.

தற்போது தில்லியில் ஆட்சி நடத்தும் பாரதீய சனதாவாகட்டும், முன்பு ஆண்ட காங்கிரசாகட்டும் தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் ஒன்றுபட்டு செயல்படுவதை நாமறிவோம்!

தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும் இன்றைய சோனியா காங்கிரசு விசுவாசம் காட்டுவது போலவே அன்றைய நேரு காங்கிரசும் விசுவாசம் காட்டியது. தமிழக காங்கிரசை வழி நடத்திய காமராசரும் தேசிய சிந்தனையுடன் தமிழக எல்லைகளை மீட்பதில் அக்கறையற்றவராகவே காணப்பட்டார்.

தில்லியின் ஆசிர்வாதத்தோடு ஆட்சி நடத்திய இராசாசி கூட, “சென்னையை ஆந்திராவிற்கு தமிழகம் துறக்குமானால் நான் பதவி துறப்பேன்” என்று பேசினார். காமராசரோ இந்திய தேசம் என்ற ஒற்றை கொள்கையில் பிடிவாதமாக இருந்து கொண்டு “குளமாவது மேடாவது” என்று தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை விட்டுக்கொடுத்தார்.

சங்கரலிங்கனார் நடத்திய “தமிழ்நாடு” பெயர் சூட்டும் போராட்டத்தை கண்டு கொள்ள மறுத்தார். எனினும் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பியிருந்தார். அண்ணா தலைமையிலான ஆட்சி அமைந்த போதே இதற்கான ஒப்புதல் கிடைத்தது. எல்லை ஆணையம் அமைக்கக் கோரி இயக்கம் நடத்திய ம.பொ.சி.யை கட்சியிலிருந்தும் நீக்கினார். அன்றைய காங்கிரஸ் கட்சியிலிருந்து தெலுங்கர்களின் ஆதிக்கம் மற்றும் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகம் போன்றவற்றுடன் நெருங்கியிருந்த இராசாசி போன்றவர்களால் ம பொ சி க்கு மறைமுகமாகவே உதவ முடிந்தது என்று தகவல்கள் உள்ளது. நேசமணிக்கும் இதே நிலை தான். மலையாள சமஸ்தான காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்தார். நேசமணியின் விருப்பமான திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை சென்னை மாகாண காங்கிரசோடு இணைக்க மறுத்தார். அவரது விருப்பமில்லாததற்கு காரணமே நல்ல நிலையிலிருந்த கன்னியாகுமரியை பின்தங்கியிருக்கும் தமிழகப்பகுதியுடன் இணைக்க வேண்டுமா என்ற குழப்பமே. இருப்பினும் அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கிணங்க காமராசரின் தலைமையிலேயே குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இன்று வரை தனது சாதியினர் அதிகமிருந்ததனாலேயே குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைத்தார் என்ற பழிச்சொல்லுக்கும் குறைவில்லை.

எல்லை மீட்புப் போருக்கு காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சி தீமை செய்தது ஒருபுறம் என்றால், திராவிடக் கட்சிகளின் திராவிட நாடு கோரிக்கையும், மறுபுறம் தீமை செய்தது. தமிழ்நாடு மாகாண கோரிக்கையை திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகவே பெரியார் கருதினார். அதே வேளையில் விசாலா ஆந்திரா, ஐக்கிய கேரளம், சம்யுக்த கர்நாடகம் என்று முழக்கம் எழுப்பிய தெலுங்கர்களையோ, மலையாளிகளையோ, கன்னடர்களையோ, திராவிடர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகக் கருதி பெரியார் கண்டிக்க மறுத்தார்.

தி.க.விலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட அண்ணாவும் திராவிட நாடு கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்திருந்தும் எல்லைப் மீட்புப் போரை முன் நின்று நடத்த ஓடோடி வரவில்லை.

அண்ணாவோடு மாறு பட்டு 1956இல் திராவிட நாடு விடுதலையை கைவிட்டு, தமிழ்நாடு விடுதலைக்கு போராடுவதாக அறிவித்த பெரியாரும் வடவேங்கடம், திருத்தணி மீட்பு போரில் மவுனம் காத்து வந்தார். கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல தாய் மண்ணை விற்று தமிழ்நாடு வாங்க முடியாது என்பதும் உண்மை.

வடக்கெல்லைப் போரில் இரண்டு பேர் சிறையிலும், தெற்கெல்லைப் போரில் ஒன்பது பேர் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான கதை எத்தனை தமிழர்களுக்கு தெரியும்! தங்கள் பங்களிப்பு இல்லாத காரணத்தால் திராவிட இயக்கங்கள் இந்த வரலாற்றை மூடி மறைக்கவே நினைக்கின்றன.

மொழிவழி கர்நாடகம் அமையப் பெற்ற நவம்பர் ஒன்றாம் நாளில் கன்னடர்கள் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடத் தவறுவது இல்லை. கன்னடர்கள் சிவப்பு மஞ்சள் நிறம் கொண்ட கன்னடக் கொடிகளை தங்கள் இல்லங்களில், தெருக்களில், அலுவலகங்களில் பறக்க விடுவர். ஆடியபாடியும் பாடிய படியும் கன்னடர் எனும் இனவுணர்வோடு மகிழ்ச்சி கொள்வர். இதனை கன்னடர்களிடமிருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்.

காலங்காலமாக அண்டை தேசங்களாலும், தில்லி அரசாலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் அவல நிலையை இனியும் தொடர தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. இழந்த மண்ணை மீட்கவும், இருக்கும் மண்ணை காத்திடவும், இறையாண்மை கொண்ட தமிழ்நாடு விடுதலை பெறவும் தமிழர் தாயக நாளில் ஒவ்வொரு தமிழரும் உறுதியேற்போம்!