திரிபுரா மக்கள் முன்னணிக்கு சீமானின் கடிதம்

திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் அம்மா பட்டால் கன்யா ஜமாத்தியா கடிதத்திற்கு சீமான் அண்ணன் பதில். வல்லாதிக்க மத்திய அரசுக்கு எதிராக தேசிய இனங்கள் அனைத்தும் ஓரணியில் சேர அழைப்பு.

பெறுநர்,
பட்டால் கன்யா ஜமாத்தியா, தலைவர்,
திரிபுரா மக்கள் முன்னணி, திரிபுரா.

தமிழர்களின்
தேசத்திலிருந்து உங்களுக்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்கள்! EIA 2020 வரைவுக்கு எதிரான எனது அறிக்கையை நீங்கள் படித்து அதற்கு ( EIA 2020 ) எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களில் நாம் தமிழர் கட்சி பிரதிநிதிகள் திரு ஜீவா டானிங் மற்றும் முனைவர் பால் நியூமன் அவர்களோடு போராட்ட களங்களில் இணைந்து செயல்படுவதை நான் வரவேற்கிறேன். உங்கள் கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களின் உரிமை மீட்பு, அவர்களின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவை நாம் தமிழர் கட்சியின் தலையாய கொள்கைகளில் ஒன்றாக உள்ளன.

அதை அடிப்படையாக கொண்டு ரோஹிங்கியா இனப்படுகொலை நடந்த போது அதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மாபெரும் போராட்டம் நடத்தியதை நீங்கள் அறிந்திருக்கலாம். எப்போதெல்லாம் தேசிய இனங்கள் ஏகாதிபத்திய சக்திகளால் அடக்கு முறைக்கு உள்ளாகிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் எங்கிருந்தாலும் எங்கள் குரலை ஆதிக்கவாதிகளுக்கு எதிராக முடிந்தவரை நாம் தமிழர் கட்சி உயர்த்தி வருகிறது .

சட்ட விரோதமாக குடியேறிய பங்காளதேசியர்களால் திரிபுரா பூர்வகுடி மக்களின் வணிகம், ஆளுகை, அதிகாரம் பறிபோய் சொந்த மண்ணிலேயே திரிபுராவின் பூர்வகுடி மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டு வரும் மோசமான நிலையை நான் அறிந்து வருந்துகிறேன் .

தொடர்ந்து திரிபுராவில் பூர்வகுடி மக்களுக்கு எதிராக நடந்து வருகிற நிகழ்வுகளை நான் கவனித்து வருகிறேன். பூர்வ குடி மக்களுக்கு எதிராக சட்ட விரோதமாக குடி ஏறியவர்களால் சமீப காலங்களில் நடத்த படுகிற கூட்டு பாலியல் வன்கொடுமைகளையும் கொலைகளையும் நாம் தமிழர் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. பூர்வகுடி மக்களுக்கு மத்திய மாநில அரசாங்கங்கள் உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது சம்பந்தமான நடவடிக்கைகளில் உங்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்.

“கோக் போரோக்” என்கிற திரிபுரா மக்களின் தாய்மொழி, உங்கள் இனத்தின் கலை மற்றும் கலாச்சாரம் அழிக்கப்படும் போது ஏற்படும் வலியை எங்களால் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரம் பெற்றதிலிருந்து, மத்திய அரசுகள் தொடர்ந்து தேசிய இனங்களையும் பூர்வ குடி மக்களையும் அடக்கி வருகின்றன, ஒரு வழி தடை பட்டால் இன்னொரு வழியில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
எங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்று “பண்பாட்டு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.” என்பதாகும் , அதை அடைய நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். எங்கள் தலைவர், மேதகு, வே . பிரபாகரனின் மேற்கோள்களில் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன்:

அது “உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு இருந்தால் ஒரு சிறிய தேசமும் ஒரு வல்லரசை எதிர்த்துப் போராட முடியும்.” என்பதாகும்.

இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலங்களிலும் தன்னாட்சி ஏற்படுத்துவது நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு. அந்தந்த மாநிலங்களை அந்தந்த பூர்வகுடிகளே ஆள வேண்டும்.

நம் உரிமைகளை வென்றெடுக்க தேசிய இனங்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், ஒற்றுமையைக் காட்ட வேண்டும். திரிபுரா மாநிலத்தில் தன்னாட்சியை அடைய போராடும் திரிபுரா மக்கள் முன்னணிக்கு நாம் தமிழர் கட்சி பெரிதும் துணை நிற்கும். ஏகாதிபத்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அணி சேர்ந்து போராட அழைக்கிறேன் .

தமிழர் – திரிபுரா மக்கள் ஒற்றுமை ஓங்குக! அனைத்து தேசிய இனங்களின் ஒற்றுமை ஓங்குக! நன்றி

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) – http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரகக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம்! (1956)

ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மக்களின் மொழியே அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியாக அமையும். அவ்வகையில் தமிழகத்தில் பேசப்படும் தமிழ்மொழியே தமிழகத்தின் ஆட்சி மொழியாக அமைய வேண்டுமென்று 27.12.1956இல் சட்டம் நிறைவேற்றப்பட்டு,

23.01.1957இல் புனித ஜார்ஜ் கோட்டை அரசிதழில் வெளியிடப்பட்டு, “தமிழ்மொழி” தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக அரசுக் கட்டிலில் ஏறியது. இச்சட்டமே “தமிழ்மொழி”க்காக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட முதல் சட்டமாகும். இன்றைய சூழலில் கழகங்கள், வாரியங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள், விளம்பரங்கள், செய்தித்தாள்கள், கடைகள், நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் ஏனைய இடங்களில் தமிழ்மொழி புறக்கணிப்படுவதைக் கண்டு உள்ளம் வெதும்பும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் மட்டுமல்லாது எல்லாத் தமிழர்களும் கட்டாயம் அறிந்துவைத்திருக்க வேண்டியது "தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டம்". இச்சட்டத்தை அமல்படுத்த சென்னையில் தமிழ்வளர்ச்சி இயக்கம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறை என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருப்பதை நாம் இன்னும் அறியாமலிருக்கிறோம். இனி அறிந்து கொள்வோம். வங்கிப்படிவங்கள் ஏன்? தமிழில் இல்லையென்று பலர் வங்கிகளில் சண்டையிட்ட காணொளிகளை இணையதளங்களில் பார்த்திருப்போம்.

இச்சட்டத்தை அறிவதன் மூலம் சத்தமில்லாமல், சண்டையில்லாமல் அந்தப் படிவங்களில் தமிழ் முத்திரையைப் பதிக்கவைக்க முடியும். ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இன்றியமையாத சில ஆணைகள் மட்டும் இப்பகுதியில் சுட்டிக்காட்டப் பெறுகிறது.

👉 1956ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் (தமிழ்நாடு சட்ட எண் XXXIX / 1956). இச்சட்டத்தின்படி தமிழகத்தின் ஆட்சி மொழியாகத் தமிழ் இருத்தல் வேண்டும். இது தமிழகம் முழுவதையும் அளாவி நிற்கும்.

👉 அரசு அலுவலகங்களுக்கு இடையே கடிதப் போக்குவரத்து தமிழில் மட்டுமே இருத்தல் வேண்டும் அரசாணை எண் 1076 நாள் 27.09.1969.

👉 தமிழில் மட்டுமே தமிழக அரசு ஊழியர்கள் கையொப்பம் செய்ய வேண்டும். பெயர்க்கு முன்எழுத்தும்(Initial) தமிழிலேயே இருக்க வேண்டும். அரசாணை எண் 431 நாள் 16.09.1998 தமிழ்வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலைய (த.வ) துறை

👉 அரசு அலுவலகப் பெயர்ப்பலகை, அரசால் வெளியிடப்படும் அறிவிப்புகள், அறிக்கைகள், ஏல அறிவிப்பு விளம்பரங்கள், இதர விளம்பரங்கள் வெளியிடும் அலுவலரின் பெயருக்கு முன் எழுத்து, ஆங்கில எழுத்தாக (எஸ்.முத்து) எழுதப் படுகிறது. இதைத்தவிர்த்து சரியான தமிழில் (சு.முத்து) பயன்படுத்த வேண்டும். கையொப்பம் செய்யும் போதும் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். தமிழ்வளர்ச்சித் துறை கடிதம் எண் 3911 நாள் 15.04.1999.

👉 அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.

👉 தமிழ் – ஆட்சிமொழிச் சட்டம், 1956 – ஆட்சிமொழிச் சட்டத்தினை நடைமுறைப்படுத்தாத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தல். அரசாணை எண் 24.

👉 தமிழ் வளர்ச்சி-கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றில் பெயர்ப்பலகைகளைச் சரியாகத் தமிழ்ச் சொற்களில் எழுதிவைத்தல். அரசாணை 291.

👉 அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.

👉 பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பொதுத்துறை நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971

👉 உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மைய, மற்றும் பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தி்ல் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் கடிதப் போக்குவரத்துகள் தமிழிலேயே அமைதல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.

👉 அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.

👉 அலுவலக வரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.

👉 அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்களின் அளவு இடம் பெற வேண்டுவது தொடர்பாகவும் ஆணையிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றம் பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.

👉 அரசாணைகள் அனைத்தும் கட்டாயம் தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் அரசாணை எண் 41, நாள் 20.02.2008. அமைச்சர் தனி அனுமதி பெறாமல் ஆங்கிலத்தில் வெளியிடக் கூடாது. ஆங்கிலத்தில் வெளியிட்டால் உடனடியாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட வேண்டும். (இம்முயற்சியில் வழக்கறிஞர் நல்வினை விசுவராசு அவர்களது பங்கும் உண்டு). ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இவை போன்று பல அரசாணைகளை அரசு பிறப்பித்துள்ளது.

"தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் -- வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ்" என்ற முகநூல் பக்கத்தில், தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தையும், அரசாணைகளையும் மீறி தமிழ் அல்லாத மொழிகளில் விளம்பரம் வெளியிட்ட அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வழக்கறிஞர் நல்வினை விசுவராசு அனுப்பிய கடிதமும், அதற்கு வழங்கப்பட்ட பதில்களும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தகவல்களுக்கு அப்பக்கத்தை அணுகலாம். ( https://m.facebook.com/1418264355081602/photos/a.1418546725053365/1418549781719726/?type=3 )

அனைத்து வங்கிகளிலும் புதிய கணக்கு தொடங்கும் விண்ணப்பம், பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் விண்ணப்பங்கள், அறிவிப்புப் பலகைகள் என வங்கியின் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை நகலுக்கான இணைய இணைப்பு ( https://m.facebook.com/story.php?story_fbid=1603674366443108&id=100004016814910 ). தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தின்படி தமிழை பயன்படுத்தாத வங்கிகள், அரசு அலுவலகங்கள், அறிக்கைகள், அறிவிப்புகள், ஏல அறிவிப்பு விளம்பரங்கள் மற்றும் இதர இடங்களில் தமிழ் நீக்கப்படும்போது, மேற்கண்ட சட்டத்தைப் பயன்படுத்தி, அந்த மாவட்டத்தில் பணிபுரியும் "தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர்" அவர்களுக்குக் கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவைப்போம். தமிழ் காப்போம்.

தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம்
(மாதிரிக்கடிதம்)

அனுப்புநர்: தங்கள் பெயர் முகவரி.

பெறுவர்: தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியரகம், _____________ மாவட்டம்.

பொருள்: தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்டத்தை அமல்படுத்துதல் சார்பு.

ஐயா/அம்மையீர் வணக்கம், _____________ மாவட்டம், _____________ வட்டம், ______________________ ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட கடைவீதியின் மேற்கு சாலையில் __________________________ என்ற பெயர் கொண்ட கடையின்/ தொழிற்சாலையின்/ வங்கியின்/ உணவகத்தின்/ நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு ஆட்சிமொழிச்சட்ட அரசாணை எண் 291இல் கூறப்பட்டுள்ள, "கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் முதலியவற்றில் பெயர்ப்பலகைகளைச் சரியாகத் தமிழ்ச் சொற்களில் எழுதிவைத்த"லுக்கு எதிராக அல்லது அவ்வரசாணையை மீறி ஆங்கிலத்தில் (அல்லது பிறமொழியில்) குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநராகிய தாங்கள் உடனடியாக இதில் தலையிட்டு தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை மீறிய அக்கடையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பெயர்ப்பலகையைத் தமிழில் மாற்ற சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இப்பகுதியில் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை முறையாக அமல்படுத்தாத அல்லது அமல்படுத்துவதில் அலட்சியம் செய்த அதிகாரிகள் மீது "தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்ட அரசாணை எண் 24"இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி. தமிழ் வாழ்க.

இடம்
நாள் இப்படிக்கு

(வங்கிகளில் பெயர்ப்பலகை, அறிவிப்புப்பலகை, புதிய கணக்கு தொடங்கும் விண்ணப்பம், பணம் எடுத்தல் மற்றும் செலுத்தல் விண்ணப்பம் ஆகியவை தமிழில் இல்லாதபோது இதே முறையில் அம்மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதி த.ஆ.சட்டத்தை அமல்படுத்த வைக்கலாம்)

— ஏறன் சிவா
சேலம் மாவட்டம்
பத்து ரூபாய் இயக்கம்
இராசிபுரம் மாவட்டம், நாமக்கல்.

அமெரிக்காவைப் போல் தமிழ்நாடும் எழுச்சி பெறும்

அமெரிக்கா – கொலம்பஸ் சிலைகள்.
(உடைத்து எறியபட்டன.)

தமிழ்நாடு – திராவிடர் சிலைகள்.
(உடைத்து எறியப்படும்.)

—மஞ்சு மஞ்சுநாதன்

“அடைவதற்கோர் இலட்சியம் இல்லாத வாக்காளர் கூட்டமாகத் தமிழர்களை
திமுக-வும், அதிமுக-வும் மாற்றிவிட்டன!”

  • பெ.மணியரசனார்

தமிழ்த்தேசியத்தையும் அந்த புதைகுழிக்குள் இழுக்க சிலர் முயல்கின்றனர். அவர்கள் இவர்களைவிட ஆபத்தானவர்கள்.

—த தமிழினியன்

தினமணி கேள்விப்பட்டிருக்கோம்; நாயுடுமணி கேள்விப்பட்டிருக்கோமா?

தமிழகத்தில் இவ்வளவு நாயுடுக்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என நாயுடு மணி என்ற ஏடு புகழ்பாடி இருக்கிறது

அது இருக்கட்டும்

தி நகர் சத்யா தமிழர் அல்ல என தி நகர் தொகுதி தமிழ் மக்களுக்கு தெரியுமா?

அண்ணாநகர் எம். கே .மோகன் தமிழரல்ல. நாயுடு சமூகத்தைச் சார்ந்தவர் என அங்குள்ள தமிழர்களுக்கு தெரியுமா?

இவர்கள் ஒருவேளை ஆந்திராவில் தேர்தலில் நின்றால், இவர்களது பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி தான் இருக்கும் !

தமிழகத்தில் மட்டும் ,”தான் சார்ந்த குடி பெயரை “இவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் .

ஏனென்றால் “நாயுடு” என்று தெரிந்து விட்டால் ஒரு தெலுங்கு வேட்பாளருக்கு நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என நம்மில் பலர் சிந்திப்பார்கள்.

அதனால் தான் சார்ந்த நாயுடு குடி மக்களுக்கு மட்டும் தெரியப்படுத்துவதற்காக இது போன்ற பெட்டி செய்திகளில் வெளியிட்டு கொள்வார்கள்.

பொது வெளியில் எங்கும் உரக்கச் சொல்ல மாட்டார்கள்

சென்னை

  • துறைமுகம் – பிகேசேகர்பாபு நாயுடு, தெலுங்கர் முன்னேற்ற கழகம்
  • வில்லிவாக்கம் – பா_ரங்கநாதன் நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

  • தெலுங்கர் தியாகராய செட்டி பெயரில் உருவாக்கப்பட்ட தி நகர் – பிசத்தியநாராயணன்நாயுடு என்ற சத்யா (அதிமுக)
    • அண்ணாநகர் – எம்கே மோகன் நாயுடு (வீடு இருப்பதே ஐய்யாவு நாயுடு காலனி), தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

  • தாம்பரம் – எஸ்ஆர் ராஜா நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
  • கும்முடிபூண்டி – கேஎஸ் விஜயகுமார் நாயுடு (அதிமுக)
  • செங்கல்பட்டு – ஆப்பூர் வரலட்சுமி நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
  • கோவை

    • கோவை வடக்கு – அருண் குமார் நாயுடு, அதிமுக

    • கோவை தெற்கு – அம்மன் கே அர்ஜுன் நாயுடு, அதிமுக

    • சிங்காநல்லூர் – N கார்த்திக் நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

  • கீழ் பெண்ணாத்தூர் – கு பிச்சாண்டி நாயுடு, தெலுங்கர் முன்னேற்ற கழகம்
  • மற்றவை


  • கோவில்பட்டி – கடம்பூர் ராஜு நாயுடு, அதிமுக
    • விருதுநகர் – ஏஆர்ஆர் சீனிவாசன் நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

    • திருவண்ணாமலை – ஏவேலு நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
    • ராணிப்பேட்டை – ஆர் காந்தி நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

    • ஆம்பூர் – பாலசுப்பிரமணி நாயுடு, அதிமுக

    • கும்பகோணம் – அன்பழகன் நாயுடு, தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

    இவர்கள் அனைவரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள்,
    இவர்களில் 9 வேட்பாளர்கள் தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் அதிமுக கட்சியினர்

    தெலுங்கு இன வேட்பாளர்களில் இவர்கள் மட்டுமல்ல!


    ரெட்டியார் சமூக பட்டியலை எடுத்தால் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ,கே என் நேரு போன்று ஒரு பட்டியல் வரும்

    அது போல அருந்ததிய சமூகத்தை எடுத்துக்கொண்டால் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட சிலர் வருவார்கள்

    நாயுடுவானாலும், ரெட்டியானாலும், அருந்ததியானாலும் எவரும் தங்களை தெலுங்கர் என்று சொல்லி தமிழ் மக்களிடம் வாக்கு கேட்பதில்லை

    மேலும் இவர்கள் வெற்றி பெற்றிருக்கிற எந்த ஒரு தொகுதியிலும் 51 விழுக்காடு தங்கள் தெலுங்கு இன மக்கள் வாக்கை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். தெலுங்கர் என்று அடையாளப்படாமல் இருப்பதே இவர்களுக்கு பலம்.

    ஆனால் அது தமிழர்களாகிய நமக்கு பலவீனம். அப்படியானால்

    இவர்களைப் போன்றவர்களை யார் அடையாளம் காட்டுவ்து?

    பொதுவாழ்க்கைக்கு வருகின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடி பெயரை மூடி மறைக்காது இட்டுக் கொள்ள வேண்டும் என, மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்துவதே “ஒரு செயலை எதிர்பார்த்துத்தான்”.

    அதாவது தெலுங்கர்கள் தங்கள் குடி பெயரை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த வேண்டும்.

    அவ்வாறு ஏற்படுத்துவதன் மூலமே தமிழகத்தை தமிழன் ஆள வழிவகுக்கும். அதைவிட்டு தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று பேசிக்கொண்டிருந்தால் அது வெட்டி பயணமாகவே இருக்கும்

    கந்தசாமி பிள்ளை அதியமான்
    (த/பெயர். தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை என்ற பட்ரையன்
    தாத்தா பெயர் தெய்வத்திரு
    கந்தசாமி பிள்ளை, பொன்னகரம் ராஜபாளையம்).

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்

    24-05-1981தமிழ்நாட்டில் 1938இல் உருவான இந்தி எதிர்ப்புப் போரில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் எழுப்பப்பட்டது. இது தமிழ்த் தேசியத்தின் முதல் எழுச்சிப் போராட்டமாகும். அப்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த சி.பா.ஆதித்தனரை இந்த போராட்டம் மிகவும் கவர்ந்தது. தமிழ்நாட்டை மீட்கும் இலட்சியத்தை மேலும் வளர்த்தெடுக்க விரும்பினார். உடனடியாக சென்னைக்கு குடும்பத்தோடு வந்தடைந்தார்.

    அப்போது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கம் நீதிக்கட்சியால் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்று மாற்றம் பெற்றிருந்தது. அதனை விரும்பாத ஆதித்தனார் தனித்தமிழ் நாடு கோரும் இயக்கமொன்றை தனியாக உருவாக்க எண்ணினார்.

    அதன்படி 1942இல் ‘தமிழ் ராச்சியக் கட்சி’யை தொடங்கினார். பின்னர் அதனை 1957இல் ‘நாம் தமிழர் இயக்கம்’ என்று பெயர் மாற்றினார்.அதற்கான காரணத்தை அவரே விளக்குகிறார்:

    “நான் அயர்லாந்து விடுதலை இயக்கத்தை அறிந்துள்ளேன். அதன் பெயர் ‘சின்பெயின்’. அதன் பொருள் நாங்கள் ஐரிஷ் மக்கள். பிரித்தானியரும் ஐரிஷ் மக்களும் வேறு வேறானவர்கள் என்பதையும் அது குறித்தது. அதுபோல் ‘நாம் தமிழர்’ என்று சொல்லும் போது நாங்கள் இந்தியர்களுமல்ல, திராவிடர்களுமல்ல, நாங்கள் தமிழர்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. அதனால் தான் நாம் தமிழர் என்ற பெயரை தெரிவு செய்தேன்”. என்றார்.

    1942ஆம் ஆண்டு ‘தமிழப்பேரரசு’ எனும் அரிய நூலை வெளியிட்டார். ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழர்கள் இழந்த ஆட்சி உரிமையைப் பெற்று, ஒரு பேரரசாக உலகத்தில் மீண்டும் விளங்க முடியும் என்பதை எடுத்துரைக்கும்மிகச் சிறந்த நூலாகும். இந்நூல் அனைவராலும் பாராட்டப்பட்டு பதினாறுக்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்டது.

    அந்நூலில், ஆதித்தனார் கூறுகிறார்: “தமிழ்நாட்டின் வரலாற்றில் 600 ஆண்டு என்பது ஒரு கால வட்டம் ஆகும். அதாவது, தமிழர்களுக்கு 600 ஆண்டு வாழ்வும் அதன் பின் தாழ்வுமாக மாறி மாறியே வந்துள்ளது. கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை பிற நாட்டவர்களான வடவர்களைத் தோற்கடித்து தமிழர்கள் ஆண்டார்கள்.

    வில்,புலி, மீன் கொடி உயரப் பறந்தது. முதல் 600 ஆண்டுகள் தமிழ்நாட்டின் பொற்கால வட்டமாகும்.அடுத்து, கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள், பல்லவர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆட்சி செய்தனர். வில், புலி, மீன் கொடி மறைந்தது. வடமொழி வளர்ந்தது.

    இரண்டாவது 600 ஆண்டுகள் தமிழகம் அடிமைக்கால வட்டமாகும். அடுத்து, வடநாட்டு அரசர்களுக்கும், வடமொழிக்கும் அடிமைப்பட்ட தமிழினம் மீண்டும் 9ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசால் தலை நிமிர்ந்தது.

    மூன்றாவது 600 ஆண்டுகள் தமிழகத்தின் இரண்டாவது பொற்கால வட்டமாகும். அடுத்து கி.பி.14ஆம் நூற்றாண்டு முதல் இன்றைய 20ஆம் நூற்றாண்டு வரை தமிழினம் அடிமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விசயநகரப் பேரரசு, உருது நவாப்புகள் அரசு, ஆங்கிலப்பேரரசு, தில்லி இந்திப் பேரரசு என்று தொடர்ந்தாற் போல் வேற்றினத்தாரால் தமிழினம் அடிமைப்பட்டு கிடக்கிறது. இந்த 600 ஆண்டுகள் தமிழகத்திற்கு ‘கறுப்பு கால வட்டம்’ என்ற போதிலும் அதனை தற்போது கடந்து விட்டோம்.

    தமிழகத்தின் பொற்காலம் மீண்டும் தோன்ற வேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ்மக்கள் விழித்து எழுவது உறுதி. சுதந்திர தமிழப் பேரரசு அமைத்திடுவோம் என்று விரிவாக அந்த நூலில் ஆதித்தனார் குறிப்பிட்டுள்ளார். தமிழன் தன்னை திராவிடன் என்று சொல்வதை எப்போதும் இழிவாகவே கருதினார். தமிழ்ப்புலவர்கள் எழுதிய எந்த இலக்கியத்திலும் திராவிடம், திராவிடநாடு கிடையாது என்பதால் திராவிடம் தமிழருக்கு ஆகாது என்றார்.

    உலகில் சிறுபான்மையினர் என்றாலே அதற்கு அடிமை என்று பொருள். இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மை. சிங்களரோ பெரும்பான்மை. அதனால் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். அதுபோல் இந்தியாவில் இந்தி பேசுபவர் பெரும்பான்மை. தமிழ்நாட்டினர் சிறுபான்மை. அதனால் தில்லி ஆட்சிக்கு தமிழர்கள் அடிமையாக உள்ளனர். அறிஞர் அண்ணா எழுப்பும் திராவிட நாட்டிலும் தெலுங்கர்கள் அதிகமாக இருப்பர். தமிழர்கள் சிறுபான்மை ஆகி விடுவர். எனவே திராவிட நாடு கிடைத்தாலும் அதிலிருந்து விடுபட தமிழ்நாடு விடுதலையை நடத்துவேன் என்றும் முழங்கினார்.

    சுதந்திரத் தமிழ்நாடு என்பது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்றது என்று பாரத மாதா புத்திரர்கள் கேலி பேசி வந்தனர். அப்போது, “தமிழ்நாட்டை விடச் சிறியவைகளான 74 நாடுகள் முழு உரிமையுடன் வாழுகின்றன. அவை குண்டுச் சட்டியை விடச் சின்னஞ்சிறிய தேநீர் கோப்பைக்குள் குதிரை ஓட்டுவது கண்ணுக்குத் தெரிய வில்லையா?” என்று பதிலடி தந்தார்.

    1958இல் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ மாநாடு நடத்தினார். அதில் இந்திய வரைபட எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றினார். தந்தை பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட நிலையில் அவரோடு இணைந்து (1960) பட எரிப்புப் போராட்டம் நடத்தினார். அதில் கைது செய்யப் பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

    அதே ஆண்டில் இந்தியை திணிக்கப் போவதாக அறிவித்த குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திர பிரசாத்திற்கு கறுப்புக் கொடி காட்ட முனைந்த போதும் கைது செய்யப்பட்டார். ஆதித்தனார் தான் நடத்திய இதழுக்கு ‘தமிழன்’ என்றும், இயக்க அலுவலகத்திற்கு ‘தமிழன் இல்லம்’ என்றும், இயக்க வார இதழுக்கு ‘தமிழ்க்கொடி’ என்றும், பதிப்பகத்திற்கு ‘தமிழ்த்தாய்’ என்றும் பெயர் சூட்டினார்.

    அவர் இறுதி காலத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து நாம் தமிழர் இயக்கத்தை கலைத்தது அவரின் தமிழ்த் தேசிய கொள்கைக்கு ஏற்பட்ட சரிவாகும். திராவிடத்தின் பதவி அரசியலுக்கு ஆதித்தனார் பலியாகாமல் இருந்திருந்தால் என்றோ தமிழ்த்தேசியம் வளர்ச்சி நிலை கண்டிருக்கும். இருப்பினும் அவர் மூட்டிய தமிழ்த் தேசிய பெரு நெருப்பு இன்னும் அணைய வில்லை. அது ஈழ விடுதலையிலும் தமிழக விடுதலையிலும் கனன்று கொண்டு தான் இருக்கிறது!

    ஈ வே ராமசாமி போன்றோருடனான பழக்கம், சில கருத்தியல் ஒற்றுமைகள் போன்றவையே ஆதித்தனாரை திமுக விற்கு சாதகமாக செயல்பட வைத்தது. காங்கிரஸ் கொண்டு வந்த இந்தித்திணிப்பு போன்ற காரணங்களுக்காவும், அவற்றை எதிர்த்துப் போராட திமுகவிற்கு வலுசேர்த்ததன் விளைவு தான் நாம் இன்று திராவிடத்திற்கு அடிமையாக இருக்க காரணம். ஆதித்தனாருக்கு பதவி ஆசை என்று இன்றைய அரசியலாளர்கள் எண்ணுகின்றனர்.

    தமிழர் விடுதலையில் வேட்கையுடன் செயல்பட்ட ஆதித்தனாரையே காங்கிரசும் திமுகவும் இந்தி எதிர்ப்பு போன்ற காரணங்களைக் காட்டி ஏமாற்றியிருக்கிறது. ஆதித்தனார் வீழ்த்திய காங்கிரஸின் அன்றைய தலைவர் காமராசர் என்ற தமிழன். அவரது இந்தி எதிர்ப்பு என்ற கொள்கையின் மூலம் ஆட்சிக்கு வந்தது தெலுங்கர்களான அண்ணாதுரையும் கருணாநிதியும். நம் கையால் நம் கண்ணை ஆரியமும் திராவிடமும் குத்திய நிகழ்வு இது.

    இதுபோலவே கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக என்ற ஆரியத்திற்கு எதிராக செயல்படுவதாக (காங்கிரஸ் என்ற ஆரியத்தை கூட வைத்துக்கொண்டே) தமிழர்களை ஏமாற்றி வெற்றிபெற்றது திமுக. காலங்கள் கடந்தாலும் திராவிடத்திடம் ஏமாறுவதே தமிழினத்தின் சாபம் போலும்.

    தமிழ் Vs இந்தி

    தமிழர்கள் இந்தி படிக்காதினால நாசமாபோகிட்டாங்க, இந்த தமிழ்நாட்டு அரசியல் வாதிங்க இந்தியை படிக்கவிடாம செஞ்சு தமிழக மக்களை கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கிட்டானுங்க! இந்தி படிச்சா நாம எங்கேயோ போயிருக்கலாம்!

    இவ்வாறு இதுவரை இந்திக்கு ஆதரவாக சங்கீகள் கட்டியமைத்த போலிப்பிம்பங்கள் எல்லாம் இன்று கொரோனாவால் தவிடுபொடியாகியுள்ளது. இன்று கொரோனாவால் வேலையிழந்து, வாழ்விழந்து சொந்த நாட்டிலே அகதிகளாக, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் பசியோடு நடந்தே செல்லும் அப்பாவி வடநாட்டு கூலித்தொழிலாளர்கள் அனைவரும் நன்கு இந்தி அறிந்தவர்களே!

    இந்தி படிச்சா முன்னேறிடலாம் என்றால் இந்த வடநாட்டு இந்திக்காரர்கள் எல்லாம் ஏன் இன்னும் முன்னேறவில்லை. அவர்கள் ஏன் வடநாட்டில் வாழ வழியில்லாமல், இந்தியின் வாடையே அறியாத தமிழ்நாட்டிற்க்கு ஏன் பிழைப்பைத்தேடி படையெடுத்து வருகிறார்கள்?.

    ஏனென்றால் இந்தி திணிப்பை ஏற்காத தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. ஆனால் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட இந்திக்காரர்கள் வாழும் வட இந்தியாவோ தமிழ்நாட்டை விட பலமடங்கு பின்னோக்கி போயுள்ளது.

    “தமிழ்நாடு இன்று அடைந்துள்ள கல்வி,சமூக,பொருளாதார முன்னேற்றத்தை வட இந்தியா அடைய இன்னும் 50 ஆண்டுகள் ஆகும்”.

    அதனால் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வட இந்தியாவோடு ஒப்பிட முடியாது , நன்கு வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய மாகாணங்களோடு தான் ஒப்பிடவேண்டும் என்று பொருளாதாரத்திற்க்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் “அமர்த்தியா சென்” கூறியுள்ளார். மேலும் அவர் தமிழ்நாடு மட்டும் தனிநாடாக இருந்திருந்தால் இன்று வல்லரசு நாடாக உயர்ந்து இருக்கும் என்றார்.

    காரணம் அன்றிலிருந்து, இன்றுவரை இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை பகைநாடாகவே கருதிவருகின்றனர். தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை அழிப்பது, தமிழ்நாட்டிற்க்கு உரிய நிதி வழங்க மறுப்பது, தமிழர்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கொண்டுபோய் வடநாட்டில் கொட்டுவது என்று திட்டமிட்டு தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இந்திய அரசு வஞ்சித்தாலும் அத்தனை தடைகளையும் மீறி இன்று தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

    “இந்தியா” என்ற தடைக்கல் மட்டும் இடையே இல்லையென்றால் தமிழ்நாடு என்றோ வல்லராசி இருக்கும். இதைத்தான் அறிஞர் அமர்த்தியா சென் கூறுகிறார்.

    இவ்வாறு களநிலவரம் இப்படி இருக்க இனியும் இந்தி படிச்சா தான் வேலை கிடைக்கும் என்று எந்த சங்கீயாவது வாயைத்திறந்தால் அவன் வாயிலேயே மிதியுங்கள். முதலில் உன் இந்திபடிச்ச வடநாட்டுக்காரன் வாழ்க்கைக்கு வழியச்சொல்லுடா என்று கேளுங்கள்!

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வரும் தமிழர்கள்.

    இரு மாநில அரசின் IAS, IPS மற்றும் இரயில்வே துறை முழு ஒத்துழைப்பு. நிகழ்வுக்கு ஆணி வேராக அமைந்தது நாசிக் தமிழ் சங்கம்.


    தமிழகம் மஹாராஷ்டிராவில் செய்தியை பேசும் பொருளாகிய மக்கள் சந்திப்பு.

    நாசிக் புனே இரத்தனகிரியில் இருந்து சுமார் 1,300 பேரை சுமந்து கொண்டு நாளை புனே விலிருந்து புறப்படுகிறது சிறப்பு ரயில். எப்படி என்பதை விரிவாக அளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

    Corona வைரஸ் உலகத்தையே தலை கீழாக புரட்டி எடுத்து இருக்கிறது அதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது.
    அதை கட்டுப்படுத்த அரசு 144 தொடர் தடை உத்தரவு வர மக்கள் செய்வது அறியாமல் தவிக்கும் போது.

    நாசிக் தமிழ் சங்கம் தமிழ்நாட்டை சேர்ந்த இட்லி மற்றும் நடைபாதை வியாபாரம் செய்த 750 நபர்களை தன் சொந்த பொறுப்பில் உணவு அளித்து அரவனைத்தது நாசிக் தமிழ் சங்கம்.

    தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மக்கள் கூறிய போது உடனே தலைவர் திரு.இராமமூர்த்தி நாசிக் மாவட்ட ஆட்சியர் Thiru.suraj mantre IAS அவர்களிடம் இராமமூர்த்தி மக்களின் உண்மையான நிலையை கடிதத்தின் மூலம் தெரிவிக்க, அதற்குரிய விசாரணை களத்தை அமைத்தார் நாசிக் ஆட்சியர், இரயில்வே துறை உயர்மட்ட அதிகாரிகள் வாயிலாக அமைச்சர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் ரயில் வாய்ப்பில்லை சிறப்பு ரயில் உங்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்ற தகவல் நாசிக் சங்கத்துக்கு வர, 453பேர் பட்டியலை காவல் துறை சான்றுடன் அளித்தார் இராமமூர்த்தி. ஆனால் 411 நபர்கள் மட்டும் அனுமதி. மற்றவர்கள் புனே இரத்தினகிரியில் இருந்து ஏற்பாடானவர்கள். இந்த தடத்தில் செல்லும் ரயிலுக்கு காரணமாக அமைந்தது நாசிக் தமிழ் சங்கம்.

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலைமை செயலாளர் திரு. அஜய் மேக்டா IAS அவர்கள் 12/5/20 அன்றைய தினம் அனுப்பிய கடிதத்திற்கு.
    தமிழக தலைமை செயலாளர் திரு.கே.சண்முகம் IAS அவர்கள் 15/5/20 தேதி இட்டு அனுமதி கடிதம் அளிக்க 18ஆம் தேதி காலை புநேவிலிருந்து புறப்படும் ரயில் 20 தேதி திருநெல்வேலி அடையும், வழியில் விழுப்புரம் திருச்சி நின்று செல்லும். (letter no.15965)

    மும்பை திரு.அன்பழகன் IAS. புனே திரு.சொக்கலிங்கம் IAS, இவர்களின் இடை விடாத பணி இந்த ரயில் புறப்படுவதற்கு மிகுந்த உறுதுணையாக இருந்தது. இன்று இரவு நாசிக் பஸ் நிலையத்தில் இருந்து 15 பஸ்களில் 411 பஅணிகளுடன் புறப்படும் பஸ் சுமார் 2 மணி அளவில் புனே சென்று அடையும்.

    பயணிகளுக்கு வேண்டிய உணவுகளை நாசிக் தமிழ் சங்கம் மற்றும் இரயில்வே துறை செய்கிறது.


    ஆவணங்களுடன் முதல் செய்தி மற்றும் முக்கிய செய்தி.

    சென்னையில் இருந்து ஆசிரியர்

    ஐ நா சபை வாழ்த்துப் பெற்ற மக்கள் சந்திப்பு பத்திரிக்கை நாளிதழ் செய்திகள் 17;18/5/20.
    9791046394

    துரோகி ஈவெரா மட்டும் இல்லேனா?

    தமிழன் தமிழனாகவே இருந்திருப்பான். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம்
    திராவிட நாடு மூலம் காயடிக்கப்பட்டிருக்காது.

    திராவிட போர்வையில் தெலுங்கர்களின் ஆதிக்கம் தளையெடுத்திருக்காது. தெலுங்கர் கருணாநிதியும், ஜெயலலிதாயும்
    இந்த மண்ணை ஆண்டிருக்க மாட்டார்கள்.

    இன்றைய போலி கம்யூனிசுடுகளுக்கு
    25 கோடி கிடைத்திருக்காது.
    சாதிய இயக்கங்களை கூட்டு சேர்த்து
    சாதி ஒழிக்கும் போலி சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்காது.

    வீரமணியும் அவன் மகன் அன்புவும்
    கோடிகளில் புரண்டிருக்க முடியாது.
    கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்ணன் போன்ற ஈனப்பிறவிகள் ஈழத்தை வைத்து அரசியல் பிழைத்திருக்க முடியாது.
    மதிமாறன்கள் உழைத்து சாப்பிடும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்கும்.

    ஆம், துரோகி ஈவெரா என்ற திருடன் இல்லாமல் இருந்திருந்தால்,
    தமிழ்நாடு தமிழர் நாடாகவே இருந்திருக்கும். தமிழனும் தமிழனாகவே இருந்திருப்பான்.

    மொழிப்போராட்டத்தின் மூலம் எழுந்த தமிழர் உணர்வை தெலுங்கு பிராமண
    திராவிடன் போர்வையில் மழுங்கடித்தது அன்றைய ஈவெரா என்றால், ஈழப்படுகொலையின் மூலம் எழுந்த இன உணர்வை மழுங்கடித்துக் கொண்டிருப்பது இன்றைய ஈவெராயிஸ்ட்கள்.

    நாற்றமெடுத்த ஈவெரா விச அரசியலை குப்பை லாரியில் ஏற்றி,
    தமிழ்நாட்டை கடந்து கொட்டுங்கள்
    எம் மண் இனியேனும் சீரமைக்கப்படட்டும்.