புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று #இந்துக்கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிறது ஆரிய இந்தியா.
முருகன் கோயில் பெயர்கள் ஸ்ரீ சுப்பிரமணி கோயில் என்ற பெயர் மாற்றப்படுகிறது. பெருமாள் கோயில்கள் ஸ்ரீவெங்கடாஜலபதிஸ்தலம் என்று பெயர் மாற்றப்படுகிறது.
மெல்ல மெல்ல தமிழர் அல்லாதவர்கள் கோயிலின் உயர் பொறுப்புகளை கைப்பற்றி ஆரியத்திற்கு கங்காணி வேலை செய்து வருகிறார்கள். அரசியல் அதிகாரம் மட்டுமல்ல மெய்யியல் அதிகாரமும் தமிழர்களிடம் இருத்தல் வேண்டும்..
இருநூறு வருடங்களுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து மொரீசியஸ் ரீயூனியன் போன்ற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் மதத்தை தமிழ் என்று தான் பதிந்து உள்ளார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில் அனைத்தையும் ஆவணப்படுத்திய இடத்தில் ஆரியர்கள் இருந்ததால் அனைத்தும் இந்து மதம் என்று எழுதி மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்கள். உண்மையில் இருநூறு வருடம் முன்பு கூட தமிழர்களிடம் இந்து என்ற மதம் இல்லை.
தமிழே இனம், தமிழே மொழி ,தமிழே மதம், தமிழே அனைத்திற்குமான ஒற்றை அடையாளம். இதனை நாம் உணர்ந்து நமது மதத்தை தமிழம் என்று அடையாளப்படுத்த விட்டால் இந்தியத்தின் அரசியல் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க இயலாது.
ஈழ சைவ தமிழர்கள் இந்து என்ற மத வரையறைக்குள் இல்லை என்று இந்திய ஒன்றிய அரசே சொல்லிவிட்டது. இந்தியா சொல்வதை தான் உலகம் ஏற்கும் நாமும் அப்படியே ஏற்போம் நாங்கள் இந்து அல்ல புலம்பெயர் தேசத்தில் எங்களால் எழுப்பப்பட்ட எந்தக் கோயிலும் இந்து கோயில் அல்ல.
உலகம் முழுவதும் வாழும் ஈழ தமிழ் உறவுகள் தமிழ் ஆன்மீக கோட்பாடுகளான ஆசீவகம், சைவம், வைணவம், அய்யாவழி, வள்ளலார் வழி , திருவள்ளுவம் வழி என்று அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து தமிழம் என்ற மதத்தை தாங்கள் வாழும் நாடுகள் முழுவதும் பதிவு செய்யும் வேலையை துவங்க வேண்டும்.
சிறுதெய்வ வழிபாடு, முன்னோர் குலதெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, கருப்பு மற்றும் ஐயனார் வழிபாடு என்று எல்லா வழிபாடும் இதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தமிழ் வழியில் மந்திரம் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்.
இதை நீங்கள் செய்துவிட்டால், விரைவில் தமிழ் நாட்டு தமிழர்களும் இதில் வந்து இணைவார்கள்.
இது புது மதம் அல்ல.. தமிழர்களின் நடைமுறை மெய்யியலின் ஒற்றை பெயர் ஹிந்து அல்ல #தமிழம். மதமாக மாறாத தமிழர் மெய்யியல் அனைத்தும் தமிழம் என்று அழைக்கப்பட வேண்டும். நான் இந்து அல்ல என்று முழங்குவதைவிட எம்மதம் #தமிழம் என்று முழங்குவதே மேல் #எம்மதம்தமிழம். விரைவில் வைதீகமில்லா, வர்ணாசிரமில்லா தமிழர் மதம் #தமிழம் என்று உலகெங்கும் பதியப்படும்.
ஐந்திரம் + முருகம் + ஆசீவகம் + அருகம் + நீத்தாரியம் + சிவனியம் + மாலியம் + வள்ளுவம் = தமிழம்
(தென்புலத்தார் வழிபாடு + முன்னோர் வழிபாடு = நீத்தாரியம்)
அண்ணா பல்கலைக்கழகம் திருடப்பட்டது போல தமிழக அறநிலையத்துறையும் மத்திய அரசால் திருடப்பட்டுள்ளது. விரைவில் விழித்துக் கொண்டு. நம்மை நாமே பிரித்து கொள்ளாவிட்டால் ஆண்டவன் முதல் அனைத்தையும் இழப்பது தடுக்க இயலாத ஒன்றாகி விடும்.
மதம் என்பது தூய தமிழ் சொல்
எம் மதம் தமிழம் என்று காலத்தின் தேவையை உணர்ந்து, தொடங்கப்பட்ட முழக்கத்திற்கு, இங்கு பலர், தங்களால் இயன்ற இடையூறுகளை செய்து வருகிறார்கள்.
மதம் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை, இதனை ஏன் பயன்படுத்துகிறீர்கள், #நெறி, #கோட்பாடு, #சமயம், #வழிபாடு போன்ற சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழை அறியாத சிலர் அறிவுரை கூறுகிறார்கள். உங்கள் மதம் என்ன என்றால் சற்றும் யோசிக்காமல் இந்து என்று கூறியவர்கள் இன்று மதம் என்ற சொல்லுக்கு மாற்று சொல்ல தேடி அலைகிறார்கள்.. அனைத்து அரசு ஆவணங்களிலும் அந்த சொல் தான் இருக்கிறது, நாம் அந்த சொல்லை மாற்ற வரவில்லை, அந்த சொல்லுக்கு நீங்கள் கூறும் பதிலை மாற்ற வருகிறோம்..
இது ஒரு வகை என்றால் இன்னொரு வகை. இது என்ன காவி நிறம் என்று, எதனை எதிர்த்து இதனை தொடங்கினோமோ அந்த எதிரியின் சாயத்தை நம் மீது பூச முயல்கிறார்கள். காவி என்ன இந்துத்துவாவின் பேட்டன்ட் நிறமா?. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின குருமார்கள் அந்த நிறத்தில் தான் ஆடை அணிந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் பிராண்டிங் உலகத்தில் சுய அடையாளத்தை இழந்தவர்கள் எந்த அடையாளத்தை தூக்கினாலும் அது எதிரியின் அடையாளம் என்று அம்மணமாக வாழ விரும்புகிறார்கள். நிறத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது ஏனென்றால் ஒரே நேரத்தில் 1000 வகைகள் இருக்கும் அதற்கான Rgb, Hex, Hwb, Cmyk, Ncol மதிப்புகள் மாறும்.. எல்லா பெயிண்ட் கடையிலும் இருக்கும் பெயிண்ட் அட்டையை எடுத்து பாருங்கள்.. பத்து நிறத்தில் எது காவி என்று உங்களால் தீர்க்கமாக சொல்ல இயலாது, பத்தும் காவி என்று சொல்லிவிட்டு எதிரிக்கு தாரை வார்த்துக் கொடுத்தல் சரியும் ஆகாது..
எம் மதம் தமிழம் என்று தொடங்குவதே இன்று சரியாக இருக்கும் நாளை அது முழுவதுமாக பரவிய பிறகு எஞ்சமயம் தமிழம் என மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக்கொள்ளுங்கள் தொடக்கத்தில் முழக்கத்திற்கு மதம் என்பதே மிரட்சியாக இருக்கும்..
தேவநேய பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் இருந்து மதம் என்னும் சொல் தமிழ்ச்சொல் என்ற விளக்கம் கீழ்வருமாறு.
“எழுவகை மதமே” (நன்.11);.
“தத்த மதங்களே யமைவதாக” (திருவாச.4:52);. சிவமதம், மால் மதம் (உ.வ.);.
மதி-> மதம் = மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை, அம்மையிம்மை யும்மை நிலைகளை மதித்தறிந்து கடைபிடிக்குங் கொள்கை. மதி-> மதம் 1. பெரிதாக மதிப்பது, 2. கருத்து, 3. கொள்கை, 4. நெறிமுறை,
மத (mata);. மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தினின்று பிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள் அது தவறு. மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமே யன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது.
ஒரு பொருள் அல்லது நெறிமுறை இன்னவா றிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றது. தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட் டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.
தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லையென்று கொள்வதும், மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும்.
முழங்கு எம்மதம் தமிழம் என்று முழங்கு.
(Thanks: Mr Ingkersol)