நாகரீகமற்ற வடுக காட்டுவாசி தமிழனை ஒன்றுமில்லாதவனாக்குவானாம்.

கம்பளி நாடு என்பது ஹம்பி இருந்த பொல்லாரி பகுதி. அங்கிருந்து கிருஷ்ண தேவ ராயன் காலத்தில் 1530களில் மதுரை தெலுங்கு நாயக்கர் காலத்தில் இராணுவ மயமாக்கல் பாளையத்தில் தமிழர் புரட்சியை சமாளிக்க குடியேற்றப்பட்ட காட்டுவாசிகள். (அவரே அதை சொல்கின்றார்) கம்பளி நாட்டில் இருந்து பஞ்சமும் உயிர்பிழைக்க வந்தவர்கள் ராஜவை இவர்களே சேர்த்துக் கொண்டு ராஜகம்பள. என்பர். வேட்டையாடி காட்டுவாசிகள்.

தெலுங்கர்கள் ( இவர்கள் தெலுங்கர்களும் அல்ல வடுகர்கள்) நாவை அடக்கி பேச வேண்டும். தமிழ் தேசிய அமைப்புகள் இதற்கு எதிராக போராட்ட வடிங்களை திட்டமிட வேண்டும்.

https://youtu.be/B-83c5RbDyc வைகோ போன்றவர்களால் அண்ணன் சீமானை நேரடியாக எதிர்க்கத் திராணியில்லாததால் சில நாய்களை குரைப்பதற்கு வாடகைக்கு அமர்த்தியிருக்கின்றனர்.

தமிழகத்தின் மொத்த மக்கட்தொகையில் 12 சதவீதமே தமிழரல்லாதோர். தெலுங்கர்களின் மக்கட்தொகை ஏறத்தாழ 6 சதவீதத்தை தாண்டாது. தமிழினத்திற்குள் ஒழிந்து கொண்டு தமிழர்களை பிரித்தாழும் சூழ்ச்சியை இந்நாள் வரை செய்துவரும் இவர்களுக்கு தமிழன் தன் இனத்தை உணர்ந்துகொள்ளத் தொடங்கியதும் உதரத்துவங்கியுள்ளது. தன் ஆட்சி அதிகாரத்தை இழக்கப்போகின்றோம் என்பதை இவர்கள் உணர்ந்துகொண்டதால் கண்டதையும் உளறுகின்றனர். 80 சதவீதம் தமிழரல்லாதோர் வாழ்வதாகக் கூறும் நபர் நம் தமிழ்மொழியில் ஏன் பேசி உதார்விடுகிறார் என்பதை அவர் புரிந்துகொண்டால் மீண்டும் இதுபோன்று கிறுக்குத்தனமாக பேச மாட்டார் என்று நம்புவோம்.

திருடு போகும் ஓலைச்சுவடிகள்

ஒரு அரசு செய்ய வேண்டியதை, ஒரு தனி இயக்கம்- மனிதர் செய்கிறார்கள் என்பது வேதனை என்பதல்ல, வெட்கக்கேடு.

சிலைகள், பழைய ஓவியங்கள் எவ்வளவு முக்கியமோ,

அதைவிட அதிமுக்கியமானது இந்த ஓலைச் சுவடிகள். சிலைகளிலும், ஓவியங்களிலும் கிடைக்காத வரலாறுகள் அதில் இருக்கலாம், மருத்துவம் இருக்கலாம். சங்க இலக்கிய நூல்களைப்போல், அதைவிட மேலான பதிவுகளும் இருக்கலாம்.

சிலைகளை விட, ஓவியங்களைவிட அத்தனை ஓலைச்சுவடிகளும் பொக்கிஷம்.

சிலைக் கடத்தலை தடுக்க என்ன சட்ட நடைமுறைகள் உள்ளதோ, அதைவிட கூடுதலான தடுப்பு நடைமுறைகள் இந்த ஓலைச்சுவடிகளுக்கு இருக்க வேண்டும். சிலைகளைவிட அதுதான் முக்கியம்.

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் பற்றிய ஒரு ஆய்வில் இறங்கினேன். அவர்களின் வேலை வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது. தமிழ் படித்தால் அரசுக்கு அலட்சியமா என்ற கேள்விகளையும் உள்ளடக்கிய தேடல் அது.

அதில் ஒரு உண்மை தெரிந்தது.

நாட்டுப்புற பாடல், நாட்டுப்புற கதைகள், நாட்டுப்புற கதைகளில் மருத்துவம், தொன்மங்கள், தொன்மக் கதைகள் என்ற தலைப்புகளில் ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள சில வெளிநாட்டு நிறுவனங்கள், வலிய வந்து ’ஊக்கத்தொகையை’ கொடுத்து ஊக்கப்படுத்தியதாக அறிந்தேன்.

இவர்களும் உண்மை தெரியாமல்- அல்லது புரியாமல் அப்படியான ஆய்வு முடிவின் நகல்களை, நிதியுதவி அளித்தவர்களிடம் கொடுத்துள்ளார்கள். தெரியாமல் நடந்திருக்கலாம்.

உண்மை என்னவென்றால், அந்த நிறுவனங்கள் தேடியது என்ன என்றால், நம்மிடம் இருந்த மருத்துவ முறைகள்.! அறியப்படாத பல மருத்துவ முறைகள், மருத்துவங்கள் என தமிழ்ச் சமூகம், எழுத படிக்கத் தெரியா காலத்தில் இருந்தே,..

நாட்டுப்புற பாடல்கள் மூலமாகவும், நாட்டுப்புற கதைகளில் மூலமாகவுமே அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடத்தி வந்துள்ளார்கள். அதையறிந்துதான், தமிழர்களின் தொன்மங்களில் கவனம் வைத்தது பன்னாட்டு மருந்து கம்பெனிகள்..

இந்த ஓலைச்சுவடி விடயத்திற்கு வருவோம்.

வாய்வழித் தகவலாக இருந்த பல இலக்கியங்களை, வாழ்வியலை, மருத்துவ முறைகளை, கணக்கியலை, வான சாஸ்திரங்களை எல்லாம் இப்படியான ஓலைச்சுவடிகளில் தான் எழுதி பத்திரப்படுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு விட்டுச் சென்றார்கள்.

தொல்காப்பியமும், திருக்குறளும் அப்படிக் கிடைத்ததுதான்.

ஒரு முறை தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் ஓலைச்சுவடி பிரிவுத் தலைவர் மணிமாறன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, “இன்னும் வாசிக்கப்படாத ஓலைச்சுவடிகள் மட்டும் பல ஆயிரம் கணக்கில் உள்ளது’ என்றார். அவற்றில் எல்லாம் என்னென்ன பொக்கிஷங்கள் உள்ளதோ, யார் கண்டார்?

இதையெல்லாம் சொல்லக் காரணம்,

சமீக காலமாக தமிழகத்திற்கு சொந்தமான அறிய ஓலைச்சுவடிகளை ஒரு கும்பல், ‘பாதுகாக்கின்றோம்’ என்ற பெயரில்’வாங்க திருடிட்டு போகலாம்’ என்று களவாடி சென்றுள்ளது.

அறிய புதைபொருள் பொக்கிஷமான அந்த ஓலைச்சுவடிகளை தடுத்து நிறுத்த வேண்டிய அரசே அதற்கு ‘அறியாமல்’ துணை போனதுதான் கொடுமை…

என்று வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளர் முனைவர் செந்தில்நாதன் துரைராசன் அம்பலப்படுத்தியிருந்தார். அது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. பதில் சொல்ல வேண்டியவர்கள் இன்னும் வாய் திறக்காமல், ’நோட்டீஸ்’ நீட்டுகிறார்கள்.

இது இப்படியே முடியக்கூடாது. அரசு, ஓலைச்சுவடிகளை எடுத்துச் சென்றவர்கள் மீது சிலைகடத்தல் தடுப்பு பிரிவின் கீழான சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கையை எடுத்து, களவு போன ஓலைச்சுவடிகளை மீட்க வேண்டும். அதுவரை இந்த குரல் ஒலித்தபடியே இருக்க வேண்டும். நியாயப்படி இதற்கு அனைத்து கட்சிகளும் சேர்ந்தே குரல் கொடுக்க வேண்டும்.

அதுதான் நியாயமும் கூட
இந்த மண்ணில் உள்ள ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டியது கட்டாயமும்கூட.

நாம் தமிழர் கட்சியின், மெய்யியல் பிரிவான வீரத்தமிழர் முன்னணிக்கும், பொறுப்பாளர் முனைவர் செந்தில்நாதன் துரையரசனுக்கும் வாழ்த்துகள். இப்படியான முயற்சிகள் தொடரட்டும்.

கல்வியை ஆரியமயமாக்குதலுக்கு கண்டனம்

அறிக்கை: இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக்கருத்துகளை மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கியது பன்முகத்தன்மைக்கு எதிரான ஒற்றைமயமாக்கலின் மற்றொரு வடிவமே! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-12ஆம் வகுப்புக்கான பாடங்களை 30 விழுக்காடு குறைப்பதாகக் கூறி, இந்திய அரசியலமைப்புச்சட்டத்திலுள்ள அடிப்படையானக்கருத்துகளை மொத்தமாக நீக்கியிருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தற்காலப்பேரிடர் சூழலிலும் தனது ஒற்றைமயமாக்கல் நடவடிக்கைகளை வீரியமாய்ச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு, அதன் நீட்சியாகவே தற்போது பாடத்திட்டத்தில் கைவைத்து, இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்புத் தூண்களாக இருக்கிற சனநாயகம், மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை போன்றவற்றைப் பாடத்தொகுப்பிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது. பள்ளியில் பயிலும் பிஞ்சுகளின் உள்ளத்திலிருந்து சனநாயகம், மதச்சார்பின்மை, குடியுரிமை குறித்த சிந்தனைகளையே அகற்ற முயலும் மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையே குலைக்கும் பேராபத்தாகும்.

9ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயக உரிமைகள் எனும் பாடமும், 10ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் சனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், சாதி, சமயம், இயக்கங்கள், போராட்டங்கள், சனநாயகத்திற்கு எதிரான சவால்கள் உள்ளிட்டவைகளும், 11ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகளும், 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்நாடு கொண்டிருக்கிற பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை எனும் மகத்தானக்கோட்பாடுகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்துவதைத் தடுக்கும்வகையில் அவற்றைப் பாடத்திட்டத்திலிருந்தே அப்புறப்படுத்தும் பாஜக அரசின் எதேச்சதிகாரச் செயல்பாடுகள் ஒற்றைமயக்காலின் மற்றொரு வடிவமே! மக்களாட்சிக்கும், சனநாயகத்திற்குமே ஊறு விளைவித்து இந்நாட்டின் அடிப்படைக்கட்டமைப்பையே ஒவ்வொரு நகர்வின் மூலமாகத் தகர்க்க முயலும் பாஜக அரசின் படுபாதக நடவடிக்கைகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கெதிராக தேசிய இனங்களும், மாநிலக் கட்சிகளும், சனநாயக ஆற்றல்களும் அணிதிரண்டு அதனை முறியடிக்க வேண்டியது தற்காலத்தின் பெருங்கடமையாகிறது.

ஆகவே, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்திலிருந்து சனநாயகம் தொடர்பாக 30 விழுக்காடு பாடத்திட்டத்தை நீக்குவது தொடர்பான அறிவிப்பாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://bit.ly/3enSj0S

கறுப்பர் கூட்டம் முருகன் பற்றிய காணொளியை பார்த்தேன்

உண்மையில் பொதுவெளியில் இவளவு வக்கிரமாக யாரால் பேசமுடியும் என்று நாம் பார்த்தால் உறுதியாக திராவிடர்களும் அவர்களுக்கு இணையாக ஆரியர்களும் தான் பேசுவார்கள். இதுதான் கடந்தகால வரலாறு.

கறுப்பர் கூட்டம் என்ற வலையொளி திராவிட கூட்டம் நடத்தும் சேனல். கந்தசஷ்டி கவசத்தை வைத்துக்கொண்டு முருகனை விமர்சிப்பது என்பதெல்லாம் பகுத்தறிவின் அறிவற்றநிலை உச்சம். இந்த வளையொலிக்கு இவளவு பெரிய கூட்டம் இருக்கிறது என்று நினைக்கும் பொது பெரியாரிஸ்ட்டுகளின் வக்கிர புத்திகளை நம்மால் உணரமுடிகிறது.

கறுப்பர் கூட்டம் முருகனை பற்றி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். முருகனின் மீது புனையப்பட்ட எந்த ஆரிய கருத்துக்களையும் தமிழர் மண் ஏற்கவில்லை. ஆனால் ஆரியர்களை விமர்சிக்க, அவர்கள் தமிழர் கடவுளர்கள் மீது புனையப்பட்ட கதைகளை திராவிடர்கள் எடுத்துக்கொண்டு விமர்சிப்பது என்பது அவர்களின் அறிவற்ற நிலையை விளக்குகிறது.

பெரியார் தொடங்கி, லூலு லூலு பஞ்சாயத்து வரை திராவிட கூடாரங்களில் இல்லாத ஆபாசங்களா ? எல்லாத்தையும் பேசுவீங்களா ?

குறிப்பா பெரியார் குடும்பவாழ்க்கை பற்றி ஆனைமுத்து ஐயா புத்தகம் ஓன்று இருக்கு, அதை கூட வாங்க விரிவாக பேசுவோம்.

சாதி மதம் கடந்து இயற்கையின் வடிவமாய் விளங்கும் முருகனை, ஆரியர்களின் புனைவுக்கதைகளை வைத்து விமர்சிப்பது உங்களின் அறிவற்ற நிலையை மட்டுமல்ல, வக்கிரத்தின் உச்சத்தையும் காட்டுகிறது.

முருகனை பற்றி பேசினால் பின்விளைவுகள் வேறுவகையாக இருக்கும்.

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணியின் எச்சரிக்கை !

https://bit.ly/2ZwEnxk

மோதி விளையாடு – தமிழியம் Vs திராவிடம்

அண்மையில் நிகழ்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் கொளத்தூர் மணி பங்கேற்ற தமிழியத்திற்கும் திராவிடத்திற்குமான கருத்துரையாடலை சித்தரிக்கும் கேலிச்சித்திரங்கள்.

சீமானை இயக்குவது யார்?

எனது பதில்:


கோடாரிக்கு பயந்த மரங்கள் அவரை இயக்குகிறது.

வெடி குண்டுகளுக்கு அதிர்ந்த மலைகள் அவரை இயக்குகிறது.

கடலில் வீணாய் கலக்கும் மழை நீர் அவரை இயக்குகிறது..

கதிரியக்கங்களுக்கு இறந்த சிட்டுகுருவிகளும், பறவைகளும் அவரை இயக்குகிறது..

வாழ்விடங்களை இழந்த விலங்குகள் அவரை இயக்குகிறது.

சாக துடிக்கும் மொழியும், பண்பாடும், அவரை இயக்குகிறது..

படுகொலை செய்யப்பட்ட ஈழ மக்களின் அழுகுரல்கள் அவரை இயக்குகிறது

சாதி, மதம் எனும் தீய நெருப்பினால் பொசுங்கிய சமத்துவம் அவரை இயக்குகிறது..

கல்வி வியாபாரம் ஆக்கியதால் ஒசந்த படிப்பை படிக்காத ஏழை குழந்தைகளின் கனவுகள் அவரை இயக்குகிறது

காசில்லாமல் உயர் வைத்தியம் பார்க்காமல் இறந்தவர்கள் அவரை இயக்குகிறார்கள்.

தூக்கில் தொங்கிய விவசாயி, மன அழுத்தத்தில் இறந்த காவலர்கள், படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் தற்கொலை செய்த அனைவரின் கனவுகளும் அவரை இயக்குகிறது.

ஆக, நீங்கள் அவரை இசுலாமிய, கிருத்துவ மிசினரிகள், ஆர்.எஸ்.எஸ், அதிமுக இயக்குவதாக நினைத்து கொள்ளுங்கள்.

என்னை பொறுத்தவரை தமிழ்த்தேசியம் எனும் மாற்று புதிய அரசியலை படைக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் உயிர்த்துடிப்பும் அவரை இயக்குவதாக தான் நினைக்கிறேன்.

ஓர் உறவின் பதிவு..

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அலைபேசி கடை வைத்து நடத்தி வந்த ஜெயராசு என்பவரையும், அவரது மகன் பென்னிக்சையும் கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு நேரத்தைக் கடந்து கடையை மூட தாமதப்படுத்தியது தொடர்பாகக் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர் எனும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது. மக்களைக் காக்கும் பெரும்பணியில் ஈடுபட வேண்டிய காவல்துறை அதிகாரிகளே எளிய மக்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தி அவர்களை விசாரணை எனும் பெயரில் அடித்துத் துன்புறுத்தி சாகச்செய்யும் கொடுஞ்செயலை செய்வது சகிக்கவே முடியாத பெருங்கொடுமையாகும். அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கொரோனா நோய்த்தொற்று அண்டாமல் உயிர்காக்க வேண்டிய காவல்துறையினர் எளிய மனிதர்கள் மீது கோரத்தாக்குதல் தொடுத்து அவர்களை உயிரிழக்கச் செய்வது சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் பச்சைப்படுகொலையாகும். இலஞ்சமும், ஊழலும் ஆட்சியதிகாரத்தின் எல்லா அடுக்குகளிலும் புரையோடிப் போயுள்ள நிலையில் அடித்தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் இருக்கும் இடைவெளியையும், அதிகாரம் எவ்வளவு அந்நியமாகி மக்களைப் பந்தாடுகிறது என்பதையும் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.

இவ்விவகாரத்தில், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சு உயிரிழக்கக் காரணமான காவல்துறை அதிகாரிகளை நிரந்தரமாகப் பணியைவிட்டு நீக்கி அவர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்ய வேண்டும் எனவும், ஜெயராஜின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

https://bit.ly/2YrIXwf

கபசுரக் குடிநீர் வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்

இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சாதிக் பாஷா நகரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

என்றும் மக்கள் பணியில், நாம் தமிழர் கட்சி

இப்படிக்கு:
தொகுதி செய்திபிரிவு
இராணிப்பேட்டை தொகுதி
நாம் தமிழர் கட்சி

தமிழனை கொன்ற வஞ்சம் தீர்த்த ஆரியம் சீனத்திடம் பம்முகிறது.

நல்லத சொன்னா எவன் கேக்குறான்!
இந்தியா சீனா தாக்குதல் பிரச்சினையை அன்றே பேசிய சீமான்! அது மட்டும் அல்ல இரண்டாம் பாக் போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து பாக் நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் கொழும்புவில் தங்கி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த உதவியது (விசாகபட்டின தாக்குதல்). தற்சமயம் சீனாவின் உத்தரவு படி இலங்கையின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த.

சொந்த செலவில் தூர் வாரும் பணியை செய்யும் கிராம மக்கள் – கிராம மக்களுடன் கைகோர்த்த நாம் தமிழர் கட்சியினர்.

பொதுப்பணித்துறை கைவிரித்த தூர் வாரும் பணியை 7 கிலோமீட்டர் நீளத்துக்கு பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.

நாகை மாவட்டம், திருப்பூண்டி அருகே பூவைத்தேடி, காமேஸ்வரம் மற்றும் புஷ்பவனம் பகுதி விவசாயிகளுக்கு காவிரி நீர் கை கொடுக்காததால் மானாவாரி பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர், மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில், குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதையடுத்து பழைய சந்திரநதி பாசன வாய்க்காலை தூர்வாரி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்யாத நிலையில், திருப்பூண்டி முதல் பி ஆர் புரம் வரை உள்ள 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தூர்வாரும் பணியை கிராம மக்களே ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளில் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து செயல்பட்டு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

https://bit.ly/3deU0gB