வேளாண்மை சட்டம் 2020

பாஜக அரசால் விவசாயிகளின் நலனிற்கு எதிராக இயற்றப்பட்டுள்ள வேளாண்மை திருத்த சட்டத்தின் தமிழாக்கத்திற்கு கீழே சொடுக்கவும்.

https://bit.ly/36dlAuF

ராஜீவ்கொலையாளி சுப்ரமணியசாமியிடம் நடந்த ஜெயின் கமிஷன் விசாரனை

நீதிபதி கேள்விகள் கேட்கக் கேட்க சுப்ரமணிசாமியின் பதில்கள் இப்படி வருகிறது.

எதிரே இருக்ககூடிய நபர் வேலுசாமியை தெரியுமா என்றார்,

[ஏளனமாக] இவரை யார் என்றே எனக்குத் தெரியாது,

தெரியாதா? உங்கள் கட்சியில்தானே அகில இந்திய செயலராக இருந்தார்?

என்கட்சியில் லட்சக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள்.
நிறைய பேருக்கு பொறுப்பு கொடுத்திருந்தேன். அதில் இவர் யார் என்று எப்படி அடையாளம் வைத்துக்கொள்ள முடியும் தெரியலையே.”
(சாமிக்கு ஏதோ ஒரு 200 எம்.பிகள் இருப்பதைப் போலவும் கட்சிக்குப் பல செயலர்களை வைத்திருப்பது போலவும் ஒரு நினைப்பு, திமிர்,

சரி, உங்கள் கட்சி சார்பாக
நீங்கள் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயண விவரம் இருக்கிறதா?, சொல்லமுடியுமா?”

எனக்கு அதுவெல்லாம் நினைவில்லை,

உங்கள் கட்சி அலுவலகத்தில் சுற்றுப்பயண விவரம் இருக்குமே. அதைப்பார்த்து சொல்லலாமே?”
(இந்த கேள்வியை கேட்டவுடன் ஏதோ சாமர்த்தியமாக சொல்வதாக நினைத்து வகையாக மாட்டினார் சாமி),

அந்தத் தேர்தல் சுற்றுப்பயண விவரம் எல்லாம் கட்சி அலுவலகத்தில் இருந்தது தான். இதோ இருக்கிறாரே வேலுச்சாமி, இவர் கட்சியைவிட்டு போகும்போது அந்த பைலை எல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிட்டார்” என்று கூறியதும் நீதிபதிக்கு முகம் சுருங்கியது,

என்ன மிஸ்டர்,
இப்போதுதானே அந்த வேலுச்சாமியை யார் என்றே தெரியாது என்றீர்கள்?,
உடனே எப்படி அவர்தான் அந்த பைலை திருடிக்கொண்டார் என்கிறீர்கள்?,
உண்மையை சொல்லுங்கள். [வேலுச்சாமியை] அவரை உங்களுக்கு தெரியுமா?, தெரியாதா? என்றார் முறைத்துப் பார்த்தபடி.
(அப்போதுதான் சாமிக்கு தான் மாட்டிகொண்டோம் என்பது தெரிந்தது. அப்படியே முழித்தார்),

சரியாக சொல்லுங்கள் மிஸ்டர்,
இது நீதிமன்றம், நீங்கள் விளையாடுவதற்கான இடம்
இல்லை, அவரை உங்களுக்கு
முன்னமே தெரியுமா? தெரியாதா?”
என்றார்.

சுப்ரமணியசாமியிடமிருந்து பதிலேதும் இல்லை, திணறினார், அதன் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மிக நிதானமாக யோசித்து நினைவில்லை தெரியாது என்றபடியே பதிலளிக்கத் தொடங்கினார்,

சரி மே மாதம் 21ம் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு எப்படி வந்தீர்கள்?,
விமானத்திலா?, ரயிலிலா?”
இந்த கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் தலைகுனிந்தபடியே நின்றார் சாமி,

21ம் தேதி காலையிலிருந்து மாலைவரை நீங்கள் டெல்லியில் இல்லை, வேறு எங்கோ ரகசியமாக இருந்தீர்கள் என்பதற்கு என்ன பதில்?,

இல்லை நான் டெல்லியில் தான் இருந்தேன்,

சரி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்றால் அதற்கு என்ன ஆதாரம்?,
மத்திய அமைச்சர்களின் மூவ்மென்ட் ரிப்போர்ட் பைல் இருக்குமே?, இருக்கிறதா?
என்ற கேள்விக்கு,

அது தொலைந்துபோய்விட்டதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது
என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்,

அடுத்து சாமியை பார்த்து,
நீங்கள் 21ம் தேதி டெல்லியில்தான் இருந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? என்றார்,

ஓ இருக்கிறதே என்ற சுப்பிரமணியசாமி, ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இரண்டு துண்டு செய்தியை எடுத்துக் கொடுத்தார், அதை வாங்கிப் பார்த்த நீதிபதி ஜெயினுக்கு முகம் சுருங்கியது,

சாமி சரியாகத்தான் சொல்கிறார், நாங்கள்தான் ஏதோ தவறாக புகார் செய்திருக்கிறோம் என்பதாக அது பட்டது,

உடனே அதை கொடுக்கும்படி நான் கேட்டேன், எனது வழக்கறிஞரிடம் அதைக் கொடுத்தார்,
அதைப் பார்த்த எனது வழக்கறிஞர் ஆமாம் வேலுசாமி,
சாமி சரியாகத்தான் சொல்கிறார், அன்றைய தினம் பகல் முழுக்க அவர் டெல்லியிலேதான் இருந்திருக்கிறார் என்றார், அவருக்கும் பிடிப்பு விட்டுப்போனது எனக்கு பெரியகுழப்பம்,
அந்த செய்தித்தாள் பகுதியை கொடுங்கள் என்று வாங்கி பார்த்தேன், அன்றைய தினம் சாமி டெல்லியில் செய்தியாளர்களைப் பார்த்து ஒரு செய்தி கொடுத்திருப்பதாக பதிவாகியிருந்தது,
எனக்கும் குழப்பம், அதிர்ச்சி..!,
ஒன்றும் புரியாமல் இது எப்படி
சாத்தியம் என்று பார்க்கிறேன்,
அப்படியே நீதிபதியையும் பார்த்தேன், நாங்கள் எதோ தவறான புகாரை கொடுத்த நபர்கள்,
சாமி சரியானவர்தான் என்ற பார்வை தெரிந்தது,
(இதையெல்லாம் கவனித்தபடி
இருந்த பிரியங்கா காந்தி
முகத்திலும் குழப்பம்),
நான் மீண்டும் அந்த செய்தித்தாள் பத்திகளைப் பார்த்தேன்,
சிங்கள் கால செய்தி, அதன் கீழே கடைசியாக பி.டி.ஐ., பி.டி.ஐ என்று இரண்டிலுமே இருந்தன, இருண்டுகொண்டிருந்த என் முகத்தில் மின்னல் வெளிச்சம்,
உடனே நீதிபதியைப் பார்த்து
இது பொய்,
சாமி திட்டமிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறார், அவரது ஏமாற்று புத்தியை இங்கேயும் காட்டியிருக்கிறார் என்றேன், (அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் குழப்பம்),
நீதிபதி என்னைப்பார்த்து எப்படிக் கூறுகிறீர்கள்? என்றார்,
சார், சுப்ரமணியசாமி கொடுத்த அந்த இரண்டு செய்திகளின் கிழேயும் பி.டி.ஐ என்றிருக்கிறது. இவர் செய்தியாளர்களை சந்தித்து நேரடியாக பேட்டி கொடுத்து இருந்தால் அப்படி வந்திருக்காது, பி.டி.ஐ என்பது ஒரு செய்தி நிறுவனம்,
ஒருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் பி.டி.ஐ நிருவனத்தில் உள்ள ஒருவரைப் பிடித்து செய்தியை கொடுக்கலாம், சாமியும் அப்படித்தான் கொடுத்திருக்கிறார், அதனால்தான் செய்தியின் கிழே பி.டி.ஐ என்று போட்டிருக்கிறார்கள், பொய்யான ஆவணங்களைக் காட்டி நீதிமன்ற விசாரணையை திசை திருப்புகிறார் சாமி,
அவர் செய்தியாளர்களை சந்தித்திருந்தால் எங்கு சந்தித்தார்?, அதில் யாராவது ஒரு செய்தியாளரை அடையாளம் கூற முடியுமா? என்று கேட்டதும், (நீதிபதிக்கு மட்டுமல்ல பிரியங்காவின் முகத்திலும்
ஒரு திருப்பம்),
நீதிபதியும் சாமியைப் பார்த்து
என் கேள்விக்கு பதில் என்ன? என்று கேட்கிறார்,
சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை, அவருக்கு வியர்க்கத் தொடங்கியது,
தடுமாறுகிறார் என்பது புரிந்தது,
(எல்லோரும் இதைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார்கள்),

அடுத்த கேள்வி, மே மாதம் 22ம் தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் உங்களுக்கு மதுரையிலும் திருச்சியிலும் பொதுக்கூட்டநிகழ்ச்சி இருந்தது, கட்சியின் தேர்தல் பிரச்சாரம், தெரியுமா?,
திணறினார், யோசித்தார், தெரியவில்லை,
சரியாக நினைவில்லை என்றார்,
யோசித்து சரியாக கூறுங்கள்? என்றார் நீதிபதி,
இல்லை, எமக்கு அப்படி ஒரு நிகழ்ச்சி இருந்ததாக நினைவில்லை” என்றார்,

அப்போதுதான் நான் வைத்திருந்த 1991 மே மாதம் 21ம் தேதி வந்திருந்த மாலைமலர், மதுரைமணி ஆகிய இரண்டு மாலை நாளேட்டை எடுத்தேன், இரண்டும் மதுரை பதிப்பு,
அந்த இரண்டு நாளேட்டிலும் சுப்ரமணியசாமி மே 22ம் தேதி மாலை மதுரையில் பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற விளம்பரமும் செய்தியும் வந்திருந்தது,
அதில் சுப்ரமணிய சாமியோடு நானும்,
மதுரை மாவட்ட ஜனதா கட்சி தலைவரும் கலந்துகொள்வதாக இருந்தது,
கட்சி சார்பான விளம்பரம் செய்தி அறிக்கைதான் அது,
அதை சாமியிடம் காட்டினேன்,
இப்போதாவது நினைவு இருக்கிறதா?, தெரிகிறதா என்றேன்,
அதை வாங்கிப் பார்த்தவர் ஒன்றும் சொல்ல முடியாதவராக ஒரு மாதிரி தலயாட்டி பிறகு ஆமாம் நினைவு இருக்கிறது என்றார்,
ஆக, 22ம் தேதி மதுரையிலும் 23ம் தேதி திருச்சியிலும் நீங்கள் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருந்தீர்கள், சரிதானே?, என்ற கேள்விக்கு,
யோசித்தபடியே ஆமாம் என்றார்,
அது தேர்தல் பிரச்சார காலகட்டம், 22ம் தேதி மதுரை பொதுகூட்டத்திற்கு நீங்கள் முன்கூட்டியே விமான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும், இல்லையா?, அப்படியென்றால் அந்த விமான டிக்கெட் எங்கே? என்ற கேள்வியை கேட்டதும், சாமிக்கு மேலும் வியர்வை கொட்டத்தொடங்கியது,
22ம் தேதி மதுரைக்கு செல்லவேண்டும் என்றால் நீங்கள் அன்றைய காலையே டெல்லியில் இருந்து 6 மணி விமானத்திற்கு தான் புறப்பட்டுச் செல்லவேண்டும், அதற்கு நேராக பேருந்துக்குச் சென்று டிக்கெட்டை வாங்குவதுப் போல் வாங்கமுடியாது, ஆகவே, முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும்,
எங்கே அந்தப் பயணச்சீட்டு?
மீண்டும் எனது கேள்வி,
சாமியிடம் இருந்து பதில் இல்லை, முழித்தார், ஏதோ சொல்ல வருகிறார், ஆனால் முடியவில்லை, நீதிபதியும் எங்கே அந்தப் பயண சீட்டு விவரம் என்ற கேள்வியை கேட்கிறார்,
பட்டென்ற பதில் இல்லை, நன்றாக முழித்துவிட்டு கடைசியாக,
நான் அந்த புரோகிராமை கேன்சல் செய்துவிட்டேன், அதனால் டிக்கெட்டையும் கேன்சல் செய்துவிட்டேன் என்றார்,
(அப்படி சொன்னதும் அங்கேயிருந்த மொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்கிறார்கள், அவர்கள் அனைவரும் முக்கியமானவர்கள்,
மெத்த படித்தவர்கள், ஒரு நிமிடம் மௌனமாக செல்கிறது நேரம்),
சரி டிக்கெட்டை கேன்சல் செய்தீர்கள் என்றால் அதற்க்கான படிவம், அத்தாட்சி எங்கே? என்றேன்,
(இந்த நேரத்தில் சாமிக்கு மேலும் வியர்த்தபடி இருந்தது, கிட்டத்தட்ட உடை முழுவதும் நனைந்திருந்தது)

பிறகு மிக தயங்கித் தயங்கி நான் விமான டிக்கெட்டே எடுக்கவில்லை என்றார்,
முதலில் விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டேன் என்றீர்கள்..!?, பிறகு டிக்கெட்டே எடுக்கவில்லை என்கிறீர்கள்..!?,
சரி, ஏன் எடுக்கவில்லை? அதற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கவேண்டுமில்லையா?
அது என்ன காரணம்?, கடைசிகட்ட தேர்தல் பிரச்சாரத்தையே கேன்சல் செய்துவிடும் அளவிற்கு என்ன முக்கிய வேலை?,
என்ன காரணத்திற்க்காக
மதுரை பயணத்தை உறுதி செய்யவில்லை?,
ஏன் கேன்சல் செய்தீர்கள்?
என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு சாமியிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை, நிற்க தடுமாறினார், நிற்கமுடியாமல் விசாரணை கூண்டின் கைப்பிடியை பிடித்துக்கொண்டார், உடல் முழுவதும் நனைந்துவிட்டது,
அப்போதுதான் நான் என் வழக்கறிஞர் பாலகிருஷ்ணனிடம் அதை மெதுவாக சொன்னேன், அதை கேட்ட அவர் புத்துணர்ச்சி பெற்றவராக சத்தம் போட்டு
எஸ் மை லாட், த ஹோல் வேல்ட் சேஞ்டு தேர் ப்ரோக்ராம் ஆப்டர் த அசாசினேசன் ஒன்லி, பட் அவர் ஜென்டில்மேன் டாக்டர் சாமி சேஞ்டு ஹிஸ் ப்ரோக்ராம் பிபோர் த அசாசினேசன், அதாவது
(மொத்த உலகமும் இந்த ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகுதான் தமது திட்டத்தை மாற்றிகொண்டது, ஆனால் சுப்ரமணியசாமி மட்டுமே படுகொலைக்கு முன்பாகவே தனது பயணத்திட்டத்தை மாற்றியிருக்கிறார்) அது ஏன்?,
அதுவும் மிக முக்கியமான தேர்தல் பிரச்சாரத்தை விட்டுவிட்டு எங்கோ ரகசியமாக தங்கியிருக்க காரணம் என்ன?” என்று கேட்டபோது
யாரிடமும் எந்த சத்தமும் இல்லை, இந்த கேள்விக்கு பதிலை சொல்லுங்கள் மிஸ்டர் என்றார் நீதிபதி,
சாமியிடம் இருந்து பதில் இல்லை
என்பது மட்டுமல்ல,
தலைகுனிந்தபடி நிற்கிறார், இப்போது நனைந்த உடலில் இருந்து வியர்வை அவரது கைவிரல் வழியாக சொட்டியபடியே இருக்கிறது, எல்லோரும் அந்தக் கோலத்தைப் பார்க்கிறார்கள், எனக்கோ இனம்புரியாத இன்ப அதிர்ச்சி உடலுக்குள்ளாக பாய்கிறது, யார் குற்றவாளி என்று அம்பலமாக்கி விட்ட திருப்தி,
எனக்கே இப்படி இருக்கிறது என்றால் தந்தை ராஜீவ்காந்தியை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள் பிரியங்காவிற்கு எப்படி இருக்கும் என்று அவரைப் பார்க்கிறேன்,

அவரது முகம் ஆத்திரத்திலும் கோபத்திலும் அப்படியே தீ ஜுவாலையாக முகமெல்லாம் சிவந்து கண்கள் சுப்ரமணிய சாமியின் மீது ஆவேசப் பார்வையோடு நிலைகுத்தி நின்றிருந்தது, அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை, கோவலனை பறிகொடுத்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவை மண்டபத்திற்குள் தலைவிரி கோலமாக நுழைந்ததை இளங்கோவடிகள் கூறுவதை படித்த ஞாபகம்தான் சட்டென்று நினைவுக்கு வந்தது, தலைகுனிந்தபடியே நின்ற சாமி எந்தப் பக்கமும் திரும்பவில்லை,

நீதிபதி ஜெயினோ சுப்ரமணியசாமியையே உற்றுப் பார்த்தவர், அப்படியே பார்த்தபடியே இருக்கிறார், பார்வையாளர்கள் மத்தியிலும் ஒரே நிசப்தம்,
அடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு,
ஆனால் ஜெயின் கன்னத்தில் கைவைத்தபடியே சாமியை பார்த்தபடியே இருக்கிறார், இரண்டு நிமிடங்கள் அப்படியே ஓடுகிறது, பேனாவை மூடி மேஜை மேல் வைத்தார், கண்ணாடியை கழற்றி மேசை மீது வைத்தபடி அப்படியே எழுந்தார்,
வழக்கமாக “கோர்ட் is அட்ஜர்ன்ட்” என்று சொல்வதைக்கூட மறந்து சாமியை மேலும் முறைத்தப் பார்த்தபடியே அவரது அறைக்குள் சென்றார், பிறகு சாமியும் விசாரணைக் கூண்டிலிருந்து இறங்கினார், பார்வையாளர்களும் எழுந்து நகர்ந்தார்கள்,
சாமி பிரியங்காவை கடக்கும் போது பாடியே தலைகுனிந்து நடந்தார், அந்த நேரத்தில் நான் பிரியங்காவை பார்க்கிறேன்,
சுப்ரமணியசாமியை அப்படியே சுட்டெரித்துவிடுவதைப் போல் பார்க்கிறார், முகத்தில் ஆதங்கம், ஆத்திரம் எல்லாம் ஒன்றுகூட கண்கள் சிவந்து கலங்கியிருந்தன, நீதானா அந்தக் குற்றவாளி? என்ற முறைப்பு அது,
அப்படியே என்னையும் பார்க்கிறார் ஒருவித ஏக்கம், இயலாமை எல்லாம் கலந்த சாந்தமான பார்வையோடு தலைசாய்த்து இமை மூடினார்,
அதை நன்றி என்று எடுத்து கொள்வதா என தெரியவில்லை?,
அடுத்த நொடி அங்கிருந்து வேக வேகமாக வெளியேறினார்,
அவர் சென்றவுடனேயே அங்கு இருந்த மூத்த வழக்கறிஞரான தத்தா ஓடிவந்து என் கைகளைப் பற்றினார், இந்த வழக்கு இவ்வளவு நாளும் இருட்டில் இருந்தது, இன்றுதான் அதன்மீது ஒரு வெளிச்சக்கீற்று மின்னலாய் பாய்ந்திருக்கிறது,
இவ்வளவு நாளும் திக்குத் தெரியாத நிலையில் இருந்தது மிகவும் நன்றி என்று தட்டிகொடுத்தார், அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞரான மிட்டலும் ஓடிவந்து கட்டிபிடித்துக்கொண்டார், என்னால் எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை,
சு.சாமி அந்த இரண்டு பத்திரிக்கை செய்திகளையும் காட்டியபோது இத்தோடு எல்லாம் முடிந்தது என்று நினைத்துவிட்டேன்,
ஆனால் நீங்கள்..?
வாய்மை வென்றிருக்கிறது,
பரவாயில்லை என்றார்,
அது என் கடமை என்பதால் பாராட்டாக எடுத்துகொள்ள முடியவில்லை,
அதேபோன்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான விடியல் சேகர் ஓடிவந்து அண்ணே இந்த நாளை வாழ்கையில் மறக்க முடியாது,
உங்கள் மூலமாக இன்னைக்கு இந்த வழக்கில் ஒரு வெளிச்சம் கிடைத்திருக்கிறதண்னே என்றார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், எனக்கு பரிச்சயமில்லை என்றாலும் விடியல் சேகரோடு சேர்ந்து கைகொடுத்துப் பாராட்டினார்,
இதெல்லாம் சொல்ல காரணம் இருக்கிறது, இப்படி வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பலரும் என்னை அங்கு அங்கீகரித்தார்கள், பாராட்டினார்கள், கட்டிபிடித்து உருகினார்கள்,
ஆனால், ஒருவர் மட்டும் என்னை கோபமாக முறைத்தபடியே இருந்தார், என்னை வெறுப்பாக பார்த்தபடி எழுந்து விறுவிறுவென வெளியேறினார்,
அவர்தான் சி,பி,ஐ சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவரான கார்த்திகேயன், பரவாயில்லை, நாங்கள் புலனாய்வு செய்யாததை கூட நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்ட வேண்டாம்,
ஹலோ என்று ஒரு வார்த்தையாவது பேசியிருக்கலாம், ஆனால் இல்லை,
ஏதோ அவரை விசாரணைக் கூண்டில் நிறுத்தி அவர்தான் இந்தப் படுகொலையின் சூத்ரதாரி என நான் வாதடியதைப் போன்று முறைத்துக்கொண்டே சென்றார்,
அது தான் வேடிக்கையாக இருந்தது
சரி போகட்டும், அதன் பிறகு நான் வழக்கறிஞரோடு அவரது அலுவலகம் சென்று மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக விமானம் ஏறினேன், அந்த விமானத்தில்
வலதுபக்கம் மூன்று இருக்கைகள்,
இடது பக்கம் இரு இருக்கைகள்,
நுழைவு வாசல் ஓரத்தில் இருந்த மூன்று இருக்கையில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியும், அவரது நண்பர் வழக்கறிஞர் வீரசேகரனும் அமர்ந்திருந்தார்கள்,
அவர்கள் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்,
என்னை பார்த்த கி.வீரமணி வாழ்த்துகள் வேலுச்சாமி, இன்னைக்கு பிரமாதமாக ஆர்க்யூமென்ட் செய்தீர்கலாமே. நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டேன், பரவாயில்லை, சதிகாரர்கள் யார் என்பது ஓரளவு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்று பாராட்டினார்,
நானும் சிரித்தபடியே “ஆமாம்” என்றேன், இதற்குள் விமானம் புறப்படத் தயார் நிலைக்கு வந்தது,
அந்த கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஒருவர் உள்ளே நுழைந்தார், என்னை கண்டதும் நெருப்பை மிதித்திவிட்டதைப் போன்று முகம் மாறினார், அப்படியே முகத்தை திருப்பிக்கொண்டு எனக்குப் பக்கத்தில் இரண்டுபேர் அமரக்கூடிய இருக்கையில், என்பக்கமாக உட்கார்ந்தார்,
சும்மா அப்படி திரும்பினாலே என்முகத்தைப் பார்த்துவிடலாம், அப்படியிருந்தும் டெல்லி முதல் சென்னைவரை சுமார் இரண்டரை மணிநேரம் அந்த முகத்தை என்பக்கம் திருப்பவே இல்லை, கழுத்தில் சுளுக்கு விழுந்தவரை போன்று அந்தபக்கமே முகத்தை திருப்பிகொண்டார்,
யார் அந்த பெரிய மனிதர் என்று திரும்பவும் கேட்டுவிடாதீர்கள், சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனே தான், அவருக்கு ஏன் என் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி என்று யோசிக்கும்போதே அவர் புலன்விசாரணை செய்த கோணமும் லட்சணமும் நினைவுக்கு வந்து தொலைத்தது,
அதிகாரம் வைத்திருப்பவர்கள் சொல்வதே தீர்ப்பாகிவிடுகிறது என்ன செய்வது?,
“தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்”
என்ற குரலை கார்த்திகேயன் படித்திருக்க மாட்டாரோ?

மதிப்பிற்குரிய திருச்சி வேலுச்சாமி, அவர்கள் ராஜீவ் படுகொலை பற்றி எழுதிய “தூக்கு கயிற்றில் நிஜம்” என்ற நூலில் இருந்து.

அச்சம் அகற்றிய அண்ணல் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார்

சுயமரியாதை இயக்கத் தலைவர். சமூக சீர்திருத்தவாதி. அச்சம் அறியா அடலேறு. உண்மைக்கு தோழன் பொய்மைக்கு எதிரி.மொழிக்கும் நாட்டிற்கும் பிறந்த சமுதாயத்திற்கும் ஊருக்கும் உலகுக்கும் உழைத்த உத்தமர் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்தரபாண்டியனார் அவர்களின் 128வது பிறந்தநாள் புகழ் வணக்கம்!

அன்றைய மதுரை மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலகுண்டு அருகில் உள்ள பட்டிவீரன்பட்டியில் 15/09/1893 ஆண்டு திரு.ஊ.பு.அ. அய்யநாடார் திருமதி சின்னம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.

பாண்டியனார் தொடக்கக் கல்வியை தன்னுடைய வீட்டில் வந்து தங்கியிருந்து கற்றுக்கொடுத்த மதுரை சின்னசாமி நாயுடுவிடம் பெற்றார். பின்னர் மதுரையில் உள்ள ஐக்கிய கிறித்துவ உயர்நிலைப் பள்ளியிலும் (Union Christian High School, Madurai) விருதுநகர் சத்திரிய வித்தியாலாவிலும் பயின்று தன்னுடைய பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார்.

சென்னை கிறித்துவ கல்லூரியில் (Madras Christian College) கலை இணையர் (Fellow of Arts) கல்வியைப் பெறச் சேர்ந்தார். பின்னர் குடும்பப் பொறுப்பின் காரணமாக அக்கல்வியை இடையிலேயே கைவிட்டார்.

இளம் வயதில் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக பள்ளிக்கூடத்தில் கால்பந்து அணி கேப்டனாக டென்னிஸ் வீரராக உடல் உறுதி மிக்கவராக சிறந்து விளங்கியவர் பாண்டியனார்.

தனது 20 வயதில் விருதுநகரைச் சேர்ந்த திருமதி பாலம்மாள் அவர்களை 1913 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

தனது 28வது வயதில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1921 ஆம் ஆண்டு முதல் 1936 வரை நடைபெற்ற 4 சட்டமன்றங்களில் தொடர்ந்து நியமன உறுப்பினராக(MLC) பணியாற்றினார்.

1921 ஆண்டு முதல் 1930 வரை நடைபெற்ற ப‌.சுப்புராயன் அமைச்சரவை காலத்தில் அரசு கொறடாவாக பதவியில் இருந்தார்

1928 ஆம் ஆண்டு முதல் 1930 ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பொறுப்பில் இருந்தார்.

1932ஆம் ஆண்டும் 1943முதல்1947ஆண்டுவரை நான்கு ஆண்டுகள் மதுரை மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பொறுப்பில் இருந்தார். இரண்டு மாவட்டங்களுக்கு ஆட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

நாடார் சமுதாயத்தின் முடிசூடா மன்னனாக சௌந்தரபாண்டியன் இருந்தபோதும் மாற்று சமுதாயத்தினர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வந்தார்

1928ஆம் ஆண்டு பழனியில் நடைபெற்ற ஆதிதிராவிடர்களின் முதல் மாநாட்டில் சௌந்தரபாண்டியன் கலந்துகொண்டு மாநாட்டை நடத்துவதற்கு மிகப்பெரிய அளவில் பொருள் உதவியும் செய்த கொடுத்தார்.

1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்று இந்தியாவை போற்றக் கூடிய அளவிற்கு அந்த மாநாட்டை நடத்தி காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தை 1926ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பெரியார் அவர்கள் தோற்றுவித்தார் ஆனால் சுயமரியாதை இயக்கத்திற்கு தான் தலைவராக கமல் அனைத்து சமுதாயத்திற்கும் பாடுபடுவர் கூடிய உன்னதமானர் சௌந்தர பாண்டியனார் அவர்களை தலைவராகவும் அவருக்கு பக்கபலமாக தான் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார் இந்த நிகழ்வின் மூலம் சௌந்தரபாண்டியனாருடைய ஆளுமையை நாம் தெரிந்து கொள்ளலாம்

16 03 1930 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள தலைச்சேரியில் நடைபெற்ற தீயர் நாடார் பில்லர் மாநாட்டிற்கு சௌந்தர பாண்டியனார் தலைமையேற்றார். அங்கே தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.

ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்களை பள்ளியில் சேர்க்க மாட்டோம் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஆதிக்க ஜாதியினர் தடுத்து நிறுத்தியபோது தாழ்த்தப்பட்ட மக்களின் பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் பேருந்துகளில் செல்ல அனுமதிக்கவில்லை என்றால் பேருந்துகளில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அரசாணை பிறப்பித்து சமூக நீதியை நிலைநாட்டினார்.

1918 ஆம் ஆண்டு கமுதியில் ஏற்பட்ட நாடார் மறவர் மோதல் காரணமாக இரு தரப்பினரிடமும் தண்டப் படையை அரசு உருவாக்கி அதற்கான செலவை தண்ட வழி என்றும் திமிர் வரி என்றும் வசூலித்து வந்தது.

4/08/1921 ஆம் தேதி சட்டசபையில் இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நாடார் மறவர்கள் ஒற்றுமையாக இருப்பர் என்றும் எடுத்துக் கூறி இந்த வரியை முழுமையாக ஒழித்துக்கட்டியர் சௌந்தரபாண்டியனார்.

1925 ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே அவருக்கு முன்பே உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என யாரும் இல்லை மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான் என சமூக நீதியை நிலைநாட்டிட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் சட்டசபையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சௌந்தர பாண்டியனார்.

நீதிக் கட்சியில் அங்கம் வகித்த சௌந்தரபாண்டியனாரின் செயல்பாடுகளைக் கொண்டு நாடார் சமுதாய மக்கள் மிகப்பெரிய அளவிலே நீதிக்கட்சியை ஆதரித்தார்கள் அந்த காலகட்டத்தில் நீதிக்கட்சி நாடார் கட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு நாடார்கள் அதிகளவில் அந்த கட்சியில் இருந்தார்கள்.

சுயமரியாதை மாநாடுகளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு சமையல் செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது இதன் காரண கர்த்தா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள்.

1939 ஆண்டு மூதறிஞர் ராஜாஜியின் தலைமையில் செயல்பட்ட சென்னை மாகாண அரசு தமிழ்நாட்டில் இந்தியைக் கட்டாயமாக்க முயற்சி செய்தது இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது பெரியார் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட பெரியார் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நாங்கள் சிறைக்குச் சென்றாலும் தமிழர் தளபதி சௌந்தர பாண்டியனார் இருக்கிறார் அவர் இருக்கும் வரை இந்தி தமிழகத்தில் நுழைய முடியாது அவரது தலைமையில் போராட்டம் தொடரும் என அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்தார்.

பெண்ணுரிமை,விதவை மறுமணம், பெண்களுக்கு ஓட்டுரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, போன்ற செயல்பாடுகளில் முன்னணியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் இதுகுறித்து பலமுறை பேசி உள்ளார்.

ஆணும் பெண்ணும் சரிசமம் ஆணுக்கு உள்ள அத்தனை வாய்ப்புகளும் சுதந்திரமும் உரிமைகளும் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் தான் நாடு உண்மையான சுதந்திரத்தை எட்ட முடியும் என்று உறுதியாக இருந்தவர்.

பெண்களுக்கு அதற்கான இருக்கிற ஒரே ஆயுதம் கல்விதான் ஆகவே அனைத்து பெண்களும் கல்வியில் சிறந்து வேலைக்கு சென்று சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற உதவிகள் செய்தவர் பெண்ணுரிமை போற்றிய விவேகானந்தர் பாரதி பாரதிதாசன் கலைவாணர் ஜிடி நாயுடு போன்றோர் மீது மிகுந்த மதிப்பும் கொண்டிருந்தவர்.

நாடார் சமுதாயத்தின் மிக முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் நாடார் மகாஜன சங்க பல மாநாடுகளை கலந்து கொண்டவர் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர்.

நாடார் வங்கி எனும் தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் உருவாக காரணமாக இருந்தவர் அதன் இயக்குனராகவும் செயல் பட்டவர். நாடார் மகாஜன சங்கம் மூலம் கல்லூரிகள் உருவாக ஊன்றுகோலாக இருந்தவர்.

மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் ஏழை எளிய மக்களிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் தன்னிடம் வேலை செய்பவர்கள் முதலாளி என்று கூறினால் நாம் எல்லாம் ஒன்று தான் அண்ணன் என்று மட்டும் கூறவார். தாழ்த்தப்பட்ட மக்கள் தோலில் போட்டிருக்கும் துண்டை இடுப்பில் கட்டுவதும், காலில் அணிந்திருக்கும் செருப்பை கழட்டி கொண்டு மரியாதை கொடுப்பதையும் கடுமையாக எதிர்த்தார்.

அரசியலில் மட்டுமல்ல தொழிலிலும் விவசாயத்திலும் மிகப்பெரிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர்.

இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் சர்க்கரை தட்டுப்பாடு மக்கள் அவதியுற்றனர். அந்த காலகட்டத்தில் மதுரைக்கும் கொடைக்கானல் செல்லும் சாலைக்கு இடையில் பாண்டியராஜபுரம் எனும் ஊரில் இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பெரிய சக்கரையில் ஒன்றை தனது நண்பர் பி டி ராஜன் அவர்களின் இணைந்து உருவாக்கி ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினார்.பாண்டியராஜபுரம் என்ற ஊரின் பெயர் இவரது பெயரிலும் இவரது நண்பரின் பெயரிலும் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டிவீரன்பட்டி யில் பலருக்கும் பயன்படும் வகையில் காப்பிடம் தொழிற்சாலையை கூட்டுறவு முறையில் தோற்றுவித்தார் 2000 தொழிலாளர்களை கொண்ட தொழிற்சாலையாக அது இன்று வளர்ந்து நிற்கிறது.

காபி போர்டு தலைவராக 1941 இல் இருந்து பொறுப்பேற்று பல சாதனைகளை நிகழ்த்தியவர் ஆரம்ப நாட்களில் இடைத் தரகர் மூலம் ஏற்பட்டு வந்த காபி வியாபாரம் காபி போர்டு உருவாக்கப்பட்ட பின் நேரடியாக விற்பனை செய்ய முடிந்ததில் விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கச் செய்தார். இதன் மூலம் சிறு விவசாயிகளுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார் ஏழை மாணவர்களுக்கு அதன் மூலம் உதவித்தொகை வழங்கிட செய்தார்.

விவசாயத்தில் சாதனை கொடிமுந்திரி ஆகாது என்ற விவசாயிகள் ஆகும் எனக் கூறிவிட்டு இடத்தில்தானே பயிரிட்டு கேகே நாயர் என்கின்ற விவசாயநிபுணர் முன்னிலையில் சாதனை நிகழ்த்தி காட்டியவர்.கறம்பு நிலத்தில் கரும்பு பயிரிட்டு அதிக உற்பத்தி எடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி அரசின் புருவம் உயர வைத்தவர்.

காடுகளை கழனி ஆக்கி கட்டாந்தரைகளை பூந்தோட்டம் ஆக்கி குகைகளையும் மரங்களையும் பல தோட்டங்கள் ஆக்கியவர் அதற்கு அவர் பயன்படுத்திய ஒரே விஷயம் கடின உழைப்பு அயராத உழைப்பு அறிவுபூர்வமான உழைப்பு,உழைப்பை களிப்போடு செய்தவர் வேளாண்மை என்ற சொல்லுக்கு இலக்கிய அந்தஸ்து உண்டாக்கி தந்தவர்.

வயல்,காடு,மலை காடு என்று பலவகை தன்மை உடைய நிலங்களில் அவர் பண்ணைகள் அமைந்திருந்தன காஃபி, ஏலம்,மிளகு, பலா, எலுமிச்சை, வாழை, கரும்பு, திராட்சை ஆரஞ்சு நெல் தென்னை முதலான விவசாய பண்ணைகள் அவரிடம் இருந்தது தன் வீட்டில் பின்புறம் அமைந்திருந்த தோட்டத்தில் சாத்துக்குடி ஆரஞ்சு பழம் விளைவித்தார் வீட்டுத் தோட்டத்தில் இவைகளை பயிரிட்டிருந்தது ஒரு சாதனை.

தனது நேரடி பார்வையில் 500 ஏக்கர் நன்செய் கரும்பு பழத்தோட்டங்களை பயிரிட்டு இருந்தார். தமிழகத்தில் மட்டும் இல்லாமல் மைசூர் மாநிலத்திலும் இவருக்கு 2300 பெரிய பண்ணை இருந்தது காபி ஏலக்காய் முதலான பயிர்களை பயிரிட்டு வந்தார்.

இயற்கை உரம் என்கின்ற தொன்மையான முறைகளையும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதில் நவீனமான பல முறையிலும் பயன்படுத்தி ஒரு விவசாயப் புரட்சியை நிகழ்த்தி காட்டினார்.

1943இல் தென்னிந்திய ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தை நிறுவினார் இதன் மூலம் ஏழைகளை உற்பத்தியாளர்களுக்கு பல நலன்கள் கிடைக்கச் செய்தார்.

முதல் ஐந்தாண்டு திட்டம் இதில் விவசாயத்திற்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் தொழிற்சாலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை அரசுக்கு சுட்டிக்காட்டினார்

நம் நாடு விவசாய நாடு இங்கே பசுமை புரட்சியும் தொழிற்புரட்சியும் ஒருங்கிணைந்து நடந்தேற வேண்டும் நமது நாட்டில் வசிப்பவர்கள் 80% கிராமத்தில் விவசாயத்தை நம்பியே வாழ்பவர்கள் அதனால் விவசாயத்திற்கு போதிய முக்கியத்துவம் தர வேண்டும் இல்லாவிட்டால் உணவுப் பொருளுக்கு நாம் வெளி நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எடுத்துரைத்தார்.

இந்தியன் சர்க்கார் ஆயுள் காப்புக் கழகம் நல்ல சேமிப்பு வழக்கத்தை நாட்டில் உண்டாக்க வேண்டும் எனும் நல்லெண்ணத்தால் 1933 ஆம் ஆண்டில் ஏற்படுத்தினார். சென்னை தலைமை இடமா கொண்டு இது உருவாயிற்று ஒரு கோடி ரூபாய் வரை தொழில் செய்ய உரிமை பெற்றிருந்தது இத்தொழில் நிறுவனம் பெயரை கவனியுங்கள் இந்தியன் சர்க்கார் ஆயுள் காப்புக் கழகம் இந்த பெயர் வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது சர் ராமசாமி முதலியார் மூலம் அரசுக்கு பெயர் விளக்கம் தெரிவிக்கப்பட்டு அப்பெயரே நிலை பெற்றிட இவர் ஆவன செய்தார் மதுரை கிளைக்கு நிர்வாக இயக்குனர் திரு பாண்டியனார் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்நிறுவனம் அரசு இத்தகு ஆயுள் காப்பீட்டுக் கழகங்கள் அரசு உருவாக்கிய பிறகு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்னை இந்தியா ஆயுள் காப்பு கழகம் மதுரையை தலைமையகமாக கொண்டு இவரால் தொடங்கப்பட்டது இந்நிறுவனத்தில் பல புதிய திட்டங்களை புகுத்தி சிறந்த பணியாற்றினார்.இதில் சேர்வதற்கு மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை என்று தெளிவுபடுத்தினார் ஏழை எளியவருக்கு பயன்படும் அமைப்பாக இதை வளர்த்தார்.

கல்வியின் காவலர் பாண்டியனார்
பகுத்து உணரும் அறிவு கல்வியால் தான் பெற முடியும் அந்த ஆறாவது அறிவு நாள் தான் மனிதன் மற்ற உயிர்களைவிட மேலானவனாக கருதப்படுகின்றார்.

மனித இனத்தின் உயிர்நாடியான கல்வியை மக்களின் விழிப்புணர்ச்சி மூலமே அவர்களை அறிய செய்யலாம் என்று இயக்கங்களும் பல தலைவர்களும் எண்ணினார்கள் அதற்கான பிரச்சாரங்கள் முன்னெடுத்தார்கள் ஆனால் பாண்டியனார் அவர்கள் கல்வி பற்றிய பிரச்சினைகள் பிரச்சார தோடு நின்று விடாமல் அதனை செயல்படுத்தியும் செய்து காட்டியவர்.

1928ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி கழகத் தலைவரான சௌந்தர பாண்டியனார் அவர்களை ஏழாயிரம்பண்ணை நாடார் பெருங்குடி மக்கள் தங்கள் தலைவருக்கு பாராட்டு விழா எடுத்து வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று விரும்பி தங்கள் ஊருக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது பாண்டியன் அவர் கேட்ட கேள்வி ஏழாயிரம் பண்ணையில் பள்ளியில் பள்ளிக் கூடம் இருக்கிறதா என்பதுதான் வந்தவர்கள் சொன்னார்கள் இல்லை என்று அப்படியா பள்ளிக்கூடம் இல்லாத ஊருக்கு நான் வரமாட்டேன் அந்த மண்ணில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் முதலில் நீங்கள் உங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்குங்கள் பிறகு நான் வருகிறேன் என்று உறுதியாகக் கூறி அந்த பிரமுகர்களின் அழைப்பை நிராகரித்தார்.

வந்தவர்களுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை ஊருக்கு திரும்பி விட்டார்கள் அங்கே நாடார் உறவின்முறை கூட்டம் கூட்டினார்கள் ஏழாயிரம்பண்ணையில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அவர்களின் தீர்மானம் செயல்வடிவம் பெறும் போது அங்கு பள்ளிக்கூடம் கட்ட பாண்டியனார் போதிய ஒத்துழைப்பு கொடுத்தார் ஏழாயிரம் பண்ணையில் எழுந்து நின்றது பள்ளிக்கூடம் பாண்டியனார் நிற்பந்தத்தால்

பிறகு என்ன? மலர்ந்த முகத்துடன் ஏழாயிரம்பண்ணைக்கு வருகை தந்தார் மாவட்ட ஆட்சி மன்றத்தலைவர் அண்ணல் சௌந்தர பாண்டியனார்.

கல்லூரியில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்திற்கு ஒருமுறை பாண்டியனார் சென்றிருந்தார் கூட்டம் கல்லூரணி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. அப்போது ஒருவர் மல்லாங்கிணறு என்ற பக்கத்து ஊரில் நடுநிலைப்பள்ளி உருவாகியிருப்பதாக பாண்டியனின் கவனத்திற்கு ஒரு செய்தி கொண்டு வந்தார்.

உடனே கல்லூரணிகாரர்களை அழைத்து மல்லாங்கிணறு நாடார்கள் நடுநிலைப்பள்ளி நடத்தினால் உங்கள் கல்லூரி மாணவர்கள் கல்லூரிகளில் நடத்த வேண்டும் என்று சிரித்துக்கொண்டே சிந்தனையை தூண்டும் வகையில் பேசினார் மேலும் அவர் கொடுத்த ஊக்கம் இன்று கல்லூரியில் மேல்நிலைப்பள்ளி என்ற அளவில் கல்வி வளர்ச்சியை அந்த பகுதி மக்களுக்கு அளித்து வருகிறது.

விருதுநகர் எம்.எஸ்.பி.செந்தில் குமார நாடார் கல்லூரி என்ற புகழ் பெற்ற கல்லூரி உருவாக காரணமாக இருந்த வரும் பாண்டியனார் அவர்கள் தான் 1947 இல் அந்த கல்லூரி உருவாகும்போது அதன் செயற்குழு தலைவராக இருந்து கல்லூரி வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் துணை நின்றார்.

ஏழை மாணவர்களுக்காகவும் கல்வி நிலையங்களுக்காகவும் பாண்டியனார் தனது சொந்தப் பணத்தை வாரி வாரி வழங்கியிருக்கிறார் கல்வி உதவி நிதி திரட்ட என்னை அவர் பல ஊர்களுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் நானும் அவருடைய நல்ல நோக்கத்தை பார்த்து தட்டாமல் மகிழ்ச்சியுடன் அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு இருக்கிறேன் என புகழ் பெற்ற திரைப்பட நடிகர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் பதிவு செய்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் வியாபாரிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக திருடர்கள் கூட்டம் செயல்பட்டு வந்தது அந்தத் திருடர்கள் அங்கிருந்து வியாபாரி காப்பாற்ற பல்வேறு நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்றி யவர் பாண்டியனார்.

மதுரையில் உள்ள பழ மார்க்கெட்டில் கொள்ளையர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்த நிலையில் தனது துப்பாக்கியை கொடுத்து கொள்ளையர்களை சுட்டு வீழ்த்தியவர்.

அந்த காலத்தில் புகழ்பெற்ற கொள்ளையன் ஆன செவத்தையன் என்ற கொள்ளைகாரனுன் நேரடியாக மோதி அவனை சுட்டு வீழ்த்திய வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்ந்தவர் பாண்டியனார்.

மனிதர்களுக்கு பாதுகாப்பாக இருந்த காரணத்தினால் அவரை தமிழக மக்கள் அச்சம் அகற்றிய அண்ணல் என்று அழைத்தார்கள்.

விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு சட்டமேதை அம்பேத்கர் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்துவந்து பெருமைப்படுத்தினார்.

அண்ணல் என்ற சொல் இந்தியாவில் மூன்று தலைவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களுக்கும் சட்டமேதை அம்பேத்கர் அவர்களுக்கும், அதே காலகட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுயமரியாதை இயக்க மாபெரும் தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.

தாய் சொல்லைத் தட்டாத தனயன்
பட்டிவீரன்பட்டி யில் அதிக அளவில் உற்பத்தியான திராட்சை பழத்தைக் கொண்டு ஒயின் தயாரிக்கும் ஆலையை தொடங்கினார் இச்செய்தியை அறிந்த பாண்டியனாரின் தாயார் மகனே குடி குடியை கெடுக்கும் அந்த தொழிலை நாம் செய்யலாமா என்று கேட்ட ஒரே காரணத்தினால் பல லட்சம் மதிப்புள்ள அந்த ஆலையை உடனடியாக இழுத்து மூடினார் பாண்டியனார் அவர்கள்.

அந்த கால கட்டங்களில் இந்தியாவில் ஒரு சில பெரும்பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த ரோல்ஸ்ராய்ஸ் காரை சௌந்தர பாண்டியனார் அவர்கள் பயன்படுத்தி வந்தார்.

வேண்டாம் சர் பட்டம்
சமூக சீர்திருத்த காரணங்களாலும் அரசியல் காரணங்களாலும் பிரிட்டிஷாருடன் இணைந்து பணியாற்றினாலும் அந்நிய ஆதிக்கத்தை பாண்டியனார் விரும்பவில்லை தனக்கு இருந்த பிரிட்டிஷ் அரசின் உயரிய விருதான சர் பட்டத்தை வேண்டாம் என்று மறுத்து தன்னுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தினார் தன்னலமற்ற இந்த முடிவால் தங்களுடைய சுயமரியாதையும் விடுதலை உணர்வையும் நாட்டிற்கு புலப்படுத்தினார்.

நட்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
சென்னை மாகாண முதல்வராக இருந்த பி.டி ராஜன் அவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.
அரசியல் ரீதியாக எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தனது நண்பர் வீட்டில் அவர்களுடன் கேட்டு தான் முடிவு செய்வார் அதேபோல பேட்டி ராஜன் அவர்களும் இருவரும் இரட்டை குழல் துப்பாக்கி போல் சமூகநீதியை காத்திட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்தார்கள்.
இவர்கள் இருவர் பெயரில் பாண்டியராஜபுரம் என்ற ஊர் உருவாக்கப்பட்டது.

சர் பி டி தியாகராயர்,முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம்.கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், பெரியார், சென்னை மேயர் சிவராஜ்,அண்ணா, இந்திய நிதியமைச்சர் ஆர் கே சண்முகம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் நாடக நடிகர் எம் எஸ் சண்முகம் முன்னாள் முதல்வர்கள் பனகல் அரசர், டாக்டர் பா சுப்புராயன், குமாரசாமி ராஜா, காமராஜர், மன்னர் சேதுபதி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,இப்படி தமிழகத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் அனைவருமே பாண்டியனார் அவர்களின் நெருங்கிய நண்பர்களாக இருந்தது இவருடைய நட்புக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பாண்டியனார் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக விருதுநகர் பிரதான சாலைக்கு டபிள்யூ பி ஏ சவுந்தரபாண்டியன் சாலை என பெயரிடப்பட்டுள்ளது.

ஆலந்தூர் கோ மோகனரங்கன் என்பவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் நினைவு படிப்பகம் ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.

சௌந்தர பாண்டியனார் அங்காடிதெரு(பாண்டிபஜார்) என்ற பெயரில் சென்னை தியாகராயநகரில் மிகப்பெரிய தெரு உள்ளது. இங்கு உள்ள காவல் நிலையத்திற்கு சௌந்தரபாண்டியன் அங்காடித்தெரு காவல் நிலையம் என்ற பட்டபெயரும் உள்ளது.

சௌந்தர பாண்டியனார் சிலை முதன்முதலில் மதுரை வெள்ளைச்சாமி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.கல்லூரணி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அவருடைய திருவுருவச் சிலை இருக்கிறது.முத்து ரமேசு நாடார்

தியாக ராய நகர் பனகல் பூங்கா முகப்பில் சௌந்தர பாண்டியனார் அவர்களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை உருவாக்கி தந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் 1992ஆம் தேதி திறந்து வைத்து பெருமை சேர்த்தவர் அன்றைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள்.

1994 ஆம் ஆண்டு பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் திருவுருவச் சிலையை முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் திறந்து வைத்துள்ளார். கோபால சமுத்திரத்தில் 84 ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு டபிள்யு.பி.ஏ. சௌந்தரபாண்டியன் பாலம் என்று அன்றைய முதல்வர் மு கருணாநிதி அவர்களால் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

சென்னை அயனாவரத்தில் டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பட்டிவீரன்பட்டியில் டபிள்யு.பி.ஏ‌.சௌந்தரபாண்டியன் பெயரில் வணிக வளாகம் நிறுவப்பட்டிருக்கிறது. பட்டிவீரன்பட்டி யில் பிரசித்தி பெற்ற என் எஸ் வி வி மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு நுழைவாயிலுக்கு டபிள்யு.பி.ஏ.சௌந்தரபாண்டியன் நுழைவாயில் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

பாண்டியனார் அவர்கள் 17 ஆண்டுகள் நீதிக்கட்சியில் முக்கிய பதவிகளில் பொறுப்பேற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய போதிலும், ராமநாதபுரம் மதுரை மாவட்ட ஆட்சி கழகத் தலைவராக பணியாற்றிய போதிலும்,சமுதாய சங்க பொதுச்செயலாளராக இருந்தபோதிலும், விவசாய சங்க தலைவராக இருந்த போதிலும், தொழிற்சங்க தலைவராக இருந்த போதிலும், நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவராக இருந்த போதிலும், சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராகவும் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்த போதிலும்,அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் அது தன்னலமற்ற சமூக விழிப்புணர்வுக்கான தொண்டு மட்டுமே

வாழ்வு குறுகியது பிறருக்காக வாழ்ந்த அனைவரும் வரலாறாக ஆகிறார்கள் ஆனால் பிறருக்காக வாழ்பவர்களே என்றும் இறப்பதில்லை மக்களின் நினைவில் நின்று நிலைத்து வாழ்வார்கள் என்று சொல்லும் வார்த்தைகள் உள்ளிருக்கும் அர்த்தம் சௌந்தரபாண்டியனார் அவர்களுக்கு 100 சதவீதம் பொருந்தும்