மேற்கத்தியார் எல்லாம் சேர்ந்து நாமெல்லும் ஒரே இனம் என்று சேர்ந்து பேசி.. ஐரோப்பிய ஒன்றியம் எனவாக்கினர். அவர்களுக்கென பொது யூரோ பணத்தை உருவாக்கினர். யாரும் எங்கும் அனுமதியின்றி பிற நாடுகளுக்கு போய்வரலாம். யாரும் செல்லும் நாட்டு பணத்திற்காக அலைய வேண்டியதில்லை என்ற பல தேர்வுகள் வடிக்கப்பட்டன.
கொஞ்ச காலம் உலகாண்ட இங்கிலாந்து இருந்து பார்த்தது. தன்னுடைய உயரம் எவ்வளவு?.. ச்சே.. மற்றவர்களோடு நாம் சமமா? கேள்வி கேட்டுக்கொண்டே விலகல் தீர்மானம் கொண்டு வந்து விட்டது. அதனால் ஒன்றாக இருக்க இங்கிலாந்து விரும்பவில்லை. அவர்களை விட்டு நாங்கள் பிரிந்து போகிறோம் என விலகியும் வந்து விட்டது. காரணம்? தமிழருக்கு தெரிய வேண்டும். ஏனென்றால்.. இங்கே தமிழருக்குள் வந்து நுழைந்த குள்ள நரிகளாக சிலரும் ஈவேராவும் புளுகியதை தமிழர் நம்பி மோசம் போனதை எண்ணி பார்க்க வேண்டும்.
ஈவேரா பெரிய புரட்சியாளர் என ஓடோடி அவர்களிடம் தஞ்சம் புகுந்து கெடுத்தாரும் அவரை நம்பியே அரசியல் செய்வோம் என பகுத்தறிவு பேசுகின்றவர்களும் உணர வேண்டும்.
என்னதான் ஒரே இனம் என பேசினாலும் ஐரோப்பியர் என முழங்கினாலும் எங்களை போலவே பிரஞ்சுக்காரர்களும் பானிசியரும் செர்மானியரும் என உலகில் ஆதிக்கம் செய்பவர்கள் இருந்தாலும் உங்களுடன் கூட்டு சேர்ந்து எங்களின் முதன்மைத் தன்மையை உங்களுடன் சேர்ந்து இழக்க தயாராய் இல்லை என்பதை ஐரோப்பிய ஒன்றியத்தை உடைத்துவிட்டு வெளியேறிய போது இங்கிலாந்து உலகத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடித்துச் சொல்லியது.
இதையெல்லாம் திராவிட தூக்குத்தூக்கிகளாக இருக்கும் தமிழர் சாலி ஒழிப்பு என்றும் சுயமரியாதையென்றும் பார்ப்பனர் ஒழிப்பு என்றும் கடந்த சில நூறு ஆண்டுகளாக கலை விட்டே தமிழ்நாட்டின் சுகங்களை அனுபவிப்பது மட்டுமின்றி, நாங்கள் இல்லையென்றால்.. தமிழ் நாடே இல்லை. தமிழர்களே இல்லை. தமிழ் மொழியே இல்லையென இன்றும் ஏமாற்றும் திராவிட சூழ்ச்சி அரசியை விட்டு வெளியேறாமலும் அவரை குறை சொல்ல மாட்டோம் என்றே.. கைவிட்டு மீண்டும் மீண்டும் திராவிட குப்பையில் புரண்டு எழுவோரை தாங்கும் தமிழரெல்லாம் விழித்தெழ வேண்டும்.
தென்னாட்டில் அடிபட்டுக் கிடந்த இனமெல்லாம் அவரவர் நிலம் என பேசுவதும் மொழியென வளர்ப்பதுமாக இருக்க.. நாம் மட்டும் என்ன அப்பாவி பெற்ற பிள்ளைகளா? எண்ணி பார்க்க வேண்டும்.
தமிழர் இனி யார் பின்னும் ஓடாதவர் என்பதை உலகிற்கே சொல்ல.. நாம் தமிழை பிடிப்போம் தமிழராய் கைகளை இணைப்போம் தடுப்புகளாய் நிற்கும் எந்த நஞ்சுள்ளத்தறவரையும் விட்டு தலை நிமிர்ந்து நடப்போம்!
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு!.. அதனை யாவரும் புரிந்து கொள்ள களம் அமைப்போம். கவனமாய் வெற்றியை தாய்த் தமிழுக்கு பரிசளிப்போம்! வணக்கம்.
பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.