செய்தி: கலை மற்றும் அறிவியல் படிப்புக்கும் வருகிறது நுழைவுத்தேர்வு.
மருத்துவத்திற்க்கு நுழைவுத்தேர்வை ஆரியப் பார்ப்பன பாஜக கட்சி திணித்தப்போதே சொன்னோம் ,இது மருத்துவத்தோடு நிற்க்காது, அடுத்து பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வை திணிப்பார்கள் என்று. அதுபோலவே இன்று திணிக்க தொடங்கிவிட்டனர். இதோடு மிட்டுமில்லாமல் ஏற்கனவே 5,8 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு அறிவித்துள்ளனர்.
இதோடும் நிற்க்க மாட்டார்கள். அடுத்து 1ம் வகுப்பிலிருந்து அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை அறிவித்து, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களை பள்ளிப்படிப்பைக்கூட முடிக்கவிடாமல் தடுப்பார்கள். இது ஏதோ அதீத கற்பனையில் சொல்வது அல்ல. இதுதான் ஆரியப் பார்ப்பனர்களின் கல்விக்கொள்கை.
“சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே!!” “சூத்திரன் படித்தால் அவன் நாக்கை அறு!”, சூத்திரன் பாடத்தைக் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று!!”
என்று ஆரியப் பார்ப்பனர்களின் வேத நூலான மனுநூல் சொல்கிறது. இதன் அடிப்படையில் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆரியப் பார்ப்பனர்கள் தங்களைத் தவிர வேறு யாரையும் கல்விகற்க்க விடாமல் தடுத்து வைத்திருந்தனர்.
பின்னர் ஆங்கிலேயர் வருகை, சமூகநீதி இயக்கத்தின் எழுச்சி இவற்றால் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தான் அனைவரும் கல்வி கற்க்கும் சூழல் மலர்ந்தது.ஆனால் அதைக்கூடாத பொறுக்காத ஆரியப் பார்ப்பன இனம், தமிழர்கள் கல்வி கற்பதை தடுக்க ஆரியப் பார்ப்பான் இராஜாஜி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும் குலக்கல்வி திட்டத்தை திணித்தது. நிதி நெருக்கடியை காரணங்காட்டி தமிழகத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 6,000 பள்ளிக்கூடங்களை இழுத்து மூடியது.
பின்னர் தமிழர்களின் போராட்டத்தால், குலக்கல்வி திட்டம் தடுக்கப்பட்டது. ஆரியப் பார்ப்பான் இராஜாஜியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அடுத்து காமராசரின் ஆட்சி மலர்ந்தது. காமராசர் ஆரியப் பார்ப்பான் இராஜாஜி மூடிய 6,000 பள்ளிக்கூடங்களை உடனடியாக திறந்தார். மேலும் புதிதாக 12,000 கல்விக்கூடங்களை திறந்தார்.
இதுதான் வரலாறு. ஆனால் இன்று நம்மில் பலர் வெறுமென காமராசர் பள்ளிக்கூடங்களைத் திறந்தார் என்றுதான் சொல்கிறோம்.ஆனால் காமராசர் யார்? மூடிய பள்ளிகளைத் திறந்தார் என்பதை சொல்வதில்லை. காமராசர் ஆட்சி பொறுப்பேற்றதும் ஆரியப் பார்ப்பான் இராஜாஜி மூடிய 6000 பள்ளிகளையும் திறந்தார்.
பின்னர் தான் தமிழக மக்களின் அறியாமை இருள் நீங்கி, கல்வியறிவு ஒளி மிளிர்ந்தது. பின்னர் வந்த ஆட்சியாளர்களும் இதை வளர்த்தெடுத்து, இன்று கல்வியறிவில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்குகிறது. இன்று தமிழகத்தில் பட்டதாரிகள் இல்லாத வீடே இல்லை என்ற சூழல் நிலவுகிறது.
இதுதான் ஆரியப் பார்ப்பன இனத்திற்க்கு, கண்ணில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.இதைத் தடுக்கத்தான் ஆரியப் பார்ப்பன கும்பல்கள் துடிக்கின்றன. இன்று அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிபொறுப்பேற்றுள்ள தங்களின் அரசியல் பிரிவான (பா)ர்ப்பன (ஜ)னதா (க)ட்சி மூலமாக இதை தடுக்க முயல்கிறது.
எனவே தமிழர்களே!
இந்த வரலாற்று பின்னணிகளை எல்லாம் உள்வாங்கிக்கொண்டு, இந்த நுழைவுத்தேர்வுகளுக்கு எதிராக நாம் மிகப்பெரிய போராட்ட ங்களை முன்னெடுத்தால் மட்டுமே நம் வருங்காலச் சந்ததியினரின் கல்வி பாதுகாக்கப்படும்.இல்லையேல் ஆரியப் பார்ப்பனர்களால் நமது சந்ததிகளின் கல்வி கேள்விக்குறியாக்கப்படும்.