சங்க காலத் தமிழர்கள், உலகையே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் காரணமாக இருந்தது அவர்களிடம் இருந்த வணிகம்தான். அதே முறையைப் பின்பற்றித்தான், ஆங்கிலேயனும் உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். அதே முறையைப் பின்பற்றித்தான், பிராமண- பனியாக் கூட்டம் இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கின்றனர். அதே வழியில் தான் பிராமண-வடுக தெலுங்கர்கள் தமிழகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். ஏனெனில், அரசியலும் வணிகமும் நேரடித் தொடர்பில் இருப்பவை.
உழைப்பு- அதன் மூலமான உற்பத்தி- உற்பத்திக்கான சந்தை- சந்தையைக் கட்டுப்படுத்தும் இடைத்தரகர்- இடைத்தரகரைக் காக்கும் சட்டம்- சட்டத்தை இயற்றும் அரசு. இதுதான் மனிதனின் சமூக இயங்கியல். இந்தச் சங்கிலியில் இடைத்தரகரெனும் வியாபாரிக்கும் அரசுக்கும்தான் நேரடித் தொடர்பு இருப்பதால், அவர்களே கூட்டுக் களவாணிகளாக இருக்க முடிகிறது.
ஏன் இந்த களவாணித் தனத்தை தமிழர்கள் செய்யவில்லை?
தேவைக்கும் அதிகமான வளம் தமிழர் நிலத்தில் கொட்டிக் கிடந்ததும், தேவைக்காக மட்டுமே வாழ வேண்டுமென்ற அறம் தமிழர்களுக்கு கற்பிக்கப்பட்டு இருந்ததுமே, தமிழின வணிகர்கள் எங்கும் எப்போதும் களவாணித் தனத்தில் ஈடுபடாமல் இருந்தமைக்குக் காரணம். ஒருவேளை, தமிழர்கள் ஆங்கிலேயேனைப் போலவோ, மார்வாடி- பனியாக்களைப் போலவோ, திராவிடத் தெலுங்கர்களைப் போலவோ களவாணித் தனமாக அதீத பொருளீட்டும் எண்ணத்தில் வாழ்ந்திருப்பார்கள் எனில் இன்றும் உலகம் நம்மிடம் கையேந்தியே நின்று இருக்கும். நாணயத்தால் நாடு இழந்த கூட்டம் இது.
எனவே, விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நிற்க வேண்டிய தருணமிது. எரியும் கொள்ளியைப் பிடுங்கினால், கொதிப்பது அடங்கும் அல்லவா? அப்படியானதொரு செயல் திட்டத்தோடு தமிழர்கள் இயங்க வேண்டும்.
இந்தியாவை யார் ஆள்கின்றனர்? பெரும்பாலானவர்கள் தெளிவாக பதில் சொல்வார்கள். அதானியும், அம்பானியும் என்று. சரி, தமிழகத்தை யார் ஆள்கின்றனர்? பதில், தெளிவாக இருக்காது. ஏனெனில், இங்கு ஆரிய-பிராமணியப் பூஞ்சாண்டியைக் காட்டிக் காட்டியே திராவிட- வடுக கூட்டம் நம்மை குழப்பி வைத்து இருக்கின்றனர்.
தமிழகத்தின் எல்லாக் கட்சிகளையும் கட்டுப்படுத்துவது தெலுங்கு வியாபாரிகள்தான். அதனால்தான், தமிழகத்தின் சபாநாயகர் தெலுங்கர், துணை சபாநாயகர் தெலுங்கர். தமிழக தலைமைச் செயலகத்தின் பெரும்பான்மையான ஊழியர்கள் தெலுங்கர்கள், தலைமைச் செயலகத்தின் முதன்மைத் தளத்தின் பெயர் ‘நாயுடு ஹால்’. பல சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெலுங்கர்கள். இது பெயருக்குத்தான் தமிழ்நாடு. ஆனால் இதன் முழு அதிகாரத்தையும் ருசிப்பவர்கள் தெலுங்கு வியாபாரிகள்.
தமிழ்நாட்டில் யார் கட்சி ஆரம்பித்தாலும், முதலில் ஓடிப் போய், தலைவர்கள் பக்கத்தில் துண்டு போட்டு உட்காருபவன் தெலுங்கு வியாபாரியாகத்தான் இருப்பான். இதை எல்லாம் தமிழர்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது. ஏனெனில், நம்மிடம் பொருளாதார பலமும் இல்லை. பொருளாதார பலம் அடையத் தேவையான வியாபாரமும் இல்லை. அது யாரிடம் இருக்கிறதோ, அவருக்கு சாதகமாகத்தான் தலைவர்களும், கட்சிகளும், ஆட்சியாளர்களும் நடந்து கொள்வர். இதுதான் உலக நியதி.
எனவே நம் எதிரிகளை எதிர்க்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இணையான பொருளாதார பலத்தை அடைய வேண்டும். அதற்கு நாம் மீண்டும் தமிழர்களின் வணிக மேலாண்மை ஆற்றலை அதிகரிக்க வேண்டும். தமிழன்தான் மனிதகுல வரலாற்றில் முதன் முதலாக வணிகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே கப்பல் கட்டி, கடலைக் கடந்தான். அத்தகைய வணிக மேலாண்மை வைத்திருந்த தமிழன் இன்று வெறும் கூலியாக கூனிக்குருகி நிற்கின்றான்.
தமிழ்த்தேசிய பெருமுதலாளிகளை உருவாக்குவதும், அவர்களின் மூலமாக தமிழர் வணிகத்தை கட்டியெழுப்புவதும், அதன் மூலமாக பொருளாதார சுழற்சியை தமிழர்களுக்கு இடையே மட்டும் சுழலவிடுவதுமே நம் முதல் அடியாக இருக்க வேண்டும். அரசியலின் அடிநாதம் பொருளாதாராம். பொருளாதாரத்தின் அடிநாதம் வியாபாரம். வியாபாரத்தை அந்நியரிடம் கொடுத்துவிட்டு, அரசியலை வெல்வேன், ஆட்சியைப் பிடிப்பேன் என்பதெல்லாம் பூதம் பார்த்தேன், பேய் ஓட்டினேன் என்பது போன்ற கற்பனைக் கதைதான்.
இந்திய தேசியம் என்பது உண்மையில் பனியாக்களின் தேசியம். அது பனியாக்களின் வியாபாரத்திற்காக கட்டமைக்கப்பட்ட தேசியம். திராவிட தேசியம் என்பது உண்மையில் தெலுங்கு தேசியம். அது தெலுங்கர்களின் வியாபாரத்திற்காக கட்டமைக்கப்பட்டது. இந்த உண்மை தமிழர்களுக்கு புரியுமெனில், தமிழர் வணிகமே, தமிழர் தேசியத்தின் பலம் என்பதையும் உணர முடியும்.
சரி.. திடீரென தமிழர் வணிகத்தை எப்படிக் கட்டியெழுப்ப முடியும்? இன்றைய நவீன முதலாளித்துவ உலகில் இது சாத்தியமா? முதலீடு போடுமளவிற்கு தமிழர்கள் என்ன பலம் மிக்கவர்களா? இன்றைய வியாபாரப் போட்டியில் தெலுங்கர்களே மார்வாடிகளிடம் மண்டியிட்டு நிற்கும் போது, தமிழர்களால் இதனை செய்து முடிக்க முடியுமா?
இப்படி நிறைய கேள்விகள் எழக் கூடும்…
பதில் ஒன்றுதான்…
‘முடியும்’
எங்கிருந்தோ வந்த ஊரான் உன் நிலத்தில் வியாபாரம் செய்து பொருளாதாரத்தை மீட்டு, ஆட்சி அதிகாரம் வரை ஊடுருவி நிற்கும் போது, சொந்த நிலத்தைச் சார்ந்தவனால் இது சாத்தியப்படாதா?
தமிழகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருந்தும் ஒட்டுமொத்த ஆங்கிலேய அரசும் ஆடிப்போனது ஒருவனைப் பார்த்து மட்டும்தான்.
‘வ. உ. சிதம்பரம் பிள்ளை’
ஏன்?
அவன் ஆங்கிலேயனின் அடிமடியில் கை வைத்தான்.
ஒட்டுமொத்த இந்தியாவில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருந்த போதும், காந்தியைக் கண்டு ஆங்கிலேயேன் நடுங்கிய காரணம் என்ன?
‘உப்பு சத்தியாகிரகம், கதராடை இயக்கம்’
இரண்டும் ஆங்கிலேயனின் அடிமடியில் கை வைத்தது. அதாவது அவனது வியாபாரத்தில் கை வைத்ததால்தான் அவர்களைக் கண்டு ஆங்கிலேயன் அஞ்சினான்…
தமிழர்களே!
திராவிட-தெலுங்கர்களின் வியாபாரத்தில் கை வையுங்கள்.
மற்றவை தானாக நடக்கும்.
தமிழர் வணிக மீட்பே,
தமிழர் தேசிய அரசியல் மீட்பின் தொடக்கம்.
-பேராசிரியர் ஆ. அருளினியன்