கிரேட் எஸ்கேப்

1996ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம்தேதியை இலங்கைப்படையின் உயர் அலுவலர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள் அது.

அன்று தலைநகர் கொழும்பில் இருந்து விமானப்படையின் பெல் 212 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறு (வெளிஓயா) நோக்கிப் புறப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் இலங்கையைப் பொறுத்தவரை மிக முக்கியமான புள்ளி ராஜாக்கள்.

ஆம். அந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அனுருத்த ரத் வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெய வர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரேமரத்ன சுமதிபால உள்பட 11 பேர் இருந்தனர்.

சனிக்கிழமை காலை எட்டரை மணியளவில் இந்த ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. ஹெலிகாப்டரை சாகர கொட்டேகடேனியா என்பவர் ஓட்டிச் சென்றார். கூட துணை வலவராக பெரேரா என்பவர்.

இதன் பின்னர் சற்றுநேரம் கழித்து கொழும்பில் இருந்து பெல் 412 ஹெலிகாப்டர் ஒன்று மணலாறுக்குப் புறப்பட்டது. அதில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திஸரா, விமானப்படை ஏர்வைஸ் மார்ஷல் ஆன்சலம் பெய்ரிஸ் போன்றவர்கள் இருந்தார்கள்.

இரண்டாவதாகப் புறப்பட்ட பெல் 412, காலை 10 மணியளவில் மணலாறு போய்ச் சேர்ந்தது. ஆனால் முதலில் புறப்பட்ட பெல் 212 அங்கு இன்னும் வந்து சேரவில்லை.

மணி 10.55! அமெரிக்க பெல் 212 ஹெலிகாப்டர்களில் உள்ள எரிபொருள் மூலம் இரண்டரை மணிநேரம் மட்டுமே பறக்க முடியும். பெல் 212 புறப்பட்டுச் சென்று 2 மணி நேரம் ஆகிவிட்டது. இதனால் பதற்றம் உருவாகத் தொடங்கியது.

உடனே அநுராதபுரம், வவுனியா விமானப்படைத் தளங்களுக்குத் தகவல் பறந்தது. வவுனியா விமானதளம், ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் குறைந்த எரிபொருளுடன் பறந்தபடி தங்களுக்குத் தகவல் தெரிவித்ததாகக் கூறியது.

வவுனியா பகுதியில் இருந்து மணலாறு பகுதிக்கு 10 நிமிடத்தில் பறந்து வந்து விடலாம். ஆனால் 212 ஏன் வரவில்லை?

இப்போது பெல் 212ல் என்ன நடந்தது என்று பார்க்கலாம். அதன் விமானியான ஸ்குவாட்ரான் லீடர்(!) சாகர கொட்டேகடேனியா வவுனியாவைக் கடந்ததும் வடகிழக்கு நோக்கி பறப்பதற்குப் பதிலாக வடமேற்கு(!) நோக்கிப் பறந்திருக்கிறார். இதனால் நடு வழியில் பாதை தவறி ஹெலிகாப்டர் தடுமாறத் தொடங்கியது.

180 டிகிரியில் ஹெலிகாப்டரைத் திருப்பி பறக்கவிட்டபோது பூநகரி(!) தென்பட்டது. கூப்பிடு தொலைவில் மன்னார் கடல் வேறு கண்ணில் படத் தொடங்கியது.

இதற்குள் 2 மணி 20 நிமிடம் ஆகிவிட்டது. இன்னும் 10 நிமிடம்தான் ஹெலிகாப்டர் பறக்க முடியும். இல்லாவிட்டால் எரிபொருள் தீர்ந்து விழவேண்டிய நிலை. இதனால் விமானி பதற்றத்துடன் ஹெலிகாப்டரை தமிழர் ஒருவரின் காய்கறி தோட்டம் மீது இறக்கினார். (‘சாகிற நேரத்தில கூட அடுத்தவனுக்குத் தொல்லை குடுக்காம சாக மாட்டானுங்க’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் வசனம் பேசுவாரே, அதைப்போல, ஆபத்து, விபத்து நேரப்போகும் நேரத்தில் கூட, தமிழர்களின் உடைமையை நாசம் செய்ய சிங்களம் தவறாது)

அந்த காய்கறி தோட்டம் அருகே தமிழர்களின் 3 வீடுகள் இருந்தன. அதில் 2 வீடுகள் காலி. ஒரு வீட்டில் கே. திருச்செல்வம் என்பவர் இருந்தார். தமிழ்தெரிந்த ராஜகுரு, திருச்செல்வத்திடம் விசாரித்தபோது, அது வவுனியா-மன்னார் சாலையில் பம்பைமடு பகுதிக்கு வடகிழக்கே உள்ள கிடச்சுரி என்ற பகுதி என்பது தெரிய வந்தது. அங்கிருந்து 6 கி.மீ. கிழக்கே தவசியான்குளம். தாண்டிகுளம் தாண்டி வவுனியா நகரம் 9 மைல் தூரம். தாங்கள் முழுக்க முழுக்க புலிகளின் பகுதிக்குள் இறங்கி வந்து நிற்கிறோம் என்பது ஹெலிகாப்டரில் வந்தவர்களுக்குப் புரிந்து போனது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்துக்கு ஏறத்தாழ 10 கி.மீ. தொலைவில் பம்பைமடு பகுதியில் ராணுவத்தின் முன்னரங்க பாதுகாப்பரண் இருந்தது. திருச்செல்வத்திடம் ஒரு போத்தல் மண்ணெண்ணெய் வாங்கி அதன்மூலம் பெல் 212ஐ கிளப்ப முயற்சி நடைபெற்றது. ஹெலிகாப்டர் சிலஅடி உயரம் மட்டுமே மேலெழும்பியது. அதற்கு மேல் அதனால் பறக்க முடியவில்லை.

இதற்குள் ஹெலிகாப்டர் ஒன்று தங்கள் பகுதியில் தாழ்வாகத் தடுமாறிப் பறந்ததை புலிகள் பார்த்துவிட்டனர். அவர்கள் வாகனங்களில் ஏறி ஹெலிகாப்டர் இருந்த பகுதிக்கு விரைந்து வந்து கொண்டிருந்தனர்.

ஹெலிகாப்டரின் காக்பிட்டில் உள்ள தொலைதொடர்புக்கருவி முற்றிலும் செயலிழந்து போனதால் அதில் இருந்தவர்களால் வவுனியா நகரத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வாக்கி டாக்கிகளும் செயல்படவில்லை.

இதனால், ஹெலிகாப்டரை கைவிட்டுவிட்டுவிட்ட அவர்கள் பம்பைமடு நோக்கி நடந்து செல்ல முடிவு செய்தனர். ஹெலிகாப்டரை இனி யாரும் இயக்க முடியாத வண்ணம் அதன் ஒயர்கள், கேபிள்களை அறுத்துப்போட்டனர். பின்னர் கைக்கடிகாரத் தில் உள்ள திசைகாட்டிக் கருவியைப் பயன்படுத்திக் கொண்டு, திருச்செல்வத்தின் இரு ஆண்குழந்தைகளை பிணைக்கைதிகள் போல தங்களுடன் கூட்டிக் கொண்டு அவர்கள் நடக்க ஆரம்பித்தார்கள்.

ரத்வத்தை சாலைவிபத்து ஒன்றில் அண்மையில் காலில் அடிபட்டிருந்தார். ஆகவே தடி ஒன்றை ஊன்றியபடி அவர் நடந்து வந்தார். வழியில் ஏரி ஒன்றைப் பார்த்த அவர், ‘இதில் கொஞ்சநேரம் நீந்திவிட்டுப் போகலாமா?’ என்று கேட்டிருக்கிறார். (இருட்டு வழியில் பயத்தை மறைத்துக் கொள்ள சிலர் சீழ்க்கை அடிப்பதில்லையா அதைப் போல).

காட்டுக்குள் இந்த கும்பல் ஒருமணிநேரம் நடந்த போது, அவர்களுக்குப் பின்னால் மூன்று முறை அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் கேட்டன. வானத்தில் புகை வளையங் கள் எழுந்தன. புலிகள் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்து அதை வெடிவைத்து தகர்த்து விட்டார்கள் என்பது தெரிந்து விட்டது. இதனால் நடைவேகத்தை அவர்கள் விறுவிறுவென மேலும் கூட்டினார்கள்.

இப்போது ஐ.ஜி. ராஜகுரு வைத்திருந்த சிறிய காவல்துறை ரேடியோ உயிர்ப்பெற்றது. வவுனியா நகரத்தை தொடர்புகொண்ட அவர், தாங்கள் நடுக்காட்டில் வழிதெரியாமல் தவிப்பதாக செய்தி அனுப்பினார். பம்பைமடு முன்னரங்க நிலையில் இருந்து ராணு வத்தினரை உடனே உதவிக்கு அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து காணாமல் போனவர்களை மீட்க விமானப்படை தளபதி ஒலிவர் ரண சிங்கே, ராணுவ மேஜர் ஜெனரல் லால் வீரசூரிய ஆகியோர் உடனடி நடவடிக்கை எடுக்க, காட்டில் சிக்கியவர்களை மீட்க 2 ஹெலிகாப்டர்கள் விரைந்தன.

5 கி.மீ. தொலைவு வரை 2 மணிநேரம் வரை நடந்த அவர்கள், ஒருவழியாக ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஹெலிகாப்டர் ஒன்று அவர்களை வழியில் கண்டு ஏற்றி வவுனியாவுக்குக் கூட்டிச் சென்றது. மாமா அனுருத்த ரத்வத்தை காணாமல் போனதால் பதறிப்போன அதிபர் சந்திரிகா தொலைபேசி மூலம் பேசி, மாமாவின் நலத்தை விசாரித்தார். (என்ன மாமா நல்லா இருக்கீங்களா?)

இதனிடையே இலங்கை ராணுவம் அதன் வழக்கமான சவடாலை விடவில்லை. ‘காட்டுக்குள் கைவிடப்பட்ட பெல் 212 ஹெலிகாப்டரை புலிகள் தகர்க்கவில்லை, புலிகள் கையில் அது சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ராணுவம்தான் தகர்த்தது‘ என்று ராணுவம் அறிவித்தது.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது அந்தப் பகுதியில் புலிகள் யாருமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டரை புலிகள் தகர்த்தால் என்ன? ராணுவம் தகர்த்தால் என்ன? மூன்றாம் ஈழப் போரில் இலங்கை விமானப்படை 8ஆவது வான் ஊர்தியை இழந்தது என்பது மட்டும் உண்மை.

பொதுவாக பெல் 212 ஹெலிகாப்டர்களில் ஜி.பி.எஸ். கருவி இருக்கும். ஆனால், குறிப்பிட்ட அந்த ஹெலிகாப்டரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி என்ன ஆனது என்று தெரியவில்லை. வன்னிப்பகுதியில் வழி தெரியாமல் போயிருந்தால் கூட யானை யிறவு-வவுனியா இடையே ஒடும் ஏ9 நெடுஞ்சாலையைப் பிடித்து தெற்கே பறந்துகூட வவுனியாவுக்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால் ஹெலிகாப்டரின் வலவர் இதை ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை. மொத்தத்தில் மர்மங்கள் நிறைந்த ஒரு திரைக்கதை போல இருந்தது இந்த நிகழ்வு.

அனுருத்த ரத்வத்தை தப்பிப்பிழைத்த பரபரப்பான அந்த ஹெலிகாப்டர் நிகழ்வின் போது புலிகளின் தங்களுக்குள் நடத்திய தொலைத்தொடர்பு உரையாடல் முக்கிய மானது. ‘என்ன ஆயிற்று?’ என்று புலி ஒருவர் கேட்க, மற்றொருவர், ‘கைக்கு எட்டி யது வாய்க்கு எட்டவில்லை’ என்று பதில் அளித்தார்.

உண்மைதான். அனுருத்த ரத்வத்தை, ராணுவத் தளபதி ரோகன் தலுவத்தே, மேஜர் ஜெனரல் அசோகா ஜெயவர்த்தனே, காவல்துறை ஐ.ஜி. டபிள்யூ பி. ராஜகுரு, வன்னி மாவட்ட எம்.பி.யான பிரேமரத்ன சுமதிபால போன்றோர் புலிகளின் கையில் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்தால் 13 ஆண்டு ஈழப்போர் வரலாற்றில் ஒருவேளை முக்கியத் திருப்பம் ஏற்பட்டிருக்கலாம்.

மோகன ரூபன்

1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள்!

1981 மே 31 – யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரின் வன்முறைகள் ஆரம்பமாயின.

1981 ஜூன் 1 – யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள். ஹிட்லர் கூட செய்யாத கொடூர இன அழிப்பின் உச்ச வடிவம் யாழ் நூலக எரிப்பு. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் வராலாற்றை சுவடு இழக்க செய்ய வேண்டும் என்ற சதித் திட்டத்தின் கீழ் 1800 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட ஓலைசுவடிகள், வரலாற்று சான்றுகள் உள்ளிட்ட 97,000 க்கும் மேற்ப்பட்ட விலை மதிக்க முடியாத நூல்களை கொண்ட தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.

இன்றோடு ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நூலகம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 ஜூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.

இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், ஏட்டுச் சுவடிகளும் வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. இந்த நிறுவனத்துக்கான கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது.

நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.

1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணி தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள வன்முறைக் குழுவொன்றால் அரச சிங்கள காவல்துறையினரின் உதவியோடு திட்டமிட்ட சதியாக இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.

நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. தமிழீழ விடுதலை போராட்டம் வீச்சுப் பெற யாழ் நூலக எரிப்பும் ஒரு காரணமாயிற்று. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போன அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள். அந்த நூலக எரியூட்டலினால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார்.

இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

யாழ் நூலக வரலாறு, மற்றும் அதன் எரிப்பு குறித்த “The Jaffna Public Library rises from its ashes” என்ற பெயரில் ஓர் ஆவண நூலை கட்டிடக்கலை நிபுணர் வி. எஸ். துரைராஜா எழுதி வெளியிட்டுள்ளார்.

எரியும் நினைவுகள் என்ற பெயரில் ஓர் ஆவணப் படத்தை ஊடகவியலாளர் சி. சோமிதரன் இயக்கி வெளியிட்டுள்ளார்.

இவை போல் பல ஆவண நூல்கள் யாழ் நூலக எரிப்பு குறித்து உருவாயின.

இந்த கொடும் வலியை உணர்வில் ஏற்றுக் கொள்ளும் தமிழ் மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் ஆவணப்படுத்தல்களையும் நூலகங்களையும் கட்டி எழுப்பி அன்று மூண்ட தீயின் எழுச்சியை உலகெங்கும் விதைக்க வேண்டும்.

சிங்கள பௌத்த வெறி

தமிழீழத்திலுள்ள தமிழர்கள் சைவம், இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதங்களை பின்பற்றுகின்றனர். தற்போது வரை இரண்டு இனப்படுகொலை சமகாலத்தில் நிகழ்த்தியதன் பின் இருக்கும் பௌத்தத்தை, அதன் கொடூரமான முகத்தை தமிழர்களாகிய நாம் அடையாளப்படுத்துவதே இல்லை. ஆரிய இந்துத்துவ வெறிக்கு சற்றும் சளைத்தது அல்ல இந்த சிங்கள இனவாத மற்றும் பௌத்த மதவாத வெறி.

இந்துத்துவா என்றும் தாலிபான் என்றும் சாடுகிறவர்கள் ஏன் மறந்தும் பௌத்தத்தை தொடுவதில்லை? இதன் பின்னணியில் ஆரியமும் திராவிடமும் மறைந்திருப்பதை தமிழர்கள் உணர வேண்டும். பௌத்த பிக்குகளின் கைகளில் வழிந்தோடும் இரத்தம் மட்டும் ஏன் பலர் கண்களுக்கு தெரிவதில்லை?

இதை ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் இருந்து ஈழத்தை ஆதரிப்பவர்களும் பொருட்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்கள் நில அடையாளங்களை, தொன்மங்களை தொலைத்து விட்டு எப்படி விடுதலையை சாத்தியப்படுத்துவார்கள்.

தங்கள் சந்ததிக்கு எதை கொடுப்பார்கள்? நிலம் முழுவதும் சிங்கள பௌத்த அடையாளங்கள் நிறுவப்பட்டால் எப்படி ஈழம் தன்னுடைய தாய்த்தமிழர் நிலத்தை பேண முடியும்?

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்
தொல்பொருள் திணைக்களம் தமிழர்களின் தொன்மைகள் மற்றும் தொன்மைச்சான்றுகளை அழித்து #பௌத்தமயமாக்கலை
செய்து வருகிறது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 246 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். திருகோணமலை மாவட்டத்தில் 74 இடங்களை பௌத்த மதம் சார்ந்த இடங்களாக அடையப்படுத்தி இருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 புத்த விகாரைகள் உட்பட 55 பௌத்த மதத்தோடு தொடர்புடைய இடங்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள்..

ஆக்கிரமிப்புகளில் சில

  1. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தென்னன் மரவடி எனும் பழம்பெரும் தமிழ் கிராமத்தில் பல நெடுங்காலமாக இருந்து வந்த கந்தசாமி மலை முருகன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வழிபட இப்போது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
  2. இலங்கைத்துறை முகத்துவாரம் என்கிற திருகோணமலையின் பூர்விக தமிழ் கிராமம் இப்போது தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு லங்காபட்டன (Lanka Patuna) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டப்பட்டிருக்கின்றது
  3. பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த இந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. அங்கே விநியோகிக்கப்படும் நுழைவுச் சீட்டில் அந்தப் பிரதேசம் ஒரு பெளத்தமதப் பிரதேசம் எனவும் அறியத் தரப்பட்டுள்ளது.கடந்த வரலாற்று காலத்தில் கோயில் கொண்டிருந்த பிள்ளையார் ஆலய கோவிலின் அத்திபாரம் மட்டும்தான் இன்று உள்ளது .
  4. பாடல் பெற்ற சைவ தளமான திருக்கோணேஸ்வரம் கோவில் சூழலில் மேற்கொள்ளப்படும் சகல கட்டுமானங்களையும் தொல்லியல் திணைக்களம் தடை செய்து வருகிறது
  5. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புராண இதிகாசத்துடன் தொடர்புபட்ட குரங்கு மாலைபோட்ட மலை உடைக்கப்பட்டு வீதிப் புனரமைப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை ஆலயத்தை புனரமைக்க புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் சொல்லுகிறது
  1. மட்டக்களப்பு மாவட்டம் பூர்விக தமிழ் பகுதியான வாகனேரியில் பல்வேறுபட்ட பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது
  2. மட்டக்களப்பு மாவட்டம் புளுகுணாவை பகுதியில் பல இடங்களை தொல்லியல் திணைக்களமும் புத்த பிக்குகளும் உரிமை கோரி வருகிறார்கள்
  3. மட்டக்களப்பு கோட்டை (Batticaloa Fort) அமைத்துள்ள இடத்தில றுகுணு அரசுக்கு சொந்தமான பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி இருக்கிறது
  4. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பகுதியில் பௌத்த மதம் சார்ந்த பல சான்றுகள் கிடைத்து இருப்பதாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகிறது
  1. மட்டக்களப்பு மாவட்டத்தின் கச்சக்கொடி பிரதேசத்தில் உள்ள சுவாமிமலை அடிவாரத்தை புத்த பிக்குகள் தொல்லியல் திணைக்களத்தின் உதவியுடன் பௌத்த மதத்திற்கு உரிய இடம் என அடையளப்படுத்தி இருக்கிறார்கள்
  2. மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் தொல்லியல் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களை இலக்கு வைத்து 7 விகாரைகளை அமைத்து இருக்கிறார்கள்
  3. மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள வில்லுதோட்டம் தனியார் காணியில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை என தொல்லியல் திணைக்களம் உரிமை கொண்டாடுகிறது
  4. அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் பூர்விக வாழ்விடங்களில் 86 இடங்கள் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிக்கப்பட்டு அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளும் /விகாரைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன . இதில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும் ஆலையடி பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 இடங்களும் அட்டாளைசேனை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும் கல்முனையில் 2 இடங்களும் அடங்கும்
  5. கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12,000 ஏக்கர் காணிகள் தீகவாவி புனித பூமிக்கு சொந்தமான நிலம் என தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது

வாசு_முருகவேல்

https://bit.ly/3c0ALqm

தமிழருக்கென தமிழீழவைப்பகம் துவங்கப்பட்ட நாள் (23-05-1994)

தமிழருக்கென தற்சார்பை ஊக்குவித்து பொருளாதார மேம்பாட்டை உயர்த்தி வியத்தகு நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி உலக அரங்கில் யூத வங்கி அமைப்புகளை அச்சம் காண வைத்தது தமிழீழ அரசாங்கம்.

முழுவதும் தமிழருக்கென அத்தனையும் தமிழிலே நடத்தப்பட்ட வங்கி ஆனால் இங்கோ வங்கியில் தமிழுமில்லை பணிபுரிபவன் தமிழனும் இல்லை.

#தமிழீழம்வெல்லும்

உலகமே வியந்த தளபதி

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே, “என்னையும் விஞ்சிய போராளி” என வியந்து பாராட்டிய தளபதி ஒருவன் தமிழ் வரலாற்றில் இருந்தான். அவன் யாரெனத் தெரியுமா உங்களுக்கு? காலப் பெருவெள்ளத்தில் கரைந்திடாது மிளிரும் மார்க் அன்டணி, மாக்சிமுஸ், நெல்சன், வென்கியாப் போன்ற போர்ப்படைத் தளபதிகள்போல் சிங்களத் தளபதிகளைக் கூட வியக்க வைத்த போராளி அவன்!”.

உடலில் எத்தனை குண்டுகள், ஷெல் துண்டுகள் துளைத்து உள்ளிருந்தன என்று அவனுக்கே தெரியாது. 1993-ம் ஆண்டு இப்போதைய சிங்கள ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா தலைமையில் “யாழ்தேவி” எனப்பெயரிட்டு பெரும் எடுப்பில் யாழ்குடாவை கைப்பற்ற நகர்ந்த ராணுவத்தை புலோபளை பகுதியில் நேருக்கு நேர் எதிர்கொண்டு டாங்குகளையும், குண்டு துளைக்க முடியா கவச வாகனங்களையும் சிதறடித்து ஆறே நாட்களில் சிங்களப் பெரும்படைகளை வந்த வழிக்கே புறமுதுகிட்டு ஓடச் செய்தவன். அச்சமரில் கிரானேட் குண்டு அவனது ஒரு காலை சிதைத்து முறிக்க, காலை வெட்டி எடுத்தே ஆக வேண்டுமென கள மருத்துவர்கள் அறிவுறுத்த, சிங்களப் படைகளை விரட்டி முடிக்கும் வரை காலுக்குக் கட்டுப் போட்டுக் கொண்டே கட்டளைத் தலைமை தந்தவன்! பலநூறு ராணுவத்தினர் யாழ்தேவி சண்டையில் உயிரிழந்தார்கள், சரத் பொன்சேகாவும் காயமடைந்து தப்பியோடினார்.

எத்தனையோ ராணுவ வரலாறுகளை படித்திருக் கிறேன். எண்ணிலா தளபதியர்களின் போர்க்கள சாகசங் களை உள்வாங்கி வியந்திருக்கிறேன். ஆனால் அனைவரை விடவும் எனது ஆதர்சம் தமிழீழம்-முல்லைத்தீவு மாவட்டத் தின் கொக்குத் தொடுவாய் கிராமம் தந்த இத்தளபதிதான்.

இரவு பகலென களப்பணியில் நின்ற அவனுக்கு இளவயதிலேயே சர்க்கரை நோய், இதயநோய். அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் 2003-ம் ஆண்டு நார்வே நாட்டின் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் வைத்து அவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற தமிழ் மருத்துவர்கள் வந்திருந்து பெருமை யுடன் அவனை சிங்கப்பூரில் பராமரித்தார்கள். சிகிச்சை முடிந்து கொழும்பு விமான நிலையம் வந்திறங்குகிறான் அவன். விமான நிலையத்திற் குள் நுழைந்ததுமே சுமார் 35 இளம் சிங்களத் தளபதியர்கள் முழு ராணுவச் சீருடையில் அவனை சூழ்கிறார்கள். சதி நடந்துவிட்டதோ என ஒரு கணம் அவன் திகைக்கிறான். நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டார்களோ என்ன செய்வது என எண்ணிக் கொண்டிருந்தபோதே தமிழ் தெரிந்த சிங்களத் தளபதி ஒருவர் அங்கு நிலவிய கனத்த அமைதியை தமிழும் ஆங்கிலமும் கலந்து உடைக்கிறார். “பயப்படாதீர்கள் பால்ராஜ்! ‘வதிரையன் பாக்ஸ்’ சண்டை பிடித்த பால்ராஜை வாழ்க்கையில் எப்போதேனும் பார்க்கிற பாக்கியம் கிட்ட வேண்டு மென்று ஆசித்த ராணுவத் தளபதியர்களில் நாங்கள் சிலபேர். எங்கள் ராணுவத்தினருக்கு நீங்கள் ஒரு கனவு நாயகன், தெரியுமா உங்களுக்கு?” என்று அந்த சிங்களத் தளபதி கூற, இறுக்கம் அகன்று ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உண்மையான ராணுவ மரபோடு அவரை வாழ்த்தியிருக்கிறார்கள்.

என்றேனும் ஒருநாள் என்னிடம் அந்த அளவுக்குத் தேவையான பணம் வருமெனில், அல்லது உணர்வாளர்களோ வர்த்தகத் தயாரிப்பாளர்களோ முன்வருவார்களெனில் மாவீரன் பால்ராஜ் நடத்திய “வதிரையன் பாக்ஸ்’ சண்டையை “ஹாலிவுட்’ திரைப்பட தரத்திற்கு தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்க வேண்டுமென்பது என் வாழ்வின் ஆசைகளில் ஒன்று. பால்ராஜ் மட்டும் கேடு கெட்ட இத்தமிழ்ச் சாதியில் பிறக்காமல் அமெரிக்கனாகவோ, பிரித்தானியனாக வோ, யூதனாகவோ பிறந்திருந்தால் இன்று அவன் உலகம் போற்றும் போர்க் கள நாயகனாய் உயரம் பெற்றிருப்பான்.

அதென்ன அந்த வரலாற்றுச் சிறப்புமிகு “வதிரையன் பாக்ஸ்’ சண்டை? சுருக்கமாக முதலில் ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு பின்னர் விரிவாக விளக்குகிறேன்: கடல், சிங்கள கடற்படையின் கட்டுப்பாட்டில், வடக்குப்புறம் பலாலி ராணுவ தளமும் அத்தளத்தையொட்டி யாழ்குடாவில் நிற்கும் 20,000 ராணுவத்தினர், வடமேற் கில் பளை ராணுவ முகாமும் அங்கிருக் கும் சுமார் 7,000 ராணுவத்தினரும், தெற்குப்புறமாய் 14,000 ராணுவத்தின ருடன் அசைக்க முடியா ஆனையிறவு முகாம், இவ்வாறாக கடற்படை, வான் படை, எறிகணைப் படை, பீரங்கிப் படை, தங்குதடையற்ற விநியோகம் இவற்றோடு சுமார் 40,000 ராணுவத் தினர் சூழ்ந்து நின்ற களத்தை வெறும் 1,500 போராளிகளுடன், சிறு ரக ஆயு தங்களோடு, விநியோக வசதியோ மீட்கப்படும் வாய்ப்போ ஏதுமின்றி, கடல்வழி ஊடறுத்து உள் நுழைகிறார் பால்ராஜ்.

வெட்ட வெளி மணற்பரப்பு, மறைந்து நின்று தற்காத்து சண்டையிட மரங்களோ, புதர்களோ, பாறைகளோ, மணல் மேடுகளோ இல்லாத களம். அப்பரப்பில் “ப’, “ட’ வடிவில் எதிரியின் குண்டு மழைக்கு நடுவே பதுங்கு குழிகள் வெட்டி நிலையெடுத்து -இதைத்தான் “”பாக்ஸ் சண்டை” என்கிறார்கள்… அப்படி “ப’ “ட’ வெட்டிக் கொண்டே மெல்ல நகர்ந்து ஆலி9 நெடுஞ்சாலையை புதுக்காடு சந்திப்பில் இடைமறிக்கிறார்கள். எவ்வித பின்புல விநியோக ஆதரவோ, மருத்துவ உதவிகளோ, தப்பிக்கும் வாய்ப்போ இன்றி சிறு ரக ஆயுதங்களுடனும், பிஸ்கட்-ரஸ்க்-ரொட்டி- வறுத்த மாவு- குடிநீர் என குறைந்த உலர் உணவுடனும் வெறும் 1,500 போராளி கள் -நான்கு படை அசுர பலத்தோடு நின்ற 40,000 ராணுவத் தினரை எதிர்கொண்டு அவர்களின் இதயப் பரப்பிலேயே நிலையெடுத்து -ஒன்றிரண்டல்ல 34 நாட்கள் -ஆனையிறவு முகாம் விழுகின்றவரை சண்டையிட்டார்களென்பது உலகின் வீர வரலாறுகள் இதுவரை அறியாத மெய்சிலிர்க்கும் அதிசயம். இது நடந்தது ஓயாத அலைகள் ஒஒஒலின் இறுதிக் கட்டமான 2000-ம் ஆண்டில்.

2002-ல் நான் வன்னி சென்றிருந்தபோது தமிழ்ச்செல்வன் அவர்களிடம் வைத்த முதன்மையான வேண்டுகோள் இதுதான்: “”திரும்பிச் செல்லுமுன் தலைவரையும், தளபதி பால்ராஜையும் நான் பார்க்க வேண்டும், பார்த்தே ஆக வேண்டும், பார்க்காமல் நாடு திரும்பப் போவதில்லை”. பால்ராஜ் அவர்களை நான் சந்தித்தது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில். மருத்துவ ஓய்வில் இருந்தார். எளிய மனிதனாய், லுங்கி கட்டிக் கொண்டு, மரப்பலகையில் போர்வை விரித்து படுத்திருந்தார். “”சிகிச்சையின் போதேனும் மெத்தையில் படுக்கக்கூடாதா, இது சமாதான காலம்தானே…?” என்றேன். சிரித்தார். “”பழகினால் அதையே உடலும் மனசும் தேடும். இப்படியே இருந்துவிட் டால் போர்க்களத்தில் சுகம்” என்றார்.

வேரித்தாஸ் வானொலியில் பல புத்தகங்களிலிருந்து கடன் வாங்கி நான் படைத்த நிகழ்ச்சிகளைக் கேட்டு, இயல்பி லேயே நான் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டுமென கற்பிதம் செய்து கொண்டு, என்னிடம் கேட்டு தெளிவு பெறவென, மாசில்லா மாணவன் போல், 49 கேள்விகளை கசங்கிய தாளில் எழுதிவைத்து, அறிந்து கொள்ளும் தீரா ஆர்வத்துடன் வினவிக் கொண்டிருந்த பால்ராஜை எப்படி நான் மறப்பேன்!

“”இத்தாவில் “வதிரையன் பாக்ஸ்’ சண்டை அனுபவத்தை கேட்டறியத்தான் வந்தேன்” என்றேன். ஊர்த்திருவிழாவில் சலங்கை கட்டி கரகமாடும் நடன மணியைப் போல், உருண்டு புரண்டு ஓடும் அருவியைப் போல் கதை சொல்லத் தொடங்கினார் பால்ராஜ்.

“”மூன்று ஆண்டுகளுக்கு முன்னமே தலைவர் வரச்சொல்லி “பால்ராஜ் இத்தாவில்-தாளையடி- வதிரையன் பக்கமாய் போய் ரெக்கி பார்த்திட்டு வா’ என்றார். (“ரெக்கி’ என்றால் தகவல்கள் சேகரிப்பது, உளவுச் செய்திகள் திரட்டுவது). எனக்கு ஒன்டுமே விளங்கவில்லை. ஏனென்டா தாளையடி, வதிரையன் பகுதிக்கு ராணுவ முக்கியத்துவம், எதுவும் இல்லை. தொடர்ந்தும் தலைவர் சொன்னார். “கவனமா பார்த்து வா பால்ராஜ்… யாழ்ப் பாணத்துக்கான சண்டை அங்கேதான் தொடங்கும்’. அப்போகூட எனக்கு எதுவுமே விளங்கலெ. நானும் போய் ரெக்கி எடுத்தேன். கடல் மணலைத் தவிர வேறொன்டும் அங்கெ இல்லெ. அப்பவும் தலைவர் விபரம் எதுவும் சொல்லெயிலெ”.

மூன்று வருஷத்துக்குப் பிறகு ஓயாத அலைகள் ஒஒஒ நடக்கேக்க தலைவர் வரச் சொன்னார். “”பால்ராஜ், ஆனையிறவுக்கான சண்டையெ நீதான் நடத்தப் போறெ’ என்றார். “”நீ பெரிய வீரன், பால்ராஜ். எத்தனையோ சோத னைகளெ உனக்கு நான் தந்திருக்கேன். எல்லாத்திலெயும் நீ வென்றாய். இது கடைசியா நான் உனக்கு வைக்கிற சோதனை. உன்னையும் 1,500 போராளிகளையும் தாளையடி கடற்பக்கம் சூசை தரையிறக்கி விடுவான் அவ்வளவுதான். சிக்கலென்டா உங்களை காப்பாற்றிக் கொண்டு வரக்கூட எங்களாலெ வர ஏலாது. நீ ஆலி9 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனை யிறவுக்கு வர்ற விநியோகத்தை வெட்டி முறிக்கணும். அதைச் செய்தா ஆனையிறவு தானா விழும். நீ உண்மையான வீர னென்டா ஆனையிறவெ விழ வச்சு நீ அந்தப் பக்கத்திலிருந்து ஆலி9 ரோட்டுலெ ஆனையிறவெ நோக்கி வர, நான் கிளிநொச்சியி லிருந்து இங்காலெ பக்கமா வர ரெண்டுபேரும் ஆனையிறவிலெ கை குலுக்கலாம்” என்றார்.

2000, மார்ச் 18-ந் தேதி சீறிப்பாய்ந்த கடற்புலிகளின் படகுகள் 1500 போராளி களையும் தளபதி பால்ராஜையும் தாளையடி- செம்பியன்பற்று கடற்பரப்பில் தரையிறக்கம் செய்யும்போதே கடும் சண்டை தொடங்கிற்று. விடுதலைப்புலிகள் போன்றதொரு அமைப்பு எதிரிப்படையை எதிர்கொண்டு ஒரே நேரத்தில் இத்தனைபேரை தரையிறக்குவதென்பதே மிகப்பெரிய சாதனை எனப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய பிராந்தியத்தில் நடந்த மிகப்பெரிய கடல்வழித் தரையிறக்கம் இது என ராணுவ ஆய்வாளர்கள் அப்போது வியந்தார்கள்.

பால்ராஜ் தொடர்ந்தார். “”இறங்கேக் கெயே கடும் சண்டை… சக்கை அடி அடிச் சான்… நாங்கள் மெதுவா நகர்ந்து வதிரையைனிலெ பாக்ஸ் வெட்டி நிலையெடுத் தம். சண்டையென்டா இதுதான் சண்டை. குளிக்க ஏலாது, சப்ளை இல்லை… வெட்டி நிற்கும் குழிக்குள்ளெதான் சமையல், சாப்பாடு, தூக்கம் எல்லாம். காயம்பட்ட போராளிகளெ அதே குழிக்குள்ளே பராமரிக்க ணும். வீரமரணம் தழுவிய போராளிகளெ வணக்கத்தோட விதைக்கணும்… விமானத்தாலெ அடிப்பான்… டாங்கு கொண்டு அடிப்பான்… எறிகணை அடிப்பான்…”

“”என்ட ராசா… பழைய தமிழ் இலக்கி யங்கள்லெ படிப்பம்தானே, “இன்டு போய் நாளெ வா’ என்டு… அதுபோலத்தான் வதிரையன் சண்டை யும். இன்டு 400 மீட்டர் அவன் பிடிச்சா, நாளை 600 மீட்டர் நாங்க பிடிப் பம். அவன் 10, 20 டாங்குகளை வேகமா கலச்சுக் கொண்டு எங்களெ குழிக்குள் ளேயே உயிரோட புதைக்கலாமென்டு வருவான்… நாங்க பாய்ஞ்சு அவன் டாங்குகள் மேலெ ஏறி சுட்டுப்போட்டு அதே டாங்கு களெ திருப்பி நாங்க ஓட்டி அவனையே அடிப்பம். ஹாலிவுட் யுத்த படங்கள் பார்த் திருப்பிங்கதானே… அப்பிடித்தான் சண்டை நடந்தது.”

“”ரெண்டுநாள்… எட்டுநாள்… பத்துநாள்… சப்ளை துப்புரவா இல்லாத நிலை… கொண்டு வந்த சாமானெல்லாம் தீருது… சாப்பாடு தட்டுப்பாடு, சிங்கள ஆமிக்காரர்களெ பாய்ஞ்சு பிடிச்சு அவங்கட ஆயுதங்களெ எடுத்து சண்ட பிடிச்சம்… என்ட ராசா… சண்டையென்டா இதுதான் சண்டை…” -அப்படியொரு ரசனையுடன் வதிரை யன் பாக்ஸ் சண்டையை வருணித்தார் பால்ராஜ்.

வதிரையனில் நிலை நின்று வரலாற்றுச் சமராடி, மெல்ல நகர்ந்து புதுக்காடு சந்திப்பு பகுதியில் ஆலி9 நெடுஞ்சாலையை இடைமறித் தார்கள். பல்லாயிரம் ராணுவத்தினரை அணி திரட்டி மீண்டும் மீண்டும் சிங்கள ராணுவம் முயன்ற முன் நகர்வுகளை நினைத்துப் பார்க்க முடியாத இதிகாச வீரம் காட்டி முறியடித்தனர் பால்ராஜின் போராளிகள். ஆலி9 நெடுஞ்சாலை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவு முகாமில் இருந்த 14000 ராணுவத்தினருக்கு உணவு, ஆயுத விநியோகம் தடைபட்டது. இன்னொரு முனையில் ஆனையிறவுக்கு குடிநீர் வழங்கிய பரந்தன் பகுதி யையும் புலிகளின் பிறிதொரு படையணி கைப் பற்ற, பால்ராஜும் 1500 போராளிகளும் தாளையடி யில் தரையிறங்கிய 34-ம் நாள், 2000 ஏப்ரல் 22-ம் நாள் ஆனையிறவு முகாம் விழத்தொடங்கியது. ஏப்ரல் 23-ம் தேதி ஆனையிறவு தமிழீழ ராணுவத்தின் முழுக்கட்டுப் பாட்டில் வந்தது.

பிரபாகரனும் பால்ராஜும் தங்களுக்குள் செய்துகொண்ட வரலாற்றுச் சபதம் நிறை வேறியது. புதுக்காடு சந்திப்பிலிருந்து வந்த பால்ராஜும் கிளிநொச்சியிலிருந்து வந்த பிரபா கரனும் ஆனையிறவில் கை குலுக்கினார்கள். ஆனால் பொதுவாக சிறு வெற்றிகளுக்கே தாராளமாய் பாராட்டி மகிழும் பிரபாகரன் ஒரு வார்த்தைகூட பால்ராஜிடம் சொல்லவில்லை. அமைதியாக ஒரு நிமிடம் பால் ராஜையே பார்த்தவர்… “”என்ன பால்ராஜ், நான் ஒண்டும் பாராட்டிச் சொல்லெலியே என்டு யோசிக் கிறியா. இந்தா கேள் உன்ட எதிரி உன்னைப் பற்றி என்ன சொல்றா னெண்டு? எனக் கூறிக்கொண்டே ஒரு “வாக்மேன்’ பிளேயரையும் குறுந்தகடையும் கொடுத்திருக்கிறார். யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி ஹெட்டியாராட்சிக்கும் அப்போ தைய ராணுவ மந்திரி அனுருத்த ரத்வத்தேக்கும் வதிரையன் பாக்ஸ் சண்டையின் இறுதிக் கட்டத்தில் நடந்த காரசாரமான உரையாடலை தனது கட்டளை மையத்தில் இருந்துகொண்டு பதிவு செய்திருக் கிறார் பிரபாகரன்.

ஆனையிறவு விழக்கூடும் என்ற நிலையில், அது தென் னிலங்கையில் பெரும் அரசியல் கொந்தளிப்பை உருவாக்கு மென்ற அச்சத்தில் பலாலி ராணுவத் தளத்திற்கு பறந்து வருகிறார் ராணுவ மந்திரி ரத்வத்தே. அங்கிருந்து தளபதி ஹெட்டியாராட்சியை காய்ச்சி எடுக்கிறார். “”## மகன்களே… 40,000 பேர் படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டை யிடும் 1500 பேரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு ராணுவமா? த்தூ…” இப்படிச் சொல்ல முடியாத அசிங்க வார்த்தைகளால் அர்ச்சிக்கிறார். எல்லாம் கேட்டுவிட்டு ஹெட்டியாராட்சி பொறுமையாகச் சொன்ன பதில் : “”ஐயா பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாகூட சமாளிச் சிடுவேன். வந்திருப்பது பால்ராஜ். அவன் வந்து உட்கார்ந்தானென்றால் கிளப்ப முடியாது” -இந்த உரையாடலைத்தான் பதிவு செய்து பால்ராஜுக்கு கொடுத்தார் பிரபாகரன். “”உன்ட எதிரியே உன்னெ இப்படி பாராட்டியிட்டான். இதுக்கு மேலெ நான் என்ன சொல்றதாம்? வென்டுட்டெ பால்ராஜ்” என்று சொல்லிக்கொண்டே பாசமுடன் கட்டித் தழுவிப் பாராட்டினாராம் பிரபாகரன்.

1996 ஓயாத அலைகள் ஒ-ன் போது இதே முல்லைத்தீவில் சிங்களப் படைகளை துவம்சம் செய்து துரத்தியடித்த பால்ராஜ், 1998 ஓயாத அலைகள் ஒஒ-ல் மின்னல் வேகத் தாக்குதலில் கிளிநொச்சி ராணுவ முகாமை துடைத்தெறிந்து புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பால்ராஜ், 2000-ல் ஆனையிறவை வீழ்த்திய பால்ராஜ், அதன் பின்னர் இறுதியாக ஆனை யிறவை மீளக் கைப்பற்ற சந்திரிகா அரசு 2001-ல் மேற்கொண்ட “அக்னிஹேலா’ பெரும் எடுப்பை எதிர் கொண்டு தகர்த்தெறிந்த பால்ராஜ் 43-ம் வயதில் 2008 -கடந்த ஆண்டு மே 23-ம் நாள் மாரடைப்பால் மரண மடைந்தார். பணமும் மனமுடைய தமிழர் எவரேனும் இம்மாவீரனை திரையில் பதிவு செய்வீர்களா?

Austin Jus

பச்சிளங் குழந்தையை கொன்ற காட்டுமிராண்டிகள்

காட்டுமிராண்டித்தனமாக என் வீட்டின் உள்ளே நுழைந்த இராசீவ் காந்தியின் இந்திய இராணுவ வீர‌ர்களின் கர‌ங்களில் பிறந்து பதின்மூன்றே நாட்களான எனது மகன் சிக்கிக் கொண்டான். அன்று மலர்ந்த இளம் ரோஜா ஒன்று, மதம் பிடித்த யானையின் காலடியில் சிக்கிக் கொண்டதைப் போல பந்தாடப்பட்ட எனது பாலகனை இந்திய இராணுவ வீர‌ன் ஒருவன் தூக்கி எறிந்தான். அழுது வீறிட்டபடியே விழுந்த எனது பச்சிளம் பாலகனுக்கு தலையில் பலத்த காயம். தடுக்கப் பாய்ந்த எனது மனைவியையும் எட்டி உதைவிட்டு கீழே தள்ளியது இந்திய இராணுவம்.

காயம்பட்ட என் பச்சிளம் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவமனை நோக்கி ஓடினோம். ஆனால் சின்னஞ்சிறு மலர‌ல்லவா, சீக்கிர‌மே உயிரை‌ விட்டுவிட்டது. கொடிய மிருகங்கள் உலவும் காட்டில் எளிய உயிர்களுக்கு இடமில்லை. குண்டு மழை பொழியும் நிலத்தில் சின்னஞ்சிறு அபலை உயிர்களுக்கு மதிப்பில்லை.

  • இராபர்ட் பயஸ் அண்ணன்.

விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கான போரியல் காரணம்

லங்கையில் விடுதலை புலிகளின் ஆயுதபோராட்டம் மௌனிக்கப்பட்டு 11 வருடங்கள் முடிவடைந்துவிட்டன. ஆனால் இன்றுவரை புலிகளின் ஆயுதப்போராட்டம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்ற போரியல்ரீதியான ஆய்வுகள் தமிழ் சமூகத்திடம் முறையாக போய் சேரவில்லை அல்லது தமிழ் சமூகமும் போரியல்ரீதியான அறிவில் இன்னும் கூமுட்டையாக இருப்பதால் அறிந்து கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்றுதான் கருதவேண்டியுள்ளது.

எனது பல பதிவுகளில் விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்ததற்கான மூல காரணியாக உலக ஒழுங்கையே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். இன்று இலங்கை இராணுவத்தின் வெற்றிக்கு பல ஆய்வாளர்கள் பல காரணிளை முன்வைக்கும் போதிலும், அவையெல்லாம் இந்த மூல காரணத்தில் இருந்து பிறந்த காரணிகளே.

போரியல்ரீதியாக புலிகளின் ஆயுத மௌனிப்பை ஆய்வு செய்யும்போது , வெறும் மொட்டையாக இதுதான் காரணம் என்று மனதிற்குள் தோன்றியதை சொல்லிவிட்டு கடந்து போகமுடியாது. அதை நிறுவவேண்டும். எப்படி உலக ஒழுங்கின் அணுகுமுறை போர்களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது, அது எப்படி புலிகளுக்கு பாதகமாக அமைந்தது என்பதை நிறுவவேண்டும். எதையும் விஞ்ஞானரீதியாக, அறிவுபூர்வமாக நிறுவப்பட முடியாதாயின், அதை ஆய்வாக கருத முடியாது.

என்னுடைய பதிவையே எடுத்துகொண்டால் நான் பல பதிவுகளில் மூலகாரணியாக உலக ஒழுங்கையே குறிப்பிட்டிருக்கிறேன். அதிலிருந்து பிறந்த காரணிகளில் , போர்களத்தில் பெரும் பாதகத்தை புலிகளுக்கு ஏற்படுத்திய மிக முக்கிய காரணியாக நான் எப்போதும் குறிப்பிடுவது
‘ புலிகளுக்கான கடல்வழி ஆயுத விநியோகம் துண்டிக்கப்பட்டதையே’.

இதை முறையாக நிறுவ போனால் நீண்ட பதிவாக எழுதவேண்டிவரும். அதனால் உங்களுக்கு புரிதலை ஏற்படுத்துவதற்காக, மிக சுருக்கமாக இதை எப்படி இலங்கை உலக ஒழுங்கின் ( குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவின்) உதவியுடன் செய்து முடித்தது, இது போர்களத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை விளக்கியிருக்கிறேன்.

  1. உலக ஒழுங்கின் உதவியுடன் இலங்கை கடற்படை புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகத்தை துண்டித்தல்.

இந்த முதல் பகுதியை விளக்க Sri Lankan navy chief Adm.Jayanath Colombage எழுதிய Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற புத்தகத்தில் உள்ள அடிப்படை தகவல்களையும், Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers என்னும் ஆய்வுகட்டுரையையும் எடுத்துகொண்டுள்ளேன்.

இவை இரண்டும் இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்காவும், இந்தியாவும் எப்படி புலிகளின் floating warehouses தாக்கியழிக்க உதவின என்பதை விவரிக்கின்றன.

it became very important for the Sri Lankan navy to cut off the LTTE’s ammo and weapons supply. And when it was discovered that the LTTE was storing its munitions in floating warehouses in international waters away from the main shipping lines, the help of the US Ambassador and the US Defense Attache was sought making use of the US Global War on Terror.

“They (the US embassy officials) agreed to provide necessary target information after verifying the tactics and methods used by the SLN (Sri Lankan navy) to attack these floating warehouses,” Adm.Colombage writes.

“The US side wanted assurance that we will not attack any innocent ship or civilians unless they are 100 % LTTE combatants. Once the procedure was explained, they were satisfied and positioned a satellite onto the probably area that we gave them.”

“Then one day, in September 2007, we got an intelligence report saying that they (the Americans) had detected some suspicious vessel in the area,” Adm.Colombage says.
But this posed a major challenge to the SLN. The question was how to reach that distant place, stay there for a while, and sail back to base.

According to a former Director of Naval Intelligence, the destruction of the floating armories deprived the LTTE of a large quantity of 152 mm, 130 mm and 122 mm artillery shells and 122 mm mortar rounds among other ammo. MV Koshia, destroyed in September 2007, had 29,000 artillery shells. The LTTE also lost electronic warfare and communication equipment; high powered outboard motors; water scooters; jet skies; swimmer delivery vehicles; radars; GPSs and other war-like material. MV Matsushima had torpedoes, bullet proof vehicles, light aircraft and tons of explosives besides artillery shells.

அடுத்தது Maritime interdiction in counterinsurgency : the role of the Sri Lankan Navy in the defeat of the Tamil Tigers ஆய்வுகட்டுரையிலிருந்து சில பகுதிகள். ( இந்த தகவல் உள்ளடங்கிய பக்கம் படமாக இணைக்கப்பட்டுள்ளது)

The process of locating and destroying the LTTE cargo vessels required a coordinated and sustained effort. Sri Lanka successfully located the floating arms warehouses through both domestic and international intelligence gathering. A Sri Lankan Navy officer described his experience with the first attempts to track down the LTTE vessels:

“It all began in 2006 when we started to conduct aerial reconnaissance. The Indian Navy sent a Dornier aircraft to Colombo. I was the first one to go onboard. We went to the equator on an aerial patrol. We spotted one ship without [hull identification] and we came back and reported it. We sent our ships to go after the vessel but by the time they arrived, the ship had gone… Sri Lanka began its own reconnaissance effort with navy aircraft and India continued to conduct aerial missions to locate the LTTE ships.”

In addition to cooperation with India, the United States also provided intelligence to the SLN on the location of the LTTE arms warehouses. Through the collection of Signals Intelligence (SIGINT) and Imagery Intelligence (IMINT), U.S. Pacific Command passed the location of the LTTE cargo vessels to Sri Lankan Naval commanders.The intelligence proved critical in locating the more remote LTTE vessels that were loitering more than a thousand nautical miles from Sri Lankan waters.

  1. கடல்வழி ஆயுத விநியோகம் முற்றாக துண்டிக்கப்பட்டதால் புலிகளுக்கு களத்தில் போரியல்ரீதியான பின்னடைவு

இதை விளக்குவதற்கு முன்பு போர்களத்தின் அடிப்படை பண்புகள் உங்களுக்கு தெரியவேண்டும். இதை பலமுறை முன்பு விளக்கியிருக்கிறேன்.

போரின் வெற்றியை தீர்மானிக்கும் மிக அடிப்படையான காரணிகள் இரண்டுதான்.

  • படைகளின் எண்ணிக்கை ( number of troops)
  • ஆயுதங்களின் நவீனதன்மை அதன் எண்ணிக்கை , அதன் சூட்டுவலு( weapons technology ,quantities and fire power)

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்களவர்களின் சதவீதம் 72%. இலங்கை தமிழர்கள் 12%. மக்கள் சனத்தொகைக்கு ஏற்பவே MILITARY PARTICIPATION RATIO ( MPR) இருக்கும். ஆக எந்தவொரு கட்டத்திலும் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை புலிகளை விட பல மடங்கு அதிகமானதாகவே இருக்கும்.

இலங்கை அரசு உலக ஒழுங்கால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு state power. விடுதலை புலிகள் non state military force.
ஒரு State power இனால் கொள்வனவு செய்யக்கூடிய கனரக ஆயுதங்களை (tanks, artillery , helicopters, fighter planes) ஒரு non state actor இனால் பெற்றுகொள்ள முடியாது.

ஆனால் புலிகள் இந்த இரண்டு போரியல் காரணிகளும் தமக்கு பாதகமாக இருந்தாலும் , தலைவர் பிரபாகரனது பிரமிக்க வைக்கும் போரியல் உத்திகளை கொண்டு போரியல் விதிகளையே தலைகீழாக்கியிருந்தார்கள்.

தங்களது ஆளணி பற்றாக்குறை, கனரக ஆயுதங்கள் இல்லாமைக்கு மாற்று வழியாக தங்களது பீரங்கி, மோட்டார் தாக்குதல்களை புதுமையான போரியல்உத்திகளோடு பயன்படுத்தினார்கள்.

அதில் ஒன்றுதான் அழித்தொழிப்பு சமர்களில் அமெரிக்க பாணியிலான shock and awe வகையிலான தாக்குதல்கள் நடத்துவது. இலங்கை அதிக எண்ணிக்கையிலான கனரக ஆயுதங்களை வைத்திருந்த போதும் புலிகள் தங்களது அழித்தொழிப்பு , முறியடிப்பு சமர்களில் பயன்படுத்திய சூட்டுவலு செறிவாக இருந்தது. இது இலங்கை இராணுவத்திற்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், அவர்களது உளவியலை பெருமளவு பாதித்தது.

In the asymmetrical land war that was going on in Sri Lanka, with the LTTE out-manned and out-gunned, the LTTE was using ammunition and area weapons like artillery and mortars liberally to strike terror in the heart of the enemy.

It did not show the restraint and conservatism conventional armies generally show in using their ammo. For the LTTE, firing had to be well-targeted and also exceptionally heavy, to make up for the shortage of men and artillery pieces.

As Seelan, a former “Sea Tiger” said: “When army fired a shell, we fired about 20 shells. We fired a lot of shells like mortars and artillery.”

The heavy shelling from the LTTE did have a devastating effecting on the Sri Lankan army. A former Army Commander said: “Casualties due to artillery and mortars were the heaviest on our side. I think it was more than 50 percent”.

இலங்கை இராணுவம் பெரியளவிலான இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும்போது ஒரே சமயத்தில் பல முனைகளை திறக்கும். அதன்மூலம் புலிகள் தங்களது ஆளணியை பலமுனைக்கும் அனுப்பும்போது அவர்களது எதிர்ப்பு பலவீனமாகும் என்ற அடிப்படையில். ஆனால் புலிகள் இந்த ஆளணி பற்றாக்குறைக்கு மாற்றுவழி கண்டுபிடித்தார்கள். குறைவான ஆளணியுடன் , துல்லியமான உளவுதகவல்களை கொண்டு( HUMINT) , இலக்குகள் மீது துல்லியமான , செறிவான சூட்டு தாக்குதல்களை நடத்தி பெரும் இராணுவ நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சரியான நேரத்தில், சரியான இலக்கின் மீது அழித்தொழிப்பு சமரை நடத்துவார்கள்.

இந்த போரியல் உத்தியை ஈழப்போர் 3 நெடுக பயன்படுத்தினார்கள்.

ஆனால் ஈழப்போர் 4 ஆரம்பித்தபோது அமெரிக்கா, இந்தியாவின் உதவியுடன் இலங்கை கடற்படை புலிகளின் கடல்வழி ஆயுத விநியோகத்தை துண்டித்துவிட்டதால் , இம்முறை புலிகளுக்கு பெருமளவிலான ஆயுதப்பற்றாக்குறை ஏற்பட்டது. கடைசிவரையில் அழித்தொழிப்பு சமரையே நடத்தமுடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முனைகளில் நகர்ந்த இலங்கை இராணுவத்தின் முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்த கூடிய செறிவான, சூட்டுவலு கூடிய தாக்குதல்களை நடத்த ஆயுதங்கள் இல்லாமல் போனது.

நான் குறிப்பிட்ட போரின் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான ஆயுதங்கள் புலிகளுக்கு வருவது முற்றாக தடைபட்டு போனது.

இதை இலங்கையின் கடற்படை தளபதியின் வார்த்தைகளிலேயே சொன்னால் , பின்வருமாறு வரும்.

Between September 2006 and October 2007, the SLN succeeded in destroying eight large LTTE warehouse ships containing over 10,000 tons of war-related material.” Vice Admiral Karannagoda later described the contents of the ships:

“These vessels were carrying over 80,000 artillery rounds, over 100,000 mortar rounds, a bullet-proof jeep, three aircraft in dismantled form, torpedoes and surface-to-air missiles. There were a large number of underwater swimmer delivery vehicles and a large quantity of diving equipment. There was radar equipment as well as outboard motors with high horsepower.”

இதை இலங்கை கடற்படை உலக ஒழுங்கின் உதவி இல்லாமல் செய்திருக்கவே முடியாது. காரணம் பிரமாண்டமான சர்வதேச கடற்பரப்பில் திரியும் ஆயிரக்கணக்கான சரக்கு கப்பல்களில் புலிகளின் சரக்கு கப்பலை track செய்வதென்பது அமெரிக்காவின் செய்மதி உளவுதகவல் இன்றி இலங்கையால் கண்டுபிடித்திருக்கமுடியாது.

அத்துடன் சர்வதேச கடற்பரப்பில் தொலை தூரத்திற்கு செல்லக்கூடிய நீண்ட தூர கடற்படை கப்பல்களை உதவியாக இலங்கை கடற்படைக்கு கொடுத்தது இந்தியாவே. ( சர்வதேச கடற்பரப்பில் எவ்வளவு தொலை தூரத்தில் புலிகளது ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டன போன்ற தகவல்களை உள்ளடக்கிய படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது)

முன்பு சொன்னது போல விடுதலை புலிகளின் ஆயதப்போராட்டத்தின் மௌனிப்புக்கு போரியல்ரீதியாக மூல காரணியிற்கு பிறந்த பல காரணிகள் உண்டு. அதில் மிக முக்கியமான , போரின் போக்கையே மாற்றியமைத்த காரணிதான் ‘ புலிகளின் கடல்வழி விநியாக துண்டிப்பு’

க. ஜெயகாந்த்

https://bit.ly/2TH1iTt

வாஜ்பாய் அரசு ஈழ ஆதரவு அரசா?

வைகோ பொய்யும் நடந்தவையும்

உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை நலம் விசாரித்துவிட்டு வந்ததை பற்றி வைகோ அவர்கள் கொடுத்துள்ள அறிக்கையில் வாஜ்பாயி அரசாங்கம் ஈழப்போராட்டத்திற்கு உதவியதாக மீண்டும் கூறியிருக்கிறார். வைகோ கூறுவது போல் “முந்தைய பாஜக அரசு உண்மையில் ஈழப்போராட்டத்திற்கு துணை நின்றதா?” என்ற அறிய நான் முன்னர் எழுதிய கட்டுரையை மீள் பதிவு செய்கிறேன். (இக்கட்டுரை வைகோ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி வைத்து பிறகு வெளியே வந்து வாஜ்பாயி அரசாங்கம் போல் மோடி அரசாங்கம் இல்லை என்று பேட்டிகள் கொடுத்த பொழுது எழுதியது). ஆதாரத்துடன் கடந்த கால நிகழ்வுகளைத் தொகுத்திருக்கிறேன், வைகோ ஏன் அந்தப் பொய்யை திரும்ப திரும்பக் கூறுகிறார் என்று முழுவதையும் படித்தால் அறிந்துகொள்வீர்கள். ஈழப் போராட்டத்தில் வைகோ அவர்களின் திருகு வேலையில் ஒரு சதவீதம் தான் இது.

முந்தைய பாஜக அரசு உண்மையில் ஈழப்போராட்டத்திற்கு துணை நின்றதா?”

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி என்ற சந்தர்ப்பவாத இழிமுடிவிற்கு சப்பைக்கட்ட, பாஜகவிற்கு ஈழ ஆதரவு வேடமிட்டு பவனி வந்த அய்யா வைகோ முதல் ஆளாக சென்று கூட்டணியும் வைத்துவிட்டு அந்த வேடம் கலைந்ததும் தேர்தலில் வெற்றிகிட்டாத, பாஜக அரசில் எந்த பதவியும் கிட்டாத நிலையில், இருக்கிற அரசியலில் “தலை தப்பவேண்டுமே” என்று பதறி முதல் ஆளாக அக்கூட்டணியை விட்டு வெளியேறியும் வந்துவிட்டார். “1996- 2004 வரை நடந்த வாஜ்பாய் அரசாங்கம் கடைபிடித்த வெளியுறவு கொள்கைகளை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து கடைபிடிக்கும் என்று நம்பினேன் அனால் தற்போதைய மோடி அரசு அதை பின்பற்றாததால் தான் வெளியேற நேரிட்டது” என்கிறார். கடந்த கால இந்திய அரசியல் சூழல்களில், அய்யா வைகோவின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை சந்தேகித்ததில்லை.

அவர் தொடர்ச்சியாக ஈழ தமிழர் நலன் சார்த்த நிலைபாட்டில் இருந்திருக்கிறார் என்று தான் எண்ணியிருந்தோம், ஆனால் தன் தேர்தல் கூட்டணி பாதுகாப்பிற்காகவும், பாராளுமன்ற பதவி இருத்தலுக்காகவும் அவர் எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது நாம் பின்னோக்கி பார்ப்பது அவசியமாகிறது.

தேர்தலுக்கு முன் பாஜகவிற்கு ஈழ ஆதரவு வேடமிட்டது மட்டுமல்லாமல் இன்றைக்கு வரை முந்தைய வாஜ்பாய் அரசு ஈழ ஆதரவு அரசாக செயல்பட்டதை போல் பிம்பம் கட்டி பேசிவருவது அபத்தத்தின் உச்சம்.
இந்த நூற்றாண்டின் பேரவலமான தமிழீழ இனப்படுகொலையின் கூட்டு பங்காளர்களான பாஜகவின் முந்தைய நடவடிக்கையை மறைக்க நினைக்கும் அய்யா வைகோவின் சந்தர்ப்பவாதத்தை எதிர்க்கவேண்டியது நம் அனைவரது கடமை என்ற அடிப்படையில் “காங்கிரஸ் அரசிற்கும் முந்தைய பாஜக அரசிற்கும் ஈழம் சார்ந்த கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை” என்பதை நிரூபிக்கவே இந்த கட்டுரை. தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்பின் அடிப்படையில், எந்த கற்பனை கட்டு கதைகளையும் கலக்காமல் உண்மை செய்தியின் அடிப்படையில் ஆராயவேண்டும் என்பதை உணர்ந்தே எழுதப்பட்டது.

2008யில் நான்காம் கட்ட ஈழப்போர் உக்கிரமாக தொடங்கிய பிறகு இலங்கை – இந்திய அரசு கூட்டு சதி செய்து தமிழர் உரிமை போராட்டத்திற்கு எதிராக எவைகளை எல்லாம் நிகழ்த்தியது என்பதை யாம் அறிவோம், அதிலும் காங்கிரஸ் – திமுக கூட்டணி செய்த துரோகங்களை யாம் மறக்கயியலாது. தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் பலர் அதை பேசி, எழுதி அறிந்து கொள்ள செய்தார்கள். இணைய உபயோகத்தின் வீச்சும் அதற்கு உதவியது. ஆனால் அதற்கு (2008) முன்னர் நடந்த இந்திய இலங்கை உடன்படிக்கைகள், இந்திய இலங்கை அரசுகள் தமிழர்களுக்கு நிகழ்ந்த துரோகங்கள் பற்றி தேடி படித்து தெரிந்துகொள்ள வேண்டியிருப்பதால் அதை சாதகமாக்கி வைகோ போன்றவர்கள் மேடையில் பொய்யை மீண்டும் மீண்டும் பேசி உண்மையாக்க பார்க்கிறார்கள். தங்கள் அரசியல் லாபத்திற்காக கற்பனை செய்திகளை கட்டமைத்து தொடர்ந்து பரப்புவதனால் அவை சில காலத்திற்கு பின் உண்மையாகி பலன் அளிக்கும் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் மேடையில் முழங்குபவர்களுக்காகவே சில வரலாற்று நிகழ்வுகளை பின்னோக்கி பார்த்து ஆராய வேண்டிய தேவையும் உருவானது.

2௦௦௦ ஆண்டு ஆரம்பவாக்கில், விடுதலை புலிகள் இயக்கம் ஆனையிறவு போருக்கான வியூகம் வகுத்த கால கட்டத்தில், அவர்களுக்காக ஆயுதங்கள் ஏற்றிவந்த கப்பலை இந்திய உளவு நிறுவனமும், கடற்படையும் மடக்கி தடுத்ததாகவும், அந்த தகவலை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் இரவோடு இரவாக அய்யா வைகோவிடம் தெரிவித்தாகவும், அதனடிப்படையில் அன்றைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டாஸிடமும், அன்றைய பிரதம அமைச்சர் வாஜ்பாயிடமும் முறையிட்டதாகவும், அந்த கோரிக்கையின் அடிப்படையில் அதன்பிறகு அனைத்து ஆயுதக்கப்பல்களும் தடுக்கபாடாமல் கடற்கரை ரோந்து படைகள் பின்வாங்கபட்டு இந்துமா சமுத்திரம் திறந்து விடப்பட்டதாக அய்யா வைகோ தொடர்ந்து உரைத்து வருகிறார்

காணொளி

அப்படி ஒரு சந்திப்பு நடந்ததா என்ற கேள்விக்குள் போகவேண்டாம் அப்படியே நடந்திருந்தாலும், அதன் பிறகு அன்றைய அதன் பிறகு அன்றைய இந்திய பாஜக அரசு ‘விடுதலை புலிகளின் கப்பலை தடுக்கவில்லை, பாஜக ஆட்சி தமிழீழத்திற்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தந்தது’ என்ற சொற்பதத்தின் உண்மை அறியவே விரும்பிகிறோம். இது எவ்வகையில் நியாயத்தன்மை உடையது என்பதை உறுதி செய்ய சில செய்திகளை பின்னோக்கி தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆனையிறவு போரில் விடுதலைப் புலிகளின் பாரிய வெற்றி, அன்றைய ‘பாஜக அரசாங்கத்தின் ஈழ ஆதரவு நிலைப்பாட்டால் சாத்தியமானது’ என்பது போன்ற பரப்புரையின் உண்மை தன்மை அறிய, அன்றைய காலகட்டத்தின் சில நிகழ்வுகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஒரு வீரம் செறிந்த விடுதலைப் இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவு படை நடவடிக்கையில் உயிர் துறந்த போராளி செல்வங்களின் நெஞ்சுரத்தை, எவரும் தம் கூட்டணி நலனுக்காக திரித்துவிட கூடாது என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.
1999ஆம் இறுதியில் 2௦௦௦ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய இலங்கை அரசுகளுக்குடனான ‘கட்டற்ற வணிக ஒப்பந்தம்’ (Free Trade Agreement) கையெழுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முதன் முதலாக வாஜ்பாய் அரசாங்கம் தான் இலங்கையோடு ‘கட்டற்ற வணிக ஒப்பந்தம்’ செய்த இந்திய அரசாங்கம்(http://www.hcicolombo.org/uploads/page_files/hb-india-sl.pdf).

அதற்கான வரைவு தயாரான நிலையில் இந்திய சந்தைக்கான பொருளீட்டி பகடைக்காயாக இலங்கை மாற்றப்பட வேண்டும் என்ற முதலாளிகளின் எண்ணத்தை நிறைவேற்றும் அவசரகதியில் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி இரு நாடுகளுக்குடனான வணிக பரிவர்த்தனை ஒப்பந்தங்கள் கைமாற்றிக்கொள்ளபட்டன (http://commerce.nic.in/trade/international_ta_indsl_1.asp).

இந்த ஒப்பந்த உடன்படிக்கையின் விளைவாக இலங்கை ஏற்றுமதி விகிதாசாரம் அவ்வாண்டுமட்டும் 342% சதம் உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாய் அனைத்து உள் மற்றும் வெளிவிகார நடவடிக்கைகளிலும் அன்றைய இந்திய பாஜகவின் துணையோடு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் இரு இலங்கை அரசு உறுதியேற்க்கிறது. அதை நல்லெண்ண அடிப்படையில் ஏற்றுக்கொண்டு அனைத்தையும் கையாள்வோம் என்று வாஜ்பாயின் தலைமையிலான இந்திய பாஜக அரசு இன்முகதுடன் ஏற்றுக்கொள்கிறது.
அந்த நிலையில் ஓயாத அலைகள் என்ற பெயரில் நவம்பர் 1999யில் அரசப்படைகள் கைப்பற்றியிருக்கும் இடங்களை மீட்க சமர் நடவடிக்கையை தொடங்குகிறார்கள் புலிகள். ஓயாத அலைகள் நடவடிக்கை வன்னிப் பெருநிலப்பரப்பில் பெரும் இராணுவ வெற்றிகளை ஈட்டியவேளை புலிகளின் அடுத்த இலக்கு ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தின் மீதான தாக்குதல்கள்தான் என்பது உணரப்பட்டதாகவே இருந்தது. ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் விடுதலை புலிகளின் பாரிய ஆனையிறவுப் படைத்தள தாக்குதல் நடகிறது, அதில் புலிகள் பெரு வெற்றி பெறுகிறார்கள். ராணுவ ரீதியாக மிக பலமான அமைப்பாக விடுதலை புலிகள் உருப்பெறுகிறார்கள். ஆனையிறவை மீட்ட யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்ந்தனர் புலிகள். ஆனையிறவின் தோல்வியும், உளவியல் ரீதியான பெரும் அடியிலும் இருந்த இலங்கை செய்வதறியாது திகைத்து நின்றது. 40000 மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் புலிகளால் சுற்றி வைக்கப்பட்டனர். எந்த நிமிடமும் யாழ்ப்பாணம் புலிகள் வசம் வரலாம் என்ற நிலை இருந்தது. வட இந்திய ஊடகங்கள் பெருங்குரலெடுத்து அழ தொடங்கின. புலிகளை இதற்கு மேல் ஒரு அங்குலம் வர விட்டாலும் இந்தியாவிற்கு ஆபத்து என்று வெளிப்படையாக எழுத தொடங்கின.(http://indiatoday.intoday.in/story/elephant-pass-capture-by-ltte-a-major-reverse-for-sri-lanka-could-signal-jaffnas-fall/1/244067.html).

இலங்கை இந்தியாவிடம் ராணுவ உதவியை எதிர்ப்பார்ப்பதாகவும், இந்தியா ராணுவரீதியாக உதவி செய்யவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் குரலாக கெஞ்சின.
இந்நிலையில் மே 3 ஆம் தேதி இலங்கை வெளியிறவு துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் டெல்லி வந்து வாஜ்பாயியையும் ஜஸ்வந்த் சிங்கையும் சந்திக்கிறார்(http://www.rediff.com/news/2000/may/03akd1.htm).

அன்றே கூட்டணியில் இருக்கும் தமிழக கட்சிகள் எதையும் அழைக்காமல் பாஜக அரசு வாஜ்பாய் தலைமையில் கேபினட் கூட்டத்தை கூட்டி இலங்கை விரும்பினால் மனிதநேயத்தின் அடிப்படையில் உதவிகள் செய்வோம் என்று அறிவிக்கிறது மத்திய அரசு. பிறகு தான் இலங்கை நிலவரம் தமிழக நிலவரம் பற்றி ஆலோசிக்க தமிழக முதல்வர் கருணாநிதியை வாஜ்பாயி அழைக்கிறார். மே 5 ஆம் தேதி டெல்லி விரைந்த கருணாநிதி வாஜ்பாயியை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிவிட்டு வெளியில் வந்து இந்திய அரசின் கைகளை நாங்கள் கட்டவில்லை அதே நேரம் பழைய சம்பவங்களை நாம் மறக்ககூடாது என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்புகிறார் (http://www.outlookindia.com/article/Metamorphosis-Of-Belief/209464).

கருணாநிதி சந்திப்பை அடுத்து தேசிய முற்போக்கு கூட்டணியில் இருந்த மற்ற தமிழக கட்சிகளான மதிமுகவும் பாமகவும் பாஜக அரசு ராணுவ ரீதியான எந்த உதவியும் செய்யகூடாது, IPKF சென்றதை போல கசப்பான முடிவுகளை பாஜக எடுக்க கூடாது என்று வலியுறுத்தின. மே 8 ஆம் தேதி இலங்கை நிலவரம் குறித்து முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது பாஜக.
ஒரு பக்கம் ராணுவ உதவி செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவெடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டு மறுபக்கம் ஒரு நாள் முன்னதாகவே மே 7 அன்றே விமானப்படை தளபதி டிப்னிசை இலங்கைக்கு ஆறு நாட்கள் நல்லெண்ணப்பயணம் என்ற பெயரில் அனுப்பியது இந்திய பாஜக அரசு.(http://www.hindu.com/2000/05/08/stories/01080003.htm).

இச்செய்தி அறிந்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்படுகிறது. டெல்லி சென்று திரும்பிய கருணாநிதி, தலையை ஒருபக்கமும் வாலை ஒருபக்கமும் நீட்டி இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பக்கூடாது என்று சட்டசபையில் பேசிவிட்டு தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையையும் எடுக்க ஆரம்பிக்கிறார். மே 7 ஆம் தேதி “இன்று ஆனையிறவு நாளை யாழ்ப்பாணம்” என்று சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு அச்சடித்த அச்சக உரிமையாளர் உட்பட ஒட்டிய பெரியார் திராவிடர் கழகத்தினர் 1௦ பேரை கைது செய்கிறார். அதே நாள் சிதம்பரத்தில் ஈழத்தமிழர் அவலங்கள் பற்றிய கருத்தரங்கம் நடத்தவிருந்த அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 250 பேரை கைது செய்து கருத்தரங்கத்திற்கு தடை விதிக்கிறார்.(http://tamil.oneindia.in/news/2000/05/07/nedumaran.html) அதற்கு முன் இதே கருத்தரங்கை திருவாரூர், திருச்சந்தூர், ராணிப்பேட்டையில் நடத்திய பொழுது அனுமதித்த கருணாநிதி டெல்லி சென்று ஆலோசனை நடத்தி திரும்பிய பின் புலிகள் 40 ஆயிரம் ராணுவத்தினரை சுற்றி வளைத்துள்ள இந்நிலையில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் மாநாடுநடத்தக்கூடாது என்று தமிழக போலீசார் 144 தடையுத்தரவு போட்டு தமிழீழ ஆதரவை ஒடுக்க ஆரம்பிக்கிறார்.

லக்ஸ்மன் கதிர்காமர் இந்தியா வந்ததும், கூட்டணியில் இருக்கும் ஈழ ஆதரவு தமிழக கட்சிகளை அழைக்காமல் கேபினெட் கூட்டி மனிதநேய உதவி என்று சொன்னதும், கருணாநிதியை அழைத்து ஆலோசித்து அதன் பின் அவர் தமிழீழ ஆதரவை ஒடுக்க ஆரம்பித்ததும், ராணுவ விமானப்படை தளபதியை அனுப்பிவிட்டு ராணுவ உதவி இல்லை என்று வெளியில் காட்ட அனைத்து கட்சி கூட்டியதும், வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசும் இலங்கை அரசும் இணைந்து புலிகளால் சுற்றி வளைக்கப்பட்ட 40000 இலங்கை ராணுவத்தினரை காப்பாற்றத்தான் என்பதை யாரும் சொல்லி தெரியத்தேவை இல்லை.
அதன் பின் அதே வருடம் ஜூன் மாதம் 3ஆம் தேதி கருணாநிதி தன் பிறந்தநாள் விழாவில் இலங்கையிலும் செகச்லோவோகியா போல் பேச்சு வார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு ஏற்பட பாஜக அரசு உதவ வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார். (http://tamil.oneindia.in/news/2000/06/06/possible.html) உடனே அதனை இலங்கை அரசாங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இலங்கை நாட்டை பிரிக்க எண்ணினால், இந்தியா பிரிந்து போகும்’ என்று எச்சரிக்கிறார் இலங்கை யின் அமைச்சர் மங்கள சமரவீரா. உடனே பாஜக அரசாங்கம் கருணாநிதி சொன்னது இந்திய அரசின் கருத்தில்லை என்று தெரிவிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஜூன் 11ஆம் தேதி அன்றைய வெளி விவகார துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கை செல்கிறார், இலங்கைக்கு 100 மில்லியன் டாலர் இந்திய அரசால் இலங்கையின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் தாரைவார்க்கப்படுகிறது. அது தான் இந்திய அரசாங்கம் முதன் முதலாக இலங்கை அரசுக்கு கொடுத்த இனாம். அவ்வளவு பெரிய அளவிலான தொகையை இந்தியா அதற்குமுன்னர் எந்த நாட்டுக்கும் கொடுக்கவில்லை. அன்றைய தேதிக்கு இலங்கை ரூபாய் மதிப்பிற்கு அது 1000 கோடி ரூபாய். அவ்வளவு பணத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் ‘இலங்கை தீவை துண்டாட நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஒற்றை இலங்கைக்குள் தீர்வு என்பதே இந்தியாவின் முடிவு’ என்று ஜஸ்வந்த் சிங் திட்டவட்டமாக அறிவிக்கிறார். (http://news.bbc.co.uk/2/hi/south_asia/791132.stm). அதை எதிர்த்து அன்றைய காலகட்டத்தில் ஈழத்தை ஆதரிக்கும் வைகோ உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அறிக்கை முலம் கண்டிக்கிறார்கள். ஆனாலும் கூட்டணியில் தொடருகிறார்கள்(!).
அதே ஜூன் 11, சென்னை ஆவடிக்கு ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்சாலையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகிறார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அவரிடம் நிருபர்கள் தமிழக கட்சிகளின் எதிர்ப்பு பற்றி கேட்கிறார்கள், அதற்கு ‘இப்பிரச்சனையில் மத்திய அரசு தெளிவான நிலை எடுத்திருக்கிறது’ என்று சொல்கிறார். அத்தோடு ‘மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை’ என்கிறார். (http://tamil.oneindia.in/news/2000/06/15/george.html).

அதை தொடர்ந்தே ஜூலை 1, 2 தேதிகளில் அய்யா வைகோவின் மதிமுக, ‘தமிழர் எழுச்சி மாநாட்டை’ ஈரோட்டில் நடத்துகிறது. அம்மாநாட்டில் அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், முக்கிய தலைவர்களும், சில மாநில முதல்வர்களும், கலந்து கொள்கிறார்கள். அன்று நடந்த பேரணியில் ஈழம்/இலங்கை சார்ந்த முழக்கங்கள் குறைக்கப்பட்டு, தமிழகம் சார்ந்த கோரிக்கைகள் முழங்கப்படுகிறது (http://tamil.oneindia.in/news/2000/07/01/started.html).

அக்கூட்டதில் அத்வானி மிகத்தெளிவாக, நிதானமாக ‘இலங்கையில் தமிழர்களுக்கு அமைதியும் நீதியும் கிடைக்க பாடுபடுவோம், இலங்கையின் இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காமல் தமிழர்கள் மானத்தோடும் மரியாதையோடும் வாழ அனைத்து வழிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும்” என்கிறார். அதன் பிறகு உரையாற்றிய அய்யா வைகோ ‘நான் பேசுவதை அளந்து தெளிந்து பேசுகிறேன், வாஜ்பாய் அரசாங்கத்தை நான் இலங்கையை பிரிக்க நிர்பந்திக்கவில்லை, ஆனால் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையால் அப்படி ஒரு நாடு உருவானால் அதற்கு பாஜக அரசு என்ன செய்ய முடியும்’ என்று நாசுக்காக உரைத்தார். அத்தோடு ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அந்நாட்டுக்கு உதவுவதில்லை என்று இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது” என்ற தீர்மானமும் நிறைவேற்றினார் (http://tamil.oneindia.in/news/2000/07/02/resolutions.html).

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஜூன் 11 அன்று இலங்கைக்கு நூறு மில்லியன் டாலர் கொடுத்த இந்திய பாஜக அரசுக்கு ஜூலை1 அன்று நடைபெற்ற மாநாட்டு தீர்மானத்தில் நன்றி சொல்லப்படுகிறது. வெறும் 15 நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை மறைத்து அய்யா வைகோ மக்களை எப்படி எல்லாம் முட்டளாக்கியிருக்கிறார் என்று யோசிக்கும் பொழுது மனம் கொதிக்கிறது.

ஆனையிறவு வெற்றிக்கு பிறகு விடுதலை புலிகள் மிக பலம்வாய்ந்திருந்த காலகட்டத்தில், இந்திய பாஜக அரசு இலங்கைக்கு இனாமாக கொடுத்த நூறு மில்லியன் டாலரை சந்திரிக்கா அரசாங்கம் எதற்கு பயன்படுத்தியிருக்கும் என்பதை நாம் எளிதில் யூகிக்க முடியும். அந்த காலகட்டமே ஒட்டுமொத்தமாக இந்திய அரசின் வெளி விவகாரக் கொள்கை தமிழர் நலனில் அக்கறையின்மை என்ற போக்கில் இருந்து சிறிது முன்னேறி, தமிழின எதிர்ப்பு அல்லது அழிப்பு என்ற நிலையை பற்றி பயணிக்க முடிவெடுத்தது. இனாமாக பெற்ற நூறு மில்லியன் டாலர் இலங்கை அரசால், சர்வதேச நாடுகளுடனான ராஜதந்திர நடவடிக்கைகளுக்கும், ஆயுத கொள்முதலுக்கும் கனகச்சிதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்திய ஆளும்வர்க்க நலன் சார்த்த நிலைப்பாடுகளை முடிவெடுத்து நிகழ்த்தி காட்டும் அதிகார மையங்களின் ஆலோசனைப்படி, இலங்கை அரசின் ராஜதந்திர அணுகுமுறையின் அனுகூலங்கள் துளிர்த்து, அவ்வரசு மற்றும் அரசுசாரா பல்வேறு பொறுப்பாளர்கள், பல்வேறுபட்ட நாடுகளில் சுற்று பயணம் மேற்கொள்ளுகின்றனர். இதை எல்லாம் விட பாஜக அரசாங்கம் எப்படி மிக வஞ்சகமாக தமிழர்களை ஏமாற்றியிருக்கிறது என்பதற்கு ஒரு சம்பவத்தை குறுப்பிட வேண்டியிருக்கிறது.

மெருகேற்றப்பட்ட இந்திய இலங்கை ராஜதந்திர மற்றும் தமிழின எதிர்ப்பு ரகசிய உடன்படிக்கை உருவான காலகட்டமது. அதன் தொடக்கமாக ஆண்டு ஆகஸ்ட் மாதமே INS சரயு என்ற 90 கோடி மதிப்புள்ள ரோந்து கப்பலையும் ஆகாயமார்க்கமாக வேவு பார்க்க மூன்று செடக் உலங்கு ஊர்தியையும் இந்தியா வலிய சென்று இலங்கைக்கு வழங்குகிறது. (http://en.wikipedia.org/wiki/Sukanya-class_patrol_vessel) (http://www.bannedthought.net/India/PeoplesMarch/PM1999-2006/archives/2002/june2k2/srilanka.htm).

இந்தியா ராணுவ தளவாடங்கள் முதல் முறையாக இலங்கைக்கு விற்கப்படும் வணிக நிகழ்வு இது. அன்றைய இந்திய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கம் தான் முதலில் இலங்கைக்கு ராணுவரீதியான உதவியையும் இரு நாடுகளுக்குடனான ராணுவத் தளவாட வணிகத்தையும் தொடங்கி வைத்தது. அடுத்ததாக டிசம்பர் மாதம் தாம் கொடுத்த ரோந்து கப்பல்களை பணிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் தகுந்த இயக்கிகளை உருவாக்க இலங்கையை சேர்ந்த 200 சிங்கள கடற்ப்படையினருக்கு பயிற்சியும், பயன்பாட்டு பயிலரங்க உத்தரவும் வழங்குகிறது. (http://www.hindu.com/2000/12/10/stories/03100008.htm).

மேற்கண்ட தளவாடங்களே பிற்காலங்களில் இந்துமா சமுத்திரத்தின் இலங்கை கடற்ப படையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. மேலும் விடுதலைப்புலிகளின் ஆயுத கப்பல்கள் பெருமளவு தடுத்து நிறுத்தி நாசப்படுத்த பயன்பட்டது.
வாஜ்பாய் அரசங்காத்தின் ஈழ நிலைப்பாடு இவ்வளவு மோசமாக இருக்க அய்யா வைகோ தொடர்ச்சியாக ‘அன்றைய பாஜக அரசாங்கம் சரியாக இருந்தது இன்றைக்கு இருக்கும் மோடி தலைமையிலான அரசு தான் சரியில்லை’ என்று பேசுவது அப்பட்டமான மோசடி. அதை எல்லாம் விட அய்யா வைகோவின் சகிக்க முடியாத துரோகம் என்னவெனில் 2000 ஆண்டு இந்திய ராணுவ அமைச்சகம் முதன் முதலாக இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் பொழுது அய்யா வைகோ இந்திய அரசின் பாதுகாப்பு குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தது தான்(http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=498&lastls=13).

தமிழர்களுக்கு எதிரான போரில் பயன்படுத்தக்கூடிய ராணுவ தளவாடங்களை இந்திய அரசு வழங்கும் பொழுது உள்ளிருந்து கொண்டு அதை எதிர்க்காமல் இருந்ததுவிட்டு இப்பொழுது வந்து மற்றவர்களை பிரபாகரன் படத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்று பேட்டி கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் வீழ்ந்துவிடும் என்று எல்லா ஊடகங்களும் எழுதி தீர்த்த பொழுது, கருத்துகணிப்புகள் வெட்டவெளிச்சமாக காட்டிய பொழுது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனிமைபடுத்தப்பட்டு நடிகர் கார்த்திக்கின் கட்சியோடு தான் கூட்டணி சேர முடியும் என்ற கீழ் நிலையில் இருக்கும் பொழுது காங்கிரசை வீழ்த்த வேறு வழி தெரியாமல் பாஜகவோடு கூட்டணி வைத்தேன் என்பதெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பதென்று தெரியவில்லை. ஒருவேளை இந்திய அளவில் வீழ்த்துவதை பற்றி சொல்கிறார் என்று எண்ணினாலும் இவருக்கு கொடுக்கப்பட்டதோ வெறும் 7 சீட்டுக்கள் இவர் வேறு மாநிலத்திற்கும் சென்று ஆதரவு பிரச்சாரம் செய்யவில்லை என்பதால் அதுவுமில்லை. அத்தோடு வாஜ்பாய் அரசின் நிலைப்பாடும் காங்கிரசின் அரசின் நிலைபாடும் ஒன்று தான் எனும்பொழுது அய்யா வைகோ பாஜகவோடு கூட்டணி வைத்தது அவரது சுயலாபத்திற்காகத்தான் இன்று வெளியே வந்ததும் கூடா கூட்டணியினால் தன் கட்சியின் ஈழ ஆதரவு பிம்பம் உடைந்துவிடக்கூடாது என்ற சுயலாபத்திற்காக தான் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

https://m.facebook.com/notes/packiarajan-sethuramalingam/வாஜ்பாய்-அரசு-ஈழ-ஆதரவு-அரசா-வைகோ-பொய்யும்-நடந்தவையும்/604414593266566/

தமிழினப் படுகொலை

மே 1, 2009 அன்று தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை கண்டிக்கிறோம். படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூறுகிறோம்.