இராமர் கோவிலுக்கு வாழ்த்தும் யூதர்கள்

நம்மூர் சங்கிகள் எதற்கெடுத்தாலும் கிறித்தவனென்றால் இஸ்ரேலுக்கு போ என்றும்; இஸ்லாமியர் என்றால் அரபு நாட்டிற்கு செல் என்றும் கூறுவது வழக்கம்.

தமது தொடர்பு இனத்தாரான ஆரியர்களின் அரசியல் ஆதாயத்திற்காக மசூதியை இடித்து கட்டப்படும் கோவிலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் யூதர்களை என்னவென்று கூறுவர் சங்கிகள்?

இந்த வாழ்த்துச் செய்தியை பார்த்து பூரிப்படைந்திருக்கும் சங்கிகள் இனி இஸ்ரேலுக்கு முட்டுக்கொடுப்பதோடு இஸ்ரேலுக்கே சென்றுவிடுவர் என்று நம்புவோம்.

வெளிநாடுகளில் படிப்பது தான் “மேக் இன் இந்தியா?”

ராஜ் நாத்சிங்கின் மகன் இங்கிலாந்தின் “லீட்ஸ்” பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.

நிர்மலா சீதாராமன் மகள் “வாங்மயிபரகலா” அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

வெளி விவகார அமைச்சர் ஜெய்சங்கரின் மகன் “துருவ்” ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் “மேதா” டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறாள்.

அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள் “ராசிகா” மகன் “துருவ் “ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள் “அபூர்வா” பாஸ்ட்டன் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள் “ஆதித்யா ” அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள் “சுபாஷினி” ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின் மகள் “அருனேதய் ” ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள்.

அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன் “நகுல் ” கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.

அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் “திபோத்தமா ” வார்விச் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான் “மேக் இன் இந்தியாவா?”

இவர்களின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்க நம்முடைய சூத்திர மாணவர்களிடம் கத்தியையும், துப்பாக்கியையும் கொடுத்து முஸ்லீம்களுக்கு எதிராக போராட வைப்பது தான் பார்ப்பன நீதியா?

பாசிச மோடியின் “இந்து ” என்ற மாய வலையில் இருந்து மாணவச் செல்வங்களே, இளைஞர்களே! வெளியேறுங்கள்!

நமது நாடு தமிழ் நாடு!
நமது மொழி தமிழ்!
வாழ்க தமிழ்!

சங்கிகளை வளர்க்கும் பெரியார் பக்தகோடிகள்..!

எங்கள் வீட்டு பூஜை அறையில் சிவனும் முருகனும் மட்டுமல்ல.. இயேசுவுக்கும் அன்னை மேரிக்கும் இடமுண்டு.. தினமும் வீட்டில் திருவாசகமும், கந்த சஷ்டி கவசமும் ஒலிக்கும்..

ஆனால் நான் இந்துத்துவ சங்கிகளின் மதவெறி அரசியலை கடுமையாக எதிர்க்கிறேன்.
அவ்வளவுதான்..

என்னால் ஒரு சர்ச்சில் அமர்ந்து ஜெபம் பண்ணவும் கோவிலில் அமர்ந்து சிவனை கும்பிடவும் மசூதிக்கு சென்று தொழுகை செய்யவும் முடியும். ஒரு துளி கூட மனதில் தடுமாற்றம் வந்ததில்லை.

ஏனெனில் சிறுவயதிலிருந்தே என் தந்தை அனைத்து மதங்களையும் கொண்டாடவே சொல்லிக் கொடுத்தார். இந்த மதங்கள் என்பதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

இங்கு ஒருவன் இந்துவாகவோ இஸ்லாமியனாகவோ கிறிஸ்தவனாகவோ இருப்பது பிரச்சினை அல்ல. அவர்கள் மதம். அவர்கள் நம்பிக்கை அவ்வளவுதான்.

ஆனால் அவன் மதத்தின் பெயரால் இன்னொருவனை ஆதிக்கம் செய்யவோ இழிவு படுத்தவோ முயன்றால் நாம் விமர்சிக்கலாம்.

ஆனால் பெரியார் பக்தகோடிகளான திராவிட சங்கிகளுக்கு இது புரியாது.

அதனால்தான் கந்த சஷ்டி கவசத்தை ஆபசமாக்கி பெரியார் பக்தர் ஒருவர் காணொளி போட்டிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைய ஒன்றும் இல்லை.

காரணம் தமிழ் நாட்டு நாத்திகர்களின் கடவுளான பெரியாரும் தன் பக்தரைப்போல் இருந்தவர்தான்.

பெரியார் ஒரு சமூக சீர்த்திருவாதியாக இருந்தாலும், கள்ளை ஒழிக்க 500 தென்னை மரத்தை வெட்டியது.. தமிழர்களுக்கு திராவிட பெயிண்ட் அடித்தது, ஆணாதிக்கத்தை ஒழிக்க பெண்கள் கர்ப்பப்பையை அறுக்க சொன்னது, பிள்ளையார் சிலையை உடைத்தது போன்ற பல தேவையில்லாத டிசைன்கள் அவரிடம் உண்டு.

அதில் ஒன்று கடவுள் மறுப்பு என்ற பெயரிலான இந்து மத மறுப்பு. ஆமாம்.. மேலோட்டமாக பார்த்தால் கடவுள் மறுப்பு என்பதுபோல் தோன்றினாலும் பெரியார் முன்னெடுத்தது இந்து மத மறுப்பு மட்டுமே..
அதேப்போல் தான் சாதி ஒழிப்பும்..

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிக்கதான் சாதி ஒழிப்பு அரசியல் செய்தாரே தவிர பார்ப்பனர் அல்லாதவர்களின் சாதிவெறியை ஒழிக்க எதுவும் செய்யவில்லை.. அதற்கு இன்றைய திராவிடர்களின் ஆட்சியில் வளர்ந்து நிற்கும் சாதிவெறி தமிழகமே சாட்சி.

பார்ப்பனர்களிடமிருந்து அதிகாரத்தை பறித்து தன்னுடைய திராவிட சூத்திர சாதிவெறியர்களிடம் அதிகாரம் கிடைக்கவே பாடுபட்டார் பெரியார்.

இந்த புள்ளியிலிருந்து அவரது கடவுள் மறுப்பு அரசியலை பார்ப்போம்.

ஆரியர்களின் ஆதிக்கத்தை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு பெரியார் செய்த இந்துமத மறுப்பு (கடவுள் மறுப்பு அல்ல) அரசியல் எதிர்விளைவுகளை உண்டு பண்ணியது.

கடவுள் என்பவர் யார்.. அவருக்கு உருவம் உண்டா.. இல்லையா.. அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் நமக்கு தெரியாது..

கடவுள் என்ற ஒருவர் இருக்கலாம்.. அல்லது அவர் டுபாக்கூராக இருக்கலாம்.. ஆனால் கடவுள் என்ற கருதுகோள் சிலருக்கு நம்பிக்கையை அளிக்கிறது எனும்போது அதை எள்ளி நகையாடுவதில் என்ன அறிவுடமை இருந்துவிடப்போகிறது.

கடவுள் நம்பிக்கை என்பது எப்படி நம்பிக்கையோ அதுபோல் கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான்.

அடிப்படையில் இங்கு மனித மனத்திற்கு ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது.

அந்த புள்ளியிலிருந்துதான் கடவுள் என்ற கேரக்ட்டர் உருவாகியிருக்க வேண்டும்.

பொதுவாக கோவிலுக்கு போவது மசூதிக்கு போவது ஆலயத்துக்கு போவது என்று வழிபாட்டு தலங்களுக்குப் போவது என்பதும் கடவுள் நம்பிக்கை என்பதும் தன் மனதை ஒருமுகப்படுத்தி பிரபஞ்ச ஆற்றலிடம் வேண்டுவதுதான்.

மனம் எனும் ஆற்றல் பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதற்கான ஒரு ஒருமுகப்படுத்தல் தேவைப்படுகிறது. அப்படி பிரபஞ்ச ஆற்றலை எந்த வடிவத்திலும் அடக்கிவிட முடியாதநிலையில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு தெரிந்த வடிவத்தில் பிரபஞ்ச ஆற்றலை உருவகப்படுத்திக் கொண்டான்.

சிறு ஆற்றல்களை கொண்ட மனிதன் பெரும் ஆற்றல்களை கொண்ட இயற்கையை கண்டு அஞ்சினான். ஓடினான்.

பின்னர் அதை வசப்படுத்த விரும்பினான்.. அதனிடம் சரண்டராகி வணங்க ஆரம்பித்தான். இப்படியாக ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் இடம்பெயர்ந்த மனிதன் அந்த மண்ணின் இயற்கை பண்பிற்கு ஏற்ப தன் கடவுள்களையும் மதங்களையும் உருவாக்கி வழிபட ஆரம்பித்தான்.

பாம்புகள் அதிகமிருந்து நிலப்பரப்பில் வாழ்ந்த மனிதன் தன் கடவுளாக பாம்பாக வணங்க ஆரம்பித்தான். நாளை கொரோனா சாமி கூட உருவாகலாம்..

இப்படியாக வெவ்வேறு மதங்களும் கடவுளரின் உருவங்களும் உருவாக்கப்பட்டன.

இதை எளிமையாக உருவகப்படுத்த வேண்டுமானால் இணைய வசதியை சொல்லலாம்.. நம்மை சுற்றி மின் காந்த அலைகள் நிறைந்திருக்கின்றன.. ஆனால் குறிப்பிட்ட மோடமும் பாஸ்வேர்டும் இருப்பவர்களுக்கு மட்டுமே இணைப்புகள் கிடைக்கின்றன..

செல்போனும் கணினியும் இல்லாதவர்கள் எங்களுக்கு எந்த இணைப்பும் கிடைக்கவில்லை.. மின்காந்த அலைகள் என்று ஒன்று இல்லவே இல்லை.. அது பொய் என்று அடம்பிடித்தால் எப்படி அபத்தமாக இருக்கும்..

அதுபோல் ஒருவருக்கு ஒரு ஆற்றலின் மீது நம்பிக்கை இருக்கிறது.. நமக்கு அதுபற்றி தெரியவில்லை என்பதால் இழிவு படுத்துவது என்பது அறிவுடமை ஆகாது. அது அவர்களின் நம்பிக்கை என்று மதிக்கும் பண்பு வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழர்களிடம் ஒரு மெய்யியல் கோட்பாடு இருந்தது. சிவன் எனும் ஆசீவக சித்தரும் அவர் வழி வந்த முருகன் உள்ளிட்ட சித்தர்களாலும் அது உருவாக்கப்பட்டிருக்கலாம். பிற்பாடு ஆரியர்களின் வரவால் சாதிய படிநிலை ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டிருக்கலாம்..

இந்த இடத்தில்தான் பெரியார் ஆரியர்கள் வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு தமிழர்களின் மெய்யியல் அழிக்க முனைந்தார்.

ஆரியர்கள் வேறு.. எங்கள் மண்ணின் கடவுளர்களான சுடலையும் இசக்கியும் ஐய்யனாரும் கருப்பனும் முத்தாரம்மனும் பேச்சியும் மாசனமும் மாரியம்மனும் வேறு.. எங்கள் மக்களின் நம்பிக்கையும் வேறு .. என்று இந்த மண்ணின் மக்களின் நம்பிக்கைகளுடன் அவர் துணை நிற்காமல் எல்லாவற்றையும் பொத்தாம்பொதுவாக எதிர்த்ததன் விளைவு, அது எதிர் அணிக்கு பலத்தை உண்டு பண்ணியது.

ஆரியர்கள் இதுதான் வசதி என்று நாமெல்லாம் இந்துக்கள் என்று ஆரியர் அல்லாதவர்களை எல்லாம் இணைக்க ஆரம்பித்தார்கள்..

விளைவு சுடலை, சுடலை ஆண்டவர் ஆக்கப்பட்டார்.. முனியாண்டி முனி ஈஸ்வரனாக்கப்பட்டார்.. முருகன் ஸ்கந்தனாக்கப்பட்டார்.. இப்படி ஆக்குவதற்காக பல திரிபு கதைகளை அள்ளிவிட்டார்கள்.

இப்படியாக பெரியார் அறிந்தோ அறியாமலோ மறைமுகமாக எதிரணிக்கு ஆள் பிடித்து கொடுக்கும் வேலையை செய்தார். அதாவது தமிழர்களை சங்கிகளாக மாற்ற உதவினார்.

ஆனால் கர்நாடகாவில் நாங்கள் இந்துக்கள் அல்ல.. லிங்காயத்துகள் என்று பிரமாதமான முன்னெடுப்பை செய்கிறார்கள். இந்த முன்னெடுப்பை தமிழகத்தில் செய்ய வேண்டும்..

பெரியார் பக்தகோடிகள் உண்மையில் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்..

பாரபட்சமில்லாமல் அனைத்து மதங்களையும் விமர்சித்திருக்க வேண்டும்.. ஆனால் அவர்கள் இந்து மத்தத்தை மட்டுமே விமர்சித்தார்கள்.. ஏன் மற்ற மதங்களில் இந்துமதத்தில் இருப்பதுபோல் கட்டுக்கதைகள் அபத்தங்கள் இல்லையா என்ன.. என்ற கேள்வி இயல்பாக எழத்தானே செய்யும்..

இந்துமத்தின் அபத்தங்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.. ஆனால் இஸ்லாத்தில் கடவுள் இல்லை என்று எழுதினால் சக இஸ்லாமியன் போட்டுத்தள்ளுவான் என்பதை கோவை பரூக் கொலையில் பார்த்தோம்.

இந்துமதத்தை மட்டும் விமர்சித்துக் கொண்டு இப்தார்களில் கலந்து கொண்டு கஞ்சி குடிப்பதும் கிறித்துமஸ் பண்டிகைகளில் கலந்து கொண்டு கேக் சாப்பிடுவதும் எப்படி கடவுள் மறுப்பு ஆகும்..

ஆனால் பெரியார் பக்தகோடிகள் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள்..

விளைவு தமிழகத்தில் சங்கிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை உரம் போட்டு வளர்ப்பவர்கள் வேறு யாருமல்ல.. பெரியார் பக்தகோடிகளே..!

-கார்ட்டூனிஸ்ட் பாலா.

நமது பொருட்களை உடைப்பதால் சீனாவிற்கு என்ன ஆபத்து?

என் கையில் தற்போது இருக்கும் மொபைல் சீனா தயாரிப்பு இப்ப நான் இதை உடைத்தால் சீனாவிற்க்கு நஷ்டமா? எனக்கு நஷ்டமா?

என்னடா இவ்வளவு முட்டாளா இருக்கீங்க?

சீனாக்காரன் அவன் பொருளை நமக்கு விற்றுவிட்டான் அவனுக்கு காசு போய்விட்டது அவனுக்கு எந்த நஷ்டமும் இல்லை

அவன் இந்தியாவில் இறக்குமதி செய்த பொருட்களை இப்ப நாம் புறகணிப்பது நம்முடைய வியாபாரிகளுக்குதான் நஷ்டத்தை ஏற்படுத்தும்

இவர்களின் முட்டாள் தனத்தால் சிறு வியாபாரிகள் நஷ்டம் அடைய வேண்டுமா?

அப்ப என்ன செய்வது இந்திய அரசு முடிவு செய்ய வேண்டும்

எப்படி மலேசியாவிடம் பாமாயில் இறக்குமதி செய்ய மாட்டோம் பாக்கிஸ்தானிடம் இறக்குமதி செய்மாட்டோம் என மோடி அரசு முடிவெடுத்ததோ அதே போல சீனாவிடம் இருந்து எந்த ஒன்றும் இந்தியாவில் இறக்குமதி கிடையாது என்று அரசு முடிவெடு க்கட்டும் அது தைரியம்

அது அல்லாமல் உங்கள் அரசியலுக்காக ஏழை வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவது இந்தியாவின் பொருளாதாரத்தை தான் பாதிக்கும்

இவ்வளவுதான் உங்கள் தேசப்பற்று!

போரை உருவாக்க தலைவன் தேவையில்லை;கிறுக்கன் போதும்.

தேசபக்தி, தேசபக்தி என்று மார்தட்டிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் ஜெய்ஹிந்த் சொல்லும் நமக்கு போரின் வலி தெரியாது. தங்கள் உற்றாரையும், சுற்றாரையும் விட்டு, உயிர்துறக்கும், ராணுவ வீரர்களும் அதிகாரிகளும்தான் போரின் வலியை அனுபவிப்பார்கள். எல்லையில் குடியிருக்கும் சாதாரண மக்களும் இதில் அடக்கம்.

இந்த வலியும், இதன் பாதிப்பும் ஒரு நாட்டை விட்டு விலக பல ஆண்டுகள் ஆகும். ஒரு போரின் இறுதியில், வெற்றி அல்லது தோல்வி என்று ஒரு நாடு மார்தட்டிக் கொண்டாலும், வெற்றி பெற்ற நாடு அனுபவித்த வேதனைகளும் இருக்கத்தான் செய்யும், உயிர்ச்சேதம் இல்லாத போர்கள் வரலாறில் இல்லை.

இதனால்தான், சமயோசிதம் மிகுந்த, மனிதநேயம் கொண்ட தலைவர்கள், போர்களை தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்துள்ளார்கள். 2008ம் ஆண்டில், பாகிஸ்தான் தீவிரவாதிகள், மும்பையில் 3 நாட்கள் தாக்குதல் நடத்தியபோது, இந்தியாவின் ராணுவ தலைமை, மன்மோகன் சிங்கிடம், பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்றே ஆலோசனை சொன்னது. ஆனால், மன்மோகன் உறுதியாக மறுத்தார். அந்தத் , தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், குஜராத் முதல்வராக இருந்த மோடி, தாஜ் ஹோட்டல் அருகே, மத்திய அரசை குறை கூறி பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்திக் கொண்டிருந்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற தீவு அல்ல. இந்தியா, எல்லையில், பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, நேபாள், பூட்டான் ஆகிய நாடுகளால் சூழப்பட்ட ஒரு பிரதேசம். இத்தகைய நிலப்பரப்பில் இருக்கும் ஒரு நாடு. சுற்றுப்புறம் உள்ள நாடுகளோடு நல்ல நட்புறவை பேணுவதும், அதை செழுமைப்படுத்துவதும் அவசியம். அது மட்டுமே அறிவார்ந்த நடவடிக்கையும் கூட. ஏனெனில் போர்க்காலத்தில் எந்த ஒரு சிறிய நாடும், நமக்கு சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அந்த சிறிய நாட்டில், எதிரி நாடு தங்களது விமானங்களுக்கு எரிபொருள் போடலாம். தன் துருப்புக்களை தங்க வைக்கலாம். ஆயுதங்களை சேமித்து வைக்கலாம்.

இது போல நீண்டகால ஆபத்துக்களை கருத்தில் கொண்டே, இந்தியா, ஈழப் போரில், சிங்களர்களுக்கு ஆதரவாக நின்றது. இது நம் மனதுக்கு ஒவ்வாத ஒன்றாக இருந்தாலும், இதுதான் யதார்த்தம். இந்தியா போன்ற ஒரு நாடு, தன் நீண்டகால நலனை கருத்தில் கொண்டே முடிவெடுக்கும். உணர்ச்சிப்பூர்வமாக அல்ல.

இந்த விஷயங்களையெல்லாம் அலசி ஆராய்ந்தே, இந்தியாவின் இது நாள் வரை இருந்த பிரதமர்கள், நமது அண்டை நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணி வந்தார்கள். 2003ம் ஆண்டு, அமெரிக்கா இதர நாடுகளோடு இணைந்து, ஈராக் மீது போர் தொடுத்தபோது, இந்திய துருப்புகளை அனுப்புமாறு, சீனியர் புஷ், அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைத்தார். வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா ? எதிர்க்கட்சித் தலைவர் சோனியா மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆலோசித்தார். இறுதியாக, ஈராக் போரில், இந்தியா தன் துருப்புகளை அனுப்பாது என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மோடியாக இருந்தால், அமெரிக்க அதிபர் கேட்பதற்கு முன்னதாகவே இந்திய துருப்புகளை அனுப்பியிருப்பார். இதுதான் ஒரு உண்மையான தலைவனுக்கும், தன்னை ஒப்பற்ற தலைவனாக நினைத்துக் கொள்பவனுக்கும் உள்ள வேறுபாடு. \

https://thewire.in/…/india-nearly-gave-us-pressure-join-ira…

ஆனால், ஜவஹர்லால் நேருவைப்போல தன்னை ஒரு பெரும் தலைவராக நிரூபிக்க முயலும் மோடிதான், இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்தையும் எதிரியாக்கி உள்ளார். ஒரு கட்டத்தில், இந்தியாதான், நேபாளத்தின் வெளியுறவு கொள்கையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இன்று அந்த நாட்டின் வீரர்கள், இந்தியர்களை சுட்டுக் கொல்லும் அளவுக்கு எதிரியாகி உள்ளார்கள்.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு மேஜர் ஒருவர் முன்பு ஒரு முறை என்னிடம் பேசுகையில் இந்திய ராணுவம், பூட்டான் நாட்டின் உள்ளே சர்வ சாதாரணமாக நுழைந்து, உல்பா தீவிரவாதிகளை பிடித்து வரும் என்று கூறியுள்ளார். அந்த அளவுக்கு, தெற்காசிய பிரதேசத்தில் நாம் ஒரு வளர்ந்த நாடாகத்தான் இது வரையில் இருந்துள்ளோம்.

சீனாவை நாம் தொடக்கம் முதலே சந்தேகமாகத்தான் பார்த்து வந்தோம். சீனாவும், நம்மை ஒரு போதும் நட்புநாடாக பார்த்தது இல்லை. இந்தியா சீனாவைப் பொறுத்தவரை, ஒரு சந்தை. அவ்வளவே. சீனா, தொடர்ந்து, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்சில், 26/11 தாக்குதல் மற்றும் இந்தியாவின் மீது நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான தீவிரவாதி மசூத் அஸாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை, சீனா தடுத்து நிறுத்தியது. ஆனால் அதற்கு பிறகுதான் அக்டோபரில், சீன அதிபரை மகாபலிபுரம் வரவைத்து, இளநீர் அளித்தார் மோடி. இது போன்ற சந்திப்புகள் புகைப்படம் எடுப்பதை தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.
இது போன்ற ஒரு நாட்டோடு இந்தியா கொஞ்சிக் குலவ வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் Equidistance என்று சொல்லப்படும் முறையில் இந்நாடுகளை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, சீனா அமெரிக்காவுக்கு இடையே ஏற்படும் மோதலில், இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும். ஆனால், மோடி எந்த பெரிய நாட்டுக்கு சென்றாலும், அந்நாட்டின் அதிபர்களை கட்டிப் பிடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் காட்டிய கவனத்தை, இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் காட்ட மறந்தார். அதே போல சிறிய நாடுகளுக்கு செல்கையில், அந்நாட்டின் அதிபர்களை, ஒரு கடைகோடி பிஜேபி தலைவரைப் போல, ஆணவமாக நடத்தினார்.

மோடி ஒரு சுயமோகி என்பதை பல முறை எழுதியுள்ளேன். மோடி வெளியுறவு கொள்கை உள்ளிட்ட அத்தனை விவகாரங்களிலும் அடைந்துள்ள தோல்விக்கு காரணமும் இந்த சுயமோகமே.
சீனாவோடு போருக்கு செல்லும் நிலையில் நாம் இல்லை என்பது நம்மை விட மோடிக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாகத்தான், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சீனாவோடு தொடங்கிய சிக்கலை, இரு நாட்கள் முன்பு வரை மறைத்தார் மோடி. எத்தியோப்பிய காட்டில் தீப்பிடித்தால் உடனடியாக வருத்தம் தெரிவிக்கும் மோடி, நம் சொந்த நாட்டின் வீரர்கள் 20 பேர் இறந்த பிறகும், 24 மணி நேரத்துக்கு மேலாக அமைதி காத்தார். சீனா என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூட மோடிக்கு அச்சமாக உள்ளது.

மோடியின் வெளியுறவுக் கொள்கைக்கு சிறந்த உதாரணம், சீனாவின் இந்த அடாவடியான தாக்குதலை, உலகில் எந்த நாடும் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்பது. மோடி ஊர் ஊராக சென்று கட்டிப்பிடித்த ஒரு தலைவர் கூட சீனாவை கண்டிக்கவில்லை. ஏனெனில், உலகில் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும், சீனாவோடு வர்த்தக உறவு உள்ளது. உலக நாடுகளில் ஒன்று கூட சீன-இந்திய சிக்கலில் மாட்டிக்கொள்ள தயாராக இல்லை. இதுதான் மோடி 2000 கோடி செலவு செய்து, ஊர் ஊராக சுற்றி அடைந்த பலன்.

தேர்தலுக்காக, மோடியும், பிஜேபியின் இதர தலைவர்களும், பாகிஸ்தானை எத்தனை முறை சீண்டியுள்ளார்கள் !!! சீனாவோடு இன்று நாம் சிக்கலில் உள்ள நிலையில், பாகிஸ்தான், தன் துருப்புக்களை எல்லையை நோக்கி நகர்த்தினால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள் ?

மோடி மற்றும் பிஜேபியால், இந்தியா இத்தனை ஆண்டுகளாக சம்பாதித்த, புகழ், மரியாதை, ஸ்திரத்தன்மை அனைத்தையும் இழந்து நிற்கிறது. எதிரிகளால் சூழப்பட்டு நிற்கிறோம்.

56 இன்ச் மார்பு என்று பீற்றிக் கொள்பவரின் தோல்வி இது.

சவுக்கு சங்கர்
18 ஜூன் 2020

சங்கிகளின் தேசபக்தி என்பது

வாயால் மட்டுமே வடை சுடுவது.

சொந்த நாட்டு மக்களிடமே கொள்ளையடிப்பது

ஆயுதமில்லாமல் ராணுவ வீரர்களை போராடச் செய்வது

சங்கிகளுக்காக செயல்படும் தமிழக அரசு?

பாஜகவால் இயக்கப்படும் தமிழக அரசு தமிழக மக்கள் நலனில் அக்கறையின்றி சங்கிகளின் நலனில் மட்டுமே அக்கறையுடன் செயல்படுகிறது என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்தே சாட்சி.