நியூஸ் 18 க்கு துணை நிற்க வேண்டுமா?

முதலாளி அம்பானியின் நியூஸ் 18 சேனலை காவல் காக்க கிளம்பி இருக்கும் தமிழ்த் தேசிய தோழர்களை பார்க்கும் போது

தமிழ்த் தேசிய அரசியல் தளத்திலும் வேலையத்த வெட்டி பூண்டுகள் பவனி வருவதை உணர முடிகிறது.

முதலில் காங்கிரசை அழித்து ஆரிய மதவாத பாஜகவை உருவாக்கியதில் மிகப்பெரும் பங்கை வகிப்பவர்கள் அம்பானிகள் குடும்பம்.

ஆரியமதவாத அரசியலை அம்பானிகளும், கைமாறாக நாட்டை சுரண்டும் அம்பானிகளின் தொழிலை ஆரிய மதவாதிகளும் வளர்த்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட அம்பானிகளின் தொழிலுக்கு மாரிதாஸ்களால் ஆபத்து என்றால் குருமூர்த்தியும், அம்பானிகளும் ஒரு செல்பேசி அழைப்பில் அதை சரி செய்து கொண்டு விடுவார்கள்.

அதற்காக ‘ஸ்லீப் வித்’ போராட்டம் நடத்தும் தமிழ்த் தேசியவாதிகளை எண்ணி பரிதாபப்படுகிறேன்.

சாத்தான்குளத்தை திராவிட கும்பல் வழக்கம் போல வெறும் ஓட்டாக மாற்ற பார்க்கிறது.

எடப்பாட்டிகள் கொலை செய்ததைவிட பலநூறுமடங்கு அதிகம் லாக்கப் கொலைகளை செய்திருக்கிறது திராவிட குடும்பம்.

அப்போதெல்லாம் இந்த ஊடகங்கள் கொவாலாபுரத்தை சந்தியில் நிறுத்தவில்லையே?

சில வருடங்களுக்கு முன்னர் கனிமொழி-ராஜாவின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காக யாரோ ஒருவரை சட்டத்திற்கு புறம்பாக சிறையில் அடைத்து வைத்து..

கொடுமை செய்து..

அதுகுறித்து ஆணவமும், திமிரும் கலந்து கூடுதலாக காமமும் சொட்ட கனிமொழியும்- ஜாபர் சேட்டும் போனில் உரையாடியது நினைவிருக்கிறதா?

கடாபியின் மரணச் செய்தி வந்ததும் அதை ‘லைவ்’ வாக கேட்டுவிட்டு ‘we came, we saw, he died’ என்று ஆணவத்தோடு கொக்கரித்தது ஹிலாரியை தேர்தலில் வீழ்த்தியது.

ஆனால் அதையெல்லாம் தமிழ் நாட்டு அரசியலில் ‘சகஜமப்பா’ என ஒரு பண்பாடாக மாற்றியதுதான் ஈவெரா விந்துக்களின் வீரியம்.

சாத்தான்குளத்திலாவது எட்டப்பாடியின் எடுபிடிகள் செய்த அத்துமீறல்..

ஆனால் கொவாலாபுரத்து அரண்மனை சுவர் முழுதுமே லாக்கப் மரணங்கள், கற்பழிப்பு, கொலை, கொள்ளையால் வீழ்ந்த எலும்புக்கூடுகளால் கட்டி எழுப்பப்பட்டது என உணர்வீர்களா?

கோவாலாபுர அரண்மனை மதில் சுவரை மேலும் மேலும் உயர்த்த கருணாவும், மகன் ஸ்டாலினும், மகள் கனியும், மருமகன்கள் மாறன்களும், பேரன் உதய்ணாவும் செய்திட்ட கொலைகள் எத்தனை?

மாரிதாஸ்கள் ஈழ போராட்டத்தையும், பிரபாகரனையும் தீவிரவாதம், தீவிரவாதி என்றபோது ‘திராவிட விந்தணுக்கள்’ மாரிதாஸோடு கூடி கலந்து புணர்ச்சி பரவசம் அடைந்தனவே?

அப்போதெல்லாம் ஏன் அவர்களுக்கு தமிழின-தமிழர் பற்று வரவில்லை?

நமது வீட்டுக்கு உரிமை கோரி குருமூர்த்தியும்-வடுக விஜயநகர வாரிசுகளும் நடத்தும் சண்டையில் மாரிதாஸ் பக்கமோ, மூன்றாம் கலைஞர் பக்கமோ சாய்வதில் என்ன அரசியல் சாணக்கியத்தனம் இருக்க முடியும்?

இருவரும் அடித்துக்கொண்டு வீழட்டும்.

தொடர்ந்து இரையாகும் உயிர்கள் வழக்கம் போல எவனுக்காவது ஒட்டாகாமல் தடுப்போம்.

பைதிவே, கலி பூங்குன்றன் மருமகன்கள் தமிழர் அரசியலை மட்டுமல்ல, மானுட மக்களாட்சி தத்துவத்தின் நான்காம் தூணையே வீழ்த்தியவர்கள்.

அவர்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள்.

அம்பானிக்கு தமிழர் அரசியலில் அவ்வளவு அக்கறை இருக்குமாயின் ஏகலைவன்களையோ, கார்ட்டூனிஸ்ட் பாலாக்களையோ, விஷவாக்களையோ, இன்னும் முகவரியே தெரியாது ஒழிக்கப்பட்டுவிட்ட தமிழர்களையோ ஊடக தலைமை பொறுப்பில் அமர்த்தட்டும்.

அப்போது ‘ஸ்டேண்ட் வித்’ ஹேஷ்டாக் போட்டு அவர்களோடு துணை நிற்போம்.

அதுவரை வேடிக்கை பார்ப்போம்!

இரண்டாம் உலகப்போரில் ஜோசப் ஸ்டாலின் பிரித்தானிய காலனியவாதிகளை வீழ்த்த ஹிட்லருடன் ஒருமுறையும், பின்னர் ஹிட்லரை வீழ்த்த காலனியவாதிகளுடன் ஒருமுறையும் கூட்டணி வைப்பார்.

நாம் அப்படியான அறத்திற்கு எதிரான செயல்களை செய்ய வேண்டாம், வெறும் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.

தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்!தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை!

தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்!
தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா? – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

திராவிடர் கழகத்தின் நாளேடான “விடுதலை” இதழின் ஞாயிறு மலரில் (வெளியூர் 21.06.2020) சிறப்பு வினா ஒன்றும், அதற்கான சிறப்பு விடையும் வெளிவந்துள்ளன. சிறப்புக் கேள்வியைக் கேட்டவர் சி.பி.எம். கட்சியின் பேராசிரியர் அருணன் அவர்கள். சிறப்பு விடையளித்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஐயா வீரமணி அவர்கள்.

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது வினா!

இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டிய காலக்கட்டாயத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன், “தமிழ்த்தேசியவாதிகள் அல்ல, அவர்கள் தமிழ்த்தேசிய வியாதிகள்” என்று மொட்டையாக வீரமணி அவர்கள் சாடிச் சென்றதுபோல் – இன்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. தமிழ்த்தேசியம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், அவர் அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் இப்போதும் விடை கூறவில்லை!

“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக!”

“இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்”.

மேற்கண்ட பாணியில் திராவிட முகாமின் புதிய வரவுகள் பேசினால் புரிந்து கொள்ளலாம். எவ்வளவோ அனுபவங்களைக் கொண்ட தலைவர் இப்படிப் பேசுவது பொருத்தமன்று. மற்றபடி எந்த பாணியில் பேசலாம் என்று தேர்ந்தெடுப்பது அவர் உரிமை!

“தந்தை பெரியார் கூறும் திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் தந்தை பெரியாரின் கற்பனையல்ல. அது வரலாற்று ரீதியான உண்மை. வரலாறு நெடுக ஆரிய – திராவிடப் போராட்டம் நடந்துள்ளது” என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்த விடையில் கூறுகிறார். ஆனால், “வரலாறு நெடுக நடந்ததாகச் சொல்லப்படும் ஆரிய – திராவிடப் போராட்டத்திற்கு ஒரு வரலாற்றுச் சான்றைக்கூட இதுவரை பெரியாரும் காட்டியதில்லை, அண்ணாவும் காட்டியதில்லை, “திராவிட” ஆய்வாளர்களும் காட்டியதில்லை!

தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் சங்ககாலத்திலிருந்து வரலாறு நெடுக நடந்து வந்த ஆரியர் எதிர் தமிழர் போராட்டத்திற்கான சான்றுகள் பலவற்றைக் கூறியுள்ளோம். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய மன்னர்களான கனகன், விசயன் ஆகியோர் தலையில் இமயக்கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த தமிழ் வேந்தன் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ்ப் பேரரசன் கரிகால்சோழன் போன்ற வரலாறுகளை நாங்கள் காட்டி வருகிறோம். ஆன்மிகத்திலும் ஆரியத்தை எதிர்த்த திருமூலர், வள்ளலார் எனப் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறி வருகிறோம்.

“திராவிடர்கள்” ஆரியர்களை எதிர்த்ததற்கு ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூட இதுவரை – பெரியாரியர்கள் கூறியதே இல்லை. இப்போது வீரமணி ஐயா அவர்களும் கூறவில்லை!

பெரியாரும் அண்ணாவும் திராவிடர் என்பது மனுநீதியில் கூறப்பட்டுள்ளது, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது, சனகனமண பாட்டில் கூறப்பட்டுள்ளது, உ.வே.சா. சிலைக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இவை ஆரியச் சான்றுகள்! தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள் என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை.

தமிழர்கள் – தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதை இழிவாகக் கருதியதால் நமது சங்க கால – காப்பியக்கால – பக்திக்கால – சித்தர் கால இலக்கியங்கள் எதிலும் “திராவிடர்” என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. விசயநகர ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோதுதான் தமிழ்நாட்டில் “திராவிட” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அச்சொல்லை 20ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு அரசியலில் புகுத்திப் பிரபலப்படுத்தியவர் பெரியார்.

திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்; தமிழர் என்றால் எங்களுக்கும் தமிழ் தாய்மொழி என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் சொன்னார்.

திராவிடர்கள் என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947).

வடமேற்கே இருந்து வந்து குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய தாய்மொழிகள் பேசும் ஐந்து தாயக மண்டலங்களில் குடியேறிய பிராமணர்கள் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இதைப் பெரியாரிய ஆதரவாளரான பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களும் ஒரு நூலில் எழுதியுள்ளார்.

ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய “சௌந்தர்ய லகரி”யில், “திராவிட சிசு” என்று 75ஆம் எண் பாடலில் கூறுகிறார். அதில் வரும் “திராவிட சிசு” என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கிறது என்றும், இல்லை ஆதிசங்கரரையே குறிக்கிறது என்றும் விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். இவ்விருவருமே பிராமணர்கள்!

சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” (The South Kanara Dravida Brahmin Association) செயல்பட்டு வருகிறது. 1953 அக்டோபரில் இச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (காண்க : www.skdbassociation.com). இவ்வாறு ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” செயல்படுகிறது. (காண்க : www.pudurdravida.com).

இவை மட்டுமல்லாமல், ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்” (காண்க : https://www.facebook.com/skds1928), தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம் – (காண்க http://www.thummagunta.org), உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா (Stanika Dravida Brahmana Sangha), உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம் (USKDBES) எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன.

சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்!

ஓர் இராகுல் திராவிட், ஒரு மணி திராவிட் சாத்திரி – இவர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறோம் என்று குறைபட்டுக் கொள்ளக்கூடிய திராவிடவாதிகள், “திராவிட பிராமண மணமக்கள் சேவை” (Dravida Brahmins Matrimony) என்பதை இணையதளத்தில் தேடிப் பாருங்கள்.

https://www.brahminmatrimony.com/brahmin-dravida-grooms, http://www.dravidamatrimony.com/brides

ஆயிரக்கணக்கான திராவிட பிராமண மணமகன் – மணமகள் பெயர்கள் “திராவிட” பின்னொட்டுடன் வந்து விழும்!

தென்னாட்டுப் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய பெயர்தான் “திராவிடர்” என்று இத்தனை சான்றுகள் தருகிறோம். திராவிடர் என்பது தூய தமிழரைக் குறிக்கும் என்பதற்கு ஒரு சான்றுகூட பெரியாரியர்கள் இதுவரை காட்டியதில்லை!

“தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்!

பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன். அதேவேளை பெரியாரின் தாய்மொழி “கன்னடம்” என்பதால் அவரை அயலாராக எள்ளளவும் நானோ, எங்களின் தமிழ்த்தேசியப் பேரியக்கமோ கருதவில்லை. பெரியாரை மட்டுமல்ல, நானூறு – ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களையும் அயலாராக நாங்கள் கருதவில்லை. மரபுவழித் தமிழர்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்கிறோம்.

அதேபோல் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமணிய ஆதிக்கக் கருத்தியலை மறுத்து, சமற்கிருத – இந்தித் திணிப்புகளை எதிர்க்கின்றவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கின்றோம்.

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும், கல்விமொழியாகவும் தமிழை ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் முன்வைக்கும் நிபந்தனை!

பார்ப்பனத் தூசு கூட உள்ளே நுழைய முடியாதபடி “திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டினார் பெரியார் என்று இந்த வினா விடையில் “வீரம்” பேசுகிறார் வீரமணி ஐயா! ஆனால், இவர்தாம் “பார்ப்பன” செயலலிதா அம்மையார்க்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார்.

திராவிடத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளில் ஒன்றான கலைஞரின் தி.மு.க. 1999இல் ஆரிய பிராமணத்துவா கட்சியான பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் ஆட்சியில் பங்கு வகித்தது. தி.மு.க.வில் தலைமையின் ஏற்புடன், சாதிவாதமும் சாதி முகாம்களும் வெளிப்படையாகச் செயல்படுகின்றன.

இவ்வாறு திராவிட முகாமில் “பார்ப்பனத் தூசு” அல்ல – பிராமணியச் சாக்கடையே ஓடிக் கொண்டுள்ளது!

“பிராமண மாசு படிந்த சொல் தமிழர்” என்கிறீர்கள். தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்தித், “தமிழர்” தலைவர் என்று வீரமணியார் போட்டுக் கொள்வது ஏன்? ஏமாளித் தமிழர்களை மட்டும் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளச் சொல்வது ஏன்? இந்த வினாவிடை வந்துள்ள இதே “விடுதலை”யில் முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தி – “காணொலியில் தமிழர் தலைவர் உரை!” என்று செய்தி போடப்பட்டுள்ளது. தனக்குத் “தமிழர்” தலைவர் பட்டம்! தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா?

ஆசிரியர் வீரமணி அவர்கள், தேசிய இனத்திற்குக் கொடுக்கும் விளக்கம் உலக வரலாற்றாசிரியர்கள் யாரும் கூறாத விளக்கமாகும். அதே விளக்கத்தை, இக்கேள்வி கேட்ட பேராசிரியர் அருணனும் கூறியுள்ளாராம்!

“தமிழன் – மொழிப்பெயர்; திராவிடன் – இனப்பெயர்” என்கிறார் ஆசிரியர். தமிழ் என்பதுதான் மொழிப்பெயர் என்று இதுவரை மொழியியல் அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களோ, தமிழன் என்பது மொழிப்பெயர் என்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம்; கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடர்களாக இருக்கலாம்; மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளிகளாக இருக்கலாம். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர்களாக இருக்கக்கூடாது! தமிழினத்திற்கு ஏன் இப்படி இரண்டகம் செய்கிறீர்கள்?
தமிழர்கள் பெரியாரையும், வீரமணியாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதற்குத் தண்டனையா இது?

நீங்கள் சொல்லும் திராவிடத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் பெரியாரையோ, வீரமணியாரையோ தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை!

தமிழர் திருநாள் என்று தமிழறிஞர்களாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் வரையறுக்கப்பட்ட “பொங்கல் விழா”வை – “திராவிடர் திருநாள்” என்று சூழ்ச்சியாக மாற்றி வருகிறீர்கள்!

ஓர் இனத்தின் பெயரை அழிப்பது இனப்படுகொலைக்குச் சமம்! ஐயா வீரமணி அவர்களே, கருத்துக் களத்தில் தமிழினப் படுகொலை செய்யாதீர்கள்!


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : http://www.kannottam.com
இணையம் : http://www.tamizhdesiyam.com
சுட்டுரை : http://www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

நான் வியந்த தமிழர் ஆளுமைகள் – 1 பழனி பாபா

கிறித்தவ பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தில் வாழ்ந்த எனக்கு 80 களின் இறுதியில் எனது தாய் மாமா சௌதியிலிருந்து கொண்டு வந்த ஒலி நாடாக்கள் மூலமாக பழனிபாபா அறிமுகமாகிறார். எனது பதின்ம வயதுகளில் என்னை முதலில் கவர்ந்தது அவரது சிம்மக்குரல். அந்த குரலின் ஏற்ற இரக்கங்களில் சிவாஜியைப் போல் இருப்பதாக பேசிக் கொள்வோம்.

நான் கேட்ட அந்த முதல் ஒலிநாடாவில் இன்னும் சில வரிகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. “எங்கள் பெண்களின் கருகமணிகள் அறுபடுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது”. “நம்ம கூட்டத்துக்கு வரும்போதே ரஜினி கமல் படம் போட்ட பனியனை போட்டுக்கிட்டு வருகிறானே அத்தா, உறுப்படுவானா அத்தா?”

மிகச் சிறந்த கட்டளை தளபதி, இளைஞர்களை ஒன்றிணைப்பதில் நல்வழிப்படுத்துவதில். தவறென்றால் தட்டிக் கேட்பதில் ஆண்மகன். தமிழும் ஆங்கிலமும் விளையாடும் அவர் நாக்கில். சட்டம்(IPC) சர சர வென வந்து விழும் வார்த்தைகளில்.

எம்.ஜி.ஆரையே “தொப்பி பய” என்றுதான் அழைப்பார்.

அவர் போன்ற தைரியசாலிகள் நேர்மையாளர்கள் இல்லாமல் போனது தமிழ் தேசியத்தின் மிகப் பெரும் இழப்பு.

அவருடன் இருந்தவரகளோ அவரால் பயிற்றுவிக்கப் பட்டவர்களோ ஒருவர் கூட அவரளவிற்கு இனத்திற்காக பாடு படவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை.

ஆம், ஆலமரங்களின் நிழலில் வேறு எந்த மரமும் வளருவதில்லை.

அவரு பேரையெல்லாம் யாருக்கும் வெச்சு அசிங்கப்படுத்தாதீங்கடா.

  • உண்மை தமிழ் தேசிய விரும்பி

தமிழர்- தமிழ்- தமிழர் தேசியம்!

இனி நாம் பேச வேண்டியது தமிழர் தேசியம்தான்; தமிழ்த்தேசியம் அல்ல. நாம் தமிழ்த்தேசியம் என்று சொல்வதாலேயே ‘நானும் தமிழன்தான்’ என்று தமிழரல்லாதார் மூக்கை நுழைத்துக் கொண்டு நிற்கின்றனர். தமிழ் பேசுவதாலேயே தன்னையும் தமிழன் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனக் கோரிக்கை வைக்கின்றனர். அதனால்தான் தமிழர் தேசிய அரசியலைப் பேச வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

தமிழ்த்தேசியம் வேறு; தமிழர் தேசியம் வேறு.

தமிழ் முதலில் வந்ததா? தமிழர் முதலில் வந்தார்களா? என்று யோசித்தால், மனிதன் முதலில் தோன்றினான் பிறகுதான் அவன் பேசிய மொழி தோன்றியது. பிறக்கும் போதே யாரும் மொழியோடு பிறப்பதில்லை. எனவே, இடமும், இடத்தில் தோன்றிய உயிரினங்களும், உயிரினங்களின் உன்னதப் படைப்பான மனிதனும், மனிதனின் தனிப்பெரும் குணமான மொழியும் ஒரே வரிசையில் பின்னப்பட்டவை. நிலம்- இனம்- மொழி- மொழிவழி மக்களின் அடர்த்தி- அதற்கான நில எல்லையுடன் கூடிய நாடு- அந்த நாட்டின் அதிகாரம் என்பவையே பரிணாமத்தின் வரிசை. எனவேதான் தமிழர்- தமிழ்- தமிழர் தேசியம் என வரிசைப்படுத்துவதே சாலச் சிறந்தது.

இதுவரை தமிழ்த்தேசியம் பேசிவிட்டு, இப்பொழுது திடீரென எப்படி தமிழர் தேசியம் பேசுவது? இது என்ன புதுக் குழப்பம்? என்று கேள்விகள் எழக்கூடும்.

‘தமிழர் தேசியம்’ பேசுவது ஒன்றும் குற்றமல்ல. ஒரு பாதையில் நாம் பயணப்படும் போது, அதில் ஏற்படும் இடர்பாடுகளைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து எப்படி மீள்வது என்பதைத்தான் யோசிக்க வேண்டுமே தவிர, தயங்கி ஒரே இடத்தில் நின்றுவிடக் கூடாது. நாம் சென்று கொண்டு இருக்கும் பாதை தவறெனப்பட்டால், விடாப்பிடியாக வீம்பிற்கு அதே பாதையில்தான் செல்வேன் என்று அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழர் தேசியத்தை நிறுவ தமிழகத்தில் நாம் முதலில் பேசவேண்டியது தமிழர் தேசிய அரசியலைத்தான். ‘தமிழர் தேசிய அரசியல்’ என்பதுதான் இறுதியாக தமிழருக்கான தேசத்தை நிர்மானிக்கும். தமிழருக்கான தனிநாட்டை இந்த பூமிப்பந்தில் கட்டியெழுப்புவதே நம் இறுதி இலட்சியம் எனில் நாம் பேசுகின்ற கருத்தியலை அவ்வப்போது கூர்மைப்படுத்த வேண்டியதும் அவசியமே.

ஈழம் தனிநாடாக மலர்ந்து இருக்குமெனில் அது தமிழுக்கான தனிநாடாக இருந்து இருக்குமா? தமிழருக்கான தனிநாடாக இருந்து இருக்குமா? தமிழுக்கான தனிநாடாக அது இருந்து இருந்தால், ‘நான் நன்றாகத் தமிழ் பேசுவேன்’ என்று கூறிக் கொண்டு கருணாநிதியும், வை. கோபால்சாமி நாயுடும் கூட ஈழத்தை சொந்தம் கொண்டாடி இருக்கக் கூடும். ஆனால், ஈழம் தமிழர் நாடாக அறிவிக்கப்பட்டு இருந்தால்தான் அது தமிழர் இனத்திற்கான நாடாக அமையும்.

நாம் ‘தமிழர் தேசியம்’ பேசுவதால், தமிழர் அல்லாதார் எல்லோரையும் வெறுக்கிறோம் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

மலேசிய விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்களில் தமிழர்கள் பெரும்பான்மையானவர்கள் என்றாலும், சுதந்திர நாடு மலர்ந்தபின்பு, அது மலாய் இன மக்களுக்கான தனித்தேசமாகத்தான் அறிவிக்கப்பட்டது. அந்த விடுதலையில் துணை நின்றவர்கள் அத்தனைபேரும் போற்றப்பட்டனர், கொண்டாடப்பட்டனர், இன்று வரை அங்கு நிம்மதியாக வாழும் உரிமையைப் பெற்று இருக்கின்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் விடுதலைக்காக தமிழர்கள் அரும்பாடுபட்டனர். இந்தியாவில் இருந்து சென்ற எல்லா இனத்தவருமே நெல்சன் மண்டேலாவிற்கு துணையாக நின்றனர். அதற்காக விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்க நாடு இந்தியருக்குச் சொந்தமா? இல்லை.. இந்தியர் அங்கு நிம்மதியாக வாழலாம். அவ்வளவுதான்.

ஒரு தேசிய இனம், அயலாரால் சுரண்டப்படுவதைக் கண்டு பேரெழுச்சியாக எழுந்து போராடும் போது, அதற்கு துணையாக நிற்கும் அனைவருக்கும் அது நன்றிக்கடன் செலுத்தும். எனவே தமிழர்கள் தங்கள் தாய் நிலத்தின் அதிகாரத்தைக் கேட்டு நிற்கும் போது, அதன் உண்மைத் தன்மையை புரிந்துகொண்டு யாரெல்லாம் துணை நிற்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் போற்றப்பட வேண்டியவர்களே, அந்த விதத்தில் நாம் மற்ற மொழிவழி மக்களை நேசிக்கிறோம். அதற்காக, நாடே அவர்களுடையது என்று சொல்ல முடியுமா?

மேலும், தமிழர்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் தெலுங்கு இன வெறியர்களால்தான் துன்பங்களை சந்தித்து இருக்கின்றனர் என்ற உண்மையை உடைத்து சொல்லித்தான் தீரவேண்டும். இதை அடையாளப்படுத்துவது அவர்களைக் காயப்படுத்துமே என்றால், வெள்ளையர்கள் என்னை சுரண்டினார்கள் என்பதற்காக ‘வெள்ளையர்களே வெளியேறு’ என்று முழங்கியது அவர்களைக் காயப்படுத்தாதா?

அவன் காயப்பட்டுவிடுவான், இவன் காயப்பட்டுவிடுவான் என்பதற்காக சுரண்டுபவன் யார்? சுரண்டப்படுபவன் யார்? என்பதைக் கூட பிரித்துக் காட்டவே கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

‘வெள்ளையர்களே வெளியேறுங்கள்’ என்று முழக்கம்தான் வைக்கப்பட்டது, வெளியேறியது வெள்ளையர்களா? அல்லது வெள்ளையர்களின் அதிகாரமா?

வெள்ளையர்களிடம் இருந்த அதிகாரம்தான் இந்தியர்களுக்கு கொடுக்கப்பட்டது. வெள்ளையர்கள் வெளியேற்றப்படவில்லை. வெளியேற விரும்பாத பல வெள்ளையர்கள் இறுதிவரை இந்தியாவில்தான் வாழ்ந்தனர். இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு பல நூறு ஏக்கரில் சொத்துகள் இந்தியாவில் இருக்கிறது.

அதனால், இனி மலரப்போகும் தமிழர் தேசியம் எவருக்கும் அச்சுறுத்தலாக அமையாது, அதேசமயத்தில் வீண் வம்படியாக, அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு, சதி செய்வது, முதுகில் குத்துவது, வளங்களை சுரண்டுவது, வேலைவாய்ப்பை சுரண்டுவது போன்ற இழி செயல்களில் ஈடுபட்டால், அதனை தமிழர்கள் இனியும் பொறுத்துக் கொண்டு இருக்கமாட்டோம்.

எனவே, தெள்ளத் தெளிவாக நாம் யார்? நம் நோக்கம் என்ன? நம் இறுதி இலக்கு என்ன? என்பதை எல்லாம் தெளிவாக மக்கள் மன்றத்தில் வைப்போம். நம் உரிமையைத்தான் நாம் கேட்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கின்ற எவர் வேண்டுமானாலும் இந்தப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் அத்தனை பேரையும் போற்றுவோம். ஆனால், நாடும் நாட்டின் அதிகாரமும் முற்று முழுதாக தமிழருக்கானது என்பதில் எள்ளளவும் இனி பின்வாங்க முடியாது.

பெருந்தன்மையோடு வாந்தாரை வாழ வைப்போம், ஆனால் அந்த பெருந்தன்மையைப் பயன்படுத்தி தமிழர்களை மொட்டை அடிக்கும் தமிழரல்லாதார் ஒருவரையும் இனி விடமாட்டோம்.

நீங்களாக அரசியல் அதிகாரத்தைவிட்டு வெளியேறுங்கள்.. இல்லையெனில்..

திராவிடர்களே வெளியேறுங்கள்’ என்ற முழக்கம் இனி தமிழர் நிலத்தில் வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.


குறிப்பு: ‘திராவிடர்களே வெளியேறுங்கள்’ என்பது ‘வெள்ளையர்களே வெளியேறுங்கள்’ என்ற முழக்கத்திற்கு ஒப்பானதே.

-பேராசிரியர் ஆ. அருளினியன்

திராவிடம் – தமிழர்களைச் சீரழித்தது போதும்!

திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள் திராவிடத்திற்குப் புத்துயிர் ஊட்ட புதிய உளிகளோடு கிளம்பியுள்ளார்கள். சொந்தத் தத்துவமோ, சொந்த சித்தாந்தமோ இல்லாதவை திராவிடக் கழகங்கள். அதனால் அவர்கள் தங்கள் தலைவர்களை சாக்ரடீஸ், இங்கர்சால் என்று அயல்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.

திராவிடத்திற்கென்று என்றுமே தனித்துவமான தத்துவமோ, சித்தாந்தாமோ இருந்ததில்லை! அதில் கொஞ்சம் – இதில் கொஞ்சம் எடுத்துக் கொள்வார்கள். தமிழறிஞர்கள் முன்வைத்த தமிழ் இன – மொழி கருத்துகள், மேற்கத்திய நாத்திகவாதம், காங்கிரசார் – கம்யூனிஸ்ட்டுகள் சொல்லும் கொள்கைகள் முதலியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பஞ்சாமிர்தத் தத்துவம் பேசுவார்கள். “மாஸ்கோவுக்குப் போவேன், மாலங்கோவைப் பார்ப்பேன்; நான்தான் உண்மையான கம்யூனிஸ்ட் என்பேன்” என்று பேசினார் அண்ணா.

திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகளே, உங்கள் கழகங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குச் செய்த சாதனைகள் என்ன? உங்கள் திராவிடக் கட்சிகள் உருவாகவில்லை என்றால் தமிழர்கள் – உங்கள் பெரியார் சொன்னதுபோல் காட்டுமிராண்டிகளாக – நாடோடிக் கூட்டமாக அலைந்து திரிந்திருப்பார்களா? உங்களுக்கு அறைகூவல் (சவால்) விடுக்கிறோம். எந்தக் காலத்தில் – எந்த நூற்றாண்டில் தமிழர்களைவிட வட இந்தியர்கள் முன்னேறி இருந்தார்கள்? எதில் முன்னேறி இருந்தார்கள்?

எந்தக் காலத்தில் தமிழர்கள் பின்தங்கியிருந்தார்கள்?

கடந்த ஐயாயிரம் ஆண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டு விவாதிப்போம்! எந்தக் காலத்தில் உ.பி., ம.பி., பீகார், இராசஸ்தான்காரர்களை விடத் தமிழர்கள் எதில் பின் தங்கி இருந்தார்கள்? வங்காளிகளும், மராத்தியரும் தமிழர்களைவிட முன்னேறி இருந்தார்களா?

சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் நடந்த மன்னராட்சியில் தமிழர்கள்தாம், தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில், குறிப்பாக வணிகத்தில் – கல்வியில் – கலைகளில் முன்னேறி இருந்தனர். பூம்புகார், கொற்கை, முசிறி இவையெல்லாம் தமிழர் வணிகத்தின் பன்னாட்டுத் துறைமுகங்கள். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடப் போன தமிழன் கூடத் தன் பெயரை கோடரி போன்ற வேட்டைக் கருவிகளில் தமிழில் பொறித்து வைத்திருந்தான். தமிழ்நாட்டில் கல்வி அவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தது என்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். (செம்பியன் கண்டியூர் கற்கோடரியில் பெயர் பொறித்திருந்ததைப் பார்த்த போது).

திராவிடத் தலைவர்கள் அவதாரம் எடுக்கவில்லையென்றால் தமிழர்கள் படித்திருக்க மாட்டார்கள்; மாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள் என்று தமிழ் இனத்தை ஏகடியம் பேசுகின்றீர்கள். ஆடுமாடு மேய்த்த தமிழனும், தமிழச்சியும் கல்வி கற்று விட்டுத்தான் அந்த வேலையைச் செய்தார்கள். படிக்காத காட்டுமிராண்டிச் சமூகத்தில்தான் 3,500 ஆண்டுகளுக்கு முன் பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் எழுதப்பட்டனவா?

படிக்காத தமிழ்ச்சமூகம்தான் மூன்று தமிழ்ச் சங்கங்களை உருவாக்கி, அதில் புலவர்கள் படைப்புகளை அரங்கேற்ற வேண்டும் என்று ஏற்பாடு செய்ததா? எண்ணற்ற பெண்பாற் புலவர்களை உருவாக்கியதா?

படிக்காத காட்டுமிராண்டித் தமிழ்ச்சமூகம்தான் ஆதிச்சநல்லூர் – கீழடி – அரப்பா வரையிலான ஐயாயிரம் ஆண்டு நாகரிகச் சின்னங்களை வைத்திருக்கிறதா?

ஆங்கிலேய ஆட்சி வருவதற்கு முன்பே இரும்பு உருக்குத் தொழில் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சிறப்பாக இருந்தது என்று மேற்கத்திய ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் வட இந்தியாவைவிட பெருளாதாரத்திலும் கல்வியிலும் தமிழ்நாடுதான் முன்னேறி இருந்தது.

இந்திய விடுதலைக்குப் பின் நடந்த காங்கிரசு ஆட்சியிலும், வட இந்திய மாநிலங்களை விடத் தமிழ்நாடுதான் கல்வியில் முன்னணியில் இருந்தது. படித்தோர் எண்ணிக்கை (Literacy Rate) வட இந்தியாவை விடத் தமிழ்நாட்டில்தான் அதிகம்!

மன்னராட்சியிலேயே 2,000 ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்டிய இனம் தமிழினம்! பொறியியல் துறையின் மிகப்பெரிய சாதனையாக 1,000 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இனம் தமிழினம்! வெள்ளைக்காரன்தான் மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு அணை போன்றவற்றைக் கட்டினான். பிறகு காங்கிரசு ஆட்சியில் பவானி சாகர் உள்ளிட்ட பல அணைகள் கட்டப்பட்டன.

பெரிய ரெயில்வே தொழிலகங்களைத் தமிழ்நாட்டில் வெள்ளைக்காரன் நிறுவினான். காங்கிரசு ஆட்சியில் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகள், பி.எச்.இ.எல்., நெய்வேலி தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. திராவிட ஆட்சிகளும் வேறு சில திட்டங்களை நிறைவேற்றின. ஓர் ஆட்சியின் அடிப்படை அது!

பாழாய்க் கிடந்த – நாடோடிக் கும்பலைக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கல்வியைக் கொண்டு வந்தன; தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தன என்பன போன்ற கட்டுக்கதைகளை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள் – திராவிடச் சிற்பிகளே!

சுரண்ட வந்த வெள்ளைக்காரன்கூட ஆட்சி நிர்வாகம் அமைத்த பின், கல்வி – வேலை – தொழில் – வேளாண்மை – பொதுநலம் எனப் பல துறைகளில் பல முன்னேற்றங்களை உண்டாக்கினான். வெள்ளைக்காரனுக்கு மாறாக சோழர் – பாண்டியர் ஆட்சியின் நீட்சியாக சனநாயக மலர்ச்சி ஏற்பட்டு தமிழர் ஆட்சி தொடர்ந்திருந்தால், 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட முன்னேற்றங்களை விட அதிக முன்னேற்றத்தைத் தமிழ்நாடு அடைந்திருக்கும்! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திரச்சோழன் வைத்திருந்த கப்பற்படைக்கு நிகராக உலகத்தில் எந்த ஆட்சியும் வைத்திருக்கவில்லை என்பதை நினைவில் வையுங்கள்.

இந்தியாவின் காலனி

அன்று இங்கிலாந்தின் காலனியாக இருந்தது தமிழ்நாடு; இன்று இந்தியாவின் காலனியாக இருக்கின்றது தமிழ்நாடு! இந்த வரையறுப்பை இன்றைக்கு சொல்ல தி.க. தயாரா? தி.மு.க. தயாரா? இந்திய ஏகாதிபத்தியக் காலனியத்தை எதிர்த்துப் போராடத் திட்டம் வெளியிடத் தயாரா? உங்கள் பெரியார்தான் சொன்னார், 1947 ஆகத்து விடுதலை தமிழ்நாட்டிற்கு இல்லையென்று! அப்படிச் சொன்னவர்தான் பின்னர், காங்கிரசுக்குக் காவடி தூக்கினார்.

தமிழ்நாடும் தமிழரும் அடிமையாய் உள்ளார்கள் – மெய்யான விடுதலை பெற வேண்டும் என்ற உண்மையை தொடக்கக் காலத்தில் சொன்னதால்தானே தி.க.வையும் தி.மு.க.வையும் தமிழர்கள் ஏற்றார்கள்; காங்கிரசைக் கைவிட்டார்கள். தனிநாடு பேசித்தானே தி.க.வும், தி.மு.க.வும் தமிழ்நாட்டில் வளர்ந்தன. வளர்ந்த பின் தி.க.வும், தி.மு.க.வும் செய்ததென்ன? பச்சைத்துரோகம்! தமிழினத்துக்குத் துரோகம் செய்து, தில்லிக்குக் காவடி தூக்கின!

1954லிருந்து இந்திய ஏகாதிபத்தியக் கட்சியான காங்கிரசுக்கு பிரச்சார பீரங்கியானார் பெரியார். 1967இல் காங்கிரசு தோற்று தி.மு.க. தமிழ்நாடு ஆட்சியைப் பிடிக்கும் வரை காங்கிரசுக்கு – சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஓட்டுக் கேட்டு ஊர் ஊராகப் போனவர் பெரியார். “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தமது ஏட்டில் எழுதிக் கொள்வார் – அவ்வப்போது தமிழ்நாடு தனியாக வேண்டும் என்று கூறிக் கொள்வார் – ஆனால் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாக முழங்கி வருவார். அக்கட்சிக்கு ஓட்டு கேட்பார். எப்படிப்பட்ட “விடுதலை வீரர்” பெரியார்!

அண்ணாவை வீழ்த்துவதே பெரியாரின் நோக்கம்
யாரைத் தோற்கடிக்க, காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? தி.மு.க.வைத் தோற்கடிக்க! திராவிட சித்தாந்தத்தின் சிறப்பே சிறப்பு! திராவிடச் சிந்தனைச் சிற்பிகள் சொல்லுவார்கள் – காமராசருக்காக – காங்கிரசுக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார் என்று! அதன் பொருள் என்ன? அண்ணாவைத் தோற்கடிக்கத் தானே காமராசருக்கு ஓட்டுக் கேட்டார் பெரியார்? என்னே திராவிடத் தந்தை, என்னே திராவிட மகன்! என்னே திராவிடத் தத்துவ ஆற்றல்!

தனிநபர் பகை அரசியல்

எப்போதுமே தனிநபர் பகைதான் திராவிட அரசியலில் முதன்மை வகிக்கும்! அண்ணாவையும், தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதற்காக காங்கிரசை ஆதரித்தார் பெரியார். வேறென்ன?

அண்ணாவும் அவர் தம்பிகளும் தி.மு.க.விலிருந்து ஏன் பிரிந்தார்கள்? பெரியார் மணியம்மையாரை தம் 70 ஆம் அகவையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதுதான் தி.மு.க. பிரிந்ததற்கான முதன்மைக் காரணம்! இக்காரணத்தைத்தான் தி.மு.க.வினர் வெளியே சொன்னார்கள்.

கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட தனிநபர் பகையில் தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. உருவானது. அ.தி.மு.க.வுக்கு செயலலிதா தலைமை உருவான பின் கருணாநிதிக்கும் அம்மையாருக்குமான தனிநபர் பகை அசிங்கமானது; அநாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டது.

கருணாநிதி முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் செயலலிதா சட்டப்பேரவைக்குப் போவதில்லை. தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக! அப்படி ஒரு நிகழ்வு 1989இல் நடந்தது. செயலலிதா முதல்வராக இருந்தால் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தும் கருணாநிதி சட்டப்பேரவைக்குப் போவதில்லை. ஏன்? அ.இ.அ.தி.மு.க.வினர் தன்னை இழிவுபடுத்தி விடுவார்கள் என்று அஞ்சி அவர் போவதில்லை. திராவிடம் வளர்த்த பண்பைப் பாருங்கள் – நாகரிகத்தைப் பாருங்கள் – சனநாயகத்தைப் பாருங்கள்! “கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு” காக்கும் திராவிடப் பாரம்பரியத்தைப் பாருங்கள்!

சட்டப்பேரவையில் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றாக உட்கார முடியாத கேவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? தமிழ்நாட்டின் நாகரிகத்திற்கும் தமிழர்களின் பண்பிற்கும் கேடு உண்டாக்கிய கட்சிகள் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்!

கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பகையினால்தான் ம.தி.மு.க. உருவானது. எந்தப் புதிய தத்துவத்திற்காக – இலட்சியத்திற்காக ம.தி.மு.க. உருவானது? எதுவுமில்லை!

வைகோ மீது கருணாநிதி சாட்டிய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. “விடுதலைப்புலிகளோடு சேர்ந்து கொண்டு வைகோ என்னைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார்” என்று கூறினார் கலைஞர். நடுவண் அரசின் உளவுத்துறை ஆதாரங்கள் இருக்கின்றன என்றார்.

கருணாநிதி இந்தக் கொலைக் குற்றச்சாட்டை தமது “பிதாமகர்” பெரியார் வழியைப் பின்பற்றித்தான் வைத்தார். திராவிடர் கழகத்தில் பிளவு உண்டானபோது அண்ணா தன்னைக் கொலை செய்யத் திட்டம் தீட்டுகிறார் என்று, தமது ஏட்டில் பெரியார் எழுதினார். அண்ணா பெரியாரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்தத் தந்தையின் பாணியைத்தான் தனையன் கருணாநிதி பின்பற்றினார்! திராவிடத்தின் தந்தை மகன் பாசம் – அண்ணன் தம்பி பாசம், அடடா.. அடடா..!

ஏன் வந்தது திராவிடம்?

திராவிடக் கட்சி என்பது 1944-இல் பிறக்கும்போதே போலியாகப் பிறந்த கட்சி என்பதற்கு “திராவிடர் கழகம்” என்ற பெயரே சான்று!

தமிழர்களுக்காக மட்டுமின்றி, தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோருக்காகவும் தமிழ்நாட்டில் கட்சி தொடங்கியவர் பெரியார். தமிழர் என்று சொன்னால், தெலுங்கர் – கன்னடர் – மலையாளி ஆகியோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், எனவேதான் “திராவிடர்” என்று சொல்கிறேன் என்றார் பெரியார். ஆனால், ஆந்திர – கர்நாடக – கேரள மாநிலங்களிலுள்ள தெலுங்கர் – கன்னடர் – மலையாளிகள் தங்கள் மண்ணில் திராவிடர் கழகத்தை ஏற்கவில்லை.

அந்த உண்மை தெரிந்த பின்னும் 1949இல் தி.க.விலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கியபோது, அண்ணாவும் மற்ற தலைவர்களும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களையும் இந்தியாவிலிருந்து விடுதலை செய்வதற்காகப் புதிய கழகம் உருவாக்கப்படுகிறது என்றார்கள். எவ்வளவு பெரிய பொய்!

தி.மு.க.வுக்கு மற்ற மூன்று மாநிலங்களில் தமிழர்களைத் தவிர பிறரிடம் கிளைகள் இல்லை; அத்துடன் அம்மாநிலங்களில் தனிநாட்டுக் கோரிக்கை எவராலும் வைக்கப்படவில்லை. உண்மையான தனிநாட்டு விடுதலை வீரர்களாக இருந்தால் – இப்படித் தொடர்பில்லாத மற்ற தேசிய இனங்களுக்கும் சேர்த்து விடுதலைக் கோரிக்கையை வைப்பார்களா? பிறக்கும்போதே போலித்தனம்! “நாங்கள் உண்மையான விடுதலை கோரவில்லை” என்று தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உணர்த்தும் உத்தி!

தி.க.வும் தி.மு.க.வும் தமிழர்களுக்குச் செய்த துரோகங்களின் சிகரம் எது? “தமிழர்” என்ற வரலாற்று வழிப்பட்ட நம் இனப்பெயரை நீக்கி நமக்கு “திராவிடர்” என்று புதிதாக ஒரு இனப்பெயரைச் சூட்டியதுதான் மன்னிக்க முடியாத துரோகம்! ஓர் இனத்தின் இயற்கையான பெயரை மாற்ற இவர்களுகளுக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படித்தான் இவர்களுக்கென்ன வரலாற்று அறிவு இருந்தது? திராவிடம் என்பதற்கு சமற்கிருதச் சான்றுகளைத்தான் அண்ணா காட்டினார்.

அடுத்து, தமிழர் மானிடவியலைக் கற்காத – அரைகுறை தமிழ்ப் பண்டிதர் கால்டுவெல் “திராவிடர்” என்று கூறியதை சான்று காட்டினார்கள். “சாண் ஏறினால் முழம் சறுக்குபவர் கால்டுவெல்” என்றார் பாவாணர்.

திராவிடர் என்பதில் பிராமணர் இல்லையா?

“திராவிட“ என்பது ஆரியப் பிராமணர்கள் உருவாக்கிய சொல். வடக்கே இருந்து தெற்கே புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்கப் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட சொல். இன்றைக்கும் பல பிராமண சங்கங்கள் “திராவிட” அடையாளத்தோடு செயல்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டு – புதூரு திராவிட பிராமண சங்கம், சவுத் கனரா திராவிட பிராமண சங்கம் (http://www.skdbassociation.com).

குசராத், மராட்டியம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்ற பிராமணர்களைக் குறிக்க “பஞ்சதிராவிடர்கள்” என்றார்கள். (பஞ்ச – ஐந்து. அப்போது மலையாள மொழி உருவாகவில்லை). வடக்கே கங்கைச் சமவெளி நோக்கி இமயமலைவரை சென்ற பிராமணர்களுக்கு “கௌட பிராமணர்கள்” என்று பெயர் சூட்டினர். தமிழர்களைக் குறிக்க “திராவிடர்” என்ற சொல்லை அவர்கள் உருவாக்கவில்லை.

கால்டுவெல் “திராவிட” என்ற சொல்லை மனுஸ்மிரிதி மற்றும் குமாரிலபட்டரின் “தந்த்ர வார்த்திகா” ஆகிய சமற்கிருத நூல்களிலிருந்து எடுத்ததாகக் குறிப்பிடுகிறார் (திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்). சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்திக்கால இலக்கியம், சித்தர் இலக்கியம் எதிலும் தமிழில் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அக்காலத்தில் தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக்கொள்வதை இழிவாகக் கருதினார்கள்.

தமிழர் இன அடையாளத்தை மறைப்பதற்காகத் திட்டமிட்டு பெரியாரால் பரப்பப்பட்ட சொல் திராவிடம். “தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ்ப் படிக்காதீர்கள்; ஆங்கிலத்தைப் படியுங்கள், வீட்டில் மனைவியிடம் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள்” என்று 1968 – 1969 இல் கூட திரும்பத் திரும்ப எழுதியவர், பேசியவர் பெரியார்.

தமிழ் இனத்தின் மீது – தமிழ் மொழி மீது அவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி ஏற்படும்படி தமிழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பெரியாருக்கு என்ன அநீதி இழைத்தார்கள்?

பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதற்காக அவரைத் தமிழர்கள் அயலாராகக் கருதவில்லை. நாம் பெரியாரை விமர்சிப்பது, அவர் அயல் இனத்தார் என்ற பொருளில் அன்று! சம உரிமையுள்ள தமிழ்நாட்டு மண்ணின் மகன் பெரியார் என்ற புரிதல்தான் தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வழியில் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து வரும் தெலுங்கு – கன்னடம் – சௌராட்டிரம் – உருது – மராத்தி போன்ற மொழிகள் பேசும் அனைவரையும் சம உரிமையுள்ள மண்ணின் மக்களாகவே நாங்கள் வரையறுக்கிறோம். ஆனால், பெரியாருக்குத்தான் தன் இனம் குறித்து ஏதோவொரு ஐயுறவு ஏற்பட்டு “தமிழர்” என்ற இனப்பெயரை நீக்கி, “திராவிடர்” என்ற ஆரியப்பெயரைத் திணித்தார்.

“திராவிடர்” என்று சொன்னால் அதில் பிராமணர்கள் சேர மாட்டார்கள் என்று ஒரு கட்டுக்கதையை பெரியார் உருவாக்கினார். தி.மு.க.வில் பிராமணர்கள் பலர் இருக்கிறார்கள். அ.தி.மு.க.வுக்கு கன்னடப் பிராமணப் பெண் தலைவி ஆனார். அந்த செயலலிதாவுக்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார் ஆசிரியர் வீரமணி.

பிராமணிய எதிர்ப்பு மரபு

சங்க காலத்திலிருந்து பிராமணியத்தை எதிர்த்து வரும் இனம் தமிழினம். ஆரியர்களை அடக்கி அவர்கள் தலையில் கல்லை ஏற்றி வந்த தமிழன் கதை கூறும் நூல் சிலப்பதிகாரம். பக்திக்காலம் – சித்தர்கள் காலம் தொட்டு வள்ளலார் காலம் – மறைமலையடிகள் காலம் வரை பிராமணிய எதிர்ப்பும், சமற்கிருத எதிர்ப்பும் தமிழினத்தின் குருதியில் கலந்தது. தமிழினத்திற்கு மரபு வழியில் ஆரிய – பிராமணிய எதிர்ப்பு தொடர்ந்து இருந்துவந்த காரணத்தால்தான், பெரியாரின் பிராமண ஆதிக்க எதிர்ப்பு இங்கு மக்களைத் திரட்டித் தந்தது.

தமிழ்நாட்டில் வெகுமக்கள் ஆதரவோடு நடந்த பிராமணிய எதிர்ப்புப் போராட்டம் போல் இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு எந்த மாநிலத்தில் நடந்தது? அந்த மாநிலங்களிலெல்லாம் வர்ணாசிரம தர்மம் இல்லையா? பிராமண ஆதிக்கம் இல்லையா? ஏகலைவன் கட்டை விரல் வாங்கிய கதை, தவமிருந்த சம்பூகன் தலை வெட்டிய கதை எல்லாம் வடநாட்டில்தானே நடந்தது! ஏன் அம்மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல் பிராமண எதிர்ப்பு வெகுமக்கள் ஆதரவைப் பெறவில்லை?

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும் 2,500 ஆண்டுகளுக்கு மேல் மனித சமத்துவம் பேசி வரும் இனம் – தமிழினம்! ஆரியத்தின் வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துவரும் இனம் – தமிழினம்!

“பேர் கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால், போர் கொண்ட மன்னர்க்கு பொல்லாத நோயாம்” என்று திருமூலர் பாடினார். அவரேதான் “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே” என்றார். ”வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்! வேதாகமங்களின் விளைவறியீர்! சூதாகச் சொன்னவலால், உண்மைநிலை தோன்ற உரைக்கவில்லை” என்றார் வள்ளலார். பல தெய்வ சிலை வணக்கத்தை மறுத்து, அனைவருக்கும் பொதுவான ஒளி வணக்கத்தை அறிமுகப்படுத்தினார். சாதி – மதம், ஆண் – பெண் வேறுபாடின்றி அனைவரும் உறுப்பு வகிக்கக் கூடிய “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்ற பொதுநிலைக் கழகத்தை 1865இல் தொடங்கி நடத்தியவர் வள்ளலார். இது எங்கள் மரபு!

இந்த மரபு பெரியாருக்கு வாய்ப்பளித்தது. பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினார். அதற்கு நன்றி பாராட்டுகிறோம்! அதற்காக, எங்கள் இனத்தின் பெயரை நீக்குவதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? எங்கள் தாய்மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்றும், எங்கள் இனத்திற்கு நாகரிக வரலாறு இல்லை என்றும், எங்கள் இனத்தில் சரியான அறிவாளி யாருமே இல்லை என்றும் பேசி தமிழினத்தை இழிவுபடுத்தியதைத் தமிழர்கள் சகித்துக் கொள்ள வேண்டுமா? தமிழை “நீச பாஷை” என்றார்கள் பிராமணர்கள்; தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார். இவருடைய பிராமண எதிர்ப்பு, பாதிக் கிணறு தாண்டுவதாக இருக்கிறதே!

திராவிடத்துக்குப் புத்துயிரூட்டப் புறப்பட்டிருக்கும் சிந்தனைச் சிற்பிகளே, அதற்காகத் தமிழ்த்தேசியத்தைத் தாக்காதீர்கள். தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்தாதீர்கள். தமிழர்களாகப் பிறந்த நீங்கள் தமிழ்த்தேசியத்தை இழிவுபடுத்துவது, கொச்சைப்படுத்துவது நீங்கள் குடித்த தாய்ப்பாலுக்குத் துரோகம் செய்வது போன்ற வேலை! “மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகள் தாலியறுக்க வேண்டும்” என்று கொடுமைக்கார மாமனார் – மாமியார் நினைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அப்படி, தமிழ்த்தேசியத்தை அழிப்பதற்காக நீங்கள் பிறந்த தமிழினத்திற்கு துரோகம் செய்யாதீர்கள்.

இனப்பெயர் நாமாகத் தேர்வுசெய்வதன்று. வரலாற்று வழியில் – மரபு வழியில் இயற்கையாக உருவாவது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் நம் இனப்பெயர் தமிழர் தான். இன்றும் நம் தேசிய இனப்பெயர் தமிழர்தான். மரபு இனப்பெயரும் (Race) தேசிய இனப்பெயரும் (Nationality) ஒன்றாக இருப்பது உலகத்தில் சில இனங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அதில் மூத்த இனம் தமிழினம்! அந்தப் பெயரை “திராவிடர்” என மாற்றிப் பிறந்த இனத்துக்குத் துரோகம் செய்யாதீர்கள்.

கொள்ளுப்பேரன் தலைமைதான் திராவிட விசுவாசமா?

திராவிடச் சிந்தனைச் சிற்பிகளே, கருணாநிதி தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் மகன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அவர் பேரன் தலைமையை ஏற்றுக் கொண்டு, அதன் பின் கலைஞரின் கொள்ளுப்பேரன் தலைமையை ஏற்றுக்கொள்வதுதான் “திராவிட விசுவாசம்” என்று கருத்தியல் உருவாக்கி – இனப்பற்றை “கலைஞர் வாரிசுகள் பற்று” என்று கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

தமிழ் இழப்பு – உரிமைகள் பறிப்பு

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகாலத் திராவிட ஆட்சி தமிழ்மொழிக் கல்வியே இல்லாத நிலையை உருவாக்கும் திசைநோக்கிச் செல்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை; தனியார் பள்ளிகளில் தமிழ் இல்லை. அண்டை மாநிலங்களில் இப்படியான நிலை இல்லை. கேரளத்தைப் பாருங்கள். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நிரம்பி இருக்கிறார்கள்; மலையாளம் கற்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகாலத் திராவிட ஆட்சியில்தான் கச்சதீவை இழந்தோம்; கடலில் மீன்பிடி உரிமை இழந்தோம்; காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆகிய ஆறுகளை இழந்தோம். கல்வி உரிமை மாநிலத்திடமிருந்து நடுவண் அதிகாரத்திற்கு போனது. மாநில அரசு வணிக வரி வசூலிக்கும் உரிமையை இழந்தோம். ஜி.எஸ்.டி வந்தது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது. தில்லியின் நீட் தேர்வு வந்தது.

ஐட்ரோகார்பன் வந்து வேளாண் நிலங்களை அழிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மனித உயிர்களைப் பறிக்கிறது. அடுக்கடுக்காய் அணு உலைகள், நியூட்ரினோ ஆலை, எட்டுவழிச் சாலை, வேளாண் நிலங்களின் குறுக்கே கெயில் குழாய்கள், உயர் மின் அழுத்த கோபுரங்கள் – எத்தனை சீரழிவுகள்; எத்தனை வகையில் வாழ்வுரிமைப் பறிப்புகள்!

வெளி மாநிலத்தார் குவிப்பு

தமிழர்களுக்கான தாயகமாகத் தமிழ்நாடு இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்ற பேரச்சம் ஏற்பட்டுள்ளது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளமென இந்திக்காரர்கள் கூட்டம் – வெளி மாநிலத்தார் கும்பல்! தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில், அலுவலகங்களில் இந்திக்காரர்களையும் வெளி மாநிலத்தவர்களையும் மிக அதிக அளவில் வேலையில் சேர்கிறார்கள். சொந்தத் தாயகத்திலேயே தமிழர்களுக்கு எதிராக இன ஒதுக்கல் கொள்கையை இந்திய அரசு செயல்படுத்துகிறது.

மேற்கண்ட அத்தனை உரிமைப் பறிப்புகளையும் தாயகப் பறிப்புகளையும் செய்யும் காங்கிரசு, பா.ச.க.வுடன்தான் திராவிடக் கட்சிகள் எப்போதும் கூட்டணி!

திராவிட அரசியல் என்பது இரண்டு சக்கரங்கள் மீது இயங்குகிறது. ஒரு சக்கரம் – தலைவர்கள் ஆதாயம், இன்னொரு சக்கரம் திராவிடத் தலைவர்களிடையே பகை! பயணம் முழுவதும் ஊழலோ – ஊழல்!

தமிழ்த்தேசியர்களே,

தேர்தல் என்பது ஒரு சனநாயக வழிமுறை! அதேவேளை, அதற்கான எல்லைகளை இந்திய அரசு வரையறுத்து வைத்துள்ளது. தேர்தல் மூலம் – தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுவிடலாம் என்று எண்ணாதீர்கள்! அவ்வளவு எளிதாக இந்திய ஏகாதிபத்தியம் – தான் பறித்த உரிமைகளை விட்டுக் கொடுக்காது. இந்திய ஏகாதிபத்தியத்தின் இருபெரும் கட்சிகள் பா.ச.க.வும் காங்கிரசும்! இவை “பாரதமாதா”வின் பிள்ளைகள்; தமிழன்னையின் பகைவர்கள்.

தமிழ்த்தேசிய உரிமைகள் மீட்பு – கோடிக்கணக்கான தமிழர்களின் எழுச்சியில்தான் கைகூடும்! அதற்குத் தமிழ்த்தேசியம் என்றால் என்ன, இழந்த உரிமைகள் எவை, அவற்றை எப்படி மீட்பது, அதற்கான வெகுமக்கள் போராட்ட உத்திகள் யாவை என்பவற்றையெல்லாம் தலைவர்களும், முன்னணிச் செயல்பாட்டாளர்களும் கற்றறிய வேண்டும். அவற்றை மக்களின் குரலாக மாற்ற வேண்டும்.

தத்துவம், அரசியல், பொருளியல், பண்பியல், சூழலியல் என அனைத்துத் துறையிலும் தமிழ்த்தேசிய உரிமைப் போராட்டங்கள், வெகுமக்கள் போராட்டங்களாக – சனநாயகப் போராட்டங்களாக வீச்சுப் பெற வேண்டும்!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
*பேச*: 7667077075, 9443918095
*முகநூல்* : http://www.fb.com/tamizhdesiyam
*ஊடகம்* : http://www.kannottam.com
*இணையம்* : http://www.tamizhdesiyam.com
*சுட்டுரை* : http://www.twitter.com/Tamizhdesiyam
*காணொலிகள்* : youtube.com/Tamizhdesiyam
=====================================

பிரபாகரன் என்ற தமிழினத்தின் அடையாளம்

அன்பான என் தாய்த்தமிழ் உறவுகளே..!

அன்மைய நாட்களில் தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஒளிப்படங்கள் முகநூலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது பின்புலத்தில் இலங்கை புலனாய்வுத் துறையினரும் – இந்தியாவின் புலனாய்வு துறையான RAW அமைப்பும் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது உலகத்திலேயே அதிகப்படியாக பயன்படுத்தப்படும் ஒளிப்படங்களில் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் ஒளிப்படங்கள் முதன்மை பெற்றுள்ளதாக முகநூல் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது தெரிவித்துள்ளனர். அதாவது சுமார் 2 கோடி பேர்கள் முகநூலில் தேசியத் தலைவரின் ஒளிப்படத்தை பயன் படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய புலனாய்வு பிரிவான RAW அமைப்பு தங்களிடம் இருந்து பெற்றதாக முகநூல் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் பின்னணியில் விசாரித்த பொழுது அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதாவது தமிழர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டுமாயின் முதலில் இந்த தலைமுறையினரை மழுங்கடிக்க வேண்டும். இந்தத் தலைமுறையினரை மழுங்கடிக்க வேண்டுமாயின் இந்த தலைமுறையினரின் மனதில் இருந்து தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வரலாற்று தடத்தை அழிக்க வேண்டும். வரலாற்றுத் தடங்களை அறிய மிக முக்கிய ஊடகமாக இருப்பது இந்த முகநூல். எனவே முகநூல் ஊடாக வரும் தேசிய தலைவரின் வரலாறுகள் மற்றும் தேசியத்தலைவரின் ஒளிப்படங்கள் ஆகியவற்றை அழிப்பதன் மூலம் கணிசமான அளவு அதாவது 48 சதவீதமான போராடும் தமிழர் தலைமுறையின் மனவெழுச்சியை உடைக்க முடியும் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே தமிழர் தலைமுறையினர் இதனை கருத்தில் கொள்ளவும். அதேபோல் இந்தப் பிரச்சினையை எவ்வாறு சீர் செய்ய முடியும் என்பதை முகநூலில் அந்த முக்கிய அதிகாரியிடம் வினவி இருந்தேன். அதற்கு அவர் கூறிய பதில் முகநூலின் நிறுவனர் மார்க் அவர்களை நேரடியாக தொடர்புகொண்டு இந்த விடயத்தை தெளிவுபடுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.

மின்னஞ்சல் அனுப்பும் முறை கீழே தருகின்றேன்👇

Dear @Mark Zuckerberg !

Prabhakaran Is Tamils Community Standard

National Leader of Tamils Hon V. Prabhakaran Identity of the Tamils.

என குறிப்பிட்டு உங்கள் உங்கள் கருத்தை மின்னஞ்சல் ஊடாக முகநூல் நிறுவனர் மார்க் அவர்களுக்கு தெரிவிக்க முடியும். மின்னஞ்சல் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுக்களாகவோ அனுப்ப முடியும்.

மின்னஞ்சல் அனுப்பக்கூடிய மொழிகள்
ஆங்கிலம், பிரான்சு, ஸ்பானிஸ்

Mark Zuckerberg
Phone Number: +1 650 543 4800
Email ID: zuck@fb.com

எனவே இதனை கவனத்தில் கொண்டு புலம்பெயர் அமைப்புக்கள் அந்தந்த நாட்டில் உள்ள ஆவணக் காப்பீட்டு மையங்கள் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். காரணம் ஒரு இனத்தின் அடையாளம் அந்த இனத்தின் வரலாற்று ஆவணம் அதனை அழிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

நன்றி,
புகழ் மாறன்.

ஒழியட்டும் ஒற்றை கட்சி ஆட்சி முறை !

தேசியக் கட்சிகள் என்பவை இந்தியாவின் அமைப்பு முறைக்கே எதிரானவை. நாடு கூட்டாட்சி நாடு; ஆனால் ஆட்சி முறை ‘ஒரு கட்சி ஆட்சி முறை’ என்றால் இது முரண் ஆகாதா? நாட்டில் பல கட்சிகள் உள்ளன. ஆனாலும் நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது மட்டும், மக்களின் மனதில் தேசியக் கட்சிதானே வெல்லும் என்ற தவறான பொதுப் புத்தி உருவாகிவிடுகிறது. இது அரசியல் அறிவற்ற பாமர மக்களிடம் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டத் தவறானக் கருத்தியல்.

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதனை இந்திரா காந்தியின் வருகைக்கு முன்பு, இந்திரா காந்தியின் வருகைக்கு பின்பு என்றே பிரிக்க வேண்டும். காந்தி, நேரு, காமராசர், கிருபாளினி, லால்பகதூர் சாஸ்திரி, மொராஜி தேசாய், ஜெயப்பிரகாசு நாராயணன் உட்பட பலரும், இந்திய மத்திய அரசில் ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்தவரை இந்தியா கூட்டாட்சி தத்துவத்தை முழுதாக ஏற்று நடந்தது.

ஆனால் இந்திரா காந்தியின் வருகைக்கு பின்புதான், மத்திய அரசும் அதன் அதிகாரமும் இந்திய கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கின்ற வேலையைச் செய்யத் தொடங்கியது. இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக வருவதற்கு முன்பு வரை 60-க்கும் மேலான அதிகாரங்கள் மாநில அரசிடம் இருந்தன. ஆனால் இன்று 19 அதிகாரங்கள்தான் மாநில அரசுகளிடம் இருக்கின்றன. இந்த அதிகார அத்துமீறலை மாநில கட்சிகள் கண்டு கொள்ளாமல் இருந்ததற்கான காரணம் ‘சுயநல அரசியல்’ மட்டுமே.

திமுகவின் ஆட்சியில் கச்சத்தீவை இழந்ததில் தொடங்கி, அதிமுகவின் ஆட்சியில் நீட் தேர்வை புகுத்தியது வரை, மாநிலங்களின் அதிகாரத்தின் மீதான, மத்திய அரசின் அத்துமீறல்கள் அனைத்திற்கும் காரணம் மாநிலக் கட்சிகளின் சுயநல அரசியல்தான். பள்ளிக்கூடத்தின் வகுப்பறையில் இருக்கும் வரை குழந்தைகள் வாய்மூடி ஊமைப்போல உட்கார்ந்துவிட்டு, வீட்டிற்கு வந்தபின் எப்படி அலப்பறை செய்யுமோ, அப்படித்தான் கடந்த 50 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஊமைப்போல உட்கார்ந்து இருந்துவிட்டு, தமிழ்நாட்டின் மேடைகளில் மட்டும், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்று உதாருவிட்டனர்.

தேசியக் கட்சிகளோடு கூட்டணி வைத்து, மத்திய அமைச்சர் பதவியை பிச்சை எடுத்து, கோடிக்கோடியாக கொள்ளை அடித்ததை தவிர, திராவிடக் கட்சிகள் இதுவரை வேறெந்த தாக்கத்தையும் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தவில்லை. அமைச்சரவையில் பங்கெடுத்த காலங்களில் ஒரே ஒரு மாநில அதிகாரத்தையேனும் மீட்டெடுத்தோம் என்று திமுக, அதிமுக கட்சிகளால் சொல்ல முடியுமா?

திமுகவின் துணையோடுதான் 18 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இருந்தன காங்கிரஸ், பாஜக கட்சிகள். ஆனால் அக்காலத்தில் மாநிலங்களுக்கான எந்தவிதமான அதிகாரப் பரவலையும் திமுக வென்றெடுக்கவில்லை. அதிமுக துணையோடுதான் 10 காங்கிரஸ், பாஜக கட்சிகள் ஆட்சியில் இருந்தன. அப்பொழுதும் ஒரு மாநில உரிமையைக் கூட இவர்கள் மீட்டெடுத்த வரலாறு இல்லை. காரணம் இவர்கள் செய்த ஊழல்கள். மத்திய அரசை விரல் நீட்டிக் கேள்விக் கேட்கும் துணிச்சல் திமுக, அதிமுக கட்சிகளில் ஒருவருக்கும் இல்லை.

இவற்றுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே நாம் தமிழர் கட்சி, இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கோரிக்கையை முன்வைத்து பரப்புரை செய்து வருகிறது. ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிப்பு என்ற வலிமையான கோரிக்கையை சீமான் மேடைதோரும் பேசுகிறார். தேசியக் கட்சிகள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை என்பதே சீமான் அவர்களின் வாதம். இது இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு ஒத்துவராது என்று எவரேனும் சொல்வரெனில், அமெரிக்கா ஒரு கூட்டாட்சி நாடு என்பதனையும், அமெரிக்க பேரரசில் உள்ள எல்லா மாகாணங்களிலும் சுயாட்சி அதிகாரம் உள்ளது என்பதையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

எல்லா மாகாணங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்கு செலுத்திதான் ஒரு அதிபரை அமெரிக்கா தேர்வு செய்கிறது. அதேசமயத்தில் எந்த மாகாணத்தின் மீதும் அத்துமீறி அமெரிக்க அதிபரால் அதிகாரம் செலுத்த முடியாது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனி சட்ட நடைமுறைகள் உள்ளன. ஆனால் இந்தியாவின் பிரதமர் எந்த மாநிலத்தின் அதிகாரத்தின் மீதும் அத்துமீறி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் நிலவுவது பேராபத்தானது.

‘அளவற்ற அதிகாரம், எல்லையற்ற ஊழலை வளர்க்கும்’ என்றார் லார்டு ஆக்டன். மோடி போன்ற தகுதியற்ற தனிமனிதரிடம் தரப்படும் அளவிற்கு அதிகமான அதிகாரம் நாட்டுக்கு ஆபத்தை மட்டுமே உருவாக்கித் தரும். இந்த அளவற்ற அதிகாரமே நாட்டை விற்கபனை பண்டமாக மாற்றி வருகிறது. எனவே ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள, இனங்களுக்கான அரசியல் மீட்சிபெற வேண்டிய காலமிது.

அந்தந்த இனத்தின் தலைவர்கள் அந்தந்த நிலத்தை ஆளட்டும். எல்லா இனங்களின் தலைவர்களும் கூடிப் பேசி, சுழற்சி முறையில் பிரதமரைத் தேர்வு செய்து இந்தியாவை ஆளட்டும். உண்மையான கூட்டாட்சி தேசம் மலரட்டும்…

-பேராசிரியர் ஆ.அருளினியன்

தமிழினத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு தமிழ்த்தேசியமே மாற்றுத் திட்டம்!

“தமிழினத்தின் இன்றைய நெருக்கடிகளுக்கு தமிழ்த்தேசியமே மாற்றுத் திட்டம்!” என வட அமெரிக்காவில் நடைபெற்ற “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” கருத்தரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேசினார்.

“வட அமெரிக்கத் தமிழர்கள்” அமைப்பின் சார்பில் வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைக்கப்படும் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” தலைப்பிலான தொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காகவும், வட அமெரிக்காவில் செயல்பட்டு வரும் “இலங்கை தமிழ்ச் சங்கத்தின்” 41ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்பதற்காகவும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார். வாசிங்டன், செயின்ட் லூயிஸ், மின்னாபோலிஸ், நேவார்க், சைரக்கஸ், நியூஜெர்சி, வட கரோலினா, அட்லாண்டா, சியாட்டில், டல்லஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றுகிறார்.

கடந்த 2018 அக்டோபர் 26ஆம் நாள், வட அமெரிக்காவின் மிசோரி – செயிண்ட் லூயிஸ் பால்வின் பாயிண்ட் அரங்கில் “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” – தொடர் கூட்டங்களின் முதல் நிகழ்வாக, “பறிபோகும் தமிழர் தாயகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

திரு. வீரபாண்டியன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வின் தொடக்கமாக, ஐயா பெ. மணியரசன் அவர்கள் குறித்த குறும்படம் ஒளிபரப்பானது. இதனை யடுத்து, ஐயா பெ. மணியரசன் கருத்துரையாற்றினார். அவர் பேசியதன் சுருக்கம் :

“வட அமெரிக்கத் தமிழ் மக்களோடு கலந்துரையாடும் வகையில், எனக்கு இக்கூட்டங்களில் பங்கெடுக்க வாய்ப்பை வழங்கிய உங்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வட அமெரிக்காவின் இந்த பால்வின் நகரத்தில் – இந்த குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் திரண் டிருக்கும் தமிழ் உள்ளங்களுக்கு எனது வாழ்த்துகள்!

கடந்த காலங்களைவிட தமிழின உணர்வு, தமிழின உரிமை உணர்ச்சி தமிழ்நாட்டிலும் அதிகமாகியுள்ளது; தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் அதிகமாகியுள்ளது.

புலத்தில், இந்த உரிமை உணர்வு இன்னும் கூடுதலாக இருக்கிறது என்றும் சொல்லலாம். அதற்குக் காரணம், நம் தமிழரிடையே உள்ள தாயகப் பற்று, தாய்மொழிப் பற்று, உரிமை குறித்த கூடுதலான அக்கறை ஒருபக்கம்; அதுவும், அயல் நாட்டில் வாழும் போது, அவர்கள் தங்கள் இனப்பெருமிதங்களையும், தங்கள் மொழிப் பெருமை களையும் கூறும்போது, நம் மனம் நம் தாயகத்தின் பெருமிதங்களைத் நாடிச் செல்லும்! நம் தாய்மொழியின் மீதும், தமிழர் தாயகத்தின் மீதும் கூடுதல் அக்கறை செலுத்த உளவியல் வழி ஏற்படுத்தும்!

இன்றைக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடந்த காலங்களை விட அதிகளவு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். ஆட்டு மந்தை, மாட்டு மந்தை போல கட்சிகள் – நம் மக்களை ஓட்டு மந்தையாகக் கருதிய காலம் கடந்துவிட்டது. கட்சிகளைத் தாண்டி, உயிர் துடிப்புள்ள போராட்டங் களை தமிழ்நாட்டு மக்கள் அங்கே நடத்திக் கொண் டுள்ளனர்.

தமிழர்களின் பண்பாட்டு உரிமையான ஏறுதழுவல் உரிமை பறிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டின் மிகப் பெரும் கட்சிகளாக விளங்கும் தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளின் தலைவர்களால் அதை மீட்டுக் கொடுக்க முடியவில்லை. அவர்களது முயற்சிகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை. இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அவர்களது குரலுக்கு செவி சாய்க்கவில்லை!

ஆனால், இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் சல்லிக்கட்டு சட்டம் வந்தால்தான் களைவோம் என்ற உறுதியோடு, சென்னை கடற்கரையில் இலட்சக் கணக்கில் கூடினார்கள். தமிழ்நாடெங்கும் பல்லாயிரக் கணக்கில் கூடினார்கள். சல்லிக்கட்டு விளையாட்டு நடை பெறாத கோவையில்கூட பல்லாயிரக்கணக்கில் கூடினார்கள். அவர்களை இணைத்தது தமிழின உணர்ச்சி!

ஏறுதழுவல் எழுச்சியை, எந்தக் கட்சியும் பின்னணி யிலிருந்து நடத்தவில்லை! தன்னெழுச்சியாக அது நடந் தது. காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தமிழினத்தின் எழுச்சியாக அது அமைந்தது. கட்சிகள், பின்னால் வந்து இதை ஆதரித்தன.

காவிரிப்படுகையின் நெடுவாசலில் – கதிராமங் கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டம் அப்படித் தான் தன்னெழுச்சியாக நடக்கிறது. அதை, பிற கட்சிகள் பின்னால் வந்து ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது. கதிராமங்கலத்திற்கு நாங்கள் போனபோது, எங்களைக் காவல்துறையினர் கைது செய்தார்கள்.

அப்படித்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில், எந்தக் கட்சிப் பின்னணியும் இல்லாமல், மக்கள் ஆண்களும், பெண்களுமாக ஐம்பதாயிரம் பேர் தன்னெழுச்சியாக ஒன்றுகூடிப் போராடினார்கள். துப்பாக்கிச்சூடு நடைபெற்று, 13 மனித உயிர்களை பலிவாங்கியது தமிழ்நாடு அரசு! துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாளே மே 23 அன்று, நாங்கள் தூத்துக்குடி சென்றோம்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவி ஸ்னோலின் வீட்டிற்குச் சென்றோம். ஸ்னோலினின் அம்மா, பெரியம்மா போன்றோர் கதறிக் கொண்டு, ஓய்வின்றி அழுது கொண்டிருந்தனர். தமிழ்நாடே உங்கள் மகளுக்காக அழுது கொண்டிருக்கிறது என்றுகூறி அவரை நாங்கள் தோற்ற முயன்றோம். முடியவில்லை! அந்த சூழலிலும்கூட, ஆலையை நிரந்தரமாக மூடாமல் எங்கள் பாசமிகுப் பிள்ளையின் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என ஸ்னோலின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். அந்த வீர உணர்ச்சிதான், தமிழ்நாட்டில் இன்றைக்குள்ள மாற்றம்!

கட்சிகளால் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, மக்கள் தாங்களாகவே களத்தில் இறங்கிப் போராடும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. 2009ஆம் ஆண்டு, தமிழீழ இன அழிப்புப் போருக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் இது!

பழைய காலத்தில், கிழக்கிந்தியக் கம்பெனிகள் நம் மண்ணை சூறையாடியதைப் போல், இன்றைக்கு வடக்கிந்தியக் கம்பெனிகள் வேட்டையாடிக் கொண் டிருக்கின்றன. மண்ணை மீட்கப் போராடிய வேலு நாச்சியார், புலித்தேவன், மருது சகோதரர்களை எப்படி அழித்தார்களோ, அதைப் போல போராடும் தமிழ் மக்களை காவல்துறை கொண்டு ஒடுக்குகிறார்கள். நம் காவல்துறையே அவர்களுக்கு இராபர்ட் கிளைவ் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தில்லியில் “சனநாயக” முறைப்படி அமைக்கப்பட்ட “வைசிராய்”களை வைத்து, நம்மை ஒடுக்குகிறார்கள். கிழக்கிந்தியக் கம்பெனியைவிட மோசமாக வடக்கிந்தியக் கம்பெனிகளால் – இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்போது ஐட்ரோகார்பன் எடுப்பதற்காக தமிழ் நாட்டின் காவிரிப்படுகையையும், கடற்கரையையும் ஏலம் விட்டுவிட்டார்கள். பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியை 3 வட்டாரங்களாகப் பிரித்து, அதில் இரண்டை ஸ்டெர்லைட் “வேதாந்தா”வுக்கும், இன்னொன்றை ஓ.என்.ஜி.சி.க்கும் கொடுத்திருக்கிறார்கள்.

“இனிப்பு கடை” என்றால் எல்லா வகை இனிப்புகளும் இருப்பதுபோல், “ஐட்ரோ கார்பன்” என்று பொதுப் பெயர் வைத்து எல்லாவற்றையும் எடுக்கிறார்கள். மீத்தேன் என்றால் எதிர்ப்பு வரும் என்பதால், “ஐட்ரோ கார்பன்” என்ற பொதுப் பெயர் வைக்கப்பட்டு, பெட்ரோலியம் – மீத்தேன் என அவர்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். நம்முடைய பாசன நிலங்கள் பாழ்பட்டுப் போகும் நிலை வரப்போகிறது!

இந்திய அரசமைப்புச் சட்டப்படி “நிலம்” என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் இந்திய அரசு கவலை கொண்டதாகவே தெரிகிறது. அதைத் தட்டிக் கேட்கும் துணிவு தமிழ்நாடு அரசுக்கும் இல்லை!

இவற்றையெல்லாம் எதிர்த்துக் கூடுவதையே சட்டவிரோதம் என்கிறது தமிழ்நாடு அரசு! எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் பக்கத்து வீடு பாதிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கு ஆதரவாக நின்றால் கூட நம்மை “வெளியாள்” என்று தனிப்பிரித்து, கைது செய்கிறது தமிழ்நாடு காவல்துறை! பக்கத்து வீட்டுக்காரனுக்கு நாங்கள் “வெளியாள்” என்றால், எங்கள் மண்ணில் வந்து கால் பதிக்கும் நீங்கள் யார்? காவல்துறை யார்? வேதாந்தா யார்? இந்திய அரசு யார்?

இப்படி நம் மண்ணில் நாசகரத் திட்டங்கள் வந்து கொண்டுள்ள நிலையில், தமிழர் தாயகமே வெளி மாநிலத்தவரால் பறிபோய்க் கொண்டுள்ளது. தமிழ் நாட்டின் எல்லா இடங்களிலும் வெளியார் குவிந்து கிடக்கிறார்கள். தேங்காய் பறிப்பிலிருந்து வயல்வெளி வேலைகள் தொடங்கி, அனைத்து வேலைகளிலும் வெளி மாநிலத்தவர்தான் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை!

இந்தியாவின் பிற மாநிலங்களில் இவ்வாறான நிலை இல்லை. மண்ணின் மக்களுக்கே வேலை என அங்கெல்லாம் தனிச் சட்டங்கள் இயற்சி வைத்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல விசாவுக்கு நிகராக – உள் அனுமதிச் சீட்டுமுறை வைத்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் என்ன சட்டம் இருக்கிறது தெரியுமா?

கடந்த 2016 செப்டம்பரில் அன்றைய முதலமைச்சர் செயலலிதா இருந்தபோது, நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு சட்டத்தை முன்மொழிந்தார். தமிழ்நாடு அரசின் பணிகளுக்கு இந்தியாவின் எந்த மாநிலத்தவரும் வரலாம், பிற மாநிலத்தவர் மட்டுமின்றி பாக்கித்தான், நேப்பாளம், டான்சானியா போன்ற பிற நாட்டவரும் வரலாம் என்றொரு சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

இப்படி அயலாரை கணக்கில்லாமல் விட்டதால்தான், அசாமிலும், திரிபுராவிலும் மண்ணின் மக்கள் சிறுபான் மையினராகிவிட்டார்கள். அதற்காகத்தான், இப்போது அசாமில் மண்ணின் மக்கள் யார், வெளியார் யார் என்பதற்கான “குடிமக்கள் கணக்கெடுப்பு” நடத்தப் பட்டு, அதில் 40 இலட்சம் பேர் அயலார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அசாமின் பா.ச.க. முதல்வர் அந்த 40 இலட்சம் பேருக்கு எவ்வித உரிமைகளையும் வழங்க முடியாது, ரேசன் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கான தேவைகளை மட்டும்தான் செய்ய முடியும் என்கிறார்.

ஆனால், தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியல் உண்டா? தி.மு.க. – அ.தி.மு.க.வில் இப்படிப் பேசும் தலைவர்கள் உண்டா? அடைந்தால் திராவிட நாடு என்று பேசியவர்கள், ஏன் மண்ணின் மக்களுக்கு வேலை என்று சட்டம் இயற்றி, அதை உறுதி செய்யவில்லை?

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு, தனிநபர் பகை அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன.

தமிழ் மக்களின் உளவியல், தற்சார்பு உணர்வு, தன்மான உணர்வு ஆகியவை இக்கட்சிகளால் சீரழிக்கப்பட்டுள்ளன. அதனால்தான், நம் மக்கள் ஆங்கில மோகத்திலும், இந்தி மோத்திலும் வீழ்ந்து கிடக்கிறார்கள். இன்றைக்கு, தமிழ்நாட்டில் தமிழ்வழிப் பள்ளிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. வீதிக்கு வீதி புதிதாக – இந்திய அரசின் நடுவண் கல்வி வாரியப் (சி.பி.எஸ்.இ.) பள்ளிக் கூடங்கள் திறக்கப்படுகின்றன. இங்கே வட அமெரிக்கா வில் அப்படி செய்ய முடியுமா?

அமெரிக்காவில் இங்குள்ள மாகாணப் பாடத் திட்டத்தை மீறி நாம் ஏதாவது செய்திட முடியுமா? பெரிய ஏகாதிபத்தியமாக விளங்கினாலும், இப்படி கீழே அதிகாரத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள் அல்லவா? இதைத்தான் நாம் கேட்கிறோம்!

உலகத்திலேயே கூட்டாட்சி குறித்து சிறப்பாகப் பேசப்பட்ட நாடு அமெரிக்காதான்! அமெரிக்க ஐக்கிய நாட்டை உருவாக்கும்போது ஹாமில்டன், பெஞ்சமின் பிராங்களின், தாமஸ் ஜெபர்சன் போன்ற அறிஞர்கள் அங்கிருந்தனர். ஒரு தேசிய இனம் தனக்கான சொந்த அரசு அமைத்துக் கொள்ளும் தன்னுரிமை (Right to Self Determination) என்பதைக் கொள்கையளவில் முதன் முதலாக இங்குதான் பேசினார்கள். பல அறிவாளர்கள் இங்கே இருந்தனர்.

“அமெரிக்க ஐக்கிய நாடுகள்” உருவாவதற்கு முன்பே, இங்கிலாந்திலே 15ஆம் நூற்றாண்டு வாக்கில், ஆங்கிலேயர், ஸ்காட்லாந்தியர், வேல்ஸ் மற்றும் அயர்லாந்து இனத்தவர் ஆகியோரால் ஒரு கூட்டாட்சி உருவாகி, அதற்குப் பல்வேறு பெயர்களை சூட்டினர். கடைசியாக சூட்டப்பட்ட பெயர்தான் “ஐக்கிய இராச்சியம்” (யுனைடெட் கிங்டம்). அதுபோல், இங்கு “அமெரிக்க ஐக்கிய நாடுகள்” (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா)! அதாவது, நாட்டின் பெயரில் எந்த இனத்தின் பெயரும் வந்துவிடக்கூடாது என்ற பொது சிந்தனை இங்கிருந்தது.

இதை வைத்துதான் இரசியாவில் இலெனின், “சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்” (யூனியன் ஆப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக்ஸ்) என்று பெயரிட்டார். இந்தியாவிலும் அரசமைப்புச் சட்டத்தில் “அரசுகளின் ஒன்றியம்” (Union of States) என்று இந்தியாவைக் குறிப்பிட்டனர். இப்போது, அவற்றையெல்லாம் காலி செய்து ஒற்றையாதிக்கத் திணிப்பு நடந்து கொண்டி ருக்கிறது.

நம்முடைய வளமான தமிழர் மரபைக் கொண்டு, இதை நாம் எதிர்க்க வேண்டும். நமக்கு சங்க காலத்திற்கு முன்பிருந்தே “தேசம்”- “தேசியம்” குறித்த சிந்தனைகள் இருந்தன. தமிழ்நாடு, தமிழகம் என்பது சேர, சோழ, பாண்டியர் காலத்திலேயே நம் இலக்கியங்களில் குறிப் பிடப்பட்டுள்ளது. மொழியை வைத்து தேசத்தை அடை யாளம் காணும் சிந்தனை முறை இங்கிருந்தது.

எனவே, நமது மண்ணுரிமையைக் காக்க நாம் புதிய விழிப்புணர்வைப் பெற்றாக வேண்டும். அரசியல், பொருளியல், பண்பாடு, அறம் என அனைத்திலும் ஒரு மாற்றுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு – தமிழ்த் தேசியமே அந்த மாற்றுத் திட்டம்! அது குறித்த சிந்தனைகளை நாம் மேலும் விரிவாக்கிக் கொள்ள வேண்டும்”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: http://www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: http://www.kannottam.com
இணையம்: http://www.tamizhdesiyam.com

தமிழ்தேசியத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்கள்

80 -களில் வெளிவந்த பெரும் படங்களில் குறிப்பாக பாக்கியராஜ் ராமராஜன் போன்றோரின் படங்களில் எம் ஜி ஆர் நடித்த படத்தின் ஒரு சிறிய காட்சியாவது இடம் பெற்றுவிடும். குறைந்தபட்சம் அவரின் புகைப்படமாவது வலிந்து காட்டப்படும்.

அப்போதைய கால கட்டத்தில் எம் ஜி ஆரின் ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த தந்திரம் அவர்களுக்கு தேவைபட்டது. கதையின் நாயகன் கூட எம் ஜி ஆரின் ரசிகனாக காட்ட வேண்டும் என்பதில் அதிகம் மெனக்கெட்டு காட்சிகளை வசனங்களை அமைந்திருப்பார்கள். அதில் பயனையும் பெற்றிருக்கிறார்கள்.

95 பிறகான படங்களில் அது ரஜினிக்கு தாவியது பல இளம் ஹூரோக்கள் அவரின் ஆசிப்பெற்று உள்ளே வந்ததாகவே காட்டிக் கொண்டார்கள். ரஜினியின் ரசிகர்களை எப்படியேனும் தம் பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதில் பலர் போட்டியிட்டு அதில் வெகு சிலரே வென்றார்கள்.

2005 க்கு பிறகான படங்கள் அது மெல்ல அஜீத் விசய் என நகர்ந்து 2009 க்கு பிறகான திரைப்படங்கள் வேறு மாதிரியான களத்தில் பயணிக்கிறது…

ஆம்

இளம் நடிகர்கள் சிவகார்த்திகேயன் கார்த்திக் முதற்கொண்டு விஜய் சூர்யா போன்ற பெரும் நடிகர்கள் கூட பலர் இன்று அன்றை போல் எம் ஜி ஆர் ரஜினி என இராமல் காட்சி அமைப்புக்கும் வசனத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்… குறிப்பாக அண்ணன் சீமான் பேசிய பேசி கொண்டிருக்கிற தமிழ்தேசிய அரசியலின் தாக்கம் காட்சிகளில் வசனங்களில் இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள்.

விஜயின் சமீபத்திய படங்களான கத்தி மெர்சல் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் சிவகார்த்திகேயனின் சீமராசா என பல படங்கள் உதாரணமாக சொல்லலாம்.

அண்ணன் சீமான் பேசும் தனிநபர் புகழ்ச்சியின் மீதான மோகத்தை அரசியலில் இருந்து விரட்டப்பட வேண்டும் நல்ல தத்துவங்களை கொள்கைகளை முன்னிருத்தி அரசியல் செய்யும் சூழல் விளைந்து நிறைந்து பரவ வேண்டும் என்ற பேச்சின் வீச்சு அரசியலை தாண்டி சினிமாவையும் தாக்கத்திற்குள் தள்ளியிருக்கிறது.

பொதுவாக சினிமா வசனங்களே அரசியல் மேடைகளில் எதிரொலித்த நிலைமாறி இன்று அண்ணன் சீமானின் மேடை முழக்கங்களை நல்ல கொள்கைகளை தத்துவங்களை திரைப்படங்கள் ஏற்று நிற்பது வரலாற்றில் பெரும் மாற்றம்.
நல்லவைகளின் தூயவைகளின் துவக்கம்.

தமிழர் மண்ணில் எல்லாம் இனி பிரபாகரனிசம் தான். சீமானிசம் தான். அரசியலின் அழுக்கை வெளுக்க வந்த பெரும் படை நாம் தமிழர். தமிழினம் மீள்கிறது.

சரவணன் தமிழன்

தெலுங்கு ஆதிக்க சாதிகளில் வைகோவின் லாபி!

வைகோ மிக ஆபத்தான வேலையை இந்த மண்ணில் செய்துகொண்டு இருக்கிறார். ஒரு பக்கம் தமிழீழ விடுதலை ஆர்வாலர் என்பதுபோல் காட்டிக்கொண்டு ஈழப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான எல்லா உதவிகளையும் இந்திய உளவுத்துறைக்கு இதுவரை செய்துகொடுத்தார். இன்று அப்பணி திருமுருகன் காந்தியிடம் கை மாறிவிட்டதால் வேறொரு அஜண்டாவை இப்பொழுது கையில் எடுத்துள்ளார் வைகோ.

ஆயிரம் ஆண்டுகளாகவே தமிழர் நிலத்தில் இரண்டு இனங்கள்தான் அதிகாரத்தை செலுத்திக் கொண்டு இருக்கின்றன. ஒன்று ஆரிய பார்பப்பனர்; மற்றொன்று தெலுங்கர். யார் ஆட்சியில் இருந்தாலும் இவ்விரு இனங்களுக்கிடைய ஒரு பரஸ்பர புரிதல் இருந்துகொண்டேதான் வருகின்றது. அதற்கு ஒரு மரபார்ந்த தொடர்புண்டு நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில்தான் ஆரியப்பார்பனர்கள் தமிழர் நிலத்திற்குள் நுழைந்தார்கள். நாயக்கர்களின் அரசியல் ஆலோசகர்களாகவும் உச்ச அதிகாரம் பெற்றவர்களாகவும் வலம்வந்தார்கள்.

அதற்கு நன்றிக்கடனாகத்தான் இன்றுவரை ஆரியர்கள் அதிகாரத்திற்கு வரும்போதெல்லாம் தெலுங்கர்கள் உயர்பதவிகளை இம்மண்ணில் அடைகிறார்கள். இன்றும் தமிழ்நாட்டின் எல்லா துறைகளிலும் வலுவான அதிகாரத்தை செலுத்துவது ஆந்திராவை சார்ந்த அரசியல்வாதிகள்தான். சென்னை தொடங்கி வேலூர் வரை ஏராளமான நிலம் நிறுவனம் வணிகம் என அனைத்தும் தெலுங்கு அரசியல்வாதிகளே வாங்கி குவித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் எல்லா துறைகளிலும் ஆந்திர தெலுங்கர்களே முதலீடுகளை கொட்டி வருகிறார்கள்.
எ.கா. தமிழ் சினிமா துறை முழுக்க முழுக்க தெலுங்கர்களின் கைகளிலேயே உள்ளது.

இதற்கும் மேலாகா ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் வாழ்வோடு தொடர்புடைய ஹெரிடேஜ் பால் மற்றும் ஹெரிடேஜ் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடையது. சந்திரபாபு நாயுடு தனது மொத்த முதலீட்டையும் தமிழ்நாட்டில்தான் கொட்டி இருக்கிறார். அதனை பாதுகாக்கும் பொருட்டு தமிழ்நாட்டின் அரசயலையும் தனது கட்டுபாட்டிற்கு கொண்டுவர இன்று தனது இடைத்தரகராக வைகோபால்சாமி நாயுடுவைதான் நியமித்து இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

தமிழீழ விடுதலைப்பற்றியோ தமிழின உரிமைப்பற்றியோ திராவிட அரசியலைப்பற்றியோ இனி இம்மண்ணில் பேசினாலும் எடுபடாது என்பதை புரிந்துகொண்ட வைகோ இறுதியாக தன் சாதிக்கு உண்மையாக இருக்க வேண்டுமென முடிவெடுத்துவிட்டார். அதனால் அவர் கணக்கச்சதமாக தனது நாயுடுகார் அரசியலை நகர்த்த தொடங்கிவிட்டார்.

ஏற்கனவே தெலுங்கு சின்னமேளம் சாதியை சேர்ந்த கருணாநிதி நீண்ட காலமாக தமிழ்நாட்டின் அதிகாரத்திற்குள் நிலைபெற்றதை தெலுங்கு ஆதிக்க சாதிகளான நாயக்கர்களுக்கும் நாயுடுகளுக்கும் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. இருந்தாலும் கருணாநிதி தெலுங்கு பற்றோடு பல தில்லுமுல்லுவை இம்மண்ணில் செய்து கொடுத்ததால் ஆதிக்க தெலுங்கர்கள் இதுவரை மவுனமாக இருந்தார்கள்.

எ.கா. கருணாநிதி ஆட்சி காலத்தில் தெலுங்கு மைனாரிட்டிக்கு காவல்துறைப் பணியில் முன்னுரிமை வழங்க வேண்டுமென அவர் கொண்டுவந்த சட்டம்.

தெலுங்கு மைனாரிட்டிகள் கல்வி நிறுவனம் தொடங்கினால் வரிவிலக்கு

தெலுங்கு சாதிகளையெல்லாம் தமிழ்சாதிகளின் பட்டியலில் கொண்டுவந்தது.

சட்டநாதன் கமிசனின் அறிக்கையில் திட்டமிட்டு தெலுங்கு சாதிகளைப் புகுத்தி இடஒதுக்கீட்டில் சலுகைகளைப் பெற வைத்தது.

இப்படி பல பித்தலாட்டங்களை கருணாநிதி செய்ததால்தான் தெலுங்கு சாதிகளில் பிற்படுத்தப்பட்ட சாதியான சின்னமேளம் சாதியை சார்ந்த கருணாநிதியை இதுவரை நாய்க்கர்களும் நாய்டுகளும் பொருத்துகொண்டார்கள். ஆனால் அதன் நீட்சியாக ஸ்டாலின் முதல்வர் ஆவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஏனெனில் முதல்வராக உட்கார்ந்தாலும் ஸ்டாலின் யாருக்கு உண்மையாக இருப்பாரென்ற சந்தேகம் இப்பொழுது தெலுங்கு ஆதிக்க சாதிகளுக்கு வந்துவிட்டது. காரணம் கலாநிதி மாறனின் வளர்ச்சியும் அவரது ஆரிய பார்ப்பன லாபியும்தான். கலாநிதி மாறனின் மனைவி ஆரிய பாப்பாத்தி. அவர் இந்து ராமின் குடும்பம். மாறனின் வளர்ச்சி இங்கு முதலீட்டை கொட்டும் ஆந்திர அரசியல்வாதிகளுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளதால் ஸ்டாலினை ஒழித்துக்கட்டவே இன்று வைகோபால்சாமி நாயுடுவை திமுக கூட்டணிக்குள் நுழைக்க துடிக்கிறது தெலுங்கு லாபி.

இதுவரை நான் சொன்னவை எல்லாம் நடந்தவை. இனி நடக்கப்போவதையும் சொல்கிறேன் கேளுங்கள்.

தெலுங்கு சின்னமேளம் சாதியை சேர்ந்த ஸ்டாலினை வீழ்த்துவது ஒருபக்கமும் தெலுங்கு நாய்க்கர்கள் மற்றும் நாயுடுகளுக்கான அரசியலை கட்டுவது இன்னொரு பக்கமும் என்று இரட்டை வேடம் தரித்துள்ளார் நமது வைகோ நாயுடுகார். அதனால்தான் இப்பொழுது திடீரென தமிழ்நாடு முழுவதும் நாயுடுகளும் நாயக்கர்களும் தங்களின் சாதிச் சங்கங்களின் கூட்டங்களை கூட்டி ஆலோசனை பொதுக்கூட்டம் பேரணி விடுதலைபோராட்டத்தில் பங்கெடுத்த தெலுங்கு தலைவர்களின் வீரவணக்கப் பொதுக்கூட்டம் என்று அனைத்தையும் நடத்துமாறு வைகோ உத்திரவிட்டுள்ளார்.

இதன்மூலமாக ஸ்டாலினை அடக்கி வைக்கவும் கலாநிதி மாறனை மிரட்டவும் முடியுமென வைகோ நம்புகிறார். அதோடு மறைமுக அஜண்டாவாக தமிழ்தேசிய அரசியல் எழுச்சிக்கு எதிராகவும் நாயுடுகளையும் நாயக்கர்களையும் தூண்டிவிடுகிறார். தமிழ்தேசிய அரசிலை முன்வைக்கும் எவருமே இம்மண்ணில் பன்னெடுங்காலமாக வாழ்கின்ற தெலுங்கர்களை எதிரியாக பார்க்கவில்லை. ஆந்திராவில் இருந்து இம்மண்ணில் நடத்தப்படும் அதிகார அத்துமீரளையும் லாபி அரசியலையுமே தமிழ்தேசயம் எதிர்க்கிறது. ஆனால் தமிழ்தேசயமே தெலுங்கர்களுக்கு ஆபத்தானது போன்றதொரு மாயையையும் பதட்டத்தையும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் வைகோ.

மேலும் சாதி சண்டைகளை தமிழர்களுக்குள் மட்டுமே ஏற்படுத்தி குளிர்காய்ந்த தெலுங்கு லாபிக்கள் இன்று தங்கள் இனத்து சாதிவெறியையும் மெல்ல மெல்ல வெளிப்படுத்த தொடங்கிவிட்டார்கள். எ.கா. அருப்புக்கோட்டையில் மறவர்-நாய்க்கர் கலவரம். இனி தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற கலவரங்களை தூண்டும் திட்டமும் தெலுங்கு லாபிக்களிடம் உள்ளது.

இன்றுகூட நக்கீரன் கோபாலின் கைதுக்கு முதல் ஆளாக முந்திக்கொண்டு வைகோபால் ஓடுவதற்கு காரணம். ஜஸ்ட் ஒரு இனப்பற்று…

தெலுங்கு ஆதிக்கச்சாதிகளின் தலைவனாக வைகோ மாறுவது என்பது இம்மண்ணில் நிம்மதியாக வாழும் தெலுங்கர்களின் நலனுக்காக அல்ல; ஆந்திர தெலுங்கு அரசியல்வாதிகளின் நலனுக்காவே என்பதை அனைவரும் அறிக…

காய்ந்த எலுப்பை கடிக்கத் தொடங்கி இறுதியில் தன் இரத்தத்தையே ருசிக்குமாம் நாய்…..

பேராசிரியர் அருளினியன்