இந்து தெய்வம் யாதெனில்?

ஆடி மாசம் முழுக்க மாரியம்மன் எனும் மழைத் தெய்வத்திற்கான கூழ் வார்த்தல் திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கிராமங்களில் நடத்தப்படுகிறது. அது இந்த ஆண்டு கொரோனாவிற்காக நிறுத்தப்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் பொங்கவில்லை.

மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்ட போது, இந்து முன்னணியினர் பொங்கவில்லை.

ஆனால் தமிழ் மண்ணுக்கு பாரம்பரிய தொடர்பில்லாத விநாயகனின் ஊர்வலத்தை நிறுத்த சொல்லும்போது மட்டும் இந்து முன்னணி பதறுகிறது. இந்துக்களுக்கு ஊர்வலம் நடத்த உரிமையில்லையா என கொக்கரிக்கிறது.

ஏனென்றால் இந்து முன்னணி காரனுங்களைப் பொறுத்தவரைக்கும் ராமனும், விநாயகனும் ஆன்மீக அடையாளங்கள் அல்ல. அவை அரசியல் கருவிகள். ராமனையும், விநாயகனையும் வைத்து கலவரம் செய்து கட்சி வளர்த்ததுதான் அவர்களின் வரலாறு.

மாரியம்மன்கள் இந்து முன்னணி வலியுறுத்தும் பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரானதாக இருக்கின்றன. அது உழைக்கும் மக்களின் தெய்வமாக இருக்கிறது. மாரியம்மன் கோயில் பூசாரிகளாக பார்ப்பானர்கள் இருப்பதில்லை. அதனால்தான் மாரியம்மன் திருவிழாவை விட விநாயகன் சதுர்த்தியே இந்து முன்னணி கும்பலுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

விநாயகன் சதுர்த்தியை தடுக்கும் போது இந்துக்களுக்கு உரிமை இல்லையா என கதறும் சங்கிகள், மாரியம்மன் திருவிழாவிற்கு கதறுவதில்லை. காரணம் மாரியம்மன்கள் இந்துவல்ல. தமிழரின் பாராம்பரிய நாட்டார் தெய்வங்களில் ஒன்று.

Vivekanandan Ramadoss

ரெண்டு அதிசயம்

கந்தசஷ்டி கவசம் விஷயமாக ரஜினி இன்று தான் வாய் திறந்திருக்கிறார் .

இவர் எப்போதும் இப்படித்தான். எழவுக்கு வா என்றால் எட்டாம் நாள் வந்து நிற்பவர்.

அதிலும் மாநில உரிமை பிரச்சினை சம்பந்தமாக எதுவுமே பேசமாட்டார். தமிழ்நாட்டுக்கு அதிகமாக நிதியை கொடுங்க, வேலைவாய்ப்பு தொடங்க வழி செய்யுங்கள் என்று பிரதமரிடம் கேட்கமாட்டார். எப்பவுமே அவர் வழி தனி வழி தான். இருக்கட்டும்!

இரண்டாவது அதிசயம் என்னவென்றால்,பாஜகவின் முக்கிய நிர்வாகியும்,கட்சியின் முன்னாள் தலைவருமான கோவை ராதாகிருஷ்ணன் அதிமுகவை கண்டித்துப் பேசியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவது பற்றி ஏதும் கேட்கவில்லை.

ஹிந்து, இந்துக்கோயில், இந்துக்களுக்கான பிரச்சனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது பற்றி தான் கேட்டிருக்கின்றார்.

நாடாள ஆசைப்படும் ரஜினியின் கவலையும்,நாடாண்டு கொண்டிருக்கும் பாஜகவின் கவலையும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!

ராஜபக்ஷே ஹிந்து பல ஹிந்து கோவிலை உடைத்து, பல லச்சம் ஹிந்து மக்களை கொன்ற போது பிஜேபி எதுவும் பேசவில்லை…

சரி தனி ஈழம் தான் தீர்வு என்று மோடி யை அறிவிக்க சொல்லுங்க…

அப்போ பிஜேபி சொல்றது போல் தமிழர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்ற கொள்கை படி ஒரு ஹிந்து நாடு உருவாகும்..

பாரத் மாதா கி ஜே….

தமிழர்கள் இந்துக்களா? ஆரியர்கள் தமிழர்களா??

தமிழர்கள் இந்துக்களா? ஆரியர்கள் தமிழர்களா??
முருகன், சிவன் தமிழ்க்கடவுளா? இல்லை இந்து கடவுளா???
தமிழ்கடவுள்களை ஆரியப் பார்ப்பன கும்பல்கள் எவ்வாறு சூழ்ச்சி செய்து ஆரியமயமாக்கியது??

இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு மிக தெளிவாக விளக்கமளிக்கிறார் தமிழ்சைவப் பேரவை கலையரசி அவர்கள். அனைவரும் அவசியம் காணவேண்டிய மிக முக்கியமான காணொளி அனைவரும் முழுமையாக பார்க்கவும்.

https://youtu.be/mVf776kmyCs

https://bit.ly/3hidLWG

இந்து மதத்தில் தமிழ்?

தமிழன் என்றால் இந்து தான் என்று சில சங்கிகள் கூவிக்கொண்டிருப்பதை அனைவரும் கவனித்திருப்போம். அப்படியென்றால் தமிழை ஏன் இந்து மதம் ஒதுக்குகின்றது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டால் நம்மை தேசதுரோகி என்று பாராட்டுவர்.

தமிழ்ச்சொல் இருக்க வடமொழியை ஏன் பயன்படுத்த வேண்டும். சிந்திப்போம் தமிழர்களே!

கொங்கு முதலாளிகளுக்கு கடன் மூட்டை, குஜராத்தி மார்வாடிகளுக்கு 68,000 கோடி கடன் தள்ளுபடி.

”…வாருங்கள் தமிழகத்து இந்துக்களே!! மார்வாடிகளை வாழவைப்போம், முஸ்லீம் தமிழர்களை விரட்டுவோம், பிற தமிழன் தலையிலே மிளகாய் அரைப்போம்..பாரத் மாதாக்கீ ஜே!!!” என பாஜக-இந்துத்துவ அமைப்புகள் அழைக்கின்றன. நீங்கள் தயாரா..

வட இந்தியா மார்வாடி-பனியா முதலாளிகளுக்கு ரூ68,000 கோடி கடனை தள்ளுபடி செய்திருக்கின்றன வங்கிகள். இன்று வெளியான அர்.டி.ஐ செய்தி அம்பலப்படுத்துகிறது. கடந்த வாரம் கோவையின் கொடீசியா எனும் சிறு-குறு தொழில் வர்த்தகக் கழகம் இந்தியா முழுவதுமுள்ள சிறு-குறு தொழில்களுக்கான கடனில்/ வரியில்/வட்டியில் சலுகை கேட்டிருந்தனர். நடுத்தர குடும்பத்தினர் ஈ.எம்.ஐ/ வங்கிக்கடன்/கல்விக்கடன்/வீட்டுக்கடன் கட்ட கால அவகாசம் கேட்டிருந்தனர். ஏழைகள் தமது தொழில்களுக்கான உதவியை கேட்டிருந்தனர். ஆனால் இதுவரை பாஜக இந்துத்துவ மோடி அரசு இதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் சத்தமில்லாமல் மார்வாடி-பனியா குஜராத்தி முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடியே செய்திருக்கின்றன என ரிசர்வ் வங்கியின் ஆர்.டி.ஐ செய்தி சொல்லுகிறது.

‘இந்துக்களே ஒன்று திரள்’ என கொம்பு சீவும் கொங்குப் பகுதி பாஜக/ஆர்.எஸ்.எஸ்/இந்துமுன்னனிக்கு பணமும், பொருளும் கொடுத்து உதவும் தமிழகத்தின் முதலாளிகள் என்ன செய்யப்போகிறார்கள்? ஜி.எஸ்.டி கட்டி, வருமான வரி கட்டி, கடன் கட்டி, கடனுக்கான வட்டிகட்டி தொழில் நசிவடைந்து இருந்தாலும், ‘நான் இந்து’ என நெஞ்சு நிமிர்த்தி நின்று இனிமேலும் நட்டப்படப் போகிறார்களா? அல்லது புத்திசாலித்தனமாக தமிழர் அரசியலில் இணைந்து உரிமையை மீட்கப் போகிறார்களா?

உங்களைக் காப்பாற்ற பொன்னாரோ, சிபி.ராதாகிருஸ்னனோ, வானதி மேடமோ, குருமூர்த்தி/சேகர்/நாராயணன் வகையறாக்கள் வரப்போகிறார்களா? வாய்ப்பே இல்லை நண்பர்களே. இதை அம்பலமாக்கி எதிர்த்து மே17 இயக்கமும், பெரியாரிய-தமிழ்த்தேசிய இயக்கங்களும் பேசி வருகின்றன.

ரிசர்வ் வங்கியின் தகவல்உயர் அதிகாரி அபெய்குமார் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். இதில் 68,607 கோடி ரூபாயை செப்டம்பர் 2019லேயே தள்ளுபடி செய்துவிட்டதான தகவல் வெளியிட்டிருக்கிறார். இது பற்றி 2020இல் பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் கேட்டதற்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல மறுத்திருக்கிறார். இதை ஒரு ஆர்.டி.ஐ மூலம் விசரித்ததில் உண்மை அம்பலமாகி இருக்கிறது. விவரத்தை பார்ப்போமே.

பல ஆயிரம் கோடி ரூபாய் ஏமாற்றிய முகுல் சோக்சியின் (தற்போது இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டில் இருக்கிறார்) கீதாஞ்சலி நிறுவனத்திற்கு 5, 492 கோடியும்,

அவரது பிற நிறுவனமான கிலி, நட்சத்திராவிற்கு ரூ1109 கோடி,

சந்தீப் ஜுன்ஜிுன்வாலா, சஞ்சய் ஜுன்ஜிுன்வாலாவின் ரேய் அக்ரோவிற்கு ரூ4314 கோடி(இவர்கள் தேடப்படும் குற்றவாளிகள்),

ஜத்தின் மேத்தாவிற்கு 4,076 கோடி ரூபாய் (இவர் சிபிஐயால் விசாரிக்கப்படுகிறவர்),

ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் கோத்தாரி குடும்பத்திற்கு 2850 கோடி ரூபாய்,

பாபா ராம் தேவ், பால்கிருஸ்சனின் ருச்சி சோயாவிற்கு 2212 கோடி ரூபாய்,

குவாலியரின் ஜீம் டெவலப்பர்ஸ் 2012 கோடி ரூபாய்,

அகமதாபாத்தின் ஹரிஷ் மேத்தாவின் வைர வியாபார நிறுவனத்திற்கான 1962 கோடி ரூபாய்

இதுமட்டுமல்லாமல் விஜய் மல்லாயாவிற்கு 1943 கோடி ரூபாய்

என பட்டியல் நீளமானது. இதில் அதிகமாக வைர வியாபாரிகள். பெரும்பாலோனொர் தேடப்படும் குற்றவாளிகள்

தமிழ்நாட்டில் இந்துத்துவ அமைப்புகள், பாஜக, ஆர்,எஸ்.எஸ். இந்து முன்னனிக்கு ஆதரவளிக்கும் தமிழர்களே என்ன செய்யப் போவதாக திட்டம் வைத்திருக்கிறீர்கள்?.

சிந்திக்காவிடில் தமிழர்களாகிய நாம் சிதைக்கப்படுவோம். விழித்தெழுவீர்களா!

(இந்தத் தகவலை சிறு-குறு தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், பிற மக்களுக்கும் பகிர்ந்து/அனுப்பி இந்துத்துவ அரசியலை அம்பலப்படுத்த உதவுங்கள்)

https://m.facebook.com/story.php?story_fbid=169444717858670&id=100043794273232

மத வேறுபாடில்லாத தமிழ் எனும் பண்பாடு

இந்த உலகில் பல நம்பிக்கைகள் உள்ளன. அதற்கென தனி அடையாளங்களும், பழக்கவழக்கங்களும் உண்டு. ஆனால் அப்பழக்கவழக்கங்களில் ஊடுருவி உள்ள பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தும் அந்தந்த மக்களின் மொழி மற்றும் சார்ந்தவைகளோடு உறவு கொண்டிருக்கும்.

அவ்வாறு தமிழர்கள் தன் மரபுவழி பழக்கமான அவைதீக மரபாக இருக்கட்டும் அல்லது பிற அந்நிய நம்பிக்கையாக இருக்கட்டும் தங்களின் பண்பாட்டு விழுமியங்களூடே அதனை அனுகினார்கள்.

சான்றாக, 7 கள்வர்களிடமிருந்து பிராமணப் பெண்ணொருத்தியை காப்பாற்றும் முயற்சியில் உயிர்துறந்த பக்கிரி சாய்புவின் தர்கா தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மேற்குப் பகுதியில் உள்ளது. தன்னை காப்பாற்ற முயன்று உயிர் இழந்த பக்கிரிசாய்புவை கண்டு மனம் வருந்தி தன் நாக்கைப்பிடுங்கி கொண்டு உயிர்துறக்கிறாள் அந்த பிராமணப்பெண். அவரும் அத்தர்காவிலே அடக்கம் செய்யப்படுகிறார். “இஸ்மாயில் ஷா தர்கா” என்றழைக்கப்படும் இத்தர்காவில் இசுலாமியர்களும் இந்துக்களும் இனணந்து வழிபடுகிறார்கள்.

உலகிற்கே வழிகாட்டியாக திருநெல்வேலி மாவட்டத்தின் நான்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாராயணம் என்ற கிராம் திகழ்கிறது. இக்கிராமத்தில் இசுலாமியர்கள் இல்லை. எனினும் வேறுபாடுகளின்றி அனைத்து மக்களும் “செய்யது முகம்மது மலுக்கு மேத்தப்பிள்ளை அப்பா தர்காவில் (சமாதி)” ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 16-ஆம் தேதி ஒன்றுகூடி கந்தூரி எனும் விழாவை நடத்துகின்றனர். கந்துாரி விழாவில் கலந்து கொள்ளும் இசுலாமியாகள் அக்கிராமத்து வீடுகளிலேயே ஏழைப் பணக்காரன் என்ற எந்த பாகுபாடுமின்றி தங்குகின்றனர். அதோடு இந்த விழாவை அக்கிராமத்து இந்துக்களே முன்னின்று நடந்துகின்றனர்.

தமிழ்நாட்டில் இது போன்று பல தர்காக்கள் பேதமின்றி செயல்படுகின்றன.

காணிக்கை நேர்தல், காணிக்கை வழங்குதல், அவுலியாவின் சமாதியை வலம் வருதல், புனித நீர் வழங்குதல், தலைமுடி எடுத்தல், சந்தனக்கூடு ஊர்வலம் மேலும் ‘கொடிகட்டு’ ஊர்வலம் போன்றவை கோயில் திருவிழாக்களின் போது நடைபெறும் சப்பர ஊர்வலத்தையும், தேரோட்டத்தையும் நினைவூட்டுகிறது.

இதனடிப்படையில் தமிழர்கள் தன் மண் மற்றும் பண்பாடு விழுமியங்கள் சார்ந்தே எந்த ஒரு நம்பிக்கையையும் அணுகுகிறார்கள். அந்நிய நம்பிக்கைகளாக இருந்தாலும் அவைகளை தமிழ் பண்பாடு கலாச்சாரத்திற்கு உகந்தவாறு மாற்றியமைத்து பின்பற்றி வருகின்றனர்.
ஏனெனில், “தமிழ் பண்பாடு” என்பதே அனைவரையும் தமிழர்களாய் ஒன்றிணைக்கிறது!

தமிழர்களின் சொத்துக்களை திருடும் பிராமணர்கள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று #இந்துக்கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிறது ஆரிய இந்தியா.

முருகன் கோயில் பெயர்கள் ஸ்ரீ சுப்பிரமணி கோயில் என்ற பெயர் மாற்றப்படுகிறது. பெருமாள் கோயில்கள் ஸ்ரீவெங்கடாஜலபதிஸ்தலம் என்று பெயர் மாற்றப்படுகிறது.

மெல்ல மெல்ல தமிழர் அல்லாதவர்கள் கோயிலின் உயர் பொறுப்புகளை கைப்பற்றி ஆரியத்திற்கு கங்காணி வேலை செய்து வருகிறார்கள். அரசியல் அதிகாரம் மட்டுமல்ல மெய்யியல் அதிகாரமும் தமிழர்களிடம் இருத்தல் வேண்டும்..

இருநூறு வருடங்களுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து மொரீசியஸ் ரீயூனியன் போன்ற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் மதத்தை தமிழ் என்று தான் பதிந்து உள்ளார்கள்.

வெள்ளைக்காரன் காலத்தில் அனைத்தையும் ஆவணப்படுத்திய இடத்தில் ஆரியர்கள் இருந்ததால் அனைத்தும் இந்து மதம் என்று எழுதி மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்கள். உண்மையில் இருநூறு வருடம் முன்பு கூட தமிழர்களிடம் இந்து என்ற மதம் இல்லை.

தமிழே இனம், தமிழே மொழி ,தமிழே மதம், தமிழே அனைத்திற்குமான ஒற்றை அடையாளம். இதனை நாம் உணர்ந்து நமது மதத்தை தமிழம் என்று அடையாளப்படுத்த விட்டால் இந்தியத்தின் அரசியல் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க இயலாது.

ஈழ சைவ தமிழர்கள் இந்து என்ற மத வரையறைக்குள் இல்லை என்று இந்திய ஒன்றிய அரசே சொல்லிவிட்டது. இந்தியா சொல்வதை தான் உலகம் ஏற்கும் நாமும் அப்படியே ஏற்போம் நாங்கள் இந்து அல்ல புலம்பெயர் தேசத்தில் எங்களால் எழுப்பப்பட்ட எந்தக் கோயிலும் இந்து கோயில் அல்ல.

உலகம் முழுவதும் வாழும் ஈழ தமிழ் உறவுகள் தமிழ் ஆன்மீக கோட்பாடுகளான ஆசீவகம், சைவம், வைணவம், அய்யாவழி, வள்ளலார் வழி , திருவள்ளுவம் வழி என்று அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து தமிழம் என்ற மதத்தை தாங்கள் வாழும் நாடுகள் முழுவதும் பதிவு செய்யும் வேலையை துவங்க வேண்டும்.

சிறுதெய்வ வழிபாடு, முன்னோர் குலதெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, கருப்பு மற்றும் ஐயனார் வழிபாடு என்று எல்லா வழிபாடும் இதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தமிழ் வழியில் மந்திரம் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்.

இதை நீங்கள் செய்துவிட்டால், விரைவில் தமிழ் நாட்டு தமிழர்களும் இதில் வந்து இணைவார்கள்.

இது புது மதம் அல்ல.. தமிழர்களின் நடைமுறை மெய்யியலின் ஒற்றை பெயர் ஹிந்து அல்ல #தமிழம். மதமாக மாறாத தமிழர் மெய்யியல் அனைத்தும் தமிழம் என்று அழைக்கப்பட வேண்டும். நான் இந்து அல்ல என்று முழங்குவதைவிட எம்மதம் #தமிழம் என்று முழங்குவதே மேல் #எம்மதம்தமிழம். விரைவில் வைதீகமில்லா, வர்ணாசிரமில்லா தமிழர் மதம் #தமிழம் என்று உலகெங்கும் பதியப்படும்.

ஐந்திரம் + முருகம் + ஆசீவகம் + அருகம் + நீத்தாரியம் + சிவனியம் + மாலியம் + வள்ளுவம் = தமிழம்

(தென்புலத்தார் வழிபாடு + முன்னோர் வழிபாடு = நீத்தாரியம்)

அண்ணா பல்கலைக்கழகம் திருடப்பட்டது போல தமிழக அறநிலையத்துறையும் மத்திய அரசால் திருடப்பட்டுள்ளது. விரைவில் விழித்துக் கொண்டு. நம்மை நாமே பிரித்து கொள்ளாவிட்டால் ஆண்டவன் முதல் அனைத்தையும் இழப்பது தடுக்க இயலாத ஒன்றாகி விடும்.

மதம் என்பது தூய தமிழ் சொல்

எம் மதம் தமிழம் என்று காலத்தின் தேவையை உணர்ந்து, தொடங்கப்பட்ட முழக்கத்திற்கு, இங்கு பலர், தங்களால் இயன்ற இடையூறுகளை செய்து வருகிறார்கள்.

மதம் என்ற சொல் தமிழ்ச்சொல் இல்லை, இதனை ஏன் பயன்படுத்துகிறீர்கள், #நெறி, #கோட்பாடு, #சமயம், #வழிபாடு போன்ற சொற்களை பயன்படுத்துங்கள் என்று தமிழை அறியாத சிலர் அறிவுரை கூறுகிறார்கள். உங்கள் மதம் என்ன என்றால் சற்றும் யோசிக்காமல் இந்து என்று கூறியவர்கள் இன்று மதம் என்ற சொல்லுக்கு மாற்று சொல்ல தேடி அலைகிறார்கள்.. அனைத்து அரசு ஆவணங்களிலும் அந்த சொல் தான் இருக்கிறது, நாம் அந்த சொல்லை மாற்ற வரவில்லை, அந்த சொல்லுக்கு நீங்கள் கூறும் பதிலை மாற்ற வருகிறோம்..

இது ஒரு வகை என்றால் இன்னொரு வகை. இது என்ன காவி நிறம் என்று, எதனை எதிர்த்து இதனை தொடங்கினோமோ அந்த எதிரியின் சாயத்தை நம் மீது பூச முயல்கிறார்கள். காவி என்ன இந்துத்துவாவின் பேட்டன்ட் நிறமா?. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதின குருமார்கள் அந்த நிறத்தில் தான் ஆடை அணிந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் பிராண்டிங் உலகத்தில் சுய அடையாளத்தை இழந்தவர்கள் எந்த அடையாளத்தை தூக்கினாலும் அது எதிரியின் அடையாளம் என்று அம்மணமாக வாழ விரும்புகிறார்கள். நிறத்திற்கு யாரும் உரிமை கோர முடியாது ஏனென்றால் ஒரே நேரத்தில் 1000 வகைகள் இருக்கும் அதற்கான Rgb, Hex, Hwb, Cmyk, Ncol மதிப்புகள் மாறும்.. எல்லா பெயிண்ட் கடையிலும் இருக்கும் பெயிண்ட் அட்டையை எடுத்து பாருங்கள்.. பத்து நிறத்தில் எது காவி என்று உங்களால் தீர்க்கமாக சொல்ல இயலாது, பத்தும் காவி என்று சொல்லிவிட்டு எதிரிக்கு தாரை வார்த்துக் கொடுத்தல் சரியும் ஆகாது..

எம் மதம் தமிழம் என்று தொடங்குவதே இன்று சரியாக இருக்கும் நாளை அது முழுவதுமாக பரவிய பிறகு எஞ்சமயம் தமிழம் என மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக்கொள்ளுங்கள் தொடக்கத்தில் முழக்கத்திற்கு மதம் என்பதே மிரட்சியாக இருக்கும்..

தேவநேய பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் இருந்து மதம் என்னும் சொல் தமிழ்ச்சொல் என்ற விளக்கம் கீழ்வருமாறு.

“எழுவகை மதமே” (நன்.11);.

“தத்த மதங்களே யமைவதாக” (திருவாச.4:52);. சிவமதம், மால் மதம் (உ.வ.);.

மதி-> மதம் = மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை, அம்மையிம்மை யும்மை நிலைகளை மதித்தறிந்து கடைபிடிக்குங் கொள்கை. மதி-> மதம் 1. பெரிதாக மதிப்பது, 2. கருத்து, 3. கொள்கை, 4. நெறிமுறை,

மத (mata);. மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தினின்று பிறந்தது என்று சிலர் கூறுகிறார்கள் அது தவறு. மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமே யன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது.

ஒரு பொருள் அல்லது நெறிமுறை இன்னவா றிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றது. தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட் டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.

தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லையென்று கொள்வதும், மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும்.

முழங்கு எம்மதம் தமிழம் என்று முழங்கு.

(Thanks: Mr Ingkersol)

எம் மதம் தமிழம்

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்து சிறுகச்சிறுக சேகரித்து எழுப்பிய கோயில்கள் அனைத்தும் இன்று #இந்துக்கோயில்கள் என்ற அடையாளத்துக்குள் சிக்கவைத்து தமிழர் அடையாளத்தை திருடுகிறது ஆரிய இந்தியா.

முருகன் கோயில் பெயர்கள் ஸ்ரீ சுப்பிரமணி கோயில் என்ற பெயர் மாற்றப்படுகிறது. பெருமாள் கோயில்கள் ஸ்ரீவெங்கடாஜலபதிஸ்தலம் என்று பெயர் மாற்றப்படுகிறது.

மெல்ல மெல்ல தமிழர் அல்லாதவர்கள் கோயிலின் உயர் பொறுப்புகளை கைப்பற்றி ஆரியத்திற்கு கங்காணி வேலை செய்து வருகிறார்கள். அரசியல் அதிகாரம் மட்டுமல்ல மெய்யியல் அதிகாரமும் தமிழர்களிடம் இருத்தல் வேண்டும்..

இருநூறு வருடங்களுக்கு முன்பு பஞ்சத்தின் காரணமாக தமிழகத்திலிருந்து மொரீசியஸ் ரீயூனியன் போன்ற இடங்களுக்கு சென்ற தமிழர்கள் தங்கள் மதத்தை தமிழ் என்று தான் பதிந்து உள்ளார்கள்.

வெள்ளைக்காரன் காலத்தில் அனைத்தையும் ஆவணப்படுத்திய இடத்தில் ஆரியர்கள் இருந்ததால் அனைத்தும் இந்து மதம் என்று எழுதி மீண்டும் மீண்டும் சொல்லி நம்மை நம்ப வைத்து விட்டார்கள். உண்மையில் இருநூறு வருடம் முன்பு கூட தமிழர்களிடம் இந்து என்ற மதம் இல்லை.

தமிழே இனம், தமிழே மொழி ,தமிழே மதம், தமிழே அனைத்திற்குமான ஒற்றை அடையாளம். இதனை நாம் உணர்ந்து நமது மதத்தை தமிழம் என்று அடையாளப்படுத்த விட்டால் இந்தியத்தின் அரசியல் சூழ்ச்சியிலிருந்து தப்பிக்க இயலாது.

ஈழ சைவ தமிழர்கள் இந்து என்ற மத வரையறைக்குள் இல்லை என்று இந்திய ஒன்றிய அரசே சொல்லிவிட்டது. இந்தியா சொல்வதை தான் உலகம் ஏற்கும் நாமும் அப்படியே ஏற்போம் நாங்கள் இந்து அல்ல புலம்பெயர் தேசத்தில் எங்களால் எழுப்பப்பட்ட எந்தக் கோயிலும் இந்து கோயில் அல்ல.

உலகம் முழுவதும் வாழும் ஈழ தமிழ் உறவுகள் தமிழ் ஆன்மீக கோட்பாடுகளான ஆசீவகம், சைவம், வைணவம், அய்யாவழி, வள்ளலார் வழி , திருவள்ளுவம் வழி என்று அனைத்து தத்துவங்களையும் ஒருங்கிணைத்து தமிழம் என்ற மதத்தை தாங்கள் வாழும் நாடுகள் முழுவதும் பதிவு செய்யும் வேலையை துவங்க வேண்டும்.

சிறுதெய்வ வழிபாடு, முன்னோர் குலதெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, கருப்பு மற்றும் ஐயனார் வழிபாடு என்று எல்லா வழிபாடும் இதில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். தமிழ் வழியில் மந்திரம் ஓதி பூசைகள் செய்ய வேண்டும்.

இதை நீங்கள் செய்துவிட்டால், விரைவில் தமிழ் நாட்டு தமிழர்களும் இதில் வந்து இணைவார்கள்.

இது புது மதம் அல்ல.. தமிழர்களின் நடைமுறை மெய்யியலின் ஒற்றை பெயர் ஹிந்து அல்ல #தமிழம். மதமாக மாறாத தமிழர் மெய்யியல் அனைத்தும் தமிழம் என்று அழைக்கப்பட வேண்டும். நான் இந்து அல்ல என்று முழங்குவதைவிட எம்மதம் #தமிழம் என்று முழங்குவதே மேல் #எம்மதம்தமிழம். விரைவில் வைதீகமில்லா, வர்ணாசிரமில்லா தமிழர் மதம் #தமிழம் என்று உலகெங்கும் பதியப்படும்.

ஐந்திரம் + முருகம் + ஆசீவகம் + அருகம் + நீத்தாரியம் + சிவனியம் + மாலியம் + வள்ளுவம் = தமிழம்

(தென்புலத்தார் வழிபாடு + முன்னோர் வழிபாடு = நீத்தாரியம்)

அண்ணா பல்கலைக்கழகம் திருடப்பட்டது போல தமிழக அறநிலையத்துறையும் மத்திய அரசால் திருடப்பட்டுள்ளது. விரைவில் விழித்துக் கொண்டு. நம்மை நாமே பிரித்து கொள்ளாவிட்டால் ஆண்டவன் முதல் அனைத்தையும் இழப்பது தடுக்க இயலாத ஒன்றாகி விடும்.

முழங்கு எம்மதம் தமிழம் என்று முழங்கு

இந்து என்னும் காந்தம்

இந்து என்ற வார்த்தை, நாம் நினைப்பது போல் ராமாயணம், மகாபாரதம், ரிக் வேதம் போன்ற நூல்களில் கண்டெடுக்கப்பட்ட வார்த்தையல்ல. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையுமல்ல. இவ்வளவு ஏன், 200 ஆண்டுகளுக்கு முன் அது ஒரு மதத்தைக் குறிக்கும் சொல் கூட இல்லையென்பது பெரும்பாலான இந்தியர்களுக்கே அதிச்சியான தகவல்தான். இன்று, இந்து மதம்தான் இந்தியாவில் பெரும்பான்மையான மதம், இந்தியா என்ற பெயரே இந்து என்ற பெயர் போலதான் தோன்றுகிறது. ஆனால் இந்து என்ற வார்த்தை நம் புராண, இதிகாசங்களில் இல்லை என்றால் எப்படி நம்ப முடியும். எவ்வளவு பெரிய பூதக்கண்ணாடி கொண்டு வந்தாலும் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் எழுதப்பட்ட எந்த நூல்களிலும் இந்து என்ற வார்த்தையைக் காணமுடியாது. மூச்சுவிட மறந்தாலும் இந்துத்வா என்ற வார்த்தையை மறக்காத பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் கூட ஒப்புக்கொண்ட உண்மை இது. அவர்களே ஒப்புக்கொண்ட பின், நாம் பெரிய ஆராய்ச்சியெல்லாம் செய்யத் தேவையில்லை. மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.

இந்து என்ற வார்த்தையை மொழிபெயர்க்கும் உரிமை எனக்குக் கொடுக்கப்பட்டால் நான் “காந்தம்”என்று மொழிபெயர்ப்பேன். ஆம். அதன் ஈர்ப்புவிசை மிக அதிகம். ஒரு காந்தம் தன்னைச் சுற்றியுள்ள இரும்புத்துகள்களைத் தன்னகத்தே ஈர்த்துக்கொள்வது போல, இந்து மதம் தன்னுள் ஈர்த்துக்கொண்ட மதங்கள் கணக்கிலடங்காது. இது இந்து மதத்தின் நிறைகுறைகளை அலசும் கட்டுரை அன்று. மாறாக இந்து என்ற வார்த்தையின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் சில உண்மைகளையும், மேலும் அந்த மதத்தில் உறைந்திருக்கும் சில மர்மங்களையும் அவிழ்க்கும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

சிந்து நதியின் மிசை

மாவீரன் அலெக்சாண்டர் (356 BC – 323 BC) (Alexander III of Macedon) காலத்திலேயே கிரேக்க நாட்டில் இண்டிகா என்ற பெயர் பரவலாக அறியப்பட்டிருந்தது. இண்டிகா என்பது இந்தியாவுக்கு அவர்கள் வைத்த பெயர். அலெக்சாண்டரின் அப்பா இந்தியாவை வெற்றிகொள்ள ஆசைப்பட்டதாகவும், அந்த ஆசையை நிறைவேற்றதான் அலெக்சாண்டர் இந்தியா வந்ததாகவும் நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனாலும் வரலாற்று சான்று என்றால் அது மெகஸ்தனிஸ் (350 BC – 290 BC) (Megasthenes) எழுதிய இண்டிகா என்ற புத்தகம்தான். மெகஸ்தனிஸ் கி.மு. 4ம் நூற்றாண்டை சேர்ந்த கலாச்சார ஆய்வாளர். அப்போதே அவர் இந்தியா வந்து சில ஆண்டுகள் தங்கி, தான் தெரிந்து கொண்டதை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவர் எழுதிய புத்தகத்தொகுப்புக்கு இண்டிகா என்று பெயர். அவருடைய புரிதலில் இந்தியா என்றால் சிந்து நதி மற்றும் அதன் அருகில் வசிக்கும் மக்கள். அதனால் அந்த மக்களையே நதியின் பெயரால்தான் அழைத்தார். அவர் மட்டுமல்ல அன்றைய கிரேக்க நாடுகளும் அப்படித்தான் அழைத்தன. சிந்து என்ற வார்த்தையை உச்சரிக்க சற்று சிரமப்பட்டு “சி”யை விழுங்கி சொன்ன மிச்ச வார்த்தைதான் இந்து மற்றும் இண்டிகா.

இந்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டப் பழமையான சான்றுகளில் முதன்மையானதென்றால் அது மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற புத்தகம்தான். சிந்து நதியின் பெயரை ஒட்டி வளர்ந்த சொல். கிரேக்கர்கள் மட்டுமல்ல பாரசீகர்கள் கூட சிந்துவை “ஹிந்து” என்று அழைத்தார்கள் என்று அறிகிறோம். நம் அறிவுக்கு எட்டியவரை இந்து அல்லது ஹிந்து என்ற சொல் முற்காலத்தில் இந்தியாவுக்கு வெளியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மேலும் அது சிந்து நதியை குறிக்கும் சொல் மட்டுமே. கிரேக்கர்களையும், பாரசீகர்களையும் பொறுத்தவரை இந்தியாவில் வாழ்ந்த அனைவரும் இந்துக்கள்தான் அதாவது சிந்து நதியின் அருகினில் வசித்தவர்கள். அப்போது அது ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க. மேலும் இந்தியா என்ற வார்த்தை பரவலாக உலகம் முழுவதும் அறியப்பட்டபோது அது தற்போதைய இந்திய வரைபடம் குறிக்கும் ஒட்டுமொத்த இந்தியாவை ஒருபோதும் குறித்ததில்லை என்பதும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மை.

சரி, இந்து என்பது மெகஸ்தனிஸும், ஈரான் நாட்டு மக்களும் நமக்கு வைத்த செல்லப்பெயராகவே இருந்துவிட்டு போகட்டும். அவர்கள் சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். 1947ல் விடுதலையடைந்து, இந்தியா என்ற தனிநாடு உருவாகி, அண்ணல் அம்பேத்கர் தயவில் 1950ல் இந்தியாவுக்கென்று தனி சட்டமே இயற்றப்பட்டு விட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்து என்ற வார்தைக்குத் தரும் விளக்கத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, “யார் முஸ்லீம்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ, யார் பார்சீக்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள்”. ஆக, இந்திய அரசியலமைப்பிலேயே இந்து என்ற வார்த்தைக்கு நேரிடையான அர்த்தம் இல்லை. சில மதங்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இந்துக்கள் என்று பொதுப்படையாக சொல்லிவிட்டார்கள். இப்படி பொத்தாம்பொதுவாக உதிர்த்துவிட்டுப் போன இந்து என்ற வார்த்தை அதற்கு முன்னர், பல இனத்தைச் சார்ந்த மக்களால் வணங்கப்பட்ட பல கடவுள்களின் வரலாற்றை ஒட்டுமொத்தமாகத் துடைத்துப் போட்டது. அப்படி துடைத்தெறியப்பட்ட வரலாற்றுப் பக்கங்களில் தமிழர் சமயத்தைக் குறித்தும், அது ஆரியர்கள் வருகைக்குப் பின்னர் எவ்வாறு அடையாளமிழந்து போனது என்பதையும் ஆராய இருக்கிறோம். மதங்களுக்கள் நுழையும் முன், கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் போன்ற தத்துவங்களைப் புரிந்துகொண்டால்தான் இன்று நாத்திகம் என்று இழிவாகப்பேசப்படும் கடவுள் மறுப்புக்கொள்கை ஒரு காலத்தில் எவ்வளவு அறிவியல் சார்ந்த பார்வையாக இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

கருத்தும் பொருளும்

கடவுள் உண்டா இல்லையா என்று மிகப்பெரிய தர்க்கங்கள் நடக்கத்துவங்கி ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்தியா மற்றும் கிரேக்கத்தில் இதற்கான சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வாதங்கள் இரண்டு விதம்.

கருத்துமுதல் வாதம் (Idealism)

பொருள்முதல் வாதம் (Materialism).

கருத்துமுதல் வாதம் என்றால், உலகில் நாம் காணும் அனைத்தும் தானாக தோன்றவில்லை, யாரோ ஒருவர் எங்கோ உட்கார்ந்து கொண்டு சப்பாத்திக்கு மாவு உருட்டுவது போல சூரியன், கோள்களை எல்லாம் உருவாக்கி வானத்தில் உருட்டி விட்டுக்கொண்டிருக்கிறார் என்று நம்மை நம்ப வைப்பது. அந்த யாரோ ஒருவர்தான் கடவுள். கடவுள்தான் ஒட்டுமொத்த அண்டசராசரங்களையும் உருவாக்கினார் என்று சொல்வதுதான் கருத்துமுதல் வாதம்.

பொருள்முதல் வாதம் என்றால், இந்த பிரபஞ்சம், வானம், பூமி எல்லாம் இயற்கையாக என்றுமே உள்ளது. அதை யாரும் படைக்கவில்லை. அதன் ஆக்கம், அழிவு எல்லாம் இயற்கையாகவே நடக்கிறது என்ற வாதம். அண்டம், பூமி, உடல், அணு, உயிர் என்று எவ்வளவு நுணுக்கமாகப் பகுத்தாலும் அனைத்தும் ஐம்பூதங்களின் கலவையாகவே இருக்கும் என்ற அறிவியல் சார்ந்த வாதம்தான் பொருள்முதல் வாதம். கடவுள் மறுப்புக் கொள்கைதான் பொருள்முதல் வாதம். உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தையும் இந்த இரண்டு பிரிவின் கீழ் அடக்கி விடலாம். இந்தியாவில் மட்டுமே நூற்றுக்கணக்கான மதங்கள் தோன்றியிருக்கின்றன. இயற்கை வழிபாட்டை முதல் மதமாக எடுத்துக்கொண்டால், அது துவங்கி பல இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கும். நாம் அவ்வளவு பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. நாகரிகமடைந்த மனிதர்கள் மத்தியில், குறிப்பாக கடந்த 10,000 ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்ட மதங்களில் சிலவற்றை நாம் ஆராய்ந்தால் இந்து மதத்தின் ஆக்கிரமிப்பை உணர்ந்துகொள்ள முடியும். அதற்கு நாம் சிந்து சமவெளியில் பயணித்தாக வேண்டும்.

ஹரப்பா முதல் கன்னியாகுமரி வரை

சிந்துசமவெளி நாகரிகம் தமிழரின் அடையாளம். ஆரியர்கள் இந்தியாவுக்குள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு நுழையும்போதே அது கிட்டத்தட்ட அழியும் தருவாயில்தான் இருந்தது என்று சொல்லப்படுகிறது. ஆரியர்கள் வந்து போராடி சண்டையிட்டு அழிக்கவில்லை. ஆரியர்கள் கூட்டம் சண்டை போடுமளவுக்கு திறமையான கூட்டம் அல்ல. அது ஒரு குள்ளநரி கூட்டம். அவர்களுக்கு வஞ்சனை செய்துதான் அழிக்கத் தெரியும். நாம் சிந்து சமவெளி நாகரிகம் தழைத்திருந்த போது அங்கு நிலவிய சமய சார்புகள் குறித்தும், சிந்துசமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின் வளர்ந்த சமயங்கள் குறித்தும் ஆராய இருக்கிறோம். ஏனென்றால், சிந்துசமவெளி நாகரிகம் செழித்திருந்த போது இந்தியாவில் ஆரியர்கள் இல்லை. அங்கு வழக்கிலிருந்த சமயம் தமிழர் சமயம். தமிழர்கள் மட்டும் வளர்த்தெடுத்த சமயம். சிந்துசமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னர், ஆரியக் கலப்பிற்கு பின்புதான் பல புதிய மதங்கள் உருவாகின.

சிந்துசமவெளி நாகரிகம் 10,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நாம் முன்னரே குறிப்பிட்டபடி அது தமிழரின் நாகரிகம். சிந்துசமவெளி நாகரிக ஆராய்ச்சியில் வெகுகாலம் பணியாற்றி வரும் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பார்ப்போலா (Asko Parpola), ஹன்டர் (Hunter) போன்றோர் அது தமிழர்கள் நாகரிகம் என்பதை பல்வேறு சான்றுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். சிந்துசமவெளி நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ எல்லாம் இப்போது பாகிஸ்தானில் இருக்கின்றன. இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா முதல் கன்னியாகுமரி வரை பரவியிருந்தது தமிழர்கள் நாகரிகம்தான். சிந்துசமவெளி நாகரிகம் உச்சத்தில் இருந்த அதே நேரம், ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், கீழடி என்று இன்றைய தமிழகம் வரையிலும், நாகரிகம் உச்சத்தில்தான் இருந்தது. ஆனால் முதலில் ஆரியர்கள் ஊடுருவியது வடக்கில்தான். முதலில் அங்குதான் தமிழர் சமயங்கள் பெருமளவில் மாற்றத்திற்கு உள்ளாகின. நமது சமயங்களின் அழிவுக்கான ஆரிய சங்கு வடக்கில்தான் முதலில் ஊதப்பட்டது. அதனால் வடக்கில் ஏற்பட்ட மதமாற்றங்களை நாம் கவனத்தில் கொள்வது இங்கு அவசிமாகிறது.

இது சிந்துசமவெளி குறித்த கட்டுரை அல்ல, அது குறித்த தகவல்களை பிறிதொரு கட்டுரையில் அலசலாம். சிந்து சமவெளி மக்களின் சமயம் குறித்து மட்டும் நாம் இப்போது பார்க்கலாம். சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுளின் பெயர் பசுபதி. பசுபதி என்பது சிவனின் இன்னொரு பெயர். சிவ வழிபாடுதான் அங்கு தழைத்திருந்தது. கடவுள், சிவன், பசுபதி என்ற சொற்கள் வேறுவேறாக இருந்தாலும், இவை எல்லாவற்றுக்கும் பொருள் ஒன்றுதான் என்றால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படலாம். ஆம், தமிழில் கடவுள் தொடர்பான வார்த்தைகள் அனைத்துக்குமே ஒரே பொருள்தான். அதுதான் சமயங்கள் உணர்த்தும் மறைபொருள். மறைபொருளைப் புரிந்துகொண்டால்தான் தமிழர் சமயத்தைப் புரிந்துகொள்ள முடியும். அப்படி என்ன மறைபொருளைத் தமிழன் கண்டு விட்டான்?

மறைபொருளும் தமிழர் சமயமும்

கடவுள் என்ற சொல்லை கட + உள் என்று பிரித்துப்பார்த்தால், உள்ளே கடந்து செல் என்ற பொருள் வருகிறது. உனக்குள்ளே கடந்து சென்றால் இறைவனைக் காணலாம் என்று பொருள். இறைவன் என்ற சொல்லை இறை + அவன் என்று பிரித்துப் பார்த்தால், நான் கடவுள் என்ற பொருள் வரும். கடவுள், இறைவன் என்ற சொற்களை நேரிடையாக மொழிபெயர்க்க வேண்டுமானால், “உயிர்” என்று மொழிபெயர்க்க வேண்டும். ஆம், உயிர்தான் கடவுள். இந்த பிரபஞ்சத்தில், ஐம்பூதத்தில் ஒன்றாகிய விசும்பு அல்லது ஆகாயம்தான் உயிரின் அம்சம். பிரபஞ்சத்தின் ஒரு துகள்தான் நம் ஒவ்வொருவர் உடலிலும் உயிராய் விளங்குகிறது. “அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்” என்பதன் பொருள் இதுதான். உயிர்தான் மறைபொருள். அதுதான் பரம்பொருள். இதில் என்ன மறைபொருள், இது அனைவரும் அறிந்த ஒன்றுதானே என்று என்ன வேண்டாம். மறைபொருளை நாம் இன்னும் முழுமையாக விளக்கவில்லை.

உயிர்தான் மறைபொருள் என்று பார்த்தோம். அதில் தமிழன் கண்டறிந்த மகத்துவம் என்னவென்றால், உயிரின் உறைவிடம். நம் உடலில் உயிர் எங்கே உறைந்திருக்கிறது என்று கண்டறிந்ததுதான் தமிழன் கண்டறிந்த மறைபொருள். சித்தர்கள் பாடிய பாடல்கள், கோயில் கட்டமைப்பு போன்ற அனைத்தும் நமக்கு உணர்த்துகின்ற மறைபொருள், உயிரின் உறைவிடம் குறித்த செய்திகள்தான். ஆர்வமிக்கவர்கள் சித்தர்கள் பாடலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக திருமூலரின் திருமந்திரம். உயிரை அறிந்த பின்புதான், தியானம், சமாதி எல்லாம் சாத்தியம். இந்த மறைபொருள்தான் தமிழர் சமயத்தின் அடிப்படை. கடவுள், இறைவன் என்ற வரிசையில் பசுபதி, சிவன் போன்ற வார்த்தைகளை விட்டுவிட்டோம். அவற்றையும் ஆராய்ந்தால்தான் தமிழர் சமயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சைவமும் ஆசீவகமும்

சிந்து சமவெளி மக்கள் வணங்கியது பசுபதி. பசுபதி என்பது சிவன் என்று பார்த்தோம். பசுபதி என்ற வார்த்தையைப் புரிந்துகொள்ள நாம் திருமூலரை நாடவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ளது திருமூலர் எழுதிய பாடல்.

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்

பதியினைப் போல் பசு பாசம் அனாதி

பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்

பதி அணுகில் பசு பாசம் நில்லாவே

பதி என்றால் இறைவன். பசு என்றால் உயிர். பாசம் என்றால் உலகியல் இன்பங்கள். நம் உயிர், உலகியல் இன்பங்களில் கட்டுண்டு கிடப்பதால் இறைவனை உணர முடியாமல் இருக்கிறது. உலக இன்பங்களைத் துறந்தால் இறைவன் வேறு, உயிர் வேறு கிடையாது. இரண்டும் ஒன்றுதான். இதுதான் அந்த பாடலின் அர்த்தம். பசுபதி என்ற வார்த்தையில் பாசம் இல்லை. பாசத்தை நீக்கிவிட்டு அதன் அர்த்தம் என்னவென்று பார்த்தால், “உயிரின் அதிபதி” என்று வரும். பசுபதி என்ற வார்த்தையும் உயிரைத்தான் குறிக்கிறது என்று விளங்குகிறதல்லவா. ஆராய்ந்து பார்த்தால், பசுபதி அல்லது சிவ வழிபாடு என்பது உயிர்வழிபாடுதான் என்பது விளங்கும். பசுபதி என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டோம். இனி, சிவன் என்ற வார்த்தை உணர்த்தும் பொருளைப் பார்க்கலாம்.

சிவன் என்ற வார்த்தைதான் மருவி ஜீவன் என்று அழைக்கப்படுகிறது. ஜீவன் என்ற வார்த்தைக்கு உயிர் என்றுதான் பொருள். கடவுள், இறைவன், சிவன், பசுபதி என்று எந்த வார்த்தையை எடுத்துக்கொண்டாலும் அது உயிரில் வந்துதான் முடியும். உயிர் ஒன்று மட்டும்தான் மறைபொருள், தமிழர் சமயத்தில் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா சமயத்திலும். இந்த சிவ வழிபாடு என்ற உயிர் வழிபாட்டை மையமாகக் கொண்ட சைவ சமயம்தான் தமிழர் சமயம். சைவம், தமிழர்கள் மட்டுமே கண்டுணர்ந்த மறைபொருள் உணர்த்தும் சமயம். சித்தர்கள் கண்டறிந்த மாபெரும் உண்மை. சித்தர்கள் காட்டிய வழி. உலகில் இன்று வரை வேறு எந்த மதமும், விஞ்ஞானமும் கண்டுணராத மறைபொருளைக் கண்டறிந்த ஒரே சமயம் சைவம். அதைக் கண்டுணர்ந்தவர்கள் சித்தர்கள். தமிழர்கள்.

மறைபொருள் தத்துவத்தைக் கண்டறிந்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் வழிபாட்டையும் சைவத்தையும் பிரிக்க முடியாது. சித்தர்கள் பொதுவாக மலைக்குகைகளில் வாழ்வார்கள். நாம் சித்தர்கள் ஆசி பெற அவர்கள் இருப்பிடத்துக்குத்தான் செல்லவேண்டும். அதனால் அவர்கள் இருப்பிடம் ஆசி வழங்கும் இடம் என்றே அழைக்கப்பட்டது. வழங்குதல் என்பதற்கு ஈவுதல் என்ற பொருளும் உண்டு. ஆசி வழங்கும் இடம், ஆசீவகம் (ஆசி + ஈவு + அகம்) என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னாட்களில் ஒரு சமயமாக உருவானது. சைவம், ஆசீவகம் இரண்டுமே தமிழர்கள் சமயம்தான்.

சிவலிங்க தத்துவம்

சைவம் என்பது உயிர்வழிபாடு. சிவ வழிபாட்டை உருவாக்கியவர்கள் சித்தர்கள். சிவ வழிபாடு என்ற உயிர் வழிபாட்டை நமக்கு அருளிய சித்தர்களையும் நாம் வணங்கினோம். சித்தர் வழிபாடு ஆசீவகம் என்று அழைக்கப்பட்டது. சைவம், ஆசீவகம் என்பது பிரிக்க முடியாத இரண்டு சமயங்கள். இரண்டுமே தமிழர்கள் உருவாக்கிய சமயங்கள். சரி, உயிர் உடலில் எங்கே உறைந்திருக்கிறதென்று சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது என்ன வடிவத்தில் இருக்கிறதென்று கண்டறிந்தார்களா? ஆம். அதுதான் சிவலிங்க தத்துவம்.

உயிரின் வடிவம்தான் சிவலிங்கம். சைவத்தில் கடவுளுக்கு மனித வடிவம் போன்ற சிலைகள் கிடையாது. சிவன், சிலை வடிவில் செய்யப்பட்டது ஆரியர் நுழைவுக்குப் பின்புதான். தமிழர் வழிபாட்டில் சிவலிங்கம் என்றால் ஒரே உருவம்தான். நமது உடலில் உயிர் சிவலிங்க வடிவில்தான் இருக்கிறது. சிவலிங்கத்தின் வடிவத்தில் இருக்கும் சூட்சுமம் அதுதான். சிதம்பர ரகசியம், ஆன்மீகத்தில் இன்னும் என்னென்ன ரகசியங்கள் உண்டோ, அவை அனைத்துக்கும் ஒரே பொருள் உயிர்தான். அந்த உயிர் சிவலிங்க வடிவில்தான் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துவதே சிவலிங்க வழிபாடு. இவ்வளவு உண்மைகளை பகிரங்கமாக போட்டு உடைத்த நாம், உடலில் உயிர் உறைந்திருக்கும் இடத்தை மட்டும் ஏன் சொல்லவில்லை. ஏனென்றால் அது சித்தர்கள் ரகசியம். அதை சித்தர்கள் மட்டும்தான் அறிவிக்க வேண்டும். சித்தர்களைப் பின்பற்றினால் உணர்ந்து கொள்ளலாம். சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் உயிரின் சூட்சுமத்தை சித்தர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். சைவம், ஆசீவகம் போன்று, மேலும் சில சமயங்களும் தமிழர்களிடையே வழக்கிலிருந்தது. அவற்றையும் சிறு குறிப்பாக பார்த்து விடலாம்.

ஐவகை நிலங்களும் தெய்வங்களும்

தமிழர்கள், நிலங்களை 5 வகைகளாக பிரித்து வைத்திருந்தார்கள். மலை சார்ந்த இடம் குறிஞ்சி. காடு சார்ந்த இடம் முல்லை. வயல் சார்ந்த இடம் மருதம். கடல் சார்ந்த இடம் நெய்தல். மருதமும், முல்லையும் வறண்டபோது பாலை என்று அழைக்கப்பட்டது. இந்த ஐவகை நிலங்களுக்கும், தனித்தனியே தெய்வங்கள் உண்டு. குறிஞ்சியின் தெய்வம் முருகன். முல்லைநில தெய்வம் திருமால். மருதநில தெய்வம் இந்திரன். நெய்தல்நில தெய்வம் வருணன். பாலையின் தெய்வம் கொற்றவை. ஒவ்வொரு தெய்வங்களையும் ஆராய்ந்தால் இந்த கட்டுரை கன்னித்தீவு கதை போல நீளும், அதனால் பெயர்களோடு நிறுத்திக் கொள்வோம்.

ஐவகை நிலங்களில் வணங்கப்பட்ட தெய்வங்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று முன்னோர்கள் , மற்றொன்று குறியீடு. உதாரணத்துடன் பார்த்தால் தெளிவாக விளங்கும். முதலில் முன்னோர்கள். உதாரணமாக குறிஞ்சி நிலத்தை சிறப்பாக ஆட்சி செய்த அரசன் முருகன். தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திய முருகனை அம்மக்கள் தெய்வமாக வணங்கினார்கள். இது முன்னோர் வழிபாடு. இரண்டாவதாக குறியீடு. முல்லை நிலம் என்பது அடர்ந்த காடுகள் கொண்ட இடம். கருமை சூழ்ந்திருக்கும். கருமையின் குறியீடாக மால் என்ற பெயரை வைத்தார்கள். மால் என்ற பெயருக்கு கருப்பு என்றுதான் அர்த்தம். தங்கள் நிலத்தையே தெய்வமாக வணங்கினார்கள். இப்படி தமிழர்கள் சமயங்கள் அனைத்தும் இயற்கை சார்ந்த வழிபாடாகவே இருந்தது. ஆரியர்கள் நுழைவுக்குப் பின் என்ன ஆனது என்று பார்க்கலாம்.

ஆரியர்கள் நுழைவுக்குப் பின்

சைவமும், ஆசீவகமும் தழைத்திருந்த சமயத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன், ஆரியர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினார்கள். ஆரியர்கள் வருகைக்கு முன், தமிழர்கள் மத்தியில், உயிர் வழிபாடு மற்றும் இயற்கை சார்ந்த வழிபாடுதான் வழக்கத்தில் இருந்தது. ஆனால் ஆரியர்கள் நுழைவுக்குப் பின் இந்தியாவில், சமயங்களில் நிறைய மாற்றங்கள் வந்தன. ஆரியர்கள் பல புதிய மதங்களை உருவாக்கினார்கள். இவை கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் என்று பிரிக்கப்பட்டன என்று முன்பே பார்த்தோம். இவை அனைத்தும் ஆரியர்கள் வருகைக்குப் பின் உருவாக்கப்பட்ட மதங்கள். ஆரியர்களைப் பொறுத்தவரை கடவுள் என்பது வேறு. அது உயிர் வழிபாடு அல்ல. நாம் ஏற்கனவே சொன்னபடி, யாரோ ஒருவர், எங்கோ உட்கார்ந்து கொண்டு இந்த அண்ட சராசரங்களை எல்லாம் தொலைகாட்சிப் பெட்டியை கட்டுப்படுத்தும் ரிமோட் போல இயக்கிக் கொண்டிருக்கிறார் என்று நம்பினார்கள். சரி, ஆரியர்கள் உருவாக்கிய கருத்துமுதல் வாதத்தை ஏற்றுக்கொண்ட மதங்கள், அதாவது கடவுளை நம்பிய மதங்கள் சிலவற்றை பார்க்கலாம்.

  • நியாயம்
  • வைசேடிகம்
  • பூர்வமீமாம்சம்
  • உத்தர மீமாம்சம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மதங்களும் ஆரியர்கள் உருவாக்கியவை. அவை கடவுளை ஏற்றுக்கொண்ட மதங்கள். கடவுளை மறுத்த மதங்களும் நிறைய இருந்தன. அவை ஆரியர்கள் உருவாக்கிய மதங்களல்ல. அவை இந்தியாவில் தமிழர்கள் அல்லாத பிரிவினர் உருவாக்கிய மதங்கள். சைவமும், ஆசீவகமும் கடவுளை மறுத்த மதங்கள்தான், அவற்றை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டதால் இங்கு அவற்றின் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. சரி, பொருள்முதல் வாதம், அல்லது கடவுள் மறுப்பை மையமாக வைத்து வளர்ந்த மதங்கள் வரிசையில் முதன்மையானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மதங்கள் அனைத்தும் ஆரியர்கள் வருகைக்கு முன்பே இந்தியாவில் செழித்திருந்தன. கடவுள் மறுப்பு என்ற அறிவியல் சார்ந்த பார்வை எவ்வளவு உச்சத்தில் இருந்தன என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

  • சார்வாகம்
  • பெளத்தம்
  • சமணம்
  • சாங்கியம்
  • யோகம்

இவற்றில் சாங்கியம், யோகம் போன்ற மதங்கள் பின்னாட்களில் கடவுளை ஏற்றுக்கொண்ட மதங்களாக மாற்றப்பட்டு விட்டன. இவை அனைத்தும் கடவுளை மறுத்து வளர்ந்த மதங்கள்தான். ஆனால் இன்று அவை இந்து மதத்தின் அங்கம் போல் காட்சிப்படுத்தப்படுகின்றன. புத்தரை கிருஷ்ணனின் பத்தாவது அவதாரம் என்று குண்டைத் தூக்கிப் போட்டு, புத்த மதத்தையும் ஈர்க்க முயன்றது அன்றைய சனாதன மதங்கள் அல்லது வேத மதங்கள் என்ற ஆரியர்கள் உருவாக்கிய மதங்கள். தனது வாழ்நாள் முழுவதும் ஆரிய மத எதிர்ப்பையே மையமாகக் கொண்டு வாழ்ந்த புத்தருக்கே இந்த கதி.

இவற்றில் பல மதங்கள் காலப்போக்கில் அழிந்து போயின. யோகம், சாங்கியம் போன்ற மதங்கள், மதம் என்ற அடையாளத்தை இழந்து உடற்பயிற்சி என்ற அளவில் சுருங்கி, இன்று இந்து மதத்தின் உட்பிரிவுகள் போல் மாறிப்போய் விட்டன. ஆசீவகம், சார்வாகம் போன்ற மதங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. ஆரியர்கள் ஆடு, மாடு மேய்க்கும் கூட்டம். அவர்கள் தமிழர்கள் அளவுக்கு நாகரிகமானவர்கள் கிடையாது. ஆனால் தமிழர்கள் மதங்களை விட தங்கள் மதங்கள் உயர்ந்தவை என்று நம்பினார்கள். ஆனால் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பல மதங்கள் அதே வேகத்தில் அழிந்தும் போயின. இனி மதங்களை உருவாக்கி பயனில்லை என்று ஆரியர்கள் முடிவு செய்தார்கள். இங்கு இருக்கிற மதங்களை, நமது மதங்கள் என்று சொல்லிவிடலாம். அது எப்படி சாத்தியம். வரலாற்று வெள்ளத்தில் எல்லாம் சாத்தியம்தான். நினைவில் கொள்க. இன்னும் இந்தியாவில் இந்து என்ற மதம் புழக்கத்தில் வரவில்லை.

குள்ளநரிக்கூட்டம்

தமிழர்களின் மதத்துக்கும், ஆரியர்கள் மதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. தமிழர்கள் கடவுளுக்கு தானியங்களை, உணவுப்பண்டங்களை மட்டுமே படைப்பார்கள். ஆனால் ஆரியர்கள் தங்கள் கடவுள்களுக்கு ஆடு, மாடு, குதிரை போன்ற உயிர்களைப் பலியிடுவார்கள். தமிழர்கள் மனதால் வழிபடுவார்கள். ஆரியர்கள் யாகம் வளர்த்து மந்திரங்கள் சொல்லி வழிபடுவார்கள். ஆரியர்கள் என்ன மந்திர மாயங்கள் செய்தாலும் அவர்கள் மதங்கள் நிலைக்கவில்லை. இங்குதான் ஆரியர்களின் குள்ளநரித்தனம் வேலை செய்யத் துவங்கியது. மகாபாரதத்தில் திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று சொல்வார்கள். அதாவது எதிரியை கட்டிப்பிடித்தே கொன்று விடுவது திருதராஷ்டிரன் பழக்கம். அதேபோல் தங்களுக்குப் பிடிக்காத மதங்களுக்குள் நுழைந்து அதன் வரலாற்றை அழித்து விடுவது. இதைத்தான் ஆரியர்கள் செய்தார்கள். தாங்கள் வழிபடும் கடவுளும், தமிழர்கள் வழிபடும் கடவுளும் ஒன்று என்று நம்பும்படி செய்துவிட்டால்? பல ஆண்டுகள் கழித்து, அந்த மதத்தையே உருவாக்கியது தாங்கள்தான் என்று சொன்னால், நம்புவதற்கு ஒரு முட்டாள் கூட்டம் இல்லாமலா போய்விடும்? கூட்டமல்ல, நாடே அவர்கள் பக்கம் வருமென்று அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் அது ஆரிய மூளைக்குக் கிடைத்த வெற்றிதான்.

ஆரியர்கள் செய்த தந்திரம் என்னவென்று பார்க்கலாம். தமிழர்கள் வணங்கும் கடவுளின் பெயர் சிவன், ஆரியர்கள் வணங்கும் கடவுளின் பெயர் ருத்ரன். சிவனும், ருத்ரனும் ஒன்றுதான் என்று பொய் சொல்லி இரண்டையும் இணைத்தார்கள். இதேபோல் தமிழர்கள் வணங்கிய கடவுளின் பெயர் திருமால், ஆரியர்கள் வணங்கிய கடவுளின் பெயர் கிருஷ்ணன். திருமாலும், கிருஷ்ணனும் ஒன்றுதான் என்று இரண்டையும் இணைத்தார்கள். நாம் ஏற்கனவே சொன்னபடி, பல ஆண்டுகள் கழித்து, சிவன், திருமால் எல்லாம் நாங்கள் உருவாக்கிய கடவுள்தான் என்று சொன்னால் மக்கள் நம்பிவிடப் போகிறார்கள். வெள்ளையாக இருக்கிற ஆரியன், புரியாத மொழியில் மந்திரம் சொல்லும் ஆரியன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்குமென்று நம்புவதற்கு நாடே வரும்.

இப்படி கடவுள்களை இணைப்பதால் ஆரியர்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது, நாம் என்ன இழந்து விடப் போகிறோம் என்று நாம் சிந்திக்கலாம். நாம் ஏற்கனவே பார்த்தபடி ஆரியர்கள் வழிபாட்டு முறைகளும், நமது வழிபாட்டு முறைகளும் வேறு. சற்று சிந்தித்துப் பாருங்கள், மந்திரங்கள் ஓதாத, யாகங்கள் வளர்க்காத கோயில்கள் எங்கே இருக்கின்றன இப்போது. எல்லா கோயில்களும் ஆரியர்கள் வசம்தான் இருக்கின்றன. ஆனால் அனைத்தும் நாம் கட்டிய கோயில்கள். அதுமட்டுமல்லாமல், கோயில்கள் மற்றும் நமது வழிபாட்டு முறைகள் உணர்த்தும் மறைபொருள் ரகசியம் அழிக்கப்பட்டு விட்டது. இவையெல்லாம், நாம் நம் மதங்களை ஆரியர்களிடம் இழந்ததால் வந்த விளைவு. ஆரியமயமாக்கப்பட்ட தமிழர் மதங்கள் சிலவற்றையும் அவற்றுக்குப் பின்னால் இருந்த சில அறிவாளிகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்,

ஷண்மதமும் ஆதிசங்கரரும்

ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த பின் உருவாகிய பல மதங்கள் அழிந்துபோய், தமிழர்கள் மதங்கள் பலவற்றை தங்கள் மதங்களுடன் இணைத்துக்கொண்டார்கள் என்று பார்த்தோம். இவை ஆஸ்திகம், நாஸ்திகம் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. கடவுளை அல்லது வேதத்தை ஏற்றுக்கொண்ட, அதாவது கோவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் ஆரியர்களை மட்டும் கருவறையில் அனுமதிக்கும் மதங்கள் ஆஸ்தீக மதங்கள் என்று அழைக்கப்பட்டன. அவை மொத்தம் ஆறு. சமஸ்கிருதத்தில் ஆறு என்றால் ஷண். ஆகையால் அந்த ஆறு மதங்களும் ஷண்மதங்கள் என்று அழைக்கப்பட்டன. நமது முருகன் என்ற ஆறுமுகன், ஷண்முகன் ஆன கதை இப்போது விளங்குகிறதல்லவா. அந்த ஆறு மதங்களின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சைவம்
  • வைஷ்ணவம்
  • காணாபத்தியம்
  • கௌமாரம்
  • சாக்தம்
  • சௌரம்

சிவ வழிபாடு சைவம். விஷ்ணு வழிபாடு வைஷ்ணவம். கணபதி வழிபாடு காணாபத்தியம். முருக வழிபாடு கௌமாரம். சக்தி வழிபாடு சாக்தம். சூரிய வழிபாடு சௌரம்.நமது சைவமும், திருமால் வழிபாடும் ஆரியமயமாக்கப்பட்டதை கவனியுங்கள். இந்த ஆறு மதங்களையும், அதாவது ஆரியர்களுக்கு கோயில் கருவறைகளைத் திறந்துவிட்ட இந்த ஆறு மதங்களையும் இணைப்பதற்கு அரும்பாடு பட்டவர் ஆதிசங்கரர். கி.பி. 7ம் நூற்றாண்டில் கேரளாவில் காலடி என்னும் ஊரில் பிறந்தவர். அந்த ஊர் தற்போதைய எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது. ஆதி சங்கரர் 7ம் நூற்றாண்டில் இந்த மதங்களை எல்லாம் இணைத்து ஷண்மதம் என்றுதான் பெயரிட்டார். அதனால்தான் அவர் ஷண்மத ஸ்தாபகர் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஷண்மதம் என்றுதான் பெயரிட்டார். இந்து என்று பெயரிடவில்லை. ஏனென்றால் அப்போதும் இந்து என்ற வார்த்தை பழக்கத்துக்கு வரவில்லை.

ஆதிசங்கரர் கரடியாய் கத்தினாலும் இந்த மதங்கள் ஒன்றிணைவதாக இல்லை. சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டு செத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்து என்ற மதம் உருவாவதற்கு மூலகாரணமே இந்த ஷண்மதம் என்று கூறலாம். அந்த வகையில், இந்து மதத்துக்கான முதல் விதையைத் தூவியவர் என்ற பெருமை ஆதிசங்கரரையே சேரும். நாம் சிந்து சமவெளி நாகரிகம் முதல் கி.பி.7ம் நூற்றாண்டு வரை பயணம் செய்து விட்டோம், அனால் இன்னும் இந்து என்ற வார்த்தையைக் காணவில்லையே என்று தேடிக்கொண்டிருப்பவர்கள் நலனுக்காக இந்து என்ற வார்த்தை பிறந்த வரலாற்றைப் புரட்டியே ஆகவேண்டும்.

இந்து என்ற அந்நிய வார்த்தை

1791ம் ஆண்டு, இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலம். அப்போது இந்தியாவுக்கென்று ஒரு சட்டம் இயற்றும் பணி வில்லியம் ஜோன்ஸ் (William Jones) என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. வில்லியம் ஜோன்ஸ் ஒரு நீதிபதி, ஆனால் நீதிபதியாக பணியாற்றவில்லை. அதாவது தலைமை நீதிபதியின் எடுபிடி போன்ற ஒரு பதவி என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்குதான் இந்தியாவுக்கென்று ஒரு சட்டம் இயற்ற வேண்டுமென்று ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் வழக்கிலிருந்த, அவர் எழுதி முடித்த சட்டத்துக்கு அவர் இந்து சட்டம் (Hindu Law) என்று பெயர் வைத்தார். அவர்தான் இந்து என்ற வார்த்தையை இந்தியாவில் முதலில் பயன்படுத்திய பெருமைக்குரியவர். பயன்படுத்திய ஆண்டு 1791. கடைசியில் இந்தியாவுக்கு உள்ளே கூட இந்து என்ற வார்த்தை ஒரு அந்நியரால்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டப்படி, இந்து என்ற வார்த்தையின் விளக்கத்தை நாம் மீண்டும் நினைவுகூர வேண்டும். “யார் முஸ்லீம்கள் இல்லையோ, யார் கிறிஸ்தவர்கள் இல்லையோ, யார் பார்சீக்கள் இல்லையோ அவர்கள் எல்லாம் இந்துக்கள்”. இந்த வார்த்தைகளில் கூறப்பட்ட மதங்களை விட்டுவிடலாம். இந்தியாவில் வழக்கத்திலிருந்த சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, முருக வழிபாடு, சமணம், பெளத்தம், சீக்கியம் போன்ற மதங்கள் எல்லாம், இந்து என்ற வார்த்தைக்குள் அடங்கிப் போய்விட்டன. இத்தனைக்கும் சைவம், மாலியம், சமணம், பெளத்தம் போன்ற மதங்கள் கடவுளை மறுத்த மதங்கள். இவை தவிர மேலும் நூற்றுக்கணக்கான மதங்கள் இந்து என்ற அந்த ஒற்றை வார்த்தைக்குள் ஈர்க்கப்பட்டு விட்டன. இந்து மதத்திற்கு காந்தம் என்ற பெயர் சரிதான் என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தியாவில் உருவான எந்த ஒரு மதத்துக்கும் இந்து என்ற சாயம் பொருந்தாது. இந்து என்ற வார்த்தையின் வரலாறே 1791ம் ஆண்டுதான் துவங்குகிறது. உங்கள் மதத்தின் வரலாறு தெரிய வேன்றுமென்றால், உங்கள் மதத்தின் உண்மைப்பெயரைக் கண்டறிந்து (அது சைவமோ, கௌமாரமோ, வேறு எதுவோ) அந்த பெயரில் உங்கள் மதத்தின் வரலாற்றைத் தேடுங்கள். ஏனென்றால் உங்கள் மதம் எங்கே புதைக்கப்பட்டதோ, அந்த இடத்தில்தான் இந்து என்ற மதமே முளைத்திருக்கிறது.

உதவிய நூல்களும் இணையதளங்களும்