பழைய நினைப்புதான் பேராண்டி

துணை முதல்வர் ஓ,பி.எஸின் இளைய மகன், வி.ப.ஜெயபிரதீப் திருப்பூரில் தொழில் செய்யும் இடம் 200 கோடி மதிப்பிலானது. வீடுகட்டி விற்பனை செய்துவரும் அங்கு, வேலைக்கு ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார். அதற்கு வீட்டுவசதி துறையிடம் ஒரே நாளில் அனுமதி பெற்றிருக்கின்றார் என்ற குற்றச்சாட்டை திமுக தலைவர் ஸ்டாலின் முரசொலியில் எழுதியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த வி.ப. ஜெயபிரதீப் எம்.பி.,‘நான் வீடுகட்டி விற்கும் தொழிலை செய்வதில்லை. நிலத்தை வாங்கி ப்ளாட்போட்டு நிலமாகதான் விற்று வருகின்றேன். வீடே கட்டாத பொழுது, அங்கு ரோபோக்களை எப்படி வேலைக்கு வைத்துக்கொள்ள முடியும். தவிர நான் எல்லா அனுமதியையும் முறையாகத்தான் பெற்றேன் என்பதற்கு ஆதாரமாக, ‘மூலப்பத்திரத்தில் இருந்து’ அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருகின்றேன்.

நீங்கள் முரசொலி இடத்திற்கான மூலப்பத்திரத்தையும்-கட்டிடம் கட்டியதற்கான ஆவணங்களையும் எடுத்துவாருங்கள். மக்கள் முன் வைப்போம். மேலும் ஸ்டாலினே அந்த இடத்திற்கு 200 கோடி மதிப்பு என்று கூறிவிட்டார். அந்த தொகையை கொடுத்தால், நாளையே நான் அவருக்கு எழுதிக் கொடுத்துவிடுகிறேன். 200 கோடி வேண்டாம். 100 கோடி கொடுத்தாலும் போதும். அதுகூட வேண்டாம் 50 கோடி கொடுத்தாலும் போதும். அந்த திருப்பூர் இடத்தை அவர்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விடுகின்றேன்” என்று பதில் அறிக்கை விட்டுள்ளார்.

இதைப் படித்தவுடன் சிரிப்பு. ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி..

1977- எம்ஜிஆர் முதல்வராகியிருந்த சில மாதங்கள் கழித்து.

‘பார்த்தாயா உடன் பிறப்பே. நம்மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்த நடிகரின் ஆட்சியில் நாளெல்லாம் ஊழல். நாடெல்லாம் ஊழல் என்று முரசொலியில் தீட்டிவிட்டார் கலைஞர்.

அதற்கு பதில் அளித்த நாஞ்சில் மனோகரன், எம்ஜிஆரின் ‘தென்னகம்’ நாளேட்டில், ரத்தத்தின் ரத்தமே, பார்த்தீர்களா, பொன்மனச் செம்மல் ஆட்சியில் ஊழல் நடக்கிறதாம் என்று விமர்சித்து, ‘அரசியல் அசிங்கம் நீ. தமிழகத்தின் கலங்கம் நீ’ என்று கலைஞரை சாடி முடித்திருந்தார்.

அடுத்த நாள் முரசொலியில் எழுதிய கலைஞர், “உடன் பிறப்பே. நாளேட்டை பார்த்தாயா. அந்த ‘மந்திரக்கோல்’ (நாஞ்சில் மனோகரன்) என்ன எழுதியிருக்கிறதென்று! என தொடங்கி, சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் முடங்கிக்கிடந்து, அங்கு மிஞ்சியதைத் தின்று வளர்ந்த ’மந்திரக்கோல் மனோகரனுக்கு’ இன்று அண்ணா நகரில் பத்து லட்சம் ரூபாயிலான பங்களா. கதவுவும் சன்னலும் சந்தனத்தால் இழைக்கப்பட்டது. எப்படி வந்து அந்த வசதி” என்று இறங்கி அடித்திருந்தார்.

அடுத்த நாள் ‘தென்னகம்’ நாளேடு சூடாகியிருந்தது. கலைஞரை கடுமையாக விமர்சித்திருந்த நாஞ்சில் மனோகரன், “ஏ கருணாநிதியே. நான் குடியிருக்கும் வீடு பத்து லட்சமா? சவால் விடுகின்றேன். அந்த தொகைக்கே நான் விற்க தயார். நீ வாங்க தயாரா.” என்று தாக்கிவிடுவிறார்.

மறுநாள், முரசொலி கொதித்தது. ‘பார்த்தாயா உடன் பிறப்பே. மந்திரக்கோல் சவால் விடுகிறது. அந்த சவாலை ஏற்போம். ‘அனுப்பு பணத்தை. வாங்குவோம் வீட்டை’ என்று சூடாக சாடி முடிக்கின்றார் கலைஞர்.

அடுத்தடுத்த சில நாட்களில் இருந்து திமுக தொண்டர்கள் பணத்தை அனுப்பத் தொடங்கினார்கள். யார் யார், என்ன தொகை என்ற பட்டியல் நாள்தோறும் முரசொலியில் வந்தது. குறிப்பிட்ட தொகை பத்து லட்சத்தை தாண்டி 13 லட்சம் வரை சேர்ந்தது. கொஞ்ச காலம் நகர்ந்தது. அதற்குள் அரசியல் களமும் மாறியது.

கருத்து வேறுபாடு என்று எம்ஜிஆரிடம் இருந்து பிரிந்த நாஞ்சில் மனோகரன் திமுக-வில் கலைஞரிடம் வந்து சேர்ந்தார். அண்ணாநகர் வீட்டை விற்பதாகச் சொன்ன நாஞ்சில் மனோகரனும், வீட்டை வாங்கிவிடுவதாகச் சொல்லி தொண்டனிடம் நிதி வசூல் செய்த கலைஞர் ஒரே மேடையில்..

வழக்கம் போல் கலைஞர், ‘அருமைச் சகோதர், வித்தகர், அப்படி இப்படி என்று நாஞ்சில் மனோகரனை உயர்த்திப் பேச, பணத்தை அனுப்பிய அந்த தொண்டர்கள் வழக்கம்போல் விசிலடித்து ஆராவராரம் செய்துகொண்டிருந்தார்கள். அந்த பணம் என்ன ஆனது? தெரியாது.

இதுதான் அரசியல்…

(ப்ளாஷ்பேக் ஸ்டோரி. திருச்சி வேலுசாமியின் ‘அரசியல் ஆடுகளம்’ (அனுபவம்) புத்தகத்திலிருந்து..)

குறிப்பு. இன்று நடந்த சம்பவத்தை வைத்து, பழைய ப்ளாஷ் பேக் சம்பவத்தைச் சொன்னேன். சிரித்துக்கொள்வதும் சீரியஸாக எடுத்துக்கொள்வதும் அவரவர் மனநிலை.! நான் பொறுப்பல்ல.

— பா. ஏகலைவன்
மூத்த பத்திரிக்கையாளர்

https://m.facebook.com/story.php?story_fbid=3299571756721601&id=100000064280192

என் பெயர் கரிகாலன் என்கிற…

19.5.1982 அன்று சென்னை பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிக் சண்டைக்கு முன்பு…

மயிலாப்பூரில் உள்ள சாலைத் தெருவில் தான் பிரபாகரன் தங்கிருந்தார். அதற்கு முன்பு பெசண்ட் நகர் வேளாங்கன்னி கோயில் எதிரே இன்று முருகன் இட்லி கடை உள்ளதே, அதற்கு பின்புறம் ஒரு வீட்டில் குடியிருந்தார். அந்த ஏற்பாட்டை எல்லாம் செய்தது பழ.நெடுமாறன் அவர்களும், அவரோடு இருந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும்தான். அங்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்க, பெரும் சிக்கலானது.

அதன் பிறகுதான், வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த மயிலாப்பூர் சாலைத்தெருவிற்கு இடமாற்றமானார் தலைவர்.

அப்போது முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனுக்கும், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் முரண்பாடு முற்றி மோதலில் நகர்ந்துகொண்டிருந்தது. உமா மகேஸ்வரன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தார். தலைவர் பிரபாகரன் அவர்கள் மயிலையில்.

புலிகள் இயக்கம் பிரதான அறிமுகமில்லா காலம் அது.

குறிப்பிட்ட அந்த நாளில், ரவீந்திரன், ஜெகதீஸ்வரன் ஆகிய இரண்டு போராளிகளோடு பாண்டிபஜாருக்கு சென்றார் தலைவர் பிரபா அவர்கள். அங்கே எதேச்சையாக முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரனும் எதிரில் வந்தார். சந்தித்துக்கொண்டபோதில் பழைய முரண்பாடுகளைப் பற்றி பேச, அது முற்றி ஆவேசத்தில் முடிய, இருவருமே தற்காப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்கள்.

தலைவர் பிரபாகரனும் அவருடனிருந்தவர்களும் நாற்காலியில் உட்கார்ந்திருந்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் வீட்டிற்கு ஒரு ஆங்கில பத்திரிகை நிருபர், ‘என்ன சார், என நடந்த சம்பவத்தைச்சொல்லி, கைதான நபர் உங்க வீட்டில்தான் தங்கியிருந்தாராமே’ என்ற தகவலைச் சொல்ல, உடனே ஆட்டோ பிடித்து பாண்டிபஜார் காவல் நிலையம் சென்றார்.

நடந்த விடயத்தைச் சொல்லி, “நான் இப்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். ஆனபடியால் இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டியது என் கடமை. அதான் துப்பாக்கிச் சண்டை முடிஞ்சதும் நானே போலீஸ்கிட்ட அரெஸ்ட்டாகிட்டேன்” என்று நடந்ததை சொன்னார்.

காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன், துப்பாக்கி சண்டை போட்டக்கொண்டவர்களை நக்ஸலைட்டுகள் என்றே கூறினார். இலங்கை போராளிகள் இயக்கம் பற்றி ஏதும் அவருக்கு தெரியாது. பிரபாகரன் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் துப்பாக்கியை கொடுத்துவிட்டு, தங்களோடு வந்ததாக கூறினார் இன்ஸ்பெக்டர்.

(இரண்டு நாட்கள் கழித்து உமா மகேஸ்வரன் (முகுந்தன்) பூண்டி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, அவரும் சிறையில் அடைக்கப்பட்டார்.)

தலைவரின் வாக்குமூலம் இப்படித் தொடங்குகிறது.

“என் பெயர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன். நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவன். நாங்கள் எங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் விடுதலை வீரர்கள்” என்று தொடங்கி TNT(Tamil National Tigers) என்ற பெயரில் இயக்கம் இருந்தது, முகுந்தனை விட்டு பிரிந்த பிறகு LTTE என்ற இயக்க்ததை தொடங்கியது என்பதை சொல்லி, நடந்த துப்பாக்கி சண்டையின் பின்னணியையும் எழுதிக்கொடுத்தார்.

அடுத்த நாள் அவர் சென்னை மத்திய சிறையில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே இருந்த சிறை) அடைக்கப்பட்டார். அதுவரையிலும் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்தான் உடன் இருந்தார். வேறு யாருமில்லை. ஜாமீன் விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் வானமாமலை இருந்துள்ளார்.

செய்தி வெளியாக, இலங்கை அதிபர் ஜெயவர்தனே, ‘பிரபாகரன்-முகுந்தன் உள்ளிட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்தியாவுக்கும்-இந்திராவுக்கும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.

தகவல் கிடைத்து, மதுரையில் இருந்து அடித்துப் பிடித்துவந்த பழ.நெடுமாறன் அவர்கள், முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தகவலைக் கூறிவிட்டு, உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்தார். ஓமந்தூரார் தோட்ட வளாகத்தினுள், பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்த பழ.நெடுமாறன் அலுவலகதில் தான் அந்த கூட்டம் நடந்தது.

அந்த வளாகத்திற்குள்ளாகவே இருந்த திமுக-வின் கட்சி அலுவலத்தில் இருந்த கலைஞரை, வழக்கறிஞர் கே. எஸ் ராதாகிருஷ்ணனும், பேபி சுப்ரமணியனும் நேரில் சென்று சந்தித்து, நடந்தவைகளை கூறினார்கள்.

கருணாநிதி கேட்டுக்கொண்டரே ஒழிய எந்த கருத்தையும் கூறவில்லை.

அனைத்துக்கட்சி கூட்டதிலும் திமுக-கருணாநிதி சார்பாக ஒருவரும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் கலந்துகொள்ளவில்லை. ஆளும் கட்சி என்றதால், எம்.ஜி.ஆர்-அதிமுக தரப்பில் யாரும் வரவில்லை.

ஆனால், ‘இப்படி ஒரு கூட்டம்-தேவை’ என்பதை எல்லாம் எம்ஜிஆரும்-நெடுமாறனும் தான் திட்டமிடுகிறார்கள்.

அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, கா.கா.தே.கா (காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸ்) குமரி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலர் பா.மாணிக்கம், ஜனதா கட்சி இரா.செழியன், பார்வர்டு பிளாக் ஆண்டித்தேவர், லோக்தல் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளும் பங்கேற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கரிகாலன் என்கிற வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட போராளிகளை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது என்பதுதான் தீர்மானத்தின் அழுத்தம்.

அந்த அந்த தீர்மானத்தோடு அடுத்தநாள் டெல்லிக்கு சென்றார் பழ.நெடுமாறன். கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் உடனிருந்தார்.

பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்து, நடந்தவைகளை எல்லாம்கூறி, “பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்கக்கூடாது” என்பதை வலிறுத்தி கோரிக்கை மனுவை அளித்தார்கள்.

அப்போது இந்திராகாந்தியின் ஆலோசகராக இருந்தவர் பார்த்தசாரதி ஐயங்கார். (அண்ணல் அம்பேத்கர் சட்டவரைவை எழுதிய குழுவில் இருந்த கோபால்சாமி ஐயங்காரின் மகன்) அந்த பார்த்தசாரதி ஐயங்காரும் அங்கே இருந்தார்.

அந்த ஐயங்காரும் ‘பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைக்ககூடாது. பங்களாதேஷ்கு விடுதலையை வாங்கிக்கொடுத்ததைப் போல் இவர்களுக்கும் (தமிழீழம்) விடுதலையை வாங்கிக்கொடுக்க வேண்டும்’ என்ற கருத்தை பார்த்தசாரதி ஐயங்காரும் கூறினார்.

இங்கே திமுக-வின் பங்கு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் சில உடன் பிறப்புகள் எழுதி வருவதைப்போல், பிரதமர் இந்திராவிடம் வலியுறுத்தி கடிதம் ஏதும் கலைஞர் அளிக்கவில்லை. பிரதமரிடம் பேசவுமில்லை.

ஆனால், சில நாட்கள் கழித்து, ‘பிரபாகரனை இலங்கையில் ஒப்படைக்கக்கூடாது’ என்ற அறிக்கை அளித்திருக்கின்றார்.

நடந்தது இதுதான். எல்லா கட்சிகளுடனும் பேசி ஓடி உழைத்தது எல்லாமும் பழ.நெடுமாறன் அவர்கள்தான், சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்தது வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்தான். அறிக்கை விட்டு ஆதரித்து நின்றுகொண்டார் கலைஞர்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் அப்படி சிறைச்சாலைக்கு சென்று தலைவர் பிரபாகரன் அவர்ளை சந்தித்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில்தான் வைகோ உள்ளிட்ட சிலரை அழைத்து சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

தலைவர் கலைஞர் ஆதரித்தார். பின்னாளில் உதவியுமிருக்கலாம். ஆனால் அவர்தான் பிரபாகரன் அவர்களை அன்று காத்தார். இல்லை என்றால் இந்த பிரபாகரனே இருந்திருக்க மாட்டார் என்று ‘யுனஸ்கோ விருது’ கணக்காக அடித்துவிட்டு, வரலாற்று திரிபு வேலைகளை செய்யக்கூடாது என்கிறோம்.

பா. ஏகலைவன்
மீள்பதிவு.

கருணாநிதி தமிழரா? நிருபிக்க முயற்சித்தாரா?

நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா? என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார்.

தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:


“இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா? இல்லையா? என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?

என் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன்.

கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா? இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.
நான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்?


ஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா? கருணாநிதி தமிழனா? என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா?

இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா? நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா? நான் தமிழனா? என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்.”

(ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து…)
Source from http://www.ithayakkani.com and published in our Ithayakkani magazine April 2013 issue.

இது ஒரு மறு பதிவு

Ithayakkani S Vijayan

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் ஒரு தமிழனா?

1978-ம் ஆண்டு எம்ஜிஆரை மலையாளி என்று சொல்லி விடுகிறார் கருணாநிதி. இதனால் அதிர்ச்சியுற்ற எம்ஜிஆர் சில அறிஞர்களை அழைத்து, ‘தனது பூர்வீகம் என்னவென்று கண்டுபிடியுங்கள்’ என்று கூறுகிறார்.ஆய்வு செய்த அந்த அறிஞர்கள் எம்ஜிஆரின் முன்னோர் மன்றாடியர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும்
அவர்கள் கோவை பகுதியைச் சேர்ந்தவர்கள்’ என்றும் அவர்கள் பிழைப்பதற்காக கேரளா சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று தமிழகம் திரும்பி வந்ததாகவும் கூறினார்கள்.தன் பூர்வீகத்தை உறுதிப் படுத்திக் கொண்ட MGR, பின்னர், கருணாநிதியின் பூர்வீகத்தை ஆராயுமாறு அவர்களிடம் கூறினார். அவர்கள் கருணாநிதியின் பூர்வீகத்தை ஆராய்ந்து கருணாநிதியின் பூர்விகம் ஆந்திரா என்றும் அவர்கள் முதலில் பிழைப்புக்காக மஹாராஷ்டிரா சென்று பின்னர் அங்கிருந்து தமிழகம் வந்ததாக சொன்னார்கள்.1978-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி மதுரை தமிழ்ச் சங்க விழாவில் பேசிய எம்ஜிஆர் இந்தத் தகவல்களை சொல்லி இருக்கிறார். இது செய்தியாக மாலை முரசு பத்திரிகையில் வந்துள்ளது. அதன் பின்னர் 1984 ல் அ இ அதிமுக அமைச்சர் குழந்தைவேலு சட்டமன்றத்தில் ஆதார பூர்வமாக கருணாநிதி தெலுகர் என்று கூறியதற்கு கருணாநிதி மறுப்பு கூறவில்லை என்றும், தமிழக சட்டப் பேரவை குறிப்புகளில் இன்றும் இதை பார்க்கலாம் என்றும் கூறப் படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் கருணாநிதி MGR ‘மலையாளி’ என்ற பிரச்சனையை எழுப்பவே இல்லை.ஆக, “தமிழின பாதுகாவலர் என்று பெயர் பெற்ற கருணாநிதி ஒரு தெலுங்கர். கருணாநிதியின் முன்னோர்கள் ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திருவாரூர் கோவிலில் மேளம் அடித்து வாழ்ந்தவர்கள். சின்ன மேளம் என்று பெயர் பெற்ற இவர்கள் மரபு பின்னர் திமுக ஆட்சி காலத்தில் இசை வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது.https://youtu.be/dLA1sfQaLNIகருணாநிதி பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் என்று தெலுங்கு
‘என்டிவி’ வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.https://www.youtube.com/watch?v=dxqWM5d6mfwகருணாநிதி ஒரு தெலுகுவாடு. அவரது தாய்மொழி தெலுங்கு. – ‘யோயோ தெலுங்கு டிவி’ வெளியிட்டுள்ள செய்தித் தொகுப்பு.https://www.youtube.com/watch?v=XsCvMawDT8kமேலும் HMTV செய்திhttps://youtu.be/B4MRbvvF1Hkமு க அவர்கள் தெலுங்கர்.
ராமசாமி நாயக்கர் தெலுகர். இவர்கள் இணைந்து உருவாக்கிய திராவிட இயக்கம் ஏன் அந்த பெயர் பெற்றது? திராவிடர் என்பவர் தி‌ரி வடுகர் எ‌ன்ற தெலுங்கர் (ம போ சி). போனது போகட்டும். இனிமேலாவது நாம் விழித்து கொண்டால் தான், நமது சந்ததியினராவது இவர்களது நயவஞ்சக வலையிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள்.

தமிழர் என்பதால் ஏளனமா?

கடந்த திங்கட்கிழமை (சனவரி 14, 2019) தமிழக அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு கொடுத்துள்ள பேட்டியில் 42 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தமிழினத்திலிருந்து வந்த தமிழகத்தின் முதல் முதல்வரான பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டிக்கொள்ளலாம் என்று மெத்தனமாக கூறியிருக்கிறார்.

அவரது பேட்டி அடங்கிய செய்தியை கீழே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்பதாக கோபிச்செட்டிப்பாளையத்தில் நுழைவு வாயில் அமைத்து அதில் காமராசரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இது புணரமைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவாக எம்.ஜி.ஆர். பெயருடன் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு கோபி பொது மக்களும் தமிழ் ஆர்வலர்களாலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.

காமராசர் பெயர் பொறிக்கப்பட்ட படம்

இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் 42 லட்சம் கொடுத்துவிட்டு காமராசர் பெயர் வைத்துக்கொள்ளலாம் என்று திமிராக கூறியுள்ளது பலரது மனதை புண்படுத்தியதோடு கோபமடையவும் செய்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையனுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டிருக்கிறது. அவருக்கு முன்வைக்கப்படும் கேள்விகள் சில..

காமராசரும் எம்.ஜி.ஆர். ம் முன்னாள் தமிழக முதல்வர்கள். காமராசரின் பெயர் சூட்ட 42 லட்சம் கேட்கும் அமைச்சர் யாரிடம் 42 லட்சம் வாங்கிவிட்டு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட முனைகிறார்?

ஒரு திட்டத்திற்கு பெயர் சூட்ட பொதுவெளியில் 42 லட்சம் லஞ்சமாக கேட்கும் அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

பாஜக வின் எடுபிடியாக தமிழக அரசு செயல்படுவதால் காமராசரின் பெயரை இருட்டடிப்பு செய்ய முற்படுகின்றனரா?

தமிழரான காமராசரது பெயரைச் சூட்டாமல் மலையாளியான எம்.ஜி.ஆர். பெயரைச் சூட்டுவதின் மர்மம் என்ன?

தமிழகத்தில் இதுவரை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் பெயர்களை சூட்டிய ஒவ்வொரு திட்டத்திற்கும் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக பெற்றிருக்கின்றனர்?

இன்றைய தமிழக அரசை பொறுத்தவரையில் தண்டை எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலையில் தான் செயல்படுகிறது.

எம் ஜி ஆர் மூலம் வளர்ந்த முரசொலி மாறன்

எம்ஜிஆர் கலைஞருக்கு மட்டும் உதவவில்லை, முரசொலி மாறனுக்கும் சேர்த்துதான் உதவியுள்ளார்.. இன்று சன்டிவி யின் பிரமாண்ட வளர்ச்சிக்கும் அன்றே விதை விதைத்தவர் எம்ஜிஆர்..

“எங்கள் தங்கம்” திரைபடத்தின் 100வது நாள் விழா 16.1.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.. அந்த விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா கருணாநிதி மற்றும் முரசொலி மாறன் கலந்து கொண்டனர்..

அந்த விழாவில் பேசிய முரசொலி மாறன்:

முரசொலி பத்திரிக்கை நஷ்டத்தில் நடைபெற்ற காரணத்தினாலும் மேலும் தொடர்ந்து எங்கள் படங்கள் தோல்வி அடைந்த காரணங்களாலும் எங்களது குடும்பம் கடன்கார குடும்பமாக மாறிவிட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. வீட்டில் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது..

குடும்பமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது..இந்த நிலைமையை புரட்சிதலைவர் எம் ஜி ஆர் அவர்களிடம் சொன்னேன் . உடனே புரட்சித்தலைவரும் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களும் இந்த “எங்கள் தங்கம்” படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்தது மட்டுமில்லாமல் படத்தை மிகப் பெரிய வெற்றி அடைய செய்து அணைத்து சொத்துக்களையும் மீட்டு கொடுத்துள்ளனர்.

எங்கள் சொத்துக்களை மட்டுமல்லாது எங்கள் மானத்தையும் மீட்டு தந்தவர்கள் புரட்சிதலைவர் மற்றும் கலைச்செல்வி ஜெயலலிதாவுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி கடன் பட்டுள்ளோம்,…

அதே விழாவில் திரு கருணாநிதி..

மாறன் பேசும் போது புரட்சி நடிகர் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் செய்த உதவியை குறிப்பிட்டு பேசினார்..குடுத்து குடுத்து சிவந்த கரம் கர்ணன். அனால் எங்கள் திராவிட கர்ணன் புரட்சி நடிகர் குடுத்து குடுத்து மேனியே சிவந்து விட்டது. கொடுத்து கொடுத்து சிவந்த கரம் வாழ்கின்ற காரணத்தினால் அவர் வாழும் மாவட்டத்திற்கு செங்கை மாவட்டம் என பெயர் வந்தது நன்றி மறப்பது நன்றன்று என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மாறனின் நன்றி உணர்ச்சியை நானும் வழி மொழிகிறேன்.

உணர்ந்தெழுக தமிழினமே!

தமிழர்கள் நமக்கு வரலாற்று அறிவு‌ குறைவு. இன்றைய விளம்பரங்களால் நேற்றைய நிகழ்வுகள் தெரியவில்லை.
ஒரு அறை நூற்றாண்டில் திராவிட கட்சிளின் இடைவிடாத ஆட்சிகள் திரைப்பட நடிக நடிகையரை முன்னிருத்தி தமிழர் தமிழ்நாடு என்ற உணர்வுகளை நீர்த்துப் போக செய்துவிட்டன. இன்றைக்கு யார் வேண்டுமானாலும் துணிந்து அரசியல் பேசலாம் என்ற துணச்சலை ஏற்படுத்தி உள்ளது.

கருணாநிதியும் எம்சிஆரும் அரசியல் களம் கண்ட போது இருந்த தமிழர் என்ற உணர்வு நம்மை மெய் சிலிர்க்க வைத்தது. எம்சி இராமச்சந்திரன் மலையாளி என்பது மக்களில் பலருக்கு தெரியாது. தெரிந்த பின்னால் அவர் நல்லவர். ஆனால் கருணாநிதி கெட்டவர். அதனால் எம்சிஆரை ஆதரிக்கலாம் என பலரும் பேசினர். இந்த சண்டையில் தான், என்னை நீ மலையாளி என்றால்.. நீ மட்டும் என்ன தமிழனா? தெலுங்கர் தானே என எம்சிஆர் கேட்க,
வெகுண்டெழுந்து கருணாநிதி
“நீ என்ன என்னை அப்படி சொல்வது? நான் தமிழன் தான் என வாழ்ந்து காட்டாமலே போனார். 1965 ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் கடுமையாக நடந்து கொண்டு தமிழர்கள சுட்டுக் கொன்ற அன்றைய முதலமைச்சர் தமிழர் பக்தவத்சலம் அவர்களை மறக்காத தமிழர் உலகம். அதை தொடர்ந்து வந்தவர்களால் தமிழகம் சொல்லொண்ணா துன்பத்தில் தவிக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் நடக்கிறது.
தமிழ் நாட்டில் திராவிடம் எழுந்ததன் நோக்கம் தமிழர் பலருக்கும் இப்பொழுத்து தான் புரிகிறது.

இன்றைக்கு தமிழனென்று பேசாமலே தமிழ்நாட்டில் அரசியல். கண்டவன் எல்லாம் தமிழ் நாட்டிற்கு உழைக்க வருகிறான். காரணம்? தமிழ்நாடு வழி போக்கர் இடமானது. இப்பொழுதெல்லாம் ஊழல் செய்வதற்கும் கூட பிற மொழிக்காரர்கள் வந்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழர் நமக்கு தான் எதுவும் இல்லை. தமிழ் நாட்டு அரசியல் தமிழர் நம் கையில் இருந்தால் தானே.. தமிழ் நாட்டின் முன்னேற்றம் பற்றிய சிந்தனை வரும்? கேட்கின்ற கேள்விகளுக்கு சரியான பதில் வரும்?

சிங்கமாய் இருக்கலாம். ஆனால் அதன் தலை சிங்கத்திற்கு உரிய தலையாக இல்லாமல் பூனை தலையாக இருந்துவிட்டால்?.. பூனைத் தலையால் கர்ச்சனை செய்யவா முடியும்?
பாவம் ஓரம் ஒதுக்கலில் நின்று இலவய ஓணான்களுக்கும் பல்லிகளுக்கும் மிஞ்சிப் போனால் எலி வளை ஓரத்திலும் தவம் கிடக்க வேண்டியது தான். பூனைகளின் தலை(மை)களால் அதைதான் செய்ய முடியும். மான்களை, மதிக்க மறந்த யானகளை சீண்டி விளையாடும் நரிகளை, தன்னையே வேட்டையாட வரும் செந்நாய்களை பார்த்து வினையாடவா முடியும்?

இன்றைக்கு எலிகளாக சிக்கல்கள் நம்மேல் விழுந்து விளையாடுகின்றன. தமிழர் இன்று பத்தோடு ஒன்று பதினொன்று. அவ்வளவே!*
தமிழ்நாடு வரலாற்று காலம் தொட்டே சிறப்பு மிக்கது. கங்கை கொண்டான். கடாரம் கொண்டான் என புகழ் படைத்தது. இந்திய மொழிகளிலே பல நாடுகளில் வாழும் மக்களென வாழ்வது.

அறிவிலும் வீரத்திலும் அன்றும் இன்றும் சிறந்து விளங்கும் இனமாக இருப்பது. அது மட்டுமா? நம் மண்ணே மணம் வீசும் மலர் பூக்களை பெற்றெடுப்பது.
ஆனால் கடந்த இரண்டு தலை முறைகளாக நம்மவர்கள் செய்த தவறால் தமிழ்நாடு தன் வளம் இழந்து, செழுமை இழந்து, வரலாற்று புகழ் இழந்து, இங்கு யார் யாரெல்லாமோ வந்து நமக்கு அறிவுரையும் பொழிப்புரையும் வழங்க.. கைதட்டல்?! நினைத்தால் மனம் கதருகிறது. உலக அரசியல் பேச வேண்டிய தமிழரினம் உள்ளூர் அரசியலில் தடம் பதிப்பது தான் எப்போதும்? எந்த நாளோ.. உணர்க உள்ளூர் தமிழினமே ஓடுகாலிகளல்ல நாம்.!
வணக்கம்.

பாவலர்
மு. இராமச்சந்திரன்
தலைவர்.
தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

கேள்விகளாக மாறுங்கள்!

தமிழ்தேசியவாதிகளே! திராவிடர்கள் எப்பொழுதுமே கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார்களே ஏன்?

நமக்கெதிராய் கேள்வியெழுப்பும் ஒரு திராவிடவாதிகளேனும் நமது ஒற்றைக் கேள்விக்கேனும் பதில் அளித்ததுண்டா?

அவர்களென்ன கேள்வி கேட்கவே பிறந்தவர்களா?

நாமென்ன பதில் அளிக்கவே நேந்துவிடப்பட்டவர்களா?

கேள்வி கேட்பவனே அறிவாளி என்ற பொதுபுத்தியை மக்களிடம் உருவாக்கிவிட்ட திராவிடவாதிகள் ஒருபோதும் பதில்களைத் தேடியவர்கள் அல்ல; பதில்களை சொல்பவனே ஆகச்சிறந்த அறிவாளிகளென்ற பொது அறிவே இல்லாத இத்தமிழ்சமூகத்தில் நமது மிகச்சிறந்த ஆய்ந்தறிந்த தெளிந்த பதில்களும் முட்டாள்தனமாகதான் புரிந்துகொள்ளப்படும்.

இதுவரை இந்த நடைமுறை யதார்த்ததை புரிந்துகொள்ளாததே நமது சிக்கல். இதனை புரிந்துகொண்ட திராவிடவாதிகளே. கேள்வி கேட்பவனே உயர்ந்தவனென்ற தோரணையில் இதுவரை கேள்விகளை மட்டுமே எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
கேள்விகளும் புதிதாக கேட்கப்படாமல் கேட்ட கேள்வியையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதுவும் ஒரு சூழ்ச்சியே. ஒரே இடத்தில் நம்மை சுற்றிவிடுகிறார்கள். நாம் இந்த இடத்த கவனமாக அவதானித்து புதியதொரு நடைமுறையை முன்வைக்க வேண்டும்.

ஆம். இனி நாம் பதில்களாக இருக்க வேண்டாம் உறவுகளே. நமக்கெதிரான ஒவ்வொரு கேள்விகளுக்கும் மற்றுமொரு கேள்வியாகவே நிற்போம்.

தமிழர் நாட்டை தமிழர்தான் ஆள வேண்டுமா? என்ற கேள்வி எழும்போதே

இந்திய நாட்டை இந்தியர்தான் ஆளவேண்டுமா? ஆங்கிலேயர்கள் ஆளக்கூடாதா? தமிழர் நாட்டை மலையாளி ஆளவாரெனில் தனியாக மலையாள தேசம் எதற்கு?
தமிழ்நாட்டோடு இணைக்கலாமா?
தமிழர் நாட்டை கன்னடர் ஆள்வாரெனில் கர்நாடாகாவில் எதற்கு தனியாக சட்டமன்றம்?
தமிழ்நாட்டோடு கர்நாடகாவை ஏன் இணைக்க கூடாது? தமிழர் நாட்டை தெலுங்கர் ஆள்வாரெனில் ஆந்திரா தெலுங்கானவாவில் எதற்கு தனியாக தேர்தல் நடத்த வேண்டும்?
தெலுங்கர்கள் அவ்விரண்டயும் தமிழ்நாட்டோடு இணைப்பார்களா?
ஒரு மாநிலத்தை யார் வேண்டுமானாலும் ஆளலாமெனில் எதற்கு இத்தனை மொழிவழி மாநிலங்கள்?

தமிழரே ஆள்வதென்பது இனவெறி ஆகாதோ? என்ற கேள்வி எழும்போதே

வெள்ளையனே வெளியேரென்ற முழக்கம் நிறவெறியாகாதா?
திராவிட நாடு திராவிடர்கே என்பது இனவெறி ஆகாதா? இந்தியா என்ற சொல் பிறப்பதற்கு முன்பே மூவேந்தர்களால் ஆளப்பட்டவர்கள் தமிழ்தேசிய இனமக்கள் என்பதை அறிவீரோ? இந்தியா பல்வேறு மொழிவழி தேசியங்களின் கூட்டமைப்பு என்ற வரலாற்று உண்மையை அறிவீரோ?
உலகில் பிறந்த எல்லா நாடுகளும் மொழிவழியாக தோன்றியவை என்ற வரலாற்றை படித்ததுண்டா?

தமிழர் ஆள்வதைவிட ஒரு நல்லவர் ஆள்வதே சரியென கேள்வி எழும்போதே

எட்டு கோடி தமிழினத்தில் ஒருவன்கூட நல்லவன் இல்லை என்கிறீரோ?
கருணாநிதியும் எம்ஜியாரும் ஜெயலலிதாவும் மனிதரில் புனிதரென்று சத்தியம் செய்வீரோ?
ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சியில் எத்தனை காமராசர்? எத்தனை கக்கன்? எத்தனை நல்லகண்ணுவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பார்த்தீர்கள்?
அச்சுதானந்தனும் ஜோதிபாசும் நல்லவர்கள்தான் என்றாலும்; ஒரே கட்சியை சார்ந்தவர்கள்தான் என்றாலும் அச்சுதானந்தன் மேற்கு வங்காளத்தையோ; ஜோதிபாசு கேரளத்தையோ ஆள முடியாதென்ற உண்மையை அறிவீரோ?

சீமான் ஆமைக்கறி சாப்பிட்டாரா?

சீமான் ஏகே74-இல் சுட்டாரா?

சீமான் திராவிட சுடுகாடென சொன்னது சரியா என்ற கேள்விகள் எழும்போதே

இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களுக்கு பதில் தெரிவதால் தமிழ் சமூகத்திற்கு என்ன லாபம்? சீமானின் தற்சார்பு கொள்கையை எப்பொழுது தான் விவாதிப்பீர்களோ? சீமானின் நீர் கொள்கைபற்றி உங்களது கருத்தென்ன? சீமானின் வேளாண் கொள்கையைப் பற்றி பேசுவோமா?
சீமான் சொல்லும் மறைநீர் கோட்பாடு பற்றி அறிவீரோ? சீமானின் அன்பான சர்வாதிகாரம் என்ற சொல்லாடலின் அர்த்தம் என்ன? சீமானின் ஆட்சி வரைவறிக்கையை வாசித்தீர்களா?
உங்களுக்கு சீமான் பற்றி தெரிய வேண்டுமா? சீமானின் கொள்கை பற்றி தெரிய வேண்டுமா?

பெரியார் அன்றே என்ன சொன்னார் தெரியுமா? என்று கேள்வி எழும்போதே

அப்படி என்னதான்யா சொன்னார்? அதனால் தமிழ் சமூகம் அடைந்த மாற்றம் என்ன? ஐம்பதாண்டுகால திராவிட ஆட்சி பெரியார் சொன்ன எதனை சாதித்தது? பெண்ணிய விடுதலையா? சாதி ஒழிப்பா?
தீண்டாமை ஒழிப்பா? இதில் ஏதேனும் ஒன்றையாவது அரைநூற்றாண்டு ஆட்சியில் முழுமையாக சாதித்தார்களா? அரைநூற்றாண்டாக சாதிக்காத எதனை இன்னொரு முறை ஆட்சிக்கு வந்து சாதிக்க போகிறார்கள்?

இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் ஆயிரம் எதிர் கேள்விகளை முன்வையுங்கள் உறவுகளே.
பதில் சொல்லும் வரை அடுத்த கேள்விக்கு நகரவிடாதீர்கள்.
பதில் தெரியாதென்றால் தோல்வியை ஒப்புக்கொள்ள சொல்லுங்கள்.

உங்களின் கேள்விகளின் ஊடாகவே அவர்களின் பழையப் புளித்துப்போன கேள்விகளைவிட்டுவிட்டு அவர்களை ஆக்கபூர்வமான விவாதத்திற்கு நகர்த்துங்கள். அந்த கணமே நமது வெற்றி தொடங்கும்.

ஏனெனில் கேள்வி கேட்பது எளிது; பதில் சொல்வதுதான் கடினம். இதுவரை பதில் அளிக்கும் கடினமான பணியை செய்ததாலே திராவிடர்கள் தங்களை மேலானவர்களாக காட்டிக் கொண்டார்கள்.

இனி அவர்களும் கொஞ்சம் பதில் சொல்லட்டும். நீங்கள் கேள்விகளோடு மட்டுமே நில்லுங்கள்!

தமிழ் இன அழிப்பின் தொடக்கம்: எம்ஜிஆர் செய்த மாபெரும் கேடு!

தமிழ்நாடு அரசு இன்று (செப்டம்பர் 30, 2018) எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது. இந்த நாளில் தமிழக மக்களுக்கு அவர் செய்த மாபெரும் துரோகத்தை அறிந்துகொள்வோம்.

தமிழ்நாட்டை அட்சி செய்த திராவிட கட்சிகளின் முன்னாள் முதலமைச்சர்கள் – தமிழ்நாட்டிற்கு செய்த நன்மைகளை விட, தீமைகளே அதிகம். குறிப்பாக, கலைஞர் கருணாநிதி அவர்கள் மதுபானத்தை அறிமுகம் செய்ததும், ஈழ இனப்படுகொலைக்கு துணை நின்றதும் வரலாற்றில் மறைக்க முடியாத கருப்பு பக்கங்கள் ஆகும்.

அதுபோன்றே, தமிழ்நாட்டில் தமிழை ஒழித்த பெரும் பாவத்தை செய்தவர் எம்ஜிஆர் ஆகும்.

தமிழ்வழிக் கல்வி வரலாறு

தமிழ்நாடு சென்னை மாகாணத்தில் ஒரு பகுதியாக இருந்த காலத்தில், காங்கிரசு ஆட்சியில் கூட, இங்கு தமிழ் வளர்க்கப்பட்டது. கல்வி அமைச்சர்களாக இருந்த தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியாரும் சி.சுப்பிரமணியமும் தமிழுக்கு நன்மை செய்தனர். தமிழ்வழிக் கல்வி 1952ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலகட்டமான 1954ஆம் ஆண்டு முதல், உயர்நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது.

ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கில வழிப் பாடமொழியாக இருக்கும் என 1965இல் இதனை மாற்றினார் முதல்வர் பக்தவத்சலம். பின்னர், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த அறிஞர் அண்ணாவின் அரசு இருமொழிக் கொள்கையை செயல்படுத்தியது.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் படிப்பது கட்டாயம். ஆனால், தமிழ் படிப்பது கட்டாயம் அல்ல என்கிற விநோதமான கோட்பாட்டை அண்ணா கொண்டுவந்தார். அதுதான் இன்றுவரை நீடிக்கிறது!

தமிழ்நாட்டிற்கு எம்ஜிஆர் செய்த மாபெரும் கேடு!

தமிழ்நாட்டில் சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாட்டில் பதின்நிலைப் பள்ளிகள் (மெட்ரிகுலேசன் பள்ளிகள்) என மிகச்சில பள்ளிகள் இருந்தன. 1978-ஆம் ஆண்டு பதின்நிலைத் தேர்வினைக் கைவிடுவதென அப்பல்கலைக் கழகங்கள் முடிவு எடுத்தன. அப்போது இருந்த சுமார் 20 மெட்ரிகுலேசன் பள்ளிகளை, மாநில கல்வி வாரியத்துடன் இணைக்க கோரப்பட்டது.

ஆனால், எம்ஜிஆர் அரசு மெட்ரிகுலேசன் பள்ளிகளை தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இணைப்பதற்கு பதிலாக – மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கெனத் தனி வாரியம் அமைத்தது. மேலும், இந்த வாரியத்தின் கீழ் புதிதாக மெட்ரிகுலேசன் பள்ளிகளை தொடங்கவும் அனுமதி அளித்தது. இதுதான் எம்ஜிஆர் செய்த மிகப்பெரிய கேடு ஆகும்.

அன்று எம்ஜிஆர் செய்த பெரும் பாவம், தமிழ்நாடெங்கும் ஆங்கிலவழிக் கல்வி வேறூன்றவும், தமிழகம் முழுவதும் பரவவும் வழி வகுத்தது. அதன் விளைவாக இன்று நாடெங்கும் ஆங்கிலவழி பள்ளிகளே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இது தமிழுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முறை சீரழிய இதுவே முதன்மை காரணம் ஆகும்.

எம்ஜியார் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?

இன்றைய தமிழ்நாடு, தமிழை படிக்காத ஒரு தலைமுறையினரை கொண்டிருக்கிறது. எப்போது ஒரு சமூகம் தனது மொழியை இழக்கிறதோ, அப்போதே, அந்த சமூகத்தின் இன அழிப்பு தொடங்கிவிடுகிறது. காலப்போக்கில் தமிழர் என்கிற இனமோ, தமிழ்நாடு என்கிற நாடோ நம்முடைய அடையாளமாக இல்லாத நிலையை நோக்கி இது இட்டுச்செல்லும்!

குழந்தைகள் தமது தொடக்கக் கல்வியை அவர்கள் பேசும் முதல்மொழி (First Language) வாயிலாக கற்க வேண்டும் என்பதும், அந்த முதல்மொழி வழியாக இரண்டாம் மொழியை (Second Language) கற்க வேண்டும் என்பதும் ஐநா அவையின் ‘யுனெஸ்கோ’ வலியுறுத்தும் அறிவியல்பூர்வமான கல்வி முறை ஆகும். (முதல்மொழியும் (First Language) தாய்மொழியும் (Mother Tongue) வெவ்வேறாக இருந்தால், தாய்மொழியை படிக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும்). இதுதான் அறிவியல்பூர்வமான, மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு வழிசெய்யும் ஆரம்பக்கல்வி முறை ஆகும்.

ஆனால், உலகில் எங்கேயும் இல்லாத அதிசயமாக, தமிழ்நாட்டில் தமிழக மாணவர்கள், தமது முதல்மொழி (தமிழ்) அல்லாத வேறு மொழியில் (ஆங்கிலம்) பள்ளிக்கல்வியை கற்கிறார்கள். இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை, பண்பாட்டை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் கேடாகும். இங்குள்ள அரசியல் சீரழிவுக்கும் இதுவும் ஒரு காரணம் ஆகும்.

இவ்வாறு, தமிழ்வழிக் கல்வியை ஒழித்து தமிழ் இன அழிப்பினை தொடங்கியவர் எம்ஜிஆர் என்று கூறலாம்!

குறிப்பு

1. பள்ளிக்கல்வி தமிழில் அமைய வேண்டும் என்பதை ஆங்கிலம் படிக்கக் கூடாது என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். தமிழில் பள்ளிக்கல்வியை தொடங்கி, அதன் மூலமாக ஆங்கிலத்தை கற்பிப்பது தான் அறிவியல் வழி ஆகும்.

2. தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் (intention) அவர் இதனை செய்தாரா என்பது நமக்குத் தெரியாது.

தமிழ் எழுத்து திசை மாற்றிய பாதை

ஈ.வெ.ராமசாமி நாயடு தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர்.

இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார்.

“திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்” என்ற நூலில் பக்கம் 436ல்.

இராமசாமி நாயுடு காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயுடு.

என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

தமிழர்களுக்குள் ஹிந்தியை திணித்தவர் பெரியார் அதனால்தான் தமிழை “காட்டுமிராண்டி மொழி” “நீச மொழி” என்று சொன்னார்.

இப்படி சொல்லியவாரே தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் என சொல்லி தமிழ் எழுத்தை திருத்தினார்.

தமிழ் புலமையோ, தமிழ் இலக்கிய அறிவோ, தமிழ் எழுத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியும் சிறு ஆராய்ச்சி அறிவும் இல்லாதவர் ஈ வெ ராமசாமி.

ஹிந்தியை வளர்க்க தமிழை அழிக்க நினைத்த ஈ வெ ராமசாமியின் கிறுக்கல்களை தமிழ் எழுத்துக்களாய் ஆக்கியது திராவிடக் கட்சிகளின் அரசுகள்.

தமிழை தமிழன் என்ற போர்வையில் சிதைத்த அந்நியரில் திராவிட இன தெலுங்கு கன்னடர் ராமசாமி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என தொடர்கின்றதே தவிர இன்று தமிழை வாசிக்க மொழிபெயர்ப்பாளர் வேண்டுவது இவர்கள் தமிழுக்கு ஆற்றிய சேவையால்!!