அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் 6 சோழர்காலக் கோயில்கள்…!

சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனாராம, அபயகிரி ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது.

பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன். இக்கால கட்டத்தில் 130 வருடங்களுக்கு முன்பு எச்.சி.பி.பெல் எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதியிருந்த ஆய்வுக் குறிப்புகளைத் தேடி இலங்கைத் தொல்பொருள் திணைக் களத்திற்கு சென்று அவை பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்தேன். அதில் அனுராதபுரத்தின் வடக்கில் இருந்த ஆறு கோயில்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது குறிப்பின் படி இந்த ஆறு கோயில்களும் ஒரே இடத்தில் உள்ளன. இவற்றை பெல் அவர்கள் தமிழர் இடிபாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் மூன்றாவது தடவையாக அனுராதபுரத்திற்கு சென்றேன். அனுராதபுரம் பெளத்த யாத்திரீகர்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும் ஓர் சுற்றுலாத்தலம். அன்றும் அப்படித்தான். கூட்டம் களை கட்டியது. இந்தத்தடவை பெல் அவர்கள் குறிப்பிட்டிருந்த கோயில்களைத் தேடி அபயகிரி விகாரையின் வடக்குப் பக்கம் உள்ள பங்குளிய, பெருமியன் குளம், அசோகாராம, விஜேராம ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் பெல் குறிப்பிட்ட கோயில்களைக் காண முடியவில்லை.

அப்போதுதான் இவ்விடங்களுக்கு நடுவில் இருந்த ஓர் காட்டுப்பகுதி என் கவனத்தை ஈர்த்தது. அக்காட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது. அப்பகுதியில் தற்செயலாக சந்தித்த இரு சிங்கள தம்பிமாரின் உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தேன். சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்லாத இடம். பட்டப் பகலில் கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடம். பறவைகளும், காட்டு வண்டுகளும் கத்தும் ஓசை மட்டுமே காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சமே படாமல் சற்று இருட்டாக அக்காட்டுப்பகுதி காணப்பட்டது.

காட்டுக்குள் சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தடுக்கி விழப் பார்த்தேன். என் காலில் தடுக்கியது என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அது சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஓர் நாகக்கல். முக்கால்வாசி மண்ணுள் புதையுண்டு அக்கல் காணப்பட்டது. ஆர்வம் மேலிட அப்பகுதியில் இருந்த பற்றைகளையும், காய்ந்த சருகுகளையும் விலக்கிப் பார்த்த போது ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தேன்.

அவ்விடத்திலே காட்டுப் பற்றைகளுள் மறைந்தும், மண்ணுள் புதையுண்டும் ஏராளமான கோயில்களின் இடிபாடுகளும், பரந்த அளவில் நூற்றுக்காணக்கான கற்தூண்களின் துண்டங்களும், செங்கல் அத்திவாரங்களும், கட்டிடங்களின் சிதைவுகளும், ஓர் தீர்த்தக் கேணியின் இடிபாடுகளும், தீர்த்தக் கேணியின் படிக்கட்டுகளும் காணப்பட்டன. அதுதான் எச்.சி.பி.பெல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கோயில்களின் வளாகம் என்பதைப் புரிந்து கொண்டேன் என்கிறார்.

ஆனால் கோவில் இருந்த அனேக இடங்களில் இன்று இருப்பது பெளத்த பிக்குகள் கட்டி பெளத்த கோவில்கள் தான். அனுராதபுரம் இன்று முற்று முழுதாக சிங்கள மயமாக்கப்பட்டு விட்டது. ஆனால் அங்கே பூர்வீகக் குடிகளாக இருந்தது தமிழர்கள் மட்டும் தான். இவ்வாறு தான் எமது தமிழ் இனம் அருகி வருகிறது இலங்கையில். இலங்கை தமிழர்களை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு இனமாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் 100 வருடங்களில் நாம் காணமல் போய் விடுவோம். அது நிச்சயம்.

கோவிலுக்குப் போனால் பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைக்கும் என்று கூறும் ஆன்மீக விஞ்ஞான மேதைகளே!

அரை மணி நேரம் கோவிலுக்கு போய் வருபவர்களுக்கே பாஸிடிவ் வைப்ரேஷன் கிடைக்குமென்றால் கோவிலிலேயே வாழ்நாளின் பெரும்பகுதியை செலவிட்டு, மந்திர சக்தி உருவேற்றப்பட்ட மூலவர் திருமேனியையை முப்பொழுதும் தொட்டுப் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் வாழும் மகான்களாக, பாசிடிவ் மின் முனைகளாக, நல்ல எண்ணங்களின் ஊற்றாக அல்லவா இருக்க வேண்டும்?

ஆனால் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்களா?

காஞ்சிபுரம் கோவிலில் காம லீலைகள் புரிந்த தேவநாதனுக்கு ஏன் கர்ப்பகிரகத்திற்குள் காமம் கொப்பளித்தது?

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோவில் கருவறையில் பத்ரி நாராயணன் என்ற பட்டாச்சாரியார் லீலை பல புரிந்து சிக்கியிருக்கிறார்.

பழனி முருகன் சிலை தங்கத்திலேயே சிலர் ஆட்டய போட்டிருக்கிறார்கள். முருகனுக்கு முன்னால் ஒருவனுக்குத் திருட்டு புத்தி வந்தது எப்படி?

காஞ்சிபுரம் முருகன் கோவில் கச்சியப்ப சிவாச்சாரியார் சிலையைத் திருடியிருக்கிறார் ஒரு அர்ச்சகர். அந்த கோவிலில் உண்மையிலேயே பாசிடிவ் வைப்ரேஷன் இருக்குமானால் அவன் அந்த திருட்டு வேலையை செய்திருப்பானா?

வடபழனி முருகன் கோவில் அர்ச்சகர் தன் மனைவியைக் கொலை செய்த செய்தி ஊடகங்களில் வந்தது. தனக்கு தினம் தினம் பூஜை செய்பவனுக்கே நல்ல புத்தியைக் கொடுக்காத முருகன் என்றோ ஒருநாள் வந்து வழிபடும் சாமானியனுக்கு என்ன பாசிடிவ் வைப்ரேஷனைக் கொடுத்து விடப் போகிறார்?

காஷ்மீரில் எட்டு வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து பலநாட்கள் சீரழித்து கொன்று வீசியிருக்கிறார்கள். கோவில் நிர்வாகிதான் இந்தக் கொடூரச் செயலுக்குத் திட்டம் வகுத்தது!

அந்தக் குழந்தையின் கதறல் அந்தக் கோவில் சாமிக்கு கேட்கவில்லையா? கேட்டும் அமைதியாக அந்தக் கொடூரத்தை ரசித்துப் பார்த்ததா?

பாசிடிவ் வைப்ரேஷன் விஞ்ஞான மேதைகளே.. தர்மத்தைக் காக்க கடவுள் அவதரிப்பார் என்ற கதையை நம்பும் பக்த சிகாமணிகளே.. அந்தக்குழந்தையின் மரணவலிக்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? விதியா? அடத்தூ..

உங்களுக்கும் எனக்கும் இப்போதுதான் அந்த சம்பவம் தெரிய வந்தது. ஆனால் கடவுளுக்கு…?

எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்த கடவுள் ஏன் வெறி பிடித்த பொறுக்கிகளுக்கு அக்குழந்தையை சீரழிக்க தன் கோவிலில் இடம் தந்து வேடிக்கை பார்த்தார்?

திருவருட்செல்வர் திரைப்படத்தில் சிவாஜிகணேசன் கேட்பார் கடவுள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று! அதற்கு குட்டி பத்மினி, என்னை அரசியாக்கி உங்களை குடிமகனாக்கி இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று கூறுவார்! இந்த பதிலைக் கேட்டு பக்திப் பழங்களுக்குப் புல்லரிக்கும்! ஆஹா ஓஹோ என்று ஆர்ப்பரிப்பார்கள்!

*இப்போது நான் கேட்கிறேன்.. அந்த மனித மிருகங்கள் குழந்தையை கோவிலுக்குள் வைத்து குதறிய போது கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?*

கடவுள் நம்பிக்கையாளர் யாருக்காவது இக்கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்!

வளர்ப்புப் பிராணியான நாய் அங்கு இருந்திருந்தால் கூட அக்குழந்தையைக் காப்பாற்ற ஏதாவது செய்திருக்கும் அல்லவா?

சிந்தியுங்கள் நண்பர்களே.. நாத்திகர்களை பிசாசுகளாகக் கருதாதீர்கள். இது போன்ற நிகழ்வுகளைக் கண்டு வெறுத்துப் போய் தான் நாங்கள் நாத்திகர்களானோம்.

வெறும் கல்லும், கோபுரமும், மந்திர முணுமுணுப்புகளும் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள் என்று மக்கள் உணரும் நாளே இவ்வுலகின் புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வழிவகுக்கும் முதல்நாளும் திருநாளுமாகும்.

கோவிலிற்கு பார்ப்பனரல்லாதவர்கள் மட்டுமே சென்று வந்த காலகட்டத்தில் அது புனிதமாகத்தான் இருந்திருக்கிறது என்பது கூடுதல் உண்மை.